search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 230629"

    • தகவல் தெரிவித்தால் ரூ.30 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று தேசிய புலனாய்வு அமைப்பு அறிவித்திருந்தது.
    • தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் அதிரடியாக கைது செய்து இந்தியா அழைத்து வந்தனர்.

    ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் தினேஷ் கோபி. இவர் ஜார்க்கண்ட் விடுதலை புலிகள் என்ற அமைப்பை தொடங்கி சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்தார். பின்னர் அந்த இயக்கம் இந்திய மக்கள் விடுதலை முன்னணி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அந்த அமைப்பு மூலம் தொழில் அதிபர்களை மிரட்டி கோடி கணக்கில் அவர் சம்பாதித்து வந்தார். அவர் மீது ஜார்க்கண்ட், ஒடிசா, பீகார் மாநிலங்களில் 102 கொலை, கொள்ளை வழக்குகள் உள்ளன. அவர் பற்றி தகவல் தெரிவித்தால் ரூ.30 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று தேசிய புலனாய்வு அமைப்பு அறிவித்திருந்தது.

    இந்நிலையில் தினேஷ் கோபி பீகார் மாநில எல்லை அருகே நேபாளத்தில் இருப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு அவர் சீக்கியர் போன்று தன்னை மாற்றிக் கொண்டு ஓட்டல் ஒன்றை நடத்திக்கொண்டிருந்தார். அவரை தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் அதிரடியாக கைது செய்து இந்தியா அழைத்து வந்தனர்.

    • இந்திரா காலனி 1-வது வாா்டு பகுதியில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

    ஆத்தூர்:

    கெங்கவல்லி இந்திரா காலனி 1-வது வாா்டு பகுதியில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக போலீசா ருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது சாராயம் விற்றுக்கொண்டிருந்த விஜி (26) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

    • டீசல் திருடிய லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.
    • போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கரூர் :

    கரூர் சணப்பிரட்டி அருகே தனியார் லாரி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தநிறுவனத்தில் லாரி டிரைவராக பணியாற்றி வந்த புலியூர் ஆசாரியர் காலனியை சேர்ந்த ரவிக்குமார் (வயது 45). நிறுவனத்தில் இருந்து 25 லிட்டர் டீசலை திருடி உள்ளார். இதுகுறித்து நிறுவனத்தின் மேலாளர் பாலசுப்பிரமணி பசுபதிபாளையம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து ரவிக்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 2 பேர் அங்கிருந்த 85 கிலோ இரும்பு கம்பிகளை திருடிக் கொண்டு தப்ப முயன்றனர்.
    • அவர்கள் 2 பேரையும் பேலீசார் கைது செய்தனர்.

    ஓசூர்,

    ஓசூர் பழைய ஏ.எஸ்.டி.சி. அட்கோவை சேர்ந்தவர் சம்பத்குமார் (வயது 32). இவர் பேளகொண்ட ப்பள்ளியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்து வருகிறார்.

    நேற்று முன்தினம் இவர் பணியில் இருந்த போது உள்ளே நுழைந்த 2 பேர் அங்கிருந்த 85 கிலோ இரும்பு கம்பிகளை திருடிக் கொண்டு தப்ப முயன்றனர்.

    இதை கவனித்த சம்பத்குமார் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவர்களை பிடித்து மத்திகிரி போலீசில் ஒப்படைத்தார். போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் ஓசூர் கொத்தகொண்டப்பள்ளி ராபர்ட் (32), எஸ்.பி.எம். காலனி லோகேஷ்குமார் (22) என தெரிய வந்தது. அவர்கள் 2 பேரையும் பேலீசார் கைது செய்தனர்.

    • சந்தேகம் அடைந்த போலீசார் உடனடியாக கார் முழுவதும் சோதனை செய்தபோது கத்தி இருந்தது தெரிய வந்தது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து சுதாகர், ஹரிகிருஷ்ணன் ஆகியோரை கைது செய்தனர்.

    கடலூர்:

    கடலூர் புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி மேற்பார்வையில் சப்- இன்ஸ்பெக்டர் மகிபால் மற்றும் போலீசார் கடலூர் சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

    அவ்வழியாக வந்த காரினை நிறுத்தி சோதனை செய்த போது காரில் 4 வாலிபர்கள் இருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, திடீரென்று 2 வாலிபர்கள் காரில் இருந்து இறங்கி தப்பி ஓட்டினார்கள்.

