search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உணவு"

    • 8-அவுன்ஸ் கிளாஸ் பால் சராசரியாக 300 மி.கி கால்சியத்தை தருகிறது.
    • ஒரு கப் சமைத்த கீரையில் சுமார் 260 மி.கி கால்சியம் உள்ளது.

    கால்சியம் ஒரு முக்கியமான ஊட்டச்சத்து ஆகும், இது தசைக்கூட்டு அமைப்பை பலப்படுத்துகிறது மற்றும் சாதாரண கரு வளர்ச்சியை ஆதரிக்கிறது. உங்கள் உடலில் ஆரோக்கியமான கால்சியம் அளவை பராமரிக்கவும், முன்கூட்டிய பிரசவம், ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் குறைந்த இரத்த அழுத்தம் போன்ற தொடர்புடைய நிலைமைகளைத் தடுக்கவும் கர்ப்பத்திற்கான கால்சியம் நிறைந்த உணவுகளின் பட்டியலை இங்கே பார்க்கலாம்.

    1. பால்

    கர்ப்பிணிப் பெண்களுக்கு கால்சியத்தின் சிறந்த ஆதாரங்களில் இதுவும் ஒன்றாகும். ஆரோக்கியமான கரு வளர்ச்சிக்கு ஒரு கிளாஸ் பாலுடன் உங்கள் நாளைத் தொடங்குவது முக்கியம். 8-அவுன்ஸ் கிளாஸ் பால் சராசரியாக 300 மி.கி கால்சியத்தை தருகிறது.


    2. பால் பொருட்கள்

    பால் தவிர, கால்சியம் உட்கொள்ளலை அதிகரிக்க, உங்கள் உணவில் தயிர், மற்றும் பாலாடைக்கட்டி போன்ற பிற பால் பொருட்களையும் சேர்த்துக்கொள்ளலாம். 8 அவுன்ஸ் தயிர் தோராயமாக கொடுக்கிறது. கால்சியம் 415 மி.கி.

    3. டோஃபு

    கர்ப்ப காலத்தில் உங்கள் கால்சியம் உட்கொள்ளலை அதிகரிக்க இது ஒரு நல்ல வழி. 100 கிராம் டோஃபு 350 மில்லிகிராம் கால்சியத்தை வழங்க முடியும்.


    4. பாதாம்

    இவை கால்சியத்தின் சிறந்த மூலமாகும், இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் உங்கள் கர்ப்ப பளபளப்பை அதிகரிக்கிறது. சுமார் 4-5 பாதாம் பருப்பை இரவில் ஊறவைத்து, மறுநாள் காலையில் சாப்பிடுங்கள்.


    5. உலர்ந்த அத்திப்பழம்

    உலர்ந்த அத்திப்பழங்களை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வது நல்ல அளவு கால்சியத்தை வழங்கி உங்களையும் உங்கள் குழந்தையையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும். உணவு நார்ச்சத்து நிறைந்த ஆதாரமாக இருப்பதால், அவை ஆரோக்கியமான செரிமானத்தை ஆதரிக்கின்றன மற்றும் மலச்சிக்கலை எளிதாக்குகின்றன. மத்தியானம் சிற்றுண்டியாக ஓரிரு அத்திப்பழங்களை உட்கொள்ளலாம்.


    6. பேரீச்சம்

    உங்கள் அன்றாட உணவில் பேரீச்சம்பழங்களை சேர்த்துக் கொள்ளுங்கள், ஏனெனில் அவை கால்சியம் உட்பட பல முக்கியமான ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளன. அதிக நார்ச்சத்து இருப்பதால், இந்த இனிப்பு உபசரிப்பு உங்கள் ஆற்றல் அளவை அதிகரிக்கவும் ஆரோக்கியமான செரிமானத்தை ஆதரிக்கவும் முடியும்.


    7. ஆரஞ்சு

    இந்த சிட்ரஸ் பழம் கால்சியம் மற்றும் வைட்டமின் சி, வைட்டமின் ஏ மற்றும் பொட்டாசியம் போன்ற பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் நல்ல மூலமாகும். இது உங்கள் எலும்புகளை வலுப்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் மற்றும் நோய்க்கு உதவவும் முடியும்.


    8. ப்ரோக்கோலி

    கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய மற்றொரு கால்சியம் நிறைந்த உணவு இது. ஒரு கப் மூல ப்ரோக்கோலி சுமார் 47 மில்லிகிராம் கால்சியத்தை வழங்க முடியும். இந்த சத்தான காய்கறி மற்ற முக்கியமான வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துக்களுடன் நிரம்பியுள்ளது, இது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை ஆதரிக்க உதவுகிறது.


    9. காலே

    இந்த பச்சை, இலைக் காய்கறியில் கால்சியம் உள்ளிட்ட அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. ஒரு கப் பச்சை முட்டைக்கோஸ் உங்கள் உடலுக்கு 100 மில்லிகிராம் கால்சியத்தை வழங்க முடியும்.


    10. கீரை

    ஒரு கப் சமைத்த கீரையில் சுமார் 260 மி.கி கால்சியம் உள்ளது. இது இரும்பு, பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின் சி, வைட்டமின் B6 மற்றும் பிற ஊட்டச்சத்துக்களின் நல்ல மூலமாகும்.


    நீங்கள் கர்ப்பமாக இருந்தால், பிரசவத்திற்கு முன்னும் பின்னும் ஏற்படும் சிக்கல்களைத் தடுக்க உங்கள் தினசரி உணவில் கால்சியம் நிறைந்த உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

    • சருமத்தில் ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
    • கண்களை வெப்ப அலை பாதிப்பில் இருந்தும் பாதுகாக்கிறது.

    மே மாதம் முடிவடைந்தாலும், வெயில் வழக்கத்தை விட அதிகமாகவே இருக்கிறது. அனல் காற்றும், சுட்டெரிக்கும் வெயிலும் ஜூன், ஜூலை வரை நீடிப்பது வழக்கம்தான். இந்நிலையில், வெயிலுக்கு இதமாக சாப்பிடக்கூடிய ஆரோக்கியமான உணவுகளை பற்றி இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

    முலாம் பழம்

    வெயிலுக்கு ஏற்ற ஆரோக்கிய உணவுகளில் முலாம் பழம் முக்கிய பங்கு வகிக்கிறது. இவை ஊட்டச்சத்துக்கள், நீர்ச்சத்து மற்றும் அதிக சுவையையும் கொண்ட பழமாக விளங்குகிறது. ஆரோக்கியமான சுவையான உணவுப்பொருளாகவும் அறியப்படுகிறது. குறிப்பாக முலாம்பழம் உடலில் ஏற்படும் நீரிழப்பை குறைக்கிறது.

    பெர்ரி

    ஸ்ட்ராபெர்ரி, புளூ பெர்ரி, ப்ளாக் பெர்ரி என அனைத்து வகையான பெர்ரி பழங்களிலும் ஆரோக்கிய நன்மைகள் அதிகமாக உள்ளன. ஸ்ட்ராபெர்ரி மற்றும் புளூபெர்ரி இவை இரண்டும் அதிக பிளாவனாய்டுகளை கொண்டுள்ளன. இவை சருமத்தில் ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மேலும் சருமத்தின் ஆரோக்கியத்தையும், தோற்றத்தையும் மேம்படுத்துவதற்கு உதவுகின்றன. ப்ளாக் பெர்ரி, ராஸ் பெர்ரி இரண்டிலும் அதிகமான நார்ச்சத்துக்களும் நிரம்பியுள்ளன.

    சிட்ரஸ் பழங்கள்

    சிட்ரஸ் பழங்கள் கோடை காலத்தில் மட்டும் கிடைக்கும் பருவகால பழங்கள் அல்ல என்றாலும் ஆரஞ்சு போன்றவைகளில் அதிக பொட்டாசியம் நிறைந்துள்ளது. இது வெப்பத்தால் உடல் இழக்கும் முக்கியமான ஊட்டச்சத்துக்களை ஈடு செய்யக்கூடியது. வெயில் காலங்களில் அதிகப்படியான வியர்வை ஏற்படும்போது நமது உடல் பொட்டாசியத்தை இழக்கிறது. இதனால் தசைப்பிடிப்பும், நீர்ச்சத்து இழப்பும் ஏற்படலாம். அதை தடுத்து உடலை நீரேற்றமாகவும், புத்துணர்ச்சியாகவும் வைத்திருக்க இது உதவுகிறது. அதே போல குடிக்கும் தண்ணீரில் எலுமிச்சை பழ சாற்றை சேர்க்கலாம். மீன் மற்றும் இறைச்சி வறுவல்களில் எலுமிச்சையை பிழிந்து விட்டு சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு கூடுதல் வைட்டமின்-சி கிடைக்கிறது.

    இனிப்பு சோளம்

    கோடை காலத்தில் வரும் பருவ கால காய்கறிகளில் இனிப்பு சோளமும் ஒன்றாகும். அதை வேகவைத்தாலும், சுட்டு சாப்பிட்டாலும் இனிப்பு சுவையிலேயே இருக்கும். மேலும் இது அறியப்படாத பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. கண்புரை மற்றும் வயது சார்ந்து ஏற்படும் தசை சிதைவை இது தடுக்கிறது. கண்களை வெப்ப அலை பாதிப்பில் இருந்தும் பாதுகாக்கிறது.

    அவகேடோ

    ஆரோக்கிய உணவுப்பட்டியலில் கண்டிப்பாக இருக்க கூடிய உணவுப்பொருளாக அவகேடோ உள்ளது. ஏனெனில் மோனோசாச்சுரேட் கொழுப்பு, போலெட் மற்றும் நார்ச்சத்து ஆகியவை நிரம்பப்பெற்றது. இயற்கையாகவே ஒவ்வாமை எதிர்ப்பு சக்தியையும் கொண்டிருக்கிறது.

    • உலகளவில் 10 பேரில் ஒருவர் சுகாதாரமற்ற உணவால் நோய்வாய்ப் படுகிறார்.
    • உணவுப் பாதுகாப்பு என்பது உற்பத்தியாளர் முதல் நுகர்வோர் வரை அனைவரின் கூட்டுப் பொறுப்பாகும்.

    தஞ்சாவூர்:

    உலக உணவு பாதுகாப்பு நாளையொட்டி, தஞ்சாவூரிலுள்ள தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில் முனைவோர் மற்றும் மேலாண்மை நிறுவனத்தில் (நிப்டெம்) மாணவர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

    கருத்தரங்கில் மத்திய அரசின் உணவு பதப்படுத்தும் தொழில் அமைச்சகத்தின் கூடுதல் செயலரும், நிதி ஆலோசகருமான அசித்கோபால் பங்கேற்று பேசியதாவது:-

    உலகளவில் 10 பேரில் ஒருவர் சுகாதாரமற்ற உணவால் நோய்வாய்ப் படுகிறார். பாக்டீரியா, வைரஸ்கள், பாதிக்கப்படக் கூடிய ஒட்டுண்ணிகள் அல்லது கன உலோகங்கள் போன்ற ரசாயனப் பொருட்கள் கொண்ட அசுத்தமான உணவை சாப்பிடுவதால் 200-க்கும் அதிகமான நோய்கள் ஏற்படுகின்றன.

    நம் நாட்டு மக்கள் தொகையில் 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகள் 9 சதவீதம் பேர் உள்ளனர். இவர்களில் 40 சதவீதம் பேருக்கு பாதுகாப்பற்ற உணவு காரணமாக ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டு, அவர்கள் அதிக ஆபத்துக்கு ஆளாகின்றனர்.

    உணவுப் பாதுகாப்பு என்பது உற்பத்தியாளர் முதல் நுகர்வோர் வரை அனைவரின் கூட்டுப் பொறுப்பாகும். உணவுப் பாதுகாப்பின் முக்கியத்துவத்தையும், உணவால் பரவும் நோய்களைத் தவிர்ப்பது எப்படி என்பதையும் அனைவருமே அறிந்து கொள்ள வேண்டும். உணவு பதப்படுத்துதல், சுகாதாரத்தின் முக்கியத்துவம், பாதுகாப்பான உணவு உண்பது ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • உணவு வகைகளை குரைத்துவிட்டு நீராகாரத்தை அதிகமாக எடுத்துக் கொள்ளுங்கள்
    • காலை உணவுடன் சில வகை பழங்கள், காய்கறிகளை சேர்த்துக்கொள்வது நலம் தரும்.

    சாப்பிடும் உணவுகள் செரிமானம் ஆகாதபோது அதிலிருக்கும் பேக்டீரியாக்காளால் வயிற்றில் கேஸ் சேரும். அதே போல அதிக அளவிலான ஃபைபர் உணவுகள், ஜீரணிக்க தாமதமாகும் உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அதுவும் வயிற்றில் கேஸ் சேரும்.

    உணவு வகைகளை குரைத்துவிட்டு நீராகாரத்தை அதிகமாக எடுத்துக் கொள்ளுங்கள், சூப், கஞ்சி, ஜூஸ் போன்று எளிதில் ஜீரணம் ஆக கூடியவற்றை குடியுங்கள்.

    பெருஞ்சீரகம் இதற்கு உடனடி தீர்வு வழங்கும். தண்ணீரை சூடாக்கும் போது அதில் ஒரு ஒரு சிட்டிகை பெருஞ்சீரகத்தை போட்டு நன்றாக கொதிக்க வைத்திடுங்கள் இதை அப்படியே குடிக்கலாம் அல்லது இதனோடு சிறிது புதினா இலையையும் சேர்த்து கொதிக்க வைத்து குடிக்கலாம். நல்ல பலன் கிடைக்கும்.

    வயிற்றில் கேஸ் சேர்ந்து வயிறு உப்பலாக இருந்தால் முதலில் தரையில் படுத்துக் கொள்ளுங்கள். தலையை உயர்த்தி உங்களின் உடல் கீழ் நோக்கி இருக்குமாறு தரையில் படுங்கள். கட்டில், சோஃபா போன்றவற்றில் படுப்பதை தவிர்த்திடுங்கள். காலை உணவுடன் சில வகை பழங்கள், காய்கறிகளை சேர்த்துக்கொள்வது நலம் பயக்கும்.

    பூண்டு:

    உணவு ஜூரணத்திற்கும், கேஸ் பிரச்சனைக்கும் பூண்டு பெரும் பங்காற்றும். இரண்டு மூன்று பூண்டுகளை நெருப்பில் சுட்டு அப்படியே சாப்பிடலாம். அல்லது தண்ணீரில் பூண்டு, சீரகம், மிளகு சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து குடியுங்கள்.

    பெருங்காயம்:

    நீரில் சிறிது பெருங்காயத்தை கலந்து குடிக்கலாம். ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்றுமுறை இப்படி குடிக்கலாம். அதற்கு மேல் வேண்டாம். அதிகமாக குடித்தால் இது வயிற்றுப் போக்கை ஏற்படுத்தி விடும்.


    சூடான பானங்களை குடியுங்கள். டீ, காபி, க்ரீன் டீ போன்றவை குடிக்கலாம். இஞ்சி சாறு, இஞ்சி தேநீர் போன்றவற்றையும் குடிக்கலாம்.


    இலவங்கப் பட்டை:

    இலவங்கப் பட்டையை தண்ணீரில் கொதிக்க வைத்து குடிக்கலாம் அல்லது இலவங்கப்பட்டையை வறுத்துப் பொடி செய்து கொள்ளுங்கள் அதனை பாலில் கலந்து கூட குடிக்கலாம். இது உடனடி நிவாரணத்திற்கு கை கொடுக்கும்.

    • விதிகளை மீறும் உணவு வணிக நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • சமூக வலைதளங்கலின் மூலம் தாய்ப்பால் விற்பனையை விளமப்பரப்படுத்தி ஆன்லைன் மூலம் விற்பனை செய்யும் போக்கு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது

    வணிக ரீதியான தாய்ப் பால் விற்பனைக்குத் தடை - FSSAI அதிரடி

    உணவுப் பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனையை ஒழுங்குபடுத்தும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமான FSSAI, வணிக ரீதியாக தாய்ப்பால் விற்கப்படுவதை தடை செய்து உத்தரவிட்டுள்ளது.

    இதுதொடர்பாக FSSAI வெளியிட்டுள்ள அறிக்கையில், , FSS சட்டம்- 2006 விதிமுறைகளின் படி வணிக ரீதியாக மனித பாலை பதப்படுத்துதல், விற்பனை செயதல் சட்டவிரோதமானதாகும் . எனவே, தாய்ப்பால் மற்றும் அதில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களை வணிகமயமாக்குவது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

     

    மேலும் விதிகளை மீறும் உணவு வணிக நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தாய்ப் பாலை பதப்படுத்துதல் மற்றும் விற்பனை செய்வதில் ஈடுபட்டுள்ள வணிக நிறுவனங்களுக்கு உரிமம் வழங்குவதை நிறுத்த மாநில மற்றும் மத்திய அரசு அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளது.

     

    பாலூட்டும் தாய்மார்களிடம் இருந்து தாய்ப் பாலை சேகரித்து லாப நோக்கத்துடன் பால் வங்கிகள் அமைத்து சமூக வலைதளங்கலின் மூலம் தாய்ப்பால் விற்பனையை விளமப்பரப்படுத்தி ஆன்லைன் மூலம் விற்பனை செய்யும் போக்கு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதைக் கட்டுப்படுத்தும் வகையில் FSSAI இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் உள்ள பால் வங்கியில் தூய்மையான தாய்ப்பால் இலவசமாக வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

     

    • சோதனையின் போது தண்ணீருக்கான பகுப்பாய்வு அறிக்கை இன்னும் வழங்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.
    • பல்வேறு பாதுகாப்பற்ற சூழ்நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    ஹைதராபாத்தில் உள்ள உப்பல் பகுதியில் உள்ள உணவகங்களில் சுகாதார மற்ற முறையில் உணவகங்கள் செயல்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தவண்ணம் இருந்தது.

    இந்நிலையில் உணவு ஆய்வார்கள் பிரபலமான உணவகங்களில் ஆய்வு மேற்கொண்டனர். இதில் அதிர்ச்சியளிக்கும் விதத்தில் உணவு பொருட்கள் சுகாதாரமற்ற நிலையில் இருந்தது அவர்களுக்கு அதிர்ச்சி அளித்தது.

    FSSAI அதிரடிப்படை குழு உப்பல் பகுதியில் சோதனை நடத்தியதில் செயற்கை உணவு வண்ணங்களை பயன்படுத்தியதும், 4 காலாவதியான விஜயா பால் பாக்கெட்டுகள், 65 கிலோ லேபிள் இல்லாத இஞ்சி பூண்டு விழுதுகள், பேக்கரி பொருட்கள் ஆகியவற்றை அப்புறப்படுத்தினர்.


    சோதனையின் போது தண்ணீருக்கான பகுப்பாய்வு அறிக்கை இன்னும் வழங்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.

    மிகவும் சுகாதாரமற்ற நிலையில் உள்ள குளிர்சாதனப் பெட்டி, சரியாக சேமிக்கப்படாத அரைத்த தயாரிக்கப்பட்ட உணவு பொருட்கள், ஹேர்கேப்கள், கையுறைகள், ஏப்ரான்கள் மற்றும் மருத்துவ உடற்பயிற்சி சான்றிதழ்கள் இல்லாமல் உணவு கையாளுபவர்கள் என பல்வேறு பாதுகாப்பற்ற சூழ்நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    மேலும் இந்த ஆய்வில் எடுக்கப்பட்ட படங்கள் சமூகவளைதலங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    இது தொடர்பான ஒரு பதிவில் கூறியிருப்பதாவது, காலாவதியான பால், செயற்கை வண்ணங்களைப் பயன்படுத்துவது மற்றும் பல விதிமீறல்களில் ஈடுபட்டுள்ள இந்த உணவகங்கள் குறித்து ஜாக்கிரதையாக இருக்குமாறும், மேலும் இது ஹைதராபாத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதும் உள்ளதாக நான் உறுதியாக நம்புகிறேன்... என்று சமூக வலைதலங்களில் பதிவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


    • நாம் ஆரோக்கியமாக இருக்க உணவு நேரம் என்பது மிகவும் அவசியம்.
    • நீங்கள் தினமும் இரவு தாமதமாக சாப்பிட்டு வந்தால், எதிர்காலத்தில் பக்கவாதத்திற்கு வழிவகுக்கும்.

    இன்று நாம் வேகமாக ஓடும் வாழ்க்கை முறையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதனால், சாப்பிட கூட நேரமில்லை.

    அந்த அளவுக்கு பிஸியான வாழ்க்கையை வாழ்கிறோம். இதனால், அந்த நேரத்தில் பசியை போக்கிக் கொள்ளக் கிடைத்ததைச் சாப்பிடுகிறோம். ஆனால், இது நம் உடல் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது என்பதை மறந்து விடுகிறோம். அந்தவகையில், பலர் இரவில் தாமதமாக சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். அதாவது, இரவு 9 மணி முதல் 12 மணி வரை சாப்பிடுவார்கள். ஏன் இன்னும் சிலரோ 12 மணிக்கு பிறகு கூட சாப்பிடுவார்கள். சிலர் அதிகாலை 3, 4 மணிக்கெல்லாம் சாப்பிடுவார்கள்.


    இப்படி சாப்பிட்டால் எந்த பிரச்சனையும் இல்லை என்று நினைக்கிறார்கள். ஆனால், இப்படி தினமும் சாப்பிட்டு வந்தால் கண்டிப்பாக அவர்கள் ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்கின்றனர் நிபுணர்கள். நாம் ஆரோக்கியமாக இருக்க உணவு நேரம் என்பது மிகவும் அவசியம். அவற்றை ஒழுங்காக கடைபிடிக்காவிட்டால், உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் பாதிக்கப்படுவது உறுதி. இரவில் தாமதமாக சாப்பிடுவதால் எடை அதிகரிப்பு, செரிமான பிரச்சனைகள், தூக்கமின்மை, உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.


    நீங்கள் தினமும் இரவு தாமதமாக சாப்பிட்டு வந்தால், எதிர்காலத்தில் பக்கவாதத்திற்கு வழிவகுக்கும். அதுபோல, இரவில் அளவுக்கு அதிகமாக உணவு எடுத்துக் கொண்டால் இரத்த அழுத்தம், சர்க்கரை அளவுகளில் மாற்றம் ஏற்படும். குறிப்பாக, எதிர்காலத்தில் பக்கவாதம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என்கின்றனர் நிபுணர்கள். மேலும், இரவு 9 மணிக்கு மேல் சாப்பிட்டால் இரத்தக்கசிவு பக்கவாதம் ஏற்படுமாம். இதன் காரணமாக மூளையில் உள்ள இரத்தக்குழாய் வெடித்து ரத்தம் வரக்கூடும் என பல ஆய்வுகள் கூறுகிறது. குறிப்பாக, இரவு உணவு சாப்பிட்ட உடனே தூங்க வேண்டாம். இதுவும் பக்கவாதத்தை உண்டாக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

    • வெயில் காலத்தில் வறுத்து சாப்பிடும் உணவுகளை தவிர்க்கலாம்.
    • பழச்சாறுகளை எடுத்து கொள்வது வியர்க்குரு பிரச்சனைக்கு நல்ல தீர்வாக இருக்கும்.

    கோடைக்காலத்தில் பெரும்பாலானோர் பாதிக்கப்படுவது வியர்க்குரு பிரச்சனையில் தான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த பிரச்சனை உள்ளது. வியர்குரு அதிகாமாக வருவதற்கு காரணம் என்னவென்றால் வியர்வை காரணமாக வரும் பாக்டீரியல் கிருமியின் அதிகப்படியான உற்பத்தி தான் இந்த வியர்குரு வருவதற்கு முக்கிய காரணமாக உள்ளது.

    இந்த வியர்குருவில் இருந்து நாம் தப்பிக்க வேண்டுமானால் தினமும் மூன்று நேரம் குளியல் என்ற நடைமுறையை இந்த காலத்தில் கொண்டு வரவேண்டும். இவ்வாறு மூன்று வேலை குளிக்கும் போதும் நமது உடலில் வியர்வையால் ஏற்படும் பாக்டீரியாவில் இருந்து விடுபடலாம்.

    அதையும் தாண்டி உங்களுக்கு வியர்குரு வந்தால் நல்ல ஆன்டி பாக்டீரியல் பவுடரையும் பயன்படுத்தலாம். குழந்தைகளுக்கு மிகவும் லேசான காட்டன் உடைகளை பயன்படுத்துதல் நல்லது.

    அதிக படியான இந்த வெயில் காலத்தில் வறுத்து சாப்பிடும் உணவுகளை தவிர்க்கலாம். அதிக கார உணவுகளையும் தவிர்க்க வேண்டும். இதன் மூலம் வியர்வை பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

    அதிகப்படியான பழம், பழச்சாறுகளை எடுத்து கொள்வது வியர்குரு பிரச்சனைக்கு நல்ல தீர்வாக இருக்கும்.

    • சூடான் உள்நாட்டு போரால் மிகப்பெரும் பசி , பட்டினி நிலை உருவாகி உள்ளது.
    • மக்கள் உயிர் வாழ மண், இலைகளை சாப்பிடும் அவல நிலை ஏற்பட்டு உள்ளது.

    கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சூடான் ராணுவத்திற்கும் துணை ராணுவப்படைக்கும் இடையே உள்நாட்டு போர் வெடித்தது. இந்த போர் தற்போது வரை குறைய வில்லை . இதனால் மக்கள் பசி, பட்டினியால் வாடி வருகின்றனர்.

    சூடானில் தற்போது சுமார் 49 மில்லியன் மக்கள் வசித்து வருகின்றனர். இதில் 18 மில்லியன் மக்கள் உணவு தட்டுப்பாடு காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர்,




    உள்நாட்டு போரில் காயம் அடைந்த 160- க்கும் மேற்பட்ட மக்கள் மற்றும் 60 - க்கும் மேற்பட்ட ஊழியர்கள் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

    சூடானில் ஏற்பட்ட சண்டையால் விவசாய பயிர்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டது இதனால் மக்கள் உணவைத் தேடி வீட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். மக்கள் இடம் பெயர்வால் அங்கு மலேரியா மற்றும் பிற நோய்கள் பரவுகின்றன.




    மேலும் சூடானுக்கு வரும் சர்வதேச உதவிகள் பட்டினியால் வாடும் பகுதிகளில் உள்ள மக்களை சென்றடைவதை ராணுவம் தடுத்து வருகிறது. சூடான் உள்நாட்டு போரால் மிகப்பெரும் பசி , பட்டினி நிலை உருவாகி உள்ளது.




    உணவு பொருட்கள் அனைத்தும் தீர்ந்து விட்டதால், விவசாயிகள் நடவுக்காக வாங்கிய விதை தானியங்களை சாப்பிட்டுள்ளனர். மக்கள் உயிர் வாழ மண், இலைகளை சாப்பிடும் அவல நிலை தற்போது ஏற்பட்டு உள்ளது.

    • குறிப்பாக யானைகள் உணவு, தண்ணீருக்காக ஊருக்குள் புகுவதும், பயிர்களை நாசம் செய்வதும் தொடர்கதையாகி வருகிறது.
    • சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறையினர் குட்டி யானையை மீட்டு அழைத்து சென்றுவிட்டனர்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான வனவிலங்கு வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் வனவிலங்குகள் குறிப்பாக யானைகள் உணவு, தண்ணீருக்காக ஊருக்குள் புகுவதும், பயிர்களை நாசம் செய்வதும் தொடர்கதையாகி வருகிறது.

    இந்த நிலையில் ஆசனூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட அரோபாளையம் கிராமத்தில் இன்று காலை 6 மணி அளவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு குட்டி யானை அங்கு உலா வந்தது.

