என் மலர்
நீங்கள் தேடியது "slug 227403"
- மத்திய அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைய வேண்டும் என்று மத்திய மந்திரி பிரதிமா பெப்மிக் தெரிவித்தார்
- மதுபோதை மறுவாழ்வு மையத்தில் ஆய்வு
அரியலூர்
அரியலூர் பெரியார் நகரில், மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டு அமைச்சகம் நிதியுதவிடன் கருணாலயா தொண்டு நிறுவனத்தின் சார்பில் நடத்தப்பட்டு வரும் சுபம் ஒருங்கிணைந்த மதுபோதை மறுவாழ்வு மையத்தினை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் பிரதிமா பெப்மிக் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
இந்த மதுபோதை மறுவாழ்வு மையத்தில் வழங்கப்பட்டு வரும் சிகிச்சைகள், நோயாளிகள் விபரம், நோயாளிகளின் எண்ணிக்கை, போதை மீட்பு சிகிச்சைகள், நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு, குடிநீர் வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் மறுவாழ்வு மையத்தின் செயல்பாடுகள் போன்ற பல்வேறு தகவல்கள் குறித்து கேட்டறிந்து, ஆய்வு செய்ததுடன், இம்மறுவாழ்வு மையத்தினை தொடர்ந்து சிறப்பாக நடத்திடவும் உரிய ஆலோசனைகளை வழங்கினார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :
தமிழகத்தின் முன்னேற்றத்துக்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பெண்களை தொழில் முனைவோராக மாற்றும் வகையில் திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்து தொழில் தொடங்க மானியத்துடன் கூடிய முத்ரா உள்ளிட்ட பல்வேறு கடன் திட்டங்களையும் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
ஊட்டச்சத்து குறைபாடற்ற சமுதாயத்தை உருவாக்கும் வகையில் வளர் இளம் பெண்கள் மற்றும் தாய்மார்களின் உடல் நலனில் அக்கறை கொண்டு போஷன் அபியான் என்ற திட்டத்தை நாடு முழுவதும் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் ஊட்டச்சத்து குறைபாடற்றவருங்கால சமுதாயத்தை உருவாக்கும் வகையில் மத்திய அரசு கவனமுடன் உள்ளது.
ெபண்களின் முன்னேற்றம் மற்றும் சமுதாய முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு
செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் கடைக்கோடி மக்களையும் சென்றடையும் வகையில் மாநில அரசு செயல்பட வேண்டும் என்றார்.
இந்த ஆய்வின் போது, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை முதன்மைச் செயலர் மிலிந்த் ராம்தேகே, மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி, கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் துரைமுருகன், மாவட்ட சமூக நல அலுவலர் பூங்குழலி, வட்டாட்சியர் கண்ணன், கருணாலயா தொண்டு நிறுவன பொறுப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- அரசியலில் ஆன்மீகத்தையும், ஆன்மீகத்தில் அரசியலையும் கலக்கக்கூடாது என கவிஞர் வைரமுத்து பேட்டியளித்தார்.
- இதை சம்பந்தப்பட்ட தலைவர்கள் உணர்ந்து கொண்டால் நாட்டுக்கு நலம்.
சிவகங்கை
சிவகங்கையில் கவிஞர் இலக்கியா நடராஜனின் "பெயர் தெரியாத பறவை" என்ற கவிதை நூல் மற்றும் "மயானக்கரை ஜன்னங்கள்" சிறுகதை நூல் ஆகியவை வெளியிட்டு விழா நடை பெற்றது.
இதில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன், கவிஞர் வைரமுத்து, தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., நக்கீரன் கோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.விழாவில் கவிஞர் வைர முத்து சிறப்புரையாற்றினார்.
பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதா வது:-
அரசியல் வழியே ஆன்மீகமும், ஆன்மீகத்தின் வழியே அரசியலும் எல்லா நூற்றாண்டுகளிலும் எல்லா தேசிய இனங்களிலும், எல்லா நாடுகளிலும் நிகழ்ந்து வந்திருக்கின்றன.
