search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 228238"

    • இன்று விவசாயிகள், மக்கள் பிரதிநிதிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு அந்த நீரோடை வாய்க்காலுக்கு மலர் தூவி பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர்.
    • வாய்க்காலில் ஓடும் தண்ணீரில் மலர் தூவி வரவேற்ற விவசாயிகள், முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இத்திட்டத்தை செயல்படுத்தியதற்காக வரவேற்பும் நன்றியும் தெரிவித்தனர்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர், ஏற்காடு, கெங்கவல்லி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கு நீர் ஆதாரமாக உள்ளது வசிஷ்ட நதி. இந்த நதிக்கு கருமந்துறை கல்வராயன் மலைப்பகுதியில் இருந்து தண்ணீர் வருகிறது. இந்த நீர் வசிஷ்ட நதி வழியாக கடலூர் மாவட்டத்தை சென்றடைகிறது. இதனால் வழியெங்கும் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெற்று வந்தது. இந்த நிலையில் கடந்த சில காலமாக மழை இல்லாததால் வசிஷ்ட நதி வறண்டு காணப்பட்டது.

    கைக்கான் வளவு திட்டம்

    கடந்த அ.தி.மு.க. ஆட்சி யில் எடப்பாடி பழனிச்சாமி முதல்-அமைச்சராக இருந்தபோது கருமத்துறை கைக்கான் வளவு பகுதியில் இருந்து நீரை வாய்க்கால் மூலமாக கரிய கோயில் நீர் தேக்கத்திற்கு கொண்டு வந்து, அதன் பிறகு அந்த நீரை வசிஷ்ட நதியில் கொண்டு செல்ல புதிய திட்டம் தீட்டப்பட்டது. இதற்கு ரூ.7 1/2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது இத்திட்டம் விவசாயிகளின் பெரும் எதிர்பார்ப்போடும், ஒத்துழைப்போடும் செயல்ப டுத்தப்பட்டு உள்ளது.

    பொங்கலிட்டு வழிபாடு

    இதையடுத்து, இன்று விவசாயிகள், மக்கள் பிரதிநிதிகள் ஏராள மானோர் கலந்து கொண்டு அந்த நீரோடை வாய்க்காலுக்கு மலர் தூவி பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர். அகில பாரதிய சந்த் சமிதி மாநில தலைவர் யுக தர்ம குரு கருடானந்த மகராஜ் சுவாமிகள் கற்பூர தீபத்தை உள்ளே இறங்கி வழிபாடு நடத்தினார்.

    இதுகுறித்து தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் நிருபர்களிடம் கூறுகையில், முன்னாள் முதல்-அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியின் இந்த திட்டத்தினால் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும். விவசாயிகள் நலன் கருதி, இந்த திட்டத்தை அறிவித்து அதனை முழுமையாக செயல்படுத்தி உள்ளார் என்றார்.

    விவசாயிகள் நன்றி

    இந்த நிகழ்ச்சிக்கு ஆத்தூர் ஜெய்சங்கரன் எம்.எல்.ஏ, ஏற்காடு சித்ரா எம்.எல்.ஏ, கெங்கவல்லி நல்லதம்பி எம்.எல்.ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனர். கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் கோவிந்தராஜன், நரசிங்கபுரம் நகர மன்ற முன்னாள் காங்கிரஸ் தலைவர் வெங்கடாஜலம், பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றிய குழு தலைவர் சின்னத்தம்பி, பெத்தநா யக்கன்பாளையம் ஒன்றிய குழு துணை தலைவர் முருகேசன், பெத்தநாயக்கன்பாளையம் அ.தி.மு.க வடக்கு ஒன்றிய செயலாளர் மோகன், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை இணைச் செயலாளர் வாசுதேவன், தகவல் பிரிவு மாவட்டச் செயலா ளர் ஜெயகாந்தன் மற்றும் இந்த தண்ணீரை பயன்படுத்தும் ஆயக்கட்டு விவசாயிகள் சங்கத்தினர் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    வாய்க்காலில் ஓடும் தண்ணீரில் மலர் தூவி வரவேற்ற விவசாயிகள், முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இத்திட்டத்தை செயல்படுத்தியதற்காக வரவேற்பும் நன்றியும் தெரிவித்தனர்.

    • கட்சி அலுவலகத்தை மாநில ஒருங்கி ணைப்பாளர் ஹீமாயுன் கபீர் திறந்து வைத்தார்.
    • நகர செயலாளர் ஹாஜா உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டையில் நாம் தமிழர் கட்சி அலுவலகம் திறப்பு மற்றும் கூட்டம் நடைபெற்றது.

    கட்சி அலுவலகத்தை மாநில ஒருங்கி ணைப்பாளர் ஹீமாயுன் கபீர் திறந்து வைத்து பேசினார்.

    இதில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் டாக்டர் முகமது சர்வத்கான், கிருஷ்ணகுமார், மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்தி, மாநில ஊழல் ஒழிப்பு பாசறை ஒருங்கிணைப்பாளர் அரவி ந்தன், மாநில வழக்கறிஞர் பிரிவு துணைச்செயலாளர் உமர் முகமத், நாகை பாராளுமன்ற பொறுப்பாளர் அப்பு அகஸ்டீன் அற்புதராஜ், மாவட்ட தலைவர் செல்வம், மாவட்ட பொருளாளர் அலாவூதீன், தொகுதி தலைவர் பிஸ்மி கார்த்திக், செயலாளர் சரவணன், ஒன்றிய செயலாளர்கள் சுந்தர், கமலகண்ணன், ஒன்றிய தலைவர்கள் சந்திரமோகன், மதன் குமார், பொருளாளர் ராஜா, நகர தலைவர் மகேஷ்குமார், நகர செயலாளர் ஹாஜா உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

    • கீழக்கரை வடக்கு தெருவில் மஸ்ஜித் கருணை பள்ளி திறக்கப்பட்டது..
    • சாகுல் ஹமீது ஆலிம் சிறப்புரையாற்றினார்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வடக்குத் தெரு மணல்மேட்டில் அமைந்துள்ள வடக்குத்தெரு ஜமாஅத் நிர்வாக சபைக்கு பாத்தியப்பட்ட மஸ்ஜித் கருணை பள்ளி கட்டிடத்தை வடக்குத்தெரு ஜமாத்தை சேர்ந்த தொழிலதிபர் அபூபக்கர் சித்தீக் தாயார் ஜைய்னுல் அரபு நினைவாக மறு சீரமைப்பு செய்யப்பட்டு புது பொலிவுடன் கட்டப்பட்டு உள்ளது.

    இதன் திறப்பு விழா வடக்கு தெரு ஜமாஅத் தலைவர் ரெத்தின முகம்மது தலைமையில், வடக்குத்தெரு ஜமாத் துணைத் தலைவரும் ராமநாதபுரம் மெர்லின் சீட் கவர் உரிமையாளருமான செல்ல வாப்பா (எ)அப்துல் ஹமீது, துணை செயலாளர் கவிஞர் அப்துல் ரசாக் ஆகியோர் முன்னிலையில் நடந்தது.

    கீழக்கரை டவுன் காஜி காதர் பாக்ஸ் ஹுசைன் சித்தீகி தொழுகை நடத்தி சிறப்பு பிரார்த்தனை செய்தார். சாகுல் ஹமீது ஆலிம் சிறப்புரையாற்றி னார். வடக்குத்தெரு ஜமாஅத் மஸ்ஜித் மன்பஈ பள்ளி தலைமை இமாம் கலீல் ரஹ்மான் ஆலிம், ஜமால் ஆலிம், ஜகுபர் சாதிக், மஸ்ஜித் கருணை பள்ளி இமாம் புர்கான் ஆலிம், தெற்குத்தெரு ஜமாத் செயலாளர் சயீது இபுராஹிம், கீழக்கரை நகராட்சி துணைத் தலைவர் வக்கீல் ஹமீது சுல்தான், நகராட்சி முன்னாள் சேர்மன் பஷீர் அகமது, கீழக்கரை ரோட்டரி சங்கத் தலைவர் சுல்த்தான் சம்சூல் கபீர், மக்தூமியா பள்ளி தாளாளர் இப்திகார் ஹசன், கீழக்கரை அனைத்து ஜமாத்தார்கள், கீழக்கரை நகர் மன்ற உறுப் பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • கடந்த சில நாட்களாக நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது.
    • மேலும் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும், கால்நடைகளை நீர் நிலைக்கு அழைத்துச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டத்தை சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

    பவானிசாகர் அணை யின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

    இதனால் பவானிசாகர் அணையின் நீர்மட்டமும் 105 அடியை நெருங்கி வருகிறது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.08 அடியாக உள்ளது.

    அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 48 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது.அணையில் இருந்து பவானி ஆற்றின் வழியாக உபரிநீராக 5, 100 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.

    இதனால் பவானி ஆற்றில் இரு கரையோரம் தண்ணீர் தொட்டபடி செல்கிறது. இதனால் பவானி ஆற்றில் பொது மக்கள் துணி துவைக்குவோ குளிக்கவோ கூடாது என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும், கால்நடைகளை நீர் நிலைக்கு அழைத்துச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதேபோல் கீழ்பவானி வாய்க்காலுக்கு வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மொத்தம் 5600 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வரு கிறது. 

    • மேலூர் அருகே ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமுதாயக்கூட கட்டிடத்தை பெரியபுள்ளான் எம்.எல்.ஏ. குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.
    • இதில் முன்னாள் எம்.எல்.ஏ. தமிழரசன், கொட்டாம்பட்டி யூனியன் தலைவர் வளர்மதி குணசேகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    மேலூர்

    மேலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொட்டாம்பட்டி யூனியன் கேசம்பட்டி ஊராட்சியில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமுதாயக்கூட கட்டிடத்தை பெரியபுள்ளான் எம்.எல்.ஏ. குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. தமிழரசன், கொட்டாம்பட்டி யூனியன் தலைவர் வளர்மதி குணசேகரன், முன்னாள் யூனியன் சேர்மன் வெற்றிச்செழியன், முன்னாள் துணை தலைவர் குலோத்துங்கன், மேலூர் யூனியன் சேர்மன் பொன்னுசாமி, மேலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் பொன் ராஜேந்திரன், கேசம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஜோதிலட்சுமி ராஜா, முன்னாள் பஞ்சாயத்து தலைவர் கிடாரிப்பட்டி சுரேஷ், கொட்டாம்பட்டி யூனியன் என்ஜினீயர் கணேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • புதிய நியாய விலைக் கடை திறக்கப்பட்டது
    • எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

    அரியலூர்:

    அரியலூர் மாவடடம், தா.பழூர் கிராமத்தில் பகுதி நேர புதிய நியாய விலை கடை திறப்பு விழா நடைபெற்றது. ெஜயங்கொண்டம் சட்டப் பேரவை உறுப்பினர் க.சொ.க.கண்ணன் கலந்து கொண்டு கடையை திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றி வைத்தார். பின்னர் அவர் குடும்ப அட்டைதாருக்கு அத்தியாவசியப் பொருள்களை வழங்கி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார்.

    இந் நிகழ்ச்சியில் கூட்டுறவு துணைப் பதிவாளர் அறபளி, மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன், கூட்டுறவு சார் பதிவாளர் சசிகுமார், வட்ட வழங்கல் அலுவலர் ஜானகிராமன், ஊராட்சித் தலைவர் கதிர்வேல், கூட்டுறவு சங்கத் தலைவர் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • பாவூர்சத்திரத்தில் ஆட்டுச் சந்தை ஒவ்வொரு வியாழக்கிழமையும் நடைபெற்று வந்தது.
    • மாடுகளை வாங்குவதற்கு வியாபாரிகள் அதிக அளவில் சந்தைக்கு வந்திருந்தனர்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதியை சேர்ந்த மாடுகள் வளர்ப்போர் மாடுகளை வாங்குவதற்கோ அல்லது விற்பனை செய்வதற்கோ கடையம் மாட்டுச்சந்தை மற்றும் பிற மாட்டுச்சந்தையையே பயன்படுத்தும் சூழ்நிலையில் இருந்து வந்தனர்.

    இந்நிலையில் பாவூர்சத்திரத்தில் ஆட்டுச் சந்தை ஒவ்வொரு வியாழக்கிழமையும் நடைபெற்று வந்தது. தற்போது ஆட்டுச் சந்தை நடைபெறும் பகுதியின் அருகே இன்று முதல் புதிதாக மாட்டுச்சந்தை பாவூர்சத்திரம் பகுதி வியாபாரிகள் தொடங்கி உள்ளனர்.

