search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேம்பாலம்"

    • இலந்தவிளை-வன்னி யன்தரை கிராமங்களை இணைக்கும் வகையில் ரெயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும்
    • பங்குதந்தை போஸ்கோ, வட்டார காங் கிரஸ் தலைவர் டென்னிசன், ஊர் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

    நாகர்கோவில் :

    கப்பியறை அருகே இலந்தவிளை-வன்னி யன்தரை கிராமங்களை இணைக்கும் வகையில் ரெயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

    பொதுமக்களின் ஆலோசனைகளை கேட்டறிந்து ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண் டிய இடத்தை விஜய்வசந்த் எம்.பி பார்வையிட்டார். ரெயில்வே அமைச்சகம் மற்றும் துறைக்கு கோரிக்கை வைப்பதாக தெரிவித்தார்.

    அவருடன் பங்குதந்தை போஸ்கோ, வட்டார காங் கிரஸ் தலைவர் டென்னிசன், ஊர் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • போக்குவரத்து பாதிப்பதால் ஒரேகட்டமாக பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • மேம்பாலம் கட்டும் பணிக்கான அனுமதியை பெற்று விரைவில் பணிகளை முடிக்க வேண்டும்.

     திருப்பூர்:

    திருப்பூா் கோட்டம் நெடுஞ்சாலைத் துறை சாா்பில், குறைகேட்புக் கூட்டம் திருப்பூா் கோட்ட பொறியாளா் அலுவலகத்தில் நடைபெற்றது.

    இதில் பல்லடம் தாலுகா நுகா்வோா் விழிப்புணா்வு இயக்க தலைவா் மணிக்குமாா் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    பல்லடம் நகரப்பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் பனப்பாளையம் முதல் அண்ணா நகா் வரை தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்த வேண்டும். மேம்பாலம் கட்டும் பணிக்கான அனுமதியை பெற்று விரைவில் பணிகளை முடிக்க வேண்டும். பேருந்து நிலையம் எதிரிலும் அரசு மருத்துவமனை பகுதியிலும் சாலையை கடந்து செல்லும்போது அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இப்பகுதிகளில் சுரங்க நடைபாதை அமைக்க வேண்டும்.

    பல்லடம் - தாராபுரம் சாலை குண்டடம் வழியாக, மாநில நெடுஞ்சாலை 30 கி.மீ. அளவுக்கு, நான்கு வழிப்பாதை திட்டப்பணி நடந்து வருகிறது. முதல்கட்டமாக, புத்தரச்சல் வரை 5 கி.மீ. மட்டுமே பணி நடந்துள்ளது. பணிகள் மந்தமாக நடக்கின்றன. போக்குவரத்து பாதிப்பதால் ஒரேகட்டமாக பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பள்ளிப்பாளையத்தில் நடைபெற்று வரும் உயர்மட்டம் மேம்பாலம் கட்டுமான பணிகளை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.
    • மேம்பாலம் கட்டுமான பணியை தரமாகவும், விரைவாக முடிக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பள்ளிப்பாளையம்:

    பள்ளிப்பாளையத்தில் ஆசிரியர் காலனி பகுதியில் இருந்து 3 கீ.மீட்டர் துாரத்திற்கு 98 பில்லருடன் உயர் மட்ட மேம்பாலம், மற்றும் சாலை விரிவாக்கம் ரூ.200 கோடியில் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

    தற்போது மேம்பாலம் பணிகள் 40 சதவீதம் முடிந்து விட்டது. பில்லர் மேற்பரப்பில் நேற்று கான்கீரிட் தளம் அமைக்கும் பணி தொடங்கியது. இந்த பணியை நெடுஞ்சாலைதுறை சேலம் கோட்ட பொறியாளர் சசிகுமார் நேரில் ஆய்வு செய்தார். பணியை தரமாக நடக்க வேண்டும் எனவும், விரைவாக முடிக்க வேண்டும் என தெரிவித்தார். பின்னர் பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினர்.

    அப்போது, திருச்செங்கோடு உதவி பொறியாளர் கபில் மற்றும் திட்ட மேற்பார்வையாளர்கள் உடனிருந்தனர்.

    • கனரக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றன.
    • குண்டும், குழியுமாக எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.

