என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 227505"
- சிக்கனில் விதவிதமான ஸ்நாக்ஸ் செய்யலாம்.
- இந்த ரெசிபியை செய்வது மிகவும் சுலபம்.
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு - 2
எலும்பில்லாத சிக்கன் - 1 கப்
நெய் - 1 டீஸ்பூன்
முட்டை - 2
சில்லி பிளேக்ஸ் - 1 டீஸ்பூன்
சாட் மசாலா - 1 டீஸ்பூன்
தனி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
ஆரிகானோ - 1 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய குடைமிளகாய் - 1 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - 1 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
கபாப் ஸ்டிக் - 10
உப்பு - சுவைக்கு
பிரெட் துள் - தேவைக்கு
எண்ணெய் - பொரிக்க
செய்முறை
உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து மசித்து கொள்ளவும்.
சிக்கனை வேக வைத்து உதிர்த்து கொள்ளவும்.
முட்டையை ஒரு கிண்ணத்தில் உடைத்து ஊற்றி நன்றாக அடித்துகொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் மசித்த உருளைக்கிழங்கை போட்டு அதனுடன் வேக வைத்து உரித்த சிக்கன், உப்பு, இஞ்சி பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, குடைமிளகாய், ஆரிகானோ, தனி மிளகாய் தூள், சாட் மசாலா, சில்லி பிளேக்ஸ், நெய் சேர்த்து நன்றாக பிசைத்த பின்னர் கடைசியாக 2 டீஸ்பூன் பிரெட் தூள் சேர்த்து கலந்து வைக்கவும்.
ஒரு தட்டில் பிரெட் தூளை கொட்டி பரப்பி வைக்கவும்.
2 கபாப் ஸ்டிக்கை எடுத்து கொண்டு அதில் சிக்கன் மசாலாவை ஒரு உருண்டை அளவு எடுத்து கபாப் ஸ்டிக்கில் வைத்து தட்டையாக தட்டவும். இவ்வாறு அனைத்து மசாலாவையும் செய்யவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து செய்து வைத்த ஸ்டிக்கை முட்டை கலவையில் முக்கி பிரெட் தூளில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
இப்போது சூப்பரான ஸ்நாக்ஸ் சிக்கன் ஸ்டிக் ரெடி.
- சிக்கனில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
- இந்த ஸ்நாக்ஸ் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
தேவையான பொருட்கள்
சிக்கன் - 200 கிராம்
உருளைக்கிழங்கு - 2
ப.மிளகாய் - 2
உப்பு - சுவைக்கு
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
மிளகு தூள் - அரை டீஸ்பூன்
சில்லி பிளேக்ஸ் - அரை டீஸ்பூன்
வெண்ணெய் - 1 டீஸ்பூன்
மலாய் அல்லது கிரீம் - 2 டீஸ்பூன்
பிரெட் தூள் - தேவையான அளவு
முட்டை - 2
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்
கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
முட்டையை ஒரு கிண்ணத்தில் உடைத்து ஊற்றி சிறிது உப்பு, சில்லி பிளேக்ஸ் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
குக்கரில் சிக்கனை போட்டு அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்த்து 1 விசில் 5 நிமிடம் மிதமான தீயில் வைத்து வேக விடவும்.
விசில் போனவுடன் குக்கரை திறந்து உருளைக்கிழங்கை எடுத்து விட்டு அதில் தண்ணீர் வற்றும் வரை சிக்கனை அடுப்பில் வைத்து வேக விடவும்.
தண்ணீர் வற்றியதும் சிக்கனை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக மசித்து கொள்ளவும்.
பின்னர் அதனுடன் உருளைக்கிழங்கை தோல் நீக்கி போட்டு மசிக்கவும்.
அடுத்து அதில் மிளகு தூள், சில்லி பிளேக்ஸ், வெண்ணெய், மலாய் அல்லது கிரீம், உப்பு, கொத்தமல்லி,ப.மிளகாய் சேர்த்து நன்றாக கலக்கவும். இது சற்று தளர்வாக தான் இருக்கும்.
ஒரு தட்டில் பிரெட் தூளை கொட்டி நன்றாக பரப்பி விடவும்.
