search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 225656"

    • கோவிலுக்கு வரும் பக்தா்கள் மீன்களுக்கு பொரி உள்ளிட்ட உணவு பொருள்களை அளிப்பது வழக்கம்.
    • கோவில் நிா்வாகத்தின் அலட்சியத்தாலே மீன்கள் உயிரிழந்து மிதந்தாக பக்தா்கள் தெரிவித்தனா்.

    அவினாசி :

    அவிநாசியில் கருணாம்பிகையம்மன் உடனமா் அவிநாசிலிங்கேஸ்வரா் கோவில் உள்ளது. இக்கோவிலில் பழமையான தெப்பக்குளம் உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தா்கள், தெப்பக்குளத்தில் உள்ள மீன்களுக்கு பொரி உள்ளிட்ட உணவுப்பொருள்களை அளிப்பது வழக்கம்.

    இந்தநிலையில், புதன்கிழமை காலை, கோவில் தெப்பக்குளத்தில் மீன்கள் உயிரிழந்து மிதந்தன. இதையடுத்து, கோவில் நிா்வாகத்தினா் உயிரிழந்த மீன்களை அப்புறப்படுத்தினா். கோவில் நிா்வாகத்தின் அலட்சியத்தாலே தெப்பக்குளத்தில் இருந்த மீன்கள் உயிரிழந்து மிதந்தாக பக்தா்கள் தெரிவித்தனா். 

    • கோட்டியால் நல்ல தண்ணீர் ஏரியில் மீன்கள் செத்து மிதந்தன
    • இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது.

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கோட்டியால் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்பு உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள நல்ல தண்ணி ஏரி, கிராமத்தின் பெரும்பகுதி தண்ணீர் தேவையை தீர்த்து வருகிறது. ஊராட்சி சார்பில் மேல்நிலைத் நிறுத்திய தொட்டி மூலம் தண்ணீர் வினியோகம் நடைபெற்று வருகிறது. மேலும் கால்நடைகளுக்கான தண்ணீர் தேவைகள், மனிதர்கள் மற்றும் கால்நடைகளுக்கு குளிப்பது உள்ளிட்ட தேவைகளுக்கு கோட்டியால் கிராம மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.

    இந்த ஏரியில் கடந்த சில மாதங்களாக மர்மமான முறையில் மீன்கள் செத்து மிதக்க துவங்கின. இது குறித்து ஊராட்சி மன்ற நிர்வாகத்தினருக்கு, அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து ஏரியில் உள்ள தண்ணீரை வெளியேற்றி ஏரியை முழுவதும் தூர் வாரி தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் ஏரியிலிருந்து தண்ணீர் வெளியேற்றும் பணி நிறுத்தப்பட்டது.தற்போது நாள்தோறும் ஆயிரக்கணக்கான மீன்கள் குவியல் குவியலாக செத்து கரை ஒதுங்கி மிதக்கிறது.

    இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. ஏரியிலிருந்து செத்து மிதக்கும் மீன்களை பறவைகள் ஏரியிலிருந்து கொத்தி சென்று அருகில் உள்ள வீடுகளின் கூரைகள் மொட்டை மாடி தண்ணீர் தொட்டிகள் உள்ளிட்டவற்றில் போடுகின்றன. இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் செத்து மிதக்கும் மீன்களை அப்புறப்படுத்தி கிராமத்தின் சுகாதாரத்தை உறுதி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் மண்ணின் தன்மை மாறியதால், தண்ணீரில் விஷத்தன்மை ஏற்பட்டதா? அல்லது ஏதாவது விஷமிகளின் செயலா ? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்திட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    • நான் வெயிலில் சென்று மீன் விற்க வேண்டாம் என்று கருதி எனது மகன் எனக்கு கார் வாங்கி கொடுத்துள்ளார்.
    • வேலை பார்ப்பதற்காக மகன் கார் வாங்கி கொடுத்திருக்கும் சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் அருகே உள்ள அச்சுந்தன்வயல் பகுதியை சேர்ந்தவர் சிவானந்தம்(வயது60). இவரது மனைவி காளியம்மாள்(55). இவர்களுக்கு சுரேஷ் கண்ணன் என்ற மகனும், 2 மகள்களும் உள்ளனர்.