    சந்தேகம் அடைந்த போலீசார் உடனடியாக கார் முழுவதும் சோதனை செய்தபோது கத்தி இருந்தது தெரிய வந்தது. உடனடியாக 2 வாலிபர்களை கைது செய்த போலீசார் காரை பறிமுதல் செய்தனர். அவர்களை கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    புதுவை மாநிலம் கரிக்கலாம்பாக்கம் சுதாகர் (வயது 21), புதுக்கடை சிங்கிரிகுடி ஹரி கிருஷ்ணன் (20) என்பது தெரிய வந்தது. காரின் பின்பக்கம் மற்றொரு கத்தி மறைத்து வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து காரில் இருந்து தப்பிஓடியவர்கள் ஜோசப் (28), அருண்பாண்டியன் (26) என்பதும் போலீசாருக்கு தெரிய வந்தது.

    புதுவை மாநிலத்தில் தாடி அய்யனார் மற்றும் ஜோசப் என்ற 2 ரவுடி கும்பல் இருந்து வருகின்றன. இதில் ஜோசப் அணியை சேர்ந்த அன்பரசனை கடலூர் அடுத்த சிங்கிரிகுடி பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தாடி அய்யனார் தரப்பினர் கொலை செய்து புதைத்தனர். இது குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில் அன்பரசனை கொலை செய்த தாடி அய்யனாரை கொலை செய்வதற்காக பழிவாங்கும் நோக்கத்துடன் காரில் கத்தியுடன் சுற்றி வந்ததும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    தப்பி சென்ற ஜோசப் மற்றும் அருண்பாண்டியன் ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து சுதாகர், ஹரிகிருஷ்ணன் ஆகியோரை கைது செய்தனர்.

    • 100-க்கு மேற்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல்
    • அனுமதியின்றி மது விற்பனை செய்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது

    நாகர்கோவில் :

    விழுப்புரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 20-க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். மேலும் தஞ்சாவூர் பகுதியில் டாஸ்மாக் பாரில் மது குடித்த 2 பேர் பலியானார்கள்.

    இதைத்தொடர்ந்து போலீசார் தமிழகம் முழு வதும் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். அனுமதியின்றி மது விற்பனை செய்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தர வின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    கோட்டார், வடசேரி பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்ட னர். அப்போது அனுமதி யின்றி மது விற்பனை செய்தவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களி டம் இருந்து மதுபாட்டில் களும் பறிமுதல் செய்யப் பட்டது.

    இதேபோல் தக்கலை, கன்னியாகுமரி, குளச்சல் சப் டிவிசன்களுக்கு உட் பட்ட பகுதியிலும் அனுமதி இன்றி மது விற்பனை செய்த 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    நேற்று ஒரே நாளில் நூற்றுக்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. டாஸ்மாக் பாரிலும் மது விற்பனை செய்தவர்களை போலீசார் கைது செய் துள்ளனர்.

    மது விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். மது விலக்கு போலீசாரும் மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வரு கிறார்கள். சாராயம் விற்பனை செய்யப்படு கிறதா? என்பது குறித்து மலையோர பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    அனுமதி இன்றி தொடர்ந்து மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீ சார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • வாலிகண்டபுரத்தில் லாட்டரி சீட்டு விற்றவர் கைது செய்யபட்டார்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அகரம்சீகூர்,

    பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் அடுத்துள்ள வாலிகண்டபுரம் பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் மங்கலமேடு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.அப்போது கடலூர் மாவட்டம் தொழுதூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் முத்தையா மகன் காசிநாதன் வயது (30) இவர் தனது இருசக்கர வாகனத்தில் லாட்டரி சீட்டு விற்பனைசெய்து கொண்டிருந்தார். இதனை தொடர்ந்து அவரை கையும் களவுமாக பிடித்த மங்களமேடு போலீசார், அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குழந்தைகளின் ஆபாச படங்களை இணையதளத்தில் பதிவிட்டோர் கண்டறியப்பட்டனர்.
    • கைதானவர்களில் சிலருக்கு குழந்தை கடத்தலிலும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டு உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் சமூக வலைதளங்கள் மூலம் பெண்கள், குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவுகள் கொடுக்கப்படுவதாக புகார்கள் எழுந்தது.

    இது தொடர்பாக கேரள போலீசில் குழந்தைகள் பாதுகாப்பு சிறப்பு பிரிவு உருவாக்கப்பட்டது. இவர்கள் சைபர்கிரைம் போலீசாருடன் இணைந்து குழந்தைகளுக்கு செக்ஸ் தொந்தரவு கொடுப்போர் மற்றும் அவர்களின் ஆபாச படங்களை சமூக வலைதளத்தில் பரப்புவோர் குறித்த தகவலை சேகரித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இது தொடர்பாக மாநிலம் முழுவதும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து 449 இடங்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் குழந்தைகளின் ஆபாச படங்களை இணையதளத்தில் பதிவிட்டோர் கண்டறியப்பட்டனர்.

    அவர்களில் 8 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இவர்களில் ஐ.டி. ஊழியர்களும் அடங்குவர். அவர்கள் அனைவரையும் ரகசிய இடத்திற்கு கொண்டு சென்ற போலீசார் அங்கு அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கைதானவர்களில் சிலருக்கு குழந்தை கடத்தலிலும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டு உள்ளது. எனவே இது தொடர்பாகவும் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • 65 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் மோட்டாம்பட்டி, பாச்சேரி பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வீட்டின் அருகில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்ததாக மோட்டாம்பட்டி கிராமத்தை சேர்ந்த சாமிதுரை (வயது38), பாச்சேரியை சேர்ந்த சக்தி (29) ஆகிய 2 பேர் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 65 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    • சபரிமலை கோவிலுக்கு சென்ற நாராயணன் நம்பூதிரி தலைமையிலான குழுவினர் பொன்னம்பலமேட்டில் அத்துமீறி நுழைந்து பூஜை செய்தனர்.
    • திருவிதாங்கூர் தேவசம்போர்டு, பொன்னம்பலமேட்டில் அத்துமீறி நுழைந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி போலீசில் புகார் செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்ற சென்னையை சேர்ந்த நாராயணன் நம்பூதிரி தலைமையிலான 5 பேர் கொண்ட குழுவினர் அங்குள்ள பொன்னம்பலமேட்டில் அத்துமீறி நுழைந்து பூஜை செய்தனர். இதனை வீடியோ எடுத்து சமூக வலைதளத்திலும் பதிவிட்டனர்.

    இது தொடர்பாக விசாரணை நடத்திய திருவிதாங்கூர் தேவசம்போர்டு, பொன்னம்பலமேட்டில் அத்துமீறி நுழைந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி போலீசில் புகார் செய்தனர். போலீசார் இந்த சம்பவத்திற்கு துணை போனதாக வனத்துறை ஊழியர்கள் உள்பட 3 பேரை கைது செய்தனர்.

    இந்த நிலையில் கேரள ஐகோர்ட்டு இந்த பிரச்சினையை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து கொண்டது. நேற்று இந்த வழக்கின் விசாரணை நடந்தது. பின்னர் இதுதொடர்பாக அரசு மற்றும் தேவசம்போர்ட்டு நிர்வாகத்திடம் உரிய விளக்கம் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    • பயணிகளின் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
    • அபீல் அபுபக்கர் கேரள மாநில போலீசாரால் தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என்பது தெரிந்தது.

    கேரளா மாநிலம் மலப்புரத்தை சேர்ந்தவர் அபீல் அபுபக்கர்(32). இவர் மீது கேரள மாநிலம் திருச்சூர் போலீசார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பாலியல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்து இருந்தனர்.

    ஆனால் அபீல் அபுபக்கர் போலீசிடம் சிக்காமல், வெளிநாட்டிற்கு தப்பி சென்றுவிட்டார். இந்நிலையில் கத்தார் நாட்டில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு வந்த பயணிகளின் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அப்போது அபீல் அபுபக்கர் கேரள மாநில போலீசாரால் தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என்பது தெரிந்தது. இதையடுத்து அவரை அதிகாரிகள் கைது செய்தனர். இதுபற்றி கேரளமாநில போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அபீல் அபுபக்கரை கைது செய்து அழைத்து சென்றனர்.

    • பெரியசாமி மளிகை கடைக்கு கடந்த 6 மாதத்திற்கு முன் அரிசி மூட்டைகள் சப்ளை செய்ததாக கூறப்படுகிறது.
    • சீனிவாசன் பல்லடம் போலீசில் புகார் அளித்தார்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையத்தில் பெரியசாமி என்பவர் மளிகை கடை நடத்தி வருகி றார். இந்த நிலையில் திருப்பூர் அருகே உள்ள மங்கலம் சின்னாண்டிபாளையத்தில் காரைக்குடியை சேர்ந்த சீனிவாசன்(வயது 48) என்பவர் அரிசி மண்டி நடத்தி வருகிறார். இவர் பெரியசாமி மளிகை கடைக்கு கடந்த 6 மாதத்திற்கு முன் அரிசி மூட்டைகள் சப்ளை செய்ததாக கூறப்படுகிறது.

    அந்த அரிசி மூட்டைகளுக்கு பணம் தராமல் பெரியசாமி தவணை சொல்லி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் பணத்தை வசூல் செய்வதற்காக வந்த சீனிவாசனை, பெரியசாமி தரப்பினர் தாக்கியுள்ளனர். அவர் வந்த காரையும் அடித்து நொறுக்கினர். இது குறித்து சீனிவாசன் பல்லடம் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் சீனிவாசனை தாக்கியவர்களை தேடி வந்த நிலையில், பெரியசாமியின் மளிகை கடையில் வேலை பார்க்கும் சின்னத்துரை(24) என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் .மேலும் இந்த வழக்கு சம்பந்தமாக தலைமறைவாக உள்ள சிலரை தேடி வருகின்றனர்.

    ×