என் மலர்
நீங்கள் தேடியது "சம்பளம்"
- எம்.எல்.ஏ.க்களின் மாத சம்பளம் ரூ.55,000-த்தில் இருந்து ரூ.70,000 ஆக உயரும்.
- முதலமைச்சரின் மாத சம்பளம் ரூ.95,000-த்தில் இருந்து ரூ.1.15 லட்சமாக உயரும்
முதலமைச்சர், அமைச்சர்கள், சபாநாயகர், துணை சபாநாயகர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை சுமார் 24% வரை உயர்த்தும் 3 மசோதாக்கள் இமாச்சலப் பிரதேச சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
அமைச்சர்கள், சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியங்கள் 9 ஆண்டுகளுக்குப் பிறகு திருத்தப்பட்டுள்ளதாக முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு சட்டமன்றத்தில் தெரிவித்தார்.
காங்கிரஸ் மற்றும் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட அனைவரும் இந்த மசோக்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் அரசுக்கு சுமார் 24 கோடி ரூபாய் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இதன்மூலம் எம்.எல்.ஏ.க்களின் மாத சம்பளம் ரூ.55,000-த்தில் இருந்து ரூ.70,000 ஆகவும், தொகுதிப் படி ரூ.90,000-த்தில் இருந்து ரூ.1.20 லட்சமாகவும், அலுவலகப் படி ரூ.30,000-த்தில் இருந்து ரூ.90,000 ஆகவும் தினப்படி ரூ.1,800-த்தில் இருந்து ரூ.2,000 ஆக உயர்த்தப்படும்.
முதலமைச்சரின் மாத சம்பளம் ரூ.95,000-த்தில் இருந்து ரூ.1.15 லட்சமாகவும், கேபினட் அமைச்சர்களின் சம்பளம் ரூ.80,000-த்தில் இருந்து ரூ.95,000 ஆகவும், அமைச்சர்களின் சம்பளம் ரூ.78,000-த்தில் இருந்து ரூ.92,000 ஆகவும் உயர்த்தப்படும்.
சபாநாயகரின் சம்பளம் ரூ.80,000த்தில் இருந்து ரூ.95,000 ஆகவும் துணை சபாநாயகரின் சம்பளம் ரூ.75,000-த்தில் இருந்து ரூ.92,000 ஆகவும் உயர்த்தப்படும்.
முதல் முறையாக எம்.எல்.ஏ.க்களாகப் பொறுப்பேற்பவர்களின் அடிப்படை ஓய்வூதியம் மாதத்திற்கு ரூ.36,000 லிருந்து ரூ.50,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது செலவு பணவீக்கக் குறியீட்டின் அடிப்படையில் ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் திருத்தப்படும்.
அதே சமயம் எம்.எல்.ஏ.க்களுக்கான தண்ணீர் மற்றும் மின்சார மானியம் திரும்பப் பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- குரான் பானளயத்திலுள்ளவர்கள் 100 நாள் வேலைத் திட்டத்தில் பணிசெய்து வருகின்றனர்.
- 100 நாள் வேலை செய்த தொழிலாளர்களுடன் கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முகத்திடம் கோரிக்கை மனு அளித்தனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியம் சேஷாங்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட குரான்பாளையம் கிராமம் உள்ளது. இங்குள்ளவர்கள் 100 நாள் வேலைத் திட்டத்தில் பணிசெய்து வருகின்றனர். அதன்படி கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தில் வேலை செய்த 9 நாட்களுக்கான சம்பளம் வழங்கப்படவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இதை கண்டித்தும், அனை வருக்கும் ஜாப் கார்டு வழங்க கோரியும் கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் முன்பு தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள்.
போராட்டத்தில் ஈடுபட்டவ ர்களுடன் கண்டமங்கலம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதனைத் தொடர்ந்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் கண்டமங்கலம் ஒன்றிய செயலாளர் குப்புசாமி, மாவட்ட குழு உறுப்பினர் சவுந்தர்ராஜன், ஒன்றிய குழு உறுப்பினர் ராஜேஸ்வரி மற்றும் 100 நாள் வேலை செய்த தொழிலாளர்களுடன் கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முகத்திடம் கோரிக்கை மனு அளித்தனர்.க
- பிரபல டைரக்டர் டைரக்ட் செய்து வரும் சினிமா படத்தின் வெளிப்புறபடபிடிப்பு நடந்து வருகிறது.
