search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 230640"

    • கோபி தனது 2 வயது பெண் குழந்தையின் காலை பிடித்து சுவற்றில் அடித்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து கோபியை ஜெயிலில் அடைத்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், விஜயவாடா மாவட்டம், மங்களகிரியை சேர்ந்தவர் கோபி. இவரது மனைவி மவுனிகா. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    ஆண் குழந்தை வேண்டும் என விரும்பிய கோபிக்கு அடுத்தடுத்து 2 பெண் குழந்தைகள் பிறந்ததால் அவர்கள் மீது வெறுப்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோபி தனது 2 வயது பெண் குழந்தையின் காலை பிடித்து சுவற்றில் அடித்தார். இதில் பெண் குழந்தை படுகாயம் அடைந்தது.

    இதனைக் கண்ட அவரது மனைவி மவுனிகா குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக விஜயவாடா ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.அங்கு சிறுமி சிகிச்சை பலனின்றி இறந்தது.

    இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து கோபியை ஜெயிலில் அடைத்தனர்.

    தண்டனை பெற்று வரும் கோபியை ஜாமினில் எடுக்க அவரது உறவினர் சாய் சந்தீப் முயற்சி செய்து வந்தார். இதனை அறிந்த கோபியின் மாமனார் சத்திய நாராயணா மற்றும் அவரது மகன் வெங்கட கிருஷ்ணா ஆகியோர் கோபியை ஜாமீனில் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது சாய் சந்தீப், சத்திய நாராயணாவை கல்லால் தாக்கினார். இதில் சத்திய நாராயணா படுகாயம் அடைந்தார். இதனைக் கண்டு ஆத்திரம் அடைந்த அவரது மகன் வெங்கட கிருஷ்ணா தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சாய் சந்தீப்பை ஓட ஓட விரட்டிச் சென்று கழுத்தை அறுத்தார்.

    இதில் சாய் சந்தீப் ரத்த வெள்ளத்தில் துடி துடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதையடுத்து வெங்கட கிருஷ்ணா மங்களகிரி போலீசில் சரணடைந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து வெங்கடகிருஷ்ணாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இளம்பெண்ணின் மாமாவான விக்னேஷ் வீட்டிற்குள் சென்று அரிவாளை எடுத்து வந்து, பிரசாந்த்தை சரமாரியாக வெட்டினார்.
    • போலீசார் விரைந்து வந்து இறந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கோவை:

    கோவை சுந்தராபுரம் காந்திநகரை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மகன் பிரசாந்த்(வயது21).

    இவர் லோடுமேனாக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு பிரசாந்துக்கு செட்டிப்பாளையம் அருகே உள்ள மயிலாடும்பாறையை சேர்ந்த 18 வயது இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.

    முதலில் நட்பாக பழகி வந்த இவர்களுக்குள் காதல் மலர்ந்தது. இதையடுத்து கடந்த 3 வருடங்களாக 2 பேரும் ஒருவருக்கொருவர் தீவிரமாக காதலித்து வந்தனர்.

    இதற்கிடையே இவர்களது காதல் விவகாரம் 2 பேரின் பெற்றோருக்கும் தெரியவந்தது. இதையடுத்து 2 வீட்டு பெற்றோரும், பிரசாந்த் மற்றும் இளம்பெண்ணை அழைத்து பேசினர்.

    அப்போது உங்களது காதலை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். கொஞ்ச நாட்கள் சென்ற பின்னர் உங்கள் இருவருக்கும் திருமணமும் செய்து வைக்கிறோம். அதுவரை பொறுத்திருங்கள் என தெரிவித்தனர்.

    இதையடுத்து காதலர்கள் 2 பேரும் அடிக்கடி போனில் பேசி தங்களது காதலை வளர்த்தனர்.

    இன்று பிரசாந்தின் காதலிக்கு பிறந்த நாள். இதனால் நள்ளிரவில் தனது காதலியின் பிறந்த நாளை கொண்டாட பிரசாந்த் முடிவு செய்தார். இதுகுறித்து தனது நண்பர்களிடம் தெரிவித்து, அதற்கான ஏற்பாடுகளை செய்தார்.

