search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "#ஒகேனக்கல்"

    • ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று காலை 6 மணி நிலவரப்படி நீர்வரத்து 5 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது.
    • நீர்வரத்து காரணமாக மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் ஆகிய அருவிகளில் தண்ணீர் செந்நிறத்தில் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    ஒகேனக்கல்:

    கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பிலும் குறைவு விதமாக இருந்து வருகிறது.

    இந்நிலையில் கடந்த இரு தினங்களாக பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று 4 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை நிலவரப்படி 6 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது.

    நேற்று பெய்த மழையின் அளவு குறைந்ததால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று காலை 6 மணி நிலவரப்படி நீர்வரத்து 5 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது.

    இந்த நீர்வரத்து காரணமாக மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் ஆகிய அருவிகளில் தண்ணீர் செந்நிறத்தில் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    • மழை காரணமாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.
    • நேற்று ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 6, 500 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் அதிகரித்து வந்தது.

    ஒகேனக்கல்:

    காவிரி கரையோரங்களான தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, நாட்ராம் பாளையம், பில்லிகுண்டுலு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது.

    இதன் காரணமாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.

    இந்த நிலையில் நேற்று ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 6, 500 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் அதிகரித்து வந்தது.

    இதையடுத்து காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்தது. இதனால் இன்றுகாலை 6 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 6 ஆயிரம் கனஅடியாக குறைந்து வந்தது.

    மெயின் அருவி, சினிபால்ஸ், ஐவர்பாணி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

    காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தை பிலிகுண்டுலு வில் மத்திய நீர்வளத்தை அதிகாரிகள் கண்காணித்து செய்து வருகின்றனர்.

    • ஒகேனக்கல் காவிரி ஆற்றில் உள்ள ஐந்தருவி, சினி பால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகின்றன.
    • கடந்த இரண்டு மாதத்திற்கு பின்பு ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    ஒகேனக்கல்:

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு கடந்த இரண்டு மாதமாக 500 கன அடி முதல் 1000 வரை மாறி மாறி குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வந்தன. இந்த நிலையில் காவிரி ஆற்றை ஒட்டியுள்ள வனப்பகுதிகளிலும், மலைப்பகுதிகளிலும் ஆங்காங்கே கனமழை பெய்து வருவதால் தமிழகம் மற்றும் கர்நாடக எல்லை பகுதியான பிலிண்டுலுவில் தற்போது நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 4 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

    இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் உள்ள ஐந்தருவி, சினி பால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகின்றன.

    கோடை விடுமுறை என்பதால் தினசரி ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் இந்த சூழ்நிலையில் நீர்வரத்து அதிகரித்து வருவதை சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் பார்த்து அருவி மற்றும் ஆற்றுப்பகுதிகளில் குளித்தும், மகிழ்ந்து செல்கின்றனர். கடந்த இரண்டு மாதத்திற்கு பின்பு ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஊட்டமலை சாலையில் சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவிற்கு வாகனங்கள் அணிவகுத்து ஆமை வேகத்தில் ஊர்ந்து செல்கின்றன.
    • சுற்றுலா பணிகள் வாகனங்களில் செல்ல முடியாமல் சாலை ஓரமாக வாகனங்களை நிறுத்த கூட இடமில்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

    ஒகேனக்கல், 

    தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் சுற்றுலா தலத்தில் கோடை விடுமுறை காலங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் கூட்டம் கூட்டமாக குவிந்து வருவது வழக்கம்.

    பள்ளி மாணவர்களுக்கு தேர்வு முடிவடைந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு அதிகளவிலான சுற்றுலா பயணிகள் குவிய தொடங்கினார்.

    அவ்வாறு குவியும் சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களை நிறுத்த போதிய இட வசதி இல்லாமல் ஒகேனக்கல் சுற்றுலா தளத்திலிருந்து பென்னாகரம் செல்லும் சாலையில் மூன்று கிலோ மீட்டர் தொலைவு வரை வாகனங்களை நிறுத்திவிட்டு நடந்தே ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இது மட்டும் அல்லாமல் ஊட்டமலை சாலையில் சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவிற்கு வாகனங்கள் அணிவகுத்து ஆமை வேகத்தில் ஊர்ந்து செல்கின்றன. இதனால் சுற்றுலா பணிகள் வாகனங்களில் செல்ல முடியாமல் சாலை ஓரமாக வாகனங்களை நிறுத்த கூட இடமில்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

    ஒகேனக்கல் வரும் சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களை நிறுத்த போதிய இட வசதி செய்து தரக்கோரி மாவட்ட நிர்வாகத்திற்கு சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மெயின் அருவி மற்றும் சினிபால்ஸ், ஐவர்பாணி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
    • விடுமுறை தினமான இன்று ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

    ஒகேனக்கல்:

    தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சில தினங்களாக நீர் வரத்து குறைவதும், அதிகரிப்பதுமாக இருந்து வந்தது.

    இந்த நிலையில் கர்நாடக காவிரி நீர் பிடிப்பு பகுதிகள் மற்றும் காவிரி கரையோரங்களில் பெய்த கோடை மழையின் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.

