search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 227127"

    • மாநகர பகுதியில் பெரும்பாலான இறைச்சி கடைகள் இன்று திறக்கப்படவில்லை.
    • டவுன்- குற்றாலம் ரோட்டில் உள்ள ஒரு கடையில் கோழி இறைச்சி சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்டது

    நெல்லை:

    மகாவீர் ஜெயந்தியை யொட்டி நெல்லை மாநகர பகுதியில் குடியிருப்புகளுக்கு அருகில் அமைந்திருக்கும் இறைச்சி கடைகளை இன்று ஒரு நாள் மட்டும் மூடும்படி மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவிட்டிருந்தார்.

    இறைச்சி விற்பனை

    இதையடுத்து மாநகர பகுதியில் பெரும்பாலான இறைச்சி கடைகள் இன்று திறக்கப்படவில்லை. ஆனாலும் ஒரு சில கடைகளில் முன்பக்க வாசலை மூடிவிட்டு சட்ட விரோதமாக பின்பக்க வாசல் வழியாக இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக கமிஷன ருக்கு புகார் சென்றது.

    அவரது உத்தரவின் பேரில் நகர்நல அலுவலர் டாக்டர் சரோஜா அறிவுறுத்தலின் பேரில் மாநகராட்சி உதவி கமிஷனர் வெங்கட்ராமன் மேற்பார்வையில் டவுன் மண்டல சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் பணியாளர்கள் டவுன் பகுதியில் உள்ள கடைகளில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.

    பினாயில் ஊற்றி அழிப்பு

    அப்போது டவுன்- குற்றாலம் ரோட்டில் உள்ள ஒரு இறைச்சி கடையில் கோழி இறைச்சி சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை சுகாதார அலுவலர் இளங்கோ பறிமுதல் செய்து பினாயில் ஊற்றி அழித்தார்.

    • ராமநாதபுரம் மாநகராட்சியாக விரைவில் தரம் உயர்த்திய அரசுகக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
    • அடிப்படை வசதிகள் பொதுமக்களுக்கு கிடைக்கவும் இந்த அறிவிப்பு உதவும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்று ராமநாதபுரம் வர்த்தக சங்கம் சார்பில் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் ராமநாதபுரம் நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என அறிவித்தார். இதற்கு ராமநாதபுரம் வர்த்தக சங்கத்தினர் தமிழ்நாடு அரசுக்கும், முதல்-அமைச்ச ருக்கும் நன்றியை தெரிவித்து உள்ளனர்.

    இது குறித்து ராமநாதபுரம் வர்த்தக சங்கத்தினர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் வர்த்தக சங்கம் சார்பில் ராமநாதபுரம் நகராட்சியை மாநகராட்சி யாக அறிவிக்க வேண்டும் என்று கடந்த பல ஆண்டுக ளாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில் ராமநாதபுரம் மாநகராட்சி யாக தரம் உயர்த்தப்படும் என அறிவித்த தமிழ்நாடு அரசுக்கும், முதல்-அமைச் சருக்கும் எங்களது நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

    மாவட்ட தலைநகராக உள்ள ராமநாதபுரம் விரை வாக வளர்ச்சி அடையவும், பல புதிய தொழில்கள் தொடங்கவும், அதன் மூலம் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவும், அடிப்படை வசதிகள் பொதுமக்களுக்கு கிடைக்கவும் இந்த அறிவிப்பு உதவும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சேலம் மாநகராட்சி கூட்டம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் தலைமையில் கூட்ட அரங்கில் நடந்தது.
    • துணை ஆணையாளர் அசோக்குமார், துணை மேயர் சாரதா தேவி மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    ேசலம்:

    சேலம் மாநகராட்சி கூட்டம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் தலைமையில் கூட்ட அரங்கில் நடந்தது. துணை ஆணையாளர் அசோக்குமார், துணை மேயர் சாரதா தேவி மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் மாநகராட்சி அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படுகிறார்கள். கவுன்சிலர்கள் சொல்வதை யாரும் கேட்பதில்லை என்று சரமாரரியாக கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினர். மேலும் மண்டல தலைவர் கலையமுதன் பேசுகையில், புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள இடம் பஸ் நிலைய பயன்பாட்டிற்கு தான், அதில் பொருட்காட்சி நடத்த கூடாது, அதிகாரிகள் மாநகராட்சி பணிகளில் பல தவறுகள் செய்கிறார்கள் என்று கூறினார்.