    அதன்படி நேற்று இரவு பிரசாந்த், தனது நண்பர்களான தரணிபிரசாத், குணசேகரன், அபிஷேக் ஆகியோருக்கு தனது காதலியின் பிறந்த நாளையொட்டி விருந்து கொடுத்தார். அனைவரும் ஒன்றாக சேர்ந்து மதுகுடித்தனர்.

    அப்போது நாம் கேக் வாங்கி கொண்டு, நேராக எனது காதலியின் வீட்டிற்கு சென்று, கேக் வெட்டி பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவோம் என பிரசாந்த் தெரிவித்தார். நண்பர்களும் அவருடன் வர சம்மதித்தனர்.

    பின்னர் பிரசாந்த் மற்றும் அவரது நண்பர்கள் உள்பட 4 பேரும் ஒரே மொபட்டில் செட்டிப்பாளையம் அருகே உள்ள மயிலாடும்பாறைக்கு நள்ளிரவில் சென்றனர். அப்போது தாங்கள் வாங்கி வைத்திருந்த பிறந்த நாள் கேக்கினையும் எடுத்து சென்றிருந்தனர்.

    மயிலாடும்பாறைக்கு சென்றதும், நேராக பிரசாந்த், தனது காதலியின் வீட்டிற்கு சென்றார். அப்போது நள்ளிரவு நேரம் என்பதால் வீட்டில் இருந்த அனைவரும் கதவை பூட்டி விட்டு தூங்கி விட்டனர்.

    கதவு பூட்டி கிடந்ததால், பிரசாந்த் மற்றும் அவரது நண்பர்கள் இளம்பெண்ணின் பெயரை சொல்லி வெளியில் வா என கூச்சல் எழுப்பினர்.

    ஆனால் யாரும் வராததால் பிரசாந்த் உள்பட 4 பேரும் வீட்டின் சுவர் ஏறி உள்ளே குதித்தனர். பின்னர் வீட்டின் அலார மணியை அழுத்தி கொண்டே, வீட்டில் யாரும் இல்லையா? வெளியில் வாருங்கள் என இளம்பெண்ணின் பெயரை சொல்லி அழைத்து வா நாம் உனது பிறந்த நாளை கொண்டாடலாம் என பிரசாந்த் கூச்சல் போட்டார்.

    சத்தம் கேட்டு, பெண்ணின் தந்தை மகாதேவன், பெண்ணின் தாய்மாமா விக்னேஷ் ஆகியோர் கதவை திறந்து கொண்டு வெளியில் வந்தனர். இவர்கள் 2 பேரும் கால் டாக்சி டிரைவர்களாக உள்ளனர்.

    வீட்டிற்கு வெளியில் வந்த அவர்கள், வீட்டின் முன்பு பிரசாந்த் நின்றிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    நாங்கள் உனது காதலை ஏற்று கொண்டோமே எதற்காக நள்ளிரவு நேரத்தில் வந்து இப்படி சத்தம் போடுகிறாய் என பெண்ணின் தந்தை மகாதேவன் கேட்டார். அதற்கு பிரசாந்தும், அவரது நண்பர்களும், இன்றைக்கு உங்கள் மகள் பிறந்தநாள் அதனை கொண்டாட வந்துள்ளோம். வெளியில் வர சொல்லுங்கள் சேர்ந்து கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடலாம் என்றனர்.

    அதற்கு இந்த நேரத்தில் வேண்டாம். நாளை பார்த்து கொள்ளலாம். முதலில் இங்கிருந்து கிளம்புங்கள் என தெரிவித்தனர். ஆனால் அவர்கள் செல்ல மறுத்து சத்தம் போட்டபடியே இருந்தனர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

    வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த இளம்பெண்ணின் மாமாவான விக்னேஷ் வீட்டிற்குள் சென்று அரிவாளை எடுத்து வந்து, பிரசாந்த்தை சரமாரியாக வெட்டினார்.

