search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாவூர்சத்திரம்"

    • ராம கிருஷ்ணன் தனது காரில் கே.டி.சி. நகர் பகுதியில் வந்து கொண்டிருந்தார்.
    • எதிர்பாராத விதமாக 2 கார்களும் திடீரென நேருக்கு நேர் மோதியது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள ஐந்தாங்கட்டளை கிராமத்தை சேர்ந்த ராம கிருஷ்ணன் என்பவர் தனது காரில் பாவூர்சத்திரம் அருகே உள்ள கே.டி.சி. நகர் பகுதியில் வந்து கொண்டி ருந்தார்.

    அப்போது நெல்லையை சேர்ந்த ஒருவர் தென்காசி யில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் டாக்டர் ஒருவரை இறக்கி விட்டு விட்டு மீண்டும் நெல்லை நோக்கி திரும்பி வந்து கொண்டி ருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக 2 கார்களும் திடீரென நேருக்கு நேர் மோதியது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் காருக்குள் இருந்தவர்களை மீட்க சென்றனர் .

    அப்போது 2 கார்களிலும் டிரைவர்கள் மட்டும் இருந்தனர். மேலும், கார்க ளில் உள்ள ஏர்பேக் விரிவடைந்து செயல்பட்டதால் எவ்வித காயங்களும் இன்றி 2 டிரைவர்களும் அதிர்ஷ்ட வசமாக உயிர்தப்பினர்.

    இருப்பினும் 2 கார்களி லும் முன் பகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த பாவூர்சத்திரம் போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கார்கள் நேருக்கு நேர் மோதிய சி.சி.டி.வி. காட்சியும் வெளியாகி உள்ளது.

    • திப்பணம்பட்டியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
    • முகாமில் 150-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே திப்பணம்பட்டியில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் கிளை சார்பில் டி.எம்.பி. பவுண்டேசன், திப்பணம்பட்டி கிளை மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் காமராஜ் நினைவு இந்து நடுநிலைப்பள்ளி யில் நடைபெற்றது. முகாமில் நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனை டாக்டர் மீனாட்சி மற்றும் மருத்துவ குழுவினர் கண் பரிசோதனை செய்தனர். முகாமில் 150-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 30 பேர் அறுவை சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஏற்பாடுகளை தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி திப்பணம்பட்டி கிளை மேலாளர் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

    • விளைச்சல் குறைவின் காரணமாக பல்லாரி, சின்னவெங்காயம் விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
    • பல்லாரியின் விலை ஒரு கிலோ ரூ.35 லிருந்து 65 ஆக உயர்ந்துள்ளது.

    தென்காசி:

    பாவூர்சத்தி ரத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் தினசரி மார்க்கெட்டில் பல்வேறு காய்கறிகள் மற்றும் கிழங்கு வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் விளைச்சல் குறைவின் காரணமாக பல்லாரி, சின்னவெங்காயம் மற்றும் மாங்காய் உள்ளிட்டவையின் விலையானது தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

    ரூ.60-க்கு ஒரு கிலோ சின்னவெங்காயம் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.80 ஆக அதிகரித்துள்ளது. தற்போது தென்காசி மாவட்டத்தில் இலத்தூர் பகுதிகளில் இருந்து வரும் சின்ன வெங்காயமே அதிகம் விற்பனை செய்யப்பட்டு வருவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ள னர்.

    மேலும் பல்லாரி விளைச்சலானது தமிழ்நாட்டில் இந்த ஆண்டு 15 சதவீதம் மட்டுமே இருந்ததாகவும், அண்டை மாநிலமான கர்நாடகா விலும் 40 சதவீத விளைச்சல் இருந்ததால் அனைத்து விவசாயிகளும் மராட்டிய மாநிலம் நாசிக்கில் உள்ள சந்தையில் இருந்து கொள்முதல் செய்து விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இதனால் பல்லாரியின் விலையும் ஒரு கிலோ ரூ.35 லிருந்து 65 ஆக உயர்ந்துள்ளது.