    காங்கயம்:

    திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூர் அருகே உள்ள பழையகோட்டை ஊராட்சியில் புதுவெங்கரையாம்பாளையம் என்ற கிராமம் உள்ளது. திருப்பூர் - ஈரோடு மாவட்ட எல்லையை இணைக்கும் இந்த கிராமத்தின் அருகே நொய்யல் ஆறு செல்கிறது. இந்த நொய்யல் ஆற்றின் குறுக்கே ஒரு தாழ்வான தரைப்பாலம் கட்டப்பட்டு மேலே கான்கிரீட் தளத்தில் சாலை அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் தாழ்வான தரைப்பாலத்தின் இருபுறமும் வாகனங்கள் போக்குவரத்து பாதுகாப்பிற்கு தடுப்புச்சுவர் எதுவும் கட்டப்படவில்லை.

    இந்த நொய்யல் ஆற்றின் குறுக்கே உள்ள கான்கிரீட் தரைப்பாலத்தை கடந்து காங்கயம், நத்தக்காடையூர் பகுதிகளில் இருந்து தினந்தோறும் கனரக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றன.

    மேலும் குட்டப்பாளையம், புது வெங்கரையாம்பாளையம், சத்திரக்காட்டுவலசு, கொல்லன்வலசு உட்பட சுற்றுவட்டார கிராம பகுதிகளை சேர்ந்த அரசு மற்றும் தனியார் நிறுவன அதிகாரிகள், ஊழியர்கள், பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், பேராசிரியர்கள், மாணவ -மாணவிகள், கிராம பொதுமக்கள் தங்களின் வாகன போக்குவரத்து வழிப்பாதையாக பயன்படுத்தி வருகின்றனர்.

    மேலும் இந்த தாழ்வான தரைப்பாலத்தில் அமைக்கப்பட்டு உள்ள கான்கிரீட் தள சாலை மிகவும் பழுதடைந்து கான்கிரீட் பெயர்ந்து, குண்டும், குழியுமாக எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.

    மேலும் பலத்த மழைக்காலங்கள் மற்றும் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் அதிக அளவில் வேகமாக பாய்ந்து வரும் மழைநீர் இந்த நொய்யல் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு உள்ள தாழ்வான தரைப்பாலத்தை மூழ்கடித்துபடி, மேலே சுமார் 20 அடி வரை உயர்ந்து சீறிப்பாய்ந்து செல்லும். அப்போது இந்த நொய்யல் ஆற்றில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு கனரக, இருசக்கர வாகன போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்படும்.

    எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக துரித நடவடிக்கை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் மூலம் புதுவெங்கரையாம்பாளையம் கிராமத்தில் நொய்யல் ஆற்றின் குறுக்கே பழுதடைந்து குண்டும், குழியுமாக உள்ள தாழ்வான கான்கிரீட் தரைப்பாலத்தை முற்றிலும் இடித்து அகற்றி விட்டு, இருபுறமும் புதிய தடுப்பு சுவருடன் கூடிய மேம்பாலம் கட்டி சீரான வாகன போக்குவரத்து நடைபெற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வாகன ஓட்டிகள், கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகினர்.
    • தண்ணீரில் அமர்ந்தபடி, போதையில் என்ஜாய் செய்ய ஆரம்பித்தார்.

     திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக, வளிமண்டல மேற்கு திசை காற்று வேக மாறுபாட்டின் காரணமாக ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக கன மழை பெய்தது.

    உடுமலை சுற்று வட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது.ஏரிப்பாளையம்,தளி சாலை உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகினர். இந்த நிலையில் நேற்று மாலை தாராபுரம் சுற்று வட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்தது.அப்போது தாராபுரம் பேருந்து நிலையம் முன்பாக உள்ள மதுபானக் கடையில் இருந்து மது அருந்திய நிலையில் வெளியே வந்த "மதுப்பிரியர்" ஒருவர்,மழை பெய்வதை பார்த்தவுடன் சுமார் 30 அடி உயர மேம்பாலத்தில் இருந்து கீழே அருவி போல் கொட்டிக் கொண்டிருந்த தண்ணீரில் அமர்ந்தபடி, போதையில் என்ஜாய் செய்ய ஆரம்பித்தார்.