    அதற்கு மேயர் பதில் அளித்து பேசுகையில் அதிகாரிகள் யார் தவறு செய்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மண்டல தலைவர் கலையமுதன் நீண்ட நேரம் பேசியதால் அதற்கு தி.மு.க. கவுன்சிலர்கள் மற்றும் விடுதலை சிறுத்தை உறுப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பரபரப்பு நிலவியது.

    மேலும் தனி குடிநீர் திட்டம் முழுவதும் தி.மு.க. கொண்டு வந்ததாக கலையமுதன் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. கவுனசிலர்கள் எதிர்கட்சி தலைவர் யாதவமூர்த்தி தலைமையில் வெளி நடப்பு செய்தனர்.

    பின்னர் யாதவமூர்த்தி கூறுகையில், அ.தி.மு.க. ஆட்சியில் ரூ.140 கோடியில் தனி குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது. பின்னர் தி.மு.க. ஆட்சியில் ரூ.185 கோடியிலும், தொடர்ந்து அ.தி.மு.க. ஆட்சியில் ரூ.235 கோடியிலும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.

    எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக இருக்கும் போது மேலும் ரூ. 60 லட்சம் ஓதுக்கீடு செய்து மேட்டூர் அணையில் 20 அடி தண்ணீர் இருந்தாலும் சேலத்தில் மேடான பகுதி உள்பட அனைத்து பகுதிக்கும் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுத்தார்.

    தனி குடிநீர்திட்டம் அ.தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்டது. ஆனால் தி.மு.க. ஆட்சியில் முழுமையாக கொண்டு வந்தததாக கூறுகிறார்கள். இதனை எதிர்த்து வெளி நடப்பு செய்கிறோம் என்றார்.

    • மேயர் மகேஷ் தாக்கல் செய்தார்
    • 2023- 24-ம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் கூட்டமும் மற்றும் கவுன்சில் கூட்டமும் இன்று நடந்தது.

    நாகர்கோவில், மார்ச்.31-

    நாகர்கோவில் மாநகராட்சி புதிய அலுவலகத்தில் 2023- 24-ம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் கூட்டமும் மற்றும் கவுன்சில் கூட்டமும் இன்று நடந்தது.

    கூட்டத்திற்கு மாநகராட்சி மேயர் மகேஷ் தலைமை தாங்கினார். ஆணையர் ஆனந்த் மோகன், துணை மேயர் மேரி பிரின்சி லதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மண்டல தலைவர்கள் அகஸ்டினாகோகிலவாணி, ஜவகர், முத்துராமன் ,செல்வகுமார் கவுன்சிலர்கள் டி. ஆர். செல்வம், ஸ்ரீலிஜா, அனிதா சுகுமாரன், மீனாதேவ் ,நவீன் குமார், உதயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பொறியாளர் பாலசுப்பிரமணியன், நிர்வாக அதிகாரி ராம் குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 2023 -24-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தயாரிக்கப்பட்டு ஆணையர் ஆனந்தமோகன் மேயர் மகேஷிடம் வழங்கினார்.அதனை மேயர் மகேஷ் கவுன்சில் கூட்டத்தில் தாக்கல் செய்தார். கூட்டத்தில் மேயர் மகேஷ் பேசியதாவது:-

    மாநகராட்சியில் அனைத்து பகுதி மக்களுக்கும் அத்தியாவசிய வசதிகள் கிடைக்கப்பெற வேண்டும் என்ற நோக்கத்தில் சாலை வசதி, தெரு விளக்கு, கழிவு நீர் ஓடை கட்டுதல், குடிநீர் வினியோகம் ஆகியவற்றிற்கு அனைத்து வார்டுகளுக்கும் சமமாக முக்கியத்துவம் கொடுத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொது சுகாதாரம், பூங்கா சீரமைப்பு போன்ற பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    சொத்து வரி உயர்வு, புதிய கட்டிடங்களுக்கான சொத்து வரி மூலமாக கூடுதல் வருவாய் கிடைக்கும். சாலைகள் மேம்பாட்டிற்கும் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது ரூ.30 கோடி செலவில் சாலை சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. குடிநீர் பிரச்சினையை தீர்க்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம்.

    அம்ரூத் திட்டத்தின் கீழ் ரூ. 296 கோடியில் புத்தன் அணை குடிநீர் திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 93 சதவீத பணிகள் தற்பொழுது முடிவடைந்துள்ளது. நாகர்கோவில் மாநகரப் பகுதிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.இதையடுத்து பஸ் நிலையங்களை மேம்படுத்தவும் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளோம். வடசேரிபஸ்நிலையம் அண்ணாபஸ்நிலையம் ஆம்னி பஸ்நிலையங்கள் நவீனப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. பாதாள சாக்கடை திட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் 52 வார்டுகளிலும் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்களிடமிருந்து குப்பைகள் தரம்பிரித்து வாங்கப்பட்டு வருகிறது.நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட கிருஷ்ணன்கோவில் பகுதியில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது.

    மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 685 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. சபையார் குளம், சுப்பையார்குளம், நீராடி குளம், செம்மங்குளம் ஆகிய வற்றை தூய்மைப்படுத்தி நீர் ஆதாரங்களை பலப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நாகர்கோவில் நகர மக்களின் தேவைகளை அடிப்படையாகக் கொண்டே மாநகராட்சி செயல்படுகிறது. மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். வருவாய் மற்றும் மூலதன நிதியாக இந்த ஆண்டுரூ. 234.98 லட்சம் வருவாய் கிடைக்கிறது. குடிநீர் மற்றும் வடிகால் நிதி மூலமாகரூ. 17 கோடியை 67 லட்சம் நிதி கிடைக்கிறது. இந்த 2023-24-ம் ஆண்டு நாகர்கோவில் மாநகராட்சிக்கு ரூ.252.64 லட்சம் நிதி கிடைக்கும். வருவாய் மற்றும் மூலதன செலவாக ரூ.239 கோடியே 57 லட்சமும் குடிநீர் மற்றும் வடிகால் செலவாக ரூ.15 கோடியை 91 லட்சம் செலவாகிறது.மொத்தம்ரூ. 255 கோடியே 48 லட்சம் செலவு ஆகிறது. இந்த ஆண்டு ரூ.2 கோடியே 84 லட்சம் பட்ஜெட் பற்றாக்குறை பட்ஜெட்டாக பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருப்பூர் மாநகராட்சியில் இதுவரை ஒரு கமிஷனர் மட்டுமே செயல்பட்டு வந்தார்.
    • சேலம் நகராட்சிகளின் மண்டல இயக்குநராகப் பணியாற்றிய சுல்தானா ஒரு துணை கமிஷனராக நியமிக்கப்ப ட்டுள்ளார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சியில் இதுவரை ஒரு கமிஷனர் மட்டுமே செயல்பட்டு வந்தார். இந்தநிலையில் தமிழக அரசு சார்பில் திருப்பூர் மாநகராட்சியில் புதிதாக இரு துணை கமிஷனர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. இதில் சேலம் நகராட்சிகளின் மண்டல இயக்குநராகப் பணியாற்றிய சுல்தானா ஒரு துணை கமிஷனராக நியமிக்கப்ப ட்டுள்ளார்.ஓசூர் மாநகராட்சி கமிஷன ராகப் பணியாற்றி தற்போது கட்டாய காத்திருப்போர் பட்டியலில் இருந்தபால சுப்ரமணியம் மற்றொரு துணை கமிஷனராகவும் நியமிக்கப்பட்டார். இருவரும் திருப்பூர் மாநகராட்சிஅலுவலகத்தில் துணை கமிஷனர்களாகப் பொறுப்பேற்றுக் கொண்டனர்.சேலம் மண்டல நகராட்சி இயக்கு நர் சுல்தானாஇடமாற்றம் செய்யப்பட்டதால், திருப்பூர் மண்டல நகராட்சிகளின் இயக்குநராக இருந்த ராஜன் அங்கு நியமிக்கப்பட்டார்.

    இதனால் காத்திருப்போர் பட்டியலில் இருந்த தாம்பரம் மாநகராட்சியின் முன்னாள் கமிஷனர் இளங்கோவன் திருப்பூர் மண்டல நகராட்சிகளின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    • மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.
    • செய்தி-மக்கள் தொடர்பு அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    மதுரை

    மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் குறைகளை நிவர்த்தி செய்வதற்கு வாரந்தோறும் வார்டு மறுவரையறை செய்யப்பட்ட 5 மண்டலங்களுக்கு அந்தந்த மண்டல அலுவலகங்களில் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது.

    அதன்படி நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) ஆனையூர் பஸ் நிலையம் அருகில் உள்ள மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் காலை 10 மணி முதல் 12.30 வரை பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது. மேயர், ஆணையாளர் ஆகியோர் தலைமை தாங்குகிறார்கள்.

    கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு பகுதிகளான ஆனையூர், பார்க்டவுன், நாகனாகுளம், அய்யர் பங்களா, திருப்பாலை, கண்ணனேந்தல், உத்தங்குடி, கற்பக நகர், பரசுராம்பட்டி, லூார்து நகர், ஆத்திக்குளம், புதூர், வள்ளுவர் காலனி, எஸ்.ஆலங்குளம், அலமேலு நகர், கூடல்நகர், மேலமடை, பாண்டிகோவில், சவுராஷ்டிராபுரம், தாசில்தார் நகர், வண்டியூர் ஆகிய பகுதி பொதுமக்கள் குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டிட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில்வரி உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன்பெறலாம்.

    மேற்கண்ட தகவல் மதுரை மாநகராட்சி செய்தி-மக்கள் தொடர்பு அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • மாநகராட்சி சிறப்பு மருத்துவ முகாம் நாளை 3 மண்டலங்களில் நடக்கிறது.
    • மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் இந்த முகாம்களில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

    மதுரை

    மதுரை மாநகராட்சி சார்பில் நாளை (மார்ச் 25-ந் தேதி), கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின்கீழ் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 3 மண்டலங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது. மண்டலம் 1 (கிழக்கு) வார்டு எண்.16 முல்லை நகர் தனபால் உயர்நிலைப்பள்ளி, மண்டலம் 2 (வடக்கு) வார்டு எண்.22 தத்தனேரி மாநகராட்சி

    திரு.வி.க. மேல்நிலைப்பள்ளி, மண்டலம் 3 (மத்தியம்) வார்டு எண்.75 சுந்தரராஜபுரம் மாநகராட்சி ஆரம்பபள்ளி ஆகிய 3 இடங்களில் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.

    இந்த முகாமில் இதயநோய், மகப்பேறு, சிறுநீரகம், பல், கண், தோல், காது, மூக்கு, தொண்டை, எலும்பு மூட்டு மற்றும் மனநல மருத்துவம் ஆகிய 10 துறைகளைச் சேர்ந்த சிறப்பு மருத்துவர்கள் கலந்துகொண்டு பரிசோதனை மேற்கொள்வார்கள்.மேலும் ரத்த எச்.பி. அளவு, ரத்த அழுத்த பரிசோதனை, ரத்த சர்க்கரை அளவு, ரத்த கொழுப்பு அளவீடு, மலேரியா இரத்தத் தடவல், இ.சி.ஜி. கர்ப்பபைவாய், புற்றுநோய் பரிசோதனை, ஸ்கேன், கண்புரை அளவு, கொரோனா சளி பரிசோதனைககளும் மேற்கொள்ளப்படும். மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் இந்த முகாம்களில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

    இந்த தகவல் மதுரை மாநகராட்சி செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மதுரை மாநகராட்சி நீச்சல் குளத்தில் சிறுவர்கள்-வாலிபர்கள் திரண்டனர்.
    • நீண்ட வரிசையில் வயது வித்தியாச மின்றி அனைவரும் காத்திருந்தனர்.

    மதுரை

    மதுரை தல்லாகுளத்தில் மாநகராட்சியின் நீச்சல் குளம் உள்ளது. பராமரிப்பு பணி காரணமாக கடந்த சில ஆண்டுகளாக இந்த நீச்சல்குளம் செயல்படாமல் இருந்தது. இந்நிலையில் புனரமைப்பு பணிகள் முடிந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த நீச்சல்குளம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.

    புதுபொலிவுடன் காணப்படும் இந்த நீச்சல்குளத்தில் ஏராளமானோர் ஆர்வமுடன் வந்து குளித்து சென்றனர். இங்கு குளிப்பதற்கு சிறுவர்களுக்கு 20 ரூபாயும், பெரியவர்களுக்கு 40 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அந்த கட்டணத்தை செலுத்தி தினமும் ஏராளமானோர் குளித்து வந்தனர்.

    இந்நிலையில் மதுரையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. பகல் நேரம் மட்டுமின்றி இரவிலும் கடும் வெப்பம் நிலவி வருகிறது. வெயில் அதிகரித்துள்ள நிலையில் வெப்பத்தை தணிக்க சிறுவர்கள், வாலிபர்கள் நீர்நிலைகளுக்கு சென்று நீண்ட நேரம் நீராடி மகிழ்கின்றனர்.

    அதிலும் மதுரை தல்லாகுளத்தில் உள்ள மாநகராட்சி நீச்சல் குளத்திற்கு வருகின்றனர். விடுமுறை தினமான இன்று இன்று ஏராளமான சிறுவர்கள், வாலிபர்கள் திரண்டனர். இதனால் அங்கு கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது. ஒரே நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் குவிந்ததால் நுழைவு கட்டண சீட்டு பெறுவதற்காக நீண்ட வரிசையில் வயது வித்தியாச மின்றி அனைவரும் காத்திருந்தனர்.

    வாலிபர்களும், சிறுவர்க ளும் நீச்சல் குளத்தில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

    • மதுரை வடக்கு மண்டலத்தில் குறைதீர்க்கும் முகாம் 14-ந் தேதி நடக்கிறது.
    • இந்த தகவலை மதுரை மாநகராட்சி செய்தி-மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

    மதுரை

    மதுரை மாநகராட்சி பகுதி பொதுமக்கள் குறை களை நிவர்த்தி செய்வதற்கு செவ்வாய்கிழமை தோறும் வார்டு மறுவரையறை செய்யப்பட்ட 5 மண்ட லங்களுக்கு அந்தந்த மண்டல அலுவலகங்களில் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது.

    அதன்படி வருகிற 14-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள மாநகராட்சியின் வடக்கு மண்டல அலுவ லகத்தில் காலை 10 மணி முதல் 12.30 வரை பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது. மேயர் இந்திராணி, ஆணையாளர் சிம்ரன் ஜித்சிங் காலோன் ஆகியோர் தலைமை தாங்குகிறார்கள்.

    வடக்கு மண்டலத்திற்குட்பட்ட விளாங்குடி, கரிசல்குளம், ஜவஹர்புரம், விசாலாட்சி நகர், அருள்தாஸ்புரம், தத்தனேரி மெயின் ரோடு, அய்யனார் கோவில், மீனாட்சிபுரம், பீ.பீ.குளம், நரிமேடு, அகிம்சாபுரம், கோரிப்பாளையம், தல்லாகுளம், சின்ன சொக்கிக்குளம், கே.கே.நகர்,அண்ணா நகர், சாத்தமங்கலம், பாத்திமா நகர், பெத்தானியாபுரம், பி.பி.சாவடி, கோச்சடை ஆகிய வார்டு பொதுமக்கள் இந்த குறைதீர்க்கும் முகாமில் கலந்து கொண்டு குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டிட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில்வரி உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன் பெறலாம்.

    மேற்கண்ட தகவலை மதுரை மாநகராட்சி செய்தி-மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது. புட்ேநாட்:

    • பெங்களூரு ஹட்சன் சர்க்கிள் அருகே மாநகராட்சியின் தலைமை அலுவலகம் உள்ளது.
    • மாநகராட்சியில் ஒவ்வொரு மாதமும் கவுன்சிலர்கள், அதிகாரிகள் கூட்டம் நடைபெறுவது உண்டு.

    பெங்களூரு:

    பெங்களூரு ஹட்சன் சர்க்கிள் அருகே மாநகராட்சியின் தலைமை அலுவலகம் உள்ளது. மாநகராட்சி அலுவலகத்தில் அதிகாரிகள் மற்றும் அங்கு வரும் பொது மக்கள் தங்களது வாகனத்தை நிறுத்துவதற்காக போதுமான வாகன நிறுத்தம் இல்லை. அதேநேரத்தில் மாநகராட்சி வார்டுகளின் எண்ணிக்கையும் 198-ல் இருந்து 243 ஆக உயர்த்தப்படுகிறது. இதனால் மாநகராட்சி கவுன்சிலர்களின் வாகனங்களையும் நிறுத்துவதற்கு கூடுதல் இடவசதி தேவைப்படுகிறது.

    மாநகராட்சியில் ஒவ்வொரு மாதமும் கவுன்சிலர்கள், அதிகாரிகள் கூட்டம் நடைபெறுவது உண்டு. அந்த சந்தர்ப்பத்தில் வாகனங்களை நிறுத்துவதற்கு பெரும் சிரமம் எற்படுகிறது. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கண்ணாடி மாளிகை முன்பாக புதிதாக வாகனம் நிறுத்தம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது கண்ணாடி மாளிகைக்கு முன்பாக சுரங்கம் அமைத்து இந்த வாகன நிறுத்தம் அமைக்க தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது.

    அதாவது கண்ணாடி மாளிகை முன்பாக சுரங்கத்தில் 3 அடுக்குகளில் இந்த வாகனம் நிறுத்தம் அமைய இருக்கிறது. இதன்மூலம் அந்த வாகன நிறுத்தத்தில் 150 கார்களை எந்த பிரச்சினையும் இல்லாமல் நிறுத்த முடியும் என்றும், தேவைப்பட்டால் கூடுதலாக 50 கார்களை நிறுத்துவதற்கான வசதிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் கூறுகையில், மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் வாகனங்கள் நிறுத்த பிரச்சினை இருப்பதால், டாக்டர் ராஜ்குமார் கண்ணாடி மாளிகை முன்பாக 150 கார்களை நிறுத்தும் விதமாக சுரங்கம் அமைத்து புதிய வாகன நிறுத்தம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி அரசுடன் ஆலோசித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார்.

    • குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு
    • மேயர் மகேஷ் தகவல்

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநக ராட்சி கூட்டம் நேயர் மகேஷ் தலைமையில் இன்று நடந்தது.

    கூட்டத்தில் ஆணை யாளர் ஆனந்தமோகன், துணை மேயர் மேரி பிரின்சி லதா, மண்டல தலைவர்கள் அகஸ்டினா கோகிலவாணி, செல்வகுமார், ஜவகர், கவுன்சிலர்கள் மீனாதேவ், ஸ்ரீலிஜா, ரமேஷ், டி.ஆர். செல்வம், அனிலா சுகுமாரன், நவீன் குமார், அய்யப்பன் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் கவுன்சிலர்கள் கூறியதாவது:-

    நாகர்கோவில் மாநக ராட்சி 1-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் குடிநீர் பிரச்சினை உள்ளது. குடிநீர் பிரச்சினை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 2-வது வார்டுக்கு உட்பட்ட ஆளுர் பகுதியிலும் தண்ணீர் தட்டுப்பாடு நீடித்து வருகிறது. பொது நிதியிலிருந்து அந்த பகுதியில் போர்வோல் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆளூர், தெங்கம்புதூர் பகுதிக்கு வளர்ச்சி பணிகளுக்கென ரூ6 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் குடிநீர் திட்டத்திற்கு முன்னுரிமைஅளித்து பணியை செய்ய வேண்டும்.

    பார்வதிபுரம் பாலத்தின் அருகே குப்பைகள் கொட்டப் படுவதால் துர்நாற்றம் வீசுகிறது. அதை சரி செய்ய வேண்டும். நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் சாலை சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.பணிகள் நடை பெறும் போது அந்த வேலை களை கண்காணிக்க ஒர்க் இன்ஸ்பெக்டரை கொண்டு கண்காணித்தால் அந்த சாலைகள் தரமானதாக இருக்கும்.

    நாகர்கோவில் நகரில் தனியார் பள்ளிகள் மற்றும் திருமண மண்டபங்களால் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதனை தீர்க்க உரிய நடவடிக்கை எடுப்பதுடன் பீச் ரோடு சந்திப்பில் உள்ள சிமெண்ட் தடுப்பு கற்களை மாற்ற உடனடி நடவடிக்கையை எடுக்க வேண்டும். புதிய கட்டிடங்களுக்கான வரி விதிப்பை முறையாக அமல்படுத்த வேண்டும். காலி மனைகளுக்கும் வரிகள் விதிக்கப்பட்டு வருகிறது

    பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மற்றும் குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கோட்டார் போலீஸ் நிலையம் முதல் பீச் ரோடு வரை உள்ள சாலையிலும் செட்டிகுளம் முதல் சவேரியார் ஆலய பகுதியுள்ள இடங்களிலும் ஏற்கனவே சாலை விரி வாக்கத்திற்காக கடைகள் இடிக்கப்பட்டு உள்ளது.

    ஒரு சில கடைகள் இன்னும் இடிக்கப்படாமல் உள்ளது. அந்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுப்பதுடன் நடைபாதை அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். டிவி.டி. காலனி பூச்சாத்தான்குளம் பகுதியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை வேண்டும் என்று கவுன்சி லர்கள் தெரிவித்தனர்.

    இதற்கு மேயர் மகேஷ் பதில் அளித்து பேசினார்.அப்போது அவர் கூறிய தாவது:-

    புத்தன் அணை முக்கடல் அணை தண்ணீரை ஆளூர், தெங்கம்புதூர் பகுதிகளுக்கும் கொண்டு செல்வது தொடர்பாக ஆலோசித்து வருகிறோம். ஏற்கனவே நாகர்கோவில் மாநகரப் பகுதியில் சாலை சீரமைப்பதற்கு ரூ.30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு டெண்டர் போடப்பட்டுள்ளது. அந்த பணிகள் விரைவில் தொடங்கப்படும். மண் சாலைகளை பராமரிக்க ரூ.10கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    அந்த பணிகளுக்கும் விரைவில் டெண்டர் பிறப் பிக்கப்படும். சாலை பராம ரிப்பு என்று தமிழகத்திலேயே அதிக நிதியை நாகர்கோவில் மாநக ராட்சிக்குத்தான் ஒதுக்கீடு செய்யப்பட்டுள் ளது. இந்த பணிகள் அனைத்தும் நடைபெறும் போது 52 வார்டுகளும் தன்னிறைவு பெற்ற வார்டுகளாக மாற்றப்படும்.திருமண மண்டபங்கள் மற்றும் பள்ளிகளினால் கடுமையான போக்கு வரத்து நெருக்கடி ஏற்படுவது உண்மைதான்.

    இது தொடர்பாக அதிகா ரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பார் கள். பீச் ரோடு- செட்டி குளம் பகுதியில் சாலையை விரி வாக்கம் செய்வது தொடர்பாக ஆலோ சனை மேற்கொண்டு வருகிறோம். வரி வசூலை பொருத்தமட்டில் அரசு என்ன நிர்ணயம் செய்துள்ளது அதன் அடிப்படையில் தான் வரி வசூல் செய்யப்பட்டு வருகிறது.

    குடிநீர் திட்ட பணிகள் மற்றும் பாதாள சாக்கடை திட்டம் குறித்து ஏற்கனவே அதிகாரிகளுடன் ஆலோ சனை மேற்கொண்டுள் ளோம். மார்ச் 31-ந் தேதிக்குள் முடிப்பதாக தெரிவித்துள்ளார்கள். குடிநீர் பிரச்சினையை சமாளிக்க அனைத்து நடவ டிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மேயர் மகேஷ் சொந்த செலவில் வழங்கினார்
    • தூய்மை பணியாளர்களை கவுரவப்படுத்தும் விதமாக பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநக ராட்சி தூய்மை பணியா ளர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மேயர் மகேஷ் தலைமை தாங்கினார். மாநகர் நல அதிகாரி ராம்குமார் முன்னி லை வகித்தார். ஆணையர் ஆனந்த் மோகன் சிறப்புரை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மேயர் மகேஷ் தனது சொந்த செலவில் 1,286 தூய்மை பணியாளர்களுக்கு கரும்பு, சில்வர் பாத்திரம், கரண்டி, ஆண்களுக்கு வேட்டி மற்றும் சட்டை, பெண்களுக்கு சேலை ஆகியவற்றை வழ ங்கினார்.

    முன்னதாக மேயர் மகேஷ் பேசியதாவது அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரி வித்துக் கொள்கிறேன். பொங்கல் பண்டிகையையொட்டி ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பெயரில் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஏழை எளிய மக்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்ட உள்ளனர்.

    நாகர்கோவில் மாநகரை பொருத்தமட்டியில் தூய்மை பணிக்கு முக்கியத்துவம் கொடுத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சாக்கடையை தூர்வாரும் பணிகள் நடந்து வருகின்றன.

    எனவே தூய்மை பணியா ளர்களை கவுரவப்படுத்தும் விதமாக இந்த பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. மாகராட்சி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அந்த கட்டிடத்தை திறந்து வைக்க வருமாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை அழைத்துள்ளோம். அவர் பிப்ரவரி 2-வது வாரத்தில் வருவதாக கூறியுள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் மண்டல தலைவர்கள் ஜவகர், செல்வ குமார், அக ஸ்டினா கோகில வாணி, கவுன்சிலர்கள் நவீன்குமார்,டி.ஆர். செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×