பல நேரங்களில் அரசி யலையே ஆன்மீகம் தான் தீர்மானித்தது. இந்த வரலாற்றையும் நீங்கள் படித்திருப்பீர்கள். ஆனால் அரசியலில் குரல்வளையை ஆன்மீகம் பிடிப்பதும், ஆன்மீகத்தின் குரல்வளையை அரசியல் பிடிப்பதும் தகாது என்பது என் எண்ணம். இதை சம்பந்தப்பட்ட தலைவர்கள் உணர்ந்து கொண்டால் நாட்டுக்கு நலம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பாலத்திற்காக நாட்டப்பட்ட கல்வெட்டில்இருந்த பிரதமர் மோடியின் படத்தை காங்கிரஸ் நிர்வாகிகள் சேதப்படுத்தி உள்ளனர்
- ராகுல் காந்தி மத நல்லிணக்கத்தை சிதைக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார்
நாகர்கோவில்:
மத்திய மந்திரி வி.கே சிங் 2 நாள் சுற்றுப்பயணமாக கன்னியாகுமரி வந்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர் இன்று நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த 2019-ம் ஆண்டு கன்னியாகுமரி அருகே நரிகுளத்தில் உள்ள பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த பாலத்திற்காக நாட்டப்பட்ட கல்வெட்டில்இருந்த பிரதமர் மோடியின் படத்தை காங்கிரஸ் நிர்வாகிகள் சேதப்படுத்தி உள்ளனர். இது ஒரு ஒழுங்கீனமான செயலாகும்.
பாரத் ஜோடா யாத்திரை என்பதற்கு பதில் தோடா யாத்திரை என்று பெயர் வைத்திருக்கலாம். பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்கான பிரதமர் ஆவார். ஆனால் காங்கிரசார் குறுகிய கண்ணோட்டத்துடன் அவரது படத்தை சேதப்படுத்தி உள்ளனர்.
ராகுல் காந்தியின் யாத்திரையில் அரசியலையும் மதத்தையும் இணைத்து உள்ளனர். யாத்திரையின் போது சில மத தலைவர் களை ராகுல்காந்தி சந்தித்து உள்ளார். இந்தியா மத சார்பற்ற நாடாக விளங்குகிறது.
ஆனால் ராகுல் காந்தி மத நல்லிணக்கத்தை சிதைக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார். காங்கிரஸ் ஆட்சி செய்த 10 ஆண்டு காலத்தில் சாலை பணிகள் எதுவும் நடைபெறவில்லை. அனைத்து பணிகளும் கிடப்பில் போடப்பட்டது.பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு தான் சாலை பணிகள் அனைத்தும் துரிதப்படுத்தப்பட்டு தற்போது வேலைகள் நடை பெற்று வருகிறது.
காவல்கிணறு- களியக்காவிளை வரை உள்ள நான்கு வழி சாலை பணிகள் தற்போது மந்தமான நிலையில் நடைபெற்று வருகிறது. இதற்கு மாநில அரசு ஒத்துழைப்பு அளிக்க வில்லை. இதேபோல் தமிழகத்தில் பல்வேறு பணிகளுக்கு மாநில அரசு ஒத்துழைப்பு வழங்க வில்லை.
சாலை பிரச்சினைகள் தொடர்பாக தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை நான் தொடர்பு கொண்டு பேசினேன்.அவர் ஒத்துழைப்பு தருவதாக உறுதி அளித்துள்ளார்.
குமரி மாவட்டத்தில் விமான நிலையம் அமைப்பது தொடர்பாக மாநில அரசு மற்றும் மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்தால் இடமும் ஒதுக்கீடு செய்யப்ப ட்டால் விமான நிலையம் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
நாடு முழுவதும் 100 விமான நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதுவரை 65 விமான நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.மீதமுள்ள பணிகள் 2 ஆண்டுகளில் முடிக்க ப்படும்.
காலாவதியான டோல் கேட்டில் பணம் வசூல் செய்தால் புகார் செய்யு ங்கள். செலவினங்களின் அடிப்படையில் தான் டோல்கேட் நிர்ணயம் செய்யப்பட்டு பணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது.
அ.தி.மு.க .எத்தனை பிளவு பட்டாலும் எனக்கு அக்கறை இல்லை. எனது விருப்பம் பாரதிய ஜனதா விற்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும்.கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் தான். பாரதிய ஜனதாவை வலுப்படுத்துவதே தற்போது எனது குறிக்கோள்.
இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், எம். ஆர்.காந்தி எம்.எல்.ஏ., மாவட்டதலைவர் தர்மராஜ் மாநில செயலாளர் மீனா தேவ்,மாநில மகளிர் அணி தலைவி உமாரதி ராஜன் மாவட்ட பொருளாளர் முத்து ராமன் மற்றும் நிர்வா கிகள் உடன் இருந்தனர்.
முன்னதாக மத்திய மந்திரி வி.கே.சிங் இன்று காலை 9 மணிக்கு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவி லுக்கு சென்றார். அவரை கோவில் நிர்வாகத்தினர் வரவேற்றனர். அதன் பிறகு அவர், கோவிலில் பய பக்தியுடன் சாமி கும்பி ட்டார்.
பின்னர் அவர் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு செல்லும் நான்கு வழி சாலையில் மகாதானபுரம் அருகே உள்ள நரிக்குளம் மேம்பாலம் பகுதியில் பிரதமர் மோடியின் கல்வெட்டு சமீபத்தில் சேதம் அடைந்ததை பார்வையிட்டார்.
- ராமநாதபுரத்தில் மிளகாய் வணிக வளாகம் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
- கூடுதல் வணிக வளாக கடைகள் மற்றும் குளிர்சாதன கிட்டங்கிகள் விரிவாக்கம் செய்யப்படும்.
ராமநாதபுரம்
வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் ராமநாதபுரம் மாவட்டம், எட்டிவயல் கிராமத்தில் ஒருங்கிணைந்த மிளகாய் வணிக வளாகம் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு ரூ.13 கோடி செலவில் 65 வணிக கடைகள் கட்டப்பட்டுள்ளது. அதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் குத்துவிளக்கேற்றி பேசும்போது கூறியதாவது:-
மிளகாய் வணிக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 65 வணிக கடைகள் மூலம் மாவட்டத்தில் உள்ள குண்டு மிளகாய் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பயனடைவார்கள்.ஏற்கனவே இந்த வளாகத்தில் 2 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட மிளகாய் குளிர்பதன கிட்டங்கி செயல்பட்டுவருகிறது. மிளகாய் குளிர் பதன கிட்டங்கி மற்றும் புதிதாக திறக்கப்பட்டுள்ள வணிக வளாக கடைகள் ஆகிய 2-ம் ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மேலும் படிப்படியாக இந்த வளாகத்தில் கூடுதல் வணிக வளாக கடைகள் மற்றும் குளிர்சாதன கிட்டங்கிகள் விரிவாக்கம் செய்யப்படும்.
வைகை அணையில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வரும் உபரி நீர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கண்மாய்களில் நிரப்பப்பட்டு நிலத்தடி நீரை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தனுஷ்கோடி, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை செயலாளர் ராஜா, வேளாண்மை விற்பனை குழு துணை இயக்குநர் மூர்த்தி, மாநில வேளாண்மை விற்பனை வாரிய உதவி செயற்பொறியாளர் நாகரத்தினம், போகலூர் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் சத்திய குணசேகரன், பரமக்குடி வட்டாட்சியர் தமீம் அன்சாரி, எட்டிவயல் ஊராட்சி தலைவர் கனகசக்தி பாஸ்கரன், மிளகாய் வத்தல் வணிகர் சங்க பிரதிநிதிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள், அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- அ.தி.மு.க.வின் 1.5 கோடி தொண்டர்கள் இனி எடப்பாடி பழனிசாமிக்கு தான் சொந்தம்.
- தமிழக மக்களுக்கு எடப்பாடி பழனிசாமி பாதுகாப்பு அரணாக இருப்பார்.
திருப்பூர் :
அ.தி.மு.க. பொதுக்குழு செல்லாது என்று அறிவித்த தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக சென்னை நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., தலைமையில் அ.தி.மு.க.வினர் பார்க் ரோட்டில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து, பொது மக்களுக்கு இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டா டினர். அவை தலைவர் பழனிச்சாமி, முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக தீர்ப்பு குறித்து திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., கூறியதாவது:- எத்தனையோ சோதனைகளை சந்தித்து, அ.தி.மு.க. என்றால் எடப்பாடி பழனிசாமி தான் என்பதை தீர்ப்பின் மூலம் காட்டியுள்ளார்கள்.அ.தி.மு.க. கொடி, அ.தி.மு.க.வின் 1.5 கோடி தொண்டர்கள் இனி எடப்பாடி பழனிசாமிக்கு தான் சொந்தம். வேறு யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. இனி யாரும் கூக்குரல் இட முடியாது.புதிய தெம்போடு தி.மு.க.வை விரைவில் வீட்டுக்கு அனுப்பிவிட்டு அ.தி.மு.க. ஆட்சியை அமைக்க மக்கள் தயாராவார்கள்.
தென்மாவட்டங்கள் எப்போதுமே அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக உள்ளது. இப்பொழுதும் இப்படிதான் உள்ளது. இதுவே இறுதியான தீர்ப்பு தான். இனிமேல் இரட்டை தலைமை என்ற பேச்சுக்கு இடமே இல்லை. எப்பொழுதும் ஒற்றை தலைமைதான்.அ.தி.மு.க.வினர் மட்டும் எதிர்பார்த்த தீர்ப்பு அல்ல , நாட்டு மக்களும் எதிர்பார்த்த தீர்ப்பு.கட்சி இன்னார் தான் வழிகாட்ட வேண்டும் என நீதிமன்றம் சொன்ன பிறகும் சசிகலா கட்சி கொடியை கட்டிக்கொண்டு இருந்தால் அது தவறு தான். சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
தி.மு.க. விற்கு எதிராக இனி கடுமையாக அ.தி.மு.க. களத்தில் போராடும். இதுவரை தலைமை குழப்பில் இருந்த நிலையில் இனி எடப்பாடி பழனிசாமி தான் என்றபோது கடுமையாக போராடுவோம். தி.மு.க. லஞ்சம் ஊழலை கைவிட வேண்டும்.ஓ.பி.எஸ். தரப்பு மேல்முறையீடு செய்தாலும் அதை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்யும். தமிழக மக்களுக்கு எடப்பாடி பழனிசாமி பாதுகாப்பு அரணாக இருப்பார். நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும்.இவ்வாறு அவர் கூறினார்.
இதில் மாநகர் மாவட்ட இணை செயலாளர் சங்கீதா சந்திர சேகர்,பகுதிச் செயலாளர்கள் கண்ணப்பன், அன்பகம் திருப்பதி, ஹரிஹரசுதன், கே.பி.ஜி.மகேஷ்ராம், திலகர் நகர் சுப்பு ,பி. கே .முத்து ,தொழிற்சங்க செயலாளர் கண்ணபிரான், நிர்வாகிகள் ஆண்டவர் பழனிச்சாமி, ஜவகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மதுரையில் 274 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்.
- 248 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து ரூ.68 லட்சம் சொத்துக்கள் முடக்கப்பட்டது.
மதுரை
மதுரை மாநகரில் கஞ்சா விற்பனைக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதுகுறித்து மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் கூறியதாவது:-
நடப்பு ஆண்டில் மட்டும் 274 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, 248 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். 137 பேரிடம் நன்னடத்தை பிணையப்பத்திரம் பெறப்பட்டு உள்ளது. இதனை மீறியவர்களை தடுப்பு காவலில் கைது செய்துள்ளோம்.
குறிப்பாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு உள்ளனர். போதை மாத்திரை விற்பனை செய்த மருந்தகம் சீல் வைக்கப்பட்டது.
இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் மருந்தகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளது.
நடப்பாண்டில் 4 கஞ்சா வழக்குகளில் 13 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டு உள்ளது. மதுரை மாநகரில் கஞ்சா விற்ற 68 பேரிடம் சுமார் ரூ.67 லட்சம் மதிப்புள்ள அசையும் சொத்துக்கள் முடக்கப்பட்டு உள்ளது. மேலும் 8 வழக்குகளில் அசையா சொத்துக்களை முடக்கும் பணி நடந்து வருகிறது.
பள்ளி- கல்லூரி மாணவர்கள் கஞ்சா உபயோகிப்பது சமூகத்திற்கு தீங்கு விளை விக்கும். மதுரையில் உள்ள கல்வி நிறுவனங்களில் இதுவரை 666 விழிப்பு ணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.