    சிவானந்தமும், அவரது மனைவியும் ஊரணி மற்றும் கண்மாயில் மீன் பிடித்து விற்பனை செய்து தங்களது பிள்ளைகளை படிக்க வைத்தனர். வறுமை காரணமாக தங்குவதற்கு கூட இடமில்லாமல் தவித்த சிவானந்தம், தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் கீழக்கரையில் ஒருவரது விவசாய நிலத்தில் தங்கியிருந்தார்.

    தங்களது கஷ்டத்தை பற்றி கவலைப்படாமல் பிள்ளைகளை நன்கு படிக்க வைத்தனர். இதனால் சிவானந்தத்தின் மகன் சுரேஷ் கண்ணன் மரைன் என்ஜினீயரிங் படித்து முடித்தார். அவர் தற்போது வளைகுடா பகுதியில் உள்ள கப்பல் நிறுவனத்தில் மாதம் ரூ.2 லட்சம் ஊதியத்தில் என்ஜினீயராக பணி புரிந்து வருகிறார்.

    அதன்மூலம் தனது சகோதரிகளுக்கு திருமணம் செய்து வைத்த சுரேஷ் கண்ணன், வீடு இல்லாமல் தவித்த பெற்றோருக்கு புதிதாக வீடும் கட்டி கொடுத்துள்ளார். மேலும் தனது தாய்-தந்தையை வேலைக்கு செல்ல வேண்டாம் எனவும் கூறியிருக்கிறார். ஆனால் உழைத்து சாப்பிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த சிவானந்தம் மற்றும் அவரது மனைவி தொடர்ந்து மீன் விற்பனையில் ஈடுபட்டு வந்தனர்.

    வயதான காலத்திலும் உழைக்கும் தங்களின் தாய்-தந்தையின் கஷ்டத்தை குறைக்கும் வகையிலும், அவர்கள் எளிதாக மீன் விற்பனை செய்வதற்காகவும் ரூ.25 லட்சம் மதிப்புள்ள காரை சுரேஷ் கண்ணன் வாங்கி கொடுத்துள்ளார். அந்த காரிலேயே தற்போது சிவானந்தம் மீன்களை எடுத்து சென்று வியாபாரம் செய்து வருகிறார்.

    மீன் விற்பனை எங்களது குடும்ப தொழில். எனக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் மீன் விற்க செல்லாமல், வீட்டிலேயே இருக்குமாறு எனது மகன் கூறினார். ஆனால் கடைசி வரை தொழிலை விடாமல் உழைக்க வேண்டும் என்பதே எனது எண்ணமாகும்.

    நான் வெயிலில் சென்று மீன் விற்க வேண்டாம் என்று கருதி எனது மகன் எனக்கு கார் வாங்கி கொடுத்துள்ளார். அந்த காரிலேயே மீன்களை ஏற்றி கொண்டு சென்று விற்பனை செய்து வருகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வறுமை நிலையிலும் கடினமாக உழைத்து படிக்க வைத்து ஆளாக்கிய தாய்-தந்தையின் வலியை உணர்ந்து, அவர்கள் எளிதாக சென்று வேலை பார்ப்பதற்காக மகன் சொகுசு கார் வாங்கி கொடுத்திருக்கும் சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

    • கடந்த ஏப்ரல் மாதத்தில் மீன் பிடி தடைக்காலம் துவங்கியதால் கடல் மீன்கள் வரத்து வெகுவாக குறைந்துள்ளது.
    • 10 டன் மீன்கள் மட்டுமே வந்தது.

    பல்லடம் :

    மீன்பிடி தடைக்காலம் உள்ளதால் மீன்கள் வரத்து குறைவால், மீன்களின் விலை உயர்ந்துள்ளதாக மீன் கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர். இது குறித்து பல்லடம் மீன் கடை உரிமையாளர் கனகசெல்வம் கூறியதாவது:- கடந்த ஏப்ரல் மாதத்தில் மீன் பிடி தடைக்காலம் துவங்கியதால் கடல் மீன்கள் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. டேம் மீன்கள் மட்டுமே சப்ளையாகி வருகிறது. வழக்கமாக பல்லடம் மீன் மார்க்கெட்டிற்கு 15 முதல் 20 டன் வரை மீன்கள் வரும். தற்போது 10டன் மீன்கள் மட்டுமே வந்தது. இதனாலும் மீன்கள் விலை உயர்ந்து உள்ளது. உதாரணமாக சென்ற வாரத்தில் கிலோ 600 ரூபாய்க்கு விற்ற வஞ்சிரம் மீன் தற்போது 800 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

