search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 224799"

    • தேவகோட்டை அருகே கோட்டூர் முத்துமாரியம்மன் கோவில் பங்குனி உற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • வருகிற 5-ந்தேதி முளைப்பாரி செலுத்துதல், மஞ்சுவிரட்டு நடைபெறும்.

    தேவகோட்டை

    தேவகோட்டை அருகே கோட்டூர் கிராமத்தில் உள்ளது முத்துமாரியம்மன் கோவில். இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உற்சவ விழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும்.

    இந்த ஆண்டு பங்குனி உற்சவ விழா கொடியேற் றத்துடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து கொடி மரத்திற்கு பால், தயிர், சந்தனம் மற்றும் பல்வேறு அபிஷேகம், தீபாரதனை நடைபெற்றது.

    பின்னர் அம்மனுக்கு 16 வகையான அபிஷேகம், 108 சங்காபிஷேகம் நடந்தது. சிவாச்சாரியார்கள் புனித நீர் குடங்களை தலையில் சுமந்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.

    பின்னர் 21 வகையான தீபாரதனை நடைபெற்று அனைவருக்கும் பிரசா தங்கள் வழங்கப்பட்டது. இந்தநிகழ்ச்சியில் அறநிலையத்துறை அதிகாரி கள் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த திர ளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இன்று முதல் காலை வேளையில் அம்மனுக்கு ஒவ்வொரு நாளும் லட்சார்ச்சனை நடைபெற்று மாலையில் சிறப்பு அபி ஷேகம் அலங்காரம் நடை பெறும்.

    தொடர்ந்து இன்று (28-ந் தேதி) முளைப்பாரி இடுதல், 31- ந் தேதி திருவிளக்கு பூஜை, 2-ந் தேதி கலை நிகழ்ச்சிகள், 3-ந்தேதி அம்மன் திருவீதி உலா, 4-ந் தேதி பால்குடம், காவடி எடுத்தல், இரவு முளைப்பாரியை அம்மன் சன்னதியில் வைத்தல், இரவு கலைநிகழ்ச்சிகள், 5-ந்தேதி முளைப்பாரி செலுத்துதல், மஞ்சுவிரட்டு நடைபெறும்.

    • கமுதி முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது .
    • 14 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில், தினந்தோறும் இரவு அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெறும்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி சத்திரிய நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட முத்து மாரியம்மன் கோவில் பங்குனித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கோவிலில் இருந்து நந்தவனத்துக்கு சென்று பிடிமண் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் நேற்று காலை மேளதாளங்களுடன் சென்று கொடிப்பட்டம் வாங்கி கோவிலுக்கு கொண்டு வந்தனர். அதன் பின்பு காலை 9 மணிக்கு மேல் முத்துமாரியம்மன் சிலை முன்புள்ள கொடிமரத்தில், கொடியேற்றப்பட்டது.

    பின்பு மூலிகைகள், திரவியப்பொடி, பன்னீர், இளநீர் உட்பட பல்வேறு வகையான அபிஷேகம் செய்து சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. அம்மனுக்கு காப்பு கட்டிய பின்பு நேர்த்திகடன் செலுத்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்புகட்டிக் கொண்டனர். சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை ஏராளமானோர் காப்புகட்டி நேற்று முதல் விரதத்தை தொடங்கினர். இரவு கும்பம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. 14 நாட்கள் நடைபெறும் இந்த திரு விழாவில், தினந்தோறும் இரவு அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்று, அம்மன் ரிஷபம், பூதம், யானை, அன்னப்பறவை, கேடயம், வெள்ளிக்குதிரை காமதேனு உள்பட பல்வேறு வாகனங்களில் நகர்வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறும்.

    • சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் இளமதி, தக்கார், கணக்கர் பூபதி மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    சோழவந்தான்

    சோழவந்தானில் பிரசித்தி பெற்ற ஜெனகை மாரியம்மன் கோவிலில் வைகாசி 17 நாள் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மே 17-ந் தேதி பூச்சொரிதல் விழாவும், மே 22-ந் தேதி கம்பத்தில் திருவிழா கொடியேற்ற நிகழ்வும், மே 30-ந் தேதி பால்குடம், தீச்சட்டி எடுக்கும் நிகழ்ச்சியும், மே 31-ந் தேதி பூக்குழி விழாவும், ஜூன் 6-ந் தேதி தேரோட்டமும், ஜூன் 7-ந் தேதி வைகையாற்றில் தீர்த்தவாரி விழாவும் நடைபெறும்.

    விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் இளமதி, தக்கார், கணக்கர் பூபதி மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர். இதில் 3 மாத கொடிக்கம்ப நிகழ்ச்சியின் உபயதாரர் ராசு காவல் குடும்பத்தினர் உள்ளிட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.

    • விநாயகர் மற்றும் பஞ்ச மூர்த்திகள் கொடிமரத்தின் முன்பு எழுந்தருளினர்.
    • திருவிழா நாட்களில் தினமும் காலையும் இரவும் சுவாமி வீதி உலா நடைபெறும்.

    பூதலூர்:

    திருக்காட்டுப்பள்ளியில் அக்னீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.இத் திருக்கோயிலில் வருடம் தோறும் பங்குனி உத்திர திருவிழா விமரிசையாக நடைபெறும். திருவிழாவை ஒட்டி துவஜாரோகணம் என்னும் கொடியேற்று நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது.

    கொடியேற்ற நிகழ்ச்சியை ஒட்டி விநாயகர் மற்றும் பஞ்ச மூர்த்திகள் சிறிய தேரில் கொடி மரத்தின் முன்னே வீற்றிருந்தனர்.

    சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் கொடி மரத்திற்கு பல்வேறு திரவங்களால் அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    அதனை தொடர்ந்து மங்கல வாத்தியங்கள் முழங்க பங்குனி உத்திர திருவிழா தொடக்கமாக கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் பங்குனி உத்திர பெருவிழா குழு தலைவர் வக்கீல் ஜெயக்குமார், பேரூராட்சி தலைவர் மெய்யழகன், பேரூராட்சி செயல் அலுவலர் நெடுஞ்செழியன், பேரூராட்சி துணைத்தலைவர் ரமணி, பங்குனி உத்திர பெருவிழா குழு பொதுச்செயலாளர் ஜெயராமன், பொருளாளர் ராஜேஸ்வரன், மற்றும் பங்குனி உத்திர பெருவிழா குழு நிர்வாகிகள் இந்து சமய அறநிலையத்துறை ஊழியர்கள் பக்தர்கள் கலந்து கொண்டனர்.தொடர்ந்து நேற்று இரவு பஞ்ச மூர்த்திகள் வீதி உலா நடைபெற்றது.

    திருவிழா நாட்களில் தினமும் காலையும் இரவும் சுவாமி வீதி உலா நடைபெறும்.

    பங்குனி உத்திர நாளான அடுத்த மாதம் (ஏப்ரல்) நான்காம் தேதி காலை கோவிலில் இருந்துவிநாயகர், சௌந்தரநாயகி அம்பாள் சமேத அக்னீஸ்வரர், சோமாஸ் கந்தர், வள்ளி தெய்வானை சமேத முருகன், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளும் மலர் அலங்காரத்துடன் கோவிலிலிருந்து கோபுர தரிசனம் கண்டு பல்வேறு இசை நிகழ்ச்சிகளுடன் திருக்காட்டுப்பள்ளி மற்றும் ஒன்பத்துவேலி வீதிகளில் உலா வரும்.மாலை பஞ்சமூர்த்திகளும் காவிரி ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள அலங்கார பந்தலில் எழுந்தருள செய்து மகா அபிஷேகம் நடைபெறும்.

    பின்னர் இசை கச்சேரிகள் வாண வேடிக்கைகள் நடைபெறும் விழாவிற்கான ஏற்பாடுகளை பங்குனி உத்திர பெருவிழா குழுவினர் செய்து வருகின்றனர்.

    • ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம் இன்று நடந்தது.
    • இதில் திரளான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் தொடங்கினர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் உள்ள பிரசித்திபெற்ற வழிவிடு முருகன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் பங்குனி உத்திர திருவிழா விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு 83-வது பங்குனி உத்திர திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை யொட்டி சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன.