பள்ளி மற்றும் கல்லூரி அருகில் கஞ்சா, புகையிலை மற்றும் போதை வஸ்துகள் விற்பனை செய்வோர் மற்றும் மாணவர்களை போதை பழக்கத்திற்கு அடிமையாக்குபவர்கள் பற்றி 0452-2520760, 83000-21100 தொலைபேசி எண்களில் தகவல் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மத்திய அரசு ரெயில்வே துறையை தனியார் மயமாக்க பெரும் முயற்சி எடுத்து வருகிறது.
- விமானங்களை தனியாருக்கு விற்பனை செய்ததை போல் ரெயில்களையும் தனியாருக்கு விற்பனை செய்ய முயற்சிக்கிறார்கள்.
திருச்சி :
திருச்சியில் எஸ்.ஆர்.எம்.யூ. தொழிற்சங்கத்தின் தொடர்வண்டி மேலாளர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் அந்த சங்கத்தின் தலைவர் ராஜாஸ்ரீதர் கலந்து கொண்டார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மத்திய அரசின் ரெயில்வே துறை தனியார் மயமாக்குதலை கண்டித்தும், புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட்டு பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதை ரெயில்வே ஊழியர்களிடம் வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எஸ்.ஆர்.எம்.யூ. சங்கம் சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறோம். அந்த வகையில் திருச்சியில் இன்று ரெயில்வே ஊழியர்களிடம் மேற்கண்ட இரண்டு பிரச்சனைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மத்திய அரசு ரெயில்வே துறையை தனியார் மயமாக்க பெரும் முயற்சி எடுத்து வருகிறது. ரெயில்வே துறை தனியார் மயமாக்கப்பட்டால் ரெயில் கட்டணம் உயர்வது மட்டுமல்லாமல் தொழிலாளர்கள் பலருக்கு வேலை வாய்ப்பு போகும் அபாயம் ஏற்படும். மத்திய அரசின் இந்த நடவடிக்கையை கைவிடுமாறு தொடர்ந்து எங்களுடைய சங்கம் வலியுறுத்தி வருகிறது. ஆனால் பிரதமரும், ரெயில்வே அமைச்சரும், ரெயில்வே துறையை தனியார்மயமாக்கப்படாது என்று பொய் சொல்லி வருகிறார்கள்.
விமானங்களை தனியாருக்கு விற்பனை செய்ததை போல் ரெயில்களையும் தனியாருக்கு விற்பனை செய்ய முயற்சிக்கிறார்கள். ரெயில்வேயை தனியார்மயமாக்கும் முயற்சியை எதிர்த்து தொடர்ந்து போராடி அதில் நாங்கள் வெற்றி பெறுவோம். கொரோனா காலத்தில் இறந்த தொழிலாளர்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். அந்த கோரிக்கையை மத்தியஅரசு நிறைவேற்ற வேண்டும்.
அண்மையில் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல தனியார் மூலம் ரெயில் சேவை தொடங்கப்பட்டது. இந்த சேவை மூலம் தனியாருக்கு நிறைய லாபம் கிடைத்தது. அப்படி லாபத்தின் ஒரு பங்குயை மத்திய அரசு ஏன் கேட்கவில்லை என்பது புரியாத புதிராக இருக்கிறது. தனியார், கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளை லாபம் சம்பாதிக்க தான் மத்திய அரசு செயல்படுகிறதா? ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயன் பெறும் ரெயில் சேவையை தனியாருக்கு தாரை வார்ப்பது எந்த விதத்தில் நியாயம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது கோட்டச்செயலாளர் வீரசேகரன் மற்றும் நிர்வாகிகள் மணிவண்ணன், பழனிவேல், வெங்கடேஷ் குமார், சித்தரேசன், சிவகுமார், செல்வகுமார், வெங்கடேசன், டேனியல் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
- கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தகவல்
- 2 முறைக்கு மேல் விபத்து ஏற்படுத்தியவர்கள் கண்டறியப்படும்
கோவை:
கோவையில் மாவட்டத்தில் பஸ் உள்ளிட்ட பொது இடங்களில் மக்கள் தவறவிட்ட சுமார் 106 செல்போன்கள் மீட்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன், செல்போனை உரியவர்களிடம் வழங்கினார். இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் கடந்த 4 மாதங்களில் பொதுமக்கள் தவறவிட்ட ரூ.52 லட்சம் மதிப்பிளான 350 சொல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த 4 மாதங்களில் போக்சோ வழக்குகளில் 149 வழக்குகளுக்கு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது, 9 பேருக்கு தண்டனை கிடைத்துள்ளது.
