search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாகுபடி"

    • விவசாயிகளின் போராட்ட கோரிக்கைகளை ஒப்புதல் அளித்தபடி உடன் அமல்படுத்த வேண்டும்.
    • குறுவை சாகுபடிக்கு காப்பீட்டு திட்ட இழப்பீட்டை வழங்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நெல் குவிண்டாலுக்கு ரூ.2500 வழங்க வலியுறுத்தி டார்ச் லைட் அடித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் திருமருகல் சந்தைப்பேட்டை கடைத்தெருவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் தங்கையன், ஒன்றிய தலைவர் மாசிலாமணி, துணை தலைவர் தியாகராஜன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    கட்சியின் ஒன்றிய செயலாளர் சந்திரசேகர் ஆர்ப்பாட்டத்தில் பேசினார். இதில் 13 மாத கால விவசாயிகளின் போராட்ட கோரிக்கைகளை ஒப்புதல் அளித்தபடி உடன் அமல்படுத்த வேண்டும், கோயில், மடம், அறக்கட்டளை, வக்போர்டு குத்தகை விவசாயிகள் தொடர் பேரிடர் பாதிப்புகளின் குத்தகை பாக்கியை தள்ளுபடி செய்ய வேண்டும்.

    குறுவை சாகுபடிக்கு காப்பீட்டுத் திட்ட இழப்பீட்டை வழங்க வேண்டும், 2021-22 சம்பா காப்பீட்டுத் தொகையை உடனே வழங்க வேண்டும், வேளாண் இடு பொருள்களான யூரியா, டி.ஏ.பி பொட்டாஷ் உரங்களை கூட்டுறவு வங்கி மூலம் தங்கு தடையின்றி வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    இதில் விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் தமிழரசன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • தரைப்பாலம் முழுவதும் இடிக்கப்பட்டு புதிய பாலம் அமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று முடிந்தது.
    • பாலம் அமைக்கப்பட்ட இடத்தில் கொள்ளிடம் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்பு கலூரில் நாகை-நன்னிலம் நெடுஞ்சாலையின் குறுக்கே தோட்டக்குடி பாசன வாய்க்கால் அமைந்துள்ளது.

    இந்த பாசன வாய்க்கால் மூலம் தாமரைக்குளம், பூவாளி தெரு, பட்டக்கால் தெரு உள்ளிட்ட 3 கிராமங்களுக்கு உட்பட்ட சுமார் 250 ஏக்கர் விளைநிலங்களுக்கு முக்கிய பாசன வாய்க்காலாக தோட்டக்குடி வாய்க்கால் உள்ளது.

    இந்த வாய்க்காலில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தரைப்பாலம் ஒன்று இருந்தது.

    கடந்த சில ஆண்டுக்கு முன்னர் தரைப்பாலத்தில் திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் தரைப்பாலம் முழுவதும் இடிக்கப்பட்டு புதிய பாலம் அமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று முடிந்தது.

    இந்த நிலையில் முடிகொண்டான் ஆற்றில் காவிரி பாசன நீர் வந்து சேர்ந்துள்ளது.

    இந்த பாசன நீர் தோட்டக்குடி வாய்க்கால் வழியாக விளை நிலங்களில் உட்புகாமல் மண்ணை வைத்து அடைக்கப்பட்டுள்ளது.

    இதனால் மேற்கண்ட கிராம பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா மற்றும் குருவைப் பயிர்களுக்கு தண்ணீர் கிடைக்காமல் பயிர்கள் சேதம் அடையும் அபாய நிலையில் உள்ளது.

    மேலும் பாலம் அமைக்கப்பட்டுள்ள இடத்தின் வழியாக கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட குடிநீர் குழாய் செல்கிறது.

    இந்த குடிநீர் நாகூர், நாகப்ப ட்டினம், வேளாங்கண்ணி, வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொதும க்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் பாலம் அமைக்கப்பட்ட இடத்தில் கொள்ளிடம் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் அதிக அளவில் வெளியேறி முடிகொண்டானாற்றில் கலந்து வீணாகிறது.