    முன்னதாக விக்னேஸ்வர பூஜை, திரு மஞ்சன அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் பங்குனி உத்திர திருவிழா கொடி ஏற்றி தீபாராதனை காண்பித்தனர். அப்போது அங்கு திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் அரோகரா கோஷமிட்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கொடியேற்றம் நடந்து முடிந்தபின் ராமநாதபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பெண்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் கோவிலில் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர். விழாவில் வருகிற 5-ந்தேதி காலை சுவாமி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி நொச்சி வயல் ஊரணி கரையில் உள்ள பிரம்ம புரீஸ்வரர் கோவிலில் எழுந்தருளுகிறார்.

    அங்கு காப்பு கட்டி விரதம் இருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம், பறவை காவடிகளுடன் ஊர்வலமாக வந்து நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர். அன்று இரவு 7 மணிக்கு கோவில் முன்பு பூக்குழி திருவிழா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை தர்மகர்த்தா ஜெயக்குமார் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

    • தொடர்ந்து மூலவர் முருகனுக்கு பால், தயிர், இளநீர் ஆகியன கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.
    • கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா என்ற பக்தி கோஷங்களை எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.

    விழுப்புரம்:

    மயிலத்தில் உள்ள மலைமீது பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது.இங்கு முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் திருமணக் கோலத்தில் காட்சி அளித்து வருகிறார் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா இங்கு வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா இன்று தொடங்கியது. இதையொட்டி அதிகாலை கோவில் நடை திறக்கப்ப ட்டது. தொடர்ந்து மூலவர் முருகனுக்கு பால், தயிர், இளநீர் ஆகியன கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. தங்க கவசம் அணிந்து மலர் அலங்காரத்தில் வள்ளி-தெய்வானையுடன் முருகர் பக்தர்களுக்கு அருள்பா லித்தார். இதை தொடர்ந்து உற்சவ மூர்த்திகளுக்கு அபிஷேக, அலங்காரங்கள் செய்யப்பட்டது. பின்னர் காலை 7 மணி அளவில் வள்ளி-தெய்வானையுடன் வெள்ளி கவசத்தில் விநாயகர், சண்டிகேஸ்வரர் ஆகியோர் பல்லக்கில் அங்குள்ள கொடிமரம் முன்பு எழுந்தருளினர். பின்னர் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடை பெற்றது. 7 .15 மணிக்கு அர்ச்ச கர்கள் வேத மந்திரங்கள் முழங்க மயிலம் பொம்மபுர ஆதீனத்தின் 20-ம் பட்ட சிவஞான பாலைய சுவாமிகள் மயில் உருவம் பொறிக்கப்பட்ட துவஜா யோகம் என்னும் கொடியை ஏற்றினார். அப்போது அங்கு கூடி இருந்த பக்தர்கள் கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா என்ற பக்தி கோஷங்களை எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.

    பின்னர் கொடிமரத்துக்கு மகாதீபாராதனை நடந்தது விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் இதை தொடர்ந்து இரவு சூரியபிரபை வாகனத்தில் வள்ளி தெய்வானையுடன் முருகன் எழுந்தருளி மலைவலக்காட்சி நடைபெறும் இதற்கான ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலைய சுவாமிகள் செய்திருந்தனர் 2-ம் நாள் திருவிழாவான நாளை 28-ந் தேதி (வியாழக்கிழமை) இரவு ஆட்டுக்கிடா வாகனத்திலும் 29-ந் தேதி இரவு பூதவாகனத்திலும், 30-ந் தேதி நாக வாகனத்திலும், 31-ந் தேதி தங்க மயில் வாகனத்திலும், 1-ம் தேதி யானை வாகனத்திலும், 2-ந் தேதி வெள்ளி மயில் வாகனத்திலும் 3-ந் தேதி இரவு திருக்கல்யாணம் வெள்ளி குதிரை வாகனத்தில் மலைவல காட்சி நடக்கிறது. விழாவின் சிகர விழாவான தேரோட்டம், வருகிற 4-ந் தேதி செவ்வாய்க்கிழமை பங்குனி உத்திரம், அன்று காலை 6 மணிக்கு தேரேட்டம் நடக்கிறது. இதைனை தொடர்ந்து 5-ந் தேதி தெப்ப உற்ச்சவம், 6-ந் தேதி முத்து பல்லக்கு உற்சவம், 7-ந் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவம் நடக்கிறது.