வழக்கு விரைந்து முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தர தனிப்பிரிவு செயல்பட்டு வருகிறது. பிராஜெக்ட் பள்ளிக்கூடம் திட்டம் மூலம் மாவட்ட போலீசார் 28 நாட்களில் 36 ஆயிரம் பள்ளி குழந்தைகளை சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளோம், அதில் 12 ஆயிரம் பேர் 10 வயதிற்கும் குறைவான குழந்தைகள். இந்த நடவடிக்கையால் குழந்தைகளுக்கு போலீீசார் மீது உள்ள அச்சம் குறைந்துள்ளது.
கோவையில் குட்கா விற்பனை தொடர்பாக 332 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 347 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 5 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது, 125 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அதே போல கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 126 வழக்குகள், 250 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளார். 4 பேரை குண்டர் சட்டத்தில் அடைக்க பரிந்துரை செய்துள்ளோம்.
மேலும் மாவட்டத்தில் சந்தேக மரணமாக பதிவாகும் வழக்குகளில் உறவினர்களுக்கு இறப்பு சான்றிதழ் பெற சிக்கல் இருந்தது, அவ்வாறு இருந்த 140 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் கடந்த 2019-2022 வரையில் நடந்த சாலை விபத்து 10 சதவீதமாக குறைந்துள்ளது. இருப்பினும் இரண்டு முறைக்கு மேல் விபத்து ஏற்படுத்தி 740 பேர் கண்டறியப்பட்டு, அதில் 500 வாகன ஓட்டிகளின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய வட்டார போக்குவரத்து துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மீதம் உள்ளவர்கள் உரிமங்க ளை ரத்து செய்ய பரிந்து ரைக்கப்படும். மாண வர்களின் எதிர்கால வாழ்க்கையை கருத்தில் கொண்டே மாவட்டத்தில் கஞ்சா குட்கா விற்ப னையை தடுக்க கடும் நடவடி க்கைகளை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழகத்தில் விரைவில் மாற்றங்கள் வரும் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பேட்டி அளித்துள்ளார்.
- இந்துக்கள் நடத்தும் பள்ளிகளில் தவறு நடந்தால் சூறையாடப்படுகிறது.
ராஜபாளையம்
ராஜபாளையம் காந்தி சிலை ரவுண்டானாவில் சென்னை மாகாண முதல்வராக இருந்த குமாரசாமி ராஜா சிலைக்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
விஷ்வ இந்து பரிசத் அமைப்பின் தலைவர் சரவண கார்த்திக், மாநில துணை தலைவர் குணசீலன், மாவட்ட தலைவர் லெனின், மாவட்ட அமைப்பாளர் சிவா, அமைப்பு குழு தலைவர் பொன்னுச்சாமி, வடக்கு ஒன்றிய தலைவர் சிவசக்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர். பின்னர் அர்ஜுன் சம்பத் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்திய சுதந்திர அமுத விழாவை முன்னிட்டு இந்து மக்கள் கட்சி சார்பில் ஜூலை-15 முதல் ஆகஸ்டு 15 வரை சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் தியாகிகளை போற்றும் வகையில் நினைவிடங்களில் மரியாதை செய்து வருகிறோம்.
முன்னாள் சென்னை மாகாண முதல்வர் பி.எஸ். குமாரசாமிராஜா பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும்.அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி ஆசிரியர்களை மிரட்டும் நோக்கத்துடன் செயல் படுபவதை கைவிட வேண்டும். இந்துக்கள் நடத்தும் பள்ளிகளில் தவறு நடந்தால் சூறையாடப்படுகிறது. கிறிஸ்தவர்கள் நடந்தும் பள்ளிகளில் தவறு நடந்தால் யாரும் கண்டு கொள்வதில்லை.
சபாநாயகர் அப்பாவு அனைத்து மதத்தினருக்கும், அனைத்து சமுதாயத்திற்கும் பொதுவானவர். அவர் கிறிஸ்தவ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மற்ற மதத்தினரை படிப்பறிவு இல்லாதவர்கள் என கூறுவது நல்லதல்ல.
