search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கால்நடை"

    • ஆடு வழங்கும் திட்டத்தில் முந்தைய ஆட்சியின் போது, ஒவ்வொரு வட்டார அளவில் உள்ள கால்நடை மருத்துவர் கணக்கிலும், அதற்கான தொகை வரவு வைக்கப்பட்டு விடும்.
    • ஒரு வியாபாரியிடமிருந்து வாங்கப்படும் கால்நடைகளுக்கு, சந்தை மதிப்பை நிர்ணயித்து கொடுக்க கால்நடை பராமரிப்புத்துறையினர் தயாராக இல்லை.

    திருப்பூர் :

    கால்நடை பராமரிப்புத்துறை சார்பில்விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போருக்கு ஆடு வளர்க்கும் திட்டத்தின் கீழ் அரசு நிதியுதவி வழங்கி வருகிறது. ஒவ்வொரு பயனாளிக்கும் தலா 5 ஆடுகள் வாங்க ஒரு ஆட்டுக்கு ரூ. 3,500 வீதம் 17 ஆயிரத்து 300 ரூபாய் அரசின் சார்பில் வழங்கப்படுகிறது. அந்த வகையில், ஒவ்வொரு வட்டாரத்திலும் 100 பயனாளிகளுக்கு ஆடு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இதில் அவிநாசி வடுகபாளையம், சின்னேரிபாளையம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள பயனாளிகளுக்கு சமீபத்தில் ஆடுகள் வழங்கப்பட்டன. வழங்கப்பட்ட ஆடுகள் தரமற்று இருப்பதாகவும், ஒரு ஆட்டின் விலை 1,000 முதல் 1,500 ரூபாய் வரை தான் தேறும் எனவும் பயனாளிகள் கூறினர்.

    இது குறித்து கால்நடை பராமரிப்புத்துறையினர் கூறுகையில், ஒவ்வொரு வட்டார அளவிலும் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் மொத்த வியாபாரிகள் மூலம் ஆடுகள் வினியோகிக்கப்படுகிறது. மொத்த வியாபாரிகளால் கொண்டு வரப்படும் ஆடுகள், பயனாளிகளுக்கு திருப்தியாக இல்லாவிட்டால், வேறு ஆடுகளை எடுத்து வரச்சொல்லி வாங்கிக் கொள்ளலாம். ஆடுகளை தேர்வு செய்வது பயனாளிகள் தான். பயனாளிகள் விருப்பப்பட்டால் சந்தைக்கு சென்றும் கூட ஆடுகளை வாங்கிக்கொள்ளலாம் என்றனர்.

    இது குறித்து கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஈஸ்வரன் கூறியதாவது:-

    அரசின் ஆடு வழங்கும் திட்டத்தில் முந்தைய ஆட்சியின் போது, ஒவ்வொரு வட்டார அளவில் உள்ள கால்நடை மருத்துவர் கணக்கிலும், அதற்கான தொகை வரவு வைக்கப்பட்டு விடும். பயனாளிகள் தங்களுக்கு விருப்பப்பட்ட சந்தைக்கு சென்று, விரும்பிய ஆடுகளை வாங்கி கொள்ளலாம். அதற்கான தொகையை கால்நடை மருத்துவர்கள் விடுவித்து விடுவர்.தற்போது இந்த நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டு பொதுவாக ஒரு மொத்த வியாபாரி மூலம் ஆடுகள் வினியோகிக்கப்படுகிறது.

    அவ்வாறு கொண்டு வரப்படும் ஆடுகள், பயனாளிகளுக்கு திருப்தியளிப்பதாக இல்லை என்ற புகாரும் வருகிறது.விவசாயிகளே நேரடியாக சந்தைக்கு சென்று ஆடுகளை கொள்முதல் செய்து கொள்ளலாம் என கால்நடை பராமரிப்புத்துறையினர் கூறினாலும் அதற்கான தொகையை விடுவிப்பதில், துறை ரீதியாக நடைமுறை சிக்கல் உள்ளது.எனவே, பழைய நடைமுறைப்படி, அந்தந்த வட்டார கால்நடை மருத்துவர்கள் மூலம் விவசாயிகளே நேரடியாக ஆடுகளை கொள்முதல் செய்து கொள்ளும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.அவிநாசி, பல்லடம், திருப்பூர் உட்பட திருப்பூர் கோட்டத்துக்கு உட்பட்ட 5 வட்டாரத்தில் தலா 100 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு ஆடு வழங்கப்பட்டு வருகிறது.சில இடங்களில் ஆடுகள் அடுத்தடுத்து பலியாகின்றன. அவிநாசி ஒன்றியம், சின்னேரிபாளையம் கிராமத்தில் 3 ஆடுகள் பலியாகின.

    இது குறித்து பயனாளிகள் கூறுகையில்,

    அரசால் இலவசமாக வழங்கப்பட்ட ஆடுகள், சரிவர தீவனம் உட்கொள்ளாமல், சோர்ந்து போய் இருந்தன. சில ஆடுகள் இறந்தும் போயின. இறந்த ஆடுகளுக்கு பதிலாக, வேறு ஆடுகள் வழங்க ஏற்பாடு செய்வதாக கால்நடை பராமரிப்பு துறையினர் உறுதி அளித்துள்ளனர் என்றனர்.கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, ஆடுகள் இறந்திருப்பதாக பயனாளிகள் தரப்பில் இருந்து புகார் பெறப்பட்டுள்ளது. இப்பிரச்சினைக்கு உயரதிகாரிகளின் ஆலோசனை பெற்று, அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    கால்நடை வளர்ப்போர் சிலர் கூறியதாவது:-

    அரசால் வழங்கப்பட்ட கால்நடைகளின் உண்மையான சந்தை மதிப்பை கால்நடை பராமரிப்பு துறையினரிடம் இருந்து பெற்று வரும்படி, இன்சூரன்ஸ் நிறுவனத்தினர் கூறுகின்றனர்.ஆனால் எங்கிருந்தோ ஒரு வியாபாரியிடமிருந்து வாங்கப்படும் கால்நடைகளுக்கு, சந்தை மதிப்பை நிர்ணயித்து கொடுக்க கால்நடை பராமரிப்புத்துறையினர் தயாராக இல்லை. இதனால், அவை இறந்தால் இன்சூரன்ஸ் தொகையும் கிடைப்பதில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • இலவசமாக கொடுக்கப்பட்ட ஆடுகள் கடந்த சில நாட்களாக தீவனம் உட்கொள்ளாமல் திடீரென செத்தது.
    • திடீர் பருவமாற்றத்தால் கால்நடைகளுக்கு உடல்நலம் பாதிக்கப்படுகிறது.

    அவினாசி :

    அவினாசி ஒன்றியம் சின்னேரிபாளையம் பகுதியில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு ஆடுகள் வழங்கப்பட்டுள்ளது. இதில் கடந்த சில நாட்களாக 3 ஆடுகள் உடல்நலக்குறைவால் செத்தது.இது குறித்து பயனாளிகள் கூறுகையில் ,இலவசமாக கொடுக்கப்பட்ட ஆடுகள் கடந்த சில நாட்களாக தீவனம் உட்கொள்ளாமல் திடீரென செத்தது. இலவசமாக வழங்கும் ஆடுகள் தரமானதாக வழங்க வேண்டும் என்றனர்.

    இது குறித்து கால்நடை பராமரிப்பதுறையினர் கூறுகையில்,

    கடந்த 10 நாட்களுக்கு முன் கடும் வெப்பம் காணப்பட்டது. ஒரு வாரமாக சீதோஸ்ன நிலைமாறி கடும் குளிருடன் மழை பெய்து வருகிறது. திடீர் பருவமாற்றத்தால் கால்நடைகளுக்கு உடல்நலம் பாதிக்கப்படுகிறது. எனவே உடனடியாக கால்நடைகளை மருத்துவமனைக்கு கொண்டு சென்று உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். மேலும் கால்நடைகளை பராமரித்து பாதுகாத்தால் கால்நடைகளின் உயிரிழப்பை தவிர்க்கலாம் என்றனர்.