    இதனால் நேற்று ஒகேனக்கல்லுக்கு 2,200 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 3 ஆயிரம் கன அடியாக அதிகரித்து வந்தது.

    இதனால் மெயின் அருவி மற்றும் சினிபால்ஸ், ஐவர்பாணி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    விடுமுறை தினமான இன்று ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

    தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து நீர்வரத்தை அளவீடு செய்து கண்காணித்து வருகிறார்கள்.

    • தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் நல்ல மழை பெய்துள்ளது.
    • ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 3 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் அதிகரித்து வந்தது.

    பென்னாகரம்:

    தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு ஒரு மாதமாக நீர்வரத்து 1000 கனஅடியாக தண்ணீர் தொடர்ந்து வந்தது.

    இந்த நிலையில் தற்போது கர்நாடகா மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் நல்ல மழை பெய்துள்ளது.

    இதனால் இன்றுகாலை ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 3 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் அதிகரித்து வந்தது.

    மெயின் அருவி, சினிபால்ஸ், ஐவர்பாணி அருவிகளில் தண்ணீர் ஆர்பரித்து கொட்டுகிறது.

    காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தை பிலிகுண்டு லுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளவீடு செய்து கண்காணித்து வருகின்றனர்.

    • சொகுசு நடைபாதை, எண்ணெய் கழிவு சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல், காட்சி கோபுரம் போன்ற 25-ற்கும் மேலான பல்வேறு பணிகள்.
    • ரூ.1757.65 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து ஆணையிடப்பட்டுள்ளது. இதற்கான 3.10 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    பென்னாகரம்,

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், ஒகேனக்கல்லில் ரூ.18 கோடி மதிப்பீட்டில் ஒகேனக்கல் சுற்றுலா மையத்தை நவீன முறையில் மேம்படுத்தும் பணியினை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், மாவட்ட கலெக்டர் சாந்தி, முன்னிலையில் துவக்கி வைத்தார்.

    ஒகேனக்கல் சுற்றுலா தலம் சர்வதேச அளவில் தரம் உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கை செய்யப்பட்டதை தொடர்ந்து நுழைவு வாயில், பார்வையாளர் மாடம், பரிசல் நிறுத்துமிடம், எண்ணை குளியலுக்கான இடங்கள், உடைமாற்றும் அறை மற்றும் பாதுகாப்புடன் குளிக்க வசதி ஏற்படுத்துதல், டிக்கெட் கவுண்டர், பரிசல் நிறுத்துமிடம், பரிசல் சென்றடையும் பகுதி, மசாஜ் பகுதி, ஆழ்துளைக்கிணறு, உணவகம், சொகுசு நடைபாதை, எண்ணெய் கழிவு சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல், காட்சி கோபுரம் போன்ற 25-ற்கும் மேலான பல்வேறு பணிகள் மேற்கொள்ள தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை சார்பில் ரூ.1757.65 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து ஆணையிடப்பட்டுள்ளது. இதற்கான 3.10 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் பென்னாகரம் சட்ட மன்ற உறுப்பினர் ஜி.கே.மணி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம்.பெ.சுப்பிரமணி, பென்னாகரம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் கவிதா ராமகிருஷ்ணன், ஒன்றியக் குழு உறுப்பினர் கெம்புராஜ், கூத்தபாடி ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் லோகநாதன், தருமபுரி மாவட்ட சுற்றுலா அலுவலர் கதிரேசன், பென்னாகரம் வட்டாட்சியர் சௌகத்அலி, பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலர் வடிவேலன், உட்பட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    • ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து விநாடிக்கு 1,500 கனஅடியாக நீடிக்கிறது.
    • மேட்டூர் அணைக்கு நேற்று 1,223 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 1,222 கன அடியாக சற்று குறைந்துள்ளது.

    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைவாக உள்ளது.

    ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து விநாடிக்கு 1,500 கனஅடியாக நீடிக்கிறது. அதே சமயம், மேட்டூர் அணைக்கு நேற்று 1,223 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 1,222 கன அடியாக சற்று குறைந்துள்ளது.

    அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    நேற்று 103.55 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு 103.54 அடியாக சரிந்தது.

    • ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.
    • சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி கலை இழந்துள்ளது.

    தருமபுரி,

    தமிழகத்தின் தலை சிறந்த சுற்றுலா தளங்களில் ஒன்றாக திகழும் ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலமான கர்நாடகா புதுச்சேரியில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.

    விடுமுறை நாட்களிலும், மற்ற தினங்களிலும் ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்காக தமிழக சுற்றுலா துறையும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து பொழுதுபோக்கு அம்சங்களை உருவாக்கி உள்ளது.

