search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 230640"

    • விமல் ரத்த வெள்ளத்தில் சாலையில் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
    • போலீசார் அந்த 6 பேரையும் வானூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர்.

    வானூர்:

    விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே அனுச்சைகுப்பம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் விமல் (வயது 35) ஆரோவில் உள்ள தனியார் ஓட்டலில் மானேஜராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் விமல் ஓட்டலுக்கு வேலைக்கு தனது மோட்டார் சைக்கிளில் அனுமந்தையிலிருந்து ஆரோவிலுக்கு சென்றார்.

    கிழக்கு கடற்கரை சாலை வழியாக விமல் மோட்டார் சைக்கிள் வந்தபோது 6 பேர் கொண்ட கும்பல் அவரை பின்தொடர்ந்து வந்து,ஆரோவில் பொம்மையார்பாளையம் அருகே விமலின் மோட்டார் சைக்கிளை அந்த 6பேர் கொண்ட கும்பல் வழிமறித்தனர். உடனே அந்த கும்பல் விமலை சுற்றிவளைத்து அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து விமலை சரமாரியாக குத்தினர்.

    இதில் விமல் ரத்த வெள்ளத்தில் சாலையில் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலே உயிரிழந்தார். உடனே அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. இதுகுறித்து ஆரோவில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த ஆரோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த விமலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி கனகசெட்டி குளத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இந்த கொலை வழக்கு குறித்து போலீசார் விசாரணை செய்ததில் இறந்துபோன விமலும், விமலின் அண்ணன் வினோத் இருவரும் புதுச்சேரி மாநிலம் ரவுடி சோழன் குரூப்பை சேர்ந்தவர்கள். 2019-ஆண்டு ரவுடி சோழன் குரூப்பிற்கும் மற்றொரு ரவுடி ஜனாகுரூப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டு ரவுடி சோழன் குரூப்பை சேர்ந்த வினோத்தை ஜனா குரூப்பினர் வெட்டிக் கொன்றது. இதனால் வினோத்தின் சாவிற்கு பழிக்குப்பழி தீர்ப்பதற்காக வினோத்தின் தம்பி விமல் ஜனாவை கொல்வேன் என்று அனிச்சகுப்பத்தில் உள்ள ஜனாவின் மாமாவிடம் சென்று கூறினார். உடனே ஜனாவின் மாமா இந்த செய்தியை ஜனாவிடம் கூறினார்.

    இதனால் ஜனா முதற்கட்டமாக விமலை தீர்த்துகட்ட வேண்டும் என முடிவெடித்து ஜனா குரூப்பை சேர்ந்த கீழபுத்துப்பட்டு செல்வராசு மகன் ஜனா (வயது 32), ரவி மகன் அரவிந்த் (22), புதுச்சேரி லாஸ்பேட்டை தண்டபாணி மகன் உதயகு மார் (26), நாகராஜ் மகன் கார்த்திகேயன் (32), பவழ நகர் சரவணன் மகன் லோகேஷ் (23), காலாப்பட்டு ஜில்பட் மகன் தாமஸ் (23), ஆகிய 6 பேர் கொண்ட கும்பல் கடந்த ஒரு வாரமாக விமல் எங்கெங்கு செல்கிறார் என்று நோட்டமிட்டு நேற்று விமலை சுற்றிவளைத்து கொலை செய்தனர் என்பது தெரியவந்தது.

    மேலும் இதுகுறித்து கோட்டகுப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபின்சன் தனிப்படை அமைத்து அந்த 6 பேர் கொண்ட கும்பலை தேடி வந்த நிலையில் அவர்கள் ஆரோவில் அருகே உள்ள முந்திரிதோப்பில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே முந்திரிதோப்பிற்கு விரைந்த கோட்டக்குப்பம் போலீசார் அங்கு பதுங்கி இருந்த ஜனா, அரவிந்த், உதயகுமார், கார்த்திகேயன், லோகேஷ், தாமசை சுற்றிவளைத்து மடக்கி பிடித்தனர். இதனையடுத்து போலீசார் அந்த 6 பேரையும் வானூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    • மர்ம நபர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
    • அவரது உடல் முழுவதும் காயங்கள் இருந்ததால் அவரை யாராவது வேறு பகுதியில் கொலை செய்துவிட்டு, அதனை மறைப்பதற்காக இங்கு வந்து வீசிவிட்டு சென்றார்களா? என புலன் விசாரணை நடைபெற்று வருகிறது.

