search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 224519"

    • நேற்று காலை ஆடுகளை மேய்ச்சலுக்காக, அருகில் உள்ள பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
    • அப்போது அங்கிருந்த பாம்பு ஒன்று, ஹேமலதாவை கடித்து விட்டது.

    சேலம்:

    சேலம் அருகே உள்ள சின்ன வீராணம் அடுத்த வயக்காடு பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி ஹேமலதா (வயது 37). இவர் நேற்று காலை ஆடுகளை மேய்ச்சலுக்காக, அருகில் உள்ள பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

    அப்போது அங்கிருந்த பாம்பு ஒன்று, ஹேமலதாவை கடித்து விட்டது. இதனால் வலியால் அலறி துடித்த ஹேமலதாவை, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு வலசையூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

    பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஹேமலதா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து வீராணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மரத்தில் ஏறிய வாலிபர் தவறி விழுந்து இறந்தார.
    • வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை முத்துப்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மருதுபாண்டி (32). இவர் முத்துப்பட்டி யோக விநாயகர் கோவில் பின்புறம் உள்ள பனை மரத்தில் ஏறினார். அப்போது கால் தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலமாக அடிபட்டது. அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி சுமதி சுப்பிரமணியபுரம் போலீசில் புகார் செய்தார்.அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புள்ளி மான் இறந்தது.
    • மக்களை வேதனையில் ஆழ்த்தி உள்ளது.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள அணைக்கரைப்பட்டி சாலையோர புதரில் 3 வயது மதிக்கத்தக்க ஆண் புள்ளி மான் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்து கிடந்தது. இதனை கண்ட அந்த பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறை கள அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து இறந்த மானை மீட்டு சிங்கம்புணரி கால்நடை மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர்.

    அங்கு உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது. சிங்கம்புணரி மற்றும் எஸ்.வி. மங்கலம் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் சமீப காலமாக அதிக அளவில் மான்கள் தெரு நாய்களாலும், வாகனங்களில் அடிபட்டும் இறந்து வருவது அந்த பகுதி மக்களை வேதனையில் ஆழ்த்தி உள்ளது.

    • மயங்கி விழுந்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள அரியபுரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது55), தச்சு வேலை பார்த்து வந்தார். சம்ப வத்தன்று வேலை நிமிர்த்த மாக ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வந்த ராஜேந்திரன் அங்குள்ள நகராட்சி கழிவறை அருகே மயங்கி கிடந்தார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ராஜேந்திரன் இறந்தார். இதுகுறித்து அவரது மனைவி மீனாட்சி கொடுத்த புகாரின்பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • டிரைவர் கந்தசாமி உயிர் தப்புவதற்காக, மினி லாரியில் இருந்து கீழே குதித்தார்.
    • சிறுமுகை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேட்டுப்பாளையம்,

    சிறுமுகை அருகே உள்ள பொகளூர் பகுதியைச்சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் கந்தசாமி (வயது69). இவர் மினி லாரி வைத்து ஓட்டி வருகிறார்.

    இந்த நிலையில் அவர் நேற்று மினி லாரியில் சென்றார். அப்போது பொகளூர் அருகே இவர் வாகனத்தை அசுர வேகத்தில் ஓட்டியதாக தெரிகிறது. இதனால் வாகனம் நிலைதடுமாறி விபத்துக்கு உள்ளானது. எனவே டிரைவர் கந்தசாமி உயிர் தப்புவதற்காக, மினி லாரியில் இருந்து கீழே குதித்தார். அப்போது எதிர்பாராதவிதமாக டிராக்டர் மீது மோதி படுகாயம் அடைந்தார்.

    எனவே அவரை சிறுமுகை போலீசார் மீட்டு, மேட்டுப்பாளையம் தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருந்து டிரைவர் கந்தசாமி, மேல் சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் கந்தசாமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்து உள்ளனர். இது குறித்து சிறுமுகை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பஸ் நிறுத்தம் அருகே மயங்கி விழுந்தவர் பரிதாபமாக இறந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மதுரை

    மதுரை பாண்டியன் நகர் முல்லை நகரை சேர்ந்தவர் ஜாபர் சாதிக் (49). இவர் தெற்குவாசல் பஸ் நிறுத்தம் அருகே காத்திருந்தபோது திடீரென்று மயங்கி விழுந்தார்.

    அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து உறவினர் சாகுல் ஹமீது கொடுத்த புகாரின் பேரில் தெற்கு வாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மாட்டுத்தாவணி பஸ் நிலையம் எதிரே உள்ள ஐகோர்ட்டு அதிகாரிகள் குடியிருப்பில் வசித்தவர் பாரதிராஜா (41). இவர் நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்தார். இதனால் மன அழுத்தத்தில் இருந்தார்.

    இந்த நிலையில் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

    அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து மனைவி ஹேம சிவரஞ்சனி கொடுத்த புகாரின் பேரில் புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    • குளிர்பானம் வாங்குவதற்கு பணம் பெற்றுக் கொண்டு சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை.
    • அவரது உறவினர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது மயங்கி கிடந்தார்.

