search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 230629"

    • காரைக்காலில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 3 பேரை, காரைக்கால் நகர போலீசார் கைது செய்தனர்.
    • பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து, கஞ்சா விற்பனை நடந்து வருகிறது.

    புதுச்சேரி:

    காரைக்காலில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 3 பேரை, காரைக்கால் நகர போலீசார் கைது செய்தனர். காரைக்கால் மாவட்டத்தில், கடந்த சில மாதங்களாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து, கஞ்சா விற்பனை நடந்து வருகிறது. இதனை தடுக்க, மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன் உத்தரவின் பேரில், அந்தந்த போலீஸ் நிலைய போலீசார், தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டு ஒரு சிலரை கைது செய்து வருகின்றனர். இந்நிலையில், காரைக்கால் சமத்துவபுரம் பகுதியில், இளைஞர்கள் சிலர் கஞ்சா விற்பதாக, காரைக்கால் நகர போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், இன்ஸ்பெக்டர் லெனின் பாரதி, சப்.இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார், சமத்துவபுரம் பகுதிக்கு சென்றபோது, போலீசாரை பார்த்ததும், இளைஞர்கள் தப்பியோடினர். தொ டர்ந்து, அங்குள்ளோரிடம் விசாரணை நடத்தி தப்பிசென்ற தருமபுரம் செபஸ்தியார் கோவில் தெருவைச்சேர்ந்த ரவிராஜ்(வயது19), வில்பர்ராஜ்(23), ரஞ்சித்(23) ஆகிய 3 பேரை கைது செய்து, அவர்களிடமிருது, ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • ஒரு கட்டத்தில் இளம்பெண் பாண்டி முருகனுடனான கள்ளக்காதலை கைவிட்டு அவருடன் தனிமையில் இருப்பதையும் தவிர்த்தார்.
    • மிகுந்த மனவேதனை அடைந்த அந்த பெண் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    மேட்டுப்பாளையம்:

    பீகார் மாநிலத்தை சேர்ந்த 22 வயது பெண்ணும், அவரது கணவரும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அவர்கள் கடந்த 2021-ம் ஆண்டு கோவைக்கு வந்தனர்.

    பின்னர் அன்னூர் அருகே உள்ள கெம்பநாயக்கன் பாளையத்தில் வாடகை வீட்டில் தங்கி இருந்து கூலி வேலைக்கு சென்று வந்தனர்.

    இந்தநிலையில் அந்த பெண்ணுக்கு தேனி மாவட்டத்தை சேர்ந்த பாண்டி முருகன் (28) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர்.

    அப்போது பாண்டி முருகன் தனது செல்போனில் இளம்பெண்ணுடன் ஜாலியாக இருக்கும் ஆபாச வீடியோக்களை அவருக்கு தெரியாமல் எடுத்து வைத்து இருந்தார். பின்னர் இந்த வீடியோவை இளம்பெண்ணுக்கு அனுப்பி அவரை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்தார். மேலும் தனிமையில் இருக்கும் வீடியோக்களை அவரது கணவருக்கு அனுப்பி விடுவதாக கூறி இளம்பெண்ணை மிரட்டி நகை மற்றும் பணத்தை பறித்து சென்றார்.

    ஒரு கட்டத்தில் இளம்பெண் பாண்டி முருகனுடனான கள்ளக்காதலை கைவிட்டு அவருடன் தனிமையில் இருப்பதையும் தவிர்த்தார். இது அவருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து பாண்டி முருகன் ஆபாச வீடியோவை பெண்ணின் கணவருக்கு அனுப்பினார். இதனை பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார்.

    பின்னர் இது குறித்து தம்பதி கடந்த 17-ந் தேதி கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் பாண்டி முருகனின் தொந்தரவு அதிகரிக்கவே தம்பதி அவருக்கு பயந்து கணேசபுரம் பகுதியில் வசித்து வந்தனர். சம்பவத்தன்று அதிகாலை மீண்டும் அவர் இளம்பெண்ணின் கணவருக்கு அவரது மனைவியின் ஆபாச வீடியோக்களை அனுப்பினார். இதனை பார்த்து அந்த பெண் அதிர்ச்சியடைந்தார்.

    இதன் காரணமாக மிகுந்த மனவேதனை அடைந்த அந்த பெண் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் இது குறித்து அன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து அன்னூர் போலீசார் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து, அவரது தற்கொலைக்கு காரணமாக இருந்த பாண்டி முருகன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.

    கொச்சியில் பதுங்கி இருந்த அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • பள்ளி மாணவியை திருமணம் செய்த சிறுவன் கைது செய்யபட்டான்
    • இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    கரூர்:

    கரூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவியை, புலியூர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன், திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்துள்ளான். இது குறித்து, தான்தோன்றிமலை கிராம நல அலுவலர் விஜயா, கரூர் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அதன்பேரில், சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பிவைத்தனர்.


    • மாயனூர் அருகே அரிவாளுடன் சுற்றிய தொழிலாளி கைது செய்யப்பட்டார்
    • இவரது ஆடு திருடுபோனதாக கூறப்படுகிறது.

    கரூர்:

    மாயனூரை அடுத்த, பிச்சம்பட்டி, குடி தெருவை சேர்ந்தவர் வீரப்பன் (வயது 45), கூலி தொழிலாளி. இவரது ஆடு திருடுபோனதாக கூறப்படுகிறது.இந்நிலையில், கடந்த 19ம் தேதி மதியம் 1:00 மணியளவில் பிச்சம்பட்டி, சின்ன வாய்க்கால் பாலம், சுந்தரராஜ் என்பவரின் தென்னந்தோப்பு பகுதியில், வீரப்பன் அரிவாளுடன், பொதுமக்களை தகாத வார்த்தை களால் திட்டிக்கொண்டு, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தி கொண்டிருந்தார். மேலும், கொலை மிரட்டலும் விடுத்துக் கொண்டிருந்தார். தகவல் அறிந்த மாயனூர் சப் இன்ஸ்பெக்டர் காளிமுத்து, வீரப்பனை கைது செய்து, அவரிடமிருந்த அரிவாளை பறிமுதல் செய்தனர்.




    • சசிகலா (வயது 35). இவருடைய மகள் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 தேர்வு எழுதியுள்ளார்.
    • இவரை கடந்த 10-ந்தேதி முதல் காணவில்லை.

    கள்ளக்குறச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள பெரிய சிறுவத்தூர் கிராமத்தை சேர்ந்த சசிகலா (வயது 35). இவருடைய மகள் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 தேர்வு எழுதியுள்ளார். நீட் தேர்வு பயிற்சி வகுப்புக்கு தினமும் ஆத்தூர் சென்று வந்த நிலையில், இவரை கடந்த 10-ந்தேதி முதல் காணவில்லை. இது குறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இதில் அதே கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் இளவரசன் (19) என்பவர் மாணவியை கடத்திச் சென்றது போலீசாருக்கு தெரியவந்தது. இந்நிலையில் மாணவியை கடத்தி சென்று தலைமறைவாக இருந்த கல்லூரி மாணவன் இளவரசனை போலீசார் கண்டுபிடித்தனர். அவர்களை சின்னசேலம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.  பின்னர் இளவரசன் மீது கடத்தல் வழக்கு பதிவு செய்து கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். அந்த மா ணவியை கள்ளக்குறிச்சி யில் உள்ள காப்பகத்தில் சேர்த்தனர்.

    • அறந்தாங்கி அருகே வீட்டில் தூங்கிய பெண்ணிடம் 20 பவுன் சங்கிலி பறித்த 3 வாலிபர்கள் அதிரடி கைது
    • இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகேயுள்ள கிடங்கிவயல் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் ஆவுடையார் கோவிலில் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். இவரது மனைவி மஞ்சுளாதேவி (வயது 40). இவர்கள், குடும்பத்துடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது 3 மர்ம ஆசாமிகள் வீ்ட்டிற்குள் புகுந்து மஞ்சுளாதேவி கழுத்தில் கிடந்த 20 பவுன் தங்க சங்கிலியை பறித்துள்ளனர்.இதையடுத்து மஞ்சுளாதேவியின் சத்தத்தை கேட்டு கண்விழித்த ஆறுமுகம், மர்ம ஆசாமிகளை பிடிக்க முயன்ற போது அவர்கள் தங்க சங்கிலியுடன் அங்கிருந்து தப்பி ஓடினர்.அப்போது ஆறுமுகமும், அப்பகுதி பொதுமக்கள் மற்றும் தகவல் அறிந்த ஆவுடையார்கோவில் போலீசார் ஆகியோர் தப்பியோடிய மர்ம ஆசாமிகளை விரட்டி பிடித்தனர்.

    பின்னர் போலீசார் அவர்களை கைது செய்து ஆவுடையார்கோவில் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் தஞ்சாவூர் மனோஜ்பட்டியை சேர்ந்த ரவி மகன் பிரபாகரன் (30), ராமசாமி மகன் ரமேஷ் (33), சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் பிரபாகரன் (25) என்பது தெரியவந்தது.இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மர்ம ஆசாமிகளிடம் இருந்து 20 பவுன் தங்க சங்கிலியை போலீசார் கைப்பற்றினர்.

    • மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை அடித்துக் கொன்ற கணவர் கைது செய்யபட்டார்
    • போலீசார் இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் கோவில் எசனை கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன் (வயது 44). இவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த லாரி டிரைவரான விஜயகாந்த் (40) என்பவரது மனைவிக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இதனை அறிந்த விஜயகாந்த் மனோகரனை பலமுறை கண்டித்தார். ஆனால் அவர் தன்னை திருத்திக்கொள்ள வில்லை.இதற்கிடையே மனைவியும் திருந்தாததால் விஜயகாந்த் தனது மனைவியை பிரிந்தார்.

    கணவர் கைவிட்ட நிலையில் விஜயகாந்தின் மனைவி தனியார் தொலைக்காட்சி தொடரில் குடும்ப பிரச்சினையை தீர்த்து வைக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதன் மூலம் பிரிந்த தம்பதியினர் மீண்டும் சேர்ந்தனர். இதையடுத்து அவர்கள் சென்னையிலேயே வசித்து வந்தனர்.தற்போது பிரச்சினை தீர்ந்து விட்டதால், நாம் சொந்த ஊருக்கு செல்வோம் என்று கூறியதின் பேரில் மீண்டும் அவர்கள் எசனை கிராமத்திற்கு வந்தனர். இதனை அறிந்த மனோகரன் தனது வேலையை மீண்டும் காட்ட தொடங்கினார்.

    நேற்று முன்தினம் நள்ளிரவில் அளவுக்கு அதிகமான மது போதையில் இருந்த அவர் விஜயகாந்தின் வீட்டிற்கு சென்று கதவை தட்டியுள்ளார். இருந்தபோதிலும் வீட்டில் தனியாக இருந்த விஜயகாந்த்தின் மனைவி கதவை திறக்கவில்லை. இதையடுத்து மனோகரன் அந்த வீட்டின் வாசலிலியே படுத்து தூங்கிவிட்டார். அதிகாலையில் இதைப்பார்த்த விஜயகாந்தின் தந்தை சின்னதுரை அவரை எழுப்பி, அவரது வீட்டில் கொண்டுபோய் விட்டார்.

    வேலை முடிந்து வீடு திரும்பிய விஜயகாந்த் இந்த சம்பவம் பற்றி அறிந்து கடும் ஆத்திரம் அடைந்தார். பின்னர் நேற்று மதியம் லாரி டயர் மாற்ற பயன்படுத்தும் லிவரை எடுத்து கொண்டு மனோகரனை தேடி உள்ளார். அப்போது மனோகரன் அதே கிராமத்தில் உள்ள அய்யனார் கோவிலில் மதுபோதையில் படுத்து இருந்தார். அப்போது விஜயகாந்த் தான் வைத்து இருந்த லிவரால் அவரை தலையில் சரமாரியாக தாக்கினார். இதில் மனோகரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த வெங்கனூர் போலீசார் விறைந்து சென்று மனோகரன் உடலை கைப்பற்றி பிரேத சோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து விஜயகாந்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


    • ஆண்டிமடம் அருகே மது போதையில் மனநலம் பாதித்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தவர் கைது செய்யபட்டார்
    • இதுகுறித்து சத்யாவின் கணவர் ரங்கநாதன் ஆண்டிமடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    ஆண்டிமடம்:

    அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் விளந்தை அருகே உள்ள காலனி தெருவை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 35). இவரது எதிர்வீடடில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்ட மற்றொரு சமூகத்தை சேர்ந்த திருமணமான சத்யா (50) என்ற பெண்ணை மது போதையில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.அந்தப் பெண் சத்தம் போடவே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்தபோது ராஜேஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து சத்யாவின் கணவர் ரங்கநாதன் ஆண்டிமடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி (ஆண்டிமடம் பொறுப்பு) ராஜேஷ் என்பவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். சத்யா, ரங்கநாதனுக்கு கல்லூரி படிக்கும் வயதில் ஒரு மகன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


    • கடந்த பிப்ரவரி மாதம் குணாவை, சின்னத் தம்பி தரப்பினர் வெட்டி கொலை செய்தனர்.
    • தாக்குதல் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது கூலிப்படையை சேர்ந்தவர்களும் தாக்குதலில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    மதுரை:

    திண்டுக்கல் வேடப்பட்டி அபிராமி நகரை சேர்ந்தவர்கள் குணா, சின்னதம்பி.இவர்களின் கூட்டாளிகள் யுவராஜ்குமார், விக்னேஷ் குமார். இவர்கள் 4 பேரும் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் மீது திண்டுக்கல் தாலுகா போலீசில் பல வழக்குகள் உள்ளன.

    இந்த நிலையில் குணா, சின்னதம்பி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் குணாவை, சின்னத் தம்பி தரப்பினர் வெட்டி கொலை செய்தனர்.

    இதைத்தொடர்ந்து கடந்த மார்ச் 1-ந்தேதி மதுபான பாருக்கு சென்றபோது சின்னத்தம்பிக்கும், யுவராஜ் குமாருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து சின்ன தம்பி, அவரது தம்பி பரமசிவன் என்ற குட்டி ஆகியோர் யுவராஜ்குமார், விக்னேஷ் குமார் ஆகியோரை தாக்கினர்.

    இந்த சம்பவத்துக்கு பழிக்கு பழி வாங்கும் வகையில் மார்ச் 2-ஆம் தேதி யுவராஜ்குமார், விக்னேஷ் குமார் தரப்பினர் சின்ன தம்பியை வெட்டி கொலை செய்தனர்.

    இது பற்றிய புகாரின் பேரில் திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து யுவராஜ்குமார், விக்னேஷ் குமார் ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் 2பேரும் மார்ச் 6-ஆம் தேதி விருதுநகர் மாவட்ட ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    யுவராஜ்குமாரும், விக்னேஷ்குமாரும் காயமடைந்து இருந்ததால் அவர்கள் சிகிச்சைக்காக மார்ச் 22-ந்தேதி விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் ஆஸ்பத்திரியின் 4-வது தளத்தில் உள்நோயாளிகளாக பொது வார்டியில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். கைதிகள் 2 பேருக்கும் திண்டுக்கல் ஆயுதப்படை சப்-இன்ஸ்பெக்டர் பால் செல்வம் தலைமையில் போலீசார் பாதுகாப்பு அளித்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 18-ஆம் தேதி இரவு 7 மணி அளவில் 2 சொகுசு கார்களில் 8 பேர் கும்பல் வந்தது. அவர்களில் 4 பேர் யுவராஜ் குமார், விக்னேஷ்குமார் அனுமதிக்கப்பட்டிருந்த வார்டுக்குள் புகுந்து கொலை வெறி தாக்குதல் நடத்தினர். 4 பேர் கும்பல் வார்டுக்குள் சென்றதும் யுவராஜ்குமார் தலையில் அரிவாளால் வெட்டியுள்ளது. அதனை தடுக்க முயன்ற ஆயுதப்படை போலீஸ் காரர்கள் சிலம்பரசன், அழகுராஜ் ஆகியோர் மீது மிளகாய் பொடியை தூவி தாக்கியுள்ளனர். இருந்த போதிலும் போலீசார் விக்னேஷ்குமாரை மீட்டு ஒரு அறையில் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.