    இன்று முதல் நாள் மாட்டுச்சந்தை என்பதால் மாடுகளின் வரத்து மிகவும் குறைந்த அளவே இருந்தது. இருப்பினும் மாடுகளை வாங்குவதற்கு வியாபாரிகள் அதிக அளவில் வந்திருந்தனர்.

    பாவூர்சத்திரம் மாட்டுச்சந்தை ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில் வாரத்தில் புதன் கிழமை தோறும் மாட்டுச்சந்தையானது தொடர்ந்து நடைபெறும் என கூறினர். இதனை பயன்படுத்தி மாடுகளை வாங்குபவர்கள் மற்றும் விற்பவர்கள் பயனடை யுமாறு கேட்டுக் கொண்டனர்.

    • 13-வது வார்டு பகுதியில் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி தனியார் மதுபான பார் திறக்க முயற்சி நடக்கிறது.
    • இது குறித்து மாவட்ட கலெக்டர், வட்டாட்சியர் ஆகியோருக்கு மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

    கன்னியாகுமரி:

    குலசேகரம் அருகே பொன்மனை பரவூர் பகுதியில் தனியார் மதுபான பாருக்கான கட்டுமான பணி நடைபெற்று வந்தது.

    இதையடுத்து பொன் மனை பேரூராட்சி தலைவர் அகஸ்டின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் பொன்மனை சந்திப்பில் நேற்று மாலை நடைபெற்றது. போராட்டத்தில் உறுப்பினர் ஜாஸ்மினி, பெண்கள், குழந்தைகள் என சுமார் 300-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

    காங்கிரஸ் ஜான் போஸ்கோ, அ.தி.மு.க. மோகன்குமார், கம்யூனிஸ்டு பிரசாத், தி.மு.க. சேம் பெனட் சதீஷ், நாம் தமிழர் கட்சி சீலன், சமூக ஆர்வலர் சர்வேஸ்வரி உள்ளிட்ட பல்வேறு கட்சி பிரதிநிதிகள் தனியார் மதுபான பார் திறப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் பேசினார்கள். இந்த போராட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த வர்கள் கலந்து கொள்ள வில்லை.

    இது குறித்து பொன்மனை பேரூராட்சி தலைவர் அகஸ்டின் கூறுகையில், பொன்மனை பேரூராட் சிக்குட்பட்ட 13-வது வார்டு பகுதியில் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி தனியார் மதுபான பார் திறக்க முயற்சி நடக்கிறது. இது குறித்து மாவட்ட கலெக்டர், வட்டாட்சியர் ஆகியோருக்கு மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற் கொள்ளப்படவில்லை.

    இதனால் பொதுமக்களுடன் அனைத்து கட்சியினர் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டோம். தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு உடனே தடுத்து நிறுத்த வேண்டுமெனவும் தொடர்ந்து அப்பகுதியில் மதுபான கடை திறக்க முயற்சி செய்தால் பொது மக்களுடன் சேர்ந்து மிக பெரிய அளவில் போராட்டம் நடைபெறும் என கூறினார்.

    போராட்டத்தின் முடிவில் வார்டு உறுப்பினர் சாந்தி நன்றியுரை கூறினார்.

    • மையக்கட்டிடம், குழந்தைகள் பூங்கா, சிற்றுண்டியகம் உள்ளிட்ட மேம்பாட்டு பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது.
    • மனோரா சுற்றுலாத்தலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பகுதியாக உள்ளது.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியம் சரபேந்திரராஜன்பட்டினம் ஊராட்சி மனோரா சுற்றுலாத்தலத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் சிறுவர் பூங்கா, படகு குழாம், சிற்றுண்டியகம், பயிற்சி மையக்கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது.

    விழாவிற்கு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்தார். கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா வரவேற்றார்.