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள தத்தனூர் கீழவெளி பகுதி சாலையோரத்தில் இன்று காலை உடல் முழுவதும் காயங்களுடன் இளம்பெண் ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார். சுமார் 20 வயது மதிக்கத்தக்க அவர் சுடிதார் அணிந்திருந்தார். இதைப்பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் இதுபற்றி உடையார்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் பிணமாக கிடந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்து கிடந்த பெண் யார், உள்ளூரை சேர்ந்தவரா, எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.மேலும் உடையார்பாளையம் உள்ளிட்ட பகுதியில் இளம்பெண் யாராவது மாயமாகி இருககிறார்களா என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவரது உடல் முழுவதும் காயங்கள் இருந்ததால் அவரை யாராவது வேறு பகுதியில் கொலை செய்துவிட்டு, அதனை மறைப்பதற்காக இங்கு வந்து வீசிவிட்டு சென்றார்களா? என புலன் விசாரணை நடைபெற்று வருகிறது.இந்த சம்பவம் உடையார்பாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஜாமினில் வெளிவந்த முனியசாமி பின்னர் கடந்த 2 வருடமாக கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவானார்.
    • மஞ்சம்பாக்கம் அருகே பதுங்கி இருந்த முனியசாமியை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

    கொளத்தூர்:

    கொளத்தூர், கண்ணகி நகரை சேர்ந்தவர் அஸ்லாம் பாஷா (வயது49). தொழிலாளி. இவர், கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம் 26-ந் தேதி மாதவரம் ரவுண்டனா அருகே அவரது மர்ம உறுப்பு அறுக்கப்பட்டு உயிருக்கு போராடியபடி கிடந்தார். அவரை மாதவரம் போலீசார் மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு 4 நாட்களுக்குப் பிறகு சிகிச்சை பலனின்றி அஸ்லாம் பாஷா உயிரிழந்தார்.

    இதேபோல் ஜூன் மாதம் 3-ந் தேதி நள்ளிரவு ரெட்டேரி பாலம் அருகே மூலக்கடையைச் சேர்ந்த பாலாஜி என்பவரும் மர்மஉறுப்பில் தாக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இது தொடர்பாக அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை வைத்து முனியசாமி (39) என்பவரை போலீசார் கைது செய்தனர். ஓரினச்சேர்க்கையின் போது அவர் சைக்கோபோல் இது போன்று தாக்குதலில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது.

    இந்த நிலையில் சிறையில் இருந்து ஜாமினில் வெளிவந்த முனியசாமி பின்னர் கடந்த 2 வருடமாக கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவானார். அவரைப் பிடிக்க பொன்னேரி விரைவு கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்தது.

    இதைத் தொடர்ந்து கொளத்தூர் துணை கமிஷனர் சக்திவேல் ஆலோசனையின்படி மாதவரம் உதவி கமிஷனர் ஆதிமூலம் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையில் முனியசாமியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இதற்கிடையே மஞ்சம்பாக்கம் அருகே பதுங்கி இருந்த முனியசாமியை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி மீண்டும் சிறையில் அடைத்தனர்.

