search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எச்சரிக்கை"

    • மதுபோதையில் வாகனம் ஓட்டாமல் இருக்க, போக்குவரத்து போலீசார், தீவிர விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
    • போலீசார் காரைக்காலின் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்ட னர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டத்தில் அண்மைக் காலமாக, இரவு 7 மணி முதல் 11 மணி வரை மதுபோதையில் வாகனம் ஓட்டுவதால், சாலை விபத்துகள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. அதனால், மதுபோதையில் வாகனம் ஓட்டாமல் இருக்க, போக்குவரத்து போலீசார், தீவிர விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, சாலையில் செல்லும் சந்தேகப்படும் படியான நபர்களை சுவாச பரிசோ தனை கருவி (பிரீத் அனலை சர்) மூலம் பரிசோதனை செய்து, மது அருந்தி வாகனம் ஓட்டினால், அவரது புகைப்படத்துடன், கோர்ட்டுக்கு சார்ஜ்சீட் அனுப்பி வைத்து ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து வருகின்றனர்.

    இத்திட்டம் ஏற்கனவே இருந்தாலும், இரவுநேர விபத்தை தடுக்கும் பொருட்டு தீவிரப்படுத் தப்பட்டுள்ளது. அதன்படி, சீனியர் போலீஸ் சூப்பி ரண்டு (பொறுப்பு) நிதின் கவ்ஹால்ரமேஷ் உத்தர வின் பேரில், காரைக்கால் போக்குவரத்து இன்ஸ் பெக்டர் மரிகிறிஸ்டியன் பால் மற்றும் போக்குவரத்து போலீசார் காரைக்காலின் பல்வேறு இடங்களில் சோதனை மேற் கொண்டனர். இந்த பரிசோதனை இனி அடிக்கடி நடைபெறும் என்பதால், வாகன ஓட்டி கள் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக் கூடாது. அதிவேக மாக வும் வாக னம் ஓட்டக்கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ள னர்.

    • நேற்று பிற்பகல் 12 மணியளவில் சாத்தனூர் அணையானது முழு கொள்ளளவை எட்டியது.
    • அந்த நேரத்தில் ஆற்றில் வெள்ள நீர் அதிக அளவு செல்லும்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் வட்டத்திற்கு உட்பட்ட குறுவட்ட வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாள ர்களுக்கு சாத்தனூர் அணை உதவி செயற்பொறியாளர் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது;- நேற்று பிற்பகல் 12 மணியளவில் சாத்தனூர் அணையானது முழு கொள்ளளவை எட்டியது. இதனால் 10 ஆயிரம் கன அடி தண்ணீர் மற்றும் அதற்கு மேற்பட்ட அளவு தண்ணீரினை திறந்து விட உள்ளோம். அந்த நேரத்தில் ஆற்றில் வெள்ள நீர் அதிக அளவு செல்லும். இந்த நேரத்தில் பாலங்கள் மற்றும் தரைப்பாலங்கள் வழியாக வாகனங்கள் செல்ல அனுமதிக்க கூடாது. மேலும் ஆற்றினை கடக்கவும் அனுமதிக்க கூடாது.