    இந்த குடிநீர் குழாய் உடைப்புகள் சரி செய்யப்படாமல் உள்ளது.

    கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் குடிநீரை பயன்படுத்தும் நாகூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, வேதா ரண்யம் உள்ளிட்ட பகுதி களை சேர்ந்த 50,000-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது.

    இது குறித்து சம்பந்த ப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொண்டு கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்ட குழாய் உடைப்பை சரி செய்து தோட்டக்குடி வாய்க்கால் பாசன பெரும் விவசாய பகுதிகளுக்கு தண்ணீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்து எதிர்பார்த்துள்ளனர்.

    • மாலையில் குளிர்ந்த காற்று வீசத் தொடங்கி தொடர்ந்து மிதமான அளவில் மழை பெய்தது.
    • தொடர்ந்து மழை பெய்தால் அறுவடைக்க தயாரான பயிர்கள் பெருமளவில் பாதிக்கப்படும் என விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக பகலில் வெயில் சுட்ரெித்தாலும் மாலை, இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது.

    நேற்று பகலில் வெயில் அடித்தது. மாலையில் குளிர்ந்த காற்று வீசி மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து மிதமான அளவில் மழை பெய்தது.

    1 மணி நேரம் நீடித்த மழை பினனர் வெறித்தது.

    அதன்பின்னர் வானில் இடி முழக்கமிட்டு கொண்டே இருந்தது.

    இதேபோல் வல்லம், திருக்காட்டுப்பள்ளி, பாபநாசம், திருவையாறு ,கும்பகோணம், குருங்குளம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை கொட்டியது.

    தஞ்சை மாவட்டத்தில் தற்போது முன்பட்ட குறுவை நெல் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.

    தொடர் மழையால் அந்த வகை குறுவை நெற்பயிர்கள் சாய்ந்தன.

    தஞ்சை அருகே குருங்களூர்உள்ளிட்ட மாவட்டத்தின் சில இடங்களில் முன்பட்ட குறுவை நெற்பயிர்கள் சாயந்துள்ளன.

    தொடர்ந்து மழை பெய்தால் அறுவடைக்க தயாரான பயிர்கள் பெருமளவில் பாதிக்கப்படும் என விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

    இன்று பகலில் வெயில் அடித்து வந்தாலும் மாலை, இரவு நேரங்களில் மீண்டும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தஞ்சை மாவட்டத்தில் இன்று காலை 9 மணியுடன் முடிவடைந்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    வல்லம்-39, குருங்குளம்-47, திருவையாறு-24, கும்பகோணம்-15.40, தஞ்சாவூர்-6.

    • குறுவையில் 49 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நிகழாண்டு இந்த உச்ச நிலை எட்டப்பட்டுள்ளது.
    • குறுவையை போல சம்பா பருவ நெல் சாகுபடியிலும் இலக்கை விஞ்சி சாதனை நிகழ்த்தப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை, திருவாரூர் ,மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட காவிரி மாவட்ட பாசனத்துக்கு இந்த ஆண்டு வழக்கத்தை விட முன்கூட்டியே மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இதனால், குறுவை பருவ நெல் சாகுபடிப் பரப்பில் இலக்கை விஞ்சும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

    இதன்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் 1.75 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதையும் விஞ்சி 1.81 லட்சம் ஏக்கரில் நடவு செய்யப்பட்டு, வளர்ச்சி பருவத்தில் உள்ளது.

    குறுவையில் 49 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நிகழாண்டு இந்த உச்ச நிலை எட்டப்பட்டுள்ளது.

    இதேபோல, திருவாரூர் மாவட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 1.50 லட்சம் ஏக்கரை விஞ்சி 1.53 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ளது.

    நாகை மாவட்டத்தில் 32,800 ஏக்கருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், 10,190 ஏக்கர் கூடுதல் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டு, மொத்தத்தில் 42,990 ஏக்கராக உயர்ந்தது.

    டெல்டா மாவட்டங்களில் நாகை மாவட்டத்தில்தான் நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் 23 சதவீதம் கூடுதல் பரப்பில் பயிரிடப்பட்டு, எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு நிகழாண்டு சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது என்கின்றனர் வேளாண் துறையினர்.

    மயிலாடுதுறை மாவட்டத்தில் 92,500 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், அதையும் கடந்து 95,000 ஏக்கரில் சாகுபடி செய்யப்படுகிறது.

    ஒட்டுமொத்தமாக ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் கிட்டத்தட்ட 4.72 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

    தற்போது டெல்டா மாவட்டங்களுக்கு தேவையான அளவுக்கு நீர் வரத்து உள்ளது.

    இதனால், குறுவையைப் போல சம்பா பருவ நெல் சாகுபடியிலும் இலக்கை விஞ்சி சாதனை நிகழ்த்தப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    ஆனால், குறுவை சாகுபடிப் பரப்பளவு அதிகரித்து விட்டதால், சம்பா பருவ நெல் பயிர் பரப்பு இயல்பான அளவை விட குறைவாகவே இருக்கும் என்கின்றனர் வேளாண் துறையினர்.

    இதனால், தஞ்சாவூர் மாவட்டத்தில் 1.85 லட்சம் ஏக்கரிலும், திருவாரூர் மாவட்டத்தில் 1.12 லட்சம் ஏக்கரிலும் சம்பா சாகுபடி எதிர்பார்க்கப்படுகிறது.

    நாகை மாவட்டத்தில் 1.67 லட்சம் ஏக்கரிலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் சுமார் 1.80 லட்சம் ஏக்கரிலும் சம்பா, தாளடி மேற்கொள்ளப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    என்றாலும், தாளடியில் இயல்பான அளவை விஞ்சும் என்ற நம்பிக்கையுடன் வேளாண் துறையினர் உள்ளனர்.

    காவிரி நீர் வரத்து, அவ்வப்போது பெய்யும் பருவ மழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் சம்பாவுக்கும் சாதகமான சூழ்நிலை நிலவுகிறது.

    கடந்தை ஆண்டை போல நிகழாண்டும் தண்ணீர் பிரச்னை இருக்காது என்கிறார் தனியார் வானிலை ஆய்வாளர் தகட்டூர் என். செல்வகுமார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்:-

    மேட்டூர் அணையில் தற்போதைக்கு நீர்மட்டம் குறையாது. மீண்டும் வருகிற 25 ஆம் தேதிக்கு பிறகு மழை இருக்கும்.

    அப்போது மேட்டூர் அணைக்கு 50,000 முதல் 1 லட்சம் கன அடி வீதம் வரை தண்ணீர் வரத்து இருக்க வாய்ப்புள்ளது.

    இதன் பின்னர், செப்டம்பர் மாதத்தில் 2 முதல் 4 முறை தொடர் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

    இவற்றில் இரு முறை மழை வலுப்பெறும். எனவே, செப்டம்பரிலும் ஏறத்தாழ ஒரு லட்சம் கன அடி வீதம் தண்ணீர் வர வாய்ப்பு இருக்கும்.

    இதன் காரணமாக தென் மேற்கு பருவ மழை முடியும் வரை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியிலேயே தொடரும்.

    இதேபோல, வட கிழக்கு பருவ மழையும் நன்றாக பெய்யும் என்பதால், அப்பருவத்தில் டெல்டா மாவட்டங்களுக்கு தண்ணீர் தேவைப்படாது.

    கடந்த ஆண்டை போலவை நிகழாண்டும் வட கிழக்கு பருவ மழை அதிகமாகவே இருக்கும். எனவே, சம்பா பருவத்திலும் தண்ணீர் பிரச்னை இருக்காது.

    மேலும், ஜனவரியில் அணை மூடும்போது நீர்மட்டம் 100 அடிக்கும் அதிகமாகவே நீடிக்கும் என்றார்.

    • தோட்டக்கலைத்துறை சார்பில் பல்வேறு மானியத்திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • ஒரு ஏக்கரில் பந்தல் அமைக்க ஒரு லட்சம் ரூபாய் வரை செலவாகிறது.

    உடுமலை :

    உடுமலை பகுதியில் கிணற்றுப்பாசனத்துக்கு பல ஆயிரம் ஏக்கரில் அனைத்து சீசனிலும் காய்கறி சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.இதில் நிலத்தடி நீர்மட்டம் குறைவாக உள்ள பகுதியில் விளைநிலங்களில் பந்தல் மற்றும் சொட்டு நீர் பாசனம் அமைத்து காய்கறி சாகுபடி செய்யத்துவங்கினர். பந்தல் காய்கறி சாகுபடிக்கு தோட்டக்கலைத்துறை சார்பில் பல்வேறு மானியத்திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.தென்மேற்கு பருவமழைக்குப்பிறகு தற்போது பரவலாக பந்தலில், பீர்க்கன், புடலை, பாகற்காய் சாகுபடி செய்துள்ளனர்.இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    ஒரு ஏக்கரில் பந்தல் அமைக்க ஒரு லட்சம் ரூபாய் வரை செலவாகிறது. பின்னர் சொட்டு நீர் பாசனம் அமைத்து மேட்டுப்பாத்தியில் விதைகளை நடவு செய்கிறோம்.சாகுபடியில் சீதோஷ்ண நிலை மாற்றத்தால் பல்வேறு நோய்த்தாக்குதல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க ஒட்டுப்பொறி மற்றும் விளக்குப்பொறி அமைத்து பூச்சிகளை கவர்ந்திழுத்து அழிக்கும் முறையை பின்பற்றத்துவங்கியுள்ளோம்.கடந்த சீசனில் தொடர் மழையால் பந்தலில் காய்களை பறிக்க முடியாமல், அழுகி நஷ்டம் ஏற்பட்டது.

    நீண்ட இடைவெளிக்குப்பிறகு தற்போது, புடலங்காய்க்கு நல்ல விலை கிடைத்து வருகிறது. ஆவணி மாத முகூர்த்த சீசன் துவங்குவதால் பந்தல் காய்களுக்கு நல்ல விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளோம்.நிலையான விலை கிடைக்க பந்தல் காய்கறி விவசாயிகளை ஒருங்கிணைத்து விலை நிர்ணயம் செய்ய, தோட்டக்கலைத்துறையினர் உதவ வேண்டும் என்றனர். 

    • பல்வேறு கிராமங்களில் கடந்த 15 நாட்களாக குறுவை அறுவடை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    • குறைந்த விலைக்கு தனியார் வியாபாரிகளிடம் கடனுக்கு நெல்லை விற்க வேண்டிய கட்டாயத்தில் விவசாயிகள் உள்ளனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவுக்கு உட்பட்ட சீர்காழி, கொள்ளிடம், புத்தூர், மாதானம், நல்லூர், ஆரப்பள்ளம், வடகால், நல்ல விநாயகபுரம், கடைக்கண் விநாயகர் நல்லூர், பச்சை மாதானம், திருப்பன்கூர், வைத்தீஸ்வரன் கோவில், ஆதமங்கலம், பெருமங்கலம், மங்கைமடம், திருவெண்காடு உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் மோட்டார் பாசன மூலம் குறுவை சாகுபடி செய்தனர்.

    தற்போது பல்வேறு இடங்களில் சாகுபடி செய்யப்பட்ட குறுவை நெற் பயிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ளது.

    இதேபோல் பல்வேறு கிராமங்களில் கடந்த 15 நாட்களாக குறுவை அறுவடை செய்யும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் இதுவரை குறுவை நெல்லை கொள்முதல் செய்ய அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் தமிழக அரசு திறக்காததால் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகள் விவசாயிகள் அருகில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இந்த நாட்களாக அடுக்கி வைத்து காத்துள்ளனர்.

