என் மலர்
நீங்கள் தேடியது "நலத்திட்டம்"
- பணிமனை வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
- அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனையில் மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு நகர்மன்ற தலைவர் புகழேந்தி தலைமை தாங்கி தி.மு.க. கொடியேற்றி வைத்தார்.
பின்பு, போக்குவரத்து கழக பணிமனை வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இதில், தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் சொக்கலிங்கம், செயலாளர் ஆனந்தராஜ், பொருளாளர் கருணாநிதி, தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் சதாசிவம், மேற்கு ஒன்றிய செயலாளர் உதயம் முருகையன்,
அரசு வழக்கறிஞர் வெங்கடேஸ்வரன், வழக்கறிஞர் அணி அன்பரசு, மாவட்ட மாணவரணி செந்தாமரை செல்வன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
- கனமழையால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 500 பேருக்கு நலத்திட்ட உதவிகள்.
- தி.மு.க. நகர இளைஞரணி அமைப்பாளர் ராஜசேகரன் நன்றி கூறினார்.
சீர்காழி:
சீர்காழி நகர தி.மு.க. சார்பில்இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ, பிறந்தநாளை யொட்டி, நகராட்சி 18-வது வார்டில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி திமுக நகர செயலாளர் ம.சுப்பராயன் தலைமையில் நடைபெற்றது.
நகர்மன்ற தலைவர் துர்காபரமேஸ்வரி, ஒன்றிய செயலாளர் பிரபாகரன், பொதுக்குழு உறுப்பினர் முத்து.மகேந்திரன், சாமிநாதன், ஜி.என்.ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கலை, இலக்கிய பிரிவு மாவட்ட அமைப்பாளர் செல்வ முத்துக்குமார் வரவேற்றார். மாவட்ட செயலாளரும், பூம்புகார் எம்.எல்.ஏ.வுமான நிவேதா.முருகன், சீர்காழி எம்.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., ஆகியோர் பொதுமக்கள், மாற்றுதிறனாளிகளுக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
இதில் முன்னாள் எம்.எல்.ஏ. மூர்த்தி, நகர்மன்ற உறுப்பினர்கள் பாஸ்கரன், ராமு, திட்டை ஊராட்சி மன்ற தலைவர் பெரியசாமி, தி.மு.க. நிர்வாகிகள் முத்துகுபேரன், முருகன், ஜெ.கே.செந்தில், கோடங்குடி.சங்கர், மற்றும் பலர் பங்கேற்றனர்.
முடிவில் தி.மு.க. நகர இளைஞரணி அமைப்பாளர் ராஜசேகரன் நன்றிக்கூறினார்.
- மத்திய அரசால் 438 நபர்களுக்கு ரூ.1,33,72,771 நலத்திட்ட உதவிகளாக வழங்கப்பட்டுள்ளது.
- கண் கண்ணாடி மானியம், ஈமச்சடங்கு நிதியுதவி போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் 34 நபர்களுக்கு வழங்கப்பட்டது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் படைவீரர் கொடிநாள் தினத்தை 2022-ஐ முன்னிட்டு நடைபெற்ற தேநீர் விருந்தில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கலந்து கொண்டார்.
பின்னர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறியதாவது:-
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கூட்டரங்கில் படைவீரர் கொடிநாள் தினத்தை 2022-ஐ முன்னிட்டு கொடி நாள் நிதி வசூல் தொடங்கப்பட்டு உள்ளது. இந்நாளில் தேசத்தின் குடிமக்களாகிய நாம் அனைவரும் முப்படை வீரர்களுக்கு அவர்களது குடும்பத்தினருக்கும் நன்றியை வெளிப்படுத்தும் விதமாக அவர்களின் வாழ்விற்கு உதவும் வகையில் நிதியினை வாரி வழங்கும் நாள்.
அடுத்த கொடிநாள் வரை முழு ஆண்டும் கொடிநாள் நலநிதி வசூலிக்கப்பட்டு வருகிறது.இவ்வாறாக வசூலிக்கப்படும் தொகை முப்படை வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு பலவேறு நலத்திட்டங்கள் மூலம் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவிலேயே பல ஆண்டுகளாக கொடிநாள் நிதி வசூல் புரிவதில் தமிழ்நாடு முதலிடத்தை தக்க வைத்து வருகிறது. இது படைவீரர்கள் மீது தமிழ்நாட்டு மக்கள் காட்டும் மதிப்பும் மரியாதையையும் அளவிடுகிறது.
மேலும், கடந்த ஓராண்டில் முன்னாள் படைவீரர் , சார்ந்தோர்களுக்கு மாநில மற்றும் மத்திய அரசால் 438 நபர்களுக்கு ரூ.1,33,72,771 நலத்திட்ட உதவிகளாக வழங்கப்பட்டுள்ளது.
இவ்விழாவில் ரூ.5,27,100 மதிப்பிலான, கல்வி உதவித் தொகை, திருமண நிதியுதவி, கண் கண்ணாடி மானியம், ஈமச்சடங்கு நிதியுதவி போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் 34 நபர்களுக்கு வழங்கப்பட்டது.
2021 கொடி நாள் ஆண்டில் அரசு இலக்கு ரூ.68,44,000. அதில் ரூ.1,59,53,500 வசூல் செய்யப்பட்டுள்ளது. இது 233.10 சதவீதம் ஆகும். கொடிநாள் 2022ஆம் ஆண்டிற்கு தஞ்சாவூர் மாவட்டத்திற்கு இலக்கு ரூ.72,29,000 என அரசால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வசூல் தொகையினை விட இந்த ஆண்டு கூடுதலாக வசூல் செய்திட மாவட்ட அலுவலர்களை கேட்டுக்கொள்வதுடன், பொது மக்கள் அதிக அளவில் கொடிநாள் நிதிக்கு நன்கொடை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் திருநங்கைகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கி னார். பின்னர் அவர் கூறிய தாவது:-
கன்னியாகுமரி மாவட்டத்தில் திருநங்கை கள் நலன் சார்ந்த திட்டங் கள் சிறப்பாக செயல் படுத்தப்பட்டு வருகிறது. 55 திருநங்கைகள் இணைய தளத்தில் பதிவு மேற் கொண்டு தமிழ்நாடு அரசால் இணையவழி அடையாள அட்டை வழங் கப்பட்டுள்ளது. 40 வயதிற்கு மேற்பட்ட திருநங்கையர்களுக்கு மாதம் ரூ.1000 வீதம் வழங்கும் திட்டத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 31 திருநங் கைகள் அந்தந்த தாலுகா அலுவ லகத்தின் மூலமாக சிறப்பு ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். தமிழ்நாடு அரசின் இலவச மருத்துவ காப்பீட்டு திட்ட அடையாள அட்டை 49 நபர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்டுள்ளது.
சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் கன்னியாகுமரி மாவட் டத்தில் உள்ள திருநங்கை களுக்கு 2021-2022 நிதி யாண்டிற்கு சொந்த தொழில் செய்வதற்கு மானியம் வழங்கிட தேர்வு குழு அமைத்து பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு நிதி ஒதுக்கீடு பெறப்பட்ட தைத்தொடர்ந்து, சமூக நலத்துறையின் சார்பில் 30 திருநங்கைகளுக்கு சொந்தமாக தொழில் செய்வதற்கு மானியத்தொ கையினை வழங்கப்பட்டது. இவற்றில், துணி வியாபரம் செய்திட 17 நபர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.8.50 லட்சம் மானியமாகவும், ஆடு வளர்த்தல் தொழில் செய்திட ஒரு நபருக்கு ரூ.50 ஆயிரம் மானியமாகவும், மாடு வளர்த்தல் தொழில் செய்திட ஒரு நபருக்கு ரூ.35 ஆயிரம் மதிப்பிலுள்ள கால்நடைகள் கொள்முதல் செய்யவும், ரூ.15 ஆயிரத் திற்கு தீவனம் மற்றும் மேற்கூரை அமைத்தல் என 6 நபர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.3 லட்சம் மானியமாகவும். மீன் வியாபாரம் செய்துவரும் 4 நபர்களுக்கு தொழில் விரிவு படுப்படுத்திட தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.2 லட்சம் மானியமாகவும், புதிதாக காய்கறி வியாபாரம் மற்றும் கிராமிய கலை மற்றும் பூ கட்டுதல் செய்திட தலா ஒரு நபருக்கு ரூ.50 ஆயிரம் வீதம் 2 நபருக்கு ரூ.50 ஆயிரம் மானியம் என மொத்தம் 30 திருநங்கைகளுக்கு ரூ.15 லட்சம் மதிப்பிலான மானியத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.21.15 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள் அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்
- போக்குவரத்துத்துறை அமைச்சர்