தமிழகம் முழுவதும் பா.ஜ.க., இந்து அமைப்புகள் நடத்துகிற நிகழ்ச்சிக்கு போலீசார் அனுமதி மறுப்பது, தடை விதிப்பது நல்லதல்ல. எங்களுடைய கருத்துரிமை, பேச்சுரிமையை பறிக்க கூடாது. எங்கள் மீது தடைகள் விதிப்பதை ஜனநாயக முறைப்படி எதிர்கொள்வோம். தமிழகத்தில் வெகு சீக்கிரத்தில் மாற்றங்கள் வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தூத்துக்குடியில் 3 வருடங்களுக்கு ஒருமுறை தொழில் கண்காட்சியை துடிசியா நடத்திக்கொண்டு வருகிறது
- தூத்துக்குடி ஏ.வி.எம். கமலவேல் மண்டபத்தில் தொழில் கண்காட்சி நடத்தப்படவுள்ளதாக துடிசியா நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட சிறு தொழில்(துடிசியா) சங்க தலைவர் நேரு பிரகாஷ் மற்றும் நிர்வாகிகள் ராஜேந்திரன், தங்கராஜ், சந்திர மோகன், சுப்புராஜ் இலையன்ஸ்ராஜா ஆகியோர் செய்தியாளர்க ளிடம் கூறியதாவது:-
தொழில் கண்காட்சி
தூத்துக்குடியில் 3 வருடங்களுக்கு ஒருமுறை தொழில் கண்காட்சியை துடிசியா நடத்திக்கொண்டு வருகிறது.தென்கோடியில் அமைந்திருக்கும் தூத்துக்குடி மாவட்டத்திற்கு புதிய தொழில் நுட்பங்களை கொண்டு சேர்க்கவும், தொழில் வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கும் இக்கண்காட்சி உதவும்.
அதன்படி இந்த வருடம் அடுத்த மாதம்(ஆகஸ்டு) 12, 13 மற்றும் 14-ந் தேதிகளில் தூத்துக்குடி ஏ.வி.எம். கமலவேல் மண்டபத்தில் தொழில் கண்காட்சி நடத்தப்படவுள்ளது.
சிறு, குறு கனரக நிறுவனங்கள்
இதில் 180-க்கும் மேற்பட்ட சிறு, குறு, நடுத்தர மற்றும் கனரக நிறுவனங்கள் பங்கு பெற்று, தங்களின் தொழிற்சாலைகளில் தயாரிக்கும் பொருட்களை காட்சிப்படுத்தவுள்ளனர்.
மேலும் வாங்குவோர் விற்போர் கருத்தரங்கு, புதிய தொழில் முனைவோருக்கான அரங்குகள்மற்றும் ஏற்றுமதி இறுக்குமதியாளருக்கான கருத்தரங்குகள் இடம்பெறவுள்ளன.
அரசு துறைகளான சிட்கோ, குறு, சிறு, நடுத்தர தொழில்கள் துறை, தமிழ் நாடு தொழில் முதலீட்டுக் கழகம், மாவட்ட தொழில் மையம் போன்றவையும், தொழில் முனைவோருக்கு கடனுதவிகளை வழங்க பாரத ஸ்டேட் வங்கி, தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி, போன்ற வங்கிகளும் அரங்குகளை அமைக்கின்றன.
தொடக்க விழா
நமது மாவட்டம் தொழில் வளர்ச்சியில் முன்னோடி மாவட்டமாக திகழ்ந்திட இக்கண்காட்சி பெரிதும் உதவுகிறது. கண்காட்சியின் தொடக்க விழா 12-ந் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.
கனிமொழி எம்.பி., சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சர் தா.மோ.அன்பரசன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி, சண்முகையா எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- மின்கட்டண உயர்வை கண்டித்து வருகிற 25-ந் தேதி போராட்டம் நடைபெறும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
- மதுரையில் பள்ளி கூடுதல் கட்டிடங்களை திறந்து வைத்து நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
மதுரை
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோவில் பாப்பாகுடி சிக்கந்தர் சாவடி உள்ளிட்ட பகுதிகளில் பள்ளி கூடுதல் கட்டிடங்களை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க. பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றத்தை அடுத்து அ.தி.மு.க. சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஒற்றை தலைமை வேண்டும். இரட்டை குதிரையில் சவாரி செய்தால் அ.தி.மு.க.வின் வளர்ச்சிக்கு பாதிப்பு ஏற்படும் என்று அனைத்து நிர்வாகிகளும் ஒரு சேர முடிவெடுத்து எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக்கி உள்ளோம்.
