search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 224328"

    • தெற்கு அவிநாசிபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள்
    • மின் விநியோகம் இருக்காது

        காங்கயம்:

    காங்கயம் கோட்டம் பெரியாா் நகா், புதுப்பை ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் நாளை 23-ந்தேதி(புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று காங்கயம் மின்வாரிய செயற்பொறியாளா் வெ.கணேஷ் தெரிவித்துள்ளாா்.

    பெரியாா் நகா் துணை மின் நிலையம்: தீத்தாம்பாளையம், சிவனாதபுரம், லக்கமநாயக்கன்பட்டி, எல்.கே.சி.நகா், அண்ணா நகா், ஏ.பி.புதூா், எஸ்.ஆா்.ஜி.வலசு ரோடு, சேரன் நகா், கரட்டுப்பாளையம், செந்தலையாம்பாளையம்.

    புதுப்பை துணை மின் நிலையம்: புதுப்பை, கஸ்தூரிபாளையம், தங்கமேடு, மொட்டக்காளிவலசு, மயில்ரங்கம், வெள்ளாத்தங்கரைபுதூா், நாச்சிபாளையம், சுப்பிரமணியக்கவுண்டன்வலசு, நாயக்கன்புதூா், கரைவலசு, செம்மடை, புள்ளசெல்லிபாளையம்.

    பொங்கலூா் ஒன்றியம் தெற்கு அவிநாசிபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று பல்லடம் மின் வாரிய செயற்பொறியாளா் ரத்தினகுமாா் தெரிவித்துள்ளாா்.

    மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: கொடுவாய், வெள்ளியம்பாளையம், வினோபா நகா், கொசவம்பாளையம், கருணைபாளையம் பிரிவு, செங்கோடம்பாளையம், அய்யம்பாளையம், பள்ளிபாளையம், கோவில்பாளையம், தொட்டிபாளையம், பொல்லிகாளிபாளையம், தெற்கு அவிநாசிபாளையம், வடக்கு அவிநாசிபாளையம் (ஒரு பகுதி), அலகுமலை (ஒரு பகுதி), காட்டூா் (ஒரு பகுதி), உகாயனூா்

    • மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள்
    • காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை முதலிபாளையம் துணை மின் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் மின்தடை.

    திருப்பூர்:

    முதலிபாளையம், பழவஞ்சிபாளையம் நல்லூர், மற்றும் பூமலூர் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ள–தால் நாளை 22-ந் தேதி இந்த துணை மின் நிலையங்களில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்பகிறது. அதன்படி அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை முதலிபாளையம் துணை மின் நிலையத்துக்குட்பட்ட சிட்கோ, பொன்னாபுரம், முதலிபாளையம், ராக்கியபாளையம், நல்லூர், மண்ணரை, பாரப்பாளையம், கோல்டன் நகர், ஆர்.வி.ஈ. நகர், கூலிபாளையம், காசிபாளையம், சர்க்கார் பெரிய பாளையம், பெட்டிக்கடை, சென்னிமலைபாளையம், ரெங்கேகவுண்டம்பாளையம், விஜயபுரம், மானூர், செவந்தம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

    நல்–லூர் துணை மின் நிலையத்துக்குட்பட்ட நல்லூர், காளிபாளையம், சாணார்பாளையம், முத்தணம்பாளையம் ராக்கியாபாளையம் பிரிவு ஆகிய இடங்களிலும், பழவங்சிப்பாளையம் துணை மின் நிலைத்துக்குட்பட்ட செட்டிபாளையம், பழவஞ்சிபாளையம், பூங்கா நகர், பாலாஜி நகர், அய்யப்பா நகர் ஆகிய பகுதிகளிலும் மின் வினியோகம் இருக்காது.

    இது–போல் பூம–லூர் துணை மின் நிலையத்திற்குட்பட்ட மங்கலம், சுல்தான்பேட்டை, இடுவாய், பாரதிபுரம், கணபதிபாளையம், செட்டிபாளையம், சீரணம்பாளையம், சின்னகாளிபாளையம், சின்னப்புத்தூர், பெரியப்புத்தூர், வேட்டுவபாளையம், மலைக்கோவில், வெள்ளச்செட்டிபாளையம், வடுகாளிப்பாளையம், புக்கிலிப்பாளையம், வேலாயுதம்பாளையம், பூமலூர், கணக்கம்பாளையம், பெருமாப்பாளையம், பள்ளிப்பாளையம், கிடாத்துரை புதூர் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.

