search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 230640"

    • செல்வராஜின் உறவினர்கள் போராட்டம் நடத்தி ரவிராகுல், யுகேஷ் கோகுல் ஆகியோரை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்
    • தி.மு.க. நிர்வாகி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்

    கோவை,

    கோவை பேரூர் அருகே உள்ள கரடிமடையை கரும்பர் வீதியை சேர்ந்தவர் ரவிராகுல் (வயது 32). இவரது தம்பி யுகேஷ் ராகுல் (29). இவர் பேரூர் பகுதி தி.மு.க. இளைஞர் அணி செயலாளராக உள்ளார். இவர்கள் 2 பேரும் காளம்பாளையத்தில் டாஸ்மாக் பார் வைத்து நடத்தி வருகின்றனர்.

    சம்பவத்தன்று இவர்களது கடைக்கு கரடிமடையை சேர்ந்த கூலித் தொழிலாளி செல்வராஜ் (55) என்பவர் மது குடிக்க சென்றார். அப்போது செல்வராஜ், பார் உரிமையாளர்கள் ரவிராகுல், யுகேஷ்கோகுல் ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த 2 பேரும் சேர்ந்து தொழிலாளியை தாக்கினர். இதனையடுத்து அவர் அங்கு இருந்து வீட்டிற்கு சென்றார். பின்னர் தாக்குதலால் ஏற்பட்ட காயத்துக்கு அந்த பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று சிகிச்சை பெற்றார்.

    இந்தநிலையில் செல்வராஜ் மீண்டும் சென்று மது குடித்து விட்டு போதையில் வீட்டிற்கு சென்ற போது அங்குள்ள தோட்டத்தில் மயங்கி விழுந்து இறந்தார். இதனை பார்த்த ஒரு அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து பேரூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    அப்போது செல்வராஜின் உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி அவரை அடித்து கொன்ற ரவிராகுல், யுகேஷ் கோகுல் ஆகியோரை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அவர்களை போலீசார் சமாதானம் செய்தனர். பின்னர் செல்வராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பேரூர் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் செல்வராஜை அடித்து கொலை செய்த தி.மு.க. இளைஞரணி செயலாளர் யுகேஷ்கோகுல், மற்றும் அவரது அண்ணன் ரவி ராகுல் ஆகியோரை கைது செய்தனர். இதனை தொடர்ந்து போலீசார் கைது செய்யப்பட்ட 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • டாஸ்மாக் கடைக்கு சென்றவர், அதன்பிறகு கம்பெனிக்கு திரும்பி வரவில்லை
    • பிணத்தை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பொள்ளாச்சி,

    பீகார் மாநிலம் சாம்ப்ரான் பகுதியைச் சேர்ந்தவர் சிவ்டாட் மான்ஜி (வயது 31). இவர் பொள்ளாச்சி அருகே கோட்டூர் ரமணமுதலிபுதூர் பிரிவில் உள்ள காலிபாட்டில் கம்பெனியில் தங்கியிருந்து வேலை பார்த்தார்.

    நேற்று இரவு கம்பெனியில் இருந்த அவர் மதுகுடித்து விட்டு வருவதாக டாஸ்மாக் கடைக்கு சென்றார். அதன்பிறகு அவர் கம்பெனிக்கு திரும்பி வரவில்லை. இதனால் இரவில் சிவ்டாட் மான்ஜியை சக ஊழியர்கள் தேடி வந்தனர். இந்தநிலையில் சிவ்டாட் மான்ஜி, கோட்டூர் ரமணமுதலிபுதூர் பிரிவில் உள்ள நாகபிள்ளையார் கோவில் எதிரில் பிணமாக கிடந்தார். இன்று காலை அந்த வழியாகச் சென்றவர்கள் சிவ்டாட் மான்ஜி பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுபற்றி அவர்கள் கோட்டூர் போலீஸ்நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது சிவ்டாட் மான்ஜியின் உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்தன. இதனால் அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

    நேற்று இரவு மதுகுடிக்கச் சென்றபோது யாருடனாவது தகராறு ஏற்பட்டு ஆத்திரத்தில் அந்த நபர்கள் சிவ்டாட் மான்ஜியை அடித்துக் கொலை செய்து இருக்கலாம் என போலீசார் கருதுகிறா ர்கள். இதுதொடர்பாக அவர் எந்த கடைக்கு மது குடிக்கச் சென்றார், அவருடன் வேறு யாராவது சென்றார்களா என்பது பற்றி போலீசார விசாரித்து வருகிறார்கள். மேலும் சிவ்டாட் மான்ஜியின் பிணத்தை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    • ரத்த வெள்ளத்தில் அந்த பெண் கொலை செய்யப்பட்டு கிடந்தார். மேலும் அந்த பெண் உடலை சுற்றிலும் மிளகாய் பொடி தூவப்பட்டு இருந்தது.
    • பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வடக்கு அழகுநாச்சியார்புரம் கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான தோட்டம் அப்பகுதியில் உள்ளது. அந்த தோட்டத்தில் வேலைக்கு செல்வதற்காக இன்று காலை சிலர் சென்றுள்ளனர்.

    அப்போது அங்கு செல்லும் வழியில் பெண் ஒருவர் மர்மமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடந்தார். சுமார் 45 வயது மதிக்கத்தக்க அந்த பெண்ணின் கழுத்தில் ஒரு மஞ்சள் கயிறு மட்டும் இருந்தது. அவரது கழுத்தில் வெட்டுக்காயங்கள் பலமாக இருந்தது.

    இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்தவர்கள், குருவிகுளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அங்கு ரத்த வெள்ளத்தில் அந்த பெண் கொலை செய்யப்பட்டு கிடந்தார். மேலும் அந்த பெண் உடலை சுற்றிலும் மிளகாய் பொடி தூவப்பட்டு இருந்தது.

    தகவல் அறிந்து சங்கரன்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு சுதீர் அங்கு சென்று பார்வையிட்டார்.

    பின்னர் அந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை செய்யப்பட்ட பெண் யார்? அவரை யார் கொலை செய்தது? எதற்காக கொல்லப்பட்டார்? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • முன்விரோதம் இருந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அவர்களுக்குள் ஏலம் எடுப்பதில் பிரச்சினை ஏற்பட்டதால் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது தெரியவந்தது.
    • தலைமறைவான காளிதாஸ் உள்ளிட்ட 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வந்த நிலையில் காளிதாசை நேற்று மாலை போலீசார் கைது செய்தனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே உள்ள வல்லம் பகுதியை சேர்ந்தவர் சுடலை (வயது 41). பழ வியாபாரி. இவர் குற்றால சீசன் காலங்களில் கேரளாவில் இருந்து ரம்டான் பழங்களை மொத்தமாக வாங்கி வந்து விற்பனை செய்வது வழக்கம்.

    தற்போது குற்றால சீசன் தொடங்க உள்ள நிலையில் ரம்டான் பழங்களை ஏலம் எடுப்பதற்காக சுடலை கேரளாவிற்கு சென்றுள்ளார். அப்போது, அதே ஏலத்தில் வல்லம் பகுதியை சேர்ந்த காளிதாஸ் என்பவரும் பங்கேற்றுள்ளார். கடும்போட்டியில் சுடலை ஏலம் எடுத்துவிட்டார்.

    இதனால், ஆத்திரம் அடைந்த காளிதாசுக்கும், சுடலைக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று குற்றாலம் அருகே வல்லம் பகுதியில் உள்ள சுடலைமாடன் கோவில் அருகில் சுடலை நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த காளிதாசும், அவரது கூட்டாளி ஒருவரும் சேர்ந்து அரிவாளால் சுடலையை சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர்.

    இதுகுறித்து குற்றாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். சம்பவ இடத்தை தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன், துணை சூப்பிரண்டு நாகசங்கர் ஆகியோரும் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். தலைமறைவான காளிதாஸ் உள்ளிட்ட 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வந்த நிலையில் காளிதாசை நேற்று மாலை போலீசார் கைது செய்தனர்.

    அவரிடம் நடத்திய விசாரணையில், கடந்த 1 வருடத்திற்கு முன்பு ரம்டான் பழங்களை ஏலம் எடுப்பதில் ஏற்பட்ட தகராறில் சுடலை மற்றும் அவரது கூட்டாளிகள் காளிதாசை வெட்டியதாகவும், இதில் அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியதும் தெரிய வந்தது. அந்த முன்விரோதம் இருந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அவர்களுக்குள் ஏலம் எடுப்பதில் பிரச்சினை ஏற்பட்டதால் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது தெரியவந்தது.

    இதில் தொடர்புடைய மற்றொரு கொலையாளியான சங்கர் என்பவர் ஆலங்குளம் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் பதுங்கி இருந்தார். அவரையும் போலீசார் இன்று அதிகாலை கைது செய்தனர். இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முப்புடாதி மற்றும் சிலர் கூட்டமாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கி விட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர்.
    • 6 பேர் கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் முப்புடாதியை சரமாரி வெட்டிக்கொன்றது.

    சிங்கை:

    நெல்லை மாவட்டம் அம்பையை அடுத்த பிரம்மதேசம் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் சண்முகநயினார். இவரது மகன் முப்புடாதி(வயது 32). இவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். மேலும் விவசாயமும் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி விட்டது.

    நேற்று இரவு அம்பையை அடுத்த வாகைகுளம் மூப்பனார் தெருவுக்கு சற்று தொலைவில் முப்புடாதி மற்றும் சிலர் கூட்டமாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கி விட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர்.

    இந்நிலையில் அதே பகுதியில் ஒரு திருமண மண்டபம் அருகே முப்புடாதி நள்ளிரவு நேரத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 6 பேர் கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் முப்புடாதியை சரமாரி வெட்டிக்கொன்றது. பின்னர் அவரது தலையை துண்டித்து அருகில் இருக்கும் வாறுகாலில் வீசிவிட்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது.

    இதுகுறித்து தகவல் அறிந்த அம்பை போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். கொலை செய்யப்பட்டு கிடந்த முப்புடாதி உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    சமீபத்தில் முப்புடாதி மனைவியை அந்த பகுதியை சேர்ந்த ஒரு நபர் அவதூறாக பேசியதாகவும், அதுதொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் முப்புடாதி ஒருவரை வெட்டியதாக கூறப்படுகிறது. அந்த முன்விரோதத்தில் அரிவாள் வெட்டுபட்டவர் இந்த கொலையை செய்திருக்கலாமா? அல்லது நேற்று நடைபெற்ற தகராறு காரணமாக இந்த கொலை நடந்ததா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தனிப்படை அமைத்து கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • கொலராடோவில் கருவுற்ற பெண்கள், எந்த நிலையில் இருந்தாலும் கருக்கலைப்பு செய்து கொள்ளலாம்.
    • ஏற்கனவே பல சமயங்களில் தாம்ப்சன் கொன்சேல்ஸ்-ஐ தாக்கி இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

    அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த நபர் தனது காதலி கருக்கலைப்பு செய்ததற்காக துப்பாக்கியால் சுட்டு கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 22 வயதான ஹரோல்டு தாம்ப்சன், 26 வயதான கேப்ரியல்லா கொன்சேல்ஸ்-ஐ கொலை செய்தார் என்று டல்லாஸ் காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    டெக்சாசில் இருந்து சுமார் 800 மைல் தூரத்தில் அமைந்திருக்கும் கொலராடோவுக்கு பயணம் செய்த கொன்சேல்ஸ் அங்கு கருக்கலைப்பு செய்து கொண்டார். கொலராடோவில் கருவுற்ற பெண்கள், எந்த நிலையில் இருந்தாலும் கருக்கலைப்பு செய்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது.

     

    கருவுற்று ஆறு வாரங்கள் ஆனவர்கள், மருத்துவ அவசர நிலையின்றி தாமாக முன்வந்து கருக்கலைப்பு செய்வது டெக்சாஸ் மாகாணத்தில் சட்டரீதியில் குற்ற செயல் ஆகும். சம்பவத்தன்று கொன்சேல்ஸ்-ஐ சந்தித்த தாம்ப்சன் அவரிடம் சிறுது நேரம் பேசிக் கொண்டிருந்தார். பின் தாம்ப்சன், கொன்சேல்ஸ் கழுத்தை நெறிக்க தொடங்கியுள்ளார்.

    கொன்சேல்ஸ் அவரை தள்ளிவிட்டு அங்கிருந்து நடந்து செல்ல முயன்றிருக்கிறார். அப்போது தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்த தாம்ப்சன் கொன்சேல்ஸ் தலையில் சுட்டார். ஏற்கனவே பல சமயங்களில் தாம்ப்சன் கொன்சேல்ஸ்-ஐ தாக்கி இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. காதலியை கொலை செய்த தாம்ப்சனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். 

    • ஆள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் இன்று மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை ஜெய்ஹிந்துபுரம் சோலையழகுபுரம் முதல் தெருவை சேர்ந்தவர் விஜய ராஜன். இவரது மகன் ஆனந்தகுமார் (வயது 22). பால் கறந்து கொடுக்கும் வேலை பார்த்து வந்த அவர், இன்று காலை தனது மோட்டார் சைக்கிளில் பள்ளம் மீனாட்சி தியேட்டர் பகுதியில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த 5 பேர் கும்பல் ஆனந்தகுமாரை வழி மறித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, அந்த கும்பலிடம் இருந்து தப்பி ஓட முயன்றார்.

    ஆனால் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் ஆனந்த குமாரை விடாமல் துரத்தி சென்று நடுரோட்டில் ஓட ஓட விரட்டி அரிவாளால் சரமாரி வெட்டினர். இதில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த ஆனந்தகுமார் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. பட்டப்பகலில் நடுரோட்டில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து தெற்குவாசல் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த ஆனந்தகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனந்தகுமார் கொலை செய்யப்பட்டது ஏன்? அவரை கொன்றவர்கள் யார்? என போலீசார் விசாரணை நடத்தினர்.

    போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் மதுரை சித்திரை திருவிழாவின் போது ஆனந்தகுமார் தரப்பினருக்கும், மற்றொரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டதும், இதனால் அவர்களுக்குள் கடுமையான மோதல் நடந்ததும் தெரியவந்தது.

    அந்த மோதல் சம்பவத்தின் முன்விரோதம் காரணமாக ஆனந்தகுமாரை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆனந்தகுமார் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நேரம் பகல் நேரத்தில் எப்போதும் ஆள்நடமாட்டம் அதிகமாக உள்ள இடமாகும். இன்றும் அதேபோல் அந்த வழியாக ஏராளமானோர் சென்றபடி இருந்தனர்.

    அந்த நேரத்தில் ஆனந்த குமாரை கொலையாளிகள் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்தனர். ஆனந்த குமாரை மர்ம நபர்கள் வெட்டியதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் பயத்தில் அலறியடித்தபடி அங்கிருந்து சிதறி ஓடினர்.

    ஆள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் இன்று மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • சென்னையில் தலைமறைவாக இருந்து இளம்பெண்ணின் காதலன் அகிலனை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
    • இளம்பெண் கொன்று புதைக்கப்பட்ட வழக்கில் அருண் (வயது 21) கஞ்சனூர் போலீசாரிடம் நேற்று இரவு சரணடைந்தார்

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள சாலவனூர் கிராமத்தில் சுடுகாட்டின் அருகில் 100 நாள் வேளையின் பள்ளம் தோண்டினர். அப்போது இளம்பெண்ணின் உடல் கிடைத்தது. இது தொடர்பான புகாரின் பேரில் செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு கவின்னா தலைமையிலான கஞ்சனூர் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் இறந்த பெண் 17 வயதிலிருந்து 19 வயதிற்குள் இருக்கலாம் என்றும், இளம்பெண் 3 மாத கர்ப்பிணியாக இருப்பதாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் வந்தது. இது தொடர்பாக கஞ்சனூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர், சென்னையில் தலைமறைவாக இருந்து இளம்பெண்ணின் காதலன் அகிலனை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர் அளித்த தகவலின்படி அவரது நண்பர் சுரேஷ்குமாரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.  இந்நிலையில்இளம்பெண் கொன்று புதைக்கப்பட்ட வழக்கில் பழைய கருவாச்சியை சேர்ந்த அருண் (வயது 21) கஞ்சனூர் போலீசாரிடம் நேற்று இரவு சரணடைந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அருண் கூறியதாவது:-  இளம்பெண் 3 மாதம் கருவுற்றதால், திருமணம் செய்து கொள்ள அகிலனை வலியுறுத்தினார். அகிலன் திருமணம் செய்வதாக கூறி, இளம்பெண்ணை கடந்த 3-ந்தேதி மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு ஊர் சுற்றினார். அவர்களுடன் நானும் தனி மோட்டார் சைக்கிளில் சென்றேன். அப்போது, இளம்பெண்ணுக்கும், அகிலனுக்கும் அரியலூர் அருகே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அகிலன் இளம்பெண்ணின் கன்னத்தில் அறைந்தார். இதில் இளம்பெண் மயங்கி விழுந்தார். உடனடியாக அகிலனும், நானும் இளம்பெண்ணின் துப்பட்டாவால் கழுத்தை நெறித்து கொலை செய்தோம். பின்னர், அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்று சுரேஷ்குமார் உதவியுடன் சாலவனூர் சுடுகாடு அருகே புதைத்து விட்டோம். இந்த சம்பவத்தில் அகிலன், சுரேஷ்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டது எனக்கு தெரியவந்தது. அடுத்து என்னை தேடுவார்கள் என்பதால் நானாகவே வந்து சரணடைந்துவிட்டேன் என்று கூறினார்.

    இதனையடுத்து 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய கஞ்சனூர் போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர். கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் நடந்து சில தினங்களில் துப்பு துலக்கி சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்த செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு மற்றும் கஞ்சனூர் போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

    • நேற்று இரவு விஜயகுமாருக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது.
    • இந்த சத்தம் கேட்ட சேட்டு, விஜயகுமார் வீட்டிற்கு சென்றுள்ளார். மேலும் எதற்கு இவ்வாறு சண்டை போட்டுக் கொள்கிறீர்கள்? என தட்டிக் கேட்டுள்ளார்.

    ராசிபுரம்:

    ராசிபுரம் அருகே குடும்ப தகராைற தட்டிக்கேட்ட முதியவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது அண்ணன் மகனை போலீசார் கைது செய்தனர்.

    குடும்ப தகராறு

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் டவுன் எல்.ஐ.சி ஆபீஸ் பகுதியை சேர்ந்தவர் சேட்டு (வயது 60). இவரது அண்ணன் மகனான விஜயகுமார் (27), சேட்டுவின் வீட்டிற்கு அருகில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில், நேற்று இரவு விஜயகுமாருக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இந்த சத்தம் கேட்ட சேட்டு, விஜயகுமார் வீட்டிற்கு சென்றுள்ளார். மேலும் எதற்கு இவ்வாறு சண்டை போட்டுக் கொள்கிறீர்கள்? என தட்டிக் கேட்டுள்ளார்.

    குத்தி கொலை

    இதனால் ஆத்திரமடைந்த விஜயகுமார், நீங்கள் எதற்கு இதுபற்றி கேட்கிறீர்கள்? என்று கூறி, அங்கிருந்த கத்தியால் சேட்டுவை சரமாரியாக குத்தினார். இதில், சேட்டு ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.

    இதை பார்த்து அதிர்ச்சி யடைந்த அக்கம் பக்கத்தில் இருந்தவர், உடனடியாக அவரை மீட்டு, ராசிபுரம் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், சேட்டு ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ராசிபுரம் போலீசார், சேட்டுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி விஜயகுமாரை கைது செய்தனர்.

    அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. சேட்டுவை கொலை செய்ததது குறித்து அவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்கு மூலம் அளித்தார். அவரிடமிருந்து கொலைக்கு கத்தியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கணவன், மனைவி வீட்டில் சண்டையிட்டதை தட்டிக் கேட்ட முதியவர், அண்ணன் மகனால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் ராசிபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வாலிபர்கள் பூபதியை சரமாரியாக தாக்கி தலையில் கல்லை போட்டு விட்டு தப்பி ஓடி உள்ளனர்.
    • போலீசார் பூபதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    திருவள்ளூர்:

    பூந்தமல்லி அடுத்த திருமழிசை பகுதியை சேர்ந்தவர் பூபதி (50). கூலித்தொழிலாளியான இவர் சிறு சிறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தார்.

    இந்நிலையில் நேற்று மாலை திருமழிசை முத்து ராஜா 3-வது தெருவில் குடிபோதையில் அந்த பகுதியில் உள்ள வாலிபர்களிடம் தகராறில் ஈடுபட்டார்.

    இதில் ஆத்திரமடைந்த சில வாலிபர்கள் பூபதியை சரமாரியாக தாக்கி தலையில் கல்லை போட்டு விட்டு தப்பி ஓடி உள்ளனர்.

    இதில் பலத்த காயமடைந்த பூபதி சம்பவ இடத்திலேயே துடித்து துடித்து உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வெள்ளவேடு இன்ஸ்பெக்டர் இளையராஜா தலைமையிலான போலீசார் பூபதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

    • மாட்டை வேட்டையாடும் நோக்கத்தில் யாரேனும் கொன்றிருக்கலாம் என போலீசில் புகார் அளித்தார்.
    • சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    போடி அருகே வடமலைநாச்சியம்மன் கோவில் செல்லும் சாலையில் காகம்பாறை மலையடிவாரப்பகுதி உள்ளது. போடி கரட்டுப்பட்டியை சேர்ந்த பவுன்பாண்டி என்பவர் தான் வளர்த்து வந்த 2 நாட்டு மாடுகளை ஜல்லிக்கட்டு பயிற்சி அளிப்பதற்காக இங்குள்ள தனது உறவினர் வீட்டு தோட்டத்தில் கட்டி வைத்திருந்தார்.

    சம்பவத்தன்று பயிற்சிக்காக கட்டி வைக்கப்பட்டிருந்த ஒரு ஜல்லிக்கட்டு மாடு மாயமானது. இதனைதொடர்ந்து அந்த மாட்டை பவுன்பாண்டி மற்றும் அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்நிலையில் அந்த மாடு மலைஉச்சியில் மாந்தோப்பு பகுதியில் அழுகிய நிலையில் இறந்து கிடந்தது. இதுகுறித்து பவுன்பாண்டி குரங்கனி போலீசில் புகார் அளித்தார். மாடு கட்டப்பட்டிருந்த மூக்கணாங்கயிறு காணவில்லை.

    மேலும் அதன் சதை பகுதி முற்றிலும் எடுக்கப்பட்டுள்ளது. கயிறு எரிந்த நிலையில் உள்ளது. எனவே இந்த மாட்டை வேட்டையாடும் நோக்கத்தில் யாரேனும் கொன்றிருக்கலாம் என போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவஇடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது மாட்டின் இறைச்சி பகுதி வெட்டி எடுக்கப்பட்டது உறுதியானது. இதனைதொடர்ந்து அது கொலை செய்யப்பட்டது தெரியவரவே இச்சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • பிஜூவின் பிணத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • கணவன், மனைவி இருவரும் இறந்து விட்டதால் அவர்களின் இரண்டு குழந்தைகளும் இப்போது பெற்றோரை இழந்து அனாதையாகி உள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    களியக்காவிளையில் கேரள எல்லையான காயங்குளம் பகுதியை சேர்ந்தவர் பிஜூ (வயது 39). இவருக்கு லவ்லி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

    பிஜூவுடன் அவரது பெற்றோரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். பிஜூவுக்கும் அவரது மனைவி லவ்லிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படும். அப்போது இருவரும் வாய்தகராறில் ஈடுபடுவார்கள். நேற்று இரவும் இதுபோல இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இருவரும் ஒருவரையொருவர் திட்டி சத்தம் போட்டனர்.

    சிறிது நேரத்தில் பிஜூவின் படுக்கை அறையில் இருந்து அலறல் சத்தம் கேட்டது. உடனே பிஜூவின் தந்தையும், தாயும் அங்கே ஓடி சென்றனர். அப்போது பிஜூ கையில் கத்தியுடன் அறையில் இருந்து வெளியே ஓடி வந்தார்.

    உடனே பிஜூவின் பெற்றோர் படுக்கை அறைக்குள் சென்று பார்த்த போது அங்கு ரத்த வெள்ளத்தில் லவ்லி உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் லவ்லியை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், லவ்லி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். குடும்ப தகராறு காரணமாக பிஜூ மனைவி லவ்லியை கத்தியால் குத்தி கொலை செய்திருப்பது தெரிய வந்தது.

    இது தொடர்பாக அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து லவ்லியின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து லவ்லியை கொலை செய்த அவரது கணவரை தேடி வந்தனர்.

    இந்தநிலையில் காயங்குளம் பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் வாலிபர் ஒருவர் பிணமாக கிடப்பதாக அந்த பகுதியில் உள்ளவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு சென்று பிணத்தை கைப்பற்றி விசாரித்தனர்.

    இதில் அங்கு பிணமாக கிடந்தவர் மனைவியை கொலை செய்த பிஜூ என தெரியவந்தது. பிஜூ மனைவியை குத்தி கொலை செய்த பின்னர், வீட்டில் இருந்து வெளியே வந்து அருகில் உள்ள ரெயில் தண்டவாளம் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

    இதையடுத்து பிஜூவின் பிணத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கணவன், மனைவி இருவரும் இறந்து விட்டதால் அவர்களின் இரண்டு குழந்தைகளும் இப்போது பெற்றோரை இழந்து அனாதையாகி உள்ளனர். இதுஅந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×