    • சந்தேகத்தின் பேரில் 2 பேரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தண்டராம்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள தேவனூர் புதூர் கிராமத்தை சேர்ந்தவர் காசி மகன் அருள் என்கிற அருள்குமார் (வயது 37). இவர் அந்த பகுதியில் பணம் வட்டிக்கு விடும் தொழில் செய்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு அருள் திருவண்ணாமலைக்கு வந்தார். பின்னர் பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

    இரவு 11 மணிக்கு மணலூர்பேட்டை ரோட்டில் உள்ள தேவனூர் புதூர் அருகே வந்த போது அவரை மர்ம நபர்கள் வழிமறித்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் அருள்குமாரை கத்தி அரிவாளால் வெட்டி சாய்த்தனர். இதில் பலத்த காயமடைந்த அருள்குமார் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த தச்சம்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அருள்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து கொலையாளிகள் குறித்து விசாரணை நடத்தினர்.

    சந்தேகத்தின் பேரில் 2 பேரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • சில வாரங்களுக்கு முன்பு முத்துப்பாண்டி கேரளாவிற்கு வேலைக்கு சென்று விட்டார்.
    • கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவான பரமசிவத்தை தேடி வருகின்றனர்.

    சாத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஊத்துப்பட்டியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (வயது45). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி ராஜேஸ்வரி (41). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    ராஜேஸ்வரிக்கும், சங்கர நத்தத்தை சேர்ந்த விறகு வெட்டும் தொழிலாளி பரமசிவம் (50) என்பவருக்கும் கள்ளக்காதல் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களாக பரமசிவத்துடன் பேசுவதை ராஜேஸ்வரி தவிர்த்துள்ளார். மேலும் தன்னுடன் பழகுவதை கைவிடுமாறும் கூறியதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டது.

    சில வாரங்களுக்கு முன்பு முத்துப்பாண்டி கேரளாவிற்கு வேலைக்கு சென்று விட்டார். நேற்று இரவு ராஜேஸ்வரி வீட்டின் திண்ணையில் தூங்கினார். நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த பரமசிவம் தூங்கியிருந்த ராஜேஸ்வரியின் கழுத்தை அரிவாளால் அறுத்து கொலை செய்துவிட்டு தப்பினார்.

    இன்று அதிகாலை ஊர் திரும்பிய முத்துப்பாண்டி வீட்டின் திண்ணையில் மனைவி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள், ஏழாயிரம் பண்ணை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்லபாண்டி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவான பரமசிவத்தை தேடி வருகின்றனர்.

    • போலீசார் வழக்கு பதிவு செய்து விமலை குத்தி கொலை செய்து விட்டு தப்பியோடிய கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.
    • பழிக்குபழியாக இந்த கொலை நடந்து இருப்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    வானூர்:

    விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே அனுச்சைகுப்பம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் விமல் (வயது 35) ஆரோவில் உள்ள தனியார் ஓட்டலில் மானேஜராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் விமல் வழக்கம்போல் இன்று காலை ஓட்டலுக்கு வேலை செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் அனுமந்தையிலிருந்து ஆரோவிலுக்கு சென்றார்.

    கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்றுகொண்டிருந்த போது விமலின் மோட்டார் சைக்கிளை 3 வாலிபர்கள் 2 மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்தனர். ஆரோவில் பொம்மையார்பாளையம் அருகே விமல் மோட்டார் சைக்கிள் வந்தபோது பின்னால் வந்த அந்த கும்பல் விமல் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிளை வழிமறித்தனர். உடனே அந்த கும்பல் விமலை தாக்கி அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து விமலை சரமாரியாக குத்தினர். விமலுக்கு கழுத்து, தலை உள்ளிட்ட 10 இடங்களில் கத்தி குத்து விழுந்தது.

    இதில் விமல் ரத்த வெள்ளத்தில் சாலையில் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். உடனே அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. வாலிபரை கத்தியால் குத்தி கொன்றதை பார்த்த அருகில் இருந்தவர்கள் அலறி அடித்து கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து ஆரோவில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த ஆரோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த விமலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி கனகசெட்டி குளத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து அருகில் இருந்தவர்களிடம் விசாரித்தபோது விமலை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய 3 வாலிபர்களில் 2 பேர் வானூர் அருகே மாத்தூர் வழியாக மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றதாக கூறினர்.