    இதைக்கண்ட அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் உடனடியாக ஆசனூர் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். குட்டி யானை அங்கும் இங்குமாக சுற்றி கொண்டிருந்தது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறையினர் குட்டி யானையை மீட்டு அழைத்து சென்று விட்டனர். குட்டி யானை வனப்பகுதியில் இருந்து எப்படி வெளியே வந்தது என தெரியவில்லை.

    இந்நிலையில் அந்த குட்டி யானை கடந்த 2 நாட்களுக்கு முன்பு பவானிசாகர் வனப்பகுதியில் விடப்பட்ட குட்டி யானை என ஒரு தகவல் பரவியது. ஆனால் இது குறித்து வனத்துறையினர் எந்த ஒரு தகவலும் தெரிவிக்கவில்லை.

    • கரடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி கோத்தகிரி அடுத்த கெரடா குடியிருப்பு பகுதிக்கு வந்தது.
    • சம்பவம் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    கோத்தகிரி:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. மேலும் கரடி, சிறுத்தை, காட்டுமாடு, யானை போன்ற வனவிலங்குகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே பெரும்பாலான விலங்குகள் உணவு, தண்ணீர் கிடைக்காமல் மலைஅடிவாரத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் சுற்றி திரிந்து வருகின்றன. இதனால் அங்குள்ள பல்வேறு பகுதிகளில் மனிதன்-விலங்கு மோதல் தொடர்ந்து நடை பெற்று வருகிறது.

    இந்நிலையில் நேற்று இரவு ஒரு கரடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி கோத்தகிரி அடுத்த கெரடா குடியிருப்பு பகுதிக்கு வந்தது. பின்னர் அங்கு பூட்டியிருந்த கேட்டை தாண்டி வீட்டுக்குள் புகுந்தது. தொடர்ந்து மாடிப்படிக்கட்டில் ஏறிய கரடி உணவு தேடி சுற்றி திரிந்தது. அங்கு சாப்பிடுவதற்கு எதுவும் கிடைக்காததால் அந்த கரடி மீண்டும் வந்த வழியாக திரும்பி காட்டுக்குள் சென்றுவிட்டது. இது அங்குள்ள ஒரு வீட்டில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி உள்ளது. இந்த காட்சிகள் தற்போது வைரலாக பரவி வருகிறது.

    கெரடா குடியிருப்புக்குள் புகுந்த கரடி பூட்டிய வீட்டின் கேட்டை தாண்டி மாடிப்படிக்கு சென்று உணவு தேடிய சம்பவம் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே ஊருக்குள் நுழையும் கரடிகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த காட்டுப்பகுதியில் விடுவிக்க வேண்டுமென குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • 2020ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்து வழக்கு.
    • தமிழ்நாடு, புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கில் உத்தரவு.

    பால் மற்றும் பால் பொருட்கள், பிஸ்கெட், எண்ணெய், உணவுப் பொருட்கள் ஆகியவற்றை பிளாஸ்டிக் கவர்களில் அடைத்து விற்க தடையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    ஒரு முறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி வழக்கு தொடரப்பட்டது.

    14 பொருட்களுக்கு தடை விதித்து 2018ல் உத்தரவிட்ட நிலையில், உணவுப் பொருட்களை அடைக்கும் கவர்களுக்கு 2020ல் தடை விதித்ததையும் எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.

    2020ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்து தமிழ்நாடு, புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் வைத்தியநாதன், ஆஷா அமர்வு உத்தரவிட்டுள்ளது.

    அதில், " பால் மற்றும் பால் பொருட்கள், பிஸ்கட், எண்ணெய், உணவு பொருட்கள் உள்ளிட்டவற்றை பிளாஸ்டிக் கவர்களில் அடைத்து விற்க தடையில்லை" என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும், "அன்றாட உணவுப் பொருட்களை அடைக்க பயன்படுத்தும் பிளாஸ்டிக் கவர்களை தடை செய்யும் அரசாணையை முழுமையாக அமல்படுத்துவது சாத்தியமில்லாததால், அதை மாற்றியமைக்க முடிவு செய்துள்ளதாக" அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    ×