    ஆற்றின் கரையோரம் உள்ள கிராம மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்கள் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்து பொதுமக்களை பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு சாத்தனூர் அணையின் உதவி செயற்பொறியாளர் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வாலிபர் தனது மோட்டார் சைக்கிள் சாவியில் உள்ள கத்தியை எடுத்து பஸ் டிரைவரை குத்த முயன்றார்.
    • சப்-இன்ஸ்பெக்டர் பரணிதரன் தலைமையிலான போலீசார் அவர்களை பிடித்து விசாரணை செய்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் பஸ் நிலையத்திற்கு நேற்று மதியம் பைபாஸ் சாலை வழியாக மினி பஸ் ஒன்று பயணிகளை ஏற்றி கொண்டு வந்தது. அந்த பஸ்சின் முன்னால் மோட்டார் சைக்கிளிலில் தனியார் உணவு டெலிவரி வாலிபர் ஒருவர் சென்றார். அப்போது வாலிபர் மினி பஸ்சுக்கு வழிவிடாமல் சென்றதாக தெரிகிறது. இதனையடுத்து மினி பஸ் டிரைவர், உணவு டெலிவரி வாலிபர் சிதம்பரம் பஸ் நிலையத்திற்கு வந்தனர். அங்கு பஸ் டிரைவர் ஏன் வழிவிடாமல் மோட்டார் சைக்கிளில் சென்றாய் என்று தனியார் உணவு டெலிவரி வாலிபரிடம் கேட்டார். இதில் ஆத்திரமடைந்த வாலிபர் உடனே பஸ் டிரைவரிடம் வாக்குவாத த்தில் ஈடுபட்டார். இந்த வாக்குவாதம் தகராறாக மாறியது. இதில் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர். மேலும் உணவு டெலிவரி வாலிபர் தனது மோட்டார் சைக்கிள் சாவியில் உள்ள கத்தியை எடுத்து பஸ் டிரைவரை குத்த முயன்றார்.

    இதை பார்த்த பஸ் நிலையத்தில் அருகில் இருந்தவர்கள் இவர்களை பிடித்து சமாதானப்படுத்தி விலக்கிவிட்டனர். இந்நிலையில் இவர்கள் ஒருவருக்கொருவர் சண்டை யிடும் காட்சியை அங்கிரு ந்தவர்கள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலை தளங்கலில் வெளி யிட்டனர். இந்த வைரலான வீடியோ காட்சி மூலம் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் அவர்கள் 2 பேரையும் பிடித்து விசாரணை மேற்கொள்ள உத்தர விட்டார். உத்தரவின்பேரில் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப்-இன்ஸ்பெக்டர் பரணிதரன் தலைமையிலான போலீசார் அவர்களை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் மினி பஸ்சை ஓட்டி வந்தது சிதம்பரம் அருகே ஆலம்பாடி கிராமத்தை சேர்ந்த ஸ்ரீராம் (வயது 35) என்பதும், தனியார் உணவு டெலிவரி வாலிபர்கோவிந்தசாமி பகுதியை சேர்ந்த கணேஷ் (41) என்பதும் தெரிய வந்தது. பின்னர் இவர்களிடம் போலீசார் இதுபோன்ற செயல்களில் ஈடுபட க்கூடாது என்றும், மேலும் இதுபோன்று பொது மக்களுக்கு இடையூராக ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டால் உங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி அவர்களை அனுப்பி வைத்தனர்.

    • சங்கரன்கோவில், திருவேங்கடம் பகுதியில் உள்ள விதை விற்பனை நிலையங்களில் விவசாயிகளுக்கு தேவையான பருத்தி, மக்காச்சோளம் விதைகள் உள்ளது.
    • பதிவுச்சான்று விதை உற்பத்தியாளரால் விண்ணப்பம் செய்து பெறப்படுகிறது.

    தென்காசி:

    நெல்லை விதை ஆய்வு துணை இயக்குனர் சுஜாதாபாய் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், திருவேங்கடம் பகுதியில் உள்ள விதை விற்பனை நிலையங்களில் விவசாயிகளுக்கு தேவையான பருத்தி, மக்காச்சோளம் விதைகள் உள்ளது.

    விதை விற்பனை நிலையங்களில் பதிவுச்சான்று, முளைப்புத்திறன் சான்று பராமரிக்கப்பட வேண்டும். அறிவிக்கை செய்யப்படாத அனைத்து பயிர் ரகங்களுக்கும் பதிவுச்சான்று, விதைச்சான்று, அங்ககச்சான்று இயக்குனரால் 3 ஆண்டுகளுக்கு அனுமதித்து வழங்கப்படுகிறது. மேற்படி பதிவுச்சான்று விதை உற்பத்தியாளரால் விண்ணப்பம் செய்து பெறப்படுகிறது.