    போலீஸ்காரர் சிலம்பரசன் துப்பாக்கியால் சுட்டு விடுவேன் என்று மிரட்டியதால் பயந்து போன 4 பேரும் தப்பி சென்று விட்டனர்.

    இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் திண்டுக்கல்லை சேர்ந்த போத்தி ராஜ், நட்டு ராயன், அருண், சின்ன தம்பியின் தம்பி விஜி, ஒளிகை ராமச்சந்திரன், சோனையன் உள்ளிட்ட 7பேர் என்பதும், மற்றொருவர் கார் டிரைவர் என்றும் கூறப்படுகிறது.

    தாக்குதல் நடத்திய கும்பலை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் நேற்று திண்டுக்கல்லை சேர்ந்த பாண்டியம்மாள், குமார் உள்ளிட்ட 6பேரை பிடித்து வந்து விசாரணை நடத்தினர். இதில் அவர்களுக்கு சம்பந்தமில்லை என்று தெரிய வந்ததால் அவர்களை விடுவித்து விட்டனர்.

    தாக்குதல் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது கூலிப்படையை சேர்ந்தவர்களும் தாக்குதலில் ஈடுபட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் மதுரை மாவட்டம் தனக்கன்குளம் அம்பேத்கர் நகரை சேர்ந்த சரவணன் (29) தங்கமலை (27)ஆகிய 2 பேர் கூலிப்படைகளாக செயல்பட்டுள்ளனர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய கார் டிரைவர் உள்பட 6பேரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

    • படுகாயமடைந்த கண்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த கொலை தொடர்பாக மேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    • தனிப்படை போலீசார் சென்னை சென்று, அங்கு பதுங்கியிருந்த ஜெகதீஷ் உள்பட 3 பேரை கைது செய்தனர்.

    மேலூர்:

    சிவகங்கை மாவட்டம் கட்டாணிபட்டி அருகே உள்ள பொன்குண்டு பட்டியை சேர்ந்தவர் கண்ணன்(வயது55). இவர் நிலத்தை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார்.

    இவரது மனைவி முருகேஸ்வரி. இவர் கரூரில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். மாதத்தின் பெரும்பாலான நாட்களில் சொந்த ஊரில் தங்கும் கண்ணன் மேலூருக்கு வேலை நிமித்தமாக சென்று வருவது உண்டு.

    அதன்படி சம்பவத்தன்று மதியம் கண்ணன் தனது மொபட்டில் மேலூருக்கு வந்து கொண்டிருந்தார். நான்கு வழிச்சாலையில் உள்ள ஆட்டுக்குளம் பகுதியில் வந்தபோது, காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் கண்ணனை மறித்து சரமாரியாரக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியது.

    இதில் படுகாயமடைந்த கண்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த கொலை தொடர்பாக மேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதனிடையே கண்ணனை கொலை செய்து காரில் தப்பிய கொலையாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில், மேலூர் இன்ஸ்பெக்டர் மன்னவன், சப்-இன்ஸ்பெக்டர் குமரகுரு ஆகியோர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் கொலை தொடர்பாக தீவிர விசாரணை நடத்தினர்.

    அப்போது சென்னை எண்ணூரை சேர்ந்த பன்னீர்செல்வத்துக்கும், கண்ணனுக்கும் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக பிரச்சினை இருந்ததும், அது தொடர்பாக அவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதும், அதில் ஏற்பட்ட முன்விரோதத்தில் பன்னீர்செல்வத்தின் மகன் ஜெகதீஷ் (வயது 28), அவரது ஆதரவாளர்கள் வினோத், மில்டன் உள்பட 5 பேர் கண்ணணை கொலை செய்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து தனிப்படை போலீசார் சென்னை சென்று, அங்கு பதுங்கியிருந்த ஜெகதீஷ் உள்பட 3 பேரை கைது செய்தனர். இந்த கொலை தொடர்பாக தேடப்பட்ட மேலும் 2பேர், ஏற்கனவே பேரையூர் கோர்ட்டில் சரண் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வீடுகட்டும் திட்டத்தின் கீழ் இதுவரை சிறுமாங்காடு கிராமத்திற்கு எந்த ஒரு பணி ஆணையும் வழங்கப்படவில்லை.
    • போலி ஆணையை அச்சடித்து கொடுத்தது யார்? இதன் பின்னணியில உள்ளவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு அரசு மானியத்துடன் வீடு கட்டுவதற்கு பணி ஆணை தற்போது வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் ஊராட்சி மன்ற தலைவரும் ஸ்ரீபெரும்புதூர் தி.மு.க. ஒன்றிய துணை செயலாளருமான சுபரஞ்சனியின் கணவர் கன்னியப்பன் தங்களது கிராமத்தில் 19 பேருக்கு வீடுகள் கட்டுவதற்கான ஆணை உள்ளதாக மாவட்ட தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் நிர்வாக பொறியாளரான அழகுபொன்னையாவிடம் வழங்கினார். இதேபோல் பயனாளிகளுக்கும் இந்த ஆணை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதனை அழகு பொன்னையா ஆய்வு செய்தபோது அந்த ஆணை போலியானது என்பது தெரியவந்தது. இதுகுறித்து அவர், காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் செய்தார். அதில் வீடுகட்டும் திட்டத்தின் கீழ் இதுவரை சிறுமாங்காடு கிராமத்திற்கு எந்த ஒரு பணி ஆணையும் வழங்கப்படவில்லை. ஆனால் என்னுடைய பெயரில் போலி ஆணை தயாரித்து பயனாளிகளிடம் கொடுத்து ஏமாற்றி உள்ளனர் என்று தெரவித்து இருந்தார்.

    இதைத்தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி போலி ஆணை வழங்கியதாக ஊராட்சி தலைவியின் கணவர் கன்னியப்பன் மற்றும் 5-வது வார்டு உறுப்பினர் பிலோமினாவின் கணவரான தி.மு.க.வை சேர்ந்த வாசு ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது நான்கு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    அவர்களுக்கு போலி ஆணையை அச்சடித்து கொடுத்தது யார்? இதன் பின்னணியில உள்ளவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வீடுகட்ட போலி ஆணை கொடுத்த விவகாரத்தில் ஊராட்சி தலைவியின் கணவர் மற்றும் அவரது நண்பர் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மருங்கூரை சேர்ந்தவர் பவுனம்மாள் (வயது 85).
    • இது குறித்து முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மருங்கூரை சேர்ந்தவர் பவுனம்மாள் (வயது 85). கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்த இவரை கொலை செய்து. இவர் அணிந்திருந்த 3 பவுன் தோடு, செயின் ஆகியவைகளை மர்ம ஆசாமிகள் கொள்ளை யடித்து சென்றனர். இது குறித்து முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த கொலை, கொள்ளை வழக்கில் கடந்த 3 ஆண்டு காலமாக துப்பு ஏதும் கிடைக்காமல் இருந்து வந்தது. இதனைத் தொடர்ந்து கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக ராஜாராம் பொறுப்பேற்ற பிறகு, நிலுவையில் உள்ள வழக்குகளை துப்பு துலக்கிவதில் தீவிரம் காட்டினார். அதன்படி இந்த வழக்கின் சிறப்பு விசாரணை அதிகாரியாக பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா நியமிக்கப்பட்டார்.  பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்திய போலீசார், இந்த கொலை வழக்கில் முக்கிய குற்ற வாளிகளாக மனப்பாக் கத்தை சேர்ந்த விஸ்வநாதன் (வயது 32), மேல் அருங்கு ணத்தை சேர்ந்த வேலாயுதம் ஆகிய 2 பேரையும் அடை யாளம் கண்டனர். இதையடுத்து அந்த 2 வாலிபர்களையும் போலீ சார் அதிரடியாக கைது செய்து விசாரித்தனர். விசார ணையில், மூதாட்டி யை கொலை செய்து கொள்ளையடித்ததை 2 வாலிபர்களும் ஒத்துக் கொண்டனர்.

    மூதாட்டியை கொலை செய்து நகையை கொள்ளை யடித்த 2 நபர்களையும் பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மூன்று ஆண்டு களுக்கு முன்பு நடந்த கொலை, கொள்ளை வழக்கில் துப்பு துலக்கிய பண்ருட்டி போலீசாரை கடலூர் சூப்பிரண்டு ராஜா ராம் வெகுவாக பாராட்டி னார்.

    ×