search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 225460"

    • காராமணிக்காயில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.
    • தினமும் ஏதாவது ஒரு காயை உணவில் சேர்த்து கொள்வது நல்லது.

    தேவையான பொருட்கள்:

    காராமணிக்காய் - 400 கிராம்

    சாம்பார் வெங்காயம் - 200 கிராம்

    கடுகு - 1 தேக்கரண்டி

    மஞ்சள் தூள் - ¼ தேக்கரண்டி

    சில்லி பிளேக்ஸ் - 2 தேக்கரண்டி

    கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி

    தேங்காய் எண்ணெய் - தேவைக்கேற்ப

    உப்பு - தேவைக்கேற்ப

    செய்முறை:

    காராமணிக்காயை நன்றாக சுத்தம் செய்து சற்று பெரிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும், பின்னர் அவற்றை அடி கனமான பாத்திரத்தில் போட்டு எண்ணெய் சேர்க்காமல் மிதமான தீயில் 5 நிமிடங்கள் வதக்கவும்.

    அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, கறிவேப்பிலை, பொடிதாக நறுக்கிய சாம்பார் வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.

    பின்பு அதில் மஞ்சள் தூள், சில்லி பிளேக்ஸ் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து மீண்டும் வதக்கவும்.

    பிறகு அதில், வதக்கிய காராமணியை மசாலாவுடன் சேர்த்து 10 முதல் 15 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கிளறவும்.

    இப்பொழுது சுவையான 'காராமணிக்காய் பொரியல்' தயார்.

    இதனை சூடான சாதத்துடன் கலந்து சாப்பிடலாம்.

    • வாய்க்கசப்பு, பித்தம் குறைய உதவும் இந்த சட்னி.
    • இந்த சட்னி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    தனியா - கால் கப்,

    காய்ந்த மிளகாய் - 8 (அல்லது தேவைக்கேற்ப),

    பூண்டு - 2 பல்,

    கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு,

    புளி - பெரிய நெல்லிக்காய் அளவு,

    கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன்,

    தேங்காய் துருவல் - 4 டேபிள்ஸ்பூன்,

    எண்ணெய் - 2 டீஸ்பூன்,

    உப்பு - தேவைக்கேற்ப.

    செய்முறை:

    வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் தனியாவை போட்டு வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும்.

    பின்னர் சிறிதளவு எண்ணெய் ஊற்றி... காய்ந்த மிளகாய், பூண்டு, புளி, கறிவேப்பிலை, தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக வறுத்து ஆறவைக்கவும்.

    எல்லா பொருட்களும் நன்றாக ஆறியபின் மிக்சியில் போட்டு அதனுடன் உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும்.

    மீதமுள்ள எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, அரைத்த சட்னியில் சேர்க்கவும்.

    இப்போது சூப்பரான தனியா சட்னி ரெடி.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால்... சுவையில் அள்ளும்.
    • தோசை, இட்லியுடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.

    தேவையான பொருட்கள் :

    நண்டு - அரை கிலோ,

    தக்காளி - ஒன்று,

    சின்ன வெங்காயம் - 25 கிராம்,

    பச்சை மிளகாய் (சிறியது) - 2,

    கறிவேப்பிலை - ஒரு கொத்து,

    சோம்பு - ஒரு டீஸ்பூன்,

    எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்,

    பட்டை, பிரிஞ்சி இலை - தலா ஒன்று,

    குழம்பு மசாலா - 2 டேபிள்ஸ்பூன்,

    தேங்காய் - கால் மூடி,

    மிளகு - ஒரு டீஸ்பூன்,

    பூண்டு - 5 பல்,

    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    நண்டை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    தக்காளி, சின்ன வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.

    ப.மிளகாயை கீறி வைத்து கொள்ளவும்.

    தேங்காய், மிளகு, பூண்டு ஆகியவற்றை சேர்த்து நன்கு விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

    சுத்தம் செய்த நண்டுடன் குழம்பு மசாலா, சிறிதளவு உப்பு சேர்த்துப் பிசிறி வைத்துக் கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு, பட்டை, பிரிஞ்சி இலை, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் கீறிய பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.

    வெங்காயம் வதங்கிய பிறகு அதில் தக்காளி சேர்க்கவும்.

    தக்காளி குழைய வதங்கியதும் பிசிறி வைத்த நண்டை சேர்த்துக் கிளறவும்.

    பிறகு, அரைத்து வைத்த தேங்காய் விழுதை சேர்த்து, சிறிது உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்கவிடவும்.

    இது ஓரங்களில் எண்ணெய் பிரிந்து கிரேவி பதத்துக்கு வந்தவுடன் இறக்கினால்... சுவையான நண்டு மசாலா தயார்.

    சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால்... சுவையில் அள்ளும். வெங்காய சாம்பாருக்கு சூப்பர் காம்பினேஷன்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.
    • இந்த சட்னி குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

    தேவையான பொருட்கள் :

    புளி - பெரிய நெல்லிக்காய் அளவு,

    காய்ந்த மிளகாய் - 10 (அல்லது தேவைக்கேற்ப),

    கறிவேப்பிலை - கால் கப்,

    தனியா - 2 டேபிள்ஸ்பூன்,

    கருப்பட்டி - சிறிய துண்டு,

    நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்,

    உப்பு - தேவைக்கேற்ப.

    தாளிக்க

    கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன்,

    கறிவேப்பிலை

    செய்முறை:

    கடாயில் சிறிது 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும் காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, தனியா சேர்த்து வாசனை வரும் வரை வதக்கி ஆற விடவும்.

    ஆறியதும் மிக்சியில் போட்டு அதனுடன் புளி, கருப்பட்டி, உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து 1 டீஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்து அதில் அரைத்த விழுதைச் சேர்த்து சுருள வதக்கினால்... புளிப்பு, காரம், இனிப்புச் சுவையுடன் வித்தியாசமான சட்னி தயார்!

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • டயட்டில் இருப்பவர்களுக்கு சிறந்த உணவு இது.
    • இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, பாசிப்பருப்பு - தலா 50 கிராம்

    உளுந்து, முந்திரி, மக்காச்சோளம் - 50 கிராம்

    முழு கோதுமை - 50 கிராம்

    பச்சை மிளகாய் - 2

    பெரிய வெங்காயம் - 1

    கறிவேப்பிலை, கொத்தமல்லி, மஞ்சள் தூள், மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, பாசிப்பருப்பு, உளுந்து, முந்திரி, மக்காச்சோளம், கோதுமை ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து, கொரகொரப்பாக அரைக்கவும்.

    அத்துடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்துக்கு நன்றாகக் கரைத்துக்கொள்ள வேண்டும்.

    பின்பு நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, மஞ்சள் தூள், மிளகுத்தூள், உப்பு ஆகியவற்றை கரைத்த மாவுடன் கலந்து ஆம்லெட் போல் தோசைக்கல்லில் ஊற்றி, வேக வைத்து எடுத்தால் சுவையான 'சைவ ஆம்லெட்' தயார்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • இது நாண், சப்பாத்தி, தோசைக்கு தொட்டுக்கொள்ள சூப்பராக இருக்கும்.
    • மஷ்ரூம் சுக்காவின் சுவை மட்டன் சுவைக்கு நிகராக இருக்கும்.

    தேவையான பொருட்கள்:

    மஷ்ரூம் - 200 கிராம்

    வெங்காயம் - 1

    சோம்பு - 1 ஸ்பூன்

    மிளகு - 1 ஸ்பூன்

    சீரகம் - 1 ஸ்பூன்

    தனியா - 1 ஸ்பூன்

    வர மிளகாய் - 3

    பூண்டு விழுது - 1/2 ஸ்பூன்

    மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்

    கறிவேப்பில்லை - 2 கொத்து

    உப்பு - தேவையான அளவு

    எண்ணெய் - தேவையான அளவு

    கொத்தமல்லி - சிறிதளவு

    செய்முறை:

    மஷ்ரூமை அலசி விட்டு ஒரே மாதிரியான அளவில் பெரிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அடுப்பில் ஒரு கடாயில் மஷ்ரூமைகளை சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி ஒரு கொதி வரும் வரை வேக வைத்து அடுப்பில் இருந்து தண்ணீர் இல்லாமல் வடிகட்டி எடுத்து மஷ்ரூம்களில் இருக்கும் அதிக தண்ணீரை பிழிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    அடுப்பில் ஒரு கடாய் வைத்து கடாய் சூடானவுடன் ( வெறும் கடாயில்) மிளகு, சீரகம், சோம்பு, பூண்டு, தனியா, வர மிளகாய் ஆகியவற்றை சேர்த்து லேசாக வறுத்துக் கொண்டு அடுப்பில் இருந்து இறக்கி ஆற வைத்துக் கொள்ள வேண்டும்.

    ஒரு மிக்சிஜாரில் வறுத்து வைத்துள்ள மசாலா பொருட்களை சேர்த்து அதில் சிறிது வெங்காயமும் சேர்த்து பேஸ்ட் போன்று அரைத்துக் கொள்ள வேண்டும்.

    அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து பின் மீதமுள்ள வெங்காயம் சேர்த்து கண்ணாடி பதம் வரை வதக்கி விட்டு அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து அதன் காரத் தன்மை செல்லும் வரை வதக்கி விட வேண்டும்.

    மசாலாக்களின் பச்சை வாசனை சென்ற பிறகு, வேக வைத்த மஷ்ரூம்களை சேர்த்து வதக்கி விட்டு, உப்பு தூவி நன்றாக பிரட்டி எடுக்க வேண்டும்.

    கலவையில் இருந்து எண்ணெய் பிரிந்து , கலவை சுண்டி வரும் வரை வதக்கி விட்டு பின் அடுப்பில் இருந்து இறக்கி கொத்தமல்லி தூவு பரிமாறவும்.

    இப்போது சூப்பரான மணக்க மணக்க மஷ்ரூம் சுக்கா ரெடி!

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    பெண்கள் தினமும் எள் சாப்பிட்டால் மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    எள்ளு - 1/4 கப்

    துருவிய தேங்காய் - 1/2 கப்

    பூண்டு - 4 பற்கள்

    இஞ்சி - 1 துண்டு

    வரமிளகாய் - 7

    புளி - 1 எலுமிச்சை அளவு

    கடுகு-1 /2 ஸ்பூன்

    உளுந்தம் பருப்பு-1 ஸ்பூன்

    கறிவேப்பிலை-1 கொத்து

    பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை

    நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    இஞ்சி மற்றும் பூண்டு பற்களை பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் எள்ளு விதைகளை சேர்த்து தீயினை சிம்மில் வைத்து வதக்கி விட வேண்டும்.

    எள் வதங்கி நன்றாக வாசனை வந்த பிறகு, அதில் பொடியாக அரிந்து வைத்துள்ள இஞ்சி மற்றும் பூண்டு பற்களை சேர்த்து அதன் பச்சை வாசனை செல்லும் வரை வதக்கி விட வேண்டும். இஞ்சி பூண்டின் பச்சை வாசனை சென்ற பிறகு,புளி சேர்த்து வதக்கி விட வேண்டும்.

    இப்போது இதில் வரமிளகாய் மற்றும் துருவிய தேங்காயை சேர்த்து வதக்கவும். பின்னர் வதக்கிய பொருட்களை நன்றாக ஆறியதும் அதனை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து கொஞ்சம் உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

    அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    அடுப்பில் கடாய் வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்த பிறகு அதில் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் சேர்த்து பரிமாறினால் ருசியான எள்ளு தேங்காய் சட்னி ரெடி!

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • இந்த குழம்பு சாதத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.
    • தோசை, சப்பாத்தி, இட்லியுடனும் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.

    தேவையான பொருட்கள்:

    சிக்கன் - 1 கிலோ

    சின்ன வெங்காயம் - 30

    தக்காளி - 4-

    பச்சை மிளகாய் - 2

    இஞ்சி பூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன்

    உருளைக்கிழங்கு - 1

    உப்பு - சுவைக்கேற்ப

    கறிவேப்பிலை - சிறிது

    தேங்காய் எண்ணெய் - 1/4 கப்

    தாளிப்பதற்கு...

    சோம்பு - 2 டீஸ்பூன்

    சீரகம் - 1 டீஸ்பூன்

    பிரியாணி இலை - 1

    ஏலக்காய் - 5

    கிராம்பு - 5

    பட்டை - 1 துண்டு

    வறுத்து அரைப்பதற்கு...