    இந்த தகவலை மின் வாரிய செயற்பொறியாளர்கள் ராமச்சந்திரன், சபரிராஜன் தெரிவித்துள்ளனர்.

    • ஜனவரி மாதம் 20-ந்தேதி வரை 65 நாட்கள் நீடிக்கிறது
    • 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட உள்ளனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரிக்கு வருடம் முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து சென்றாலும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய3மாதங்களும் கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்களின் வருகை அதிக அளவில் காணப்படும். இதனால் இந்த 3 மாதங்களும் இங்கு சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் காலமாக கருதப்படுகிறது. இந்த ஆண்டு சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது.

    இந்த சீசன் ஜனவரி மாதம் 20-ந்தேதி வரை 65 நாட்கள் நீடிக்கும். இந்த சீசனையொட்டி கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்களுக்கு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட உள்ளது. குடிநீர், கழிப்பறை, மின்விளக்கு மற்றும் சுகாதார வசதிகளை செய்து கொடுக்க கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி நிர்வாகம் முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. சீசனையொட்டி கன்னியாகுமரியில் இரவு நேரத்திலும் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

    துப்புரவு பணியாளர்கள் சுழற்சி முறையில் துப்புரவு பணியில் ஈடுபடுவார்கள். ஆண்டுதோறும் சபரிமலை சீசனையொட்டி கன்னியாகுமரியில் நடைபாதைகளில் 600-க்கும் மேற்பட்ட சீசன் கடைகள் பேரூராட்சி நிர்வாகம் மூலம் ஏலம் விடப்படுவது வழக்கம். ஆனால் தற்போது கன்னியாகுமரியில் சீசன் கடைகள் அமைப்பது சம்பந்தமாக மதுரை ஐகோர்ட்டில் வழக்கு நடந்து வருவதால் இதுவரை கன்னியாகுமரி பேரூராட்சி நிர்வாகம் சீசன் கடைகளை ஏலம் விடவில்லை. சீசனையொட்டி 24 மணி நேரமும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    இதற்காக 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட உள்ளனர். இவர்கள் சிப்ட் முறையில் பாதுகாப்புபணியில் ஈடுபடுவார்கள். மேலும் கடற்கரை பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் வசதி செய்யப்பட்ட உள்ளது. பாதுகாப்பு பணியில் போலீசார், ஊர்க்காவல் படையினர் மற்றும் போக்குவரத்து போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா வாகனங்களை நிறுத்துவதற்கு தனி பார்க்கிங் வசதி ஏற்பாடும் செய்யப்பட உள்ளது. சீசனையொட்டி சுற்றுலா பயணிகளை வரவேற்க கன்னியாகுமரி நகரம் தயாராகிக் கொண்டிருக்கிறது.

    • போலீஸ் சூப்பிரண்டு தகவல்
    • ஒரு நபருக்கு ஒரு மாதத்துக்கு 5 அழைப்பு பணி மட்டுமே இருக்கும்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலு வலகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:-

    குமரி மாவட்ட ஊர்க்கா வல் படையில் 20 ஆண்கள், 3 பெண்கள் என மொத்தம் 23 பணியிடங்கள் நிரப்பப் பட உள்ளன. ஊர்க்காவல் படையில் சேர விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற் கப்படுகின்றன. இதற்கான விண்ணப்ப வினியோகம், குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலு வலகத்தில் வினியோகம் செய்யப்படுகிறது. விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பங்களை பெற்று, நாளை (16-ந்தேதி) மாலை 5 மணிக்குள், எஸ்.பி. அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். அதன் பின்வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. விண்ணப்பதாரர் 31.10.22 அன்று 18 வயது முடிவு பெற்றவராக இருக்க வேண்டும்.