    மேலும், பெண்ணின் தந்தை மகாதேவன், அங்கிருந்த மரக்கட்டையை எடுத்து பிரசாந்தை விக்னேசுடன் சேர்ந்து தாக்கினார். இதில் தோள்பட்டை, மார்பு பகுதிகளில் பலத்த காயம் அடைந்த பிரசாந்த் சம்பவ இடத்தில் மயங்கி விழுந்தார்.

    இதனை பார்த்ததும் அதிர்ச்சியான அவரது நண்பர்கள் பிரசாந்த்தை தாங்கள் வந்த மொபட்டில் தூக்கி கொண்டு ஆஸ்பத்திரிக்கு விரைந்தனர்.

    ஆனால் வரும் வழியில் மொபட் பெட்ரோல் இல்லாமல் நின்று விட்டது. இதனால் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து, அதன் மூலம் பிரசாந்த்தை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் பிரசாந்த் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து செட்டிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் விரைந்து வந்து இறந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து வாலிபரை கொன்ற பெண்ணின் தாய்மாமாவான விக்னேசை கைது செய்தனர். தொடர்ந்து தலைமறைவான பெண்ணின் தந்தையை தேடி வருகின்றனர்.

    பிரசாந்த் வெட்டப்பட்ட போது அவரது காதலியும் சம்பவ இடத்தில் இருந்தார். அவர் கண்முன்பு பிரசாந்த் தாக்கப்பட்டார். காதலி எவ்வளவோ தடுத்தும் பிரசாந்தை காப்பாற்ற முடியவில்லை.பிரசாந்த் உயிரிழந்ததை அறிந்து அவர் கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

    • தண்ணீர் எடுத்து வந்த போது கைபட்ட சிறிய தகராறு கொலையில் முடிந்து விட்டது.
    • மதுரவாயல் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. உதவி கமிஷனர் சுப்பிரமணியன், இன்ஸ்பெக்டர் சிவ ஆனந்த் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    போரூர்:

    மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம், கோவிந்தப்பன் நாயக்கர் தெருவை சேர்ந்தவர் அங்கப்பன் (வயது65). இவரது சகோதரர்கள் முருகேசன், முனுசாமி. அண்ணன்-தம்பிகள் 3பேரும் அருகருகே குடும்பத்துடன் தனித் தனியாக வசித்து வருகின்றனர்.

    அங்கப்பன் குடும்பத்தினருக்கும் அவரது அண்ணன் முருகேசன் குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தாக தெரிகிறது.

    நேற்று காலை அங்கப்பனின் மகள் தண்ணீர் எடுக்க வீட்டை விட்டு வெளியே சென்றார்.அப்போது எதிர்பாராத விதமாக முருகேசனின் மருமகள் வனிதாவின் மீது கைபட்டதாக தெரிகிறது. இதனால் இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இதனை கண்ட அங்கப்பன், அவரது மனைவி கற்பகம் ஆகிய இருவரும் கண்டித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த வனிதா, அவரது கணவர் ரவிகுமார் மற்றும் வனிதாவின் சகோதரி கவிதா அவரது கணவர் விக்னேஷ் ஆகியோர் அங்கப்பனிடம் மோதலில் ஈடுபட்டு சரமாரியாக தாக்கி கீழே தள்ளிவிட்டனர்.

    இதில் பலத்த காயம் அடைந்த அங்கப்பன் மயங்கினார். உடனடியாக அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அங்கப்பன் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து மதுரவாயல் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. உதவி கமிஷனர் சுப்பிரமணியன், இன்ஸ்பெக்டர் சிவ ஆனந்த் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    இது தொடர்பாக அங்கப்பனின் சகோதரரான முருகேசனின் மகன் ரவிகுமார் அவரது மனைவி வனிதா, வனிதாவின் சகோதரி கவிதா அவரது கணவர் விக்னேஷ் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    அங்கப்பன் மற்றும் அவரது சகோதரர் குடும்பத்தினர் இடையே மோட்டார் சைக்கிள் நிறுத்துவது உள்ளிட்ட சிறு சிறு பிரச்சினை காரணமாக அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது.

    தற்போது தண்ணீர் எடுத்து வந்த போது கைபட்ட சிறிய தகராறு கொலையில் முடிந்து விட்டது.

