search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 224799"

    • சுவாமி திருவீதியுலா, 30-ந்தேதி கற்பக திருக்கல்யாணம், யானை வாகன காட்சிகள் நடைபெறுகிறது.
    • ஸ்ரீசண்டிகேஸ்வரர் தேர், ஸ்ரீகரிவரதராஜ பெருமாள் தேர் ஆகியன பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது.

    அவினாசி:

    கொங்கேழு சிவாலயங்களில் முதன்மையானதும், சுந்தரமூர்த்தி நாயனாரால் தேவாரம் பாடப்பெற்ற ஸ்தலமும், தமிழகத்தின் மூன்றாவது பெரிய தேர் என்ற பெருமை கொண்டதுமான அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் சித்திரை தேர் திருவிழா நாளை 25-ந் தேதி, அதிகாலை 5 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    அன்று இரவு திருமுருகன்பூண்டியிலிருந்து திருமுருகநாத சுவாமி வருகை, 26-ந் தேதி சூரிய சந்திர மண்டல காட்சிகள், 27ந் தேதி அதிகார நந்தி, கிளி, பூதம், அன்னம் ஆகிய வாகன காட்சி, 28ந் தேதி கைலாச வாகனம், புஷ்ப பல்லாக்கு ஆகியன நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    வருகிற 29-ந் தேதி 63 நாயன்மார்களுக்கு பஞ்சமூர்த்திகள் காட்சியளித்தல், சுவாமி திருவீதியுலா, 30-ந்தேதி கற்பக திருக்கல்யாணம், யானை வாகன காட்சிகள் நடைபெறுகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான ரதோற்சவம் மே 1-ந் தேதி நடக்கிறது.

    அன்றைய தினம் அதிகாலையில் பூர நட்சத்திரத்தில் பஞ்ச மூர்த்திகள் திருத்தேருக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். 2 மற்றும் 3-ந் தேதி காலை 10 மணிக்கு அவிநாசியப்பர் தேரும் (பெரிய தேர்), 4-ந் தேதி காலை 10 மணிக்கு கருணாம்பிகை அம்மன் (சிறிய தேர்), ஸ்ரீசுப்ரமணியர், ஸ்ரீசண்டிகேஸ்வரர் தேர், ஸ்ரீகரிவரதராஜ பெருமாள் தேர் ஆகியன பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது.

    வருகிற 4-ந்தேதி இரவு வண்டித்தாரை, 5-ந்தேதி பரிவேட்டை, 6ந் தேதி இரவு தெப்போற்சவம், 7-ந்தேதி நடராஜப் பெருமான் தரிசனம், அன்று மாலை கொடி இறக்கம் ஆகியன நடைபெறுகிறது. 8-ந் தேதி காலை மஞ்சள் நீர் உற்சவம், இரவு மயில்வாகன காட்சியுடன் சித்திரை தேர் திருவிழா நிறைவு பெறுகிறது.

    அவிநாசி லிங்கேஸ்வரர் சித்திரை தேரோட்டம் மே 2, 3, 4 ஆகிய தேதிகளில் 3 நாட்கள் நடைபெறுகிறது. இந்த 3 நாட்களிலும், போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

    இதுகுறித்து அவிநாசி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்திவேல் கூறியதாவது:-

    தேரோட்டம் நடக்கும் மே 2, 3 மற்றும் 4 ஆகிய மூன்று நாட்கள் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி கோவையிலிருந்து அவிநாசி வழியாக ஈரோடு, சேலம் ஆகிய ஊர்களுக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும், நாதம்பாளையம் பிரிவு - கணினி ரவுண்டானாவில் இருந்து பைபாஸ் வழியாக சென்று அவிநாசி திருப்பூர் ரோட்டின் வழியாக அவிநாசி புதிய பஸ் நிலையம் வந்து செல்ல வேண்டும்.