    வரமிளகாய் - 10-12

    மல்லி விதைகள் - 4 டேபிள் ஸ்பூன்

    சீரகம் - 2 டீஸ்பூன்

    மிளகு - 2 டீஸ்பூன்

    கறிவேப்பிலை - 1 கையளவு

    அரைப்பதற்கு...

    துருவிய தேங்காய் - 1 கப்

    பொட்டுக்கடலை - 1 டேபிள் ஸ்பூன்

    சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்

    செய்முறை:

    * தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டிகொள்ளவும்.

    * உருளைக்கிழங்கை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 'வறுத்து அரைப்பதற்கு' கொடுத்துள்ள பொருட்களை போட்டு பொன்னிறமாக வறுத்து இறக்கி, மிக்சர் ஜாரில் போட்டு, நீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து தனியாக ஒரு பௌலில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    * பின்னர் அதே மிக்சர் ஜாரில் தேங்காய், சோம்பு, பொட்டுக்கடலை சேர்த்து, சிறிது நீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

    * ஒரு அகலமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்த பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாவ வதக்கி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.

    * பிறகு அதில் தக்காளி மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

    * பின் அதில் சிக்கனை கழுவிப் போட்டு, 5-6 நிமிடம் நன்கு சிக்கனை வதக்க வேண்டும்.

    * பின்னர் அதில் வறுத்து அரைத்த மசாலா மற்றும் நீரை ஊற்றி கிளறி, அதை குக்கரில் ஊற்றி அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.

    * விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் உருளைக்கிழங்குகளை போட்டு, பின் அரைத்த தேங்காய் மசாலா சேர்த்து அடுப்பில் வைத்து, 10-15 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான வறுத்தரைச்ச சிக்கன் குழம்பு தயார்.

    • ராஜ்மாவில் புரோட்டீன் அதிகம் உள்ளதால், குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.
    • இது சப்பாத்தி, ரொட்டி, நாண், பூரியுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.

    தேவையான பொருட்கள்:

    ராஜ்மா - 1 கப்

    வெங்காயம் - 2

    தக்காளி - 3

    பச்சை மிளகாய் - 1

    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்

    கொத்தமல்லி - சிறிதளவு

    மில்க் க்ரீம் - 2 டேபிள் ஸ்பூன்

    மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

    மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்

    சீரகத் தூள் - 1 டீஸ்பூன்

    சீரகம் - 1 டீஸ்பூன்

    கருப்பு ஏலக்காய் - 3

    கிராம்பு - 3

    உப்பு - சுவைக்கேற்ப

    வெண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்

    செய்முறை:

    * வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * தக்காளியை அரைத்துகொள்ளவும்.

    * ராஜ்மாவை நீரில் 9 மணிநேரம் ஊற வைத்த பின் வேக வைத்து கொள்ளவும்.

    * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து வெண்ணெய் போட்டு உருகியதும் சீரகம், ஏலக்காய், கிராம்பு போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், பச்சை மிளகாயை போட்டு பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.

    * பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து ஒருமுறை கிளறி, அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

    * அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத் தூள் சேர்த்து கிளறிய பின்னர் தேவையான அளவு நீரை ஊற்றி சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, பச்சை வாசனை போக கொதிக்க வைக்க வேண்டும்.

    * அடுத்து வேக வைத்துள்ள ராஜ்மாவை சேர்த்து, கரண்டியால் நன்கு மசித்து விட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

    * கிரேவி கொதிக்க ஆரம்பித்ததும், அதில் மில்க் க்ரீம், சிறிது வெண்ணெய், கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான ராஜ்மா தால் மக்னி தயார்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • இதை சாதத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.
    • தோசை, சப்பாத்திக்கு அருமையாக இருக்கும்.

    தேவையான பொருட்கள்:

    கத்திரிக்காய் - 4

    துவரம் பருப்பு - 1/4 கப்

    மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

    புளி நீர் - 1 கப்

    வெல்லம் - 1 டீஸ்பூன்

    உப்பு - சுவைக்கேற்ப

    வறுத்து அரைப்பதற்கு...