    அதேபோன்று மாங்காயின் விளைச்சல் மற்றும் வரத்து குறைவின் காரணமாக ஒரு கிலோ ரூ.40 முதல் 50 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.78 ஆக உயர்ந்துள்ளது.

    வாழை இலை கட்டுகளின் விலையும் ரூ.400 லிருந்து 750 ஆக உயர்ந்துள்ளது. இந்த விலை ஏற்றமானது தொடர்ந்து இன்னும் ஒரு வாரம் நீடிக்க வாய்ப்புள்ளது எனவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • பாவூர்சத்திரத்தில் ரெயில்வே மேம்பாலம் புதிதாக அமைக்கப்படுகிறது.
    • ரெயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

    தென்காசி:

    நெல்லை- தென்காசி நான்கு வழிச்சாலை பணிகள் கடந்த 3 ஆண்டுகளாக தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் பாவூர்சத்திரத்தில் நான்கு வழி சாலையிலேயே ரெயில்வே மேம்பாலம் புதிதாக அமைக்கப்படுகிறது.

    ஆயிரக்கணக்கான வாகனங்கள்

    இதற்காக மிகப்பெரிய பள்ளங்கள் தோண்டப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. அந்தச் சாலையானது நெல்லை- தென்காசி பகுதிக்கு செல்லும் பிரதான சாலையாக அமைந்துள்ளதால் ஆயிரக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து செல்கின்றன.

    இந்நிலையில் முறையாக சர்வீஸ் சாலைகள் எதுவும் அமைக்காமல் நெடுஞ்சாலை பணிகள் மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்கள் ஏற்கனவே தோண்டப்பட்ட சாலையின் கழிவுகளை கொட்டி சர்வீஸ் சாலை அமைத்துள்ளதால் அவை சேரும் சகதியுமாகவும் குண்டும், குழியுமாகவும் காட்சியளிக்கின்றன.

    இதனால் அவ்வழியே செல்லும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். ரெயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

    சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

    இந்த சர்வீஸ் சாலைகளானது வெயில் காலங்களில் புழுதி பறக்கும் சாலையாகவும், மழை காலங்களில் வயல்வெளிகளில் தொழி அடித்திருப்பது போன்று சேரும் சகதியுமாகவும் காட்சியளிக்கின்றன. மோட்டார் சைக்கிளில் செல்லும் வாகன ஓட்டிகள் அவசரத்திற்கு சாலையில் சென்றால் தவறி விழுந்து காயம் ஏற்படுகிறது.

    எனவே மெதுவாக பணிகள் நடைபெற்று வரும் ரெயில்வே மேம்பால பணி மற்றும் நான்கு வழி சாலை பணிகளில் அரசு அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு முறையாக பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், முறையாக சர்வீஸ் சாலைகள் அமைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நிகழ்ச்சியில் முன்னாள் மாணவ, மாணவிகள் தங்களது குடும்பத்தினரோடு கலந்து கொண்டனர்.
    • முன்னாள் மாணவ- மாணவிகளின் குழந்தைகள் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தினர்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் த.பி.சொக்கலால் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1994 முதல் 1996-ம் ஆண்டு வரை கல்வி பயின்ற முன்னாள் மாணவ- மாணவிகள் 27 ஆண்டுகளுக்கு பிறகு சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் ஆசிரியர்களான சுவாமிதாஸ், முருகவேல், மேரி , மயில் அம்மாள், தற்போதைய தலைமை ஆசிரியர் அன்னக்கிளி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    முன்னாள் மாணவ, மாணவிகள் அனைவரும் தங்களது குடும்பத்தினரோடு கலந்து கொண்டு, பள்ளி பருவ நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். மேலும் முன்னாள் ஆசிரியர்களுக்கு மாணவ- மாணவிகள் சார்பாக நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டது. முன்னாள் மாணவ-மாணவிகள் தாங்கள் பயின்ற வகுப்பறையை சுத்தம் செய்து வண்ணம் தீட்டி பூக்களால் அலங்கரித்தனர். முன்னாள் மாணவ- மாணவிகளின் குழந்தைகள் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தினர். மேலும் விழாவிற்கு வருகை தந்த அனைவரும் பழைய நினைவுகளை நினைவு கூர்ந்தனர்.

