search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 230101"

    • மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் துணிகரம்
    • தனியார் கல்லூரியில் பேராசிரியை யாக பணிபுரிந்து வருகிறார்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டம் காப்புக்காடு காட்டுவிளை பகுதியைச் சேர்ந்தவர் ஜெனிஸ். இவரது மனைவி மெர்லின் டயானா (வயது 36). இவர் தேனி மாவட்டம் பெரிய குளத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியை யாக பணிபுரிந்து வருகிறார்.

    தற்போது கல்லூரி விடு முறை என்பதால், மெர்லின் டயானா ஊருக்கு வந்தி ருந்தார். நேற்று இரவு அவர், கணவருடன் மோட் டார் சைக்கிளில் மார்த் தாண்டத்திற்கு பொருட்கள் வாங்க சென்றார்.

    பின்னர் அங்கிருந்து கணவன்-மனைவி இருவரும் பொருட்கள் வாங்கி விட்டு வீட்டுக்கு புறப் பட்டனர். மார்த்தாண் டம் அரசு மருத்துவமனை அருகே தேசிய நெடுஞ்சாலை யில் சென்ற போது பின்னால் ஒரு மோட்டார் சைக்கிள் வந்தது. அதில் வந்தவர்கள், திடீரென மெர்லின் டயானா கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், சங்கிலியை பிடித்துக் கொண்டு கூச்ச லிட்டார். ஆனால் அதற்குள் மர்ம நபர்கள் நகையை பறித்து விட்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.

    இதற்கிடையில் மெர்லின் டயானாவின் கூச்சல் கேட்டு, அக்கம் பக்கத்தினர் மற்றும் அந்த பகுதி வர்த்தக நிறு வனத்தினர் திரண்டனர். அவர்கள், மர்மமனிதர்கள் சென்ற பாதையில் வாகனங்களில் சென்று பார்த்தனர்.

    ஆனால் அவர்களை கண்டு பிடிக்க முடிய வில்லை. இதுகுறித்து மார்த் தாண்டம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது 16 பவுன் நகை பறிபோனதாக போலீ சாரிடம் மெர்லின் டயானா புகார் தெரிவித்தார். இதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வரு கின்றனர். எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும் மார்த்தாண்டம் நகரில், கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு சம்பவம் நடந்திருப்பது அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • சத்தியமங்கலம் அருகே இன்று அதிகாலை ரோட்டில் பாய்ந்து சென்ற சிறுத்தையால் அதிர்ச்சி அடைந்த விவசாயி.
    • பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் வனப்பகுதிகள் வழியாக செல்லும்போது கவனமுடனும், எச்சரிக்கையுடனும் செல்ல வேண்டும் என வனத்துறையினர் கேட்டு கொண்டனர்.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனப்பகுதிகளில் யானைகள் புலி, சிறுத்தை, மான், காட்டெருமை உள்பட பல்வேறு வன விலங்குகள் உள்ளன.

    இந்த வனச்சரகத்தின் வழியாக திண்டுக்கல்லில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலையை யானைகள் குட்டிகளுடன் அவ்வப்போது சாலையை கடந்து செல்வது வழக்கம். அதே போல் இரவு நேரங்களில் புலி மற்றும் சிறுத்தைகளும் அடிக்கடி ரோட்டை கடந்து உலாவி வருகிறது.

    இந்த நிலையில் சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி அடுத்த புது குய்யனூர் பகுதியை சேர்ந்தவர் மணி (41). இவருக்கு அந்த பகுதியில் 2 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.

    இதில் மாட்டு தீவனங்கள் பயிரிட்டு பராமரித்து வருகிறார். மேலும் 2 மாடுகளை வளர்த்து வருகிறார். இவர் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் பால் கறந்து சத்தியமங்கலம், பண்ணாரி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு சென்று பால் விற்பனை செய்வது வழக்கம்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை வழக்கம் போல் புது குய்யனூர் பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் பால் விற்பனை செய்ய சென்று கொண்டு இருந்தார். அவர் சத்தியமங்கலம்-பண்ணாரி ரோடு குய்யனூர் பிரிவு அருகே சென்றார். அப்போது அவரது மோட்டார் சைக்கிள் முன்பு ஏதோ ஒரு உருவம் பாய்ந்து சென்றது. இதை கண்டு நிலை தடுமாறினார்.

    இதையடுத்து அவர் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விளக்கை எறிய விட்டு பார்த்தார். அப்போது அந்த பகுதியில் ஒரு சிறுத்தை சென்று கொண்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவரது முன்பு சென்றது சிறுத்தை என தெரிய வந்தது.

    இதையடுத்து அவர் குறித்து பொதுமக்கள் மற்றும் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார்.

    இது குறித்து வனத்துறையினர் கூறும் போது, வனப்பகுதிகளில் இருந்து சிறுத்தை, யானை மற்றும் வன விலங்குகள் அடிக்கடி வெளியேறி வருகிறது. எனவே பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் வனப்பகுதிகள் வழியாக செல்லும்போது கவனமுடனும், எச்சரிக்கையுடனும் செல்ல வேண்டும் என கேட்டு கொண்டனர்.

    கருமந்துறை அருகே விவசாயியை காரில் கடத்தி சென்று விட்டதாக கூறினார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் கரிய கோவில் அருகே உள்ள பகுடு பட்டி ஏரி வளைவுப் பகுதியை சேர்ந்தவர் மணிவேல் (வயது 40). விவசாயி.

    இவர் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை . இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடினர்.

    அப்போது கீரைகடை பிரிவு ரோட்டில் டீக்கடை வைத்திருந்த மூலப் பாடியை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் மணி வேலை 2 பேர் தேடி வந்ததாகவும், வீட்டு முகவரி மற்றும் போன் நம்பரை கேட்டதாகவும் தெரிவித்தார்.

    இதனால் மணிவேல் மனைவி ரஞ்சிதம் அதிர்ச்சி அடைந்தார் .இந்த நிலையில் நேற்று அதிகாலை 4 மணிக்கு மணிவேல் தனது மனைவி ரஞ்சிதத்திடம் செல்போனில் பேசினார் .அப்போது தன்னை 2 பேர் காரில் கடத்தி சென்று விட்டதாக கூறினார்.

    உடனடியாக செல்போன் அழைப்பு துண்டிக்–கப்பட்டது . இதையடுத்து அவர் பேசிய நம்பரை தொடர்பு கொண்டபோது செல்போன் 

    ×