பெரம்பலுார்:பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பரவாய் முதல் வரகூர் வரையிலும், வரகூர் முதல் புதுவேட்டக்குடி வரையிலும் தரம் உயர்த்தப்பட்ட தார் சாலை உள்ளிட்ட ரூ.21.15 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர்சிவசங்கர் துவக்கி வைத்தார்.மாநில அரசு நிதியுதவியின்கீழ், தரம் உயர்த்துதல் திட்டத்தின்கீழ், வரகூர் முதல் புதுவேட்டக்குடி வரையுள்ள 5 கி.மீ நீளமுள்ள மண் சாலையினை தரம் உயர்த்தி ரூ.7.80 கோடி மதிப்பீட்டில் தார் சாலையாக அமைக்கும் பணியினையும், பரவாய் முதல் வரகூர் வரையுள்ள 4.5 கி.மீ நீளமுள்ள மெட்டல் சாலையினை தரம் உயர்த்தி ரூ.10.9 கோடி மதிப்பீட்டில் தார் சாலையாக அமைக்கும் பணியினையும்,அந்தூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டத்தின்கீழ், ரூ.13.79 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய குடிநீர் கிணறு வெட்டும் பணியினையும், வரகூர் ஊராட்சி வடக்கு தெருவில் ரூ.10.57 லட்சம் மதிப்பீட்டில் மெட்டல் சாலை அமைக்கும் பணியினையும், வரகூர் ஊராட்சி தெற்கு தெருவில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ், ரூ.14.32 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினையும், வரகூர் ஊராட்சியில் வரகூர் முதல் கொளப்பாடி வரை பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின்கீழ் ரூ.1.92 கோடி மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணியினையும், பரவாய் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ், ரூ.9.50 லட்சம் மதிப்பீட்டில் விவசாய விளைபொருட்கள் சேமிப்பு கிடங்கு கட்டுமான பணியினையும், சின்னபரவாயில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.4.32 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினையும் என மொத்தம் ரூ.21.15 கோடி மதிப்பீட்டிலான பணிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்.அதனைத் தொடர்ந்து, கள்ளம்புதூர், ஆண்டிகுரும்பலூர் கிராமங்களில் பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பெற்றுக் கொண்டார்.ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லலிதா, வேப்பூர் ஒன்றியக்குழுத் தலைவர் பிரபா செல்லபிள்ளை, மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் முத்துச்செல்வி மதியழகன், மாநில ஆதிதிராவிட துணைசெயலாளர் துரைசாமி, வேப்பூர் தெற்கு ஒன்றியசெயலாளர் மருவத்தூர் ராஜேந்திரன்,மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் .சிவசங்கர், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் .கருணாநிதி, .பாஸ்கர், நபார்டு மற்றும் கிராம சாலைகள் கோட்ட பொறியாளர் வடிவேல் (திருச்சி), உதவி கோட்ட பொறியாளர் நபார்டு மற்றும் கிராம சாலைகள் ஹரிகிருஷ்ணன் (பெரம்பலூர்), குன்னம் வட்டாட்சியர் அனிதா,வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் .சின்னபையன், செல்வகுமார், ஒன்றிய பொறியாளர் .ஆனந்தன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- புதிதாக எந்த திட்டமும் கொண்டுவரவில்லை. உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்கியதே தி.மு.க. அரசின் சாதனை என முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசினார்.
- 500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
சிவகாசி
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஆனைக்குட்டம் கிராமத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டம் விருதுநகர் மேற்கு மாவட்டம், விருதுநகர் சட்டமன்ற தொகுதி சிவகாசி வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் நடைபெற்றது. அனைத்துலக எம்.ஜி. ஆர். மன்ற துணைச்செயலாளர் சுப்பிரமணியம் தலைமை வகித்தார்.
இதில் 500 பேருக்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கூட்டத்தில் அவர் ேபசியதாவது:-
அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த மக்கள் நலத்திட்டங்கள் அனைத்திற்கும் மூடுவிழா கண்டதுதான் தி.மு.க.வின் சாதனை ஆகும். தி.மு.க. ஆட்சியில் புதியதாக எந்ததிட்டமும் கொண்டு வரவில்லை. எழுதாத பேனாவுக்கு சிலை வைக்க முடிவு செய்ததும், உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கியதும்தான் தி.மு.க. அரசின் 2 ஆண்டு கால சாதனை ஆகும்.