என்னை பொறுத்தவரை இந்த கட்சியில் இருந்து ஒரு தொண்டனும் வெளியே செல்லக்கூடாது. ஜெயலலிதாவை காளிமுத்து பேசாத பேச்சா? அது போல பண்ருட்டி ராமச்சந்திரன், திருநாவுக்கரசு, கண்ணப்பன், ஆர்.எம்.வீரப்பன் போன்றவர்களும் கடுமையாக விமர்சனம் செய்தார்கள். ஆனால் ஜெயலலிதா, அவர்களையும் ஏற்றுக்கொண்டு கட்சியில் பதவிகளை வழங்கினார்.
அதுபோல தற்போது அ.தி.மு.க.வை விட்டு விலகி இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் போன்றவர்கள் எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக ஏற்றுக்கொண்டால் மீண்டும் அ.தி.மு.க.வில் இணைந்து பணியாற்றுவது குறித்து பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரிய நடவடிக்கை எடுப்பார்.
வருகிற 25-ந் தேதி மின்கட்டண உயர்வை கண்டித்து மதுரையில் அ.தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க.வினருடன் சேர்ந்து பொதுமக்களும் திரளாக பங்கேற்று இந்த ஆர்ப்பாட்டம் வெற்றியடைய செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இந்து கோவில்கள் வருமானத்தை எடுத்துக் கொள்ளும் அரசு அதனை கோவில் பணிகளுக்குச் செலவிடுவதில்லை
- கட்டணம் வசூலிக்கும் கோவில்கள் முன்பு இந்து முன்னணி சார்பில் போராட்டம்
கன்னியாகுமரி:
தமிழகத்தில் இந்துக்களின் உரிமைகளை மீட்டெடுக்கும் பிரசார பயணத்தை, இந்து முன்னணி தொடங்கி உள்ளது. அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை யில் திருச்செந்தூரில் நேற்று தொடங்கிய பிரசார பயணம் இன்று கன்னியாகுமரி வந்தது.
அப்போது மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிர மணியம் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்த பிரசார பயணம் பல்வேறு மாவட்டங்கள் வழியாக சென்று ஜூலை 31-ந் தேதி சென்னையில் நிறைவு பெறுகிறது. இன்று மாலை நாகர்கோவிலில் பிரசார கூட்டம் நடக்கிறது. இந்து கோவில்கள் வருமானத்தை எடுத்துக் கொள்ளும் அரசு அதனை கோவில் பணிகளுக்குச் செலவிடுவதில்லை. மற்ற மதங்களில் இந்த நிலை இல்லை. எனவே இந்து கோவில்களுக்கு வாரியம் அமைக்க வேண்டும் என நீண்ட நாட்களாக இந்து முன்னணி வலியுறுத்தி வருகிறது. இதன் ஒரு முயற்சி தான் இந்த பிரசார பயணம். 90 சதவீதம் கோவில்களில் அறங்காவலர்கள் நியமிக்கப்படாத நிலை தான் இன்று உள்ளது.
பக்தர்கள் தரிசனத்திற்கு கட்டணம் வசூலிக்ககூடாது. கட்டணம் வசூலிக்கும் கோவில்கள் முன்பு இந்து முன்னணி சார்பில் போராட்டம் நடத்துவோம்.
ஆதீனங்களையும், மடாதிபதி களையும் தி.மு.க. மிரட்டி வருகிறது. இதை இந்து முன்னணி வன்மை யாக கண்டிக்கிறது.கடந்த ஒராண்டில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட இந்து கோவில்கள் இடிக்கப்பட்டு உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மாநில செயலாளர் டாக்டர் அரசுராஜா, பேச்சாளர் வக்கீல் அசோகன் ஆகியோர் உடனிருந்தனர்.