    இதில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு ரூ.49 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பில் படகு குழாம், ரூ.43 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பிலான பயிற்சி மையக்கட்டிடம், குழந்தைகள் பூங்கா, சிற்றுண்டியகம் உள்ளிட்ட ரூ.1 கோடியே 78 லட்சத்து 48 ஆயிரம் மதிப்பிலான மேம்பாட்டு பணிகளை தொடங்கி வைத்து பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:- மனோரா சுற்றுலாத்தலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பகுதியாக உள்ளது. இங்கு நடைபெறும் வளர்ச்சி திட்டங்கள் மூலம் தமிழகம் அளவில் மக்கள் சுற்றுலா வந்து செல்லக்கூடிய வகையில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்.

    மனோரா என்றால் இப்பகுதி மக்களுக்கு பல்வேறு நினைவுகள் வரும், ஆனால் எங்களுக்கெல்லாம் கருணாநிதி இங்கு வந்து தங்கி இருந்து புதையல் படத்திற்கு கதை வசனம் எழுதியது தான் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு தி.மு.க. வரலாற்றில் மனோரா இடம் பெற்றுள்ளது.

    இங்கு படகு குழாம் அமைக்கப்பட்டுள்ளது. படகில் சுற்றுலா செல்பவர்கள் பாதுகாப்பான முறையில் சென்று வர, மாவட்ட நிர்வாகம் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மனோராவை மேம்படுத்த அரசு, மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும், இப்பகுதி மக்கள் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், கேரி பேக்குகள் தவிர்க்க வேண்டும். மனோராவை பத்திரமாக பராமரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் துரை. சந்திரசேகரன், அண்ணாதுரை, சேதுபாவாசத்திரம் ஒன்றியக்குழு தலைவர் முத்துமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மீன்வளத்துறை உதவி இயக்குனர் சிவகுமார், பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பிரபாகரன், பட்டுக்கோட்டை தாசில்தார் ராமச்சந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் ஜலீலா பேகம், ஒன்றியக் குழு உறுப்பினர் மீனவ ராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, சடையப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிறைவாக ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சங்கர் நன்றி கூறினார்.

    • 2 ஷிப்டுகளாக கண்காணிக்க ஏற்பாடு
    • 'மாலைமலர்' செய்தி எதிரொலி

    நாகர்கோவில்:

    தீபாவளி பண்டிகை நெருங்குவதையடுத்து கடைவீதிகளில் கூட்டம் அலைமோதி வருகிறது.

    நாகர்கோவில் செம்மங் குடி ரோடு, மீனாட்சி புரம், வடசேரி, கலெக்டர் அலுவலக சந்திப்பு பகுதி களில் உள்ள கடைகளில் கூட்டம் அதிகமாக உள்ளது. வடசேரி பஸ் நிலையம், அண்ணா பஸ் நிலையத்திலும் பஸ்கள் ஏறுவதற்கு கூட்டம் அதிக மாக காணப்படுகிறது.பஸ்களில் பொதுமக்கள் முண்டியடித்துக் கொண்டு ஏறி வருகிறார்கள்.

    கூட்ட நெரிசலை பயன்ப டுத்தி பெண்களிடம் நகை பறிக்கும் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க போலீசார் தீவிர கண் காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையம் கடந்த சில நாட்களாக மூடி கிடந்தது.

    தற்பொழுது கூட்ட நெரிசல் அதிகமாக உள்ள தால் பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும் என்று மாலைமலரில் நேற்று செய்தி வெளியானது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் புறக்காவல் நிலை யத்தை திறக்க உத்தரவிட்டார்.

    மேலும் புற காவல் நிலையத்தில் இரண்டு ஷிப்டுகளாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவும் அவர் உத்தர விட்டுள்ளார். ஒரு ஷிப்ட்டுக்கு 2 பெண் போலீசார், 2 ஆண் போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படு கிறார்கள். தீபாவளி பண்டிகைைய யொட்டி கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளதால் ஆயுதப்படை போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.இன்று காலை முதல் புறக்காவல் நிலையம் திறந்து செயல்பட்டது. புறக்காவல் நிலையத்தில் இருந்த போலீசார் பஸ் நிலையங்களில் உள்ள பிளாட்பாரங்களில் ரோந்து சுற்றி வந்தனர்.

    பஸ் நிலையத்தில் உள்ள ஒரு சில சி.சி.டி.வி. கேமிராக்கள் மட்டுமே தற்பொழுது செயல் பட்டு வருகிறது. செயல்படா மல் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களையும் சரி செய்து கண்காணிப்பை தீவிர படுத்த வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாகும்.