- பொறுப்பாளரிடம் வழங்கி விட்டதாக தெரிய வந்துள்ளது.
கன்னியாகுமரி :
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பிரபல டைரக்டர் டைரக்ட் செய்து வரும் சினிமா படத்தின் வெளிப்புறபடபிடிப்பு நடந்து வருகிறது.
கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு உள்ள பகுதியிலும் கடற்கரை சாலை பகுதியிலும் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது.
இந்த நிலையில் இந்த சினிமா படத்தில் நடித்த துணை நடிகைகள் தங்களுக்கு சம்பளம்தரவில்லை என்று கூறி இன்று காலை கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க வந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களுடன் 2 துணை நடிகர்களும் வந்தனர்.
இது பற்றி அந்த 2 துணை நடிகைகளிடமும் 2 துணை நடிகர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையில் அந்த படத்தின் டைரக்டர் நடிகைகளுக்குரிய சம்பளத்தை ஏற்கனவே அந்த படப்பிடிப்பு குழுவைச் சேர்ந்த பொறுப்பாளரிடம் வழங்கி விட்டதாக தெரிய வந்துள்ளது.
இதைத் தொடர்ந்து அந்த படப்பிடிப்பு குழுவை சேர்ந்த பொறுப்பாளர்களை போலீசார் விசாரணை க்கு வரும்படி அழைத்து உள்ளனர்.
- பாத்திர தொழிலாளர்களின் கூலி உயர்வு ஒப்பந்தம் கடந்த டிசம்பர் 31-ந் தேதியுடன் நிறைவடைந்தது.
- தலா 7 சதவீதம் கூலி உயர்வு வழங்க சம்மதம் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் :
திருப்பூர் அனுப்பர்பாளையம் பாத்திர தொழிலாளர்களின் கூலி உயர்வு ஒப்பந்தம் கடந்த டிசம்பர் 31-ந் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து புதிய கூலி உயர்வு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துமாறு பாத்திர உற்பத்தியாளர்களுக்கு அனைத்து தொழிற்சங்க கூட்டு கமிட்டி அழைப்பு விடுத்தது. இதையடுத்து தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் முன்னிலையில் பலகட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதுவரை எவர்சில்வர் மற்றும் பித்தளை, செம்பு உற்பத்தியாளர் தலா 7 சதவீதம் கூலி உயர்வு வழங்க சம்மதம் தெரிவித்துள்ளனர். ஆனால் கூடுதல் சதவீதம் கூலி உயர்வு வழங்க முடியாது என்று கூறி பாத்திர உற்பத்தியாளர்கள் தொடர்ந்து மவுனம் காத்து வருகின்றனர். இந்த நிலையில் பேச்சுவார்த்தை தொடர்பான முழுவிவரங்களையும் பாத்திர தொழிலாளர்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் விளக்கக்கூட்டம் அனுப்பர்பாளையம் - ஆத்துப்பாளையம் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் எச்.எம்.எஸ்., சங்கத்தின் மாநில செயலாளர் ராஜாமணி கலந்து கொண்டு தொழிலாளர்களின் கூலி உயர்வு தொடர்பாக வாழ்த்தி பேசினார். மேலும் அனைத்து தொழிற்சங்க கூட்டுக்கமிட்டி தரப்பினரும் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட பெரும்பாலான தொழிலாளர்கள், வேலை நிறுத்தம் இல்லாமலேயே தொழிற்சங்கங்கள் விரைவாக பேச்சுவார்த்தை நடத்தி போதிய கூலி உயர்வு பெற்றுத் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இந்த கூட்டத்தின் முடிவில் இன்று (சனிக்கிழமை) எவர்சில்வர் பாத்திர உற்பத்தியாளர்களுடனும், வரும் திங்கட்கிழமை பித்தளை, செம்பு உற்பத்தியாளர்களுடனும், வரும் செவ்வாய்கிழமை தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் முன்னிலையில் நடைபெறும் பேச்சுவார்த்தையின் முடிவில் எடுக்கப்படும் முடிவுகளை பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அனைத்து தொழிற்சங்க கூட்டுக் கமிட்டி அறிவித்தது.இந்த கூட்டத்தில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பாத்திர தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
- திருமூர்த்தி மற்றும் அவரது தந்தை ஆறுச்சாமி ஆகியோரை இரும்புகம்பியால் தாக்கியுள்ளார்.
