search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீதிமன்றம்"

    • பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது
    • பொதுமக்கள்-வழக்காடிகள் நாளை நடைபெற உள்ள தேசிய மக்கள் நீதிமன்றத்தை தங்கள் வழக்குகளில் சமரசம் செய்வதற்கு பயன்படுத்தி கொள்ளலாம்.

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. இதுகுறித்து மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் பல்கீஸ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களில் நடைபெற்று வரும் வழக்குகளை சமரசமாக பேசி முடித்து கொள்ள அரிய வாய்ப்பாக தேசிய மக்கள் நீதிமன்றம் நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது.

    இந்த மக்கள் நீதிமன்றத்தில் பொதுமக்கள், வழக்காடிகள் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள தங்கள் வழக்குகளை, குறிப்பாக சொத்து வழக்குகள் மற்றும் வங்கி கடனுதவி, தனிநபர் கொடுக்கல்-வாங்கல் சம்பந்தப்பட்ட வழக்குகள் மற்றும் திருமண உறவு தொடர்பான வழக்குகள், குற்றவியல் வழக்குகளில் (சமாதானமாக செய்யக்கூடிய வழக்குகள்) ஆகியவற்றில் தீர்வு கண்டு சமரசமாக தீர்வு பெற ஓர் அரிய வாய்ப்பாக அமைய உள்ளது.

    எனவே, பொதுமக்கள்-வழக்காடிகள் நாளை நடைபெற உள்ள தேசிய மக்கள் நீதிமன்றத்தை தங்கள் வழக்குகளில் சமரசம் செய்வதற்கு பயன்படுத்தி கொள்ளலாம். இது சம்பந்தமாக, நாள்தோறும் சமரச பேச்சுவார்த்தை நடத்த தனித்தனியாக நீதிபதிகள் அமர்வு ஏற்படுத்தப்பட்டு பெரம்பலூர் மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நடைபெற்று வருகிறது.மேலும் விவரங்களுக்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, பெரம்பலூர் அலுவலகத்தை நேரிலோ அல்லது 04328-296206 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

    • நீதிபதி கே.எல்.பிரியங்கா பெருந்துறை நீதிமன்றத்திற்கு மாறுதலாகி செல்கிறார்.
    • வக்கீல்கள் சங்கத்தலைவர் சக்கரவர்த்தி நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.

    சிவகிரி:

    சிவகிரி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதியாக கே.எல்.பிரியங்கா பணிபுரிந்து வந்தார். தற்போது சிவகிரி நீதிமன்றத்தில் இருந்து மாறு தலாகி ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்ற த்திற்கு செல்ல இருப்பதால் அவருக்கு பிரிவு உபசார விழா சிவகிரி நீதிமன்ற அலு வலகத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு வக்கீல்கள் சங்கத்தலைவர் சக்கரவர்த்தி தலைமை தாங்கினார். செயலாளர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் வக்கீல்கள் மருதப்பன், பிச்சையா, கண்ணன், யோக ராஜ், பாலசுப்பிரமணியன், துரைப்பாண்டியன் மற்றும் நீதிமன்ற பணியாளர்கள், அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்கள். பொருளாளர் செந்தில் குமார் நன்றி கூறினார்.

    • பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நீதி வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது.
    • குற்றம் செய்தவர்கள் உடனுக்குடன் தண்டிக்கப்பட வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றவழக்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றை விரைவாக விசாரித்து முடிப்பதற்கு வசதியாக சிறப்பு போக்சோ நீதிமன்றங்கள் போதிய எண்ணிக்கையில் ஏற்படுத்தப்படாதது ஏமாற்றமளிக்கிறது; பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நீதி வழங்க இது உதவாது.

    ஒரு மாவட்டத்தில் 300-க்கும் கூடுதலான 'குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்' குறித்த வழக்குகள் நிலுவையில் இருந்தால், அங்கு இரு சிறப்பு போக்சோ நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் 300-க்கும் கூடுதலான வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில், அங்கு கூடுதல் சிறப்பு போக்சோ நீதிமன்றங்கள் இன்னும் அமைக்கப்படவில்லை.