ஈரோட்டில் தி.மு.க. வெற்றி பெற்றது தனிக்கதை. அங்கு அ.தி.மு.க. 44 ஆயிரம் வாக்குகள் பெற்றதுதான் உண்மையான வெற்றி. வாக்காளர்களையே அடைத்து வைத்து வாக்கு செலுத்த முடியாமல் செய்து விட்டனர்.
இவ்வாறு அவர் கூறி னார்.
கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராஜவர்மன், வரதராஜன், வேண்டு ராயபுரம் சுப்பிரமணி, அனைத்துலக எம்.ஜி. ஆர். மன்ற துணைச்செயலாளர் கலாநிதி, மேற்கு மாவட்ட அவைத்தலைவர் வக்கீல் விஜயகுமரன், முகம்மது நைனார், கண்ணன், தர்மலிங்கம், மச்சராஜா, தலைமை கழக பேச்சாளர் முருகானந்தம், கருப்பசாமி, டாக்டர் விஜயஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்ட ஏற்பாடுகளை சிவகாசி வடக்கு ஒன்றிய செயலாளர் புதுப்பட்டி கருப்பசாமி செய்திருந்தார்.
- சுற்றுப்புற சூழ்நிலைகளை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.
- அரசு நலத்திட்ட பணிகள் நடைபெறுவதில் குறைகள் இருந்தாலுல் தெரிவிக்கலாம்.
தரங்கம்பாடி:
தரங்கம்பாடி தாலுகா, செம்பனார்கோயில் ஒன்றியம், இளையாளூர் ஊராட்சி, அரங்கக்குடியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபா கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சுப்ரியாபர்வின் தமிமுன் அன்சாரி தலைமை தாங்கினார்.
கிராம நிர்வாக அலுவலர் கவிநிலவரம் முன்னிலை வைத்தனர்.
ஊராட்சி செயலர் புவனேஸ்வரி வரவேற்றார்.
அப்போது சுகாதாரமான நீர் வழங்க வேண்டும்.சுற்றுப்புற சூழ்நிலைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
குடி தண்ணீர்களை வீணடிக்க கூடாது.
சிக்கனமாக பயன்படுத்த கொள்ள வேண்டும்.
குறைகள் ஏதாவது இருந்தால் உடனடியாக ஊராட்சி மன்ற தலைவரிடம் தெரிவிக்க வேண்டும்.
அரசு நல திட்ட பணிகள் நடைபெறுவதில் குறைகள் ஏதேனும் இருந்தாலுல் தெரிவிக்கலாம் என ஊராட்சி மன்ற தலைவர் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் வார்டு உறுப்பி னர்கள், ஊர் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் அரசியல் பிரமுகர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் முடிவில் வார்டு உறுப்பினர் பார்த்திபன் நன்றி கூறினார்.
- சிவகங்கை மாவட்டத்தில் கடைக்கோடி மக்களுக்கும் நலத்திட்ட உதவிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக அமைச்சர் பெரியகருப்பன் பேசினார்.