- பல்லடம் அரசு மருத்து வமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள வேலப்பகவு ண்டம்பா ளையத்தை சேர்ந்தவர் திருமூர்த்தி( வயது 30). இவர் அதே ஊரைச் சேர்ந்த சதீஷ் என்பவரது பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். கடந்த 2 மாதங்களாக சம்பள பாக்கி இருந்துள்ளது. எனவே சம்பள பாக்கியை கேட்பதற்காக சதீஷின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது இது குறித்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ள்ளது. அப்ேபாது சதீஷின் உறவினரான பாலசு ப்பிரமணியம் என்பவர் திருமூர்த்தி மற்றும் அவரது தந்தை ஆறுச்சாமி ஆகி யோரை இரும்புகம்பியால் தாக்கியுள்ளார். இதில் ஆறுச்சாமியின் இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. திருமூர்த்திக்கு தலையில் காயம் ஏற்பட்டது. உடனடியாகஅருகில் இருந்தவர்கள் காயமடைந்த இருவரையும் உடனடியாக பல்லடம் அரசு மருத்து வமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனை க்குஅனுப்பிவைக்க ப்பட்டனர்.இது குறித்த புகாரின் பேரில் காமநாயக்க ன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த 1-ந் தேதி தொழிலாளர் தினத்தன்று தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்பட்டுள்ளதா?
- 60 முரண்பாடுகள் கண்டறியப்பட்டு சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சை தொழிலாளர்துறை உதவி ஆணையர் (அமலாக்கம்) தனபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை முதன்மை செயலாளரும், தொழிலாளர்துறை ஆணையருமான அதுல்ஆனந்த் உத்தரவுப்படி திருச்சி கூடுதல் தொழிலாளர்துறை ஆணையர் ஜெயபால், இணை ஆணையர் திவ்யநாதன் ஆகியோர் அறிவுரைப்படியும்
தஞ்சை மாவட்டத்தில் உள்ள கடைகள், நிறுவனங்கள், உணவகங்கள் மற்றும் போக்குவரத்து நிறுவனங்களில் தேசிய விடுமுறை நாளான கடந்த 1-ந் தேதி தொழிலாளர் தினத்தன்று தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு, அவர்கள் சம்மதத்துடன் இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்றுவிடுப்பு அளிக்கப்பட்டுள்ளதா? என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வின்போது சட்ட விதிகளின்படி செயல்படாத கடைகள் மற்றும் நிறுவனங்களில் 32 முரண்பாடுகளும், உணவு நிறுவனங்களில் 28 முரண்பாடுகளும் என மொத்தம் 60 முரண்பாடுகள் கண்டறியப்பட்டு சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சம்பளம் வழங்காததை கண்டித்து ஊழியர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- ஊராட்சி நிர்வாகம் தொடர்ந்து பணியாளர்களை ஏமாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஒன்றிய கிராம ஊராட்சியில் பணிபுரிந்து வரும் ஒ.எச்.டி. ஆபரேட்டர்கள், தூய்மை காவலர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட ஊராட்சி ஊழியர்களுக்கு 2022 அக்டோபர் முதல் 2023 ஏப்ரல் வரை 7 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை.
மேலும் பொங்கல் பண்டிகை தொகையான ரூ.1000-மும் வழங்காமல் திருச்சுழி ஊராட்சி நிர்வாகம் தொடர்ந்து பணியா ளர்களை ஏமாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஊழியர்களுக்கு நிலுவை சம்பளம் மற்றும் பொங்கல் தொகையை வழங்கக்கோரி ஊராட்சி நிர்வாகத்திடம் பல முறை முறையிட்டும், மனுக்கள் அளித்தும் இதுவரை எவ்வித நடவ டிக்கையும் இல்லை.
இந்த நிலையில் நேற்று திருச்சுழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை ஊழியர்கள் திடீரென்று முற்றுகையிட்டு ேபாராட்டம் நடத்தினர். கலெக்டர் மற்றும் யூனியன் அலுவலக உயரதிகாரிகள் திருச்சுழி ஊராட்சி நிர்வா கத்தில் தலையிட்டு ஊராட்சி நிர்வா கத்தில் சுமூகமான சூழ்நிலையை உருவாக்கி இனிவரும் காலங்க ளில் ஊராட்சி ஊழியர்களுக்கு முறையாக சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டு மென ஊராட்சி ஊழியர்கள் அடங்கிய ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர். இந்த போராட்டத்தில் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பால சுப்பிரமணியன், சி.ஐ.டி.யு. ஒன்றிய செயலாளர் சுரேஷ்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் மார்க்கண்டன், செல்வராஜ், விவசாயிகள் சங்க தாலுகா செயலாளர் பெருமாள், மாற்றுத் திறனாளிகள் சங்க ஒன்றிய தலைவர் குமரேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தண்டனை காலத்தை சிறைச்சாலைகளில் கழித்து வரும் கைதிகள் அங்கு பல்வேறு வேலைகளை செய்து வருகிறார்கள்.
- கைதிகள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்ய சூப்பர் மார்க்கெட் தொடங்கப்பட்டுள்ளன.
சென்னை:
தமிழகத்தில் உள்ள சிறைச் சாலைகளில் தண்டனை கைதிகளாக இருப்பவர்கள் திருந்தி நல்ல மனிதர்களாக வெளியில் வருவதற்கான அனைத்து நடவடிக்கை களையும் தமிழக அரசு செய்து வருகிறது.
கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு கைதான குற்றவாளிகள் பலர் வழக்கு விசாரணை முடிந்து சிறையில் தண்டனை காலத்தை கழித்து வருகிறார்கள்.
இதுபோன்று தண்டனை காலத்தை சிறைச்சாலைகளில் கழித்து வரும் கைதிகள் அங்கு பல்வேறு வேலைகளை செய்து வருகிறார்கள்.
சிறைகளில் உள்ள தோட்டங்களில் நிலக்கடலை உள்ளிட்ட எண்ணை வித்துக்களை பயிரிட்டு அறுவடை செய்வது, இந்த நிலக்கடலையை சிறையிலேயே செக்கு எண்ணையாக தயாரிப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டு வரும் கைதிகள் பல்வேறு பொருட்களையும் உற்பத்தி செய்து வருகிறார்கள்.
இந்த பொருட்கள் சந்தை படுத்தப்பட்டு விற்பனையும் செய்யப்பட்டு வருகிறது. சிறைத்துறை டி.ஜி.பி. அம்ரேஷ் புஜாரி மேற் பார்வையில் கைதிகள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்ய சூப்பர் மார்க்கெட் தொடங்கப்பட்டுள்ளன.
எழும்பூரில் உள்ள சிறைத்துறை தலைமை அலுவலக வளாகத்தில் தொடங்கப்பட்டுள்ள சூப்பர் மார்க்கெட் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் மதுரையில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் தினமும் ரூ.1 லட்சம் அளவுக்கு பொருட்கள் விற்பனை ஆகிக்கொண்டிருக்கின்றன.
இப்படி சிறைச்சாலை அருகில் உள்ள சந்தைகள் பொதுமக்கள் மத்தியில் பெரிய அளவில் வர வேற்பை பெற்றுள்ளதால் சிறைகளில் உற்பத்தி அளவும் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் தாங்கள் செய்யும் வேலையை மிகுந்த ஆர்வத்தோடு செய்ய சிறை கைதிகள் மாதம் ரூ.10 ஆயிரம் வரையில் சம்பாதிக்கிறார்கள்.
கைதிகள் செய்யும் வேலைக்கு ஏற்ப ஊதியம் நிர்ணயிக்கப்படுவதால் ரூ.5 ஆயிரம், ரூ.6 ஆயிரம் என சம்பாதிக்கப்பவர்களும் உண்டு. சிறையில் தரமான சாப்பாடு உள்ளிட்டவைகள் கைதிகளுக்கு வழங்கப்பட்டு வருவதால் இந்த சம்பளம் கைதிகளுக்கு மிச்சமாகி விடுகிறது.
கைதிகள் சம்பாதிக்கும் இந்த பணம் அவர்களிடம் நேரடியாக வழங்கப்படுவது இல்லை. இதுபோன்ற சம்பள பணத்தை கையாள்வதற்கே கணக்கர் ஒருவர் சிறைச்சாலைகளில் உள்ளார். அவர் கைதிகள் சம்பள பணத்தை பத்திரமாக வைத்திருந்து குடும்பத்தினர் பார்க்க வரும்போது அவர்களிடம் ஒப்படைத்து விடுகிறார்.