    • ஆறுமுகச்சாமியின் மனைவி இரு குழந்தைகளுடன் அவரை பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது.
    • ஆறுமுகசாமியை அவரது தாயார் கண்டித்ததால் மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள மேலப்பாவூர் கீழ காலனி கீழ தெருவை சேர்ந்தவர் ஆறுமுகச்சாமி (வயது 48), கூலி தொழி லாளி. இவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்ட தாகவும், அவரது மனைவி தனது இரு குழந்தைகளுடன் ஆறுமுகச் சாமியை விட்டு பிரிந்து சென்றதாகவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில் தனது அம்மாவுடன் வசித்து வந்த ஆறுமுகசாமியை அவரது தாயார் கண்டித்ததால் மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக அவரை அவரது உறவினர்கள் மீட்டு தென்காசி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து பாவூர்சத்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • பரமசிவன் தென்காசி- நெல்லை நான்கு வழிச்சாலையில் தனது மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
    • வேன் மீது பரமசிவன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியது.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள குலசேகரபட்டி கிராமத்தைச் சேர்ந்த பரமசிவன் (வயது 23). இவர் நேற்று இரவு பாவூர்சத்திரம் செல்வ விநாயகர்புரம் அருகே தென்காசி- நெல்லை நான்கு வழிச்சாலையில் தனது மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது நெல்லை மாவட்டம் திசையன்விளையை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் வேனில் தென்காசி சென்று விட்டு மீண்டும் தங்களின் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். பாவூர்சத்திரம் அருகே உள்ள செல்வ விநாயகர் புரம் அருகே அவர்கள் வந்த வேன் மீது பரமசிவன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியது. இதில் படுகாயம் அடைந்த பரமசிவத்தை உடனடியாக சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து பாவூர்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆவுடையானூர் செல்லும் சாலை முழுவதும் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.
    • தேங்கி நிற்கும் மழை நீரால் பொதுமக்களை தொற்று நோய் பாதிக்கும் நிலை உள்ளது.

    தென்காசி:

    பாவூர்சத்திரத்தில் உள்ள காமராஜர் தினசரி சந்தை அருகே நெல்லை-தென்காசி 4 வழிச்சாலையில் இருந்து ஆவுடையானூர் கிராமத்திற்கு செல்லும் சாலை முழுவதும் குண்டும் குழியுமாக காட்சிய ளிப்பதால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று மாலையில் பெய்த மழையின் காரணமாக மார்க்கெட் சாலை அருகே முகப்பு பகுதியில் மழைநீர் தேங்கி நின்றதால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சைக்கிளில் செல்லும் மாணவர்கள் தவறி விழும் நிலை ஏற்பட்டது. தேங்கி நிற்கும் மழை நீரால் துர்நாற்றம் வீசி வருவதால் கொசுக்கள் கிருமிகள் மூலம் பொதுமக்களை தொற்று நோய்கள் பாதிக்கும் நிலை உள்ளது. எனவே பாவூர்சத்திரம் காமராஜர் மார்க்கெட் அருகே குண்டும் குழியுமான சாலையில் தேங்கி நிற்கும் மழை நீர் பள்ளத்தில் மண்ணை கொட்டி நிரப்புவ தோடு, முறையாக புதிய தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • தென்காசி மாவட்டத்தில் போதிய மழை இல்லாததால் பயிர்கள் கருகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
    • செவ்வாழை ஒரு கிலோ ரூ.70 முதல் ரூ.75 ஆக விலை உயர்ந்துள்ளது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் உள்ள மிக முக்கிய காய்கறி சந்தையாக பாவூர்சத்திரம் காமராஜர் காய்கறி மார்க்கெட் விளங்கி வருகிறது.