    • 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகளுக்கான காலாண்டு மற்றும் முதல் பருவத் தேர்வுகள் கடந்த மாதம் நடந்தது.
    • 9 நாட்கள் விடுமுறைக்கு பிறகு 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்பட்டன.

    சேலம்:

    தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் (2022-2023) 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகளுக்கான காலாண்டு மற்றும் முதல் பருவத் தேர்வுகள் கடந்த மாதம் நடந்தது. தேர்வு முடிந்து 1-ந்தேதி முதல் விடுமுறை விடப்பட்டது.

    இதில் 9 நாட்கள் விடுமுறைக்கு பிறகு 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்பட்டன.

    பயிற்சி

    ஆனால், அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் 2-ம் கட்ட பயிற்சி காரணமாக 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு 1-ந்தேதி முதல் இன்று வரை விடுமுறை அளிக்கப்பட்டது.

    விடுமுறை நாட்களில் அரசு ெதாடக்கப்பள்ளி ஆசிரியர், ஆசிரியைகளுக்கு எண்ணும் எழுத்தும் 2-ம் கட்ட பயிற்சி நடந்தது. . இதில் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள 2000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள், ஆசிரியைகள் பங்கேற்றனர்.

    நாளை பள்ளிகள் திறப்பு

    இந்த பயிற்சி நிறைவடைந்ததை அடுத்து 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான அரசு, அரசு பெறும் தொடக்கப் பள்ளிகள் 12 நாட்கள் விடுமுறைக்கு பிறகு நாளை (13-ந் தேதி) திறக்கப்படுகிறது.

    • முதன்மை சார்பு நீதிபதி செல்லத்துரை நன்றி கூறினார்.
    • அரசு வக்கீல்கள் கனகசபை, பூமதி, தமயந்தி, மனோகரன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் குடும்ப நல கோர்ட்டில் குடும்பநல ஆலோசனை மையம் திறக்கப்பட்டது. முதன்மை மாவட்ட நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். குடும்ப நல கோர்ட்டு நீதிபதி சுகந்தி வரவேற்றார். அரசு மனநல டாக்டர் சஞ்சய் போஸ், மனிதர்களுடைய உளவியல் குறித்தும் அதை கவனமாக கையாள வேண்டியதன் அவசியம் குறித்தும் விளக்கி பேசினார்.

    முதன்மை மாவட்ட நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் பேசும்போது, 'மனிதர்களிடையே உளவியல் என்பது உணர்வோடு தொடர்புடையது. குடும்ப நல கோர்ட்டு மற்ற கோர்ட்டுகளில் இருந்து வேறுபட்டது. இரண்டு மனிதர்களின் உணர்வுகளை மதித்து அவர்களின் பிரச்சினைகளை உணர்வு பூர்வமாகவும், அதே நேரத்தில் நடைமுறை வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களுக்கு அறிவு பூர்வமாகவும் முடிவெடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அதன் தொடர்ச்சியாக குடும்பநல ஆலோசனை மையம் மனிதர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இருதரப்பினர் சமரசத்துடன் செல்வதற்காக அல்லது அவர்களின் பிரச்சினைகளை நீதிமன்றம் மூலமாக தீர்வு காண மேற்கொள்ளப்படும்' என்றார்.

    முதன்மை சார்பு நீதிபதி செல்லத்துரை நன்றி கூறினார். இந்த ஆலோசனை மையத்துக்கு 3 ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். குடும்ப நல ஆலோசனைகள் இலவசமாக பெற முடியும். இந்த நிகழ்ச்சியில் அமர்வு நீதிபதிகள் நாகராஜன், பத்மா, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் புகழேந்தி, கூடுதல் சார்பு நீதிபதி மேகலா மைதிலி, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி ஆதியான், குற்றவியல் நீதித்துறை நடுவர்கள் பாரதிபிரபா, ரஞ்சித்குமார், பழனிக்குமார், முருகேசன், கார்த்திகேயன், வழக்கறிஞர்கள் சங்கங்களின் தலைவர்கள் பழனிசாமி, ராஜேந்திரன், அரசு வக்கீல்கள் கனகசபை, பூமதி, தமயந்தி, மனோகரன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். 

    ×