search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 229393"

    • கரூர் மாரியம்மன் கோவிலில் மண்டகப்படி விழா நடைபெற்றது
    • நாள்தோறும் பல்வேறு விஷேச வாகனங்களில் அம்மன் திருவீதி உலா நடந்து வருகிறது.

    கரூர்,

    கரூரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கடந்த 14-ந் தேதி கம்பம் நடுதலுடன் தொடங்கியது. அதைதொடர்ந்து பூச்சொரிதல் விழா, காப்பு கட்டுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. நாள்தோறும் பல்வேறு விஷேச வாகனங்களில் அம்மன் திருவீதி உலா நடந்து வருகிறது. நேற்று கரூர் மாநகராட்சி சார்பில் மண்டகப்படி விழா நடைபெற்றது. அதில் உற்சவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மஹா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் மேயர் கவிதா, துணை மேயர் தாரணி சரவணன், ஆணையாளர் ரவிச்சந்திரன், மண்டல குழு தலைவர்கள் அன்பரசன், கோல்ட் ஸ்பாட் ராஜா, வழக்கறிஞர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • 10 லட்சம் ரூபாய் நோட்டுக்களை கொண்டு அம்மனுக்கு தனலட்சுமி அலங்காரம்
    • ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

    மண்ணச்சநல்லூர்,

    திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள காசுக்கடை முத்து மாரியம்மன்கோவிலில் வைகாசி தேர்த்திருவிழாவையொட்டி நேற்று அம்மனுக்கு தனலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். இக்கோவிலில் 39-ம் ஆண்டு வைகாசி திருவிழா கடந்த மே 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதையடுத்து நேற்று (22-ந்தேதி) காவேரி ஆற்றிலிருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டு முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. நேற்று மதியம் 12 மணியளவில் முத்துமாரியம்மனுக்கு 10 லட்சம் ரூபாய் நோட்டுகளை கொண்டு தனலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    மண்ணச்சநல்லூர் பகுதியில் உள்ள கிராமங்களில் இருந்து பக்தர்கள் அதிகளவில் தனலெட்சுமி அலங்காரம் தரிசிக்க குவிந்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இன்று காலை சப்பர தேரில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா நடைபெற்றது
    • அன்னதான நிகழ்ச்சி தினந்தோறும் நடந்தது

    பெரம்பலூர்:

    பெரம்பலூரை அடுத்த சிறுவாச்சூரில் உள்ள ஆதிசங்கரர் வழிபட்ட பெருமைபெற்ற ஸ்ரீமதுரகாளியம்மன் கோவிலில் ராஜகோபுரம் மற்றும் பெரியசாமி மலையில் உள்ள சுதை சிற்பங்கள் புதுப்பிக்கப்பட்டு பெரியசாமி மலைக்கோவிலுக்கு கடந்த மாதம் 3-ந் தேதியும், ஸ்ரீமதுரகாளியம்மன் கோவிலுக்கு 5-ந் தேதியும் அஷ்டபந்தன மகா கும்பாபிேஷகங்கள் விமரிசையாக நடந்தது. கும்பாபிஷேகம் நடந்து முடிந்த மறுநாள் முதல் மண்டல பூஜை தொடங்கி தினந்தோறும் மண்டல அபிஷேக விழா நடந்தது.

    கடந்த 20-ந் தேதி பெரியசாமி மலைக்கோவிலில் மண்டலபூஜை நிறைவுவிழா நடந்தது. இதில் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்பதால், ஆண் பக்தர்கள் திரளானவர்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர். ஸ்ரீமதுரகாளியம்மன் கோவிலில் நேற்று மண்டலாபிஷேக நிறைவுவிழா நடந்தது. இதனை முன்னிட்டு கோவில் பிரகாரத்தில் உற்சவ அம்பாள் அலங்கரித்து வைத்து 2 கால யாகசாலை பூஜைகள் நடந்தன. கும்பகலசத்திற்கு சிறப்பு பூஜைகளும் நடந்தன.