    கடலை பருப்பு - 1/2 டேபிள் ஸ்பூன்

    தனியா - 1 டேபிள் ஸ்பூன்

    வரமிளகாய் - 1

    மிளகு - 1 டேபிள் ஸ்பூன்

    துருவிய தேங்காய் - 1/2 கப்

    தாளிப்பதற்கு...

    நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

    கடுகு - 1 டீஸ்பூன்

    கறிவேப்பிலை - சிறிது

    செய்முறை:

    * கத்தரிக்காயை துண்டுகளாக நறுக்கவும்.

    * துவரம் பருப்பை நன்றாக குழைய வேக வைத்து கொள்ளவும்.

    * வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடலைப் பருப்பு, மல்லி, வரமிளகாய், மிளகு ஆகியவற்றைப் போட்டு நன்கு வறுத்ததும், துருவிய தேங்காயை சேர்த்து பொன்னிறமாக வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.

    * பின்பு வறுத்த பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு, நீர் சேர்த்து நன்கு அரைக்க வேண்டும்.

    * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர் கத்திரிக்காயை சேர்த்து, சிறிது உப்பு தூவி நன்கு வதக்க வேண்டும். வாணலியை மூடி வைத்து நன்கு மென்மையாகும் வரை வேக வைக்க வேண்டும்.

    * கத்திரிக்காய் நன்கு வெந்ததும், அதில் புளி நீர், மஞ்சள் தூள், வெல்லம், வேக வைத்த பருப்பு மற்றும் அரைத்த தேங்காய் விழுது மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, 5 நிமிடம் குறைவான தீயில் புளியின் பச்சை வாசனை போக நன்கு கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான கத்திரிக்காய் ரசவாங்கி தயார்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • இந்த துவையல் தோசை, சப்பாத்திக்கு சிறந்த காம்பினேஷன்.
    • சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும்.

    தேவையான பொருட்கள் :

    சின்ன வெங்காயம் - 200 கிராம்,

    காய்ந்த மிளகாய் - 3,

    உளுத்தம்பருப்பு - 4 டீஸ்பூன்,

    புளி - ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு,

    எண்ணெய் - 4 டீஸ்பூன்,

    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி வைக்கவும்.

    வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பை தனித்தனியா போட்டு வறுக்கவும்

    அடுத்து வெங்காயத்தை சேர்த்து வதக்கி ஆறவைக்கவும்.

    பிறகு, எல்லாவற்றையும் ஒன்றுசேர்த்து, உப்பு, புளி சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.

    இப்போது ருசியான வெங்காய துவையல் ரெடி.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • மாங்காய் சீசன் ஆரம்பித்து விட்டது.
    • மாங்காயில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.

    தேவையான பொருட்கள்:

    மாங்காய் - 2

    கடுகு - 2 தேக்கரண்டி

    உளுந்து - 1 தேக்கரண்டி

    பெருங்காயம் - ½ தேக்கரண்டி

    காய்ந்த மிளகாய் - 3

    பச்சை மிளகாய் - 1

    மஞ்சள் தூள் - ½ தேக்கரண்டி

    மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி

    வெல்லம் - 150 கிராம்

    கறிவேப்பிலை - சிறிதளவு

    நல்லெண்ணெய் - 4 தேக்கரண்டி

    தண்ணீர் - தேவையான அளவு

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    * மாங்காய், ப.மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்

    * ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி, அதில் வெல்லத்தைப் போட்டு கரையும் வரை சூடுபடுத்தவும். பின்பு, அதை வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ளவும்.

    * அடிகனமான வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து, காய்ந்த மிளகாய், நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் பெருங்காயம் போட்டு வதக்கவும்.

    * பின்னர் வெட்டிய மாங்காய் துண்டுகள், மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் கலந்து 5 நிமிடங்கள் வதக்கவும்.

    * பின்பு அதில் வெல்ல தண்ணீர் சேர்த்து கலக்கவும்.

    * கலவை கெட்டியாகும் வரை நன்றாக கிளறவும்.

    * இப்பொழுது சுவையான 'மாங்காய் பச்சடி' தயார்.

    ×