    ஈரோடு, சேலத்தில் இருந்து அவிநாசி வழியாக கோவை, கொச்சி ஆகிய ஊர்களுக்கு செல்லும் வாகனங்கள் பழங்கரை ரவுண்டானாவில் இருந்து பைபாஸ் வழியாக செல்லும் வகையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    சத்தியமங்கலம், புளியம்பட்டி,கோபி, நம்பியூரில் இருந்து அவிநாசி மற்றும் திருப்பூர் நோக்கி வரும் வாகனங்கள் மடத்துப்பாளையம் ரோட்டில் நுழைந்து, ராயம்பாளையம், அரசு கலை கல்லூரி அருகே வெளியேறி அவிநாசி புதிய பஸ் நிலையம் சென்று செல்ல வேண்டும்.இந்த போக்குவரத்து மாற்றம் தேரோட்டம் நடக்கும், நான்கு ரத வீதிகளில் வலம் வரும் நேரத்தில் மட்டும் அமல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    • விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் கொடியேற்று விழா கடலூர் அடுத்த கிளிஞ்சிகுப்பத்தில் நடைபெற்றது
    • கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் தலைமை தாங்கி கட்சி கொடியினை ஏற்றி வைத்தார்

    கடலூர்:

    விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் கொடியேற்று விழா கடலூர் அடுத்த கிளிஞ்சிகுப்பத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் தலைமை தாங்கி கட்சி கொடியினை ஏற்றி வைத்தார். இதில் ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், பொருளாளர் சம்பத், பன்னீர், ராஜேஷ், சக்திமுருகன், ஏழுமலை, ராம்பிரகாஷ், லிங்கேஷ், சித்திரவேல், முத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • காரைக்கால் திருநள்ளாறு வீதியில் உள்ள தருமபுரத்தில், புனித செபஸ்தியார் ஆலயம் உள்ளது
    • கொடிமரத்தில் ஏற்றப்படும் கொடியை, ஆலய பங்குத்தந்தை மந்திரித்தார்.

    புதுச்சேரி:

    காரைக்கால் திருநள்ளாறு வீதியில் உள்ள தருமபுரத்தில், புனித செபஸ்தியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் 10 நாட்கள் ஆண்டுத்திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ஆண்டுத்திருவிழா நேற்று இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக, கொடிமரத்தில் ஏற்றப்படும் கொடியை, ஆலய பங்குத்தந்தை மந்திரித்தார். தொடர்ந்து, கொடி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டது. ஊர்வலம் மீண்டும் ஆலயத்தை வந்தடை ந்தவுடன், பெங்களுரு புனித பேதுரு பாப்பிறை குருமடம் பேராசிரியர் அலெக்சாண்டர் தலை மையில் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.  விழா முடியும் வரை, தினசரி மாலை சிறிய தேர்பவனியும், திருப்பலியும் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்சியாக, ஏப்ரல் 21-ந் தேதி இரவு, காரைக்கால் குரும்பகரம் பங்குத்தந்தை ராயப்பன் தலைமையில் 3 பெரிய தேர்பவனியும், ஏப்ரல் 22-ந் தேதி இரவு, நீலகிரியைச்சேர்ந்த பங்குகுரு செபஸ்தியான் தலைமையில், சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டு 5 தேர்பவனியும் நடைபெறவுள்ளது. ஏப்ரல் 23-ந் தேதி காலை கொடியிறக்கம் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

    • மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த மாதம் 28-ந் தேதி நோன்பு சாட்டுதலுடன் தொடங்கியது.
    • கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    உடுமலை :

    உடுமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த மாதம் 28-ந் தேதி நோன்பு சாட்டுதலுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து கடந்த 4-ந்் தேதி கம்பம் போடுதல் நிகழ்ச்சியும், 6-ந் தேதி வாஸ்து சாந்தி, கிராம சாந்தி நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. தேவாங்கர் சமூகத்தின் சார்பில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    முன்னதாக தளி சாலை பூமாலை சந்து பகுதியிலுள்ள ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் கொடிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர் முக்கிய வீதிகள் வழியாக கொடி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு மாரியம்மன் கோவிலை வந்தடைந்தது. கோவில் மண்டபத்தில் உள்ள கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் மஞ்சள் துணியா லான கொடி மாரியம்மன் உருவப்படத்துடன் கொடி மரத்தில் ஏற்றப்பட்டது. இந்த கொடியேற்றம் நிகழ்ச்சியை தொடர்ந்து கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    மேலும் கொடி மரத்துக்கு முன்பு ஏராளமான பெண்கள் நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். இதனைத் தொடர்ந்து மதியம் 2 மணியளவில் பூவோடு எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கையில் பூவோடு ஏந்தி சன்னதியை வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு 7 மணியளவில் அம்மன் புஷ்ப அலங்காரத்துடன் காமதேனு வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்றது. கோவிலிலிருந்து முக்கிய வீதிகள் வழியாக சென்ற அம்மன் திருவீதி உலாவின் போது வழி நெடுகிலும் ஏராளமான பக்தர்கள் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு மேற்கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் கோவில் பரம்பரை அறங்காவலர் யு.எஸ்.எஸ்.ஸ்ரீதர், செயல் அலுலவர் வெ.பி.சீனிவாசன், யூ.எஸ்.சஞ்சீவ் சுந்தரம், தேவாங்கர் கல்வி அறக்கட்டளை தலைவர் ஏ.சீனிவாசன், அறங்காவலர் கிருஷ்ணராஜ், வி.பி.எஸ்.ஆர்.பிரகாஷ், கொங்கு ரவி உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

    • தினமும் அம்மன் மற்றும் சுவாமிகளுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள், யாகங்கள் நடைபெற்று வந்தது.
    • பாவாடைராயன் நிஷாசனி மற்றும் வல்லாளராயன் கோட்டை எழுத்தில் நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

    விழுப்புரம்:

    மரக்காணம் அருகே அனுமந்தை கிராமத்தில் அங்காளம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா கடந்த மாதம் 31-ந் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனைத் தொடர்ந்து தினமும் அம்மன் மற்றும் சுவாமிகளுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள், யாகங்கள் நடைபெற்று வந்தது. இதன் முக்கிய நிகழ்ச்சியாக 7-ந் தேதி இரவு காளி முகம் ஏந்துதல், முத்து பல்லக்குடன் அம்மன் வீதி உலா நிகழ்ச்சி மற்றும் மேடை நாடக நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    இதனைத் தொடர்ந்து நேற்று மாலை தேர் திருவிழா நடைபெற்றது. அம்மன் சன்னதியில் இருந்து புறப்பட்ட தேர் ஊர்வலமாக சென்று மயானத்தை சென்றடைந்தது அங்கு பொதுமக்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்த கடலை, பலா, மா, போன்ற விவசாய பொருட்களை கொள்ளை விட்டனர். தொடர்ந்து பாவாடைராயன் நிஷாசனி மற்றும் வல்லாளராயன் கோட்டை எழுத்தில் நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மரக்காணம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்கள் செய்து இருந்தனர்.

    • தமிழகத்தில் மூன்றாவது பெரிய தேர் என்ற சிறப்பு பெற்றது இந்தக் கோவில் தேர்.
    • ஷெட்டை பிரிக்கும் பணிகள் கடந்த இரு நாட்களாக நடந்தது.

    அவிநாசி :

    அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரைத் தேரோட்டம் வருகிற 25ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.தமிழகத்தில் மூன்றாவது பெரிய தேர் என்ற சிறப்பு பெற்றது இந்தக் கோவில் தேர். கோவில் வளாகத்தில் தகர ஷெட்டால் பாதுகாப்பாக மூடி வைக்கப்பட்டுள்ள தேரை தயார்படுத்து வதற்காக ஷெட்டை பிரிக்கும் பணிகள் கடந்த இரு நாட்களாக நடந்தது. கோவில் சிவாச்சாரியார்கள் தேர் விழாவிற்கான முகூர்த்த ஆயக்கால் பூஜை நடந்தது.

    செயல் அலுவலர் பெரிய மருது பாண்டியன் கூறிய போது,தொடர்ந்து தேரை தயார்படுத்தி அலங்காரம் செய்யும் பணிகள் நடைபெறும் என்றார்.

    • இந்த ஆண்டு திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • கருடாழ்வாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.

