search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொடக்கம்"

    • உலக சுற்றுலா தினவிழாவை முன்னிட்டு ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலா நடைபெற்றது
    • மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைத்தார்

    கரூர்,

    கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திலிருந்து மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் உலக சுற்றுலா தினவிழா- 2023 முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலா பேருந்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.கரூர் மாவட்டத்தில் உலக சுற்றுலா தின விழாவினை முன்னிட்டு மாவட்டத்திலுள்ள சுற்றுலாத் தலங்களை பிரபலப்படுத்தவும், பள்ளி மாணவ, மாணவிகளிடையே சுற்றுலா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கோடும் பள்ளி மாணவ, மாணவியருக்கான ஒரு நாள் விழிப்புணர்வுசுற்றுலா பயணத்தை சுற்றுலாத்துறையின் மூலமாக கரூர் மாவட்டத்தைச் சார்ந்த அரசு ஆதி திராவிட பழங்குடியினர் பள்ளிகள் மற்றும் விடுதிகளில் உள்ள 50 மாணவர்களை தேர்ந்தெடுத்து புகழிமலை சமணர்படுக்கை, கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், அரசு அருங்காட்சியகம், இராயனூர் மைசூர் போர் நினைவுதூண், திருக்காம்புலியூர் அம்மா பூங்கா மற்றும் வைகைநல்லூர் குண்டாங்கல் சமணர்சிற்பம் ஆகிய இடங்களுக்கு சுற்றுலா அழைத்துச்செல்லப்பட்டது .இந்த ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலா பயணத்தினை மாணவ, மாணவியர்கள் வாய்ப்பினை பயன்படுத்தி கொண்டு அறிவு சார்ந்த நல்ல தகவல்களை அறிந்து கொள்ள வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுமதி, உதவி சுற்றுலா அலுவலர் காமில் அன்சர் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்

      சேலம்:

      சேலம் மாவட்டம் ஓமலூர் காமலாபுரம் விமான நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகளை எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. நேற்று ஆய்வு செய்தார்.

      பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

      உதான் -5 திட்டத்தின் கீழ் சேலத்தில் இருந்து விமான சேவை தொடங்க 2 நிறுவனங்கள் முன்வந்துள்ளன. வருகிற 16-ந்தேதி முதல் அலையன்ஸ் நிறுவனத்தின் சார்பில் பெங்களூரு-சேலம் - கொச்சின் வழித்தடத்தில் விமா னம் இயக்கப்பட உள்ளது. அதேபோல் கொச்சின்- சேலம்- பெங்களூரு வழித்தடத்தில் மீண்டும் விமானம் இயக்கப்படும்.

      வாரத்தில் புதன்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை தவிர மற்ற 5 நாட்களில் விமான சேவை நடைபெறும்.

      இதே போன்று இன்டிகோ நிறுவனம் சார்பில் வருகிற 29-ந் தேதி முதல் பெங்களூரு-சேலம்-ஐதராபாத் வழித்தடத்திலும், மறுமார்க்கமாக மீண்டும் ஐதராபாத்-சேலம்- பெங்களூரு வழித்தடத்திலும் விமானம் இயக்கப்படும். திங்கள், செவ்வாய், வியாழன், சனிக்கிழமை என வாரத்தின் 4 நாட்களுக்கு இண்டிகோ விமான சேவை நடைபெறும்.

      அதே சமயம் வாரத்தின் 7 நாட்களிலும் சேலத்தில் இருந்து சென்னைக்கு விமான சேவை அளிக்க இண்டிகோ நிறுவனம் முன் வந்துள்ளது.

      சேலம்- சென்னை விமான சேவை மீண்டும் 29-ந் தேதி தொடங்கப்பட உள்ளது. 2 ஆண்டுகளுக்கு பிறகு விமான சேவை தொடங்குவதால் தேவையானஅனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

      சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள், வர்த்தகர்கள் இந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். சேலத்திற்கு நாள் ஒன்றுக்கு 5 முறை விமானங்கள் வந்து செல்லும் வாய்ப்பு கடும் முயற்சிக்கு பிறகு உருவாக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் இரவு நேர விமான சேவையும், சர்வதேச விமானங்கள் வந்து செல்லும் வகையிலான சேவைகளும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

      இவ்வாறு எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. கூறினார்.