    விதை கட்டுப்பாட்டு சட்டம் 1983 பிரிவு 13(1)-ன்படி விதை விற்பனை நிலையங்களில் அறிவிக்கை செய்யப்படாத நெல், மக்காச்சோளம், காய்கனி உள்ளிட்ட அனைத்து பயிர் ரகங்களும் பதிவுச்சான்று, முளைப்புத்திறன் பரிசோதனை சான்று பெறப்பட்ட பின்னரே விற்பனை செய்யப்பட வேண்டும்.

    மேற்படி அறிவுரைகளை பின்பற்றாத விதை விற்பனையாளர்கள் மீது விதைச்சட்டம் 1966, விதைக்கட்டுப்பாட்டு சட்டம் 1983-ன்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நான்கு வழிச்சாலையில் வாகன ஓட்டிகளின் எச்சரிக்கைக்காக பேரிகார்டுகள் வைக்கப்பட்டுள்ளன.
    • காற்றின் வேகத்தால் பேரிகார்டுகள் சாலையிலேயே விழுந்து கிடக்கிறது.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் ரெயில்வே கேட்டை கடந்து தென்காசி செல்லும் சாலையில் செல்வவிநாயகர்புரம் உள்ளது. இங்கு அமைந்துள்ள தனியார் மருத்துவமனை அருகே நான்குவழிச்சாலை பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    இதன் அருகே ரெயில்வே மேம்பாலம் கட்டுமான பணியும் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் நெல்லை-தென்காசி நான்கு வழிச்சாலையில் வாகன ஓட்டிகளின் எச்சரிக்கைக்காக பேரிகார்டுகள் வைக்கப்பட்டுள்ளன. அதன்படி செல்வ விநாயகர்புரம் பகுதியிலும் ஒருபுறம் சாலை அமைக்கும் பணி நடைபெறுவதால் மற்றொரு புறம் வழியாக வாகன ஓட்டிகள் செல்லும் வகையில் பேரிகார்டுகள் வைத்து தடுப்பு அமைக்கப்ப ட்டுள்ளது.

    அந்த பேரிகார்டுகள் காற்றின் வேகத்தால் சாலையிலேயே விழுந்து கிடக்கிறது. இதனால் இரவு நேரங்களில் நான்கு வழிச்சாலையில் அந்த பகுதியில் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது தெரியாமல் யாரேனும் மின்னல் வேகத்தில் வாகனங்களில் வந்தால், அவை விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே பாதுகாப்பு கருதி பேரிகார்டுகளை கீழே விழாதவாறு அதன் கீழ் பகுதியில் மண் மூடை உள்ளிட்டவை வைத்து சாயாத வண்ணம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    • வனத்தில் நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் அதிக அளவில் யானைகள் மூணாறு சாலையை கடந்து செல்ல தொடங்கி உள்ளன.
    • வாகனத்தில் இருந்து இறங்கி செல்பி எடுக்கக் கூடாது என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து கேரள மாநிலம் மூணாறு செல்லும் சாலையில் அமராவதி ஒன்பதாறு சோதனைச்சாவடியில் இருந்து சின்னாறு வரை சாலையின் இருபுறமும் அமராவதி உடுமலை வனச்சரகங்கள் உள்ளன. இங்கு ஏராளமான யானைகள், மான்கள், காட்டெருமைகள், சிறுத்தைகள், கரடிகள், உள்ளன.

    உடுமலை வனச்சரகத்தில் இருந்து அவ்வப்போது யானைகள் தண்ணீர் குடிப்பதற்காக மூணாறு சாலையை கடந்து அமராவதி அணைக்கு செல்வது வழக்கம். கோடை காலத்தில் யானைகள் இடம் பெயர்வது அதிக அளவில் இருக்கும்.

    மழைக்காலங்களில் வனத்திலேயே குளம், குட்டைகளில் தண்ணீர் கிடைப்பதால் யானைகள் சாலையை கடந்து செல்வது குறைவாக இருக்கும் .பெரும்பாலும் ஒன்பதாறு - சின்னார் சோதனைச்சாவடிக்கு இடையில் உள்ள 13 கிலோமீட்டர் தூரத்தில் ஏழுமலையான் கோவில் பிரிவு, காமனூத்துப்பள்ளம், புங்கனோடை ஆகியவை யானைகள் இடம்பெயரும் முக்கிய வழித்தடமாக உள்ளன.