    • கடந்த மார்ச் மாதம் வீட்டின் முன்பு சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.
    • ஊழியர்களை மிரட்டி தகாத வார்த்தைகளால் திட்டி ரகளையில் ஈடுபட்டனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கரந்தையை சேர்ந்தவர் பிரதீப் (வயது 23). இவர் தனது வீட்டில் அப்பளம் தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளார். இவர் கடந்த மார்ச் மாதம் வீட்டின் முன்பு வைத்து சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இது குறித்து தஞ்சை கிழக்குப்போலீசார் வழக்குப்பதிவு செய்து கரந்தை பகுதியை சேர்ந்த விக்னேஷ் (26), கீழ அலங்கம் சிவக்குமார் (25), வடக்குவாசல் சூர்யா ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

    மேலும் கைதுசெய்யப்பட்ட 3 பேரும் கொலை நடந்த அன்று கரந்தை பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் கடன்கேட்டு ஊழியர்களை மிரட்டி தகாத வார்த்தைகளால் திட்டி ரகளையில் ஈடுபட்டதோடு, ஆயுதங்களை காட்டி தாக்கவும் முயற்சி செய்ததும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    இந்த நிலையில் விக்னேஷ், சிவக்குமார் ஆகிய 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய, தஞ்சை மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத், கலெக்டர் தீபக்ஜேக்கப்புக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் உத்தரவப்படி, தஞ்சை நகர கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன், 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்ததற்கான உத்தரவை, திருச்சி மத்திய சிறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.

    • உப்பிலியபுரம் அருகே தலையில் அம்மிக்கல்லை போட்டு தந்தையை மகன் கொன்றார்
    • குடித்துவிட்டு தாயிடம் தகராறு செய்ததால் ஆத்திரம்

    உப்பிலியபுரம், 

    திருச்சி மாவட்டம் உப்பிலியபுரத்தை அடுத்துள்ள பாலகிருஷ்ணம்பட்டி பேரூராட்சி எல்லைக் குட்பட்ட வடக்கு விஸ்வாம்பாள் சமுத்திரத்தை சேர்ந்தவர் புகழேந்தி (வயது 45). கூலித்தொழிலாளி. இவர், மனைவி சுஜாதா, மகன் சுரேந்திரனுடன் வாழ்ந்து வந்தார். மகள் வரலட்சுமி அதே பகுதியில் திருமணம் முடித்து கணவருடன் வசித்து வருகிறார். புகழேந்தி குடிப்பழக்கமுள்ளவராக தெரிய வருகிறது. குடிப் பழக்கத்தினால் தினசரி வீட்டில் சண்டை சச்சரவு நடந்து வந்துள்ளதுடன், மனைவி, மகன் மற்றும் உறவினர்களுடனும் அவர் தகராறு செய்து வந்ததாக தெரிகிறது.நேற்று மாலை கூலி வேலைக்கு சென்று வீடு திரும்பியவர் மனைவியுடன் தகராறு செய்தார். அப்போது மகன் சுரேந்திரன் தந்தையை தட்டிக் கேட்டார். இதில் மகனுக்கும் தந்தைக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பில் முடிந்தது.பின்னர் சுரேந்திரன் மன உளைச்சலால் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். அதன் பின்னரும் மனைவியுடன் புகழேந்தி மீண்டும் சண்டை போட்டு அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் புகழேந்தி வீட்டின் முன்புறமுள்ள கயிற்றுக் கட்டிலில் படுத்து உறங்கியுள்ளார்.