    இந்த தினசரி சந்தைக்கு உள்ளூர் விவசாயிகள் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் அதிகளவில் காய்கறிகள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது தென்காசி மாவட்டத்தில் போதிய மழை இல்லாததால் வறட்சியின் காரணமாக விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் கருகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

    மேலும் போதிய தண்ணீர் இல்லாமல் வாழை விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வரும் நிலையில், உள்ளூர் வரத்து இல்லாததால் வெளி மாவட்டங்களில் இருந்து வாழைத்தார் மற்றும் வாழை இலைகள் பாவூர்சத்திரம் மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

    வாழைத்தார்களில் ரோபஸ்டோ, நாடு, கோழிக்கூடு ஆகிய ரகங்களின் விலையானது ரூ.150 முதல் ரூ.300 என விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது 2 மடங்காக விலை உயர்ந்துள்ளது. அதேபோன்று செவ்வாழை ஒரு கிலோ ரூ.40 முதல் 45 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் ரூ.70 முதல் ரூ.75 ஆக விலை உயர்ந்துள்ளது. வாழை இலை கட்டுகளின் விலையும் இரு மடங்காக உயர்ந்துள்ளதால் வியாபாரிகளும், பொதுமக்களும் அதன் விலை ஏற்றத்தை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    • தக்காளி விலை அதிகரிப்பானது நாடு முழுவதும் மிகப்பெரிய அரசியல் பேசு பொருளாக மாறும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது.
    • விவசாயிகள் அதிகளவில் தக்காளி பயிரிட்டதன் காரணமாக தற்போது விளைச்சல் அதிகரித்துள்ளது.

    தென்காசி:

    தமிழகத்தில் தக்காளி விளைச்சல் போதிய அளவில் இல்லாததால் அதன் விலையானது கடந்த 1½ மாதத்திற்கு முன்பு வரை வரலாறு காணாத அளவில் ஏற்றத்துடன் காணப்பட்டு வந்ததால் குடும்பப் பெண்கள் பெரிதும் சிரமப்பட்டு வந்தனர்.

    தக்காளி விலை அதிகரிப்பானது தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் மிகப்பெரிய அரசியல் பேசு பொருளாக மாறும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது. இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சந்தைகளாக விளங்கி வரும் பாவூர்சத்திரம், ஆலங்குளம், சுரண்டை மார்க்கெட்டுகளிலும் அதன் விலையானது அதிகரித்த வண்ணமே இருந்தது. காரணம் உள்ளூர் விவசாயிகளிடம் அதிக அளவில் தக்காளி விளைச்சல் இல்லாதது முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது.

    தக்காளி விலையேற்றத்தை அறிந்து பாவூர்சத்திரம், வீரகேரளம்புதூர், சுரண்டை, இலத்தூர், ஆலங்குளம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் தக்காளி பயிரிட தொடங்கினர். குறிப்பாக தென்காசி மாவட்டத்தில் வீரகேரளம்புதூர் பகுதியில் அதிகளவில் விவசாயிகள் தக்காளி பயிரிட்டதன் காரணமாக தற்போது விளைச்சல் அதிகரித்துள்ளது.

    பாவூர்சத்திரத்தில் உள்ள காமராஜர் தினசரி மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகளவில் இருப்பதால் அதன் விலையானது கிலோ ரூ.10 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. தொடர்ந்து தக்காளி விளைச்சல் அதிகரிப்பால் மேலும் இதன் விலை வீழ்ச்சி அடைய வாய்ப்பு உள்ளது என விவசாயிகள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.

    எனவே விளைச்சல் அதிகம் இருக்கும் வேளாண்மை பொருட்களை கொள்முதல் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 

    • குழந்தைகள் கிருஷ்ணர்- ராதை வேடம் அணிந்து நடனமாடினர்.
    • விளையாட்டுப் போட்டிகளில் சிவசக்தி வித்யாலயா பள்ளி மாணவர்கள் பதக்கங்கள் பெற்றனர்.

    தென்காசி:

    பாவூர்சத்திரத்தை அடுத்த ஆவுடையானுார் அருகே உள்ள பொடியனூர் சிவசக்தி வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியில் ஆசிரியர் தினவிழா மற்றும் கிருஷ்ண ஜெயந்தி தின விழா கொண்டாடப்பட்டது.