      இந்த பேட்டியின் போது விமான நிலைய இயக்குனர் ரமேஷ், வக்கீல்கள் லட்சுமணபெருமாள், அய்யப்பமணி, குட்டி, பனமரத்துபட்டி ராஜா, ஆலோசனை குழு உறுபினர் சிங்கால் உள்பட பலர் உடனிருந்தனர்.

      • குளித்தலையில் வேப்பம்புண்ணாக்கு அரவை ஆலை தொடங்கப்பட்டது
      • கரூர் மண்டல இணைப்பதிவாளர் கந்தராஜா தொடங்கி வைத்தார்

      கரூர்,

      கரூர் மாவட்டத்தில் குளித்தலை சரகத்தில் குளித்தலை வட்ட வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் சார்பில் அயன் சிவாயம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் "வேப்பம்புண்ணாக்கு அரவை ஆலை மற்றும் விற்பனையகம்" கரூர் மண்டல இணைப்பதிவாளர் கந்தராஜா தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் குளித்தலை சரக துணைப்பதிவாளர் பொறுப்பு ஆறுமுகம் , கரூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் மேலாண்மை இயக்குநர் சந்திரன், கிருஷ்ணராயபுரம் ஒன்றிய களஅலுவலர் ரமேஷ், தோகைமலை கள அலுவலர் குமார் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் செயலாளர்கள், சங்க உறுப்பினர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

      • புகழூர் நகராட்சி பகுதியில் குடிநீர் குழாய் பதிப்பதற்கான பணி தொடங்கியது
      • புகழூர் நகர்மன்ற தலைவர் சேகர் என்கிற குணசேகரன் தலைமை வகித்து பணியினை தொடங்கி வைத்தார்

      வேலாயுதம்பாளையம்,

      கரூர் மாவட்டம் புகழூர் நகராட்சிக்கு உட்பட்ட 17-வது வார்டுக்கு உட்பட்ட மாத்யூ நகர் முதல் ராம் நகர் வரை (மாத்யூ நகர் விரிவாக்கம்) பொதுமக்களின் குடிநீர் பயன்பாட்டிற்காக, புதிதாக குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்கான தொடக்க விழா நடைபெற்றது.புகழூர் நகராட்சி 16-வதுவார்டுக்கு உட்பட்ட செந்தூர் நகர், மீனாட்சி நகர், மோகனா நகர் பகுதி பொதுமக்களின் குடிநீர் பயன்பாட்டிற்காக, புதிதாக குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்கான துவக்க விழா நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு புகழூர் நகர்மன்ற தலைவர் சேகர் என்கிற குணசேகரன் தலைமை வகித்து பணியினை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர் செல்வகுமரன், மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர் .

      • பள்ளி மாணவ-மாணவிகள், இரு சக்கர வாகன ஓட்டிகள், நான்கு சக்கர வாகன ஓட்டிகள் உள்பட பலர் தினமும் பாதிக்கப்பட்டு வந்தனர்.
      • தற்போது களிமேடு பகுதியில் சாலை விரிவாக்கம் மற்றும் நவீனப்படுத்தும் திட்டத்தின்கீழ் அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

      காங்கயம்:

      மத்திய அரசின் சாலை பராமரிப்பு மற்றும் விரிவாக்க திட்டப்பணிகளின் ஒரு கட்டமாக மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நகர்ப்புற சாலைகளை கண்டறிந்து அதனை சுகாதார முறையில் பேணி காக்கும் அடிப்படையில் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு காங்கயம் தாராபுரம் மெயின் ரோடு பகுதியான ேபாலீஸ் நிலையம், பஞ்சாயத்து யூனியன், குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றங்கள், அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் தனியார் வியாபாரம் நிறுவனங்கள் பகுதிகளை உள்ளடக்கிய களிமேடு எனும் பகுதியில் தனியார் ஒப்பந்ததாரர் மூலம் ரோடு அகலப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால் அதற்கான பணிகள் இதுவரை முறையாக நடைபெறவில்லை. சில காரணங்களை காட்டி காலம் தாழ்த்தப்பட்டு வந்தது. இதனால் பாதசாரிகள், வியாபாரிகள், பள்ளி மாணவ-மாணவிகள், இரு சக்கர வாகன ஓட்டிகள், நான்கு சக்கர வாகன ஓட்டிகள் உள்பட பலர் தினமும் பாதிக்கப்பட்டு வந்தனர்.

      இந்நிலையில் உடனடியாக களிமேடு சாலையை விரிவுபடுத்த வேண்டும். இல்ைலயெனில் கோரிக்கை நிறைவேறும் வரை காங்கயம் போலீஸ் நிலையம் உள்பட 2 முக்கிய இடங்களின் முன்பு சாலை மறியல் போராட்டம் நடத்துவோம் என அமைச்சர், மாவட்ட கலெக்டர், காங்கயம் தாசில்தார், ஒன்றிய தலைவர், நகராட்சி தலைவர் உள்ளிட்டோருக்கு களிமேடு பகுதி மக்கள் சார்பில் கோரிக்கை விடுத்து இருந்தனர். இதுகுறித்து போட்டோவுடன் மாலைமலரில் செய்தியும் வெளியானது. இதைத்தொடர்ந்து தற்போது களிமேடு பகுதியில் சாலை விரிவாக்கம் மற்றும் நவீனப்படுத்தும் திட்டத்தின்கீழ் அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

      • தேசிய குடும்ப நல கணக்கெடுப்பு பணிகள் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கப்பட்டுள்ளது.
      • இந்த பணிக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பேரூராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

      முதுகுளத்தூர்

      மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்ச கத்தின் வழிகாட்டுதலின் பேரில் மக்களியல் ஆராய்ச்சி மையம், திண்டுக்கல் காந்தி கிராமம், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணைந்து நடத்தும் தேசிய குடும்ப நல கணக்கெடுப்பு பணிகள் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களி லும் தொடங்கப்பட்டுள்ளது.

      அதன்படி ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேரூராட்சி பகுதிகளில் சுகாதார கணக்கெடுப்பு பணி தொடங்கியது. பேரூ ராட்சி தலைவர் ஷாஜகான் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் மாலதி முன்னிலை வகித்தார். சுகாதார ஆய்வாளர்கள் நேதாஜி, கருணாகரசேதுபதி, கிராமப்புற செவிலியர்கள் இந்திரா, சந்தியா மற்றும் களப்பணியாளர்கள் கணக்கெடுப்பு பணியை மேற்கொண்டனர்.

      இதில் குடிநீர் வடிகால், வீட்டின் தன்மை, மக்களின் வாழ்வியல், தாய் சேய் நலம், குழந்தை பிறப்பு, இறப்பு, தடுப்பூசி, ஊட்டச்சத்து, கருவறுதல், குடும்ப கட்டுப் பாடு சேவைகள், ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவு, சுகா தாரம் மற்றும் சமூக நல திட்டங்களின் மதிப்பீடு பற்றிய தகவல்கள் சேகரிக்கப்படுகிறது.

      இந்த பணிகள் 4 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த பணிக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பேரூராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

      • இன்று (5-ந்தேதி) மாலை 6.30 மணியளவில் தொடங்கி வருகிற 8-ந்தேதி வரை நடக்கிறது.
      • பாலப்பள்ளம் சி.எஸ்.ஐ. ஆயர் சாம் றிச்சர்டு நெல்சன் தலைமை தாங்குகிறார்.

      குளச்சல்:

      குளச்சல் அருகே ஆனக்குழி சி.எஸ்.ஐ. ஆயர் மண்டல திருச்சபையில் 203-வது சபை நாள் இன்று (5-ந்தேதி) மாலை 6.30 மணியளவில் தொடங்கி வருகிற 8-ந்தேதி வரை நடக்கிறது. முதல் நாள் திருச்சபை ஆயர் ஆமோஸ் ஆல்பர்ட் முன்னிலையில் கரும்பாட்டூர் சி.எஸ்.ஐ. ஆயர் ராஜா ஸ்டாலின் சிறப்பு செய்தி அளிக்கிறார்.

      பாலப்பள்ளம் சி.எஸ்.ஐ. ஆயர் சாம் றிச்சர்டு நெல்சன் தலைமை தாங்குகிறார். 2-ம் நாள் கிறிஸ்துபுரம் சி.எஸ்.ஐ. ஆயர் கில்டன் தயானந்த் தலைமை தாங்குகிறார். 3-ம் நாள் கல்லுக்கூட்டம் சேகர சி.எஸ்.ஐ. ஆயர் றிங்கள் ஜெயக்குமார் தலைமை தாங்குகிறார். 3-ம் நாள் காலை 10 மணிக்கு உபவாச கூடுகை நடக்கிறது. 4-ம் நாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு மத்திக்கோடு சேகர ஆயர் ஜெயக்குமார் தலைமையில் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி முன்னாள் முதல்வர் ஜேம்ஸ் ஆர்.டேனியல் சிறப்பு செய்தி அளிக்கிறார். திருச்சபை ஆயர் ஆமோஸ் ஆல்பர்ட் மற்றும் மத்திக்கோடு சேகரத்திற்குட்பட்ட ஆயர்கள், திருப்பணியாளர்கள் முன்னிலை வகிக்கின்றனர். சிறப்பு செய்தியை தொடர்ந்து கல்வி பரிசு, நன்றி படைப்பு மற்றும் அன்பின் விருந்து ஆகியவை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை ஆனக்குழி சி.எஸ்.ஐ. சபைக்குழுவினர் செய்து வருகின்றனர்.

      • பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் கணினி துறையில் 2 திறன் மேம்பாட்டு மையங்கள் தொடங்கப்பட்டது
      • இந்த மையத்தின் மூலம் பல வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் மாணவர்களுக்கு தேவையான பாடங்கள் கற்றுத்தரப்படும்

      பெரம்பலூர்,

      தமிழ்நாடு இன்பர்மேஷன் கம்யூனிகேஷன் டெக்னாலஜி அகாடமியின் (ஐ.சி.டி. அகாடமி ) சார்பில் செப்டம்பர் 30-ந் தேதி மதுரையில் பிரிட்ஜ் 2023-ன் 52-வது பதிப்பு மாநாடு நடைபெற்றது.டிரில்லியன் டாலர் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கான மனித மூலதனத்தை உருவாக்குதல் என்பதே இந்த கருத்தரங்கின் கருப்பொருள் ஆகும். எனவே இதை அடைவதற்கான சாத்தியக்கூறுகளை பற்றி விவாதிப்பதற்காக, கொள்கை வகுப்பாளர்கள், தொழில்துறை தலைவர்கள் மற்றும் கல்வியாளர்களை ஒன்றிணைத்து இந்த மாநாடு நடத்தப்பட்டது. தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் கல்வி சேவையின் மூலம் சமூக வ ளர்ச்சிக்கு முக்கிய ப ங்காற்றும் மிக சிறந்த ஆளு மையாக விளங்குபவர். புதிய தொ ழில்முனைவோர்களையும், புதிய, சிறந்த கண்டுபி டிப்பாளர்களையும் உருவாக்குவதை இலட்சியமாக கொண்டு வாழ்ந்து வருபவர். இந்த மாநாட்டில் வேந்தரின் வழிகாட்டுதலின்படி, தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் ஐ.சி.டி. அகாடமியின் பங்களிப்புடன் கணினி துறையில் 2 எக்சலென்ஸ் மையங்கள் அமைப்பதற்கான ஒப்பந்தம் போடப்பட்டது.

      இந்த மையத்தின் மூலம் பல வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் மாணவர்களுக்கு தேவையான பாடங்கள் கற்றுத்தரப்படும். கிளவுட் கம்ப்யூட்டிங் துறையில் பல பெரிய சர்வதேச கம்பெனிகளில் பணியில் சேர மாணவர்களின் திறன்களை வளர்ப்பதற்க்காக அமேசான் வெப் சர்வீசஸ் மூலம் வழங்கப்படும் "கிளவுட் ஆர்கிடெக்ட்டிங்" என்ற பயிற்சி வகுப்பும் மற்றும் மைக்ரோசாப்ட் மூலம் வழங்கப்படும் மைக்ரோசாப்ட் பவர் பி.ஐ. டேட்டா அனலிஸ்ட் என்ற பயிற்சி வகுப்பும் ஐ.சி.டி. அகடெமியின் பங்களிப்புடன் இந்த மையத்தின் மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியின் சார்பாக, தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியின் முதல்வர் இளங்கோவன் உட்பட சுமார் 15-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். தொழில் நிறுவங்களின் தலைமை நிர்வாக இயக்குனர்கள் , மனித வளமேம்பாட்டு அதிகாரிகள் மற்றும் மூத்த கல்வியாளர்கள்களின் பயனுள்ள உரைகளை கேட்க இந்த குழுவிற்கு வாய்ப்பு கிடைத்தது. மாணவர்களை மையமாகக் கொண்ட செயல்பாடுகளில், நாம் அனைவரும் எப்போதும் கவனம் செலுத்த வேண்டும் என்று இந்த கருத்தரங்கில் பேசிய அனைவரும் சுட்டிக்காட்டினர். மேலும், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தங்களுடைய திறன்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். 

      • அரியலூர் காதி கிராப்ட்டில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடங்கியது
      • தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா தொடக்கி வைத்தார்

      அரியலூர்,

      காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, அரியலூர் கதர் மற்றும் கிராம பொருள்கள் அங்காடியில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா தொடக்கி வைத்தார்.அப்போது அவர் கூறியதாவது, கடந்த ஆண்டு அரியலூரில் கதர் மற்றும் கிராம பொருள்கள் ரூ.33.59 லட்சத்துக்கு விற்பனையாகின. நிகழாண்டு தீபாவளியை முன்னிட்டு ரூ.55 லட்சம் விற்பனை இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.முன்னதாக அவர் அங்குள்ள மகாத்மாகாந்தி திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.அதனைத் தொடர்ந்து கு.சின்னப்பா எம்.எல்.ஏ., காந்தி படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். விழாவில் விற்பனையாளர்கள் நாகராஜன், பூதபாண்டியன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சுருளிபிரபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

      • அறந்தாங்கியில் 1 கோடி பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது
      • அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் பனைவிதைகளை நட்டு தொடங்கி வைத்தனர்

      அறந்தாங்கி, 

      புதுக்கோட்டை மாவ ட்டம் மணமேல்குடி அம்மா பட்டினத்தில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 1 கோடி பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.தமிழ்நாடு பனைமர தொழிலாளர்கள் நல வாரியம், கிரீன் நீடாசுற்று ச்சூழல் அமைப்பு, நாட்டு நலப்பணி திட்டம் ஆகிய அமைப்புகள் சார்பில் கடற்கரை பகுதியில் திருவ ள்ளுர் முதல் கன்னியா குமரி வரை 14 மாவட்டங்க ளில் சுமார் 1076 கிலோ மீட்டர் தூரத்தில் 1 கோடி பனை விதைகள் நட ஏற் பாடு செய்யப்பட்டிருந்தது.இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கட்டுமாவடி முதல் அரசங்கரை வரை சீனியார் அன்பறிவகம், தெற்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி மற்றும் அமரடக்கி புன்னகை அறக்கட்டளை ஆகிய அமைப்புகள் சார்பில் பனை விதை நடும் விழா நடைபெற்றது.நிகழ்ச்சியில் அமைச்ச ர்கள் எஸ். ரகு பதி, மெய்ய நாதன் கலந்து கொண்டு பனை விதைகள் நட்டு நிகழ்ச்சியை ெதாடங்கி வைத்த னர்.முன்னதாக பனை மரம் குறத்தும் அதன் பயன்பாடு மற்றும் பராமரித்தல் குறித்து ம் உறுதிமொழி ஏற்கப்ப ட்டது.

      • ஜெயங்கொண்டம் கோ ஆப்டெக்ஸ்-சில் தீபாவளி விற்பனை தொடங்கியது
      • மாவட்ட கலெக்டர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்

      அரியலூர்,

      ஜெயங்கொண்டத்திலுள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடங்கியது. இதற்காக நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டமாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா, குத்துவிளக்கேற்றி, முதல் விற்பனையை தொடக்கி வைத்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் துரை கிராம நிர்வாக அலுவலர் வேல்முருகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்,

       இது குறித்து கலெக்டர் கூறும் போது, நிகழாண்டு ரூ.55 லட்சம் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நிகழாண்டு, புதிய வடிவமைப்புடன் கூடிய கோவை மென்பட்டு புடவைகள், காஞ்சிபுரம், சேலம், ஆரணி, திருபுவனம் போன்ற பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பட்டுப் புடவைகள், கோவை கோரா காட்டன் சேலைகள், கூறைநாடு புடவைகள் மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்களின் கைவண்ணத்தில் உருவான பருத்தி சேலைகள், லினன் புடவைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேஷ்டி, கைலி, துண்டு ரகங்கள், பருத்தி சட்டைகள், திரைச்சீலைகள், மிதியடிகள், நைட்டிஸ், மாப்பிள்ளை செட் மற்றும் ஏற்றுமதி ரகங்கள் வந்துள்ளன.

      • அரியலூர் மற்றும் செந்துறை ஒன்றியங்களில் ரூ.6.38 கோடியில் புதிய வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டது
      • போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தொடங்கி வைத்தார்

      அரியலூர்,

      அரியலூர் மற்றும் செந்துறை ஒன்றியங்களில் ரூ.6.38 கோடியில் புதிய வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடக்கி வைக்கப்பட்டது.அரியலூர் ஒன்றியம் ராயம்புரம் ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், அங்கு ரூ.1.88 கோடி மதிப்பீட்டில் ராயம்புரம், பொட்டவெளி சாலை மேம்படுத்துதல், சிறுபாலம் திரும்ப கட்டுதல் மற்றும் 129 மீட்டர் நீளத்துக்கு தடுப்புச் சுவர் கட்டுதல் போன்ற பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்தார்.தொடர்ந்து செந்துறை ஒன்றியம், வாளரக்குறிச்சி கிராமத்தில் ரூ.1.65 கோடி மதிப்பீட்டில் இரும்புலிக்குறிச்சி, பாளையபாடி , மணகெதி வரையிலும், நாகல்குழி ஊராட்சியில் ரூ.1.85 கோடி மதிப்பீட்டில் உஞ்சினி , வாரியங்காவல் வரையிலும் சாலையை அகலப்படுத்தல் பணியையும், அதே போல் இலை க்கடம்பூர் ஊரா ட்சியில் ரூ.1 கோடி மதிப்பீ ட்டில் செந்துறை , மாத்தூர் வரை சாலை மேம்படுத்துதல் பணியையும் தொடக்கி வைத்த அமைச்சர் சிவ சங்கர், பணியை தரமான பொரு ள்களை கொண்டு விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று சம்ப ந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.இந்நிகழ்ச்சிகளுக்கு கலெக்டர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா தலைமை வகி த்தார். உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் பரிமளம், நெடுஞ்சா லைத்துறை உதவி கோட்டப் பொறியாளர்கள் சிட்டிபாபு, ராஜா, செந்துறை வட்டாட்சியர் பாக்கியம்விக்டோரியா மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

      ×