search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 224519"

    • பணியின் போது அரசு பேருந்து ஓட்டுநர் உயிரிழந்தார்
    • மாரடைப்பு ஏற்பட்டதும் பேருந்தை நிறுத்தியுள்ளார்

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே பணியின் ே பாது ஏற்பட்ட மாரடைப்பால் அரசு பேருந்து ஓட்டுநர் உயிரிழந்தார். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வட்டம், உலகம்பட்டி அருகே உள்ள படமிஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி மகன் குமார் (வயது40). இவர் பொன்னமராவதி அரசு போக்குவரத்து பணிமனையில் ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்றுகாலை 8 மணியளவில் சிங்கம்புணரியிலிருந்து பொன்னமராவதி சென்ற அரசு பேருந்தை சுமார் 70 பயணிகளுடன் குமார் ஓட்டிவந்தார். மேலச்சிவபுரி அருகே வந்தபோது, அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனே பேருந்தை நிறுத்திய குமார் பேருந்திலேயே மயங்கி விழுந்தார். தகவலறிந்த பொன்னமராவதி போலீசார் அங்கு வந்து வலையப்பட்டி அரசு பாப்பாயி மருத்துவமனைக்கு அவரை அனுப்பிவைத்தனர். அவங்கு அவரை பரிசோதிதத் மருத்துவர்கள் குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். முன்னதாக உயிரிழந்த ஓட்டுநர் குமார், பேருந்தை உடனடியாக நிறுத்தி பயணிகளின் உயிரை காப்பாற்றியது குறிப்பிடத்தக்கது.

    • கை வைத்து பக்கெட்டில் இருந்த தண்ணீர் சூடாகி விட்டதா என பார்த்தபோது மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டார்.
    • இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே உள்ள வில்லுக்குறி எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் ஏசு ராஜேந்திரன். இவரது மனைவி பிரேமா (வயது 48) நேற்று காலை குளிப்ப தற்காக ஹீட்டரை ஆன் செய்து உள்ளார். சிறிது நேரம் கழித்து வழக்கம் போல கை வைத்து பக்கெட்டில் இருந்த தண்ணீர் சூடாகி விட்டதா என பார்த்ததாக கூறப்படுகிறது.

    அப்போது மின்சாரம் தாக்கியதில் பிரேமா தூக்கி வீசப்பட்டார். அவரை உறவினர்கள் மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப்பின் மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே பிரேமா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து அவரது கணவர் ஏசு ராஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலம் மாவட்டம் வீராணம் அருகே உள்ள சுக்கம்பட்டி அடுத்த பள்ளிப்பட்டி அம்மன் கோவில் தெருவில் பெண் குழந்தை திடீர் பலி.
    • இந்த தம்பதிக்கு கடந்த 45 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் நேற்று மதியம் குழந்தைக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் வீராணம் அருகே உள்ள சுக்கம்பட்டி அடுத்த பள்ளிப்பட்டி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வடிவேல் (வயது 26). இவருக்கு கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு வர்தினி (23) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது.

    இந்த தம்பதிக்கு கடந்த 45 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் நேற்று மதியம் குழந்தைக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.அதை தொடர்ந்து குழந்தையை உடனடியாக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து தகவலின் பேரில் வீராணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் போலீசார் குழந்தை எவ்வாறு இறந்தது? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    குடும்ப பிரச்சினை காரணமாக கருவேல மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கடலூார்:

    மேல்புவனகிரி மெயின் ரோட்டில் வசித்து வருபவர் சின்னராஜ் (வயது 38). கூலித் தொழிலாளி இவரது மனைவி பிரியா (25), இவர்களுக்கு ஒரு வயது பெண் குழந்தை உள்ளது. இவர் குடும்ப பிரச்சினை காரணமாக மேல்புவனகிரியில் உள்ள தில்லை வெள்ளாற்றங்கரை அருகே உள்ள கருவேல மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அந்த வழியே சென்ற பொதுமக்கள் பார்த்துவிட்டு புவனகிரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற புவனகிரி போலீசார் உடலை கைப்பற்றி, சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • ஒருஓட்டலில் அறைஎடுத்து தங்கிஇருந்து கன்னியாகுமரி பகுதியில் உள்ள பல்வேறு சுற்றுலா தலங்களை சுற்றி பார்த்தார்.
    • ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குகொண்டு சென்றனர். ஆனால் அவர் அங்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்துள்ளார்.