    50 வயதுக்கு மேல் இருக்க கூடாது. நல்ல உடல் ஆரோக் கியம் உடையவராகவும், நன்னடத்தை மற்றும் நல் லொழுக்கம் உடையவராக வும் இருக்கவேண்டும். விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் நாட்டை சேர்ந்தவராகவும், தமிழ்நாட் டில் வசிப்பவராகவும் இருக்க வேண்டும். பொது நலத்தொண்டில் ஆர்வம் உடையவராக இருக்க வேண்டும்.

    குறைந்தது மூன்று வரு டம் பணிபுரிய விருப்பம் உள் ளவராக இருக்க வேண்டும். மத்திய, மாநில அரசு ஊழி யராகவோ, சுய வேலை பார்ப்பவர்களாகவோ அல்லது ஒரு நிறுவனத்தில் பணிபுரிபவர்களாகவோ இருத்தல் வேண்டும். ஒரு அழைப்புக்கான ஊதியம் ரூ.560 ஆகும். ஒரு நபருக்கு ஒரு மாதத்துக்கு 5 அழைப்பு பணி மட்டுமே இருக்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கோவில்களில் சிறப்பு வழிபாடுகளும் நடக்கிறது
    • கார்த்திகை, மார்கழி, தை ஆகிய 3 மாதங்களும் இனி எங்கு பார்த்தாலும் அய்யப்ப சரணகோஷம் ஒலிப்பதைதான் கேட்க முடியும்

    கன்னியாகுமரி:

    கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி, தெலுங்கானா உள்பட பல்வேறு மாநிலங் களில் இருந்தும் வெளிநாடு களில் இருந்தும் அய்யப்ப பக்தர்கள் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு தரிச னத்துக்காக கார்த்திகை மாதம் 1-ந்தேதி அன்று மாலை அணிந்து 41 நாட்கள் விரதம் இருந்து இருமுடி கட்டு கட்டி தலை யில் சுமந்து சென்று அய்யப்பனை தரிச னம் செய்வது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு மண்டல பூஜைக்காக சபரி மலை அய்யப்பன் கோவில் நடை நாளை (புதன்கிழமை) திறக்கப்பட உள்ளது.

    இதைத்தொடர்ந்து சபரிமலைக்கு இருமுடி கட்டி செல்லும் அய்யப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் 1-ந்தேதியான நாளைமறுநாள் கோவில்களுக்கு சென்று மாலை அணிந்து விரதம் தொடங்குகிறார்கள்.

    அதன்படி குமரி மாவட் டத்தில் உள்ள புகழ் பெற்ற கோவில்களான கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், சுசீந்தி ரம் தாணுமாலய சுவாமி கோவில், நாகர்கோவில் நாகராஜா கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், பூதப் பாண்டி பூதலிங்க சுவாமி கோவில், குமார கோவில் வேளிமலை சுப்ரமணியசாமி கோவில், பார்வதிபுரம் அய்யப்பன் கோவில், உள்பட பல்வேறு கோவில்களில் நாளை மறுநாள் அதிகாலையில் இருந்தே சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள் துளசி மாலை அணிந்து விரதம் தொடங்குகிறார்கள்.

    அதிலும் குறிப்பாக கன்னியாகுமரியில் முக்கட லும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடலில் அய்யப்ப பக்தர் கள் நாளை மறுநாள் அதிகாலையில் புனித நீராடிவிட்டு கடற்கரையில் உள்ள பரசுராமர் விநாயகர் கோவில் மற்றும் பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சரண கோஷம் முழங்க துளசி மாலை அணிந்து விரதம் தொடங்கு கிறார்கள்.

    இதில் மண்டல பூஜை தரிசனத்துக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் 41 நாட்களும் மகரவிளக்கு தரிசனத்திற்கு செல்லும் அய்யப்ப பக்தர் கள் 60 நாட்களும் விரதம் கடைப்பிடிப்பது வழக்க மாகும். சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள்மாலை அணிவதற்காக நேற்று முதலே கடைகளில் துளசி மாலைகளை வாங்குவதற் காக படையெடுத்துச் சென்ற வண்ணமாக உள்ளனர். இதனால் பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் விரதம் தொடங்கும் அய்யப்ப பக்தர்களின் கூட்டம் அலை மோதுகிறது.

    இந்த கடைகளில் துளசி மாலை மற்றும் முத்து மணி மாலைகள் விற்பனை படு ஜோராக நடந்து கொண்டிருக்கிறது. மேலும் இந்த கார்த்திகை மாதம் 30 நாட்களும் குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் கார்த்திகை மாத சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. கார்த்திகை, மார்கழி, தை ஆகிய 3 மாதங்களும் இனி எங்கு பார்த்தாலும் அய்யப்ப சரணகோஷம் ஒலிப்பதைதான் கேட்க முடியும் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

    • மின்பாதைகளுக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றப்பட உள்ளன.
    • பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    கன்னியாகுமரி:

    குழித்துறை மின் விநியோக செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    குழித்துறை கோட்டத்துக்குட்பட்ட முன்சிறை மற்றும் நடைக்காவு துணை மின் நிலைய பகுதிகளில் நாளை (15-ந்தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான முன்சிறை, காப்புக்காடு, மங்காடு, விரிவிளை, நித்திரவிளை, புதுக்கடை, கொல்லங்கோடு, கிராத்தூர், ஐரேனிபுரம், விழுந்தயம்பலம், பைங்குளம், தேங்காய்ப்பட்டனம், ராமன்துறை, சென்னித்தோட்டம், மாமூட்டுக்கடை, விரிகோடு , கொல்லஞ்சி உள்ளிட்ட பகுதிகளுக்கும் மற்றும் சூரியகோடு, குளப்புறம், சுந்தரவனம், வாறுதட்டு, குழிவிளை, கோழிவிளை, கோனசேரி, சாத்தன்கோடு, வாவறை, மணலி, பாலவிளை, வளனூர், சூழால், பாத்திமாநகர், மெதுகும்மல், வெங்கஞ்சி உள்ளிட்ட பகுதிகளுக்கும் அன்றைய தினம் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

    இந்த நேரத்தில் மின்பாதைகளுக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றப்பட உள்ளன. இதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கணேசபுரம் மற்றும் பள்ளம் மின்பாதையில் அவசர பராமரிப்பு பணி
    • மீனாட்சிபுரம் மின் விநிேயாக உதவி செயற்பொறியாளர் தகவல்

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மீனாட்சிபுரம் மின் விநிேயாக உதவி செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மீனாட்சிபுரம், ஈத்தாமொழி பிரிவிற்குட்பட்ட கணேசபுரம் மற்றும் பள்ளம் மின்பாதையில் நாளை (5-ந்தேதி) அவசர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான சற்குணவீதி, மேலராமன்புதூர், ஐ.எஸ்.ஆர்.ஓ. வளாகம், சிவன் கோவில் தெரு மற்றும் வத்தக்காவிளை, கீரிவிளை, பிலாவிளை, சுண்டபற்றிவிளை உள்ளிட்ட இடங்களில் அன்றைய தினம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. தகவல்
    • நாகர்கோவில் வாட்டர் டேங்க் ரோட்டில் உள்ள ஓய்.ஆர் மஹாலில் மாலை 5 மணிக்கு நடக்கிறது

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 51-வது ஆண்டு தொடக்க விழா மற்றும் முன்னாள் அமைச்சரும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான நாஞ்சில் வின்சென்ட்டு-க்கு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் விருது வழங்கும் விழா நாகர்கோவில் வாட்டர் டேங்க் ரோட்டில் உள்ள ஓய்.ஆர் மஹாலில் நாளை(1-ந்தேதி) மாலை 5 மணிக்கு நடக்கிறது.

    விழாவிற்கு குமரி கிழக்கு மாவட்ட கழக அவைத்தலைவர் சேவியர்ம னோகரன் தலைமை தாங்குகிறார்.

    மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் சுகுமாரன் வரவேற்று பேசுகிறார். மாவட்ட கழக இணைச் செயலாளர் சாந்தினிபகவதியப்பன், மாவட்ட கழக துணைச் செயலாளர் பார்வதி, மாவட்ட கழகப் பொருளா ளர் திலக், கிழக்கு பகுதி கழகச் செயலாளர் ஜெய கோபால், தெற்கு பகுதி கழகச் செயலாளர் முரு கேஷ்வரன், மேற்கு பகுதி கழகச் செயலாளர் ஜெவின் விசு, மாமன்ற உறுப்பினர் கோபால சுப்பிரமணியம்,

    சேகர், ஸ்ரீலிஜா, அனிலாசுகுமாரன், கிழக்கு மாவட்ட அம்மா பேரவைச் செயலாளர் ராஜாராம் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். கழக அமைப்புச் செயலாளரும்,

    முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய்சுந்தரம் சிறப்புரையாற்றுகிறார்.

    அமைப்புச் செய லாளர்கள் சின்னத்துரை, சுதா பரமசிவன், தலைமைக் கழகப் பேச்சாளர் சுப்பையா பாண்டியன், கழக எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் கிருஷ்ணதாஸ், கழக எம்.ஜி.ஆர் இளைஞரணி இணைச் செயலாளர் சிவசெல்வராஜன், கழக வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளரும்,

    மாவட்ட கவுன்சிலருமான பரமேஸ்வரன், குமரி மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் ஜாண்தங்கம், குமரி மேற்கு மாவட்ட கழக அவைத்தலைவர் சிவ.குற்றாலம் ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள்.

    விழாவில் முன்னாள் அமைச்சரும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான நாஞ்சில் வின்சென்டுக்கு எம்.ஜி.ஆர் விருதினை தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வழங்குகிறார்.

    இதனைத் தொடர்ந்து நாஞ்சில் எம்.வின்சென்ட் ஏற்புரையாற்றுகிறார். மாமன்ற உறுப்பினர் அக்சயா கண்ணன் நன்றி கூறுகிறார்.

    இவ்விழாவில் மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பேரூராட்சி, ஊராட்சி, கிளைக் கழக நிர்வாகிகள், கழக செயல் வீரர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கப் பிரதிநிதிகள், அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய்சுந்தரம் கேட்டு கொண்டுள்ளார்.

    • ஆயத்த ஆடைகள்-பட்டாசுகள் வாங்குவதில் பொதுமக்கள் ஆர்வம்
    • வெளியூர்களில் இருந்து சொந்த ஊருக்கு பலரும் வந்ததால் பஸ்-ரெயில் நிலையங்களில் கூட்டம் அதிகரிப்பு

    நாகர்கோவில்:

    சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் பண்டிகைகளில் முக்கியமானது தீபாவளி.

    புத்தாடைகள் அணிந்து, பட்டாசுகள் வெடித்து ஆனந்தமாக கொண்டாடும் தீபாவளி பண்டிகை, இந்த ஆண்டு நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக புதிய துணி வாங்குவதில் பலரும் ஆர்வம் காட்டினர்.

    வீட்டில் இருக்கும் உறவினருக்கு ஆடைகளை எடுத்து தைக்க கொடுப்ப தில் முனைப்பாக செயல்பட்டனர். இதனால் கடந்த சில நாட்களாக ஜவுளி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. குமரி மாவட்டத்திலும் தீபாவளி பண்டிகை விற்பனை விறு விறுப்பாக நடந்தது. பண்டிகை காலம் நெருங்க நெருங்க ஆயத்த ஆடைகள் (ரெடிமெட்) வாங்க அனைத்து கடை களிலும் மக்கள் கூட்டம் அலை மோதியது.

    சாலையோர சிறு வியாபாரிகள் ஆயத்த ஆடைகள், பட்டாசுகள், மற்றும் சிறுவர்-சிறுமிகளை கவரும் பொருட்கள் போன்ற வற்றை விற்பனைக்காக குவித்து வைத்திருந்தனர். அவற்றை வாங்குவதிலும் பொதுமக்கள் ஆர்வம் காட்டினர். நாகர் கோவில் மீனாட்சிபுரம், செம்மங்குடி ரோடு, கோட்டார் சாலை உள்ளிட்ட முக்கிய சாலை களில் மக்கள் குடும்பத்து டன் வந்ததால், அங்கு போக்குவரத்து நெருக்கடி யும் ஏற்பட்டது. இதற்கிடையில் குமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை வியா பாரிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. திடீர்.. திடீரென பெய்யும் மழையால் சிறு வியாபாரிகள் பெரிதும் பாதிப்பை சந்தித்து வரு கின்றனர்.

    இருப்பினும் அவர்கள் தங்கள் வியாபாரத்தை தொடர்ந்து நடத்தி வர அங்கு மக்கள் கூட்டமும் அதிகமாக காணப்பட்டது. இதனால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

    இதனை சீரமைக்க மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் போலீ சார் பல்வேறு நடவடிக்கை களை எடுத்துள்ளனர். சாலையில் தடுப்பு வேலிகள் அமைத்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.

    இதனால் மக்கள் பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளுக்கும் சிரமமின்றி சென்று ஜவுளி மற்றும் பல்வேறு பொருட்களை வாங்கிச் சென்றனர்.

    தீபாவளிக்கு இன்னும் 2 நாட்களே உள்ளதால், பட்டாசு கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பல்ேவறு ரக புதிய பட்டாசுகளை வாங்குவதில் சிறுவர்-சிறுமிகள், இளைஞர்கள் ஆர்வம் காட்டினர். இதனால் குமரி மாவட்டத்தில் பட்டாசு விற்பனை களை கட்டி காணப்பட்டது. இன்னும் 2 நாட்களில் இந்தக் கூட்டம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    இதனை கருத்தில் கொண்டு மாவட்டத்தில் வியாபாரிகளும் போலீசாரும் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

    இதற்கிடையில் தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் குடும்பத்தினருடன் கொண்டாட, வெளியூர்க ளில் வேலை பார்ப்ப வர்கள் இன்று முதல் குமரி மாவட்டம் வரத் தொடங்கி விட்டனர். இதனால் வடசேரி, அண்ணா பஸ் நிலையம் மற்றும் ரெயில் நிலையங்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    இதேபோல் வெளியூர்களில் இருந்து இங்கு வந்து வேலை பார்ப்பவர்களும் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல பஸ்நிலையம், ரெயில் நிலையம் நோக்கி வருகின்றனர். வெளியூர் செல்வோர் மற்றும் வருவோர் வசதிக்காக சிறப்பு பஸ்கள், ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதனால் மாலை , இரவு நேரங்கள் மட்டுமின்றி, காலை நேரத்திலும் ஏராளமானோர் பயணத்தை தொடர்வதில் ஆர்வம் காட்டினர்.

    • தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்குதான் வேலை வழங்க வேண்டும்
    • அனைத்து கூலி தொழிலாளர்களையும் வறுமைக்கோடு பட்டியலில் சேர்க்க வேண்டும்

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்ட மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (விடுதலை) கட்சியின் 4 வது மாநாடு நாளை (சனிக்கிழமை) குளச்சல் புனித காணிக்கை மாதா மண்டப சாரு மஜும்தார் நினைவகத்தில் நடக்கிறது. காலை 10 மணிக்கு ஜஸ்டின் சுந்தர் மாநாடு கொடியேற்றி உரை நிகழ்த்துகிறார்.

    கடலோர பகுதி செயலாளர் நஸ்ரேன் பெர்னார்ட் வரவேற்று பேசுகிறார். நிர்வாகிகள் சுசீலா, மேரி பிளவர், விஜயா முன்னிலை வகிக்கின்றனர். மாநில செயலாளர் என்.கே.நடராஜன் மாநாடு துவக்கவுரை ஆற்றுகிறார்.

    குமரி மாவட்ட செயலாளர் எஸ்.எம்.அந்தோணி முத்து மாநாடு அறிக்கை வாசிக்கிறார்.மாநிலக் குழு உறுப்பினர் சிம்சன் நிறைவுரை ஆற்றுகிறார்.நிகழ்ச்சியை நிர்வாகிகள் சூசை மரியான், கார்மல், அர்ஜூனன், ஞானசெல்வம், சியாமளா, வக்கீல் ஐயப்பன், கணபதி, தங்கலட்சுமி, எஸ்டின், செல்வராஜ், ரவி, அனிற்றா பிரின்ஸி, ஜெமிலா ஜெனட், மாசிலாமணி, மார்டின் ஆகியோர் ஒருங்கிணைக்கின்றனர்.கிள்ளியூர் ஏரியா கமிட்டி செயலாளர் சுரேஷ் நன்றி கூறுகிறார்.