    • ஆங்காங்கே சாலையோரம் குப்பைகள் கொட்டப்பட்டு தீ வைக்கப்பட்டு எரிக்கப்படுகின்றன.
    • சாலையோரம் குப்பைகள் கொட்டுவதை தடுப்பதற்கு நடவடிக்கைகளை நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்

    உடுமலை :

    உடுமலையில் சாலையோரங்களிலும் பொது இடங்களிலும் குப்பைகளை கொட்டக்கூடாது என நகராட்சி நிர்வாகம் அறிவித்து வருகின்ற நிலையில் சில பகுதிகளில் ஆங்காங்கே சாலையோரம் குப்பைகள் கொட்டப்பட்டு தீ வைக்கப்பட்டு எரிக்கப்படுகின்றன. உடுமலை ெரயில் நிலையத்தின் பின்புறம் உள்ள பழனி ஆண்டவர் நகருக்கு செல்லும் ரோட்டில் தொடர்ந்து ஆங்காங்கே குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன.

    இதில் பிளாஸ்டிக் கவர்களும் கிடக்கின்றன. அந்த இடத்தில் வரும் கால்நடைகள் அந்த குப்பைகளை கலைத்து உணவை தேடுகின்றன. அப்போது அவை கிடைப்பதை சாப்பிடுகின்றன .அதில் பிளாஸ்டிக் கவர்களையும் மாடுகள் சாப்பிட்டால் மாடுகளுக்கு பாதிப்பு ஏற்படும். அதனால் சாலையோரம் குப்பைகள் கொட்டுவதை தடுப்பதற்கு நடவடிக்கைகளை நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • காலை நேர காற்றின் ஈரப்பதம் 75 சதவீதம், மாலை நேரத்தில் 65 சதவீதமாகவும் இருக்க வாய்ப்புள்ளது.
    • நெல் சாகுபடியில் பகல் நேர வெப்பநிலை, நாற்றங்காலில் சாறு உறிஞ்சும் பூச்சிகள் நிலவ ஏதுவாக உள்ளது.

    உடுமலை :

    தமிழ்நாடு வேளாண் பல்கலையின் கோவை வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் சார்பில் மாவட்ட வாரியாக வானிலை சார்ந்த வேளாண் அறிக்கை வெளியிடப்படுகிறது. அவ்வகையில் இவ்வாரம் திருப்பூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    காலை நேர காற்றின் ஈரப்பதம் 75 சதவீதம், மாலை நேரத்தில் 65 சதவீதமாகவும் இருக்க வாய்ப்புள்ளது.நெல் சாகுபடியில் பகல் நேர வெப்பநிலை, நாற்றங்காலில் சாறு உறிஞ்சும் பூச்சிகள் நிலவ ஏதுவாக உள்ளது. நாற்றங்காலை கண்காணித்து தேவைப்பட்டால் 5 சதவீத வேப்பங்கொட்டை சாறு தெளிக்கலாம்.எதிர்பார்க்கப்படும் மழையை பயன்படுத்தி இறவை மக்காச்சோளம், சூரியகாந்தி நடவு செய்வதை தொடரலாம்.

    வளர் பருவத்தில் உள்ள கரும்பு சாகுபடியில் காய்ந்த தோகை உரிப்பது மற்றும் விட்டம் கட்டுவதன் வாயிலாக 150 நாட்கள் வயதுடைய முன் பருவ கரும்பில் துளைப்பான் பூச்சியின் தாக்கத்தை குறைக்கலாம். மழையுடன் காற்றின் வேகம் 10-14 கி.மீ., வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதால் 5 மாதங்களுக்கு மேலுள்ள வாழை மரங்களுக்கு முட்டுக்கொடுக்க வேண்டும்.