    மேலும் விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்க முடியாமல் குறைந்த விலைக்கு தனியார் வியாபாரிகளிடம் கடனுக்கு நெல்லை விற்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்,

    இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து குறுவை நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • காற்றில் நெல் மணிகள் ஒன்றொடு ஒன்று மோதியும், வெடித்தும் வெள்ளை நிறத்தில் ஆங்காங்கே காணப்படுகிறது.
    • நாவாய் பூச்சி தாக்குதலுக்கு வசம்பை பொடியாக்கி வயலில் தூவினால் நாவாய் பூச்சைக் கட்டுப்படுத்தலாம்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகாவில் தலைஞாயிறு, பிராந்தியங்கரை, உம்பளச்சேரி, மணக்குடி உள்ளிட்ட ஆற்றுப் பாசன பகுதிகளில் வழக்கமாக 5000 ஏக்கரில் மட்டுமே குறுவை சாகுபடி நடைபெறும். ஆனால், இந்த ஆண்டு மேட்டூர் அணை ஒரு மாதம் முன்பாக திறந்ததால் சுமார் 8000 ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெற்றுள்ளது. தற்போது குறுவை சாகுபடிகள் நன்றாக வளர்ந்து கதிர் அதிகளவில் வெளிவந்த நிலையில் குறுவை சாகுபடியில் கதிர் நாவாய் பூச்சி தாக்குதல் அதிகளவில் காணப்படுகிறது. பருவம் தப்பிய மழையால் நெல் சூழ் பிடிக்கும் வேளையில் கதிரில் தண்ணீர் விழுந்தும் காற்றில் நெல் மணிகள் ஒன்றொடு ஒன்று மோதி நெல்மணிகள் வெடித்தும் வெள்ளை நிறத்தில் ஆங்காங்கே காணப்படுகிறது. உம்பளச்சேரி பகுதியில் காணப்படும் கதிர் நாவாய் பூச்சி தாக்குதலை வேளாண்மை துறை உதவி இயக்குனர் கருப்பையா மற்றும் வேளாண்மை அலுவலர் நவீன்குமார் ஆலோசனையின் பேரில் தலைஞாயிறு உதவி வேளாண்மை அலுவலர் கலைவாணி, விதை அலுவலர் ஜீவா, உதவி தோட்டக்கலை அலுவலர் செல்வராஜ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். பின்பு, நாவாய் பூச்சி தாக்குதலுக்கு வசம்பை பொடியாக்கி வயலில் தூவினால் நாவாய் பூச்சைக் கட்டுப்படுத்தலாம் என விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கினர்.

    • 10 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது.
    • அதிகளவு நிலக்கடலை சாகுபடி செய்யப்படுகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் எண்ணெய்வித்து பயிர், 10 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இதில் அதிகளவு நிலக்கடலை சாகுபடி செய்யப்படுகிறது.எண்ணெய் வித்து பயிர்களின் சாகுபடி பரப்பு மற்றும் உற்பத்தியை அதிகரிக்க வேளாண் துறை சார்பில், தேசிய எண்ணெய் வித்துகள் இயக்கத்தின் வாயிலாக, 25.28 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    நிலக்கடலை நுண்ணூட்டச்சத்து வினியோகம், உயிர் உரங்கள் வினியோகம், ஜிப்சம் இடுதல், உயிரியல் காரணி வினியோகம்,பண்ணைக்கருவிகளான ரோட்டாவேட்டர் கொள்முதல் செய்ய, 34 ஆயிரம் ரூபாயும், மிகவும் பிற்படுத்தப்பட்ட, சிறு, குறு, மலைஜாதி மற்றும் பெண் விவசாயிகளுக்கு ரூ/ 42 ஆயிரம் வழங்கப்படுகிறது.விசைத்தெளிப்பான்களுக்கு தலா, 3 ஆயிரம், தார்பாலின்கள் வாங்க, 2,500 ரூபாய் மற்றும் விதையிடும் கருவி வாயிலாக விதைப்பு செய்ய விதைப்பு கூலி ஹெக்டருக்கு, ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது.மேலும் விபரங்களுக்கு, மடத்துக்குளம், குடிமங்கலம் மற்றும் உடுமலை வட்டார வேளாண் உதவி இயக்குனர் அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • விதை முளைப்பு திறன் மற்றும் பாரம்பரிய ரகங்களை விதைப்பண்ணையில் சாகுபடி செய்வது பற்றி வலியுறுத்தினர்.
    • தரமான விதைகள் உற்பத்தி செய்யும் வரைமுறைகள் பற்றி விவசாயிகளுக்கு விரிவாக எடுத்து கூறினார்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், திருமருகல் வட்டாரம் திருச்செங்காட்டங்குடி கிராமத்தில் 2022-23 வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் தரமான விதை உற்பத்தி தொழில் நுட்ப பயிற்சி வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) கலைச்செல்வன் தலைமையில் நடைப்பெற்றது.

    அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் மகேஸ்வரி பயிற்சியின் நோக்கம் மற்றும் விதைப்பண்ணையின் முக்கியத்துவம் பற்றி எடுத்து கூறினார்.பயிற்சியில் சிறப்பு விருந்தினராக ஓன்றியக்குழு உறுப்பினர் சரவணன் கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றினார். திருச்செங்காட்ங்குடி ஒன்றியத்குழு உறுப்பினர் இளஞ்செழியன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் வள்ளி கலியமூர்த்தி ஆகியோர் விதை முளைப்பு திறன் மற்றும் பாரம்பரிய ரகங்களை விதைப்பண்ணையில் சாகுபடி செய்வது பற்றி வலியுறுத்தினர்.

    விதை சான்று அலுவலர் மாறன் விதைப்பண்ணையில் கடைபிடிக்க வேண்டிய தொழில் நுட்பங்கள் பற்றியும் மற்றும் தரமான விதைகள் உற்பத்தி செய்யும் வரைமுறைகள் பற்றியும் விவசாயிகளுக்கு விரிவாக எடுத்து கூறினார். தோட்டக்கலை உதவி அலுவலர் செல்லபாண்டியன், தோட்டக்கலைத்துறை சார்பான திட்டங்கள் பற்றி விவசாயிகளிடம் விளக்கினார். ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் ஜெயராமன் மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர் பிரபு ஆகியோர் செய்து இருந்தனர்.

    • அட்மா திட்டத்தில் இயற்கை வேளாண்மை முறையில் பாரம்பரிய நெல் சாகுபடி குறித்த தொழில்நுட்ப பயிற்சி மாவட்ட அளவவில் நடைப்பெற்றது.
    • பயிற்சியில் 50 க்கும் மேலான விவசாயிகள் ஆர்வமாக கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

    ஆத்தூர்:

    ஆத்தூர் அருகே உள்ள கல்பகனூர் கிராமத்தில் அட்மா திட்டத்தில் இயற்கை வேளாண்மை முறையில் பாரம்பரிய நெல் சாகுபடி குறித்த தொழில்நுட்ப பயிற்சி மாவட்ட அளவவில் நடைப்பெற்றது. அட்மா திட்ட தலைவர் டாக்டர் செழியன் கலந்துகொண்டு தலைமை வகித்தார்.

    வேளண்மை உதவி இயக்குனர் குமாரசாமி முன்னிலை வகித்தார். அவர் கூறுகையில் தற்போது உள்ள ஆத்தூர் வட்டார வேளாண்மை விரிவாக்க அலுவலகம் இனி தென்னங்குடிபாளையம் சேவை மையத்தில் செயல்படும் என தெரிவித்தார்.