அப்போது சிக்கன் மசாலாவை சிறிது எடுத்து பிரெட் தூளில் போட்டு பிரட்டி வேண்டிய வடிவில் பிடிக்கவும். சிக்கன் மசாலா தளர்வாக இருக்கும் என்பதால் பிரெட் தூளில் பிரட்டினால் மட்டுமே சரியான வடிவில் வரும். இவ்வாறு அனைத்தையும் செய்யவும்.
அடுத்து மற்றொரு முறை பிடித்து வைத்த கட்லெட்டை முட்டையில் முக்கி பிரெட் தூளில் பிரட்டி வைக்கவும். இவ்வாறு அனைத்தையும் செய்யவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து செய்து வைத்த கட்லெட்டுகளை ஒவ்வொன்றாக எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். இதை மிதமான தீயில் வைத்து தான் செய்ய வேண்டும்.
இப்போது சூப்பரான சிக்கன் மலாய் கட்லெட் ரெடி.
- பார்க்க கஷ்டமாக தெரிந்தாலும் இந்த ரெசிபி செய்வது மிகவும் சுபலம்.
- குழந்தைகளுக்கு இந்த ஸ்நாக்ஸ் மிகவும் பிடிக்கும்.
தேவையான பொருட்கள்
மைதா - 2 கப்
நெய் - 2 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கு
சீரகம் - அரை டீஸ்பூன்
உருளைக்கிழங்கு - 4
துருவிய கேரட் - 2 டீஸ்பூன்
குடைமிளகாய் -2 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி தழை - 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
ப.மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
தனியா தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
சோள மாவு - 2 டீஸ்பூன்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, நெய், உப்பு, சீரகம் போட்டு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் துருவிய உருளைக்கிழங்கை போட்டு அதனுடன் துருவிய கேரட், குடைமிளகாய், கொத்தமல்லி தழை, ப.மிளகாய், உப்பு, சீரகத்தூள், மிளகாய் தூள்,தனியா தூள், மஞ்சள் தூள், சோள மாவு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
பிசைத்து வைத்த மைதா மாவை மெல்லிய சப்பாத்தியாக தேய்க்கவும்.
தேய்த்த மாவில் நடுவில் மசாலாவை வைத்து மாவு முழுவதும் பரப்பி விடவும். அதன் மேல் மற்றொரு சப்பாதியால் மூடி ஓரங்களில் நன்றாக ஒட்டி விடவும்.
இப்போது சப்பாத்தியின் 4 ஓரங்களையும் வெட்டி (சதுர வடிவில்) விடவும். அடுத்து கத்தியால் கைவிரல் அகலத்தில் துண்டுகளாக வெட்டவும்.
வெட்டிய ஒரு துண்டின் நடுவில் நீளமான குச்சியால் நடுவில் அழுத்தினால் இருபக்க ஒரங்களிலும் விரிந்து வரும்.
இப்போது அதை இருபக்க முனைகளையும் பிடித்து வெவ்வோறு கோணத்தில் முறுக்கவும். இவ்வாறு அனைத்தையும் செய்யவும்.
கடாயில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்ததை ஒவ்வொன்றாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
இப்போது சூப்பரான ஆலு டிவிஸ்டர் சமோசா ரெடி.
- பிரெட் வைத்து சூப்பரான கச்சோரி செய்யலாம்.
- குழந்தைகளுக்கு இந்த ஸ்நாக்ஸ் மிகவும் பிடிக்கும்.
தேவையான பொருட்கள்
வெங்காயம் - 1
ப.மிளகாய் - 1
உருளைக்கிழங்கு - 1
பிரெட் துண்டுகள் - 10
கேரட் - 1
குடைமிளகாய் - 1
வேக வைத்த பச்சை பட்டாணி - கால் கப்
கொத்தமல்லி - சிறிதளவு
சீரகம் - 1 டீஸ்பூன்
சில்லி பிளேக்ஸ் - அரை டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
கருப்பு உப்பு - கால் டீஸ்பூன்
ஆம்சூர் பவுடர் - 1 டீஸ்பூன்
தனியா தூள் - அரை டீஸ்பூன்
சீரகத்தூள்- அரை டீஸ்பூன்
மைதா மாவு - 1 டீஸ்பூன்
சோள மாவு - 3 டீஸ்பூன்
முந்திரி - 10
பிரெட் தூள் - தேவையான அளவு
உப்பு, எண்ணெய் - தேவையானஅளவு
செய்முறை
உருளைக்கிழங்கை வேகவைத்து துருவிக்கொள்ளவும்.