    • சுப்பிரமணியசுவாமி கோவில் பங்குனி பெருவிழா கொடியேற்றம் நடந்தது.
    • விழாவிற்கான ஏற்பாடு களை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.



    சிறப்பு அலங்காரத்தில் தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி.

    திருப்பரங்குன்றம்

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடு என்ற பெருமை பெற்றது திருப்பரங்குன்றம்.இங்கு கொண்டாடப்படும் திருவிழாக்களின் பங்குனி பெருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் பங்குனி மாதம் 15 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழா இன்று கொடியேற் றத்துடன் தொடங்கியது.

    முன்னதாக உற்சவர் சன்னதியில் உற்சவர் சுப்பிர மணியசுவாமி தெய்வானைக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்கா ரத்தில் தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமி கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளினார்.

    அங்கு சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை முன்னிலையில் கொடி கம்பத்தில் திருவிழாவிற் கான கொடியேற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவை முன்னிட்டு தினமும் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் காலையில் பல்லக்கிலும், மாலையில் தங்கமயில் வாகனம், அன்ன வாகனம், பூத வாகனம், யானை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திரு வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.இதில் பக்தர்கள் திரளான கலந்து கொள்வார்கள்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் ஏப்ரல் 6-ந் தேதியும், பட்டாபிஷேகம் 7-ந் தேதியும், மீனாட்சி அம்மன் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் முன்னிலை யில் சுப்பிரமணியசுவாமி- தெய்வானை திருக்கல்யாண வைபவம் 8-ந் தேதியும் நடைபெறும். விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 9-ந்தேதி நடக்கிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

    • பங்குனி, ஐப்பசி மாதங்களில் 10 நாட்கள் திருவிழா கொண் டாடப்படுவது வழக்கம்.
    • 5.30 மணிக்கு கருட வாக னத்தில் சுவாமி ஆராட்டுக்கு மூவாற்று முகம் ஆற்றுக்கு எழுந்தருளுதல்

    கன்னியாகுமரி : 

    கன்னியாகுமரி மாவட்டத் தில் உள்ள பிரசித்தி பெற்ற வைணவத்திருத்தலங்களில் ஒன்றான ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் கடந்த ஆண்டு ஜூலை 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து கோவிலுக்கு நாள் தோறும் வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தென்னிந்திய அளவில் வைணவ பக்தர்களிடையே மிகவும் முக்கியமான திருக்கோவிலாக இக்கோ வில் கொண்டாடப் பட்டு வருகிறது. திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் ஆண்டுக்கு 2 முறை அதாவது பங்குனி, ஐப்பசி மாதங்களில் 10 நாட்கள் திருவிழா கொண் டாடப்படுவது வழக்கம்.

    பங்குனித்திருவிழாவின் முதல் நாளான நாளை (27-ந்தேதி) காலை சிறப்பு பூஜையுடன் கருட இலச்சினை பொறிக்கப்பட்ட திருக்கொடியேற்றும் நடக்கிறது. மாலை 6 மணிக்கு தீபாராதனை, இரவு 9 மணிக்கு சுவாமி நாற்காலி வாகனத்தில் பவனி வருதல் ஆகியன நடக்கிறது.

    தொடர்ந்து தினமும் சொற்பொழிவு, சவாமி பவனி வருதல் போன்றவை நடக்கிறது.

    6-ம் நாள் இரவு 7 மணிக்கு ராமாயண பாராயணம், 7.15 மணிக்கு பரத நாட்டியம் 9 மணிக்கு சுவாமி நாற்காலி வாகனத்தில் பவனி வருதல், தொடர்ந்து கர்ணசபதம் கதகளி ஆகியனவும் நடக் கிறது.