    மேலும் யானைகள் செல்லும்போது சாலையில் சிறிது நேரம் நின்று செல்கின்றன. தற்போது மழை பொழிவு குறைவு காரணமாக வனத்தில் நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் அதிக அளவில் யானைகள் மூணாறு சாலையை கடந்து செல்ல தொடங்கி உள்ளன. தற்போது ஒன்பதாறு - சின்னார் சோதனைச்சாவடிக்கு இடையே சின்னாறு பகுதியில் சாலையோரம் குட்டியுடன் பெண் யானை ஒன்று உலா வருகிறது.

    இது குறித்து வனத்துறையினர் கூறுகையில் , குட்டியுடன் பெண் யானை நிற்பதால் வாகன ஓட்டிகள் தொந்தரவு செய்யக்கூடாது. ஒலி எழுப்பக்கூடாது. வாகனத்தில் இருந்து இறங்கி செல்பி எடுக்கக் கூடாது என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

    • போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசேகர் உள்ளிட்ட போலீசார் தகடி கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • அவரிடமிருந்து 10 கிலோ அளவிலான புகையிலை பொருட்களை கைப்பற்றிய போலீசார் மணிகண்டனை கைது செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் திருப்பாலபந்தல் போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசேகர் உள்ளிட்ட போலீசார் தகடி கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பரமசிவம் மகன் மணி கண்டன் (வயது 38) என்பவர் தனது மளிகை கடையில் தமிழக அரசால் தடைசெய்யபட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது.

    அவரிடமிருந்து 10 கிலோ அளவிலான புகையிலை பொருட்களை கைப்பற்றிய போலீசார் மணிகண்டனை கைது செய்தனர். இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் கூறுகையில், கள்ள க்குறிச்சி மாவட்டத்தில் தமிழக அ ரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தாலோ அல்லது கடத்தினாலோ அவர்கள் மீது கடும் நட வடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • அதிக அளவில் பகுதிநேர வேலை என்ற பெயரில் பெரிய அளவில் மோசடி நடைபெற்று வருகின்றது.
    • வேலை வாய்ப்புகள் தேடுவதற்காக சுய விவரங்களை இணைய தளங்களில் பதிவிடுகின்றனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மீனா உத்தரவின்படி, சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் புயல்.பாலசந்திரன் வெளியிட்டு ள்ள அறிக்கையில் கூறியிப்ப தாவது:-

    தற்போது அதிக அளவில் பகுதிநேர வேலை( பார்ட் டைம் ஜாப்) என்ற பெயரில் பெரிய அளவில் மோசடி நடைபெற்று வருகின்றத

    இதில் அதிக அளவில் பாதிக்கப்படக்கூடியவர்கள் படித்துவிட்டு வேலையில்லா மல் இருக்கும் பட்டதாரி இளைஞர்கள் மற்றும் பட்டதாரி பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

    இவர்களுடைய டேட்டாக்கள் இவர்கள் வேலை வாய்ப்புகள் தேடுவதற்காக சுய விவரங்களை இணைய தளங்களில் பதிவிடு கின்றனர்.

    இதன்மூலம் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் பாதிக்கப்பட்டவர்களின் சுய விவரங்களை திருட்டுத்தனமாக தெரிந்து கொண்டு மேற்கண்ட பகுதி நேர வேலை எனக்கூறி சில தொகைகளை கட்ட சொல்லி கொடுத்து இன்வெஸ்ட்மென்ட் என்ற பெயரில் பல லட்சங்களை சுருட்டி விடுகின்றனர்.

    எனவே இது போன்ற பகுதி நேர வேலை இவை களை பயன்படுத்த வேண்டாம் என்றும் அதே போல் தங்களுடைய சுய விவரங்களை தேவையில்லாமல் எந்த வெப்சைட்டிலும் பதிவு செய்ய வேண்டாம் எனவும் பிரபலமான நிறுவனங்களின் பெயரில் போலியான வேலை வாய்ப்புகள் உள்ளதாக எஸ்.எம்.எஸ். இ.மெயில், மூலமாக விளம்பரங்களை அனுப்பி உங்களை ஏமாற்றக்கூடும்.

