search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கள்ளக்குறிச்சி"

    • குற்றவாளிகளைக் காப்பாற்ற அரசே சதி செய்வது கண்டிக்கத்தக்கதாகும்.
    • சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கள்ளக்குறிச்சி நகரம் கருணாபுரத்தில் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கக் காரணமான கள்ளச்சாராய வணிகர்கள் மற்றும் அவர்களுக்கு பின்னணியில் இருப்பவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி, கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்ற குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ள நிலையில், இந்த வழக்கின் குற்றவாளிகளை தப்ப வைக்க முயற்சிகள் நடக்கின்றன. ஏராளமான குடும்பங்கள் வீதிக்கு வருவதற்கு காரணமான குற்றவாளிகளைக் காப்பாற்ற அரசே சதி செய்வது கண்டிக்கத்தக்கதாகும்.

    கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகள் குறித்த அனைத்து உண்மைகளும் வெளிக்கொண்டு வரப்பட வேண்டும். கள்ளச்சாராய வணிகர்களுக்கு காவலர்களாக இருப்பவர்கள் எவ்வளவு உயர்பதவியில் இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். எனவே, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகள் குறித்த விசாரணையை சி.பி.ஐ.யிடம் தமிழக அரசு ஒப்படைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • கள்ளச்சாராயம் குடித்த பலருக்கு கண் பார்வை பறிபோனது.
    • ஆய்வகங்களில் எத்தனால் வேதிப்பொருள் பயன்படுத்தப்படுகிறது.

    திண்டுக்கல்:

    கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இதனைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் கள்ளச்சாராய விற்பனை, சட்ட விரோத மது விற்பனை குறித்து போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    கள்ளச்சாராயம் குடித்த பலருக்கு கண் பார்வை பறிபோனது. இதற்கு காரணம் போதைக்காக பயன்படுத்தப்படும் மெத்தனால், எத்தனால் வேதிப்பொருட்கள் எனத் தெரிய வந்துள்ளது. எனவே இதனை கண்காணிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    ஆஸ்பத்திரி, கல்லூரிகளில் உள்ள ஆய்வகங்களில் எத்தனால் வேதிப்பொருள் பயன்படுத்தப்படுகிறது. திண்டுக்கல் நகர் பகுதியில் செயல்படும் ஆஸ்பத்திரிகளில் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் சோதனை நடத்தினர்.

    தனியார் ஆஸ்பத்திரிகள், கல்லூரிகளில் உள்ள ஆய்வகங்களில் அளவுக்கு அதிகமாக எத்தனால் வேதிப்பொருள் பயன்படுத்தப்படுகிறதா? என சோதனை நடத்தினர்.

    மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகள், ஆஸ்பத்திரிகளில் உள்ள ஆயவகங்களில் சோதனை நடத்த உள்ளதாக மது விலக்கு போலீசார் தெரிவித்தனர்.

    நகர் முழுவதும் நடைபெற்ற அதிரடி சோதனையில் கள்ளச்சாராயம் எங்கும் விற்பனை செய்யப்படவில்லை. ஆனால் சட்ட விரோதமாக மது விற்பனைக்கு பதுக்கிய 345 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • தமிழக அரசின் தடுமாற்றத்தால் நிகழ்ந்த பேரவலம்.
    • நியாயப்படுத்த முடியாத பெருங்குற்றம்.

    சென்னை:

    கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 50 பேர் பலியான சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த கொடூர சம்பவத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அரசு நிர்வாகத்தை கண்டித்து அறிக்கை வெளியிட்டு இருப்பதுடன் நேற்று பாதிக் கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண தொகை வழங்க அரசு அறிவித்துள்ளது.

    இந்த நிலையில் நடிகர் பார்த்திபன் இன்று சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள கண்டன பதிவில் கூறியிருப்பதாவது:-

    கள்ளச் சாவு....க்கு எதுக்கு நல்ல சாவு (ரூ.10 லட்சம்)? என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    ஜி.வி.பிரகாஷ்

    இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டள்ள பதிவில், காண்போர் நெஞ்சம் கலங்கி பதறுகிறது. கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணங்கள் தமிழக அரசின் தடுமாற்றத்தால் நிகழ்ந்த பேரவலம். நியாயப்படுத்த முடியாத பெருங்குற்றம். இழப்பீடுகள் எதையும் ஈடு கட்டாது. இனி மரணங்கள் நிகழாத வண்ணம் தவறு செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதி செய்யும் வரை என பதிவிட்டுள்ளார்.

    தொடர்ந்து இயக்குனர்கள் பா.ரஞ்சித், மோகன்ஜி உள்பட பல திரையுலக பிரபலங்கள் கண்டனம் தெரிவித்து பதிவிட்டு உள்ளனர்.