    தென்திருப்பேரை:

    தூத்துக்குடி மாவட் டத்தில் பிரசித்தி பெற்ற நவதிருப்பதி கோவில்களில் 7-வது தலமாகவும், 108 திவ்ய தேசங்களில் 53-வது தலமாகவும், சுக்கிரன் தலமாகவும் அமையப் பெற்றது தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர் கோவில் ஆகும்.

    தாமிரபரணி ஆற்றின் தென்கரையில் மீன் வடிவ காதணி அணிந்த ஸ்ரீமகர நெடுங்குழைக்காதன், குழைக்காதர் நாச்சியார், திருப்பேரை நாச்சியாருடன் தென்திருப்பேரையில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

    கொடியேற்றம்

    ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும் திருவிழா இந்த ஆண்டு இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை கள் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து தென்திருப் பேரை வீதிகளில் கொடி பட்டம் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.

    மூலஸ்தானத்திலிருந்து கைத்தல சேவையாக உற்சவர் ஸ்ரீநிகரில் முகில் வண்ணன் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் கொடிமரம் முன்பு எழுந்தருளினார். அதை தொடர்ந்து கொடி மரத்தில் அமைந்துள்ள கருடாழ்வாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.

    பின்னர் கொடி பட்டத்திற்கு மாலை மரியாதை செய்து கற்பூர ஆரத்தி எடுத்து கொடி மரத்தில் கொடி பட்டத்தை அர்ச்சகர் காலை 7.15 மணிக்கு ஏற்றி வைத்தார்.

    தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் காலை 7 மணிக்கு உற்சவ மூர்த்தி ஸ்ரீரிதேவி, பூதேவி நாச்சி யார்களுடன் வீதி புறப்பாடும் மாலையில் பரங்கி நாற்காலி, சிம்ம வாகனம், அனுமார் வாகனம், சேஷ வாகனம், கருட வாகனம், அன்ன வாகனம், யானை வாகனத்தில் முக்கிய மாட வீதிகள் வழியாக வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

    கருடசேவை

    9-ந்தேதி இரவு 9.30 மணிக்கு கருட சேவை நிகழ்ச்சியும், அன்ன வாகன நிகழ்ச்சியும், 10-ந்தேதி யானை வாகனத்திலும்,

    11-ந்தேதி மாலை 5 மணிக்கு இந்திர விமானத்தில் பக்தர் களுக்கு காட்சி அளிக்கிறார்.

    12-ந் தேதி காலை உற்சவ மூர்த்தி ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியார்களுடன் மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறார். அன்றைய தினம் மாலை 4 மணிக்கு குதிரை வாகனத்தில் எழுந்தருளி புறையூர் ஆணையப்ப பிள்ளை சத்திரம் வீதி புறப்பாடு நடக்கிறது.

    தேரோட்டம்

    13-ந்தேதி காலை 8 மணிக்கு மேஷ லக்னத்தில் சுவாமி தேரில் எழுந்தருளல், அதை தொடர்ந்து காலை 8.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.

    14-ந்தேதி காலை 8 மணிக்கு தாமிர பரணி நதியில் தீர்த்த வாரியும், அதைதொடர்ந்து பல்லக்கில் தவழ்ந்த கிருஷ்ணன் திருக் கோலமும், வெற்றிவேர் சப்பரம் நிகழ்ச்சியும் நடை பெறுகிறது.

    விழாவிற்கான ஏற்பாடு களை செயல் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, தக்கார் அஜீத் மற்றும் கோவில் அலுவலர்கள், ஊழியர்கள் செய்து வருகிறார்கள்.

    நிகழ்ச்சியில் ஸ்ரீ நிகரில் முகில் வண்ணன் கைங்கர்ய சபா நிர்வாகிகள், சீனி வாசன் சேவைகள் அறக் கட்டளை முருகன், சடகோபன், பா.ஜனதா மாநில கூட்டுறவு பிரிவு செயலாளர் மாரி துரைசாமி, பேரூராட்சி பா.ஜனதா கவுன்சிலர்கள் குமரேசன், ரேவதி, ராஜப்பா வெங்கடாச்சாரி, வள்ளியூர் குழைக்காதர் குடும்பத்தினர், மற்றும் ஏராளமான பக்தர் கள் கலந்து கொண்டனர்.