    250 ரூபாய்க்கு விற்ற இறால் மீன் 350 ரூபாய்க்கும், 260 ரூபாய்க்கு விற்ற நண்டு 360 ரூபாய்க்கும் விற்பனையானது. மீன்கள் விலை உயர்வால் பொதுமக்கள் குறைந்த அளவே மீன்களை வாங்கினர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • ஜூன் 1-ந் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு ஜூலை 30-ந்தேதி வரையிலான காலம் பாசன ஆண்டாக கணக்கிடப்படுகிறது.
    • கடல் போன்ற பிரம்மாண்டமான நீர் பரப்பில் விடப்படும் மீன் குஞ்சுகள் பெரிய அளவிலான மீன்களாக சில மாதங்களில் வளர்ச்சியடைந்து, ஆண்டு முழுவதும் மீனவர்களுக்கு கிடைத்துவருகிறது.

    தமிழகத்தில் 12 மாவட்டங்களின் பாசனத்துக்கான நீரை வழங்கி, விவசாயிகளுக்கு வாழ்வாதாரமாக திகழ்வது மேட்டூர் அணை. இந்த அணை மீன் உற்பத்தி மூலமாக, மீனவர்கள் பல ஆயிரம் பேருக்கு வாழ்வளித்து வருகிறது. மேட்டூர் அணை மீன்களுக்கு சுவை அதிகம். கர்நாடகாவுடன் குடகுவில் உற்பத்தியாகும் காவிரி ஒகேனக்கல் வழியாக பல அற்புதமான மூலிகைகளை கடந்து மேட்டூர் அணைக்கு வருகிறது. இந்த மூலிகை நிறைந்த நீரில் வளரும் மீன்கள் என்பதால் மேட்டூர் அணை மீன்களுக்கு இயல்பாகவே ருசி அதிகமாக உள்ளது.

    ஒவ்வோர் ஆண்டும் ஜூன் மாதத்தில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும். இதனைப் பயன்படுத்தி மேட்டூர் மீன் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் அலுவலகம் மூலமாக அணையில் மீன் குஞ்சுகள் விடப்படும். இதை மீன் விதைப்பு என்பார்கள்.

    ஜூன் 1-ந் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு ஜூலை 30-ந்தேதி வரையிலான காலம் பாசன ஆண்டாக கணக்கிடப்படுகிறது. மேட்டூர் அணையின் நீர் தேக்கப்பரப்பு 53 சதுர மைல் கொண்டது. அது மட்டுமல்ல, அணையின் நீர் மட்டம் முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டும்போது, அணையில் தேங்கும் நீரானது அடிபாலாறு தொடங்கி காவிரியில் ஒகேனக்கல் வரையிலும் தேங்கி நிற்கும்.

    எனவே, கடல் போன்ற பிரம்மாண்டமான நீர் பரப்பில் விடப்படும் மீன் குஞ்சுகள் பெரிய அளவிலான மீன்களாக சில மாதங்களில் வளர்ச்சியடைந்து, ஆண்டு முழுவதும் மீனவர்களுக்கு கிடைத்துவருகிறது.

    காவிரி ஆறு வனப்பகுதி வழியாக பாய்ந்து வருவதால், இயற்கையாகவே அதில் மீன்களுக்கு தேவையான சத்துகள், உணவுகள் இருக்கும். காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் முன்னர் மேட்டூர் அணையின் கரையோரங்கள், காவிரி கரையோரங்களில் கிராம மக்கள் கம்பு, கேழ்வரகு, சோளம், நிலக்கடலை உட்பட பல்வேறு பயிர்களை பல நூறு ஏக்கருக்கு மேல் நடவு செய்திருப்பர்.

    காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்படும்போது, உடனடியாக, பயிர்களை அறுவடை செய்துவிடுவர். அந்த அறுவடை எச்சங்கள் அணை நீரில் மூழ்கிவிடும்போது, அவை மீன்களுக்கு மிகச்சிறந்த உணவாக அமைந்து விடுகிறது.

    எனவே, மேட்டூர் அணையில் மீன்கள் செழித்து வளருவதுடன், சுவையானவையாகவும் இருக்கின்றன. குறிப்பாக, தமிழகத்திலேயே சுவை மிகுந்த மீன்கள் கிடைப்பது மேட்டூர் அணையில்தான். எனவே, மேட்டூர் அணையில் பிடிக்கப்படும் மீன்களை தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா என அண்டை மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கிச் செல்வர்.

    மீன்பிடி தொழில் அணையில் மீன் பிடிக்கும் மீனவர்களுக்கு மட்டுமல்லாது, தருமபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர் மாவட்டம் வரை காவிரி கரையோர மீனவர்களுக்கு வாழ்வாதாரத்தைக் கொடுத்து வருகிறது.

    இந்த சுவையான மீன்கள் மேட்டூர் எம்.எல்.ஏ. சதாசிவம் முயற்சியால் சமீபத்தில் தமிழக சட்டசபைக்கும் சென்றன என்பது குறிப்பிடத்தக்கது. எம்.எல்.ஏ.க்கள் மேட்டூர் அணை மீன் உணவை சுவைத்து சாப்பிட்டனர். தற்போது இந்த மீன்கள் கேரளாவுக்கும் செல்கின்றன.

    மேட்டூரில் செயல்பட்டு வரும் அரசு மீன் குஞ்சு உற்பத்தி, வளர்ப்புப் பண்ணையில், கட்லா, ரோகு, மிர்கால், சாதா கெண்டை உள்ளிட்ட மீன்களின் வளத்தை பெருக்கும் வகையில் மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை ஆண்டுதோறும் ஜூலை தொடங்கி, அடுத்த ஆண்டு ஜூன் வரை சீரான இடைவெளியில் மேட்டூர் அணையில் விடப் படுகின்றன.

    அதேபோல, ஒவ்வொரு மாவட்டத்தின் மீன் வளத்துறைக்கும், அண்டை மாநிலத்துக்கும் மீன் குஞ்சுகள் வழங்கப்படுகின்றன. தற்போது, மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்து வழங்கப்பட்டு வருகின்றன. இது குறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    கட்லா, ரோகு, மிர்கால், சாதா கெண்டை உள்ளிட்ட மீன்கள் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் இன முதிர்ச்சியடைந்து இனப்பெருக்கம் செய்யும். அப்போது, மீன் குஞ்சுகளை கண்டறிந்து சேகரித்து வழங்குவதில் சிக்கல் உள்ளது. இதனால் தூண்டுதல் முறையில் மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தாய், தந்தை மீன்களை வளர்த்து ஊசி மூலம் ஹார்மோன் செலுத்தப்படுகிறது.

    பின்னர், 4-வது நாளில் நுண் மீன் குஞ்சுகள் சேகரிக்கப்பட்டு, 1 மாதத்துக்கு விரலிகளாக வளர்க்கப்படுகின்றன. 15 முதல் 17 நாட்களில் இள மீன் குஞ்சுகளாகவும் உற்பத்தி செய்யப்படுகின்றன.

    கேராளவில் மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்ய தேவையான வசதிகள், இடங்கள் இல்லாததால் மேட்டூர் அரசு மின் குஞ்சு உற்பத்தி, வளர்ப்புப் பண்ணையில் ஆண்டு தோறும் குறிப்பிட்ட இடைவெளியில் வாங்கிச் செல்கின்றனர். அதன்படி, 15 லட்சம் கட்லா, ரோகு, மிர்கால் நுண்மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்து கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

    வேலூர் மாவட்டத்துக்கு 6 லட்சம் நுண் குஞ்சுகள், 1.52 லட்சம் இள மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்து அனுப்பி வைக்கப்பட்டன என்றனர். 

    • மின் நிலைய பராமரிப்புக்காக தேக்கி வைக்கப்பட்டிருந்த தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
    • காவிரி ஆற்றில் சிறிய வகை மீன் குஞ்சுகள் ஏராளமாக செத்து மிதந்தன.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த செக்கானூர் பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை மின்நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் கதவனை மின் நிலையத்தில் தேக்கி வைக்கப்பட்டிருந்த தண்ணீர் முழுமையாக வெளியேற்றப்பட்டது.