    கடலூர்:

    கடலூர் வண்டி குப்பத்தை சேர்ந்தவர் ராஜீவ் காந்தி (வயது 35). கூலி தொழிலாளி. நேற்று ராஜீவ் காந்தி தனது உறவினரிடம் குளிர்பானம் வாங்குவதற்கு பணம் பெற்றுக் கொண்டு சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இந்த நிலையில் அதே பகுதியில் மயங்கி கீழே கிடப்பதாக தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் அவரது உறவினர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது மயங்கி கிடந்தார். இதனை தொடர்ந்து ராஜீவ் காந்தியை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற போது பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜீவ் காந்தி இறந்ததற்கான காரணம் என்ன? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • சிகிச்சை பெற்று வந்த ஆதரவற்ற பெண் இறந்தார்.
    • பெண் பற்றி யாருக்கும் தகவல் தெரிந்தால் மதுரை திலகர் திடல் போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவிக்கலாம்.

    மதுரை

    மதுரையில் ராஜா மில்ரோடு மகாதேவர் சுவாமி கோவில் அருகில் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த ஒரு பெண்ணை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்து விட்டார். அவரது உடல் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. போலீசாரின் விசாரணையில், அவரது பெயர் ஆரோக்கியமேரி (வயது48 )என்று தெரியவந்துள்ளது. ஆதரவற்ற அந்த பெண் பற்றி யாருக்கும் தகவல் தெரிந்தால் மதுரை திலகர் திடல் போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவிக்கலாம்.

    • தொழிலாளி பரிதாப சாவு; வாலிபர் உள்பட 5 பேர் படுகாயமடைந்தனர்.
    • காயமடைந்த ஜான்சன் மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், மழவராயனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் கருப்புசாமி (வயது 33). தொழிலாளியான இவர் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் திருப்பாச் சேத்திக்கு சென்றுவிட்டு ஊருக்கு வந்து கொண்டி ருந்தார். அப்போது பரமக்குடியில் இருந்து எதிர்புறமாக வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாய மடைந்த கருப்புசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து திருப்பாச் சேத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் பிரவீன்குமார் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்.

    காளையார்கோவில் அருகே உள்ள உருவாட்டி கொங்கந்திடல் பகுதியை சேர்ந்தவர் ராக்கு (57). இவர் காளையார் கோவில் பஸ் நிறுத்தம் அருகே நடந்த சென்றபோது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் ராக்கு காயமடைந்தார். விபத்து குறித்து காளையார் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

    உருவாட்டி பாப்பாக் கோட்டையை சேர்ந்தவர் சிவக்குமார் (43), இவர் மோட்டார் சைக்கிளில் சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். மானாமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

    மானாமதுரை அருகே உள்ள இடையமேலூரை சேர்ந்தவர் குருசாமி (48). இவர் அங்குள்ள பஸ் நிறுத்தம் பகுதியில் நடந்து சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி காயமடைந்தார். விபத்து தொடர்பாக மானாமதுரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    திருப்பாச்சேத்தியை சேர்ந்தவர் சுந்தரம் (75). இவர் அந்தபகுதியில் நடந்து சென்றபோது மோட்டார் சைக்கிள் மோதி காயமடைந்து ஆஸ்பத்திரி யில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    காரைக்குடி அருகே உள்ள செக்காலை பகுதியை சேர்ந்தவர் ஜான்சன் (25). இவர் சம்பவத்தன்று காரை ஓட்டிச்சென்றபோது நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காயமடைந்த ஜான்சன் மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    • விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் அருகே உள்ள வாய்பூட்டான்பட்டியை சேர்ந்தவர் ஜெயராம்(37). இவர் கோவில் திருவிழாவிற்காக விருதுநகரில் இருந்து சாத்தூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் ஜெயராம் படுகாயமடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து ஜெயராமின் சகோதரர் மாரிசாமி கொடுத்த புகாரின்பேரில் சூளக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பிரசவத்திற்கு பின் வலிப்பு ஏற்பட்டு பெண் பலியானார்
    • ஆண் குழந்தை பிறந்த நிலையில் உயிரிழப்பு

    புதுக்கோட்டை

    பொன்னமராவதி தாலுகா தொட்டியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த். இவரது மனைவி தேன்மொழி (வயது 22). பிரசாந்த் தனது மனைவியை பிரசவத்திற்காக மேலைச்சிவபுரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், தேன்மொழிக்கு திடீரென வலிப்பு வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே தேன்மொழி பரிதாபமாக இறந்தார். கர்ப்பிணிக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில் திடீரென வலிப்பு ஏற்பட்டு அந்த பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேன்மொழிக்கு திருமணம் ஆகி 1½ ஆண்டுகள் ஆவதால் இலுப்பூர் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.

    • மினிலாரி ஒன்று வேகமாக வந்து அவர் மீது மோதியது.
    • சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் சென்னப்பட்டியைச் சேர்ந்தவர் பழனியப்பன். இவரது மகன் ஏகநாத் (வயது23). விவசாயியான இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் காரிமங்கலம்-மொரப்பூர் சாலையில் மோட்டூர் அரிசி ஆலை அருகே சென்றார்.

    அப்போது அந்த வழியாக மினிலாரி ஒன்று வேகமாக வந்து அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஏகநாத் பலத்த காயமடைந்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காரிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்

    இதேபோன்று காரிமங்கலம் அத்தனூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்லப்பா (வயது75). இவர் சம்பவத்தன்று வீட்டின் அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் செல்லப்பா மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×