பச்சை பட்டாணியை வேகவைத்து கொள்ளவும்.
வெங்காயம், ப.மிளகாய், கேரட், குடைமிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மைதா மாவை சிறிது தண்ணீர் சேர்த்து திக்கான பதத்தில் கரைத்து கொள்ளவும்.
சோளமாவில் சில்லி பிளேக்ஸ் சேர்த்து கரைத்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து முந்திரியை உடைத்து போட்டு வறுபட்டதும் சீரகம் போட்டு பொரிந்ததும் வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் துருவிய உருளைக்கிழங்கை சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் பொடியாக நறுக்கிய கேரட், குடைமிளகாய், வேக வைத்த பச்சை பட்டாணி சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், கருப்பு உப்பு, ஆம்சூர் பவுடர், தனியா தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
மசாலா எல்லாம் ஒன்று சேர்ந்து வந்ததும் இறக்கி குளிர வைக்கவும்.
பிரெட் துண்டை பூரி கட்டையால் மெலிதாக தேய்க்கவும்.
தேய்ந்த பிரெட்டை வட்ட வடிவ கட்டரால் வெட்டவும். இவ்வாறு அனைத்து பிரெட் துண்டுகளையும் செய்து கொள்ளவும்.
ஒரு வட்ட வடிவில் வெட்டிய பிரெட் துண்டில் மசாலாவை நடுவில் வைக்கவும். மற்றொரு பிரெட்டி துண்டில் ஓரங்களில் மைதா பசையை தடவி மசாலா வைத்த பிரெட்டில் மேல் வைத்து மூடி விடவும். ஓரங்களில் நன்றாக அழுத்தி விடவும். இவ்வாறு அனைத்தையும் செய்து கொள்ளவும்.
செய்து வைத்தவற்றை சோளமாவு கரைசலில் முக்கி பிரெட் தூளில் பிரட்டி வைக்கவும். இவ்வாறு அனைத்தையும் செய்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்துள்ள கச்சோரிகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
இப்போது சூப்பரான ஆலு பிரெட் கச்சோரி ரெடி.
- குழந்தைகளுக்கு இந்த ஸ்நாக்ஸ் மிகவும் பிடிக்கும்.
- விருந்தினர் வந்தால் இந்த ரெசிபி செய்து கொடுத்து அசத்தலாம்.
தேவையான பொருட்கள்
வெங்காயம் - 1
பிரெட் - 6 துண்டுகள்
உருளைக்கிழங்கு - கால் கிலோ
பன்னீர் - 100 கிராம்
துருவிய சீஸ் - விருப்பத்ற்கேற்ப
ப.மிளகாய் - 3
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
சில்லி ப்ளோக்ஸ் - 2 தேக்கரண்டி
மிளகு தூள் - கால் தேக்கரண்டி
தனியா தூள் - 1 தேக்கரண்டி
கொத்தமல்லி - சிறிதளவு
ஆரிகானோ - 1 தேக்கரண்டி
சோள மாவு - கால் கப்
பிரெட் தூள், எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை
ப.மிளகாய், கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
பன்னீரை துருவிக்கொள்ளவும்.
உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.
சோள மாவில் 1 தேக்கரண்டி சில்லி ப்ளோக்ஸ், சிறிதளவு உப்பு, ஆரிகானோ, சிறிதளவு தண்ணீர் சேர்த்து திக்கான பதத்தில் கரைத்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், ப.மிளகாயை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கிய பின்னர் மஞ்சள் தூள், சில்லி ப்ளோக்ஸ் 1 தேக்கரண்டி, தனியா தூள், மிளகுதூள் சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் மசித்த உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்து வதக்கவும்.
அடுத்து துருவிய பன்னீர், கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.
எல்லாம் சேர்ந்து ஒன்றாக கலந்து வரும் போது துருவிய சீஸை சேர்த்து வதக்கவும்.
மசாலா எல்லாம் ஒன்று சேர்ந்ததும் அடுப்பில் இருந்து இறக்கவும்.
பிரெட்டில் மேல் இந்த மசாலாவை தடவவும்.
பின்னர் மசாலா தடவிய பிரெட்டை நீளமான துண்டுகளாக வெட்டவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து வெட்டிய பிரெட் துண்டுகளை சோள மாவு கலவையில் முக்கி பிரெட் தூளில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
இப்போது சூப்பரான ஆலு பிரெட் பிங்கர்ஸ் ரெடி.