- ஊராட்சி மன்றத்தலைவர் மணிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சிவகங்கை
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்தததை யொட்டி சிவகங்கை கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் பயனாளி களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார். மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி முன்னிலை வகித்தார். இதில் அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்று 365 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 59 லட்சத்து 93 ஆயிரத்து 372 மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
ஒவ்வொரு துறையிலும் எண்ணற்ற திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப்பணிகளை கடந்த 2 ஆண்டுகளில் செயல்படுத்தி தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் வழி நடத்தி சென்று இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களுக்கு முன்மாதி ரியான முதலமைச்சராக, மு.க.ஸ்டாலின் திகழ்ந்து வருகிறார். எல்லோருக்கும் எல்லாமும் என்ற அடிப்ப டையில் மக்களாட்சியில் 3-வது ஆண்டை தொடங்கி யிருக்கும் முதல்- அமைச்சருக்கு, சிவகங்கை மாவட்ட மக்களின் சார்பில் வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
சிவகங்கை மாவட்டத்தில் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து நலத்திட்டங்களும் மாவட்டத்தின் கடைக்கோடி பகுதியில் வசிக்கும் மக்களுக்கும் கிடைக்கும் வகையில் மாவட்ட நிர்வாக த்தால் சிறப்பான நடவடி க்கைகள் எடுக்கப்பட்டு, பிற மாவட்டங்களுக்கும் முன்மாதிரியான மாவட்டமாக சிவகங்கை திகழ்ந்து வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கோ.ஜினு, மேலாண்மை இயக்குநர் (மத்திய கூட்டுறவு வங்கி) ரவிச்சந்திரன், திருப்புவனம் பேரூராட்சித் தலைவர் சேங்கை மாறன், சிவகங்கை நகர்மன்றத்தலைவர் சி.எம்.துரை ஆனந்த், துணைத் தலைவர் கார்கண்ணன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் செந்தில் குமார், ஆரோக்கிய சாந்தா ராணி, காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத்தலைவர் மணிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ரூ.6 கோடியே 41 லட்சத்து 80 ஆயிரத்து 349 மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
- முடிவில் வேளாண்மை துறை இணை இயக்குநர் சேகர் நன்றி கூறினார்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்ட த்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி சாதனை மலர் மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைப்பெற்றது.
இந்த விழாவிற்கு மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமை தாங்கினார்.
எம்.பி. இராமலிங்கம், எம்.எல்.ஏ. க்கள் நிவேதா எம்.முருகன், பன்னீர்செல்வம், மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், ஊரக வளர்ச்சித்துறை இணை இயக்குனர் ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற த்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்ய நாதன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பல்வேறு துறைகளின் கீழ் மொத்தம் 382 பயனாளிகளுக்கு ரூ.6 கோடியே 41 லட்சத்து 80 ஆயிரத்து 349 மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் சண்முகம், சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அர்ச்சனா, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துனை ஆட்சியர் கண்மணி, மயிலாடுதுறை ஒன்றிய குழு தலைவர் காமாட்சி மூர்த்தி, தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர் சுகுணசங்கரி, அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் முடிவில் வேளாண்மை துறை இணை இயக்குநர் சேகர் நன்றி கூறினார்.
- ஆர். எஸ். மங்கலம் அருகே நடந்த மக்கள் தொடர்பு முகாமில் ரூ. 26 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் வழங்கினார்.
- அரசின் நலத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் அருகே உள்ள புல்லமடை ஊராட்சி தெற்கனேந்தல் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் கலந்து கொண்டு பல்வேறு துறைகளின் சார்பில் 141 பயனாளிகளுக்கு ரூ.26.14 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து பொதுமக்களிடமிருந்து 126 கோரிக்கை மனுக்களை கலெக்டர் பெற்றுக் கொண்டார்.
முகாமில் கலெக்டர் பேசியதாவது:-
மக்கள் தொடர்பு முகாம் நடைபெறும் கிராமத்தில் ஒரு மாதத்திற்கு முன்பாக அரசின் அனைத்துத் துறைகளின் அலுவலர்கள் சம்மந்தப்பட்ட கிராமத்தில் முகாமிட்டு அக்கிராம மக்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுவினை நேரடியாக பெறுவார்கள். மக்களைத் தேடி வந்து மனுக்களை மட்டும் பெறாமல் மனுக்கள் மீதான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. தீர்வு காணப்பட்ட மனுக்க ளுக்கு அரசின் நலத்திட்டங் கள் வழங்கப்படுகின்றன.
மக்கள் தொடர்பு முகாமில் அனைத்து துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விளக்கும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் அரசின் திட்டங்களை அறிந்து கொண்டு பயன் பெறலாம்.
பொதுமக்கள் முன்வைத்த கோரிக்கையான குடிநீர் வசதி முழுமையான அளவு வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் சாலை வசதிகள் தேவைக்கேற்ப அமைக்கப்பட்டு வருகிறது. எனவே தனிநபர் பொரு ளாதர முன்னேற்றத்திற்கு அரசு எண்ணற்ற திட்டங்களை வழங்கி வருகிறது. அதை தகுதியுடையோர் பெற்று பயனடைய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் உதவி கலெக்டர் (பயிற்சி) நாராயணசர்மா, வருவாய் கோட்டாட்சியர் கோபு, தனித்துணை கலெக்டர் மாரிச்செல்வி, ஆர்.எஸ்.மங்கலம் வட்டாட்சியர் சிரோன்மணி, ஊராட்சி மன்றத்தலை வர்கள் கனிமொழி (புல்ல மடை), ஜெயபாரதி (சனவேலி), பூபதி (காவண கோட்டை) மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- மதுரையில் ஜெயலலிதா பேரவை சார்பில் அன்னதானம்-தங்கத்தேர் இழுத்து வழிபாடு செய்தனர்.
- ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகிறது.
மதுரை
முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் 69-வது பிறந்தநாள் விழா நாளை (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமியின் பிறந்த நாளை யொட்டி பொது மக்களுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்க ஏற்பாடு செய்துள்ளனர்.
மதுரையில் ஜெயலலிதா பேரவை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மதுரை பசுமலையில் உள்ள ஆதரவற்றோர் இல்லங்க ளில் தங்கியுள்ள முதி யோர்கள் மற்றும் ஆதர வற்றோருக்கு ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர் பா. வெற்றிவேல் ஏற்பாட்டில் மதிய உணவு வழங்கப்பட்டது.
இதனை மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள் மற்றும் அ.தி.மு.க.வினர் திரளாக கலந்து கொண்டனர்.
இதை தொடர்ந்து மதுரை அழகர் கோவிலில் ஜெய லலிதா பேரவை சார்பில் தங்கத்தேர் இழுக்கும் நிகழ்ச்சி இன்று மாலை 5 மணிக்கு நடக்கிறது. ஆர்.பி. உதயகுமார் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சி யில் எடப்பாடி பழனிசாமி நீடூடி வாழ வேண்டி தங்கத்தேர் இழுத்து அ.தி.மு.க.வினர் வழிபாடு செய்கின்றனர்.
இதைத் தொடர்ந்து மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறு கின்றன. இதையொட்டி ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகிறது.
- விஷ சாராயம் குடித்து பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டு உள்ளது.
- வெடி விபத்தின்போது உயிரிழந்தவர்களுக்கு நிவாரணமாக ரூ.2 லட்சம் வழங்கி இருக்கிறார்கள்.
மன்னார்குடி:
முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ., மன்னார்குடியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் சாராய சாம்ராஜ்யம் கொடிகட்டி பறப்பது காவல்துறையினரின் தற்போதைய சாராயம் பறிமுதல் மற்றும் கைது நடவடிக்கையில் இருந்து தெரிய வருகிறது.
காவல்துறையின் முறையான நடவடிக்கை இல்லாத காரணத்தினால் தான் விஷசாராயம் அருந்தி இவ்வளவு பேர் உயிரிழந்து உள்ளனர்.
விஷ சாராயம் குடித்து பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டு உள்ளது.
அதே நேரத்தில் சிவகாசி பட்டாசு தொழிற்சாலைகளில் நிகழ்ந்த வெடி விபத்தின்போது உயிரிழந்தவர்களுக்கு நிவாரணமாக ரூ.2 லட்சம் வழங்கி இருக்கிறார்கள்.
இது ஒரு தவறான முன்னுதாரணம்.
ஸ்ரீரங்கத்தில் பாடசாலையில் படித்த மன்னார்குடியை சேர்ந்த 2 மாணவர்கள் உள்ளிட்ட 3 இளம் மாணவர்கள் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர்.
அவர்களுக்கு எந்த ஒரு நிவாரணமும் அரசின் சார்பில் அறிவிக்கப்படாதது வருத்தத்தையும், வேதனையும் அளிக்கிறது. அவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.15 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.
நான் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தியதால்தான் தொடர்ந்து 3 முறை நன்னிலம் பகுதியில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று வருகிறேன்.
எந்த தொகுதியிலும் நின்று ஜெயிக்கக்கூடிய தெம்பு உள்ளவன் நான்.
பொதுச்செ யலாளர் எடப்பாடி பழனிசாமி சொன்னது போல் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி தினகரன் கூட்டு என்பது ஜீரோவுடன் ஜீரோ சேர்ந்தால் ஜீரோ என்பதுதான்.இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் சிவா.ராஜமாணிக்கம், மன்னார்குடி ஒன்றியக்குழு தலைவர் மனோகரன், ஒன்றிய செயலாளர் தமிழ்ச்செல்வம், நகர செயலாளர் ஆர்.ஜி.குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.