    இதனால் காவிரி ஆற்றில் சிறிய வகை மீன் குஞ்சுகள் ஏராளமாக செத்து மிதந்தன. இதனைக் கண்ட அந்த கிராம மக்கள் மீன்குஞ்சுகளை குவியலாக அள்ளிச் சென்றனர். ஒரு சிலர் மீன் குஞ்சுகளை ஆற்றங்கரையில் உள்ள பாறைகளில் காய வைத்து கருவாடாக மாற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். 

    • பாதுகாப்பு கருதி விசைப்படகுகள், பைபர் வள்ளங்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லாது
    • மணற்பரப்பில் விழுந்து செல்லும் அலை வெள்ளம் மணற்பரப்பை அடித்து செல்கிறது

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டத்தில் ஜூன், ஜூலை மாதங்களில் கடல் சீற்றமாக காணப்படும். ராட்சத அலைகள் எழுந்து மணற்பரப்பு வரை விழும். அதனால் பாதுகாப்பு கருதி விசைப்படகுகள், பைபர் வள்ளங்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லாது. கடந்த சில நாட்களுக்கு முன்பு குளச்சல் கடல் பகுதியில் பலத்த காற்று வீசியதால ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற விசைப்படகுகள் கரை திரும்பின. இதனால் மீன் பிடித்தொழில் பாதிக்கப்பட்டது.

    தற்போது காற்று சற்று தணிந்த நிலையில் மீண்டும் விசைப்படகுகள் மீன் பிடிக்க சென்றன. வழக்கம்போல் குறைந்த அளவே பைப்பர் வள்ளங்கள் மீன் பிடித்து வருகின்றன. இந்நிலையில் இன்று காலை குளச்சல் கடல் பகுதியில் கடல் திடீர் சீற்றமாக இருந்து வருகிறது. ராட்சத அலைகள் எழுந்து மணற்பரப்பு வரை விழுந்து செல்கிறது. மணற்பரப்பில் விழுந்து செல்லும் அலை வெள்ளம் மணற்பரப்பை அடித்து செல்கிறது. இதனால் அங்கு கடலரிப்பு ஏற்பட்டுள்ளது.

    குளச்சல், கொட்டில்பாடு சுற்றுவட்டார பகுதிகளில் கடல் சீற்றத்தால் கடல் அரிப்பும் ஏற்பட்டுள்ளது. இதனால் மணற்பரப்பில் நிறுத்தப்பட்ட பைபர் வள்ளங்கள் பாதுகாப்பாக வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால் விசைப்படகுகள், பைபர் வள்ளங்கள் வழக்கம்போல் மீன் பிடிக்க சென்றன. அவற்றுள் குறைந்தளவு மீன்களே கிடைத்தன. கிடைத்த மீன்களை மீனவர்கள் ஏலக்கூடத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்தனர்.

    • மாயனுார் கதவணை அருகில் மீன்கள் விற்பனை மும்முரமாக இருந்தது
    • தற்போது காவிரி ஆற்றில் தண்ணீர் வரு வதால், புதிய மீன்கள் வரத்து உள்ளது

    கரூர்:

    கிருஷ்ணராயபுரம் அடுத்த, மாயனூர் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப் பட்டுள்ளது. இங்கு காவிரி நீர் சேமிக்கப்படுகிறது. இந்த தண்ணீரில் மீன்கள் வளர்க்கப்படுகின்றன. மீனவர்கள் பரிசலில் சென்று மீன்களை பிடித்து வந்து, வாய்க்கால் கரையில் வைத்து விற்பனை செய்து வருகின்றனர். தற்போது காவிரி ஆற்றில் தண்ணீர் வருவதால், புதிய மீன்கள் வரத்து உள்ளது. ஜிலேப்பி மீன்கள் கிலோ ஒன்று 150 ரூபாய், கெண்டை மீன் 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கரூர், குளித்தலை, லாலாப் பேட்டை, திருக்காம்புலியூர், சேங்கல், புலியூர் இடங்களில் இருந்து வந்த மக்கள் மீன்களை வாங்கி சென்றனர், நேற்ற, 400 கிலோ மீன்கள் விற்கப்பட்டன.


    • மாயனுார் கதவணையில் மீன்கள் விற்பனை ஜோராக நடைபெற்றது
    • நேற்று மட்டும், 350 கிலோ வரை மீன்கள் விற்கப்பட்டன.