    7-ம் நாள் காலை 8 மணிக்கு பாகவத பாராயணம், காலை 11 மணிக்கு சிறப்பு உற்சவ பலி தரிசனம், இரவு 7 மணிக்கு ராமாயண பாராயணம், இரவு 9 மணிக்கு சுவாமி பல்லக்கு வாகனத்தில் பவனி வருதல் தொடர்ந்து கீசக வதம் கதகளி ஆகியன நடக்கிறது.

    8-ம் நாள் இரவு 7 மணிக்கு டான்ஸ், இரவு 9 மணிக்கு சுவாமி நாற்காலி வாகனத்தில் பவனி வருதல், இரவு 10.30 மணிக்கு சிறப்பு நடிகர்கள் பங்கேற்கும் துரியோதன வதம் கதகளி, 9-ம் நாள் (ஏப்ரல் 4-ந்தேதி) இரவு 8.30 மணிக்கு சிறப்பு நாதஸ்வர இன்னிசை கச்சேரி, இரவு 9.30 மணிக்கு சுவாமி கருடவாகனத்தில் பள்ளிவேட்டைக்கு எழுந்தருளல், இரவு 12 மணிக்கு கிராதம் கதகளியும் நடக்கிறது.

    10-ம் நாள் (5-ந்தேதி) காலை 11 மணிக்கு திருவி லக்கு எழுந்தருளல், மாலை 5.30 மணிக்கு கருட வாகனத்தில் சுவாமி ஆராட்டுக்கு மூவாற்று முகம் ஆற்றுக்கு எழுந்தருளுதல் போன்றவை நடக்கின்றன. கழுவன் திட்டை, தோட்டவாரம் வழியாக சுவாமி ஊர்வலமா கச்சென்று மூவாற்றுமுகம் ஆற்றில் ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து ஆராட்டு முடிந்து கோவிலுக்கு சுவாமி திரும்புகிறது. இரவு 1 மணிக்கு குசேல விருத்தம் கதகளி ஆகியன நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும், பக்தர்களும் செய்து வருகின்றனர்.

    • கொட்டையூர் கோடீஸ்வரர் கோவிலில் காலை 9 மணிக்கு கொடியேற்றம் நடைபெற உள்ளது.
    • கொட்டையூரிலுள்ள காவிரி கரையில் தீர்த்தவாரி விழா காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

    பட்டீஸ்வரம்:

    கும்பகோணம் பகுதியிலுள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களான குடந்தை கீழ்கோட்டம் அருள்மிகு ஸ்ரீபிரஹன்நாயகி சமேத நாகேஸ்வரர் (நாக தோஷப் பரிகாரத் தலம்), ஸ்ரீஆனந்தநிதியம்பிகை சமேத ஆதிகம்பட்ட விஸ்வநாதர், கொட்டையூர் ஸ்ரீபந்தாடுநாயகி சமேத கோடீஸ்வரர் ஆகிய மூன்று திருக்கோயில்களில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர பெருவிழா பத்து நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இம்மூன்று சிவாலயங்களில் இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர பெருவிழா இன்று மாலை அனுக்ஞை, விக்னேஸ்வர, வாஸ்து, மிருத்சங்கிரஹணம் ஆகிய பூஜைகளுடன் தொடங்குகிறது

    தொடர்ந்து நாகேஸ்வரர், ஆதிகம்பட்ட விஸ்வநாதர் ஆலயங்களில் நாளை காலை பத்து மணிக்கு மேல் கொடியேற்றமும், கொட்டையூர் கோடீஸ்வரர் கோவிலில் காலை 9-மணிக்கு மேல் கொடியேற்றமும் நடைபெற உள்ளது.

    தொடர்ந்து இவ்வால யங்களில் தினசரி மங்கல இன்னிசை முழங்க சுவாமி, அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் காலை பல்லக்கிலும் மாலை வேளைகளில் சந்திர பிரபை, சூரியபிரபை, பூதம், கிளி, அதிகார நந்தி, காமதேனு, யானை, சிம்மம், யாளி, கைலாசம், குதிரை, ரிசபம் போன்ற வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள வீதி உலா திருகாட்சியும் நடைபெறும்.