    • வடுவூர் கோதண்டராமர் கோவிலில் ராமநவமி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 7-ந்தேதி(வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் வடுவூரில் கோதண்டராமர் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் ஆண்டு தோறும் ராமநவமி விழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    முன்னதாக சன்னதியில் இருந்து கோதண்டராமர் வில்லேந்திய கோலத்தில் வலம் வந்து கொடிமரம் முன்பு எழுந்தருளினார்.

    பின்னர் தீட்சிதர்கள் கொடிக்கு பூஜை செய்தனர்.

    அதனைத் தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க கருடன் சின்னம் வரையப்பட்ட கொடி ஏற்றப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    மாலையில் சீதாதேவி, லட்சுமணன், அனுமன் சமேதராக கோதண்டராமர் திருக்கல்யாண சேவையில் வீதி உலா நடந்தது. விழா நாட்களில் தினமும் இரவு பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடைபெறும்.

    இன்று (வெள்ளிக்கிழமை) இரவு சூரிய பிரபை வாகனத்திலும், நாளை(சனிக்கிழமை) வெள்ளி சேஷ வாகனத்திலும் சாமி எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது.

    2-ந் தேதி கருடசேவை நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 7-ந்தேதி(வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

    • பங்குனி மாத பிரமோற்சவ விழா கடந்த 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • யானை ஓடும் காட்சியை திரளான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயிலில் தருமபுர ஆதீனத்திற்கு உட்பட்ட அருள்மிகு தையல்நாயகிஅம்மன் உடனா கிய வைத்தியநாதசுவாமி கோயில் உள்ளது.

    நவகிரகங்களில் செவ்வாய் பரிகாரஸ்தலமாக விளங்கும் இக்கோயிலில் முருகபெருமான் செல்வமுத்துக்குமா ரசுவாமியாக தனி சன்னிதியிலும், தன்வந்திரி சுவாமியும் தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றனர்.

    இக்கோயிலில் பங்குனி மாத பிரமோற்ச்சவ திருவிழா கடந்த 27-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

    இவ்விழாவின் போது அருள்மிகு வைத்தியநாத சுவாமியும், தையல்நாயகி அம்மனும் தீர்த்தவாரிக்காக வீதியுலா செல்வார்கள், அதனை தொடர்ந்து நரி ஓட்டம் எனும் யானை ஓடும் ஐதீக நிகழ்ச்சி நடைபெறும், முருகபெருமானின் தந்தையாகிய வைத்தியநாதசுவாமியும், தாயாகிய தையல்நாயகி அம்மனும் தீர்த்த வாரிக்காக வீதியுலா செல்லும் போது ஆலயத்தில் தனியாக இருக்கும் முருக பெருமான் (செல்வவமுத்துகுமரசாமி) க்கு விளையாட்டு காட்டுவதற்காக யானை ஓடிவந்து, ஓடிவந்து வணங்கி விளையாடுவது ஐதீகம்.பங்குனி பிரம்மோற்ச்சவ விழாவின் நான்காம் நாளான வியாழக்கிழமை பரிவாரங்களுடன் அம்பாள் சுவாமி தீர்த்தவாரிக்கு புறப்பட்டனர்.

    சுவாமிகள் வீதியுலா செல்லும் வரை அமைதியாக நிற்கும் யானை, பின்னர் முருக பெருமான் மயில் வாகனத்தில் எழுந்தருளும் போது அதிவேகமாக ஓடி, ஓடி மீண்டும் திரும்பி ஓடிவந்து சப்தம் (பிளிருதல்) எழுப்பியவாறு முருகபெருமானை வணங்கி விளையாடியது.

    நரி ஓட்ட வைபவம் என்று அழைக்கப்படும் யானை ஓடும் இக்காட்சியை திரளான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து அஸ்திரதேவர், விநாயகர், அம்பாள், சுவாமி, சண்டிகேஸ்வரர் வீதியுலா நடைபெற்றது.