    பள்ளி முதல்வர் நித்யா தினகரன் தலைமை தாங்கினார். மாணவி சுதர்சினி வரவேற்று பேசினார். மாணவி வைஷ்ணவி ஆசிரியர் தின விழா கொண்டாடுவதன் நோக்கத்தை எடுத்து கூறினார். 10-ம் வகுப்பு மாணவிகள் பள்ளி ஆசிரியைகள் எவ்வாறு சிறந்த மாணவர்களை உருவாக்குகிறார்கள் என்பதை நாடகம் மூலம் எடுத்து கூறினர்.

    தொடர்ந்து கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு குழந்தைகள் கிருஷ்ணர்- ராதை வேடம் அணிந்து நடனமாடினர். விழாவில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. முன்னதாக திசையன்விளை வி.எஸ்.ஆர். கல்விக்குழுமம் நடத்திய 4 மாவட்டங்களுக்கு இடையேயான கபாடி போட்டியில் பள்ளி மாணவர்கள் 0-14 மற்றும் யு-19 பிரிவில் விளையாடி வெற்றி கோப்பையை கைப்பற்றினர். மேலும் கோவில்பட்டியில் வித்யாபாரதி நடத்திய பல்வேறு விளையாட்டுப் போட்டிகளிலும் சிவசக்தி வித்யாலயா பள்ளி மாணவர்கள் பதக்கங்கள் பெற்றனர்.

    சுரண்டை எஸ்.ஆர். பள்ளியில் நடைபெற்ற பல்வேறு கலை-விளையாட்டு போட்டிகளிலும் மாணவர்கள் திறம்பட பங்கேற்று வெற்றி பெற்றனர்.

    வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விழாவின்போது பதக்கங்கள், கோப்பைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும் மாணவர்களால் ஆசிரியைகளுக்கு நடத்தப்பட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டி களில் ஆசிரியைகள் உற்சாக மாக கலந்து கொண்டனர்.

    முடிவில் மாணவி ஆஸ்மி நன்றி கூறினார்.

    • நிகழ்ச்சியில் 15 பார்வையற்றவர்கள், 25 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 45 பேர் கலந்து கொண்டனர்.
    • பேரணியை கே.ஆர்.பி.இளங்கோ கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    தென்காசி:

    தமிழ்நாடு முழுவதும் 324கே மாவட்டத்தின் சார்பாக கண்தான விழிப்புணர்வு பிரசார பேரணி நடைபெற்றது. பாவூர்சத்திரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத் தலைவர் லட்சுமி சேகர் தலைமை தாங்கினார். சங்க செயலாளர் சசி ஞானசேகரன், சங்க முன்னாள் செயலாளர்கள் ரஜினி, சுரேஷ்,ஆனந்த், சங்க முன்னாள் பொருளாளர் பரமசிவன் ஜெயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கண்தான விழிப்புணர்வு குழு தலைவர் முனைவர் அருணாச்சலம் வரவேற்றார். இதில் 15 பார்வையற்றவர்கள், 25 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 45 பேர் கலந்து கொண்டனர்.

    பேரணியை பாவூர்சத்திரம் கண் தான விழிப்புணர் குழு நிறுவனர், வட்டாரத் தலைவர் கே. ஆர். பி. இளங்கோ கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணி ஆய்க்குடி அமர்சேவா சங்கத்தில் அங்குள்ள நிறுவனர்களை சந்தித்த பின்னர் தமிழ்நாடு முழுவதும் புறப்பட்டு சென்றார்கள். பேரணியின் ஏற்பாடுகளை 324 கே கண்தான மாவட்ட தலைவர் சோபா ஸ்ரீகாந்த், கண்தான பேரணி மாவட்ட தலைவர் சுரேஷ் ஆகியோர் இணைந்து செய்திருந்தனர். முடிவில் பாவூர்சத்திரம் கண்தான விழிப்புணர்வு குழு துணை தலைவர் முருகன் நன்றி கூறினார்

    ×