    தருமபுரி, திண்டுக்கல், தேனி, திருவள்ளூர் மாவட்டங்களில் சிறப்பு போக்சோ நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று கடந்த 2021-ம் ஆண்டில் தமிழ்நாடு அரசு அறிவித்தது. ஆனால், அதன் பின் இரு ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில் இன்று வரை அந்த நீதிமன்றங்கள் அமைக்கப்படவில்லை. இதனால் அந்த மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நீதி வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது.

    குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட மனித மிருகங்கள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும்; அப்போது தான் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைச் செய்ய மற்றவர்கள் அஞ்சுவார்கள் என்ற தத்துவத்தின் அடிப்படையில் தான் வழக்குகளை விரைந்து விசாரிக்க வசதியாக சிறப்பு போக்சோ நீதிமன்றங்கள் அமைக்கப்படுகின்றன. ஆனால், அதை புரிந்து கொள்ளாமல் சி்றப்பு நீதிமன்றங்களை அமைக்க தாமதிப்பது சரியல்ல. இது குற்றவாளிகள் தப்பிக்கவும், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பெருகுவதற்கும் மட்டுமே வகை செய்யும்.

    தமிழ்நாடு குழந்தைகளுக்கு பாதுகாப்பான மாநிலமாக மாற வேண்டும். இந்த இலக்கை எட்ட வேண்டுமானால், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறைய வேண்டும்; குற்றம் செய்தவர்கள் உடனுக்குடன் தண்டிக்கப்பட வேண்டும். அதற்கு வசதியாக அனைத்து மாவட்டங்களிலும் போதிய எண்ணிக்கையில் சிறப்பு போக்சோ நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • பொன்னமராவதியில் நீதிமன்ற கட்டிடம் திறக்கபட்டுள்ளது
    • நீதிமன்றத்தை பேரூராட்சித்தலைவர் ரிப்பன் வெட்டி தொடங்கிவைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்

    பொன்னமராவதி

    பொன்னமராவதியில் நீதிமன்றம் அமைக்க பல ஆண்டுகளாக கோரிக்கை எழுந்து வந்தது. இதன் காரணமாக தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி அதற்கான பணிகளை விரைவுபடுத்தி வந்தார். இதனை தொடர்ந்து பொன்னமராவதி மாவட்ட உரிமையியல் நீதிமன்ற தொடக்கவிழா நேற்று நடைபெற்றது. பொன்னமராவதி பேரூராட்சி அலுவலகம் எதிரே உள்ள சமுதாயக்கூடத்தில் அமைக்கப்பட்டுள்ள நீதிமன்றத்தை பேரூராட்சித்தலைவர் ரிப்பன் வெட்டி தொடங்கிவைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இதில் பொன்னமராவதி பேரூராட்சி செயல் அலுவலர் மு.செ.கணேசன், வட்டாட்சியர் பிரகாஷ், வார்டு உறுப்பினர் ராமநாதன், வழக்கறிஞர்கள் குமார், ராதா கிருஷ்ணன், சிரிதர் மற்றும் நீதிமன்ற பணியாளர்கள் பங்கேற்றனர்.


    • கறம்பக்குடியில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் திறக்கப்பட்டது
    • நீதிமன்றத்தை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி முன்னிலையில் ஐகோர்ட் தலைமை நீதிபதி ( பொறுப்பு) நீதியரசர் ராஜா திறந்து வைத்தார்.

    கறம்பக்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா 39 ஊராட்சிகளை உள்ளடக்கிய தாலுகாவாகும். இங்கு நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்தனர். இந்தக் கோரிக்கையை ஏற்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அதற்கான பணிகளை செய்திட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்நிலையில் புதுக்கோட்டையில் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் கறம்பக்குடி மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி முன்னிலையில் ஐகோர்ட் தலைமை நீதிபதி ( பொறுப்பு) நீதியரசர் ராஜா திறந்து வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு, திருச்சி விமான நிலைய ஆலோசனை குழு உறுப்பினரும் முன்னாள் அரசு வழக்கறிஞருமான கே.கே.செல்லபாண்டியன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே, சட்டமன்ற உறுப்பினர்கள், புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிபதி மற்றும் நீதிபதிகள், வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் தவ பாஞ்சாலன், கறம்பக்குடி ஒன்றிய பெருந்தலைவர் மாலா ராஜேந்திர துரை மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். புதுக்கோட்டையில் நீதிமன்றத்தை திறக்கும் பொழுது கறம்பக்குடியில் உள்ள நீதிமன்றத்தில் கறம்பக்குடி பேரூராட்சி தலைவர் முருகேசன் தலைமையில் ஆத்மா கமிட்டி சேர்மன் முத்துகிருஷ்ணன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் ஆகியோர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