    மேலும் இவ்விழாவின் ஐந்தாம் திருநாளன்று வண்ண மின் விளக்குகள் ஒளிர ஓலைச் சப்பரத்தில் சுவாமி, அம்பாள் ரிசப வாகனத்தில் எழுந்தருள வீதியுலாவும், ஏழாம் திருநாளன்று மாலை திருக்கல்யாண உத்ஸவமும், ஒன்பதாம் திருநாளான்று காலை திருத்தேரோட்டமும், பத்தாம் திருநாளான்று கும்பகோணம் மகாமகக் குளத்தில் பங்குனி உத்திர தீர்த்தவாரி விழா ஏப்ரல்.4 காலை 11 மணிக்கும், கொட்டையூர் கோடீஸ்வரர் ஆலயத்தின் தீர்த்தவாரி விழாவானது கொட்டையூரிலுள்ள காவிரிக் கரையில் காலை 9-30 மணிக்கு மேலும் நடைபெறவுள்ளது.

    இவ்விழாக்களின் சிறப்பு ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைய துறை சுவாமிமலை துணை ஆணையர் உமாதேவி, மற்றும் கண்காணிப்பாளர் சுதா, ஆய்வாளர் வெங்கடசுப்ரமணியன் மற்றும் திருக்கோவில்களின் செயல் அலுவலர்கள் கணேஷ்குமார், சிவசங்கரி மற்றும் அந்தந்த திருக்கோ யில்களின் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.

    • முக்கிய நிகழ்வான 9-ம் நாள் விழா அன்று தேரோட்டம் நடைபெற உள்ளது.
    • பட்டாச்சாரியார்கள் வேத பாராயணம் செய்ய கருடாழ்வார் உருவம் பொறிக்கப்பட்ட கொடி ஏற்றப்பட்டது.

    பட்டீஸ்வரம்:

    கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற ராமசாமி கோவில் உள்ளது. 'தென்னக அயோத்தி' என்று அழைக்கப்படும் இக்கோவிலில் ஆண்டுதோறும் ராமநவமி விழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி, இந்த ஆண்டுக்கான ராமநவமி விழா நேற்று மாலை அனுக்ஞை, மிருத்சங்கிரஹணம், கருடப்ரதிஷ்டை பூஜைகளுடன் தொடங்கி தொடர்ந்து இன்று காலை கொடியேற்றம் நடைபெற்றது.

    தொடர்ந்து, பட்டாச்சாரியார்கள் வேத பாராயணம் செய்ய கருடாழ்வார் உருவம் பொறிக்கப்பட்ட கொடி ஏற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து, விழா நாட்களில் தினமும் காலை மங்கள இன்னிசை முழங்க சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பல்லக்கிலும், மாலை வேளைகளில் பல்வேறு வாகனங்களில் வீதிஉலா நடைபெற உள்ளது.

    அதன்படி, 1-ம் நாள் இந்திர விமானம், 2-ம் நாள் சூர்யப்ரபை, 3-ம் நாள் சேஷ வாகனம், 4-ம் நாள் மின் விளக்குகள் ஒளிர ஓலைச்சப்பரத்தில் கருடசேவையும், 5-ம் நாள் அனுமந்த சேவையும், 6-ம் நாள் யானை வாகனத்திலும், 7-ம் நாள் கோரதம் மற்றும் புன்னைமர வாகனங்களிலும், 8-ம் நாள் குதிரை வாகனத்தில் வீதிஉலா நடைபெற உள்ளது.

    முக்கிய நிகழ்வான 9-ம் நாள் விழா அன்று தேரோட்டம் நடைபெற உள்ளது. 10-ம் நாள் சப்தாவர்ண விழாவும், ஏப்ரல்-1-ந்தேதி விடையாற்றி விழாவுடன் நிறைவடைகிறது.

    மேலும், தினமும் காலை, மாலை வேளைகளில் பஞ்சராத்திர ஆகம பகவத் சாஸ்திரப்படி யாகசாலை பூஜை ஹோமமும், பூர்ணாஹீதியும் வேதபாராயண மத்ராமாயணம், திவ்யப்பிரபந்த பாராயணங்கள் சேவை சாற்று முறையும் நடைபெறும்.