    • பங்குனி உத்திர திருவிழா கடந்த மார்ச் 9 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
    • தேரின் கட்டுமான பணிகள் மும்முரமாக நடைபெற்று தற்போது நிறைவடையும் நிலையில் உள்ளது.

    திருவாரூர்:

    சைவ சமய தலங்களில் முதன்மை தலமாகவும் சர்வதோச பரிகார தலமாகவும் விளங்குவது புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோயில். இந்த கோவிலின் பங்குனி உத்திர திருவிழா கடந்த மார்ச் 9 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

    இந்த பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆழித் தேரோட்டம் வரும் நாளை மறுநாள் ஏப்ரல் 1ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.

    அதனை முன்னிட்டு தேரின் கட்டுமான பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று தற்போது நிறைவடையும் நிலையில் உள்ளது.

    பிரசித்தி பெற்ற இந்த திருவாரூர் தேர் ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய தேராகும். சாதாரணமாக இந்த தேர் 36 அடி உயரமும் 36 அடி அகலமும் கொண்டது.

    நான்கு ராட்சச இரும்பு சக்கரங்களுடன் சேர்த்து இதன் எடை சுமார் 220 டன்னாக இருக்கிறது.

    இந்த தேரின் சக்கரங்களில் ஹைட்ராலிக் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த தேரின் மேல் கட்டுமானம் மூங்கில்கள் மற்றும் பனஞ்சப்பைகள் கொண்டு 48 அடி உயரத்திற்கு கட்டுமான பணி நடைபெற்றுள்ளது.

    அதற்கு மேல் 12 அடி உயரத்திற்கு சிகரம். அதற்கு மேல் 6 அடி உயரத்திற்கு தேர் கலசம் என மொத்தம் 96 அடி உயரத்தில் இந்த தேர் கட்டப்பட்டுள்ளது.

    அலங்கரிக்கப்பட்ட பின் தேரின் எடை சுமார் 300 டன் ஆகும். முன்பகுதியில் 33 அடி நீளமும் 11 அடி உயரமும் கொண்ட நான்கு மர குதிரைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இந்த தேரின் கட்டுமான பணிகள் என்பது தற்போது நிறைவுப்பணி நடைபெற்று வருகிறது.

    பெரிய தேர் எனப்படும் தியாகராஜ சுவாமி தேர், அம்பாள் தேர், முருகர் தேர், விநாயகர் தேர், சண்டிகேஸ்வரர் தேர் என மொத்தம் ஐந்து தேருக்கான கட்டுமான பணிகள் நிறைவு பெற்றது.

    இதில் 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இரவு பகலாக வேலை பார்த்து வருகிறார்கள்.

    இந்த தேரோட்டத்தின் போது தேரை நிறுத்துவதற்காக பயன்படுத்தப்படும் 600 முட்டுக்கட்டைகள் தயாரிக்கும் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    இந்த முட்டுக்கட்டைகள் புளிய மரக்கட்டையில் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த கட்டுமான பணிகள் வரும் இன்று மாலைக்குள் முழுமை அடையும்.

    அதனைத் தொடர்ந்து நாளை வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு தியாகராஜ சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளல் போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடைபெறும்.

    உலகப் புகழ்பெற்ற இந்த ஆழித் தேரோட்டத்தை பார்ப்பதற்காக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை புரிவர்.

    எனவே அதற்கான விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகம் மற்றும் காவல் துறையின் சார்பாக எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த தேரோட்டப் பணிகளில் பாதுகாப்பு பணிக்ககாக 1500 போலீசார் உள்ளிட்ட 2500 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    • அருப்புக்கோட்டை முத்துமாரி அம்மன் கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • கடந்த 26-ந் தேதி தொடங்கி அடுத்த மாதம் 16-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    அருப்புக்கோட்டை

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை பொது அபிவிருத்தி டிரஸ்ட்க்கு பாத்தியப்பட்ட முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் விழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது

    விழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் கட்டளை தாரர்களால் அம்மன் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

    இந்த திருவிழாவானது 15 நாட்கள் நடைபெறும். வருகிற 4-ந்தேதி அம்ம னுக்கு பொங்கல் வைத்து வழிபடும் நிகழ்ச்சியும், 5-ந் தேதி அக்கினி சட்டி பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் வெகு விமர்சையாக நடைபெறும்

    7-ந்தேதி தேரோட்டம் நடைபெறும் நிகழ்ச்சியில் புரவலர் ராமர் உற்சவ கமிட்டி தலைவர் மனோக ரன், உற்சவ கமிட்டி கன்வீனர் ராஜரத்தினம், உறவின் முறை காரியதரிசி முத்துசாமி, உறவின்முறை தலைவர் காமராஜன், பொருட்காட்சி கமிட்டி தலைவர் ஆலோசகரமான ரவீந்திரன் பொருட்காட்சி கமிட்டி செயலாளர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயலாளர் கவுன்சிலர் மணி முருகன் எஸ்.பி.கே கல்வி குழுமம் தலைவர் ஜெயக்குமார், உறவின்முறை உபதலைவர் முத்துக்குமார், பொருளாளர் செந்தூரன், உதவிச் செயலாளர் சிவக் குமார் எஸ்.பி.கே. பெண்கள் மேல்நிலைப் பள்ளி செயலாளர் சார்லஸ் தியாகராஜன், மெட்ரிக் பள்ளி செயலாளர் சவுந்தர பாண்டியன், எஸ்.பி.கே. ஜூனியர் நர்சரி பிரைமரி பள்ளி செயலாளர் ராஜ செல்வம், எஸ்.பி.கே. கல்லூரி செயலாளர் குணசேகரன், எஸ்.பி.கே. இன்டர்நேஷனல் பள்ளி செயலாளர் கனகவேல் ராஜன் தியாகராஜன், பவுர்ண டைப்ரைட்டிங் பள்ளிச் செயலாளர் சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மேலும் 40-வது பொருட்காட்சி கடந்த 26-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் 16-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    • கொடிமரத்தில் சேவற்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் பச்சைமலை சுப்பிரமணியசாமி கோவி லில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா கடந்த 29-ந் தேதி கிராம சாந்தி நிகழ்ச்சி யுடன் தொடங்கியது.

    இன்று காலை 10 மணியளவில் கோவிலுக்கு முன்புள்ள கொடிமரத்தில் சேவற்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத்தொ டர்ந்து யாகசாலை பூஜை நடை பெற்றது.

    நாளை முதல் வரும் 3-ந் தேதி வரை யாகசாலை பூஜைகள், சாமி தேர் வீதி உலா வருதல் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. 4-ந் தேதி கல்யாண சுப்பிர மணியருக்கு திருக்கல்யாண உற்சவம் காலை 11 மணி அளவில் நடைபெற உள்ளது. முன்னதாக காலை 9 மணி அளவில் சண்முகருக்கு சிகப்பு சாத்தி அலங்காரம் நடைபெற உள்ளது.

    தொடர்ந்து 5-ந் தேதி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி உத்திர தேர்த்திருவிழா நடைபெற உள்ளது. இதையொட்டி காலை 6 மணிக்கு அபிஷேகம், 8 மணி அளவில் திருப்படி பூஜை விழாவும் நடைபெற உள்ளது.

    காலை 9 மணி அளவில் சண்முகருக்கு பச்சை சாத்தி அலங்காரம் நடைபெற உள்ளது. முக்கிய நிகழ்ச்சியான தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி மாலை 4 மணி அளவில் நடைபெற உள்ளது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டுதேரை வடம் பிடித்து இழுக்கி றார்கள்.

    இதையொட்டி காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை கோவில் அடிவா ரத்தில் அன்னதானம் நடை பெற உள்ளது. 6-ந் தேதி மாலை 5 மணி அளவில் பரிவேட்டை, குதிரை வாகனத்தில் சாமி வலம் வருதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    மாலை 6.30 மணி அளவில் வள்ளி தெய்வா னை உடன் சண்முக பெரு மான் மலர் பல்லக்கில் நகர்வலம் வருதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    ×