    • 190 வழக்குகள் தீர்வு காணப்பட்டது
    • மாவட்ட நீதிபதி தலைமையில் நடைபெற்றது

    அரியலூர்,

    அரியலூர் மாவட்ட சட்டபணிகள் அணைக்குழு சார்பில் அரியலூர், செந்துறை, ஜெயங்கொண்டம் ஆகிய நீதிமன்றங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. அரியலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழு தலைவருமான மகாலெட்சுமி தலைமையில் நடைபெற்றது. இதில் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி சரவணன், சட்டபணிகள் ஆணைக்குழு செயலாளர் மூத்த சிவில் நீதிபதி அழகேசன், நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி அறிவு, ஜெயங்கொண்டத்தில் சார பு நீதிபதி லதா, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி கணேஷ்நீதித்துறை நடுவர் நீதிபதி ராஜசேகர் ஓய்வுபெற்ற நீதிபதி முத்துகிருஷ் ணன், நிர்வாக அலுவலர் வெள்ளைச்சாமி ஆகியோர் கலந்துகொண்டனர். தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2 சிவில் வழக்கு, 6 மோட்டார் வாகன விபத்து வழக்கு, 111 வங்கி வழக்கு, 71 நிலம் கையகப்படுத்திய வழக்கு ஆக மொத்தம் 190 வழக்குகள் தீர்வு காணப்பட்டது.

    • 17 வழக்குகள் சமரச தீர்வு
    • பெரம்பலூரில் மக்கள் நீதி மன்றம் நடைபெற்றது

    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்திற்கு ஒருங்கிணைந்த கோர்ட்டில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமமான பல்கீஸ் தலைமை வகித்தார். மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சப்-கோர்ட் நீதிபதியுமான அண்ணாமலை முன்னிலை வகித்தார்.

    இதில் மகிளா கோர்ட் நீதிபதி முத்துகுமரவேல், குற்றவியல் கோர்ட் நீதிபதி சங்கீதா ஆகியோர் கொண்ட அமர்வு அனைத்து கோர்ட்டுகளிலும் நிலுவையிலுள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொண்டு விசாரணை நடத்தி தீர்வு கண்டனர். இதில் ரூ.35 லட்சத்து 56 ஆயிரத் மதிப்பிலான 17 வழக்குகள் தீர்வு காணப்பட்டன. இதையடுத்து மோட்டர் வாகன விபத்து வழக்கில் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தாருக்கு சமரச தீர்வுக்கான சான்று வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் வக்கீல்கள், போலீசார், கோர்ட் பணியாளர்கள் மற்றும் வழக்கு தாரர்கள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • 17 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது
    • ரூ.35.56 லட்சம் நஷ்டஈடு பெற்ற தரப்பட்டது

    பெரம்பலூர்

    உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுக்களின் வழிகாட்டுதலின் பேரில், பெரம்பலூரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான பல்கீஸ் தலைமையிலும், மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான (பொறுப்பு) அண்ணாமலை முன்னிலையிலும் இந்த மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் மகிளா நீதிமன்ற அமர்வு நீதிபதி முத்துகுமரவேல், குற்றவியல் நீதித்துறை நடுவர் சங்கீதா சேகர் ஆகியோர்களை கொண்டு ஒரே அமர்வாக அமைக்கப்பட்டு, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள 81 மோட்டார் வாகன விபத்து வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. இதில் 17 வழக்குகளுக்கு ரூ.35 லட்சத்து 56 ஆயிரத்து 500-க்கு தீர்வு காணப்பட்டது. தீர்வு காணப்பட்ட மோட்டார் வாகன விபத்து வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு நீதிபதி பல்கீஸ் உத்தரவு சான்றினை வழங்கினார். இதில் அட்வகேட் அசோசியேசன் தலைவர் மணிவண்ணன் மற்றும் திருநாவுக்கரசு, அருணன் உள்ளிட்ட வக்கீல்கள், போலீசார், நீதிமன்ற பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு பணியாளர்கள் மற்றும் சட்ட தன்னார்வலர்கள் செய்திருந்தனர்.