    இதற்கிடையே நள்ளிரவில் வீடு திரும்பிய சுரேந்தர் , தாய் சுஜாதா அழுது கொண்டிருந்தது கண்டு மனம் வெதும்பி கோபத்தில் தூங்கிக் கொண்டிருந்த தந்தையை குச்சியாலும், கத்தியாலும் தாக்கியதாக தெரிகிறது. இைத கண்டு மனைவி சுஜாதா மகனை கட்டுப்படுத்த முயன்றார். இருப்பினும் ஆத்திரம் அடங்காத சுரேந்திரன் பக்கத்தில் கிடந்த அம்மிக்கல்லை எடுத்து புகழேந்தியின் தலையில் போட்டார். இதில் புகழேந்தி முகம் சிதைந்த நிலையில் கட்டிலிலேயே ரத்த வெள்ளத்தில் பிணமானார். பின்னர் அவர் தப்பிச் சென்றார் தகவலின் பேரில் துறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில், உப்பிலியபுரம் சப்இன்ஸ்பெக்டர்கள் பிரகாஷ், செபாஷ்டின் சந்தியாகு, பாலமுருகன், இளங்கோ மற்றும் குற்றப்பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் புகழேந்தியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தந்தையை கொலை செய்து தப்பியோடிய சுரேந்தரை (23) போலீசார் கைது செய்தனர். இவர் மெக்கானிக்கல் டிப்ளமோ பட்டம் பெற்றுள்ளார். நள்ளிரவில் மகன் தந்தையின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்துள்ள செய்தி காட்டுத்தீயாய் பரவியதால் இப்பகுதியில் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கொத்தனார் சரமாரியாக வெட்டி கொலை செய்யபட்டார்
    • இதுகுறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குளித்தலை,

    கரூர் மாவட்டம், தோகைமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கல்லடை ஊராட்சி பகுதியான கல்லடைையை சேர்ந்தவர மருதை. இவரது மகன் மோகன்ராஜ் (வயது 33). இவர் திருச்சி மற்றும் பல்வேறு பகுதிகளில் கொத்தனார் வேலை செய்து வந்தார். இந்தநிலையில் வழக்கம்போல நேற்று காலை வேலைக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பினார். பின்னர் வீட்டில் இருந்துள்ளார். இதற்கிடையே இன்று அதிகாலை சுமார் 2 மணி அளவில் அவரது நண்பர்கள் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் தீர்ந்து விட்டது என செல்போன் மூலம் தொடர்பு கொண்டு கூறியுள்ளனர்.

    மேலும் பெட்ரோல் வாங்க அவரை நண்பர்கள் நள்ளிரவில் அழைத்துள்ளனர். அப்போது அவருடைய மனைவி இந்த நேரத்தில் எங்கே செல்கிறீர்கள்? நள்ளிரவு வெளியே போகக்கூடாது என கூறினார். இருந்த போதிலும் மனைவி சொல்லை கேட்காமல், பெட்ரோல் வாங்க வெளியே தனது இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் இன்று காலை மோகன்ராஜ் திருச்சி- தோகைமலை மெயின் ரோட்டில் கைகாட்டி பகுதியில் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

    இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் தோகைமலை போலீசாருக்கு தகவல் அளித்தனர்.தகவலை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், முன்விரோதத்தில் பெட்ரோல் வாங்க வேண்டும் என்று பொய் சொல்லி அழைத்து நண்பர்களே அவரை தீர்த்துக் கட்டியிருக்கலாம் என  சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த மோகன்ராஜ்க்கு மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர். நள்ளிரவில் கொத்தானர் கொலை செய்யப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • நள்ளிரவில் கொத்தானர் கொலை செய்யப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குளித்தலை:

    கரூர் மாவட்டம், தோகைமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கல்லடை ஊராட்சி பகுதியான கல்லடைையை சேர்ந்தவர மருதை. இவரது மகன் மோகன்ராஜ் (வயது 33). இவர் திருச்சி மற்றும் பல்வேறு பகுதிகளில் கொத்தனார் வேலை செய்து வந்தார்.

    இந்தநிலையில் வழக்கம்போல நேற்று காலை வேலைக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பினார். பின்னர் வீட்டில் இருந்துள்ளார். இதற்கிடையே இன்று அதிகாலை சுமார் 2 மணி அளவில் அவரது நண்பர்கள் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் தீர்ந்து விட்டது என செல்போன் மூலம் தொடர்பு கொண்டு கூறியுள்ளனர். மேலும் பெட்ரோல் வாங்க அவரை நண்பர்கள் நள்ளிரவில் அழைத்துள்ளனர். அப்போது அவருடைய மனைவி இந்த நேரத்தில் எங்கே செல்கிறீர்கள்? நள்ளிரவு வெளியே போகக்கூடாது என கூறினார்.