    யாகசாலை மற்றும் கும்ப பூஜைகளை திருமணஞ்சேரி உமாபதி சிவாச்சாரியார் தலைமையில் சிவாச்சாரியார் குழுவினர் நடத்திவைத்தனர். அதனைத்தொடர்ந்து கடம்புறப்பாடும் நடந்தது. மூலவர் சன்னதியில் மதுரகாளியம்மனுக்கு கலச நீர் அபிஷேகம் செய்விக்கப்பட்டு, பக்தர்கள் மீது கோவில் பூசாரியார்கள் புனிதநீரை தெளித்தனர். மண்டலாபிஷேக நிறைவுவிழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்பாளை தரிசனம் செய்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அசனாம்பிகை மற்றும் திருப்பணிக்குழுவினர், இந்துசமய அறநிலையத்துறையினர், சேவார்த்திகள் செய்திருந்தனர். கும்பாபிஷேகம் தொடங்கி மண்டல அபிஷேக நிறைவு விழா நேற்று வரை 48 நாட்களும் கோவில் திருமணமண்டபத்தில் மகா அன்னதான நிகழ்ச்சி தினந்தோறும் நடந்தது.

    • புனிதநீராடி தீர்த்தகுடம் மற்றும் பால்குடம் எடுத்து மேள தாளம் முழங்க ஊர்வலமாக வந்த பக்தர்கள்
    • அக்னி குண்டத்தில் பக்தர்கள் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்

    கரூர்,

    தோகைமலை அருேக வெள்ளப்பட்டியில் மகாமாரியம்மன் ேகாவில் உள்ளது. இக்கோவில் திருவிழாவையொட்டி பக்தர்கள் காவிரி ஆற்றில் புனிதநீராடி தீர்த்தகுடம் மற்றும் பால்குடம் எடுத்து மேள தாளம் முழங்க ஊர்வலமாக தோகைமலை குறிஞ்சி நகர் பகவதி அம்மன் கோவிலுக்கு வந்தனர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.தொடர்ந்து இங்கிருந்து பால்குடம், காவடி எடுத்து கொண்டு தோகைமலையில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக வெள்ளப்பட்டி மகா மாரியம்மன் கோவிலுக்கு வந்தனர். பின்னர் கோவில் முன்பு தயாராக இருந்த அக்னி குண்டத்தில் பக்தர்கள் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவிழாவையொட்டி தோகைமலை தமிழ்சங்கம் சார்பில் அதன் நிறுவனர் காந்திராஜன் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

    • புதுக்கோட்டையில் 9 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது
    • மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வழங்கினார்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில், 9 நபர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை, மாவட்ட கலெக்டர் கவிதா ராமு பயனாளிகளுக்கு வழங்கினார்.விராலிமலை வட்டம், அம்மன்கோவில் தெருவைச் சேர்ந்த 9 நபர்களுக்கு தலா 50 சதுர மீட்டர் பரப்பளவுடைய இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டன. மேலும் பயனாளிகளுக்கு வீடுகட்டும் திட்டத்தின்கீழ், முன்னுரிமை அடி ப்படையில் அவர்களுக்கு வீடுகள் கட்டி க்கொடுக்கவும், பெட்டிக்கடை அமைத்திடவும், மகளிர் சுயஉதவிக்குழு கடனுதவி வழங்கிடவும் நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட கலெக்டர் கவிதா ராமு அறிவுறுத்தினார்.இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, தனி மாவட்ட வருவாய் அலுவலர் (காவேரி-வைகை-குண்டாறு) ஆர்.ரம்யாதேவி, விராலிமலை ஒன்றியக்குழுத் தலைவர் காமு.மு.பி.மணி, இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி, ஒன்றிய குழு உறுப்பினர் மு.பி.ம.சத்தியசீலன், வட்டாட்சி யர் சதீஸ்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • கறம்பக்குடி திருமணஞ்சேரி ஊராட்சியில் இலவச தையல் பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது
    • ஏழை பெண்களுக்கு இலவச தையல் மிஷின் வழங்கப்பட்டது