    விழா ஏற்பாடுகளை கோவில் ஆய்வாளர் வெங்கடசுப்ரமணியன், செயல் அலுவலர் மகேந்திரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • நாளை காலை 11.15 மணிக்கு மேல் மிதுன லக்னத்தில் கொடியேற்றம் நடைபெற உள்ளது.
    • 6-ம்நாள் யானை வாகனத்தில் சாமி வீதியுலா.

    பட்டீஸ்வரம்:

    கும்பகோணம் ராமசாமி கோவிலில் ராமநவமி பெருவிழா இன்று மாலை அனுக்ஞை, மிருத்சங்கி–ரஹணம், கருடப்ரதிஷ்டை பூஜை களுடன் தொடங்குகிறது.

    நாளை (புதன்கிழமை) காலை 11.15 மணிக்கு மேல் மிதுன லக்னத்தில் கொடியேற்றம் நடைபெற உள்ளது.

    இவ்விழாவினை–யொட்டி நாளை முதல் தினசரி காலை மங்கல இன்னிசை முழங்க சுவாமி சிறப்பு அலங்காரத்துடன் பல்லக்கிலும், மாலை வேளைகளில் 1- ம் திருநாள் இந்திர விமானம், 2-ம்நாள் சூர்யப்ரபை, 3-ம்நாள் சேஷ வாகனம், 4-ம் திருநாள் மின் விளக்குகள் ஒளிர ஓலைச்சப்பரத்தில் கருடசேவையும், 5-ம் நாள் அனுமந்த சேவையும், 6- ம்நாள் யானை வாகனத்திலும், 7-ம் திருநாள் கோரதம் மற்றும் புன்னைமரம் வாகனங்களிலும், 8-ம் நாள் குதிரை வாகனத்துடனும் வீதிஉலா நடைபெறும்.

    9-ம் திருநாள் காலை 8 மணிக்கு மேல் தேரோட்டமும்,

    10-ம் திருநாள் சப்தாவர்ண விழாவும், மறுநாள் (ஏப்ரல்.1) விடையாற்றி விழாவும் நடைபெற உள்ளது.

    மேலும் இவ்விழாவில் தினசரி காலை, மாலை வேளைகளில் பஞ்சராத்திர ஆகம பகவத் சாஸ்திரப்படி யாகசாலை பூஜை ஹோமமும், பூர்ணாஹீதியும் வேதபாராயண மத்ராமாயணம், திவ்யப்பிரபந்த பாராயணங்கள் சேவை சாற்று முறையும் மற்றும் வருகிற 29-ந் தேதி வரை கோவில் வளாகத்தில் தினசரி மாலை மருத்துவர் வெங்கடேஷ் பாசுரபடி ராமாயணம் உபன்யாசமும் நடைபெற உள்ளது.

    இவ்விழா ஏற்பாடுகளை கோவில் ஆய்வாளர் வெங்கடசுப்ரமணியன், செயல் அலுவலர் மகேந்திரன் மற்றும் பணியாளர்கள், ராமசரணம் டிரஸ்ட் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

    கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்-அமைச்சர்கள் சேகர்பாபு, மனோதங்கராஜ் பங்கேற்பு

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற கோவில் களில் மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலும் ஒன்று.

    கேரள பெண் பக்தர் கள் இருமுடி கட்டி இங்கு வந்து அம்மனை வழிபடு வதால் இக்கோவில் பெண் களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது.இக்கோவிலில் மாசிக் கொடை விழா 10 நாட்கள் வெகு விமரிசையாக நடை பெறுவது வழக்கம்.இந்த வருடத்தின் மாசிக் கொடை விழா இன்று காலை திருக் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதனை முன்னிட்டு இன்று காலை 4.30 மணிக்கு திருநடை திறக்கப்பட்டது.5 மணிக்கு கணபதி ஹோமம், 6.30 மணிக்கு உஷ பூஜை, 8.23 மணியளவில் திருக் கொடியேற்றம் நடந்தது. கோவில் தந்திரி சங்கர நாராயணன் திருக்கொடி யேற்றினார்.