    வேளாண்மை அலுவலர் ஜானகி வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் செயல்படும் திட்ட ங்கள் மானியங்கள் குறித்தும், வேளாண்மை விரிவாக்க மையம் இடுப்பொருட்கள் விபரம், இயற்கை முறை சாகுபடி தொழில்நுட்பங் களை பற்றி கூறினார்.

    வட்டார தொழில்நுட்ப மேலளார் சுமித்ரா, சேலம் வேளாண் அறிவியல் நிறுவனத்தை சேர்ந்த ஹரிகிருஷ்ணன், உதவி வேளாண்மை அலுவலர் பிரவீன் ஆகியோர் பேசினார்கள். பயிற்சிக்கான ஏற்பாடுகளை கல்பகனூர் துணைத் தலைவர் செல்வம், உதவி தொழில்நுட்ப மேலாளர் தமிழ்ச்செல்வி, திலகவதி ஆகியோர் செய்து இருந்தனர்.

    பயிற்சியில் 50 க்கும் மேலான விவசாயிகள் ஆர்வமாக கலந்துகொண்டு பயன்பெற்றனர். முடிவில் அனைத்து விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

    • மேட்டூர் அணை முன்கூட்டியே திறக்கப்பட்டதால் குறுவை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
    • ரூ.260 மதிப்புள்ள யூரியாவை வாங்க ரூ.700 மதிப்புள்ள நுண்ணுயிர்கள் மற்றும் இடுபொருட்களை வாங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப் படுகின்றனர்.

    திருத்துறைப்பூண்டி:

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, திருத்துறைப்பூண்டி தொகுதி எம்.எல்.ஏ. மாரிமுத்து அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    மேட்டூர் அணை முன்கூட்டியே திறக்கப்பட்டதால் குறுவை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். வழக்கமான சாகுபடி பரப்பை விட அதிக அளவில் சாகுபடி நடந்து வருகிறது. ஆனால் யூரியா, டி.ஏ.பி. போன்ற உரங்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. ரூ.260 மதிப்புள்ள யூரியாவை வாங்க ரூ.700 மதிப்புள்ள நுண்ணுயிர்கள் மற்றும் இடுபொருட்களை வாங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப் படுகின்றனர். இதனால் விவசாயிகளிடையே சாகுபடியில் ஒரு சுணக்கமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    தற்போது நமது நாட்டில் உர உற்பத்தி குறைவு காரணமாக வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதால் போதிய அளவு உரம் கிடைப்பதில் ஒரு நிச்சயமற்ற தன்மை நிலவி வருகிறது. இதனால் விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எனவே தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் துரித நடவடிக்கை எடுத்து உர தட்டுப்பாட்டை போக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நிகழ்ச்சிக்கு மாவட்ட தோட்டக்கலை துறை துணை இயக்குனர் கலைச்செல்வன் தலைமை தாங்கினார்.
    • தென்னைசாகுபடி, பூச்சிகள் மற்றும் நோய்களுக்கான தீர்வு நடவடிக்கைகள், உரங்கள் எப்போதெல்லாம் இட வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் வேப்பங்குளத்தில் தேங்காய் கலப்பின உரமிடும் தொழில்நுட்பம் மற்றும் பல்வேறு தன்மைகள் குறித்து செயல்முறை விளக்கம் நடத்தப்பட்டது.இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தோட்டக்கலை துறை துணை இயக்குனர் கலைச்செல்வன் தலைமை தாங்கினார்.

    துணை பேராசிரியர் டாக்டர் அருண்குமார் கலந்து கொண்டு செய ல்முறை விளக்கம்அளித்தார். இதில் தென்னைசாகுபடி, பூச்சிகள் மற்றும்நோய்களு க்கான தீர்வு நடவடிக்கைகள், உரங்கள் எப்போதெல்லாம் இட வேண்டும் என்பது குறித்து தோட்டக்கலை துணைப் பேராசிரியர் டாக்டர் அருண்குமார், நோயியல் உதவி பேராசிரியர் டாக்டர் சுருளிராஜன் ஆகியோர் விளக்கம் அளித்தனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

    ×