    பொதுமக்கள் கூறிய வழியில் போலீசார் அவர்களை பிடிக்க சென்றனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விமலை குத்தி கொலை செய்து விட்டு தப்பியோடிய கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

    விமல் மீது ஏற்கனவேகொலை வழக்கு உள்ளது. இதற்கு பழிக்குபழியாக இந்த கொலை நடந்து இருப்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த கொலைக்கான முழுவிபரம் கொலை செய்து விட்டு தப்பியோடிய வாலிபர்களை பிடித்தால் தெரியவரும் என்று போலீசார் கூறினர். பட்டபகலில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதியில் வாலிபரை சரமாரியாக குத்திக்கொலை செய்த சம்பவம் அந்த பகுதி பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    • ராமசாமிக்கு திருமணம் ஆனதில் இருந்து மாமியார்-மருமகள் இடையே வாக்குவாதங்கள் ஏற்பட்டு வந்துள்ளது.
    • கைது செய்யப்பட்ட மகாலெட்சுமியை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கொக்கிரகுளம் மகளிர் சிறையில் அடைத்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் சீதபற்பநல்லூர் அருகே உள்ள துலுக்கர்குளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட வடுகப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சண்முகவேல் (வயது 63). இவர் துலுக்கர்குளம் பஞ்சாயத்து துணைத்தலைவராக இருந்து வருகிறார்.

    இவரது மனைவி சீதாராமலெட்சுமி(58). இவருக்கு ஒரு மகளும், ராமசாமி என்ற மகனும் உள்ளனர். மகளுக்கு சுத்தமல்லி அருகே கொண்டாநகரத்தில் திருமணமாகி உள்ளது. ராமசாமிக்கு மகாலெட்சுமி(27) என்ற மனைவியும், 5 வயதில் ஒரு மகனும், 10 மாதத்தில் ஒரு மகனும் உள்ளனர்.

    இந்நிலையில் மாமியார்-மருமகள் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் ஆத்திரத்தில் இருந்த மகாலெட்சுமி, நேற்று அதிகாலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சீதாராமலெட்சுமியை சரமாரியாக கம்பால் தாக்கிவிட்டு அவரது கழுத்தில் கிடந்த தங்க செயினை பறித்து சென்றார்.

    உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுதொடர்பான புகாரின்பேரில் சீதபற்பநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராதா கொலைமுயற்சி வழக்குப்பதிவு செய்து மகாலெட்சுமியை கைது செய்தனர்.

    இந்நிலையில், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்த மூதாட்டி சீதாராமலெட்சுமி இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி, மகாலெட்சுமியிடம் விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக போலீஸ் தரப்பில் கூறியதாவது:-

    ராமசாமிக்கு திருமணம் ஆனதில் இருந்து மாமியார்-மருமகள் இடையே வாக்குவாதங்கள் ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அவர்களிடையே பிரச்சினையை போக்குவதற்காக சண்முகவேல் குடியிருக்கும் வீட்டுக்கு பின்புறத்தில் புதிதாக ஒரு வீட்டை ராமசாமிக்கு கட்டிக் கொடுத்துள்ளனர்.

    ஆனாலும் மகாலெட்சுமி அடிக்கடி மாமனார்-மாமியாரிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். அவ்வப்போது அக்கம்பக்கத்தினர் வந்து சமாதானம் பேசி வந்துள்ளனர். கடந்த 10 நாட்களுக்கு முன்பு அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றி உள்ளது. இதனால் ஆத்திரத்தில் இருந்த மகாலெட்சுமி, தனது மாமியாரை கொலை செய்ய திட்டம் தீட்டி உள்ளார்.

    அதன்படி நேற்று அதிகாலை சீதாராமலெட்சுமி வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது அவர் அங்கு சென்று கம்பால் சரமாரியாக தாக்கியுள்ளார். பின்னர் போலீசில் மாட்டிக்கொள்ளாமல் இருப்பதற்காக, தனது மாமியார் கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க சங்கிலியை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு சென்றுவிட்டார்.

    போலீசார் வீட்டுக்கு சென்று அங்கு பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சியை பார்த்தபோது, அதில் மகாலெட்சுமி தான் மூதாட்டியை தாக்கிவிட்டு செயினை பறித்து சென்றார் என்பது தெரியவந்தது.

    மேலும் போலீசில் சிக்காமல் இருப்பதற்காக அவரை தாக்கிவிட்டு, செயினை பறித்துள்ளார். அவ்வாறு செய்தால் செயினை திருடவந்த மர்மநபர்கள் மூதாட்டியை தாக்கி உள்ளனர் என்று ஊரை நம்பவைத்துவிடலாம் என்று மகாலெட்சுமி நினைத்துக்கொண்டு அந்த நாடகத்தை நடத்தியது விசாரணையில் தெரியவந்தது.

    கைது செய்யப்பட்ட மகாலெட்சுமியை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கொக்கிரகுளம் மகளிர் சிறையில் அடைத்தனர்.

    • அனந்த்நாக் நகரில் உள்ள ஜக்லாண்ட் மண்டி அருகே பயங்கரவாதிகளால் சுட்டு தாக்கப்பட்டார்.
    • சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தனர்.

    ஜம்மு- காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் சர்க்கஸ் கலைஞர் ஒருவர் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சர்க்கஸ் கலைஞர் தீபு என்பவர் அனந்த்நாக்கில் உள்ள கேளிக்கை பூங்காவில் தனியார் சர்க்கஸ் மேளாவில் வேலை பார்த்து வந்தார்.

    உதம்பூரை சேர்ந்த தீபு நேற்று மாலை அனந்த்நாக் நகரில் உள்ள ஜக்லாண்ட் மண்டி அருகே பயங்கரவாதிகளால் சுட்டு தாக்கப்பட்டார்.

    இதையடுத்து, தீபு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தனர்.

    • மர்மநபர்கள் சிலர் தனபாலை சரமாரியாக அரிவாளால் வெட்டிக்கொலை செய்தனர்.
    • திருவிடைமருதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    சுவாமிமலை:

    தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரை அடுத்த நரசிங்கம்பேட்டை அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் மகாலிங்கம். இவரது மகன் தனபால் (வயது 32). கொத்தனார்.

    இவர் நரசிங்கம்பேட்டை கடைத்தெரு பகுதியில் தனது நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் முக கவசம் அணிந்து வந்த மர்ம நபர்கள் தனபாலை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்தனர்.

    கொலையாளிகளை கைது செய்ய கோரி உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

    இதுகுறித்து திருநிலக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.

    இந்நிலையில் கொலை வழக்கில் தொடர்புடைய தியாகராஜபுரம் சுந்தர் (வயது 27), முத்துப்பிள்ளை மண்டபம் அழகர் (22), மேலக்காவேரி சாதிக் பாஷா (19), பழவாத்தான்கட்டளை முருகேசன் (28) ஆகிய நபர்களை போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவர்கள் திருவிடைமருதூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • சுந்தரேசன் மது குடித்துவிட்டு வந்து அடிக்கடி சொத்தில் பங்கு கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்தார்.
    • போலீசார் முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொடைரோடு:

    திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு மாவுத்தன்பட்டியை சேர்ந்தவர் சுந்தரேசன் (வயது 40) கூலித்தொழிலாளி. கடந்த 25ம் தேதி வீட்டில் இருந்து புறப்பட்டு கொடைரோடு சென்றார். அதன் பின்னர் வீடு திரும்பவில்லை.