    • கள்ளக்குறிச்சியில் வைத்து சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.
    • கண்ணுக்குட்டி என்ற கோவிந்தராஜனுக்கு, சின்னதுரை சாராயத்தை விற்பனை செய்துள்ளார்.

    கள்ளக்குறிச்சியில் உள்ள கருணாபுரம் கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 42ஆக அதிகரித்துள்ளது.

    100-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், புதுச்சேரி ஜிப்மர் உள்ளிட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஜிப்மர் மருத்துவமனையில் மட்டும் 16 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

    இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.

    இந்நிலையில், கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தில், சாராயம் விற்பனை செய்த சின்னதுரை என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    சாராய வியாபாரி சின்ன துரையை கள்ளக்குறிச்சியில் வைத்து சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

    முன்னதாக, கண்ணுக்குட்டி என்ற கோவிந்தராஜனுக்கு, சின்னதுரை சாராயத்தை விற்பனை செய்துள்ளார்.

    • கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 42ஆக அதிகரித்துள்ளது.
    • உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு.

    கள்ளக்குறிச்சியில் உள்ள கருணாபுரம் கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 42ஆக அதிகரித்துள்ளது.

    100-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், புதுச்சேரி ஜிப்மர் உள்ளிட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஜிப்மர் மருத்துவமனையில் மட்டும் 16 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

    இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.

    கள்ளக்குறிச்சி ஏற்கனவே அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலு, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக தலைவர் அண்ணாமலை, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா உள்ளிட்டோர் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர்.

    இந்நிலையில், கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜய் கள்ளக்குறச்சிக்கு வருகை தந்துள்ளார்.

    அங்கு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து விஜய் ஆறுதல் கூறி வருகிறார். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்தும் விஜய் கேட்டறிந்தார்.

    இரவு 8 மணிக்குள் நேரடியாக அரசு மருத்துவமனைக்கு சென்றடைவார் என தகவல் வெளியான நிலையில், விஜய் தற்போது மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளார்.

    சம்பவம் குறித்து காலை அறிக்கை வெளியிட்ட நிலையில் தற்போது நடிகர் விஜய் நேரில் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    விஜய் மற்றும் கட்சியின் முக்கிய பிரதிநிதிகள் உடன் சென்றுள்ளனர்.

    கள்ளக்குறிச்சி மருத்துவமனையை தொடர்ந்து, கருணாபுரம் கிராமத்திற்கும் விஜய் செல்லயிருப்பதாக கூறப்படுகிறது.

    • ஜிப்மர் மருத்துவமனையில் மட்டும் 16 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை.
    • உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.

    கள்ளக்குறிச்சியில் உள்ள கருணாபுரம் கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 40ஆக அதிகரித்துள்ளது.

    100-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், புதுச்சேரி ஜிப்மர் உள்ளிட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஜிப்மர் மருத்துவமனையில் மட்டும் 16 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

    இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.

    இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் தமிழக அரசை கண்டித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    இதுகுறித்து ஜி.வி.பிரகாஷ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:-

    காண்போர் நெஞ்சம் கலங்கி பதறுகிறது .

    கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் தமிழக அரசின் தடுமாற்றத்தால் நிகழ்ந்த பேரவலம்.

    நியாப்படுத்த முடியாத பெருங்குற்றம். இழப்பீடுகள் எதையும் ஈடுகட்டாது , இனி மரணங்கள் நிகழாவண்ணம் தவறு செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதி செய்யும் வரை.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில், விஷ சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.
    • 16 நோயாளிகளும் அனுமதிக்கப்பட்டதிலிருந்து டயாலிசிஸ் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

    கள்ளக்குறிச்சியில் உள்ள கருணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    100-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், புதுச்சேரி ஜிப்மர் உள்ளிட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதில், பலரது உடல்நலம் கலலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில், விஷ சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.

    இந்நிலையில், ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 19 பேரில் 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மீதமுள்ள 16 பேரும் கவலைக்கிடமாக இருப்பதாக ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

    இதுகுறித்து அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    ஜிப்மர் மருத்துவமனையில் ஜூன் 19, 2024 அன்று விஷச்சாராயம் அருந்திய 19 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

    மீதமுள்ள அனைவரும் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். இதில், 10 நோயாளிகளுக்கு மூச்சு சம்பந்தப்பட்ட சிரமம் இருந்ததால் அவர்களுக்கு வெண்டிலேட்டர் கருவி பொருத்தப்பட்டு, உயர்தர உயிர்காக்கும் சிகிச்சைக்காக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    மீதமுள்ள 6 நோயாளிகளும் தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். 16 நோயாளிகளும் அனுமதிக்கப்பட்டதிலிருந்து டயாலிசிஸ் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

    அனைத்து நோயாளிகளுக்கும் பலதரப்பட்ட மருத்துவ குழுக்களால் மிகுந்த கவனத்துடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் அவர்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 

    • இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை தொடங்கியுள்ளது.
    • சிகிச்சையில் உள்ளவர்களை காப்பாற்ற அரசு முழுவீச்சில் பணியாற்றி வருகிறது.

    கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

    மருத்துவமனையில் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் அவர் கேட்டறிந்தார்.

    உதயநிதி ஸ்டாலினுடன் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் மா.சுப்பிரமணியன் ஆகியோர் உள்ளனர்.

    தொரடர்ந்து, கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக கருணாபுரம் கிராமத்திற்கு உதயநிதி ஸ்டாலின் சென்றார்.

    அங்கு, உடல்களுக்கு அஞ்சலி செலுத்திய உதயநிதி ஸ்டாலின் அவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.

    பிறகு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

    அப்போது அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது:-

    261 பேர் கொண்ட மருத்துவ குழு அமைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சைகளை தொடர்ந்து கண்காணிக்க மருத்துவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சிகிச்சையில் உள்ளவர்களை காப்பாற்ற அரசு முழுவீச்சில் பணியாற்றி வருகிறது.

    இந்த விவகாரத்தில் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    உள்துறை செயலாளர், டிஜிபி ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் ஒரு நபர் ஆணையமும் அமைக்கப்பட்டுள்ளது.

    இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம், பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயத்தால் தாய், தந்தையை இழந்த பிள்ளைகளின் கல்வி மற்றும் வாழ்வாரத்திற்கு உதவிகள் வழங்கப்படும்.

    நேற்று முதல் 132 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுவரை 38 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை தொடங்கியுள்ளது.

    கள்ளச்சாராயம் எப்போதும் இருக்க கூடாது என்பது தான் அரசின் நோக்கம். கள்ளச்சாராயம் விவகாரத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்படும். இந்த சம்பவத்திற்கு பிறகு இன்னும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    உரிய விசாரணைக்கு பிறகு அதிகாரிகள் மீது அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

    மருத்துவமனைகளில் போதுமான அளவு மருந்துகள் இருப்பது உள்ளது. யார் தவறு செய்திருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பலரது உடல்நலம் கலலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்பு.
    • அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சியில் உள்ள கருணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    நூற்றுக்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், புதுச்சேரி ஜிப்மர் உள்ளிட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதில், பலரது உடல்நலம் கலலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில், விஷ சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.

    இதுவரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் 23 பேரும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 3 பேரும் உயிரிழந்துள்ளனர்.

    விழுப்புரம் அரசு மருத்துவமனையில் 4 பேரும், சேலம் அரசு மருத்துவமனையில் 10 பேர் என இதுவரையில் 40 பேர் உயிரிழந்துள்ளனர்.

    மேலும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வரும் 16 பேரும் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    • கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதுமே போலீசார் தீவிரமாக ரோந்து சுற்றி வந்து சாராய வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
    • கள்ளச்சாராயாம் விவகாரம் தொடர்பாக அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சியில் உள்ள கருணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கள்ளச்சாராயம் குடித்த 40 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் கள்ளக்குறிச்சி, சேலம், புதுச்சேரி ஜிப்மர் உள்ளிட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதில், பலரது உடல்நலம் மேலும் கலலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதுமே போலீசார் தீவிரமாக ரோந்து சுற்றி வந்து சாராய வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    சற்று முன்பாக, பாஜக தலைவர் அண்ணாமலை, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா உள்ளிட்டோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

    இந்நிலையில், கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகிறார்.

    மருத்துவமனையில் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து உதயநிதி ஸ்டாலின் கேட்டறிந்தார்.

    உதயநிதி ஸ்டாலினுடன் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் மா.சுப்பிரமணியன் ஆகியோர் உள்ளனர்.

    இதைதொடர்ந்து, பாதிக்கப்பட்ட கருணாபுரம் கிராமத்திற்கும் உதயநிதி செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. அங்கு வைக்கப்பட்டுள்ள உடல்களுக்கு உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்துகிறார்.

    • புகார் அளித்தும் கள்ளச்சாராய விற்பனையை தடுக்கவில்லை.
    • மக்கள் மீது மு.க.ஸ்டாலினுக்கு அக்கறை இல்லை.