    இருந்த போதிலும் மனைவி சொல்லை கேட்காமல், பெட்ரோல் வாங்க வெளியே தனது இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை.

    இந்த நிலையில் இன்று காலை மோகன்ராஜ் திருச்சி-தோகைமலை மெயின் ரோட்டில் கைகாட்டி பகுதியில் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

    இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் தோகைமலை போலீசாருக்கு தகவல் அளித்தனர்.தகவலை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்,

    முன்விரோதத்தில் பெட்ரோல் வாங்க வேண்டும் என்று பொய் சொல்லி அழைத்து நண்பர்களே அவரை தீர்த்துக் கட்டியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.இருப்பினும் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இறந்த மோகன்ராஜ்க்கு மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர். நள்ளிரவில் கொத்தானர் கொலை செய்யப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • புகழேந்தியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • நள்ளிரவில் மகன் தந்தையின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்துள்ள செய்தி காட்டுத்தீயாய் பரவியதால் இப்பகுதியில் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    உப்பிலியபுரம்:

    திருச்சி மாவட்டம் உப்பிலியபுரத்தை அடுத்துள்ள பாலகிருஷ்ணம்பட்டி பேரூராட்சி எல்லைக்குட்பட்ட வடக்கு விஸ்வாம்பாள் சமுத்திரத்தை சேர்ந்தவர் புகழேந்தி (வயது 45). கூலித்தொழிலாளி. இவர், மனைவி சுஜாதா, மகன் சுரேந்திரனுடன் வாழ்ந்து வந்தார். மகள் வரலட்சுமி அதே பகுதியில் திருமணம் முடித்து கணவருடன் வசித்து வருகிறார். புகழேந்தி குடிப்பழக்கமுள்ளவராக தெரிய வருகிறது. குடிப்பழக்கத்தினால் தினசரி வீட்டில் சண்டை சச்சரவு நடந்து வந்துள்ளதுடன், மனைவி, மகன் மற்றும் உறவினர்களுடனும் அவர் தகராறு செய்து வந்ததாக தெரிகிறது.

    நேற்று மாலை கூலி வேலைக்கு சென்று வீடு திரும்பியவர் மனைவியுடன் தகராறு செய்தார். அப்போது மகன் சுரேந்திரன் தந்தையை தட்டிக் கேட்டார். இதில் மகனுக்கும் தந்தைக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பில் முடிந்தது.

    பின்னர் சுரேந்திரன் மன உளைச்சலால் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். அதன் பின்னரும் மனைவியுடன் புகழேந்தி மீண்டும் சண்டை போட்டு அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் புகழேந்தி வீட்டின் முன்புறமுள்ள கயிற்றுக் கட்டிலில் படுத்து உறங்கியுள்ளார்.

    இதற்கிடையே நள்ளிரவில் வீடு திரும்பிய சுரேந்தர் , தாய் சுஜாதா அழுது கொண்டிருந்தது கண்டு மனம் வெதும்பி கோபத்தில் தூங்கிக் கொண்டிருந்த தந்தையை குச்சியாலும், கத்தியாலும் தாக்கியதாக தெரிகிறது. இதை கண்டு மனைவி சுஜாதா மகனை கட்டுப்படுத்த முயன்றார். இருப்பினும் ஆத்திரம் அடங்காத சுரேந்திரன் பக்கத்தில் கிடந்த அம்மிக்கல்லை எடுத்து புகழேந்தியின் தலையில் போட்டார். இதில் புகழேந்தி முகம் சிதைந்த நிலையில் கட்டிலிலேயே ரத்த வெள்ளத்தில் பிணமானார். பின்னர் அவர் தப்பிச் சென்றார்.