இதன்மூலம் சிறையில் இருந்தாலும் கைதிகள் தங்கள் குடும்பத்துக்காக பணம் சம்பாதித்து கொடுக்கும் நிலையில் இருந்து வேலைகளை செய்து வருவது அவர்களை மனதளவில் நல்ல மனிதர்களாக மாற்றுவதற்கு உந்து சக்தியாகவே இருப்பதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- தூய்மை பணியாளர்களுக்கு 3 மாதமாக சம்பளம் வழங்காததால் சிரமமடைந்துள்ளனர்.
- அதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக ஊராட்சி தலைவர் தெரிவித்தார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் அருகே பனைக்குளம் ஊராட்சியில் பணிபுரியும் ஏராளமான தூய்மை பணியாளர்களுக்கு கடந்த மூன்று மாதமாக சம்பளம் வழங்காததால் திண்டாடி வருவதாக கூறப் படுகிறது.
இது குறித்து ஊராட்சி தலைவர் பவுசியா பானு கூறியதாவது:-
பனைக்குளம் ஊராட்சி துணைத் தலைவர் திடீரென இறந்து விட்டதால், அவ ருக்கு பதிலாக புதிய ஊராட்சி தலைவரை ஊராட்சி மன்ற கூட்டத்தில் தேர்வு செய்து அதற்கான தீர்மானத்தை மாவட்ட நிர் வாகத்திற்கு அனுப்பி வைத்து விட்டனர்.
இந்த நிலையில் அதற் கான அனுமதி கடிதம் கிடைக்காத காரணத்தால் ஊராட்சி நிதியில் இருந்து வங்கி கணக்கில் பணம் எதுவும் எடுக்க முடியவில்லை. இதனால் பல்வேறு பொதுச் செலவுகளுக்கும் பணம் எடுக்க முடியாமல் சொந்த பணத்தை செலவழித்து அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இது குறித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என்றார். மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் உடனடி நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண் டும் என்று பனைக்குளம் சமூக ஆர்வலர்கள் கோரிக் கை விடுத்துள்ளனர்.
இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குனர் பரமசிவம் கூறியதாவது:- துணைத் தலைவர் வங்கியில் கையெ ழுத்திடும் அங்கீகாரத்திற் கான தபால் மாவட்ட கலெக்டர் பார்வைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவரது ஒப்புதல் கிடைத்து விடும் என எதிர்பார்க்கபடுகிறது. அதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது என்று அவர் தெரிவித்தார்.
- தூய்மை பணியாளர்களுக்கு சரியாக ஊதியம் வழங்கவில்லை என கூறப்படுகிறது.
- சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் டி.எஸ்.பி.சுதீர் பேச்சு வார்த்தை நடத்தினார்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் நகராட்சிக்கு பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு தனியார் ஒப்பந்த நிறுவனம் சரியாக ஊதியம் வழங்க வில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் ஊதியத்தை உடனடியாக வழங்க கோரி சங்கரன் கோவில் மெயின் ரோட்டில் 100-க்கும் மேற்பட்ட தூய்மை பணியா ளர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சங்கரன்கோவில் டி.எஸ்.பி.சுதீர் சாலை மறிய லில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.
அப்போது இது குறித்து மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இன்று காலை நடந்த இந்த திடீர் சாலை மறியலால் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்பவர்கள் என பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டனர். மேலும் அப்பகுதியில் சுமார் ½ மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெருக்கடி யும் ஏற்பட்டது.
- வர்த்தக சந்தை பாதிப்பு காரணமாகவே உள்நாட்டு சம்பளம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
- வருவாய் பெற்ற மாணவர்களின் பெயர் விபரங்களை ஐ.ஐ.டி. நிறுவனம் வெளியிடவில்லை.
மும்பை:
மும்பையில் உள்ள ஐ.ஐ.டி. நிறுவனத்தில் இந்த வருட கேம்பஸ் இண்டர்வியூ சமீபத்தில் நடைபெற்றது.
வழக்கமாக ஐ.ஐ.டி. பாம்பே கல்லூரியில் கேம்பஸ் வேலைவாய்ப்பில் என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்ப துறையை சேர்ந்த அதிகபடியான மாணவர்கள் சர்வதேச நிறுவனங்களுக்கு தேர்வாவார்கள்.
அதே போல இந்த ஆண்டும் கேம்பஸ் இண்டர்வியூவில் அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து, நெதர்லாந்து, ஹாங்காங் மற்றும் தைவான் ஆகிய நாடுகளில் இருந்து ஏராளமான நிறுவனங்கள் கலந்து கொண்டன.