    கறம்பக்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் திருமணஞ்சேரி ஊராட்சியில் தனியார் திருமண மண்டபத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் பெண்கள் மற்றும் ஏழை மாணவிகளுக்கு நடத்தப்படும் அரசு இலவச தையல் பயிற்சி மையத்தில் பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது. விழாவினை மாரிமுத்து மாசிலாமணி குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி தலைமை வகித்தார். புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் மற்றும் மாவட்ட ஆதிதிராவிடர் நல மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கருணாகரன் மாவட்ட தாட்கோ மேலாளர் முத்துரத்தினம் மாவட்ட சமூக நல அலுவலர் கோகுலப்பிரியா கறம்பக்குடி வட்டாட்சியர் ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக நீதிபதி செல்வகுமார் கலந்துகொண்டு பயிற்சி முடித்த ஏழைப் பெண்களுக்கு இலவச தையல் மிஷின்களையும் சான்றிதழ்களையும் வழங்கினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாவட்ட அறங்காவலர் குழு தலைவரும் கரம்பக்குடி தெற்கு ஒன்றிய திமுக செயலாளருமான தவ.பாஞ்சாலன் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆர் எம் ஓ இந்திராணி திருமணஞ்சேரி ஊராட்சி மன்ற தலைவர் பிரபு காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • முத்துமாரியம்மன் கோவில் தெப்ப உற்வம் நடைபெற்றது
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

    புதுக்கோட்டை:

    அரிமளம் அருகே ராயவரம் முத்துமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 1-ந் தேதி பூச்சொரிதல், 8-ந்் தேதி காப்பு கட்டுதலுடன் முதல் நாள் திருவிழா தொடங்கியது. திருவிழாவின் ஒவ்வொரு நாள் இரவும் அண்ணா சீரணி கலையரங்கில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனிடையே நேற்று முன்தினம் 9-ம் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்ட நிலையில் தேரோட்டம் நடைபெற்றது. தொடர்ந்து மஞ்சள் நீராட்டு விழாவும், தொடர்ந்து நள்ளிரவு கோவில் அருகே அமைந்துள்ள ஊரணியில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதையடுத்து தெப்பத்தில் சிறப்பு அலங்காரத்தில் முத்துமாரியம்மன் எழுந்தருளினார். இதையடுத்து தெப்பத்தில் வலம் வந்து முத்துமாரியம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து முத்துமாரியம்மன் கோவிலில் காப்பு கலைக்கப்பட்டு விழா நிறைவு பெற்றது.

    • புதுக்கோட்டை சிவாலயங்களில் பிரதோஷ விழா நடைபெற்றது
    • நந்திகேஸ்வரர் பகவானுக்கு அக்கினியில் நல்ல மழை வேண்டி தண்ணீர் அபிஷேகம் மகாதீபா ஆராதனை நடைபெற்றது.

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை வேதநாயகி உடனுறை சாந்தநாத சுவாமி கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதனை முன்னிட்டு சாமிக்கு பால், தயிர், இளநீர், தேன், சந்தனம், மஞ்சள் நீர், திருநீர் உள்ளிட்ட போன்ற 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. மாலையில், நந்திகேஸ்வரருக்கு பாலபிஷேகம், பன்னீர், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் சந்தனம், மஞ்சள் நீர், திருநீறு உள்ளிட்ட பூஜை பொருள்களில் சிறப்பு அபிஷேகம் கலசாபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. பின்னர் நந்திகேஸ்வரர் பகவானுக்கு அக்கினியில் நல்ல மழை வேண்டி தண்ணீர் அபிஷேகம் மகாதீபா ஆராதனை நடைபெற்றது. நந்திகேஸ்வரருக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. திரளான பக்தர்கள் வருகைதந்து சுவாமியை தரிசனம் செய்தனர்.

    விழா ஏற்பாடுகளை பிரதோஷ வழிபாட்டு மன்ற, திருக்கோவில் நிர்வாகிகள், கோயில் ஊழியர்கள் செய்திருந்தனர்.இதேபோல், புதுக்கோட்டை திருக்கோகர்ணம் கோகர்ணேஸ்வரர், நெடுங்குடி கைலாசநாதர் கோவில், திருவேங்கைவாசல், நற்சாந்துபட்டி, பனையபட்டி, வலையபட்டி ஆகிய சிவன் கோவில்களிலும், பொன்னமராவதி சோழீஸ்வரர் கோவில், வேந்தன்பட்டி நெய் நந்தீஸ்வரர், இலுப்பூர் பகுதியில் உள்ள சொர்ணாம்பிகை சமதே பொன்வாசி நாதர் வௌ்ளாஞ்சார் மீனாட்சிசுந்தேரஸ்வரர், ராப்பூசல் தாயுமானவர், தாண்டீஸ்வரம் சத்குரு சம்ஹாரமூர்த்தி, இலுப்பூர் சொர்ணாம்பிகை சமேத பொன்வாசிநாதர் ஆலத்தூர் தர்மாம்பிகை சமேத அகத்தீஸ்வரர் மற்றும் இலுப்பூரை சுற்றியுள்ள பல்வேறு சிவன் கோவில்களில் உள்ள நந்தியம் பகவானுக்கு 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன.