    தகவலின் பேரில் துறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில், உப்பிலியபுரம் சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரகாஷ், செபாஷ்டின் சந்தியாகு, பாலமுருகன், இளங்கோ மற்றும் குற்றப்பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

    பின்னர் புகழேந்தியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தந்தையை கொலை செய்து தப்பியோடிய சுரேந்தரை (23) போலீசார் கைது செய்தனர். இவர் மெக்கானிக்கல் டிப்ளமோ பட்டம் பெற்றுள்ளார். நள்ளிரவில் மகன் தந்தையின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்துள்ள செய்தி காட்டுத்தீயாய் பரவியதால் இப்பகுதியில் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • தந்தையை அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
    • போலீசார் மனம் நலம் பாதிக்கப்பட்ட அசோக்ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள மங்களம் கிராமம் காலனி தெருவை சேர்ந்தவர் செல்வ ராஜ் (வயது 65), விவசாயி. இவரது மகன் அசோக்ராஜ் (23). இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தார்.

    இதையடுத்து அவரது பெற்றோர் பல்வேறு மருத்துவமனைகளுக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். மேலும் கோவில்களுக்கும் சென்ற வேண்டுதல் நிறைவேற்றி பிரார்த்தனை செய்து வந்தனர். அதே வேளையில் அசோக்ராஜ் உரிய சிகிச்சை பெற்று மருந்து, மாத்திரைகளும் சாப்பிட்டு வருகிறார்.

    இதற்கிடையே அசோக் ராஜ் கடந்த மூன்று மாதங்களாக சரியான முறையில் மருந்து, மாத்திரை சாப்பிட மறுத்து வந்துள்ளார். அவரது பெற்றோர் எடுத்துக்கூறியும் அசோக்ராஜ் கண்டுகொள்ளவில்லை. இதனால் நோயின் தீவிரம் அதிகமாகி அடிக்கடி வீட்டில் உள்ளவர்களை கண்மூடித்தனமாக தாக்குவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்தார்.

    இந்நிலையில் நேற்று இரவு 10 மணிக்கு தனது தாய் மணிமொழியை தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் வீட்டில் அவரது வயதான தந்தை செல்வராஜ் மட்டும் தனியாக இருந்தார்.

    அவரையும் அசோக்ராஜ் கம்பால் சரமாரியாக தாக்கினார். இதில் நிலைகுலைந்த அவர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இன்று காலையில் வந்து மணிமொழி பார்த்தபோதுதான் கணவர் செல்வராஜ் இறந்து கிடந்தது தெரியவந்தது. அவர் உறவினர் வீட்டுக்கு சென்று விட்டதால் உயிர் தப்பினார்.

    பின்னர் இது குறித்து குன்னம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குன்னம் போலீசார் மனம் நலம் பாதிக்கப்பட்ட அசோக்ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலையுண்ட செல்வராஜ் உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மனநலம் பாதித்த மகன் தந்தையை அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 1981-ம் ஆண்டு சத்பூர் என்ற கிராமத்தில் நடைபெற்ற வன்முறையில் பத்து பேர் கொல்லப்பட்டனர்.
    • நாட்டையே உலுக்கிய கொலை வழக்கில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.

    90 வயது முதியவருக்கு ஃபிரோசாபாத் மாவட்ட நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. 1981-ம் ஆண்டு பத்து பேரை கொலை செய்த வழக்கில் நீதிமன்றம் இத்தகைய தீர்ப்பை வழங்கி இருக்கிறது. இதுதவிர குற்றவாளிக்கு ரூ. 55 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டு இருக்கிறது. 42 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட கொலை சம்பவம், நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    1981-ம் ஆண்டு சத்பூர் என்ற கிராமத்தில் நடைபெற்ற வன்முறையில் பத்து பேர் கொல்லப்பட்டனர். மேலும் இரண்டு பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன. வன்முறை தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் பத்து பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். அதன்படி இந்திய தண்டனை சட்டம் 302 மற்றும் 307 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

    இந்த வழக்கின் விசாரணை முதற்கட்டமாக மெயின்பூரி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. பிறகு ஃபிரோசாபாத் தனி மாவட்டமாக பிரிக்கப்பட்ட நிலையில், வழக்கு விசாரணை ஃபிரோசாபாத் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. நாட்டையே உலுக்கிய கொலை வழக்கில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.