    மாநாட்டில் தமிழ்நாட் டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்குதான் வேலை வழங்க வேண்டுவது, அனைத்து கூலி தொழிலாளர்களையும் வறுமைக்கோடு பட்டியலில் சேர்க்க வேண்டுவது உள்பட பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது.

    • நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் அறிக்கை
    • நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் நடந்தது.

    நாகர்கோவில்:

    மத்திய அரசின் இந்தி திணிப்பை கண்டித்து தி.மு.க. இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் தமிழகம் முழுவதும் நாளை 15-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

    குமரி கிழக்கு, மேற்கு மாவட்ட தி.மு.க. இளை ஞரணி, மாணவரணி சார்பில் நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இது தொடர்பான இளைஞரணி, மாணவரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் நடந்தது.

    கூட்டத்தில் கன்னியா குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மேயருமான மகேஷ் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.மாநகரச் செயலாளர் ஆனந்த், இளைஞர் அணி அமைப்பாளர் சிவராஜ் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டம் குறித்து கிழக்கு மாவட்ட செய லாளரும் மேயருமான மகேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசின் இந்தி திணிப்பை கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில்தி.மு.க. இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட வேண்டும் என தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

    அதன்படி கன்னியாகுமரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட தி.மு.க. இளை ஞரணி, மாணவரணி சார்பில் நாகர்கோவிலில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு நாளை காலை 9.30 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் எனது தலைமையில் நடக்கிறது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. இளைஞரணி, மாணவரணி நிர்வாகிகள், மாவட்ட, மாநகர, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள், ஊராட்சி கிளைச்செயலா ளர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

    • நாகர்கோவில் சந்திப்பு- கோட்டயம் எக்ஸ்பிரஸ் தாமதமாக புறப்படும்.
    • தெற்கு ரெயில்வே திருவனந்தபுரம் கோட்ட செய்திக்குறிப்பில் தகவல்

    நாகர்கோவில்:

    தெற்கு ரெயில்வே திருவனந்தபுரம் கோட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருவனந்தபுரம் சென்ட்ரல்- நாகர்கோவில் சந்திப்புப் பிரிவில் உள்ள நேமம்- நெய்யாற்றின் கரை ரெயில் நிலையங்களுக்கு இடையே பொறியியல் பணிகளுக்காக, அக்டோபர் 8-ந்தேதி சனிக்கிழமை அன்று ரெயில்கள் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ரெயில் எண்: 06772 கொல்லம் சந்திப்பு- கன்னியாகுமரி மெமு எக்ஸ் பிரஸ் சிறப்பு ரெயில் அக்டோபர் 8-ந்தேதி அன்று முழுமையாக ரத்து செய்யப்படும்.

    ரெயில் எண்: 06773 கன்னியாகுமரி- கொல்லம் சந்திப்பு மெமு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் அக்டோபர் 8-ந்தேதி அன்று முழுமையாக ரத்து செய்யப்படும்.

    ரெயில் எண்: 16366 நாகர்கோவில் சந்திப்பு- கோட்டயம் எக்ஸ்பிரஸ் நாகர்கோவிலில் இருந்து அக்டோபர் 8-ந்தேதி மதியம் 1 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக அன்று 2.30 மணிக்கு 1 மணி நேரம் 30 நிமிடங்கள் தாமதமாக புறப்படும்.

    ரெயில் எண்: 06429 கொச்சுவேளி- நாகர்கோவில் சந்திப்பு முன்பதிவில்லா எக்ஸ் பிரஸ் சிறப்பு ரெயில் கொச்சுவேளியில் இருந்து அக்டோபர் 8-ந்தேதி மதியம் 1.40 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக கொச்சுவேளியில் இருந்து 3.10 மணிக்கு(1 மணி நேரம் 30 நிமிடங்கள் தாமதமாக) புறப்படும்.

    இவ்வாறு செய்தி கூறியிருப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×