    • நாளை முதல் 26-ந்தேதி வரை நடக்கிறது
    • தினமும் பொதுஜனசேவை நடைபெறுகிறது

    திருச்சி,

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் கோடைத் திருநாள் நாளை தொடங்குகிறது. இந்த திருநாள் உற்சவம் நாளை (17-ந்தேதி, புதன்கிழமை) தொடங்கி வருகிற 26-ந்தேதி வரை நடைபெறுகிறது.அதன்படி நாளை முதல் வருகிற 21-ந்தேதி வரை நடைபெறும் வெளிக்கோடை உற்சவத்தில் காலை 5.30 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடும், மாலை 6.45 மணி முதல் இரவு 7 மணி வரை புஷ்பம் சாத்துப்படி கண்டருளல், இரவு 7 மணி முதல் 7.15 மணி வரை தீர்த்த கோஷ்டி, இரவு 7.15 மணி முதல் 8.30 மணி வரை பொதுஜன சேவை, இரவு 8.30 மணிக்கு தாயார் புறப்பாடு, 8.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைதல் நடைபெறுகிறது.அதேபோல் வருகிற 22-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை நடைபெறும் உள்கோடை உற்சவத்தின்போது, மாலை 5.30 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடு ஆகிறார். 5.45 மணி முதல் 6 மணி வரை புஷ்பம் சாத்துப்படி கண்டருளும் தாயாருக்கு, 6 மணி முதல் 6.15 மணி வரை தீர்த்த கோஷ்டி நடக்கிறது. 6.30 மணிக்கு ஸ்ரீதாயார் உள்கோடை மண்டபம் சேருகிறார். 6.45 மணிக்கு அலங்காரம் அமுது செய்தல், இரவு 7 மணி முதல் 7.30 மணி வரை திருவாராதனம், வெள்ளிச்சம்பா அமுது செய்தல், தீர்த்த கோஷடி, 7.30 மணி முதல் 8.30 மணி வரை பொதுஜன சேவை,இரவு 8.45 மணிக்கு ஸ்ரீதாயார் மண்டத்தில் இருந்து புறப்பட்டு, இரவு 9.15 மணிக்கு வீணை வாத்தியத்துடன் மூலஸ்தானம் சேருகிறார். வருகிற 26-ந்தேதி அன்று வீணை வாத்தியம் கிடையாது. மேற்கண்ட தகவலை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • தரகம்பட்டியில் ரூ.12.40 கோடியில் கட்டப்பட உள்ளது
    • எம்.எல்.ஏ.சிவகாமிசுந்தரி பூமி பூஜையுடன் தொடங்கி வைத்தார்

    குளித்தலை,

    கரூர் மாவட்டம், குளித்தலை அருகே தரகம்பட்டியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கி சில ஆண்டுகளான கல்லூரி வகுப்புகள் கடவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிட பகுதிகளில் இயங்கி வருகிறது, இதனால் தனியாக கல்லூரி கட்டிடம் கட்டி இயங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கோரிக்கைவைத்தனர்.இதனை தொடர்ந்து கரூர் மாவட்ட கழக செயலாளரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்திலபாலாஜி பரிந்துரையில் ரூ.12 கோடியே 40 லட்சத்தில் கல்லூரி அமைப்பதற்கான புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா கீழப்பகுதி ஊராட்சி, மைலம்பட்டி அரசு மருத்துவமனை அருகில் கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. வழக்கறிஞர் சிவகாமசுந்தரி தலைமையில் நடைபெற்றது.விழாவில் குளித்தலை கோட்டாட்சியர் புஷ்பாதேவி, ஆடிட்டர் சங்கர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர், ஒன்றிய செயலாளர்கள் சுதாகர், ராமலிங்கம், தரகம்பட்டி ஒன்றிய குழு தலைவர் செல்வராஜ், கீழப்பகுதி ஊராட்சி மன்ற தலைவர் புல்லட் ஜாஜகான், மற்றும் அரசு அதிகாரிகள், திமுக முக்கிய நிர்வாகிகள், பொதுமக்கள் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • கரூர் சி.எஸ்.ஐ. பிஷப் சாலமன் துரைசாமி கல்லூரியில் நடைபெற்றது
    • பல்வேறு பிரிவுகளில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டது