    தொடர்ந்து அவர் சிறிது நேரம் அமர்ந்தபடி நடன ஆக்சன்களை செய்தபடி மழையில் நனைந்தபடி இருந்ததை,அங்கிருந்த ஒருவர் செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார். தற்போது அந்த காட்சிகள் வைரலாகி வருகிறது.

    • கிராமப் பகுதியை சேர்ந்தவர்கள் இந்த பாதையை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.
    • தண்ணீர் தேங்கி நின்று நீர் தேக்கம் போல் காணப்படும் .

    உடுமலை:

    உடுமலை தளி ரோட்டில் மேம்பாலம் அமைந்துள்ளது. ெரயில் வரும் நேரங்களில் மாற்றுப் பாதையாக இந்த சுரங்கப் பாதையை இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இந்த பகுதியில் பள்ளி மற்றும் வணிக வளாகங்கள் மருத்துவமனை அமைந்துள்ளன. தெற்கு பகுதிக்கு செல்லும் கிராமப் பகுதியை சேர்ந்தவர்கள் இந்த பாதையை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.

    மழைக்காலங்களில் இந்த சுரங்க பாதையில் தண்ணீர் தேங்கி நின்று நீர் தேக்கம் போல் காணப்படும் .தற்போது தண்ணீர் உள்ள பகுதிகள் குண்டும் குழியுமாக மாறி உள்ளதால் வாகன ஓட்டிகள் குண்டும் குழியில் வாகனத்தை ஓட்டி தடுமாறி செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே சுரங்க பாதையை சீரமைத்து வாகன ஓட்டிகள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பணி மிகவும் மந்தமாக நடைபெறுவதால் மேம்பாலம் கட்டி முடிப்பதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.
    • கிராமமக்கள், மாணவர்கள் என அனைவரும் ஏரியை கடந்துதான் சென்று வருகிறன்றனர்.

    பொன்னேரி:

    பழவேற்காடு ஊராட்சிக்குட்பட்ட பசியாவரம் எடமணி, எடமணி காலனி, ரகமத்நகர், தாங்கள் பெரும்புலம் ஊராட்சிக்குட்பட்ட சாட்டாங்குப்பம், ஆகிய கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். பெரும்பாலானோர் இறால் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

    இந்த கிராமங்களை சுற்றி பழவேற்காடு உப்பங்கழி ஏரி காணப்படுவதால் தனித்தீவாக காணப்படுகின்றன. அவர்கள் பழவேற்காடு, மீஞ்சூர், பொன்னேரி பகுதிகளுக்கு செல்வதற்கு சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் தண்ணீரில் நடந்து ஏரியை கடந்து சென்று வருகின்றனர்.

    அங்குள்ள தரை பாலத்தை கடந்து செல்ல வேண்டுமானால் இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும். மழைக்காலங்களில் அதிக வெள்ளப்பெருக்கு காணப்படும்போது தரைப் பாலத்தில் கடந்து செல்ல முடியாமல் படகில் பயணம் செய்யும் நிலை நீடித்து வருகிறது.

    இதையடுத்து பசியாவரம், பழவேற்காடு ஏரி பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று கிராமமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதைத் தொடர்ந்து ரூ.18 கோடியே 20 லட்சம் மதிப்பில் கடந்த 2020-ம் ஆண்டு மேம்பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. சுமார் ஒரு கிலோ மீட்டர் நீளத்துக்கு மேம்பால பணிகள் நடைபெற்று வருகின்றன.

    ஆனால் பணி மிகவும் மந்தமாக நடைபெறுவதால் மேம்பாலம் கட்டி முடிப்பதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. பருவ மழை தொடங்குவதற்கு முன்பாக மேம்பால பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

    கிராமமக்கள், மாணவர்கள் என அனைவரும் ஏரியை கடந்துதான் சென்று வருகிறன்றனர். மாற்றுப் பாதையில் செல்ல வேண்டுமானால் இரண்டு கிலோ மீட்டருக்கு மேல் நடந்து செல்லும் நிலை உள்ளது. சாலையும் மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது.