    பத்து பேர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 55 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. ஒருவேளை அபராதம் செலுத்த தவறும் பட்சத்தில், சிறை தண்டனை மேலும் 13 மாதங்கள் வரை நீட்டிக்கப்படும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

    • ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்
    • கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் 15 வேலம்பா ளையம் ரங்கநாதபுரத்தை சேர்ந்தவர் சந்தோஷ். இவரது மனைவி வெண்ணிலா (24). இவர்கள் இருவரும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது இரண்டு குழந்தைகளும் உள்ளது.

    இந்த நிலையில் சந்தோஷ் சரிவர வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து உள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு வழக்கம் போல் குடித்துவிட்டு வந்த சந்தோஷ் மனைவியிடம் தகராறு செய்துள்ளார். பின்னர் வீட்டை விட்டு வெளியே சென்று அவர் நீண்ட நேரம் ஆகியும் வரவில்லை. இதற்கிடையே வெளியே சென்ற குழந்தைகள் வீட்டிற்கு வந்த போது வெண்ணிலா கழுத்தின் துணிகள் சுற்றிய நிலையில் பிணமாக இறந்து கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த குழந்தைகள் கதறி அழுதனர்.

    சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்து 15 வேலம்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தபோது குடிபோதையில் இருந்த சந்தோஷ் மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும். தான்தான் மின்விசிறியில் இருந்து உடலை கீழே இறக்கி வைத்ததாகவும் கூறினார். போலீசார் வெண்ணிலாவின் உடலை சோதனை செய்து பார்த்தபோது தற்கொலை செய்ததற்கான எந்த அடையாளமும் இல்லை.

    எனவே சந்தோஷ் தான் கொலை செய்துவிட்டு தற்கொலை நாடகம் ஆடுகிறார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் 15 வேலம்பாளையம் பகுதியில் பெரும் பரபர ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சுப்பிரமணி கள்ளத்தொடர்பை கைவிட மறுத்து பத்மாவை கொடுமைப்படுத்தி வந்தார்.
    • வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து பத்மாவை கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு கனிராவுத்தர்குளம், ஜாமியா மஸ்ஜித் பின்புற வீதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (52). இவரது மனைவி பத்மா (51). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இதில் மகள் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.

    மகனுக்கு திருமணம் ஆகி குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். சுப்பிரமணி தறி பட்டறையில் வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் சுப்பிரமணிக்கு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதனை அறிந்த பத்மா கள்ளத்தொடர்பை கைவிடுமாறு பலமுறை கணவரை கண்டித்துள்ளார். எனினும் அதனை காதில் வாங்கிக் கொள்ளாமல் சுப்பிரமணி கள்ளதொடர்பை தொடர்ந்து உள்ளார்.

    மேலும் இது தொடர்பாக மனைவியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும் சுப்பிரமணி கள்ளத்தொடர்பை கைவிட மறுத்து பத்மாவை கொடுமைப்படுத்தி வந்தார்.

    நேற்று இரவும் சுப்பிரமணி-பத்மா இடையே இது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இரவு முழுவதும் இருவரும் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். பின்னர் இருவரும் தூங்க சென்று விட்டனர். எனினும் ஆத்திரத்தில் இருந்த பத்மா இன்று அதிகாலை 4 மணியளவில் திடீரென எழுந்தார். பின்னர் வீட்டில் இருந்த கட்டையை எடுத்து வந்து சுப்பிரமணியை சரமாரியாக தாக்கினார்.

    இதில் சம்பவ இடத்திலேயே சுப்பிரமணி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். பின்னர் பத்மா வீட்டின் கதவை பூட்டிவிட்டு நேராக வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்திற்கு சென்றார். அங்கு நடந்த சம்பவத்தை கூறி சரண் அடைந்தார்.

    இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த வீரப்பன்சத்திரம் போலீசார் பத்மாவை அழைத்துக் கொண்டு அவரது வீட்டுக்கு சென்றனர். அங்கு கதவை திறந்து பார்த்தபோது வீட்டில் உள்ள அறையில் சுப்பிரமணி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

    இதனையடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து பத்மாவை கைது செய்தனர்.

    ×