    • 30 வழக்குகள் சமரசம்
    • பலருக்கு இழப்பீடாக ரூ.1.63 கோடி பெற்றுத்தரப்பட்டது

    குளித்தலை, 

    குளித்தலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் குளித்தலை வட்ட சட்டம் பணிகள் குழு நடத்தும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. சார்பு நீதிபதி சண்முககனி, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி பிரகதீஸ்வரன் ஆகியோர்கள் தலைமையில் நடைபெற்றது, தேசிய மக்கள் நீதிமன்றத்தில் குடும்ப நலம், வாகன விபத்துக்கள் இழப்பீடு வழக்கு, என நிலுவையில் உள்ள 100க்கும் மேற்பட்ட வழக்குகள் எடுக்கப்பட்டு இதில் 30 மோட்டார் வாகன விபத்துகள் இழப்பீடு வழக்குகளுக்கு சம்பந்தப்பட்டவர்களிடம் சமரசம் பேசி முடித்து வைக்கப்பட்டது. இதில் இழப்பீட்டு தொகையாக 1 கோடியே 63 லட்சத்து 33 ஆயிரம் ருபாய் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெற்று தரப்பட்டது. இதில் மோட்டார் வாகன விபத்து வழக்கறிஞர்கள் கார்த்திகேயன், நிகில்அரவிந்த், மதியழகன், செந்தில்குமார், அரசகுமார், திராவிடமணி மற்றும் வழக்கறிஞர்கள், காப்பீடு நிறுவன அதிகாரிகள், நீதிமன்ற பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சேந்தமங்கலம், ப.வேலூர், திருச்செங்கோடு, ராசிபுரம் உள்ளிட்ட கோர்ட்டுகளிலும் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
    • சாலை விபத்துகள், வங்கி காசோலை வழக்குகள், கல்விக் கடன் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் சமரசம் மூலம் செய்து தீர்வு செய்யப்பட்டன.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெற்றது. மாவட்ட முதன்மை நீதிபதி குணசேகரன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். நீதிமன்றத்தில், குடும்ப நலநீதிபதி முனுசாமி, கூடுதல் மாவட்ட நீதிபதி சுந்தரையா, தலைமை குற்றவியல் நீதிபதி வடிவேல், கூடுதல் சார்பு நீதிபதி ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பல்வேறு நீதிபதிகள் கலந்துகொண்டு, நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரணை செய்தனர். சாலை விபத்துகள், வங்கி காசோலை வழக்குகள், கல்விக் கடன் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் சமரசம் மூலம் செய்து தீர்வு செய்யப்பட்டன.

    இதில் ராசிபுரம், கோனே ரிப்பட்டியைச் சேர்ந்த, கவிதா என்பவர், அவரது 3 சக்கர வாகனத்தில் கடந்த 18.2.2012 ல் அன்று நாமக்கல்லில் இருந்து ராசிபுரம் செல்லும் போது, கருங்கல்பாளையம் அருகே ரோட்டில் சென்றபோது, போது அவ்வழியாக வந்த லாரி மோதி ஏற்பட்ட விபத்தில், அவரது இடது கால் துண்டிக்கப்பட்டது. இதற்காக தொடரப்பட்ட வழக்கு, மக்கள் நீதிமன்றத்தல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, அவருக்கு, ரூ17.66 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சேந்தமங்கலம், ப.வேலூர், திருச்செங்கோடு, ராசிபுரம் உள்ளிட்ட கோர்ட்டுகளிலும் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இந்த தேசிய அளவிலான மக்கள் நீதிமன்ற ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைகுழு செயலாளர் விஜய்கார்த்திக் செய்திருந்தார்.