    கரூர்,

    கரூர் சி.எஸ்.ஐ. பிஷப் சாலமன் துரைசாமிக் கல்லூரியில் முதலாம் ஆண்டுவிழா நடைப்பெற்றது. திருச்சி மறை மாவட்ட தலைவர் ராஜா மான்சிங் தொடங்கி வைத்தார். இவ்விழாவில் கல்லூரியின் முதல்வர் முனைவர் உமேஷ் சாமுவேல் ஜெபசீலன் வரவேற்புரை நிகழ்த்தினார்.சிறப்பு விருந்தினர்கள் குத்துவிளக்கேற்றி நிகழ்வினைத் துவங்கி வைத்தனர். விருந்தினர்களுக்கு பொன்னாடை போர்த்தி சிறப்பு செய்யப்பட்டது. பேராயர் ஆணையாளர் சுதர்சன் தலைமையுரை ஆற்றினார். பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வு நெறியாளர் (பொ) முனைவர் சீனிவாசராகவன் சிறப்புரை ஆற்றினார்.திருச்சி தஞ்சை திருமண்டல பொருளாளர் ராஜேந்திரன், திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் முதல்வர் முனைவர் பால்தயாபரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பல்வேறு பாடங்களில் நூறு சதவீத தேர்ச்சியினை அளித்த ஆசிரிய பெருமக்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.பல்வேறு பிரிவுகளில் சாதனை செய்து வெற்றிப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச்சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது. மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைப்பெற்றது. வணிக மேலாண்மை துறை உதவிப்பேராசிரியர் முனைவர் கண்ணகி நன்றியுரை ஆற்றினார். கரூர் மறை மாவட்ட தலைவர் பாஸ்கர் முடிவு ஜெபத்தினை செய்தார். திருச்சி தஞ்சை திருமண்டல பேராயர் ஆணையாளர் சுதர்சன் ஆசி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் இறைமக்கள் செயலர் மற்றும் ஆட்சிமன்ற உறுப்பினர் ஸ்டான்லி மதிசெல்வன், ஆட்சிமன்ற உறுப்பினர் ராஜய்யா, சி.எஸ்.ஐ தொழிற்பயிற்சிப் பள்ளி தாளாளர் கிறிஸ்டோபர் சுரேந்திர குமார், தாராபுரம் தார்ப் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் (பொ) முனைவர் விக்டர் லாசரஸ், திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் சத்தியசீலன், திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் நிதியாளர் ஞானராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • தா.பழூரில் அப்பர் சுவாமிக்கு குருபூஜை விழா நடைபெற்றது
    • வேத மந்திரங்கள் முழங்க, பஞ்ச புராணம், பாராயணம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது

    உடையார்பாளையம்,

    அரியலூர் மாவட்டம் தா.பழூரில் உள்ள விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவிலில் அப்பர் பெருமான் குருபூஜை விழா நடைபெற்றது. குருபூஜையை முன்னிட்டு விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன், சமயக்குரவர்களான சுந்தரர், அப்பர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் எழுந்தருளிய விக்ரஹம் ஆகியவற்றுக்கு மஞ்சள் பொடி, மாப்பொடி, திரவிய பொடி, நெல்லி முள்ளி பொடி, வில்வ பொடி, அருகம்புல் பொடி, தேன், பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர் சுவாமி, அம்பாள், சமயக்குரவர்கள் நால்வர் ஆகியோர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். ஓதுவார்கள் அப்பர் பெருமான் இயற்றிய தேவாரப் பாடல்களை பாடி வழிபட்டனர். வேத மந்திரங்கள் முழங்க, பஞ்ச புராணம், பாராயணம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. விழாவில் அடியார்களுக்கு தயிர்சாதம் பிரசாதமாக வழங்கப்பட்டது.

    ×