    கன்னியாகுமரி :

    மகாராஷ்டிரா மாநிலம் கமலா பார்க் பகர்தூர்வெஸ்ட் பகுதியைச் சேர்ந்தவர் மாதவ் தேசாய். இவரது மனைவி தனுஜா தேசாய் என்ற ரோகினிமாதவ்தேசாய் (வயது57)

    இவர்தனது உறவினர்களுடன் கன்னியாகுமரிக்கு கடந்த 29-ந்தேதி சுற்றுலாவந்தார்.அவர்அங்குஉள்ள ஒருஓட்டலில் அறைஎடுத்து தங்கிஇருந்து கன்னியாகுமரி பகுதியில் உள்ள பல்வேறு சுற்றுலா தலங்களை சுற்றி பார்த்தார்.

    இந்த நிலையில் அந்த ஓட்டலில் தங்கி இருந்த போது அவருக்கு நேற்று "திடீர்"என்று உடல் நலக் குறைவு ஏற்பட்டது. உடனே அவரை அவரது உறவினர்கள் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குகொண்டு சென்றனர். ஆனால் அவர் அங்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்துள்ளார்.

    இது குறித்து தகவல் அறிந்த கன்னியாகுமரி போலீசார் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    கள்ளக்குறிச்சி:

    சின்னசேலம் வட்டம் மரவனத்தம் கிராமத்தை சேர்ந்தவர் தயாளன் (வயது 57) இவர் கடந்த 26 ஆம் தேதி அன்று தனது வீட்டின் படியில் ஏறும் போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டது பின்னர் மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது தயாளனுக்கு தலைவலி ஏற்பட்டுள்ளது.

    அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.உடனே அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். சின்ன சேலம் போலீசார் வழக்கை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

    • மகன் வீட்டிற்கு வந்த பெண் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார்
    • தீராத வயிற்று வலியால் அவர் அவதிப்பட்டு வந்தார்

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகேயுள்ள தெரணி கிராமம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தங்கராஜ் மனைவி மலர்கொடி (வயது 55). கணவர் இறந்துவிட்டதால் மலர்கொடி தனியாக வசித்து வந்தார். இவரது மகள் விஜயாவுக்கு திருமணமாக செட்டிக்குளத்தில் கணவருடன் வசித்து வருகிறார். இதற்கிடையே கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவர் அவதிப்பட்டு வந்தார்.

    இந்த நிலையில் நேற்று திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற மலர்கொடி செட்டிக்குளத்தில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றார். இன்று அதிகாலை 2 மணிக்கு எழுந்து வெளியே சென்ற மலர்கொடி நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதையடுத்து அவரது மகள் விஜயா வெளியில் சென்று தேடிப்பார்த்தார். அப்போது வீட்டில் இருந்து சற்று தொலைவில் உள்ள கிணற்றின் அருகில் தாய் மலர்கொடியின் செருப்பு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் அவர் பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் நிலைய அலுவலர் உதயகுமார் தலைமையில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி பார்த்தபோது அங்கு இறந்த நிலையில் மலர்கொடி மீட்கப்பட்டார். அவர் தவறி விழுந்து இறந்தாரா அல்லது கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டாரா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • காரியாபட்டி அருகே வெந்நீர் கொட்டி 3 வயது சிறுமி இறந்தாள்.
    • இது தொடர்பாக ஆனந்தவேலு கொடுத்த புகாரின் பேரில் ஏ.முக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள தேனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தவேலு (வயது 30). கட்டிட தொழிலாளியான இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 வயதில் தனுஸ்ரீ என்ற மகள் இருந்தாள். சம்பவத்தன்று ஆனந்தவேலு வேலைக்கு சென்று விட்டார். அவரது மனைவி குழந்தையை வீட்டின் அறையில் விட்டு விட்டு மற்ற வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தார்.

    அப்போது கொதிக்கும் தண்ணீர் இருந்த பாத்திரம் அருகே சிறுமி சென்றாள். அப்போது கொதிக்கும் தண்ணீர் சிறுமி மீது கொட்டியது. வலியால் கதறியழுத மகளை பார்த்து தாய் அதிர்ச்சியடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் குழந்தையை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தனுஸ்ரீக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தாள். இது தொடர்பாக ஆனந்தவேலு கொடுத்த புகாரின் பேரில் ஏ.முக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நீரில் மூழ்கி வாலிபர் உயிரிழந்தார்
    • ஆற்றில் குளிக்க சென்றார்

    கரூர்:

    அமராவதி ஆற்றில் குளிக்க சென்ற வாலிபர், நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

    கரூர், வெங்கமேடு செல்வ நகர் பகுதியை சேர்ந்தவர் வரதராஜன் மகன் ஆனந்தகுமார் (வயது 26) இவர், சணப்பிரட்டி பகுதியில் அமராவதி ஆற்றில் குளிக்க சென்றார். குளித்துக் கொண்டிருந்த போது திடீரென நீரில் மூழ்கினார். அப்போது கைகளை தூக்கி காப்பாற்றுங்கள் என குறல் அபாய குறல் எழுப்பினார்.