    முதலைப் பண்ணை, மீன் அருங்காட்சியகம், சிறுவர் பூங்கா உள்ளிட்டவைகள் சுற்றுலாப் பயணிகளுக்கு மகிழ்ச்சி அளித்து வருகிறது. சிறப்பு வாய்ந்த சுற்றுலா தளம் என்பதால் இங்கு மதுபான கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    தடையை மீறி ஒகேனக்கல் அருகே உள்ள பென்னாகரம் ஜக்கம்பட்டி அரசு மதுபான கடையில் இருந்தும், அண்டை மாநிலமான கர்நாடகா மாநிலத்திலிருந்தும் மது பாட்டில் கொண்டுவரப்பட்டு ஒகேனக்கல்லில் இரட்டிப்பு விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    சுற்றுலா தலத்தில் அனைத்து பகுதிகளிலும் குறிப்பாக ஒகேனக்கல் காவல் நிலையம் அருகிலும் மது பிரியர்கள் அமர்ந்து ஜாலியாக மது அருந்தி வருகின்றனர். ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் உள்ள சிறுவர்கள் பூங்காவில் இளைஞர்கள் மது அருந்தி மதுபான கூடமாக மாற்றியுள்ளதால் அங்கு வந்த சுற்றுலா பயணிகள் தங்கள் குழந்தைகளை சிறுவர் பூங்காவுக்குள் செல்ல அனுமதிக்காமல் முகம் சுழித்தவாறு சென்றனர்.

    இதுபோன்ற சமூக விரோத செயல்களால் ஒகேனக்கல் வருகை தரும் சுற்றுலா பகுதிகளில் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவதால் புகழ்பெற்ற சுற்றுலா தளம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி கலை இழந்துள்ளது.

    தருமபுரி மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் ஒகேனக்கல் சுற்றுலாத்தலத்தை மேம்படுத்துகிறோம் என்று சொல்லி வரும் நிலையில் நாளுக்கு நாள் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

    இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்துகின்றனர்.

    • காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்தது.
    • இன்று காலை 6 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 2 ஆயிரம் கனஅடியாக குறைந்து வந்தது.

    பென்னாகரம்:

    கர்நாடகா மாநில காவிரி மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    இதனால் நேற்று தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 3 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் வந்தது.

    இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்தது. இதனால் இன்று காலை 6 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 2 ஆயிரம் கனஅடியாக குறைந்து வந்தது.

    காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தை பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளவீடு செய்து கண்காணித்து வருகின்றனர்.

    • காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்துள்ளது.
    • இன்றுகாலை 6 மணி நிலவரப்படி நீர்வரத்து 5 ஆயிரம் கனஅடியாக குறைந்து வந்தது.

    பென்னாகரம்:

    கர்நாடக மாநில நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருகிறது. மேலும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்துள்ளது.

    இதனால் நேற்று ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் வந்தது.

    இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்துள்ளது.

    இதனால் இன்றுகாலை 6 மணி நிலவரப்படி நீர்வரத்து 5 ஆயிரம் கனஅடியாக குறைந்து வந்தது.

    தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறையினர் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல் வந்தனர்.
    • போட் கிளப், மணல் திட்டு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலை மோதியது.

    தருமபுரி,

    தமிழகத்தின் நயாகரா என்று போற்றப்படும் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் தமிழகத்தில் மிகச்சிறந்த சுற்றுலா தலமாகும். இங்கு தினந்தோறும் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம்.

    இந்நிலையில் அரையாண்டு விடுமுறை மற்றும் கிறிஸ்துமஸ் விடுமுறை என்பதால் தமிழகம் மற்றும் பல மாநிலங்களில் இருந்து நேற்று 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல் வந்தனர்.

    இதனால் ஒகேனக்கல் சுற்றுலா தளம் திக்கு முக்காடியது.

    ஒகேனக்கல் பஸ் நிலையத்தில் இருந்து மெயின் பால்ஸ் வரையிலும் மற்றும் மீன் மார்க்கெட் பார், உணவருந்தும் பார், மெயின் அருவி, சினி பால்ஸ், போட் கிளப், மணல் திட்டு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலை மோதியது.

    அருவிகளில் குளிப்பதற்கு இடமின்றி ஆற்று படுகைகளிலும் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

    பரிசல் துறையில் ஒரு நபருக்கு ரூ.750 என்ற அரசு கட்டணத்தில் ஒரு பரிசலுக்கு நான்கு பேர் என சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக பரிசல் சவாரி செய்தனர்.

    அங்குள்ள மீன் மார்க்கெட்டில் டன் கணக்கில் மீன் விற்பனை செய்யப்பட்டு குடும்பத்துடன் சமைத்தும், அங்குள்ள சமையலர்களிடம் கொடுத்தும் சமைத்து உண்டு மகிழ்ந்தனர்.

    சுற்றுலா பயணிகள் வந்த வாகனங்கள் ஒகேனக்கல் பஸ் நிலையம் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா தல வாகன பாதுகாப்பு மையம், ஒகேனக்கல் மெயின் சாலை அனைத்து பகுதிகளிலும் ஆயிரக்கணக்கில் நிறுத்தப்பட்டு போதிய இடம் இன்றி ஒகேனக்கல் காவல் நிலையத்தில் இருந்து வழிநெடுகிலும், இருபுறங்களிலும் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தது.தொடர் விடுமுறையால் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ×