search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 230640"

    • காரைக்குடி அருகே தலையில் கல்லைபோட்டு காய்கறி வியாபாரி கொலை செய்யப்பட்டார்.
    • போலீசார் முருகேசனை கைது செய்தனர்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சாக்கோட்டையை அடுத்த பெரியகோட்டை கிராமத்தை சேர்ந்தவர் அடைக்கலம் (வயது 45). இவருக்கு செல்லம்மாள் என்ற மனைவியும், முருகே சன் (22) என்ற மகனும் உள்ளனர். சூரக்குடி பகுதி யில் அடைக்கலம் காய்கறி வியாபாரம் செய்து வந்தார்.

    இந்த நிலையில் தான் பார்த்து வந்த வியாபாரத்தை விட்டு விட்டு சில ஆண்டு களுக்கு முன்பு அடைக்கலம் வேலைக்காக திருப்பூருக்கு சென்றார். அங்கு ஒரு கம்பெனியில் வேலை பார்த்தபோது அடைக்கலத்துக்கும், வேறொரு பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அடைக்கலம் அந்த பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.

    இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு பெரியகோட்டைக்கு அடைக்கலம் அந்த பெண்ணை அழைத்து வந்து தனியாக வீடு எடுத்து வசித்து வந்தார். இந்த செயல் மகன் முருகேசனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

    இதுதொடர்பாக தந்தை-மகனுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது. நேற்று இரவும் இவர்களுக்குள் தகராறு ஏற்பட ஆத்திரமடைந்த முருகேசன் தந்தை அடைக்கலம் தலையில் கல்லை போட்டு தாக்கினார். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இந்த கொலை குறித்து தகவலறிந்த சாக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொலை தொடர்பாக போலீசார் முருகேசனை கைது செய்த னர்.

    வேறொரு பெண்ணை திருமணம் செய்து ெகாண்டு குடும்பம் நடத்தியதால் மகன் தந்தையை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • சேட்டுவை கொலை செய்த சிவசங்கரன் செய்யாறு அடுத்த சித்தேரி பெரிய ஏரியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.
    • பரிசலில் தனி படை போலீசார் சென்று முட்புதரில் பதுங்கி இருந்த சிவசங்கரை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.

    ஆரணி:

    ஆரணி அடுத்த விளை கிராமத்தை சேர்ந்தவர் சேட்டு (வயது 55). பால் வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி உமா, இவர்களுக்கு அருண்குமார் என்ற மகன், அனிதா என்ற மகள் உள்ளனர்.

    சேட்டு, ஊர் மையப்பகுதியில் உள்ள நாகாத்தம்மன் கோவிலில் தினமும் இரவு தூங்குவது வழக்கம். இதேபோல் நேற்று இரவு 10 மணியளவில் தூங்குவதற்காக கோவிலுக்கு சென்றார். அதே ஊரை சேர்ந்த சிவா (45), சிவசங்கர் (30) ஆகியோர் நாகாத்தம்மன் கோவில் அருகே அமர்ந்து மது குடித்தனர்.

    பின்னர் மது போதையில் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனைக் கண்ட சேட்டு தகராறில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்தார். இந்த நிலையில் சிவசங்கர் மட்டும் மீண்டும் நாகாத்தம்மன் கோவிலுக்கு வந்தார்.

    அப்போது சேட்டுவிடம் சென்று நீ ஏன் தகராறை விலக்கி விட்டாய் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது.

    இதில் ஆத்திரம் அடைந்த சிவசங்கர் அருகே கிடந்த ஹாலோ பிளாக் கல்லை எடுத்து சேட்டுவின் தலையில் தாக்கினார். இதில் சேட்டு ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் அங்கிருந்து சிவசங்கர் சென்று விட்டார்.

    இன்று அதிகாலை அந்த வழியாக சென்றவர்கள் சேட்டு இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ஆரணி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    டி.எஸ்.பி. ரவிச்சந்திரன் தலைமையில் ஆரணி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் சேட்டு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    டிஎஸ்பி ரவிச்சந்திரனிடம் அப்பகுதி மக்கள் கூறும்போது இந்தப் பகுதியில் 24 மணி நேரமும் கள்ளத்தனமாக மது பாட்டில்கள் விற்கப்படுகிறது. இதனால் அடிக்கடி தகராறுகளும் ஏற்படுகிறது. இதனை தடுத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

    கொலை சம்பந்தமாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. சேட்டுவை கொலை செய்த சிவசங்கரன் செய்யாறு அடுத்த சித்தேரி பெரிய ஏரியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார் பெரிய ஏரிக்கு விரைந்து சென்றனர்.

    ஏரியில் தண்ணீர் அதிக அளவில் இருந்தது. இதனால் பரிசல் வரவழைக்கப்பட்டது. பின்னர் பரிசலில் தனி படை போலீசார் சென்று முட்புதரில் பதுங்கி இருந்த சிவசங்கரை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.

    இது சம்பந்தமாக அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நேற்று முன்தினம் மாலை துக்கியாம்பாளையம் வடக்குக்காடு பகுதியில் மோட்டார் சைக்கிள் கீழே விழுந்த நிலையில் பலத்த காயங்களுடன் கிடந்துள்ளார்.
    • இது குறித்து தகவலறிந்த அக்கம் பக்கத்தினர், வாலிபர் சக்திவேலை மீட்டு சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே துக்கி யாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பராயன். இவரது மகன் சக்திவேல் (வயது 23). இவர் கொத்த னார் வேலை செய்து வந்தார்.

    கொைல

    இவர் நேற்று முன்தினம் மாலை துக்கியாம்பாளையம் வடக்குக்காடு பகுதியில் மோட்டார் சைக்கிள் கீழே விழுந்த நிலையில் பலத்த காயங்களுடன் கிடந்துள்ளார். இது குறித்து தகவலறிந்த அக்கம் பக்கத்தினர், வாலிபர் சக்திவேலை மீட்டு சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இது பற்றி சக்திவேலின் தாய் அஞ்சலம் கொடுத்த புகாரின் பேரில் வாழப்பாடி போலீசார், கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்ட வாலிபர் சக்திவேல் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு பரிதாபமாக உயிரிழந்தார்.

    திடுக்கிடும் தகவல்

    இதனால் கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் நடத்திய விசாரணையில், திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

    கொலையுண்ட சக்திவேல் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை ஒரு வருடமாக காதலித்துள்ளார். இந்த நிலையில் சக்திவேல் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் துக்கியாம்பா ளையம் வடக்குக்காடு பகுதியில் சென்றபோது, சக்திவேல் காதலித்து வந்த சிறுமியின் அண்ணனான சதீஷ்குமார் (22) மற்றும் இவரது உறவினரான 17 வயது சிறுவன், சேலம் புத்தூர் கொண்டலாம்பட்டி பகுதியைச் சேர்ந்த மைக்கேல் (24) ஆகிய 3 பேரும் சேர்ந்து சக்திவேலை திடீரென கத்தியால் கழுத்தில் வெட்டி சரமாரி யாக தாக்கியுள்ளனர். இதில் சக்திவேல் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். பின்னர் 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர் என்பது தெரியவந்தது.

    3 பேர் கைது

    இதையடுத்து போலீசார், தலைமறைவாக இருந்த சதீஷ்குமார், இவரது உறவினர் 17 வயது சிறுவன் இருவரையும் நேற்று இரவு கைது செய்தனர்.

    வாக்குமூலம்

    கைதான சதீஷ்குமார் போலீசாரிடம் அளித்த வாக்குமூலம் வருமாறு:-

    எனது தங்கையை, சக்திவேல் பின்தொடர்ந்து வலுக்கட்டாயமாக காதல் வலையில் வீழ்த்தினார். எனது தங்கைக்கு 18 வயது நிரம்பவில்லை. இதனால் நான் முதலில் எனது தங்கையை கண்டித்தேன். மேலும் வீட்டில் சத்தம் போடுவதை கண்டு அவர், சக்திவேலிடம் பேசாமல் இருந்து வந்தார்.

    ஆனால், எனது தங்கையை பார்ப்பதற்காக வீட்டின் அருகே சக்திவேல் சுற்றி சுற்றி வந்தார். அப்போது எனது தங்கை வீட்டில் நடந்தவற்றை சக்திவேலிடம் தெரி வித்துள்ளார். இதனால் மீண்டும் இருவரும் காதலிக்க தொடங்கினர்.

    இதனால் நான், சக்தி ேவலை சத்தம் போட்டேன். எனது தங்கையிடம் பேசாதே, அவரை பின்தொடராதே, அவள் சிறுமி, என கண்டித்தேன். ஆனால், சக்திவேல் கேட்காமல், எனது தங்கைக்கு செல்போன் வாங்கி கொடுத்தார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. மேலும் இது பற்றி எனது உறவினர்கள், நண்பர்களிடம் தெரிவித்தேன்.

    இதையடுத்து நான், எனது உறவினர் மற்றும் நண்பருடன் சேர்ந்து, சம்பவத்தன்று சக்திவேலை வழிமறித்து தீர்த்துக்கட்டிேனன். இதையடுத்து நாங்கள் போலீசாரிடம் மாட்டாமல் இருக்க தலைமறைவாக சுற்றி திரிந்தோம். ஆனால், போலீசார் எங்களை கண்டுபிடித்து கைது செய்து விட்டனர்.

    இவ்வாறு சதீஷ்குமார் வாக்குமூலத்தில் கூறியதாக தெரிகிறது.

    ெஜயிலில் அடைப்பு

    இதனை தொடர்ந்து சதீஷ்குமார் மற்றும் இவரது உறவினரான 17 வயது சிறுவன் ஆகியோரை வாழப்பாடி கோர்ட்டில் நேற்று போலீசார் ஆஜர்படுத்தினர். இதையடுத்து நீதிபதி உத்தரவின்பேரில் சதீஷ்குமார், ஆத்தூர் கிளை சிறையிலும், 17 வயது சிறுவன் சேலம் கூர்நோக்கு இல்லத்திலும் அடைக்கப்பட்டனர்.

    தலைமறைவான மைக்கேலை வாழப்பாடி போலீசார் தேடி வந்தனர். இன்று காலையில் அவர் போலீசாரிடம் சிக்கினார். இதையடுத்து மைக்கேலை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சினிமாவை மிஞ்சும் சம்பவமாக, சிறு வயது காதல், கொலை செய்யும் அளவிற்கு போனது அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

    • மதுபோதை தகராறில் நண்பர்களே ரவுடியை வெட்டி கொலை செய்த சம்பவம் தண்டையார்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • ரவுடி அஜய்யுடன் மதுகுடித்த 2 சிறுவர்கள் உள்பட 3 பேரை போலீசார் பிடித்து உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

    ராயபுரம்:

    எண்ணூர், சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் அஜய் என்கிற பம்ப் அஜய் (வயது 23). ரவுடி. இவர் மீது 3 கொலை, கொள்ளை, மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட 15 வழக்குகள் உள்ளன.

    நேற்று நள்ளிரவு அவர் தண்டையார்பேட்டை சுனாமி குடியிருப்பு பகுதியில், நண்பர்கள் 5 பேருடன் சேர்ந்து மது குடித்தார். அப்போது அவர்களுக்குள் திடீரென மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.

    இதில் ஆத்திரம் அடைந்த நண்பர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள், கத்தியால் அஜயை சரமாரியாக வெட்டினர். இதில் தலை, கழுத்தில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த கொலையாளிகள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து புது வண்ணாரப்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். ரவுடி அஜய்யின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைகாக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த கொலை தொடர்பாக ரவுடி அஜய்யுடன் மதுகுடித்த 2 சிறுவர்கள் உள்பட 3 பேரை போலீசார் பிடித்து உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

    கொலையுண்ட ரவுடி அஜய், நண்பர்களுடன் மதுகுடிக்க வந்தபோது பை ஒன்றை கொண்டு வந்து இருந்தார். மதுபோதையில் அந்த பையை நண்பர்கள் மறைத்து வைத்து விளையாடி உள்ளனர். அங்கிருந்து அஜய் புறப்பட தயாரானபோது பை காணமால் போய் இருந்ததால் ஆத்திரத்தில் அவர் நண்பர்களை தாக்கியதாக தெரிகிறது. இதனால் கோபம் அடைந்த நண்பர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளாளல் அஜய்யை வெட்டி கொலை செய்து இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

    இந்த கொலை தொடர்பாக மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து பிடிபட்ட 3 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    மதுபோதை தகராறில் நண்பர்களே ரவுடியை வெட்டி கொலை செய்த சம்பவம் தண்டையார்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வீட்டின் மாடியில் தூங்கிக் கொண்டிருந்த வினோத்தை மர்மநபர் அம்மி கல்லால் அடித்து கொலை செய்துள்ளார்.
    • போலீசார் விரைந்து சென்று கந்தசாமியை கைது செய்து விசாரணை நடத்தினர்.

    திருச்செந்தூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் வினோத் (வயது 29). இவர் திருச்செந்தூர் அருகே உள்ள ராஜ் கண்ணா நகரில் வாடகை வீட்டில் தங்கி ஐஸ் வியாபாரம் செய்து வந்தார்.

    நேற்று முன்தினம் நள்ளிரவில் வீட்டின் மாடியில் தூங்கிக் கொண்டிருந்த வினோத்தை மர்மநபர் அம்மி கல்லால் அடித்து கொலை செய்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு திருச்செந்தூர் டி.எஸ்.பி. வசந்தராஜ் விசாரணை நடத்தினார்.

    ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்த வினோத் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

    விசாரணையில் அந்த பகுதியை சேர்ந்த சிவக்குமார் மகன் கந்தசாமி (22) என்பவர் வினோத்தை கொலை செய்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து கந்தசாமியை போலீசார் தேடி வந்த நிலையில் அவர் வீரபாண்டியபட்டணம் பஸ் நிலையம் அருகே நின்று கொண்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    உடனே போலீசார் விரைந்து சென்று கந்தசாமியை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது கந்தசாமி அளித்த வாக்குமூலத்தில், இறந்து போன வினோத் தெரு பைப்பில் தண்ணீர் பிடிக்கும் போது தகராறு செய்வான். அதை தட்டிக் கேட்டதில் ஏற்பட்ட தகராறில் கொலை செய்ததாக கூறினார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருமணமாகி 2 குழந்தைகளுடன் வசித்து வந்த தேவிகா, சதீசுடன் பல இடங்களுக்கு சென்றுள்ளார்.
    • சம்பவத்தன்று கன்ஹாங்காடு பகுதியில் நடந்த கேரள மாநில முடிதிருத்தும் பியூட்டிசியன் தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட மாநாட்டுக்கு தேவிகா சென்றுள்ளார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கண்ணங்காடு அருகே உள்ள முள்ளியார் கிராம பஞ்சாயத்துக்குட்பட்ட போலிகாணம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (வயது 36). இவர் கண்ணங்காட்டில் தனியார் செக்யூரிட்டி ஏஜென்சி நடத்தி வருகிறார்.

    சதீசுக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளனர். இவர் கடந்த 2 மாதங்களாக விடுதியில் வசித்து வந்தார். அப்போது உத்மா கிராம பஞ்சாயத்து மாங்காடு பகுதியைச் சேர்ந்த ஒப்பனை கலைஞர் தேவிகா (34) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது.

    திருமணமாகி 2 குழந்தைகளுடன் வசித்து வந்த தேவிகா, சதீசுடன் பல இடங்களுக்கு சென்றுள்ளார். சம்பவத்தன்று கன்ஹாங்காடு பகுதியில் நடந்த கேரள மாநில முடிதிருத்தும் பியூட்டிசியன் தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட மாநாட்டுக்கு தேவிகா சென்றுள்ளார்.

    அங்கு சென்ற சதீஷ், தேவிகாவை சந்தித்து பேசி உள்ளார். அதன்பிறகு அவரை விடுதிக்கு அழைத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று காலை விடுதி அறையில் வைத்து 2 பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    அதன்பிறகு மதியம் சதீஷ் மட்டும் விடுதி அறையை பூட்டி விட்டு வெளியே சென்றார். அங்கிருந்து ஓஸ்துர்க் போலீஸ் நிலையம் சென்ற அவர், தேவிகாவை கழுத்தை அறுத்துக்கொலை செய்து விட்டதாக கூறி சரண் அடைந்தார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், விடுதி அறைக்குச் சென்று பார்த்தபோது, அங்கு தேவிகா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்துள்ளார். உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதணைக்காக அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து காஞ்சங்கோடு போலீஸ் துணை சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் நாயர் சம்பவ இடம் வந்து சதீசிடம் விசாரணை நடத்தினார். அப்போது, விவாகரத்து பெற்று விட்டு தன்னுடன் வாழுமாறு கடந்த சில நாட்களாக தேவிகா வற்புறுத்தினார். இது எனக்கு பிடிக்கவில்லை. இது தொடர்பாக நேற்றும் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த நான் தேவிகாவின் கழுத்தை அறுத்து தற்கொலை செய்தேன் என போலீசாரிடம் சதீஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கொலையாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
    • போலீசார் அழைத்து வந்து விசாரித்த போது, தனது மகன் மோகன் பாபுவை கொலை செய்ததற்கு பழி தீர்க்கும் வகையில் தான், தான் மத்திகிரியை சேர்ந்த சசி என்பவர் மூலம் கொலை செய்ததாக கூறியுள்ளார்.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் கடந்த 12-ந்தேதி, பெரியார் நகர் அருகே ஒரு ஸ்வீட்ஸ் கடை பகுதியில், மத்திகிரி அருகே சொப்பட்டி கிராமத்தை சேர்ந்த திலக் (24) என்ற வாலிபர், அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள், அவரை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

    இது சம்பந்தமாக ஓசூர் டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணைமேற்கொண்டு வருகின்றனர். மேலும், 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கொலையாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட திலக், அவரது நண்பர்கள் 5 பேருடன் சேர்ந்து சொப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மோகன் பாபு என்பவரை வெட்டி கொலை செய்து விட்டனர். இது சம்பந்தமாக குற்றவாளிகள் 6 பேரும் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளிவந்து விட்டனர்.

    இந்நிலையில், திலக் கொலை தொடர்பாக, மோகன் பாபுவின் தந்தை திம்மராயப்பா என்பவரை சந்தேகத்தின் பேரில் ஓசூர் டவுன் போலீசார் அழைத்து வந்து விசாரித்த போது, தனது மகன் மோகன் பாபுவை கொலை செய்ததற்கு பழி தீர்க்கும் வகையில் தான், தான் மத்திகிரியை சேர்ந்த சசி என்பவர் மூலம் கொலை செய்ததாக கூறியுள்ளார்.

    இது சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்த நிலையில், திலக்கிற்கு போதிய பாதுகாப்பு வழங்கவில்லை என்று கூறி சேலம் சரக டி.ஐ.ஜி உத்தரவின் பேரில், மத்திகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாவித்திரி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சிற்றரசு ஆகிய இருவரையும் கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி. சரோஜ் குமார் தாகூர், சஸ்பெண்டு செய்துள்ளார்.

    • மனைவியின் நடத்தையில் ரமேஷ் சந்தேகம் அடைந்தார். இதனால் தினந்தோறும் மணிமேகலையை அடித்து உதைத்தும் வந்துள்ளார்.
    • இரவு முழுவதும் கணவரின் உடலுடன் வீட்டிலிருந்த மணிமேகலை, இன்று காலை சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.

    சேலம்:

    சேலம் ஜாகீர்ரெட்டிப்பட்டி ரெயில்வே லைன் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி மணிமேகலை. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ரமேஷ் மூட்டை தூக்கும் தொழில் செய்து வந்தார்.

    இந்த நிலையில் ரமேசுக்கு குடிப்பழக்கம் ஏற்பட்டது. தினமும் குடித்து விட்டு வந்து, மனைவியிடம் ரமேஷ் சண்டை போட்டதாக தெரிகிறது. மேலும் மனைவியின் நடத்தையில் ரமேஷ் சந்தேகம் அடைந்தார். இதனால் தினந்தோறும் மணிமேகலையை அடித்து உதைத்தும் வந்துள்ளார்.

    நேற்று இரவு வழக்கம் போல ரமேஷ் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது மணிமேகலையுடன் அவர் தகராறு செய்தார். இதில் அவர்களுக்கிடையே வாக்குவாதம் உண்டானது. அப்போது ரமேஷ், மணிமேகலையை தாக்கினார். இதனால் ஆத்திரம் அடைந்த மணிமேகலை, வீட்டில் இருந்த குளவி கல்லை எடுத்து ரமேசின் தலையில் போட்டார்.

    இதில் கை, தலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காயம் ஏற்பட்ட ரமேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இரவு முழுவதும் கணவரின் உடலுடன் வீட்டிலிருந்த மணிமேகலை, இன்று காலை சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் சம்பவ இடத்திற்கு சென்ற சூரமங்கலம் போலீசார், ரமேஷின் உடலை கைப்பற்றி சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காளிதாஸ் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • கள்ளக்காதல் பிரச்சினையில் பைனான்சியர் கொலை செய்யப்பட்ட சம்பவம் வேடசந்தூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வேடசந்தூர்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகில் உள்ள தேவநாயக்கன்பட்டியை சேர்ந்த சின்னக்காளை மகன் காளிதாஸ்(28). இவர் பெங்களூரில் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். தொழிலில் நஷ்டம் ஏற்படவே கடந்த சில மாதங்களாக சொந்தஊருக்கு வந்துவிட்டார். அப்போது அதேபகுதியை சேர்ந்த ஜோதிலட்சுமி(35) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. ஜோதிலட்சுமிக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

    கணவர் பிரிந்து சென்றுவிட்டதால் காளிதாசுடன் ஒன்றாக வசித்து வந்தார். ஜோதிலட்சுமியின் தங்கை உஷாராணி என்பவருக்கும், அவரது கணவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்து சென்றுவிட்டனர். இந்நிலையில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகில் உள்ள காட்டுமன்னார்கோவில்தெருவை சேர்ந்த கணேசன்(30) என்ற பெயிண்டருன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.

    இருவரும் மதுரையில் வீடு எடுத்து தனியாக வசித்து வந்தனர். நேற்று கணேசன் மற்றும் உஷாராணி ஆகியோர் வேடசந்தூருக்கு வந்தனர்.

    இரவில் கணேசன் மற்றும் காளிதாஸ் ஆகிய இருவரும் அங்குள்ள டாஸ்மாக் பாரில் மதுகுடிக்க சென்றனர். அப்போது கணேசனிடம் உஷாராணியை விட்டுவிடும்படி காளிதாஸ் அறிவுரை கூறியுள்ளார். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் கணேசன் இதுகுறித்து உஷாராணியிடம் செல்போனில் கூறியுள்ளார். அவர் சம்பவ இடத்திற்கு பைக்கில் வந்துள்ளார். அதற்குள் கணேசன் மற்றும் காளிதாஸ் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த கணேசன் தன் கையில் வைத்திருந்த மதுபாட்டிலை எடுத்து காளிதாசின் கழுத்தில் குத்தினார்.

    இதில் ரத்த வெள்ளத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வேடசந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காளிதாஸ் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தலைமறைவாக இருந்த கணேசனையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்காதல் பிரச்சினையில் பைனான்சியர் கொலை செய்யப்பட்ட சம்பவம் வேடசந்தூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நந்தினி அதே கிராமத்தில் தன்னார்வலராக வேலை செய்து வந்தார். கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது.
    • குழந்தை சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், சத்ய சாயி மாவட்டம், கொண்டம்பள்ளி ஹரிபுரத்தை சேர்ந்தவர் ரமணா, இவரது மனைவி நந்தினி. தம்பதியின் மகன்கள் அன்விஷ் ரெட்டி, தன்விஷ் (வயது 2).

    நந்தினி அதே கிராமத்தில் தன்னார்வலராக வேலை செய்து வந்தார். கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் தகராறு ஏற்பட்டது.

    வாழ்க்கையில் விரக்தி அடைந்த நந்தினி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

    தான் மட்டும் தற்கொலை செய்து கொண்டால் குழந்தைகள் அனாதையாகிவிடும் என்று எண்ணிய நந்தினி தனது 2 மகன்களுடன் ஊருக்கு வெளியே உள்ள கிணற்றிற்கு சென்றார்.

    தனது 2 வயது மகன் தன் விஷ்சை கிணற்றில் தூக்கி வீசினார். கிணற்றில் வீசப்பட்ட குழந்தை தண்ணீரில் மூழ்கிய படி உயிருக்கு போராடியது இதனை கண்ட நந்தினி தற்கொலை செய்து கொள்வதற்கு பயந்து கத்தி கூச்சலிட்டார்.

    அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து தண்ணீரில் தத்தளித்த குழந்தையை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். சிகிச்சைக்காக அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் குழந்தை சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஜஹாங்கீருக்கு திருமணம் ஆனது முதல் மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டது.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கனிஷ் பேகம் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் நம் பள்ளியை சேர்ந்தவர் ஜஹாங்கீர். ஆட்டோ டிரைவர். அவரது மனைவி கனிஷ் பேகம் (வயது 40) கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர்.

    ஜஹாங்கீருக்கு திருமணம் ஆனது முதல் மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டது. இதனால் மனைவியை வீட்டிலேயே அடைத்து வைத்தார்.

    இந்நிலையில் கடந்த 12 நாட்களுக்கு முன்பு நம் பள்ளியில் இருந்து லங்கர் ஹவுஸ், பாக்தாத் காலனிக்கு குடி பெயர்ந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து ஆட்டோ ஓட்ட சென்ற ஜஹாங்கீர் மீண்டும் இரவு வீட்டிற்கு வந்தார்.

    அப்போது மனைவியுடன் தகராறு செய்தார். கனிஸ் பேகத்தை சரமாரியாக தாக்கினார். அவரிடம் இருந்து தப்பிய கனிஷ் பேகம் தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு எம்.டி.காலணியில் உள்ள தனது மூத்த சகோதரர் வீட்டிற்கு சென்றார்.

    நேற்று முன்தினம் அங்கு சென்ற ஜஹாங்கீர், மனைவியை சமாதானம் செய்தார். குழந்தைகளை அங்கேயே விட்டுவிட்டு மனைவியை மட்டும் தனது வீட்டிற்கு அழைத்து வந்தார்.

    வீட்டிற்கு வந்த பிறகு கணவன் மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஜஹாங்கீர் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து மனைவியின் கழுத்தை அறுத்தார்.

    இதில் கனிஸ் பேகம் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

    கத்தியில் ரத்தம் சொட்ட சொட்ட ஜஹாங்கீர் போலீஸ் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார். அவரை கைது செய்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கனிஷ் பேகம் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மனைவியின் மீது கொண்ட சந்தேகத்தால் 20 ஆண்டுகளாக வீட்டில் அடைத்து வைத்து கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • கணவன்-மனைவி இருவரும் ஒரே வீட்டில் வசித்தாலும் கடந்த 2 ஆண்டுகளாக பேசாமல் இருந்து வந்தனர்.
    • கணவன்-மனைவி இடையே ஒருவர் மீது ஒருவர் நடத்தையில் சந்தேகப்பட்டு பிரச்சினை செய்துள்ளனர்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே உள்ள வடக்கு அழகு நாச்சியார்புரத்தை சேர்ந்தவர் மகாகிருஷ்ணன் (வயது 40). டிரைவர்.. இவருடைய மனைவி கனகாதேவி (32). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    மகாகிருஷ்ணனும், கனகா தேவியும் ஒருவரையொருவர் சந்தேகப்பட்டு அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். இதனால் கணவன்-மனைவி இருவரும் ஒரே வீட்டில் வசித்தாலும் கடந்த 2 ஆண்டுகளாக பேசாமல் இருந்து வந்தனர்.

    இந்த நிலையில் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டதால் வாக்குவாதம் முற்றியதில், கனகாதேவியை மகா கிருஷ்ணன் வெட்டிக்கொலை செய்து அப்பகுதியில் ஒரு பிச்சிப்பூ தோட்டத்தில் வீசினார். அவரது முகத்தையும் அடையாளம் தெரியாதபடி சிதைத்தார். பின்னர் தலைமறைவானார்.

    இதுகுறித்து குருவிகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்திவேல் வழக்குப்பதிவு செய்தார். அவரது தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளியை தேடி வந்த நிலையில் அவரை போலீசார் கைது செய்தனர்.

    அவரிடம் நடத்திய விசாரணையில், கணவன்-மனைவி இடையே ஒருவர் மீது ஒருவர் நடத்தையில் சந்தேகப்பட்டு பிரச்சினை செய்துள்ளனர். நேற்று முன்தினம் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. உடனே கனகாதேவி, சங்கரன்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் மகாகிருஷ்ணனை அழைத்து விசாரணை நடத்தி, அவருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இதனால் கோபம் அடைந்த மகாகிருஷ்ணன் வீட்டுக்கு சென்றதும், மனைவி கனகாதேவியுடன் தகராறில் ஈடுபட்டு உள்ளார். அப்போது ஆத்திரத்தில் அவர் கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் கூறிய தகவல்களை போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×