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கள்ளக்குறிச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கள்ளக்குறிச்சியில் போலீஸ் நிலையம் பின்புறமே கள்ளச்சாராயம் விற்கப்படுகிறது என்றால் இந்த ஆட்சியின் நிர்வாகம் எப்படி இருக்கிறது என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

    ஆளும் கட்சியை சேர்ந்த அதிகாரம் மிக்கவர்களே கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டு இருப்பதாக தெரிகிறது. இல்லாவிட்டால் இவ்வளவு துணிச்சலாக நகரத்தின் மையப் பகுதியில் போலீஸ் நிலையத்தின் அருகில் கள்ளச் சாராயம் விற்பனை நடைபெறுமா? இது மக்களிடையே மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சிகிச்சையில் இன்னும் எத்தனை பேர் குணமடைவார்கள் என்று தெரியவில்லை. சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முதல் ஒவ்வொருவராக உயிரிழப்பதை பார்க்கும் போது மிகுந்த வேதனையும் அதிர்ச்சியும் அடைகிறேன்.

    கள்ளச்சாராயம் குடித்ததில் 100-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதிகாரிகளும், அரசு நிர்வாகமும் கள்ளச்சாராய விற்பனையை தடுக்கவில்லை.

    செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலர் இறந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    கள்ளச்சாராய விற்ப னையை தடுக்க பலமுறை வலியுறுத்தியும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. கள்ளக்குறிச்சி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. புகார் அளித்தும் கள்ளச்சாராய விற்பனையை தடுக்கவில்லை. போலீசார் நடவடிக்கை எடுக்காமல் விட்டதே உயிரிழப்புக்கு காரணம்.

    தமிழ்நாடு முழுவதும் போதை மாநிலமாக மாறி வருகிறது. அதை தடுக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    கள்ளக்குறிச்சியில் விலைமதிப்பற்ற உயிர்கள் பறிபோனதற்கு பொறுப்பு ஏற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக பதவி விலக வேண்டும்.

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கு பூத் வாரியாக அமைச்சர்களை நியமித்துள்ளனர். அந்த அக்கறையை கள்ளக்குறிச்சி சம்பவத்தில் காட்டி இருக்கலாம்.

    ஆட்சி அதிகாரம் மட்டுமே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு முக்கியம். மக்கள் மீது அவருக்கு அக்கறை இல்லை.

    கள்ளச்சாராயம் குடித்து பெற்றோர்களை இழந்து வாடும் குழந்தைகளின் கல்விச்செலவை அ.தி.மு.க. ஏற்கும். பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு மாதம் தோறும் ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். 10 ஆண்டுகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சின்னத்துரை என்பவர் கள்ளச்சாராய மொத்த வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
    • 20-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கள்ளச்சாராயத்தை விற்று வந்துள்ளனர்.

    கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதிரடி விசாரணை தொடங்கி உள்ள நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் மற்றும் அதனைச்சுற்றி உள்ள மாவட்டங்களிலும் கள்ளச்சாராய விற்பனை கொடி கட்டி பறந்து கொண்டிருந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    கள்ளச்சாராயம் காய்ச்சுவதை காட்டுப்பகுதியில் வைத்து தொழில் போலவே பலர் செய்து வந்திருப்பதும், போலீசார் அதனை கண்டு கொள்ளாமல் அலட்சியமாக இருந்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

    அப்பகுதியைச் சேர்ந்த சின்னத்துரை என்பவர் கள்ளச்சாராய மொத்த வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். அவரிடம் இருந்து பாக்கெட்டில் அடைக்கப்பட்ட சாராயத்தை சில்லரை விற்பனைக்கு வாங்கி சென்று பலரும் குடித்து வந்துள்ளனர். 70 வழக்குகளில் தொடர்புடைய இவர் தற்போது தலைமறை வாகியுள்ளார்.

    அவரை பிடிப்பதற்கு போலீசார் அதிரடி வேட்டை யில் ஈடுபட்டுள்ளனர். அவருடன் கள்ளச்சாராய மொத்த விற்பனைக்கு துணையாக இருந்த 10 பேரும் தப்பி ஓடி தலைமறைவாக உள்ளனர்.

    அவர்களை பிடிப்பதற்கு போலீசார் வலை விரித்துள்ளனர். வியாபாரி சின்னத்துரையிடம் இருந்து சாராய பாக்கெட்டுகளை வாங்கி கருணாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் மறைத்து வைத்து 20-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கள்ளச்சாராயத்தை விற்று வந்துள்ளனர். அவர்கள் யார்-யார்? என்கிற பட்டியலையும் போலீசார் சேகரித்துள்ளனர்.

    கள்ளச்சாராய கும்பலை பிடிக்க ஏற்கனவே 5 தனிப்படைகள் அமைக்கப் பட்டிருந்தன. தற்போது கூடுதலாக 5 தனிப்படைகளும் ஏற்படுத்தப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    ×