    மழைக்காலங்களில் ஏரியில் தண்ணீர் அதிகமாக காணப்படுவதால் படகில் செல்லும் நிலை உள்ளது. பருவமழை தொடங்குவதற்கு முன்பாக மேம்பால கட்டிடப் பணிகளை விரைந்து முடித்து பயன் பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • அடுத்தடுத்து 3 பேர் உயிரிழந்ததால் விபத்தை தவிர்க்க 10 அடி உயரத்துக்கு இரும்பு தடுப்பு கம்பிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    • 40 கிலோ மீட்டர் வேகத்திலும், வளைவுகளில் 30 கிலோ மீட்டர் வேகத்திலும் மட்டுமே செல்ல வேண்டும் என்ற அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டது.

    கோவை

    கோவை-திருச்சி ரோட்டில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக 3.1 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரூ.253 கோடி செலவில் மேம்பாலம் கட்டப்பட்டது.

    இந்த மேம்பாலமானது ஜூன் மாதம் 11-ந்தேதி திறக்கப்பட்டது. பாலம் திறந்து சில நாட்களிலேயே அடுத்தடுத்து நடந்த விபத்தில் 2 பேர் பலியானார். இதனையடுத்து எதிர்காலத்தில் இது போன்ற விபத்துக்கள் நடக்காமல் தடுக்க உரிய முன் எச்சரிக்கையாக வேகத்தடைகள், பேரி கார்டுகள், ஒளிரும் பட்டைகள் அமைக்கப்பட்டன.

    இதற்காக பாலம் தற்காலிகமாக மூடப்பட்டது.பின்னர் சில தினங்களுக்கு முன்பு தான் திறக்கப்பட்டது. 40 கிலோ மீட்டர் வேகத்திலும், வளைவுகளில் 30 கிலோ மீட்டர் வேகத்திலும் மட்டுமே செல்ல வேண்டும் என்ற அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டது.

    இந்நிலையில் நேற்று கோவை ஒப்பணக்கார வீதியை சேர்ந்த ஆனந்தகுமார் (51) பைக்கில் சென்ற போது நிலை தடுமாறி பாலத்தில் இருந்து கீழே விழுந்து பலியானார். இதனால் திருச்சி ரோடு மேம்பாலத்தில் விபத்தினால் ஏற்பட்ட பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.

    சம்பவ இடத்திற்கு மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நேரில் சென்று பாலத்தில் தொடர் விபத்துகள் நடப்பதை தவிர்ப்பது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது இந்த மேம்பாலத்தில் தொடர் விபத்துகளை தடுக்க மேம்பாலத்தின் இருபுறமும் சுமார் 10 அடி உயரத்துக்கு இரும்பு தடுப்பு கம்பிகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

    மேலும் தற்போது அந்த பகுதியில் வாகன போக்குவரத்தின் வேகத்தை குறைக்க சாலையின் நடுவில் மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.

    இதனைத்தொடர்ந்து விரைவில் அங்கு தடுப்பு கம்பிகள் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கான ஆய்வு பணிகளில் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். 

    • வேகத்தடையில் மோட்டார்சைக்கிள் மோதியதால் நிலைதடுமாறி பாலத்தில் இருந்து கீழே விழுந்தார்.
    • மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாலத்தில் தொடர் விபத்துக்கள் நடப்பதை தவிர்ப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    கோவை:

    கோவை-திருச்சி ரோட்டில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக ரெயின்போ காலனி முதல் பங்குச்சந்தை கட்டிடம் வரை 3.1 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரூ.253கோடி செலவில் மேம்பாலம் கட்டப்பட்டது. இந்த மேம்பாலமானது ஜூன் மாதம் 11ம் தேதி திறக்கப்பட்டது.

    பாலம் திறக்கப்பட்ட ஒரு சில தினங்களிலேயே அடுத்தடுத்து 2 விபத்துகள் நடந்தது. இதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க உரிய முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார்.

    அதன்படி போக்குவரத்து துணை கமிஷனர் மதிவாணன், மேம்பாலத்தில் ஆய்வு கொண்டதை தொடர்ந்து கடந்த மாதம் 28-ந் தேதி முதல் இந்த பாலத்தில் வேகத்தடைகள் அமைக்கும் பணியும், பேரி கார்டுகள் அமைக்கும் பணியும், ஒளிரும் பட்டைகள் அமைக்கும் பணிகளும் நடைபெற்றன. இதன் காரணமாக பாலம் தற்காலிகமாக மூடப்பட்டது.