பல்வேறு சுற்றுகளாக நடத்தப்பட்ட இந்த முகாமில் சர்வதேச நிறுவனங்களில் சுமார் 300 வேலை வாய்ப்புகள் இருந்தது. இந்த இடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வுகளில் 194 இடங்கள் மாணவர்களால் நிரப்பப்பட்டது.
இதில் ஐ.ஐ.டி.-பம்பாய் இன்ஸ்டிடியூட் மாணவர் ஒருவருக்கு ஆண்டுக்கு ரூ.3.7 கோடி சம்பளத்தில் சர்வதேச நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளது. இதன் மூலம் அந்த பட்டதாரி சர்வதேச வேலைவாய்ப்பில் இதுவரை இல்லாத அளவில் அதிக சம்பளம் பெறுபவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இதே போல உள்நாட்டு வேலைவாய்ப்பில் அதிக வருவாயாக ரூ.1.7 கோடி சம்பளத்தில் ஒரு மாணவருக்கு வேலை கிடைத்துள்ளது.
கடந்த ஆண்டு ஐ.ஐ.டி. பாம்பே கல்லூரியில் மிக உயர்ந்த சர்வதேச வேலைக்கான வருடாந்திர சம்பளம் ரூ.2.1 கோடியாக இருந்தது. இந்நிலையில் தற்போது அதை விட அதிகமாகவும் இதுவரை இல்லாத அளவிலும் ஆண்டு சம்பளம் ரூ.3.7 கோடி கிடைத்திருப்பது மிகப்பெரிய விஷயமாக கருதப்படுகிறது.
அதே நேரம் கடந்த ஆண்டு உள்நாட்டு சம்பளத்தில் அதிகபட்சம் ரூ.1.8 கோடியாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு அது ரூ.1.7 கோடியாக குறைந்துள்ளது. வர்த்தக சந்தை பாதிப்பு காரணமாகவே உள்நாட்டு சம்பளம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இது தவிர ஆண்டு சம்பளம் ரூ.1 கோடிக்கு மேல் 16 மாணவர்கள் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். இந்த வருவாய் பெற்ற மாணவர்களின் பெயர் விபரங்களை ஐ.ஐ.டி. நிறுவனம் வெளியிடவில்லை.
கடந்த ஆண்டு ஜூலை முதல் இந்த ஆண்டு ஜூன் வரையில் நடைபெற்ற கேம்பஸ் இண்டர்வியூ முகாம்களில் மொத்தம் 2,174 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 1,845 பேர் பங்கேற்றுள்ளனர். இதில் 1,516 பேருக்கு வேலை கிடைத்துள்ளது.
- சம்பளம் தற்போது வரை அமல்படுத்தப்படவில்லை. ஊதியக் குழு அறிவிக்கும் சம்பளத்தையும் மாநில அரசு அறிவிப்பதில்லை.
- அமைச்சுப் பணியாளர்களுக்கு 1992 முதல் மத்திய அரசு பணியாளர்களுக்கு இணையான சம்பளத்தை விட கூடுதலான சம்பளம் வழங்கப்படுகிறது.
நாமக்கல்:
அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரி ஆய்வக உதவியாளர்கள் சங்க மாநில தலைவர் நாமக்கல் ரவீந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் பணிபுரியும் தொழில் நுட்ப பணியாளர்கள் (கல்லூரி ஆய்வக உதவியாளர்கள்) மற்றும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு அரசுப் பணியாளர்களுக்கு இணையான சம்பளம் வழங்கப்படும் என மறைந்த தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி முதல்- அமைச்சராக இருந்தபோது உறுதியளித்தார். அந்த சம்பளம் தற்போது வரை அமல்படுத்தப்படவில்லை. ஊதியக் குழு அறிவிக்கும் சம்பளத்தையும் மாநில அரசு அறிவிப்பதில்லை.
ஆனால் அமைச்சுப் பணியாளர்களுக்கு 1992 முதல் மத்திய அரசு பணியாளர்களுக்கு இணையான சம்பளத்தை விட கூடுதலான சம்பளம் வழங்கப்படுகிறது. அதே நேரம் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களையும், ஆய்வக உதவியாளர்களையும் அரசு அலட்சியப்படுத்துகிறது.
தற்போதைய தமிழக முதல்-அமைச்சர் இந்த பிரச்சினையில் நேரடியாக தலையிட்டு கல்லூரி ஆய்வக உதவியாளர்களுக்கு, அரசுப் பணியாளர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.