    தென்னை மரங்களுக்கு முதல் உரமாக மரம் ஒன்றுக்கு, யூரியா 650 கிராம், சூப்பர் பாஸ்பேட், பொட்டாஷ் தலா 1 கிலோ மற்றும் வேப்பம் புண்ணாக்கை 2 கிலோவை, 50 கிலோ எருவுடன் கலந்து இடலாம்.குரும்பை உதிர்வை தடுக்க மரத்துக்கு 200 மி.லி., வீதம் வேளாண் பல்கலையின் வளர்ச்சி ஊக்கியை வேர் வாயிலாக அளிக்கலாம். உள்நோக்கிய வட்டப்பாத்தி எடுப்பதால் மழைநீரை சேகரிக்கலாம்.

    மழையின் காரணமாக புதிதாக முளைத்த புல்லை, கால்நடைகள் மேயவிடாமல் பாதுகாக்க வேண்டும். காற்றின் ஈரப்பதம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதால் கால்நடைகளுக்கு உலர்ந்த திடமான தீவனங்களை கொடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • குமாரபாளையத்தில் புதிதாக பரவி வரும் கால்நடை நோயால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
    • கால்நடை மருத்துவர்கள் இது பற்றி தகவலறிந்து அனைத்து பகுதிகளுக்கும் சென்று தடுப்பூசி போட்டு வருகின்றனர்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் அருகே கல்லங்காட்டுவலசு, வீ.மேட்டூர், தட்டான்குட்டை, சத்யா நகர், எலந்தகுட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாடுகளுக்கு வட்ட வடிவமான தடுப்பு ஏற்பட்டு, அது அனைத்து கால்நடைகளுக்கும் பரவி வருகிறது. கால்நடை மருத்துவர்கள் இது பற்றி தகவலறிந்து அனைத்து பகுதிகளுக்கும் சென்று தடுப்பூசி போட்டு வருகின்றனர்.

    சில நாட்களுக்கு முன்பு நாமக்கல் கால்நடை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் டாக்டர் ராஜேந்திரன், கால்நடை உதவி டாக்டர்கள் ரமேஸ்குமார், சதீஷ், செந்தில்குமார் ஆகியோர் நோய் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து, இது சாதாரண வைரஸ் நோய், இதற்காக அச்சப்பட வேண்டியதில்லை என்று கூறினர்.

    இதுபற்றி விவசாயிகள் கூறுகையில், கால்நடை டாக்டர்கள் அச்சப்படா தீர்கள் என்றாலும், கால்நடைகளின் நோயின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அனைத்து விவசாயிகளும் மருத்துவமனைக்கு தங்கள் கால்நடைகளை அழைத்து சென்று சிகிச்சை மேற்கொள்வதென்பது சாத்தியமில்லை.

    ஆகவே ஒவ்வொரு கிராமத்தின் முக்கிய பகுதிகளில் சிறப்பு முகாம் நடத்தி கால்நடைகளுக்கு சிகிச்சை மேற்கொண்டு தடுப்பூசி போட்டால், விவசாயிகளுக்கு உதவியாக இருப்பதோடு பல கால்நடைகளை நோய் பாதிப்பு, நோய் பரவலில் இருந்து காப்பாற்ற முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • அத்திக்கோம்பை உச்சி காளியம்மன் கோவில் திருவிழா சமயத்தில் கால்நடை மற்றும் குதிரை கண்காட்சி பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது.
    • விற்பனை இல்லாததன் காரணமாக நடைபெற்றுவரும் அத்திக்கோம்பை கால்நடை கண்காட்சி களை இழந்து காணப்படுகிறது.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள அத்திக்கோம்பை உச்சி காளியம்மன் கோவில் திருவிழா சமயத்தில் கால்நடை மற்றும் குதிரை கண்காட்சி பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது.

    126 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் இந்த கண்காட்சிக்கு கரூர், ஈரோடு, திண்டுக்கல், மதுரை, ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் தங்களுடைய கால்நடைகள் மற்றும் குதிரைகளை விற்பனை செய்ய ஆண்டுதோறும் கொண்டு வருவது வழக்கம்.

    இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனாவின் காரணமாக கால்நடை கண்காட்சி நடைபெறாமல் இருந்தது. இந்த நிலையில் நேற்று முதல் வருகிற 27-ந்தேதி வரை ஒரு வார காலத்திற்கு இந்த கண்காட்சி நடைபெற்று வருகிறது.