- டீ கடையில் வெங்காய போண்டா சாப்பிட்டு இருப்பீங்க.
- இன்று வீட்டிலேயே இந்த போண்டா செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கடலை மாவு - 1 கப்
பெரிய வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
சோம்பு - 1 ஸ்பூன்
மிளகாய்தூள் - 1 ஸ்பூன்
மைதா மாவு - 4 ஸ்பூன்
அரிசி மாவு - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
செய்முறை :
* வெங்காயத்தை தோல் நீக்கி நீளமாக மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.
* ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் கடலை மாவை போட்டு அதனுடன் சோம்பு, மிளகாய்த்தூள், அரிசி மாவு, மைதா மாவு, உப்பு, வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து பிசைந்து வைக்கவும். மாவு உருண்டை பிடிக்கிற அளவு பக்குவமாக இருக்குமாறு பார்த்து கொள்ளவும்.
* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி போட்டு அடுப்பை சிம்மில் வைத்து நன்கு வேக வைத்து எடுக்கவும்.
* சுவையான மாலை நேர ஸ்நாக்ஸ் வெங்காய போண்டா ரெடி.
- டீ, காபியுடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த ஸ்நாக்ஸ்.
- இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பிரெட் - 5 துண்டு,
பெரிய வெங்காயம் - 2,
பச்சை மிளகாய் - 4,
உப்பு - தேவையான அளவு,
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்,
சீரகம் - அரை டீஸ்பூன்,
கடலை மாவு - 4 டேபிள் ஸ்பூன்,
பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை,
காய்கறி - கால் கப்.
செய்முறை :
ஒரு வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்.
சீரகத்தை கொரகொரப்பாக பொடித்துகொள்ளவும்.
காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மிக்ஸியில் பிரெட் துண்டுகளை பிய்த்து பிய்த்து போட்டு அதனுடன் பெரிய வெங்காயம், 4 பச்சை மிளகாயை நறுக்கி சேர்த்து கொரகொரவென்று அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், உப்பு, மஞ்சள் தூள், சீரகம், கடலை மாவு, பெருங்காயத் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
அடுத்துஅதில் பொடியாக நறுக்கிய காய்கறிகளை சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து நன்கு கெட்டியாக உருண்டை பிடிக்கும் அளவிற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
பக்கோடா மாவு பதம் வந்த பிறகு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளுங்கள்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மீடியம் பிளேமில் வைத்து கொஞ்சம் கொஞ்சமாக பக்கோடா மாவை எடுத்து போட்டு எல்லா பக்கமும் பொன்னிறமாக சிவக்க வறுத்து எடுக்க வேண்டும்.
ரொம்ப ரொம்ப சுலபமாக செய்யக்கூடிய இந்த பிரெட் பக்கோடா எண்ணெய் குடிக்காது.
சாதாரண வெங்காய பக்கோடாவை விட கூடுதல் சுவையுடன் நிச்சயம் இருக்கும்.
சட்டென ஐந்தே நிமிடத்தில் செய்யக்கூடிய இந்த பிரட் பக்கோடா டொமேட்டோ சாஸ் உடன் தொட்டு கொண்டால் அவ்வளவு அருமையாக இருக்கும்.
மாலையில் டீயுடன் சாப்பிடலாம் வயிறு நிறைவாக இருக்கும்.
- இப்பொழுதே கொளுத்தும் வெயில் ஆரம்பம் ஆகி விட்டது.
- வெங்காய வடகம் செய்வதற்கு ஏற்ற காலம்.
தேவையான பொருட்கள்
சின்ன வெங்காயம் - 2 கிலோ
வெள்ளை முழு உளுந்து - 200 கிராம்
பெருங்காயப்பொடி - 1 தேக்கரண்டி
கடுகு - 1 மேஜைக்கரண்டி
மஞ்சள் பொடி - 1 தேக்கரண்டி
வெந்தயப்பொடி - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லித்தழை - 1 கட்டு
கறிவேப்பிலை - ஒரு சிறிய கப் அளவு
கரகரப்பாக அரைக்க
மிளகாய் வத்தல் - 10
சீரகம் - 2 மேஜைக்கரண்டி
பூண்டு - 1 பெரியது
செய்முறை
2 கிலோ வெங்காயத்தை தோலுரித்து பொடிதாக நறுக்கி ஒரு பேப்பரில் பரப்பி நான்கு மணி நேரம் உலர விடவும்.