    இந்த நிலையில் மறுநாள் ஏட்டுநாயக்கர் காலனி பகுதியில் உள்ள புளியமரத்தோப்பில் சுந்தரேசன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் அம்மைய நாயக்கனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுந்தரேசன் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் நிலக்கோட்டை டி.எஸ்.பி. முருகன், இன்ஸ்பெக்டர் குருவத்தாய் தலைமையில் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தினர். பிரேத பரிசோதனை முடிவில் சுந்தரேசன் தலையில் வெட்டுக்காயம் இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சுந்தரேசனின் தாய் ராஜாமணி, சகோதரர் முருகன் ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

    இதில் சுந்தரேசன் மது குடித்துவிட்டு வந்து அடிக்கடி சொத்தில் பங்கு கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்தார். மேலும் அடிக்கடி தாய் மற்றும் வீட்டில் உள்ளவர்களை அடித்து தாக்கியுள்ளார். சம்பவத்தன்று ஏற்பட்ட வாக்குவாதத்தில் முருகன் தாக்கியதில் தலையில் பலத்த காயமடைந்த சுந்தரேசன் உயிரிழந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காதல் விவகாரத்தில் டிரைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • கொலைக்கான காரணம் குறித்து 3 பேரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தை சேர்ந்தவர் சரவணகுமார்.இவரது மகன் காந்திராஜன் (வயது 28). வேன் டிரைவரான இவர் மதுரை ஜீவாநகரில் பகுதியில் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு மதுரை தெற்குவாசல் ரெயில்வே மேம்பாலத்தின் கீழே வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.இதுகுறித்து தகவல் அறிந்த தெற்குவாசல் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காந்தி ராஜன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த கொலை தொடர்பாக கீரைத்துறை போலீசார் வழக்குப் பதிந்தனர். கொலையில் தொடர்புடையவர்களை பிடிக்க போலீஸ் உதவி கமிஷனர் சண்முகம் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் முத்து பிரேம்சந்த் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    அந்த தனிப்படை போலீசார் கொலையாளிகள் குறித்து தீவிர விசாரணை நடத்தினர். அதில் காந்தி ராஜன் காதல் விவகாரத்தில் வெட்டி கொலை செய்யப்பட்டதும், அவர் காதலித்து வந்த இளம் பெண்ணின் குடும்பத்தினரே அவரை தீர்த்து கட்டிய அதிர்ச்சி தகவலும் வெளியானது.

    மதுரை கீரைத்துறையை சேர்ந்த மாயழகு என்பவரின் மகளை காந்திராஜன் காதலித்து வந்தள்ளார். இதற்கு மாயழகுவின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இருந்த போதிலும் அந்த இளம் பெண்ணுடன் காந்திராஜன் தொடர்ந்து பழகி வந்துள்ளார்.

    இதில் ஆத்திரமடைந்த மாயழகின் மகன் காளிதாஸ் (21), 17 வயது சிறுவனான மற்றொரு மகன் ஆகிய இருவரும் காந்திராஜனை வெட்டி கொலை செய்துள்ளனர். மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து காந்தி ராஜன் கொலை கொலை தொடர்பாக மாயழகு மற்றும் அவரது 2 மகன்களையும் போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் அவர்கள் 3 பேரும் இன்று போலீசாரிடம் சிக்கினர். கொலைக்கான காரணம் குறித்து 3 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காதல் விவகாரத்தில் டிரைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பஞ்சநாதனை மர்ம கும்பல் தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்திருப்பது தெரியவந்தது.
    • போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த வல்லூரைச் சேர்ந்தவர் பஞ்சநாதன் (வயது57). அ.தி.மு.க.வில் 3-வது வார்டு கிளை செயலாளராக இருந்தார். மேலும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார்.

    இவர் வீட்டு முன்பு புதிதாக 2 கடைகள் கட்டி உள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு பஞ்சநாதன் தனது கடை முன்பு தூங்கினார். இன்று அதிகாலை அப்பகுதி மக்கள் அவ்வழியே சென்றபோது கடையின் அருகில் ரத்த வெள்ளத்தில் பஞ்சநாதன் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மீஞ்சூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பஞ்சநாதனை மர்ம கும்பல் தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்திருப்பது தெரியவந்தது.

    கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை. இது தொடர்பாக அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×