    ஆண்டுதோறும் 2000-க்கும் அதிகமான மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்படும் நிலையில் தற்போது 500-க்கும் குறைவான கால்நடைகளே விற்பனைக்காக கொண்டுவரப்பட்டுள்ளன. மேலும் வியாபாரிகள், விவசாயிகள் இந்த ஆண்டு கால்நடைகளை விற்பனை செய்ய அதிகம் முன்வராத காரணத்தினால் நடைபெற்றுவரும் கால்நடை சந்தை களையிழந்து காணப்படுகிறது.

    கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற இந்த கண்காட்சியில் ரூ. 2 லட்சம் ரூபாய்க்கு விற்பனையான காளை மாடுகள் தற்போது ரூ.1 லட்சத்திற்கும், ்ரூ. 6 லட்சம் விலை போன குதிரைகள் தற்போது ரூ. 2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரையில் விலை போகிறது.

    அதேபோல நாட்டு மாடுகள் ரூ.80 ஆயிரத்துக்கு விற்பனை செய்து வந்த நிலையில் தற்போது குறைந்து ரூ.60 ஆயிரம் மட்டுமே வியாபாரிகளால் கேட்கப்படுகிறது.கன்று குட்டிகள் ரூ.30 முதல் ரூ.35 ஆயிரம் வரை விற்பனையானது.

    தற்போது குறைந்து ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை மட்டுமே வியாபாரிகளால் கேட்கப்படுகிறது. மேலும் வியாபாரிகள் வரத்து குறைவு காரணமாகவும் விற்பனை இல்லாததன் காரணமாக நடைபெற்றுவரும் அத்திக்கோம்பை கால்நடை கண்காட்சி களை இழந்து காணப்படுகிறது.

    இனிவரும் நாட்களில் வெளியூர் வியாபாரிகள் வருகை தருவார்கள் என்ற நம்பிக்கையில் கால்நடைச்சந்தையில் மாடு மற்றும் குதிரைகளை விவசாயிகள் விற்பனைக்காக வைத்துள்ளனர். மேலும் கால்நடைகளுக்கு தேவையான மூக்கணாங்கயிறு, சலங்கை உள்ளிட்ட பொருட்களின் கடைகளும் திறக்கப்பட்டுள்ளன.

    • கால்நடைகளுக்கு சிறப்பான மருத்துவ உதவி வழங்க வேண்டும்.
    • விவசாயத்துக்கு அடுத்ததாக கால்நடை வளர்ப்புத் தொழில் பிரதானமாக உள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் மண்டல கால்நடை பராமரிப்புத் துறையில், காலியாக உள்ள பணியிடங்களுக்கு புதிதாக கால்நடை உதவி மருத்துவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.அவர்களுக்கான பயிற்சி கூட்டம் பல்லடம் வனாலயம் அடிகளார் அரங்கத்தில் நடந்தது. இணை இயக்குநர் (பொறுப்பு) கவுசல்யா தேவி முன்னிலை வகித்தார்.

    வனம் அமைப்பின் தலைவர் சுவாதி கண்ணன் வரவேற்றார்.கால்நடை துறை மண்டல இணை இயக்குனர் பாரிவேந்தன் தலைமை வகித்து பேசுகையில், திருப்பூர் மாவட்டத்தில் விவசாயத்துக்கு அடுத்ததாக கால்நடை வளர்ப்புத் தொழில் பிரதானமாக உள்ளது.விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படவும், கால்நடைகளின் எண்ணிக்கையை பெருக்கி, அவற்றின் ஆரோக்கியத்தைப் பேணிக்காக்க வேண்டியதும் நமது பொறுப்பு.

    இதற்காக கால்நடைகளுக்கு சிறப்பான மருத்துவ உதவி வழங்க வேண்டும்என்றார்.அதன்பின், வனாலயம் வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. மண்டல கால்நடை உதவி இயக்குனர்கள் பரிமள ராஜ்குமார், ஜெயராமன், வெங்கடேசன், உமா சங்கர் மற்றும் வனம் அமைப்பு நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

    ×