    இதில் தெலுங் கானா கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன், தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தகவல் தொடர்பு தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், கலெக்டர் ஸ்ரீதர், எஸ்.பி. ஹரிகிரண் பிரசாத், குளச்சல் டி.எஸ்.பி. தங்கராமன், விஜய்வசந்த் எம்.பி., பிரின்ஸ் எம்.எல்.ஏ., தி.மு.க. தணிக்கை குழு உறுப்பினர் சுரேஷ்ராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. ஆஸ்டின், பாரதிய ஜனதா மாநில செயலாளர் மீனாதேவ், மாவட்ட பொருளாளர் முத்துராமன், தேவசம் மண்டல இணை ஆணையர் கவிதா பிரியதர்சினி, குமரி மாவட்ட திருக்கோயில் நிர்வாக இணை ஆணையர் ஞானசேகர், பேரூராட்சி தலைவர்கள் ராணிஜெயந்தி, பாலசுப்ரமணியன், குட்டி ராஜன், செயல் அலுவலர் கலாராணி, கவுன்சிலர்கள் முருகன், கிருஷ்ணஜெயந்தி, ஜெயலட்சுமி, ராபர்ட் கிளாரன்ஸ், ஆன்றலின் சோபா, சோனி, உதயகுமார், ஒன்றிய தி.மு.க.செயலாளர் சுரேந்திரகுமார், குளச்சல் நகர செயலாளர் நாகூர் கான், உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண் டனர்.

    தொடர்ந்து சமய மாநாடு திடலில் ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் 86-வது இந்து சமய மாநாடு கொடி யேற்றம் நடந்தது. தலைவர் கந்தப்பன் தலைமையில் மாநாடு தொடங்கியது. மதுரை ஆதீனம் 293-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள் மாநாட்டை தொடங்கி வைத்து விழா பேருரை ஆற்றினார்.

    தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் குத்து விளக்கேற்றி சிறப்பு ரை ஆற்றினார். மாதா அமிர்தானந்தமயி மடம் குமரி மாவட்ட பொறுப்பா ளர் நீலகண்டாம்ருத சைதன்யா, வெள்ளிமலை ஸ்ரீவிவேகானந்தா ஆசிரமம் சுவாமி கருணானந்தஜி மகாராஜ், குமாரகோவில் சின்மயா மிஷன் சுவாமி நிஜானந்தா ஆகியோர் ஆசியுரை ஆற்றினர்.இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு.

    எம்.பி., கேரள முன்னாள் மந்திரி சிவகுமார், இந்து ஆலய பாதுகாப்பு இயக்க மாநில தலைவர் டாக்டர் தெய்வபிரகாஷ் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

    குமரி மாவட்ட திருக் கோவில்கள் இணை ஆணையர் ஞானசேகர், தேவசம் கண்காணிப்பளர் ஆனந்த், கோயில் ஸ்ரீ காரியம் செந்தில்குமார், மாவட்ட பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சிந்துகுமார், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் சிவகுமார், மண்டைக்காடு பேரூராட்சி தலைவர் ராணி ஜெயந்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.நண்பகல் 12 மணியளவில் கருமங்கூடல் தொழிலதிபர் கல்யாணசுந்தரம் இல்லத்தி லிருந்து அம்மனுக்கு சீர் பொருட்கள் கொண்டு வரப்பட்டது.

    மதியம் 1 மணிக்கு உச்சிகால பூஜை நடந்தது.தொடர்ந்து அன்னை பகவதி அன்னதான குழு சார்பில் 30 வது ஆண்டு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6 மணிக்கு தங்கத்தேர் உலா, 6.30 மணிக்கு சாயரட்சை பூஜை மற்றும் ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி பூஜையும், 9 ஆயிரம் திருவிளக்கு பூஜை யும் நடக்கிறது. இரவு 8 மணி முதல் பரத நாட்டியம் நிகழ்ச்சி 9 மணிக்கு அத்தாழ பூஜையும் நடக்கிறது

    ×