    அவர்கள் ஏதேனும் காரணம் கூறி பணம் செலுத்தக் கூறினால் அவர்களிடம் பணத்தை செலுத்தி ஏமாறாதீர்கள்.

    மேலும் இது போன்ற அசம்பாவிதங்கள் உங்களுக்கு நடந்து விட்டால் பதட்டம் அடையாமல் உங்கள் மாவட்டத்தில் உள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்தை அணுக வேண்டும் அல்லது உடனடியாக மாநில சைபர் கிரைம் உதவி எண் (1930) 24 மணி நேரத்துக்குள் தொடர்பு கொண்டால் உங்களது பணம் மீட்டு தரப்படும் என்றும்.

    இதேபோல் தேவையில்லாத லிங்க்,வீடியோ கால் போன்றவற்றை தொடவேண்டாம் எனவும் மக்கள் இது போன்ற விஷயங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கனரக லாரிகளில் கொண்டு வரப்படும் கழிவுகள் மறை முகமாக கொட்டப்பட்டு வருகின்றன.
    • கழிவுகள் மீது தீ வைப்பதால் அருகில் இருக்கும் தென்னை மரங்கள் கருகி உள்ளன.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அடுத்து உள்ள பெத்த நாடார்பட்டி கிராமத்தில் இருந்து செல்லதாயார்புரம் கிராமத்திற்கு செல்லும் சாலை ஓரம் அமைந்துள்ள விவசாய நிலங்களில் கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்ட மருத்துவ மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை மர்ம நபர்கள் டன் கணக்கில் கொட்டி சென்றுள்ளனர்.

    விவசாயிகளுக்கு தெரியாமல் இரவில் கனரக லாரிகளில் கொண்டு வரப்படும் கழிவுகள் மறை முகமாக கொட்டப்பட்டு வருகின்றன. அதுமட்டுமின்றி கழிவுகள் மீது அவ்வப்போது தீ வைத்து எரித்து விடுகின்றனர்.

    இதனால் அருகில் இருக்கும் தென்னை மரங்கள் கருகி உள்ளன. பொதுமக்களுக்கும் சுவாச கோளாறு பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றன. எனவே பெத்தநாடார்பட்டி அருகே விவசாய நிலத்தின் அருகே டன் கணக்கில் கொட்டப்பட்டுள்ள கேரள கழிவுகளை உடனடியாக அகற்றவும், அதனை தமிழக பகுதியில் கொட்டி வரும் கனரக லாரி ஓட்டுனர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சம்பந்தப்பட்ட கால்நடை உரிமையாளர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
    • இருந்தபோதிலும் கோவை மாநகராட்சி ரோடுகளில் கால்நடைகள் சுற்றி திரிவது தொடர்கதையாக நீடித்து வருகிறது.

    ேகாவை,

    கோவை மாநகராட்சியில் உள்ள போக்குவரத்து சாலைகளில் கால்நடைகளில் திரிகின்றன. இதனால் அந்த பகுதியில் விபத்துகள் ஏற்படும அபாயம் உள்ளது. எனவே கோவை ரோடுகளில் கால்நடைகளை திரியவிட்டால் சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். கால்நடைகள் 2-வது முறையாக மீண்டும் சாலைக்கு வந்தால், அவற்றை பிடித்து கோசாலையில் ஒப்படைத்து விடுவோம் என்று மாநகராட்சி எச்சரிக்கை விடுத்தது.

    ஆனாலும் கோவை மாநகர சாலைகளில் கால்நடைகளின் நடமாட்டம் குறையவில்லை. இந்த நிலையில் 62-ம் வார்டுக்கு உட்பட்ட சாரமேடு, ஜெ.ஜெ.நகர் ஆகிய பகுதிகளில் கால்நடைகள் ரோட்டில் திரிவதாக மாநகராட்சிக்கு புகார் வந்தது.