    அதனை கேட்ட அக்கம் பக்கத்தில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் காப்பாற்ற முற்பட்டனர். காப்பாற்ற முடியாததால் தீயணைப்பு துறையினருக்கும் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் இறங்கி ஆனந்தகுமார் உடலை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் குறித்து பசுபதிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சுவர் இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக இறந்தது.
    • திண்ணையில் விளையாடிக் கொண்டிருந்தான்

    அரியலூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் சின்னையன் பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மனைவி கண்மணி. இவர்களுடைய மகன் ரித்விக் (வயது 2). கடந்த 3 நாட்களுக்கு முன்பு மாரிமுத்து தனது குடும்பத்துடன் அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட மேலகருப்பூர் கிராமத்தில் உள்ள மாமியார் வீட்டிற்கு வந்துள்ளார்.நேற்று முன்தினம் அங்கிருந்து அவரது உறவினர் வீட்டிற்கு சென்ற போது அவர்களது குழந்தை ரித்விக் வீட்டின் முன்பு உள்ள திண்ணையில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக திண்ணையில் இருந்த சுவர் இடிந்து ரித்விக் மீது விழுந்தது.

    இதில் படுகாயம் அடைந்த ரித்விக்கை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரித்விக் பரிதாபமாக இறந்தான். இந்த சம்பவம் குறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    "

    • சேலம் திருவாக் கவுண்டனூர் பைபாஸ் ரவுண்டானா அருகில் கடந்த 2-ம் தேதி முதியவர் ஒருவர் மயங்கி கிடந்தார்.
    • இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சீனிவாசன், நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    சேலம்:

    சேலம் திருவாக் கவுண்டனூர் பைபாஸ் ரவுண்டானா அருகில் கடந்த 2-ம் தேதி முதியவர் ஒருவர் மயங்கி கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து போடிநாயக்கன்பட்டி கிராம நிர்வாக அலுவலர் கார்த்திகேயன், சம்பவ இடத்திற்கு வந்து முதியவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இதுகுறித்து சூரமங்கலம் போலீசில் புகார் செய்தார்.

    போலீசாரின் விசாரணை யில், மயங்கி கிடந்த முதியவர் தூத்துக்குடி மாவட்டம் அழகேசபுரம் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் (வயது 75) என்பது தெரியவந்தது. இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சீனிவாசன், நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சூரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வழக்கம் போல் வேலைக்குச் சென்றவர் மாலையில் வீடு திரும்பாததால் தாய் தேடியபோது ஓடைக் கரையில் விழுந்து கிடந்துள்ளார்.
    • திருவட்டார் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    திருவட்டார் அருகே உள்ள பாலத்தோப்புவிளை மூவாற்றுமுகம் பகுதியைச் சேர்ந்தவர் சுவாமிதாஸ். இவரது மகன் சாம்ராஜ் (வயது 38), தொழிலாளி.

    இவருக்கு மதுப்பழக்கம் இருந்து வந்தது. கடந்த 24-ந் தேதி காலை சாம்ராஜ் வழக்கம் போல் வேலைக்குச் சென்றார். ஆனால் மாலையில் அவர் வீடு திரும்பவில்லை.

    இரவு வெகுநேரமாகியும் சாம்ராஜ் வீட்டுக்கு வராததால், அவரது தாயார் ரோசம்மாள் பல இடங்களிலும் தேடினார். அப்போது அரசுபிள்ளை அருகே உள்ள ஓடைக் கரையில் சாம்ராஜ் விழுந்து கிடப்பதாக அவருக்கு தகவல் கிடைத்தது.

    இதனைத் தொடர்ந்து ரோசம்மாள், அங்கு சென்று சாம்ராஜை மீட்டார். அவரது உடலில் காயங்கள் இருந்ததால் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துள்ளனர்.

    ஆனாலும் உடல்நலம் சீராகாததால், 25-ந் தேதி ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சாம்ராஜ் சிகிச்சைக்காக சேர்ந்தார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி, நேற்று இரவு அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து அவரது தாயார் ரோசம்மாள், திருவட்டார் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×