உளுந்தம் பருப்பை 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை இரண்டையும் பொடியாக நறுக்கி வைக்கவும்.
பூண்டை தோலுரித்து வைக்கவும்.
மிளகாய் வத்தல், சீரகம், பூண்டு மூன்றையும் மிக்ஸ்சியில் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
பருப்பை நன்றாக கழுவி தண்ணீரை வடித்து விட்டு அதனுடன் உப்பு சேர்த்து கிரைண்டரில் தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைத்து ஒரு வாயகன்ற பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
இட்லி பதத்திற்கு அரைக்க தேவை இல்லை. 10 நிமிடம் அரைத்தால் போதும்.
அரைத்த மாவுடன் நறுக்கிய வெங்காயம், கடுகு, பெருங்காயப்பொடி, மஞ்சள்பொடி, வெந்தயப்பொடி, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை எல்லாவற்றையும் சேர்த்து நன்கு பிசைந்து வைக்கவும்.
பிறகு கையை தண்ணீரில் நனைத்துக் கொண்டு வெங்காய கலவையை உருட்டாமல் சிறிது சிறிதாக எடுத்து தட்டுகளில் வைத்து வெயிலில் காய வைக்கவும். உருட்டி வைத்தால் வறுக்கும் போது சரியாக வேகாது.
அடுத்த நாள் வடகம் தட்டோடு ஒட்டி இருக்கும். எனவே ஒரு சிறிய மேஜைக்கரண்டி கொண்டு எடுத்து ஒரு பேப்பரில் பரப்பி வெயிலில் காய வைக்கவும்.
இரண்டு நாட்களில் வடகம் நன்கு காய்ந்து விடும்.
பிறகு ஒரு காற்றுப்புகாத டப்பாவில் போட்டு மூடி வைக்கவும். தேவையான போது வறுத்து கொள்ளலாம்.
- பஜ்ஜியில் பல்வேறு வெரைட்டிகள் உள்ளது.
- இன்று தக்காளியில் பஜ்ஜி செய்து எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
அதிகம் பழுக்காத நாட்டுத் தக்காளி - 5
பொட்டுக்கடலைமாவு - 50 கிராம்,
சோள மாவு - 25 கிராம்,
மைதா மாவு - ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் விழுது - அரை டீஸ்பூன்,
பெருங்காயத் தூள் - சிறிதளவு,
சமையல் சோடா - ஒரு சிட்டிகை,
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு,
உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை:
தக்காளியை கனத்த வில்லைகளாக நறுக்கி கொள்ளவும்.
பொட்டுக்கடலை மாவு, சோள மாவு, மைதா மாவு, உப்பு, சமையல் சோடா, மிளகாய் விழுது, பெருங்காயத்தூள் ஆகியவற்றை ஒன்று சேர்த்து, நீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்தில் கரைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தக்காளி வில்லைகளை மாவில் தோய்த்து சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
இப்போது சூப்பரான தக்காளி பஜ்ஜி ரெடி.
குறிப்பு: தக்காளியில் இருக்கும் நீர் எண்ணெயில் சலசலப்பு உண்டாக்கும் என்பதால், மிதமான தீயில் மெதுவாக பொரித்தெடுக்கவும்.
- பன்னீரில் புரதச்சத்து அதிகம் உள்ளது.
- நீரிழிவு உள்ளவர்களும்கூட பன்னீரை தைரியமாக சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்:
ஊற வைப்பதற்கு...
பன்னீர் - 200 கிராம்
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
தயிர் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
மாவிற்கு...
மைதா - 3 டேபிள் ஸ்பூன்
சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன்
காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
சமையல் சோடா - 1 சிட்டிகை
உப்பு - சுவைக்கேற்ப
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
* ஒரு பௌலில் பன்னீர் துண்டுகளை எடுத்துக் கொண்டு, அத்துடன் 'ஊற வைப்பதற்கு' கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து நன்கு பிரட்டிக் கொள்ள வேண்டும்.
* மற்றொரு பௌலில் 'மாவிற்கு' கொடுத்துள்ள பொருட்களை எடுத்து நன்கு கலந்து, பின் சிறிது நீர் ஊற்றி ஓரளவு கெட்டியாக கலந்து கொள்ள வேண்டும். மாவானது மிகவும் நீராகவோ அல்லது கெட்டியாகவோ இருக்கக்கூடாது. இட்லி மாவு பதத்திற்கு இருக்க வேண்டும்.