    கரூர்:

    கிருஷ்ணராயபுரம் அடுத்த மாயனூர் காவிரியாற்றின் குறுக்கே கதவணை கட்டப் பட்டுள்ளது. இந்த கதவணையில் தண்ணீர் சேமிக்கப்பட்டு, மீன்கள் வளர்க்கப்படுகிறது. வளர்க்கப்படும் மீன்களை உள்ளூர் மீனவர்கள் பரிசலில் சென்று வலைகளை விரித்து பிடித்துக் கொண்டு வந்து வாய்க்கால் கரையில் வைத்து விற்பனை செய்து வருகின்றனர். தற்போது மீன்கள் வரத்து சீராக இருப்பதால் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது. ஜிலேபி மீன் கிலோ, 140 ரூபாய், கெண்டை மீன் 110 ரூபாய், விறால் மீன் 650 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. நேற்று மட்டும், 350 கிலோ வரை மீன்கள் விற்கப்பட்டன. மீன்களை வாங்க கரூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம், மாயனூர், மணவாசி, சேங்கல், பஞ்சப்பட்டி ஆகிய பகுதிகளிலிருந்து வந்த மக்கள் மீன்களை வாங்கிச் சென்றனர்.

    • மேலூர் அருகே கம்பூரில் நடந்த மீன் பிடி திருவிழாவில் கிராம மக்கள் போட்டி போட்டு பிடித்தனர்.
    • வசாயம் செழிக்கும் என்பது இந்த பகுதி மக்களின் நம்பிக்கை.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூரை அடுத்துள்ள கம்பூரில் தேனக்குடிப்பட்டி செல்லும் சாலையில் மருதன் கண்மாய் உள்ளது. இந்த கண்மாய் தண்ணீர் விவசாயத்திற்காக பயன்படுத்தப்படுகிறது.

    விவசாய பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று இந்த கண்மாயில் பாரம்பரிய மீன்பிடித் திருவிழா நடந்தது. இதையொட்டி சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான கிராம மக்கள் இன்று காலை முதல் குவிந்தனர். கிராம முக்கி யஸ்தர்கள் அதிகாலையில் வெள்ளை துண்டு வீசியதும் சுற்றி இருந்த கிராம மக்கள் கண்மாய்க்குள் இறங்கி வலைகள் மற்றும் மீன்பிடி சாதனங்களை வைத்து போட்டி போட்டு மீன்களைப் பிடித்தனர்.

    இதில் நாட்டு மீன்களான குறவை, கட்லா, ஜிலேபி மற்றும் விராமீன்களும் அதிக அளவில் கிடைத்தன. இந்த மீன்கள் சுமார் 3 கிலோ வரை இருந்தது. மீன்களை பிடித்த கிராமமக்கள் வீடுகளுக்கு கொண்டு சென்று சமைத்தும், மீதமுள்ள மீன்களை விற்காமல் உறவி னர்களுக்கு கொடுத்தனர்.

    மீன்பிடித் திருவிழாவின் மூலம் வரும் ஆண்டில் நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கும் என்பது இந்த பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

    • மீன், காய்கறி வியாபாரிகள் ரோட்டோரத்தில் கடை வைத்து வியாபாரம் செய்து கொண்டிருந்தனர்
    • வியாபாரிகளுக்கு 2 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகராட்சிக் குட்பட்ட பகுதிகளில் மேயர் மகேஷ் அதிரடி ஆய்வு மேற் கொண்டு வருகிறார்.

    ராமன் புதூர் பகுதியில் ரோட்டோரத்தில் மீன் வியாபாரம் நடைபெறு வதால் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதாகவும் அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மேயர் மகேசுக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து இன்று காலை மேயர் மகேஷ் ராமன் புதூர் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்த பகுதியில் மீன், காய்கறி வியாபாரிகள் ரோட்டோரத்தில் கடை வைத்து வியாபாரம் செய்து கொண்டிருந்தனர். மீன், காய்கறி வியாபாரி களிடம் மேயர் மகேஷ் பேசினார். அதற்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே கடைகள் அமைத்து வியாபாரம் செய்ய வேண்டும். ரோட்டோரத்தில் போக்குவரத்து இடையூறாக கடை அமைத்து வியாபாரம் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.

    இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளை கொண்ட குழு அமைத்து ஆய்வு செய்யவும் கூறினார். இதைத்தொடர்ந்து ராமன்புதூர் பகுதியில் கழிவு நீர் ஓடை உடைந்து மோசமான நிலையில் காணப்பட்டது. அதை உடனே சீரமைக்க மேயர் மகேஷ் உத்தரவிட்டார்.

    இது குறித்து மேயர் மகேஷ் கூறியதாவது:-

    முன்மாதிரியான மாநகராட்சியாக...

    நாகர்கோவில் மாநகராட்சி யை முன்மாதிரியான மாநக ராட்சியாக மாற்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற் கொள் ளப்பட்டு வருகிறது. சாலை மேம்பாட்டிற்கு நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. போக்கு வரத்து நெருக்கடியை குறைக்கும் வகையில் பல்வேறு சாலைகளில் இருவழிப்பாதை யாக மாற்றவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.

    இந்த நிலையில் ராமன் புதூர் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக ரோட்டோரங்களில் கடைகள் இருப்பதாக வந்த புகாரை தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது ரோட்டோர கடை வியாபாரியிடம் தனியார் பணம் வசூல் செய்ததை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.

    மீன், காய்கறி வியாபாரிகள் அதற்கான ஒதுக்கப்பட்ட இடத்தில் மட்டுமே மீன் வியா பாரம் செய்ய வேண்டும். ரோட்டோரத்தில் மீன், காய்கறி வியாபாரம் செய்தால் பாரபட்ச மின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வியாபாரிகளுக்கு 2 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் முதல் ரோட்டோரத்தில் கடை அமைத்தால் கடைகள் அகற்றப்படுவதுடன் பறிமுதல் செய்யவும் நடவடிக்கை எடுக் கப்படும். இதற்கு வியா பாரிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது நகர்நல அதிகாரி ராம்குமார், சுகாதார ஆய்வாளர்கள் ராஜேஷ், ராஜா, கவுன்சிலர் தினகர், மண்டல தலைவர் ஜவகர், தி.மு.க. மாநகர செயலாளர் ஆனந்த் ஆகியோர் உடன் இருந்தனர்.வராத தால் என்ன செய்வதென தெரியாமல் போலீசார் தவித்து வருகின்றனர்.

    • விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதிவரை சென்று 10 நாட்கள் வரை தங்கி மீன் பிடித்துவிட்டு கரை திரும்பும்
    • குளச்சலில் மீன்வரத்து குறைந்து இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    கன்னியாகுமரி :

    குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 1000- க்கும் மேற்பட்ட பைபர் வள்ளங்கள், கட்டு மரங்க ளும் மீன் பிடித்தொழில் செய்து வருகின்றன.விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதிவரை சென்று 10 நாட்கள் வரை தங்கி மீன் பிடித்துவிட்டு கரை திரும்பும். ஆழ்கடல் பகுதி யில்தான் சுறா, கேரை, இறால், புல்லன், கணவாய், கிளி மீன்கள், ராட்சத திரட்சி எனப்படும் திருக்கை போன்ற உயர் ரக மீன்கள் கிடைக்கும்.பைபர் வள்ளங்கள் காலையில் சென்றுவிட்டு அருகில் மீன்பிடித்து மதியம் கரை திரும்பி விடும். தற்போது விசைப்படகுகளில் கண வாய், புல்லன், கேரை போன்ற மீன்கள் கிடைக்கும் சீசனாகும்.

    இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக குளச்சல் கடல் பகுதியில் பலத்த காற்று வீசி வருகிறது. இதனால் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மீன் பிடித்து கரை திரும்பிய விசைப்படகுகள் மீண்டும் கடலுக்கு செல்ல வில்லை. ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற விசைப்படகுகள் பாதியி லேயே கரை திரும்பின.அவை நங்கூரம் பாய்ச்சி மீன்பிடித்துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. அருகில் மீன் பிடிக்கும் தொழிலில் ஈடுபடும் பைபர் கட்டுமரங்கள் வழக்கம்போல் மீன் பிடிக்க சென்று வந்த நிலையில் இன்று பலத்த காற்று காரணமாக பைபர் கட்டுமரங்களும் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.ஒரு சில கட்டுமரங்களே மீன் பிடிக்க சென்றன.அவற்றுள் குறைவான மீன்களே கிடைத்தன.இதனால் இன்று குளச்சலில் மீன்வரத்து குறைந்து இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    ×