    இதனை தொடர்ந்து மாநகராட்சி ஊழியர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது அங்கு நடுரோட்டில் திரிந்த 4 மாடுகள் மற்றும் ஒரு குதிரை ஆகியவை சுற்றி வளைத்து பிடிக்கப்பட்டது. அவற்றை மாநகராட்சி ஊழியர்கள் வாகனங்கள் மூலம், கோவை வ.உ.சி. உயிரியல் பூங்காவுக்கு கொண்டு சென்றனர். பின்னர் சம்பந்தப்பட்ட கால்நடை உரிமையாளர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

    இருந்தபோதிலும் கோவை மாநகராட்சி ரோடுகளில் கால்நடைகள் சுற்றி திரிவது தொடர்கதையாக நீடித்து வருகிறது. இந்த நிலையில் மாநகர போலீசார் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளனர். அதில், கால்நடைகளை வளர்ப்போர் வீட்டில் கட்டி வைத்து வளர்க்க வேண்டும். ரோட்டில் திரியவிடக்கூடாது. அப்படி செய்தால் சம்பந்தப்பட்ட உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகர போலீசார் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

    • 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும் பணியில் ஈடுபட்டனர்.
    • ஒரு சில இடங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் சிறுத்தை மற்றும் கரடி நடமாட்டம் பதிவாகி இருந்தது.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் அலிப்பிரி நடைபாதையில் சிறுமியை திடீரென சிறுத்தை இழுத்துச் சென்று கொன்றது.

    இதனையடுத்து வைக்கப்பட்ட கூண்டில் 2 சிறுத்தைகள் சிக்கியது.

    குழந்தையை கொன்றது இந்த சிறுத்தைகள் தானா என்பது குறித்து தெரிந்துகொள்ள, சிறுத்தை ரத்த மாதிரிகள் தடவியல் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    அலிப்பிரி நடைபாதையில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்துடன் இணைந்து வனத்துறையினர் ஆங்காங்கே 300 கண்காணிப்பு கேமராக்களை பொருத்த முடிவு செய்தனர்.

    அதன்படி நடைபாதை முழுவதிலும் 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    அலிப்பிரி நடைபாதையில் பொருத்தப்பட்ட 300 கண்காணிப்பு கேமராக்களில், நேற்று ஒரே நாளில் 50 கேமராக்களில் சிறுத்தை நடமாட்டம் பதிவாகி இருந்தது.

    50 கேமராக்களில் பதிவான சிறுத்தை ஒன்று தானா? அல்லது சிறுத்தைகள் அதிகமாக உள்ளதா? என்று அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    ஒரு சில இடங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் சிறுத்தை மற்றும் கரடி நடமாட்டம் பதிவாகி இருந்தது.

    இது குறித்து திருப்பதி வனவிலங்கு மேலாண்மை வட்டத்தின் தலைமைப் பாதுகாவலர் நாகேஸ்வரராவ் கூறியதாவது:-

    நடைபாதையில் செல்லும் பொதுமக்கள் கவனமாக செல்ல வேண்டும்.

    கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் வனப்பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தைகளை கண்டறிந்து, நடைபாதைகளில் இருந்து விரட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்தை செயல்படுத்த பொதுமக்களும் பக்தர்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ள சிறுத்தையின் தடவியல் மாதிரிகளின் அறிக்கை 15 நாட்களில் வந்து விடும் என எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பொது விநியோக பொருள்களான கடத்துவதும் பதுக்குவதும் குற்றமாகும்
    • புகார்களை 1800 599 5950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.

    போரூர்:

    சென்னை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுதுறை சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது. அதன் விபரம் வருமாறு :- பொது விநியோக பொருள்களான அரிசி, பருப்பு, கோதுமை, எண்ணெய் போன்றவற்றை கடத்துவதும் பதுக்குவதும் குற்றமாகும் இந்த குற்றத்தை செய்யும் நபர்கள் மீது கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் இன்றியமையா பண்டங்கள் சட்டம் 1980-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொது விநியோக பொருள்கள் கடத்தல் மற்றும் பதுக்குதல் தொடர்பான புகார்களை 1800 599 5950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×