search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 230629"

    • கடந்த 1-ந் தேதி முதல் நடத்தப்பட்ட சோதனையில் ரெயில் நிலையங்களில் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு மொத்தம் 121 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன.
    • ஒரு பெண் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    தமிழ்நாடு போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் ரெயில்வே கூடுதல் இயக்குனர் வனிதா மேற்பார்வையில், போலீஸ் சூப்பிரண்டு பொன்.ராமு கண்காணிப்பில் மற்றும் சென்னை சென்ட்ரல், எழும்பூர், சேலம், கோவை துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு அனைத்து ரெயில் நிலையங்களிலும் கஞ்சா கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 1-ந் தேதி முதல் நடத்தப்பட்ட சோதனையில் ரெயில் நிலையங்களில் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு மொத்தம் 121 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன.

    ஒரு பெண் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் வட மாநிலங்களில் இருந்து விஜயவாடா, ரேணிகுண்டா, மார்க்கமாக தமிழகத்திற்கு வரும் அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களிலும் கஞ்சா, குட்கா, புகையிலை, மதுபாட்டில்கள் கடத்தப்படுகிறதா என தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.

    • பண மோசடி வழக்கில் பா.ஜ.க. தலைவர் கைது நடவடிக்கையில் தாமதம் ஏன்? என கேள்வி எழுந்துள்ளது.
    • கோர்ட்டு விதித்த நிபந்தனைகளை பின்பற்றா ததால் சுரேஷ்குமாரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி நகர் பா.ஜ.க. துணை தலைவர் பாண்டி யன். கடந்த 2017-ம் ஆண்டு இவரது 2 மகன்க ளுக்கு கப்பல் துறை முகத்திலும், ரெயில் வேயிலும் அரசு வேலை வாங்கி தருவதாக திருத்தங்கல்லை சேர்ந்த பா.ஜ.க. மேற்கு மாவட்ட தலைவர் சுரேஷ்குமார், மேற்கு மாவட்ட செயலாளர் கலையரசன் ஆகியோர் ஆசை வார்த்தை கூறி யுள்ளனர்.

    இதனை நம்பிய பாண்டியன் 2 பேரிடமும் பல்வேறு தவணைகளில்

    ரூ.11 லட்சம் வரை கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக் கொண்ட அவர்கள் வேலை யும் வாங்கி தரவில்லை, பணத்தையும் திருப்பித் தரவில்லை. இதனால் தான் ஏமாற்றப் பட்டதை உணர்ந்த பாண்டியன் இது குறித்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையிடம் புகார் தெரிவித்தார். அதன்பின் சுரேஷ்குமாரும், கலைய ரசனும் ரூ.2 லட்சம் ரொக்கத்தை கொடுத்தனர். மீதமுள்ள பணத்திற்கு காசோலையை கொடுத்தனர். ஆனால் அந்த காசோலைகள் வங்கியில் பணம் இல்லாமல் திரும்பியது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பாண்டியன் பண மோசடி குறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷ்குமாரையும், கலையரசனையும் கைது செய்தனர்.

    இதற்கிடையில் இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு கடந்த டிசம்பர் மாதம் மதுரை ஐகோர்ட்டில் சுரேஷ்குமார் மனு தாக்கல் செய்தார். அதனை விசா ரித்து ஐகோர்ட்டு ஜாமீன் பெறுவதற்கு ரூ.5 லட்சத்து 50 ஆயிரத்தை விருதுநகர் மாவட்ட 2-வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் டெபாசிட் செய்ய வேண்டு மென உத்தரவிட்டது. அதற்கு கால அவகாசமும் தரப்பட்டது. ஆனால் சுரேஷ்குமார் டெபாசிட் பணத்தை செலுத்தவில்லை.

    இந்த நிலையில் மதுரை ஐகோர்ட்டு உத்தரவை ரத்து செய்யக்கோரி மீண்டும் சுரேஷ்குமார் கோர்ட்டில் மனு செய்தார். ஆனால் அந்த மனுவை உடனே வாபஸ் பெற்றார்.

    இதனைத்தொடர்ந்து சுரேஷ்குமார் கால அவகாசம் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்தார். இதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் தொகையை செலுத்த 2 வார காலம் அவகாசம் அளிப்பதாகவும், அப்போதும் டெபாசிட் செய்யாதபட்சத்தில் ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவு திரும்ப பெற்றதாக கருதப்படும் என்று தெரிவித்தது.

    இந்த நிலையில் 2 வார காலம் முடிந்த பின்பும் சுரேஷ்குமார் டெபாசிட் தொகையை செலுத்த வில்லை. இதையடுத்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நேற்று சுரேஷ்குமாரை அதிரடியாக கைது செய்தனர்.

    பண மோசடி வழக்கில் சுரேஷ்குமார் ஜாமீன் பெறுவதற்கு மதுரை ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டில் அடுத்தடுத்து மனு செய்ததால் போலீசார் கைது செய்வதில் தாமதம் ஏற்பட்டது. ஆனால் இந்த முறை கோர்ட்டு விதித்த நிபந்தனைகளை பின்பற்றா ததால் சுரேஷ்குமாரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

    • கடலூரில் புகையிலை பொருட்கள் கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • ரூ.11 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கடலூர்:

    கடலூர் முதுநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எழில்தாசன் தலைமையிலான போலீசார் இன்று காலை கடலூர் செல்லங்குப்பம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை மறித்து சோதனை செய்தனர். அதில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து மோட்டார் சைக்கிளில் வந்த நபரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் கடலூர் முதுநகர் பென்சனர் தெருவை சேர்ந்த புகழேந்தி (வயது 40) என்பதும், புகையிலை பொருட்களை கடத்தி வந்து விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து புகழேந்தியை கைது செய்தனர். மேலும் மோட்டார் சைக்கிளுடன், ரூ.11 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • போலீசுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.
    • போலீஸ் நிலையத்தில் பேசிக் கொள்ளலாம் என்று கூறினார்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி முத்திருளாண்டி சேர்வை தெருவை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (32). இவர் மனைவியுடன் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டு சண்டை போட்டுக் கொண்டிருந்தார்.

    அப்போது இருசக்கர வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீஸ்காரர் வெங்கடேசுக்கு ''ஹலோ போலீஸ்'' கொடுத்த தகவல் மூலம் அங்கு வந்தார். அவர் தம்பதியினரிடம் சண்டை போட வேண்டாம், போலீஸ் நிலையத்தில் பேசிக் கொள்ளலாம் என்று கூறினார்.

    அதற்கு ஆனந்தராஜ் எங்க குடும்ப பிரச்சினையில் தலையிட நீ யாருடா? என்று தகாத வார்த்தையில் பேசி, பணி செய்ய விடாமல் தடுத்தார். மேலும் இங்கிருந்து செல்லா விட்டால் கொலை செய்து விடுவேன் என்று அரிவாளை காட்டி போலீஸ்காரருக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து போலீஸ்காரர் வெங்கடேஷ் கமுதி போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீசுக்கு கொலை மிரட்டல் விடுத்த ஆனந்தராஜை கைது செய்தனர். 

    • கரூர் பகுதியில் மது விற்ற 12 பேர் கைது செய்யப்பட்டனர்
    • அவர்களிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    கரூர்,

    கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அடுத்த லாலாபேட்டை காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக மது விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அப்பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மது விற்ற மேட்டு மகாதானபுரம் பகுதியை சேர்ந்த அன்னக்கிளி (வயது55), நதியா (35), கிருஷ்ணமூர்த்தி (51), மதிவாணன் (55), வேங்கம்பட்டி செல்வராஜ் (38), பழைய ஜெயங்கொண்டம் ராஜூ (62) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் பஞ்சப்பட்டி பகுதியைச் சேர்ந்த கோபால் (54), மலர் (43), மேலும் மாயனூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மணவாசி கந்தசாமி (46), கீழடை முத்துசாமி (71), மாணிக்கபுரம் தங்கவேல் (59), சின்னகிணத்துப்பட்டி கோபால் (47) ஆகியோரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    • குடிபோதையில் தகராறில் ஈடுபட்டவர்கள் போலீசை கீழே தள்ளினர்
    • வழக்கு பதிந்து 5 பேரும் கைது செய்யப்பட்டனர்

    மணப்பாறை, 

    திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள கோவில்பட்டி சாலையில் சேதுரெத்தினபுரம் பிரிவு அருகே சிலர் குடி போதையில் பிரச்சனை செய்து கொண்டிருந்தனர். சம்பவம் பற்றி தகவல் அறிந்து சென்ற மணப்பாறை போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வரும் ராஜேந்திரன் என்பவர் பிரச்சனையில் ஈடுப்பட்டவர்களிடம் குடிப்போதையில் தகராறில் ஈடுபடுவது குறித்து கேட்ட போது அவரை கீழே தள்ளியதுடன், தகாத வார்த்தைகளால் பேசி கொலைமிரட்டல் விடுத்துள்ளனர். பின்னர் ராஜேந்திரன் அளித்த புகாரின் பேரில் பிரச்சனையில் ஈடுபட்ட 5 பேரை பிடித்து ேபாலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் ஜீவா தெருவை சேர்ந்த சரவணகுமார் (வயது 22), கரிக்கான் குளம் பகுதியை சேர்ந்த ஜீவா (20), ரஞ்சித் குமார் (23), சேதுரெத்தினபுரத்தை சேர்ந்த கோபிநாத் (23) மற்றும் ஜீவானந்தம் (20) என்பது தெரியவந்தது. பின்னர் இவர்கள் 5 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    • வீரமலையில் பகுதியில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக நாகரசம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து சாராயம் காய்ச்சி விற்ற சக்கரவர்த்தியை கைது செய்தனர்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த வீரமலையில் பகுதியில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக நாகரசம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து போலீசார் வீரமலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது வீரமலையை அடுத்த காட்டுகொல்லையில் உள்ள மலையடிவாரத்தில் அதேபகுதியைச் சேர்ந்த சக்கரவர்த்தி (வயது45) என்பவர் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வது தெரியவந்தது. உடனே போலீசார் அவரை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அங்கிருந்து தயார் நிலையில் இருந்து 2லிட்டர் சாராய பாட்டில்களையும், 50 லிட்டர் சாராய ஊறல் பேரல்களையும் கீழே கொட்டி அழித்தனர். மேலும், சாராயம் தயாரிப்பதற்காக வைத்திருந்த பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சாராயம் காய்ச்சி விற்ற சக்கரவர்த்தியை கைது செய்தனர். பின்னர் அவரை போச்சம்பள்ளி கோர்ட்டில் ஆஜர்படுத்தி கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைத்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நாராயணனும், அவரது குழுவினரும் பொன்னம்பல மேடு காட்டுக்குள் சென்று அங்கு பூஜை செய்துள்ளனர்.
    • வன ஊழியர்கள் ராஜேந்திரன் மற்றும் ஷாபு ஆகியோர் உதவி செய்தது தெரியவந்தது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள பொன்னம்பலமேட்டில் மகர விளக்கு திருவிழாவின் போது ஐயப்பன் ஜோதி வடிவில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.

    பொன்னம்பலமேட்டில் தெரியும் மகரஜோதி தரிசனத்தை காண லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள். இந்த பகுதி தடை செய்யப்பட்ட வனப்பகுதிக்குள் இருக்கிறது.

    இந்த பொன்னம்பலமேட்டில் ஒருவர் நுழைந்து பூஜை நடத்தும் காட்சிகள் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியானது. இது சபரிமலை கோவில் நிர்வாகிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதுதொடர்பாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தியதில் பொன்னம்பலமேட்டில் பூஜைகள் நடத்தியது சென்னையை சேர்ந்த நாராயணன் என தெரியவந்தது.

    நாராயணனும், அவரது குழுவினரும் பொன்னம்பல மேடு காட்டுக்குள் சென்று அங்கு பூஜை செய்துள்ளனர். அவர்கள் காட்டுக்குள் செல்ல வன ஊழியர்கள் சிலர் உதவி செய்துள்ளனர். அவர்கள் யார்? என்பது பற்றி விசாரணை நடந்தது.

    இதில் வன ஊழியர்கள் ராஜேந்திரன் மற்றும் ஷாபு ஆகியோர் உதவி செய்தது தெரியவந்தது. அவர்கள் இருவரையும் கேரள போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • குடிபோதையில் தகராறில் ஈடுபட்டவர்கள் போலீசை கீழே தள்ளினர்
    • வழக்கு பதிந்து 5 பேரும் கைது செய்யப்பட்டனர்

    மணப்பாறை,

    திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள கோவில்பட்டி சாலையில் சேதுரெத்தினபுரம் பிரிவு அருகே சிலர் குடி போதையில் பிரச்சனை செய்து கொண்டிருந்தனர். சம்பவம் பற்றி தகவல் அறிந்து சென்ற மணப்பாறை போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வரும் ராஜேந்திரன் என்பவர் பிரச்சனையில் ஈடுப்பட்டவர்களிடம் குடிப்போதையில் தகராறில் ஈடுபடுவது குறித்து கேட்ட போது அவரை கீழே தள்ளியதுடன், தகாத வார்த்தைகளால் பேசி கொலைமிரட்டல் விடுத்துள்ளனர். பின்னர் ராஜேந்திரன் அளித்த புகாரின் பேரில் பிரச்சனையில் ஈடுபட்ட 5 பேரை பிடித்து ேபாலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் ஜீவா தெருவை சேர்ந்த சரவணகுமார் (வயது 22), கரிக்கான் குளம் பகுதியை சேர்ந்த ஜீவா (20), ரஞ்சித் குமார் (23), சேதுரெத்தினபுரத்தை சேர்ந்த கோபிநாத் (23) மற்றும் ஜீவானந்தம் (20) என்பது தெரியவந்தது. பின்னர் இவர்கள் 5 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    • ஜாமீனில் திலக் வந்த நிலையில் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
    • கொலை சம்பவத்தில் தொடர்புடைய, தலைமறைவாகியுள்ள வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே மத்திகிரி பக்கமுள்ள சொப்பட்டியை சேர்ந்தவர் திலக் (24). ரவுடி ஆவார். கடந்த 12-ந் தேதி ஓசூர் பெரியார் நகர் டீக்கடை அருகில் இவரை, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்தனர். இந்த கொலை தொடர்பாக ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

    அதில் கொலை செய்யப்பட்ட திலக் மற்றும் அவரது நண்பர்கள் 5 பேர் சேர்ந்து கடந்த 1.1.2022 அன்று சொப்பட்டியை சேர்ந்த மோகன்பாபு என்பவரை கொலை செய்ததும், அந்த வழக்கில் திலக் உள்பட 6 பேரை மத்திகிரி போலீசார் கைது செய்ததும் தெரிய வந்தது. இந்த நிலையில் அவர்கள் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர்.

    இந்த நிலையில் ஜாமீனில் திலக் வந்த நிலையில் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து மோகன்பாபுவின் தந்தை திம்மராயப்பா என்பவரை ஓசூர் டவுன் போலீசார் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினார்கள்.

    அதில் தனது மகன் மோகன்பாபுவை கொலை செய்ததற்கு பழிக்கு பழி வாங்கும் விதமான தான் மத்திகிரியை சேர்ந்த சசிகுமார்(24) என்பவர் மூலம் மேற்கண்ட கொலையை செய்ததாக கூறியிருந்தார்.

    தொடர் விசாரணையில், திலக், டீ கடையில் இருந்த தகவலை, சசிகுமாருக்கு இவர்தான் தெரியபடுத்தினார் என்றும், திலக்கை கொல்ல சசிகுமாருக்கு திம்மராயப்பா பணம் கொடுத்ததும், தெரியவந்தது.

    இதையடுத்து, திம்மராயப்பா, மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த அவரது தம்பி மகன் சிவகுமார்(24) மற்றும் தின்னூரை சேர்ந்த வெங்கடேஷ் (25) ஆகிய 3 பேரும் நேற்று கைது செய்யப்பட்டனர். மேலும், முக்கிய குற்றவாளியான சசிகுமார், நேற்று சங்ககிரி கோர்ட்டில் சரணடைந்திருப்பதாக தெரியவந்துள்ளது.

    மேலும், இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய, தலைமறைவாகியுள்ள வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • ஓசூர் ஜுஜுவாடி சோதனைச்சாவடி பகுதியில் நேற்று மாலை சிப்காட் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
    • குட்கா பொருட்களுடன், ரூ.8 லட்சம் மதிப்புள்ள 2 கார்களையும் பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் செய்தனர்.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஜுஜுவாடி சோதனைச்சாவடி பகுதியில் நேற்று மாலை சிப்காட் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த 2 கார்களை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில், ரூ.3,54,000-மதிப்பிலான 615 கிலோ தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது, கண்டுபிடிக்கப்பட்டது.

    மேலும் விசாரணையில், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பிரதீப் சிங் (22)மற்றும் பரத் சிங் (40) ஆகிய இருவரும், கர்நாடக மாநிலம் பெங்களூரிலிருந்து சேலத்திற்கு விற்பனைக்காக 2 கார்களில் கடத்தி சென்றது, தெரியவந்தது. இதையடுத்து குட்கா பொருட்களுடன், ரூ.8 லட்சம் மதிப்புள்ள 2 கார்களையும் பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் செய்தனர்.

    • தகாத வார்த்தையால் திட்டி பெண்ணை தாக்க முயன்றவர் கைது செய்யப்ப்பட்டார்
    • உடையார்பாளையம் போலீசார் நடவடிக்கை

    பெரம்பலூர்,

    உடையார்பாளையம் தெருவை சேர்ந்த பரமேஸ்வரனின் மனைவி இசபெல்லா (வயது 38). கூலி தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியில் வசிக்கும் ரெங்கநாதனின் மகன் மணிகண்டனுக்கும்(29) இடையே நேற்று தகராறு ஏற்பட்டது. இதில் இசபெல்லாவை மணிகண்டன் தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இது குறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் இசபெல்லா புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×