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடானதும், ஊற வைத்துள்ள பன்னீர் துண்டுகளை தயாரித்து வைத்துள்ள மாவில் பிரட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
* இதேப் போல் அனைத்து பன்னீர் துண்டுகளையும் பொரித்து எடுத்தால், மொறுமொறுப்பான பன்னீர் 65 தயார்.
குறிப்பு:
* அனைத்து பன்னீர் துண்டுகளையும் ஒரே நேரத்தில் மாவில் போட்டு விட வேண்டாம். இல்லாவிட்டால், பன்னீர் எளிதில் உடைத்துவிடும்.
* உங்களுக்கு மைதா சேர்க்க பிடிக்காவிட்டால், அதற்கு பதிலாக சோள மாவு மற்றும் அரிசி மாவு பயன்படுத்திக் கொள்ளலாம்.
- இந்த ஸ்நாக்ஸ் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
- கேழ்வரகில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.
தேவையான பொருட்கள்
ராகி சேமியா - 100 கிராம்,
உருளைக்கிழங்கு - 3,
கேரட் - 1,
வெங்காயம் - 1,
கரம்மசாலாத்தூள், மஞ்சள் தூள், உப்பு, மிளகாய்த்தூள் - தேவைக்கு,
வறுத்து ஒன்றிரண்டாகப் பொடித்த வேர்க்கடலை - 4 டீஸ்பூன்,
சோம்பு - 1/4 டீஸ்பூன்,
எண்ணெய் - 50 கிராம்,
மைதா - 4 டேபிள்ஸ்பூன்,
கொத்தமல்லி - சிறிது.
செய்முறை
உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.
கேரட்டை துருவிக்கொள்ளவும்.
வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பாத்திரத்தில் மைதா மாவு, தண்ணீர், சிறிது உப்பு சேர்த்து தண்ணீராகக் கரைத்துக் கொள்ளவும்.
ராகி சேமியாவை மிக்சியில் ரவை பதத்திற்குப் பொடித்துக் கொள்ளவும்.
மசித்த உருளைக்கிழங்குடன் துருவிய கேரட், வெங்காயம், உப்பு, மிளகாய்த்தூள், கரம்மசாலாத்தூள், சோம்பு, பொடித்த வேர்க்கடலை, கொத்தமல்லி சேர்த்து நன்கு பிசைந்து சிறு உருண்டை அளவு எடுத்து விரும்பிய வடிவில் தட்டி வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் செய்து வைத்த கட்லெட்டுகளை மைதா கரைசலில் முக்கி, பொடித்த ராகி சேமியாயில் போட்டு பிரட்டி, சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
இப்போது சூப்பரான ராகி சேமியா வெஜிடபிள் கட்லெட் ரெடி.
- இந்த ஸ்நாக்ஸ் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
- 15 நிமிடத்தில் இந்த ரெசிபியை செய்து விடலாம்.
தேவையான பொருட்கள் :
கடலை மாவு - 150 கிராம்,
அரிசி மாவு - 25 கிராம்,
மிளகாய்த்தூள், உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - தேவையான அளவு.
ஸ்டஃப்பிங் செய்ய:
உருளைக்கிழங்கு - 2 (வேகவைத்து மசிக்கவும்),
பன்னீர் துண்டுகள் - 50 கிராம்,
தனியா தூள் - ஒரு டீஸ்பூன்,
கரம்மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்,
நறுக்கிய கொத்த மல்லித்தழை, பச்சை மிளகாய் - சிறிதளவு,
எலுமிச்சைச் சாறு - அரை டீஸ்பூன்,
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு - சிறிதளவு.
செய்முறை:
ஸ்டஃப்பிங் செய்யக் கொடுத்துள்ள பொருட்களை நன்கு கலந்து சிறு எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள், உப்பு ஆகியவற்றை ஒன்று சேர்த்து நீர்விட்டு தோசை மாவைவிட சற்று தளர்வாக கரைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் தயார் செய்து வைத்த உருண்டைகளை மாவில் நன்கு தோய்த்து, சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
இப்போது சூப்பரான பன்னீர் - ஆலு ஸ்டஃப்டு போண்டா ரெடி.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்