    • இவரது மகன் கடந்த ஆண்டு சாலை விபத்தில் இறந்தார்.
    • அப்போது நீதிபதி முன்னிலையில் முத்து லட்சுமி திடீர் என மயங்கி விழுந்தார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிம ன்றத்தில் மாவட்ட சட்டப்ப ணிகள் ஆணை குழு சார்பில் இன்று மக்கள் நீதிமன்றம் நடந்தது. இதில் 3,336 வழக்குகள் எடுத்து கொள்ளப்பட்டது. இவற்றில் இன்று காலை 9 மணி வரை 183 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன்மூலம் ரூ. 5 கோடியே 55 லட்சத்து 51 ஆயிரம் வழங்கப்பட்டது.இந்த மக்கள் நீதிம ன்றத்துக்கு விக்கிர வாண்டி அருகே உள்ள பாப்பன ம்பட்டு கிராமத்தை சேர்ந்த முத்துலட்சுமி வந்திருந்தார். இவரது மகன் கடந்த ஆண்டு சாலை விபத்தில் இறந்தார்.

    இதற்கு தீர்வு காண்பதற்கு முத்துலட்சுமி வந்தார். இந்த வழக்கினை மாவட்ட முதன்மை நீதிபதி செல்வி பூர்ணிமா விசாரித்து கொண்டிருந்தார்அப்போது நீதிபதி முன்னிலையில் முத்து லட்சுமி திடீர் என மயங்கி விழுந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்ப ட்டது. உடனே முத்து லட்சுமிக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பின்னர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்டார்.

    • ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இன்று காலை தேசிய மக்கள் நீதிமன்றம் கூடியது.
    • சமரச நீதிமன்றம் மூலம் வழக்குகள் விரைந்து முடிக்கப்படுகிறது. இதனால் நீதிமன்ற கட்டணம் உடனே திருப்பி வழங்கப்படுகிறது. இது தவிர நேரம் மீதமாகிறது.

    சேலம்:

    சேலம் அஸ்தம்பட்டி அருகே உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இன்று காலை தேசிய மக்கள் நீதிமன்றம் கூடியது. இதனை தொழிலாளர் நல நீதிமன்ற நீதிபதி எஸ்.சுமதி தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் பேசியதாவது, சமரச நீதிமன்றம் மூலம் வழக்குகள் விரைந்து முடிக்கப்படுகிறது. இதனால் நீதிமன்ற கட்டணம் உடனே திருப்பி வழங்கப்படுகிறது. இது தவிர நேரம் மீதமாகிறது.

    சமரச நீதிமன்றம் மூலம் தீர்வு காணப்பட்ட வழக்குகளுக்கு மேல்முறையீடு செய்ய முடியாது. சமரச மையம் மூலம் தீர்வு காண்பவர்கள் உறவினர்களிடமும், பொதுமக்களிடமும், விளக்கி இம்மையம் மூலம் தீர்வு காண உதவிட வேண்டும். இதேபோல் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வழக்கறிஞர்கள் உதவிட வேண்டும். இவ்வாறு நீதிபதி சுமதி பேசினார்.

    சேலத்தைச் சேர்ந்த பார்த்திபன் என்பவர் கடந்த 2017-ம் ஆண்டு கார் மோதி தலை மற்றும் உடல் முழுவதும் பலத்த படுகாயம் அடைந்தார். சிகிச்சை பின் குணமடைந்த அவர், சமரச தீர்வு மையம் மூலம் வழக்கு தொடர்ந்தார்.

    இதனை நீதிபதிகள் விசாரித்து படுகாயம் அடைந்த பார்த்திபனுக்கு ரூ.52 லட்சத்து 78 ஆயிரத்து 642 நஷ்ட ஈடு தொகை வழங்க உத்தரவிட்டனர். பார்த்திபனுக்காக வழக்கறிஞர் ரகுபதி வாதாடினார்.

    இதற்கான காசோலையை, இன்று நீதிபதிகள் பார்த்தீபனிடம் வழங்கினர். இதேபோல் ராணி என்பவரின் மகன் விபத்தில் இறந்துவிட்டார். இதனையடுத்து ராணிக்கு ரூ.12 லட்சத்து 50 ஆயிரத்திற்கான காசோலை இன்று வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் நீதிபதிகள் ஜெகநாதன், தங்கராஜ், ஸ்ரீ ராம ஜெயம், மதிவாணன் மற்றும் வழக்கறிஞர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். 

    ×