    பாலத்தில் நேராக செல்லும் சாலையில் 40 கிலோ மீட்டர் வேகத்திலும், வளைவுகளில் 30 கிலோ மீட்டர் வேகத்திலும் மட்டுமே செல்ல வேண்டும் என்ற அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டது.

    மேலும் 3 கிலோ மீட்டர் தூரம் கொண்ட பாலத்தில் 10 இடங்களில் வேக தடைகள் அமைக்கப்பட்டது. பணிகள் முடிவடைந்ததை அடுத்து மூடப்பட்டு இருந்த பாலம் கடந்த 9-ந் தேதி மீண்டும் திறக்கப்பட்டது. இந்த நிலையில் 3-வது முறையாக இன்று காலை இந்த மேம்பாலத்தில் விபத்து ஏற்பட்டது. இதில் ஒருவர் பலியாகி விட்டார்.

    கோவை ஒப்பணக்கார வீதியை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (வயது51). இவர் ஒண்டிப்புதூரில் உள்ள ஒரு கடையில் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வருகிறார். இவர் இன்று காலை தனது மோட்டார் சைக்கிளில் மேம்பாலத்தின் வழியாக வேலைக்கு சென்றார்.

    அவர் சுங்கம் பகுதி அருகே சென்ற போது, மேம்பாலத்தில் அமைக்கப்பட்ட வேகத்தடையில் ஏறியதில் வாகனம் நிலை தடுமாறியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு பாலத்தில் இருந்து கீழே விழுந்தார்.

    இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த தகவல் கிடைத்ததும் கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாலத்தில் தொடர் விபத்துக்கள் நடப்பதை தவிர்ப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    • பேயன்குழி பகுதியில் இரட்டை ரெயில் பாதை பணிகளையும் பார்வையிட்டார்
    • மஸ்கட்டில் தவிக்கும் 8 மீனவர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

    நாகர்கோவில்:

    மத்திய நிதித்துறை இணை மந்திரி பகவத் கிஷன் ராவ் கராத், குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக ஆய்வு பணியை மேற்கொண்டு உள்ளார்.

    இன்று 3-வது நாளாக மத்திய அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்ட ங்கள் குறித்து பகவத் கிஷன் ராவ் கராத் ஆய்வு மேற்கொண்டார். பார்வதி புரத்தில் கட்டப்பட்ட பாலத்தை பார்வையிட்டு அவர் ஆய்வு செய்தார்.

    அப்போது குமரி மாவட்டத்தில் இருந்து மஸ்கட்டில் மீன்பிடிக்க சென்ற படகில் சிறை பிடித்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களின் குடும்பத்தி னர், பகவத் கிஷன் ராவ் கராத்தை சந்தித்து மனு கொடுத்தனர்.

    அதில் கன்னியாகுமரியை சேர்ந்த ஒருவர், ராஜாக்க மங்கலத்தைச் சேர்ந்த 2 பேர் பெரிய காட்டை சேர்ந்த 5 பேர் என 8 மீனவர்கள் ஓமன் நாட்டில் மஸ்கட் பகுதியில் மீன் பிடிக்க சென்றனர்.அங்கு சென்ற அவர்களை மீன் பிடிக்க விடாமல் சம்பளமும் கொடுக்காமல் படகிலேயே சிறை பிடித்து வைத்துள்ளனர்.

    மேலும் மீனவர்களின் விசாக்களும் புதுப்பிக்காமல் உள்ளதால் அவர்கள் ஊருக்கு வர முடியாமல் தவித்து வருகிறார்கள்.எனவே மஸ்கட்டில் தவிக்கும் 8 மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தனர். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய மந்திரி பகவத் கிஷன் ராவ் கராத் உறுதி அளித்தார்.

    இதை தொடர்ந்து பேயன்குழி பகுதியில் நடந்து வரும் 4 வழி சாலை மற்றும் இரட்டை ரெயில் பாதை திட்ட பணிகளை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஆய்வின்போது எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ., பா.ஜனதா மாவட்ட தலைவர் தர்மராஜ், பொருளாளர் முத்து ராமன்,மாநில மகளிர் அணி தலைவி உமாரதிராஜன் மற்றும் கிருஷ்ணகுமார்,கிருஷ்ணன் ஆகியோரும் இருந்தனர்.

    ×