search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 227357"

    மாவட்டத்திற்கே உரித்தான இயற்கை வளத்தையும், சுற்றுப்புற சுகாதாரத்தையும் பேணி காக்கும் வகையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தை பசுமை மாவட்டமாக மாற்று வது குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நாகர்கோவில் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடந்தது. கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கி னார்.மேயர் மகேஷ் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோ சனை நடத்தினார்.தொடர்ந்து அவர் பேசியதாவது:-

    மாவட்டத்திற்கே உரித்தான இயற்கை வளத்தையும், சுற்றுப்புற சுகாதாரத்தையும் பேணி காக்கும் வகையில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஒரு சில பொது நிறுவனங்கள்,வணிக வளாகங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு இருந்து வருவது கண்டறியப்பட்டுள்ளது.

    மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் ஒரு தடவை பயன்படுத்த கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை அனை வரும் தவிர்க்க வேண்டும். பொதுமக்களும் கடைகளுக்கு செல்லும்போது துணி பைகள், கூடைகள் உள்ளிட்டவைகளை பயன்படுத்த வேண்டும்.

    மேலும், உங்கள் வீடுகளின் அருகாமையிலோ அல்லது கடைகளிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தி னால் துறைசார்ந்த அலுவல ர்களிடம் தகவல் தெரிவித்து, மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதால் எதிர் காலத்தில் அனைவருக்கும் பிரச்சினையாக இருக்கும் என்பதை அனைவரும் உணர்ந்து, கன்னியாகுமரி மாவட்டத்தை நெகிழி (பிளாஸ்டிக்) இல்லாத பசுமை மாவட்டமாக மாற்ற மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    மாவட்ட நிர்வாகத்தால் மாவட்ட அளவிலான சிறப்பு பணிக்குழு அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகி றது.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி (தேசிய நெடுஞ்சாலை), தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், அரசு அலு வலர்கள் உள்பட பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்

    • தஞ்சை மாவட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • தொடர் கனமழையால் நெல் கொள்முதலில் ஈரப்பதம் 22 சதமாக காலதாமதமின்றி உயர்த்திட வேண்டும்.

    கும்பகோணம்:

    பயிர் காப்பீட்டில் தஞ்சை விவசாயிகளுக்கு இழைத்திருக்கும் அநீதியை கண்டித்தும், பாதிக்கப்பட்ட தஞ்சை மாவட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தொடர் கனமழையால் நெல் கொள்முதலில் ஈரப்பதம் 22 சதமாக காலதாமதமின்றி உயர்த்திட வலியுறுத்தியும், நெல்லுக்கான கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கிடக் கோரியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    திருப்பனந்தாள் கடைவீதியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் கொளஞ்சிநாதன் தலைமை வைத்தார்.

    ஒன்றிய தலைவர் செல்வம் முன்னிலை வகித்தார்.

    மாவட்ட தலைவர் செந்தில்குமார், சிஐடியு துணைத் தலைவர் ஜீவபாரதி, கரும்பு விவசாய சங்க மாநில செயலாளர் காசிநாதன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.

    இதில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • இயற்கையுடன் இணைந்து நிலையாக வாழ்தல் என்ற மையக்கருத்தில் மரக்கன்றை நட்டு அமைச்சர் மனோ தங்கராஜ் கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார்.
    • நிகழ்ச்சியில் பத்மநாபபுரம் நகராட்சி தலைவர் அருள் சோபன் வனசரகர் ரவீந்திரன், உள்பட வன ஊழியர்கள் மற்றும் திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி:

    தமிழ்நாடு அரசு வனத்துறை மற்றும் தேசிய பசுமைப்படை கன்னியாகுமரி மாவட்டம் இணைந்து 'ஒரே ஒரு பூமி' என்ற சிந்தனையில் புலியூர்குறிச்சி உயிரின பன்மய பூங்காவில் வைத்து உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு குமரி மாவட்ட வன அலுவலர் இளையராஜா தலைமை தாங்கினார். தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜோபிரகாஷ் வரவேற்றார்.

    சுற்றுச்சூழல் உறுதி மொழியை தக்கலை கல்வி மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் சோபா வாசித்தார். துண்டு பிரசுரங்களை அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட அதை வன அலுவலர் பெற்றுக்கொண்டார்‌. தொடர்ந்து மஞ்சள் பைகளை அனைவருக்கும் வழங்கினார்.

    பின் இயற்கையுடன் இணைந்து நிலையாக வாழ்தல் என்ற மையக்கருத்தில் மரக்கன்றை நட்டு அமைச்சர் மனோ தங்கராஜ் கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் பத்மநாபபுரம் நகராட்சி தலைவர் அருள் சோபன் வனசரகர் ரவீந்திரன், உள்பட வன ஊழியர்கள் மற்றும் திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.

    நாகர்கோவில் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எட்வின் கிளாட்சன் நன்றி கூறினார்.

    ×