search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 231984"

    • சப்பாத்து பாலம் பகுதியில் உடல் கிடந்ததால் பரபரப்பு
    • 28 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சுய நினைவின்றி கிடந்துள்ளார்.

    கன்னியாகுமரி:

    திருவட்டார் அருகே சப்பாத்து பாலம் பகுதியில் 28 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சுய நினைவின்றி கிடந்துள்ளார். இதனை அந்த வழியே சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இது பற்றி அவர்கள், ஏற்றக்கோடு ஊராட்சி மன்ற தலைவி ஹெப்சி பாய்க்கு தகவல் கொடுத்தனர். அவர் சம்பவ இடம் வந்து பார்த்தார். உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தார்.

    பின்னர் அந்த வாலிபரை ஆம்புலன்சில் ஏற்றி ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். அங்கு டாக்டர்கள் பரிசோ தித்த போது வாலிபர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது.

    அந்த வாலிபர் யார்? அவர் எப்படி இறந்தார்? என்பது மர்மமாக உள்ளது. இதுகுறித்து திருவட்டார் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றினர். தொடர்ந்து அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள்.

    • மாலை 5.30 மணிக்கு தொடங்கிய போராட்டம் 2 மணி நேரம் நீடித்தது.
    • வழக்கறிஞர்கள் குலசேகரம் போலீஸ் நிலையம் முன் ரோட்டில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கன்னியாகுமரி:

    குலசேகரம் அருகே மணலிவிளை பகுதியை சேர்ந்தவர் ஜஸ்டின்ராஜ். இவர் பத்மநாபபுரம் கோர்ட்டில் வக்கீலாக உள்ளார்.

    இவருக்கு சொந்தமான இடம் மங்கலம் பகுதியில் உள்ளது. இந்த பகுதியில் செல்லுவதற்கு ரோடு எடுப்பதற்கு மங்கலம் பகுதியை சேர்ந்த ஒருவரிடம் ரூ.1 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால் அவர் வழி எடுக்க இடம் கொடுக்காததால் தான் கொடுத்த ரூபாயை திரும்ப கேட்டுள்ளார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    குலசேகரம் போலீசில் இது தொடர்பாக ஜஸ்டின் ராஜ் புகார் கொடுத்தார். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை என தெரிகிறது. இதனால் ஜஸ்டின் ராஜிற்கு ஆதரவாக பத்மநாபபுரம் வக்கீல் சங்க தலைவர் வின்சென்ட் தலைமையில் போலீசாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பலன் இல்லாததால் வழக்கறிஞர்கள் குலசேகரம் போலீஸ் நிலையம் முன் ரோட்டில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மாலை 5.30 மணிக்கு தொடங்கிய போராட்டம் 2 மணி நேரம் நீடித்தது. இதனால் கல்லுரி மாணவ-மாணவிகள் சென்ற வாகனங்கள், அரசு பஸ்கள் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் காத்து நின்றன. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

    போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டத்தை கைவிடவில்லை. போராட் டம் இரவு 7.30 மணி வரை நீடித்தது. இன்ஸ்பெக்டர் வந்தால் தான் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்று வழக்கறிஞர்கள் கூறினார்கள்.

    இதனால் குலசேகரம் பகுதியில் கடும் போக்கு வரத்து நெருக்கடி ஏற்பட்டது. மாலை நேரமானதால் பொதுமக்கள் எங்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் ஆவேச மடைந்து போராட்டம் நடத்தியவர்களுடன் வாக்குவாதம் செய்தனர். இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவியது.

    உடனடியாக குலசேகரம் இன்ஸ்பெக்டர் பால முருகன் வழக்கறிஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வழக்குப்பதிவு செய்வதாக உறுதி அளித்ததின் பேரில் வழக்கறிஞர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

    இரவு தக்கலை டி.எஸ்.பி. குலசேகரம் போலீஸ் நிலையம் வந்து இன்ஸ்பெக்டருடன் ஆலோசனை நடத்தினார்.

    • பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
    • திற்பரப்பு பேரூராட்சிக்குட்பட்ட பினந்தோடு மாஞ்சக்கோணம் குளம் அருகே தனியாருக்கு சொந்தமான பன்றி பண்ணை.

    கன்னியாகுமரி:

    திற்பரப்பு பேரூராட்சிக்குட்பட்ட பினந்தோடு மாஞ்சக்கோணம் குளம் அருகே தனியாருக்கு சொந்தமான பன்றி பண்ணை ஒன்று செயல்பட்டு வந்தது.

    இந்த பன்றி பண்ணையில் உள்ள பன்றி கழிவுகள் எல்லாம் அதன் அருகில் உள்ள நீரோடையில் கலந்து திற்பரப்பு அருவியின் அருகில் கலந்து சென்று கொண்டு இருந்தது. மழை காலங்களில் பன்றிகளுக்கு உணவாக போடும் கழிவுகளால் அந்த பகுதி முழுவதும் தூர்நாற்றம் வீச தொடங்கியது. இதனால் அந்த பகுதி முழுவதும் சுகாதாரகேடு ஏற்பட்டு வந்தது.

    அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் சுகாதாரகேடு விளைவிக்கும் பன்றி பண்ணையை அப்புறப்படுத்த வேண்டும் என்று பேரூராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்தனர்.

    பேரூராட்சி நிர்வாகம் பன்றி பண்ணை உரிமையாளருக்கு பண்ணையை அகற்றும்படி நோட்டீஸ் கொடுத்தார்கள். அதன்பிறகும் பன்றி பண்ணை அகற்றப்படாமல் செயல்பட்டு வந்தது. இதை கண்டித்து அந்த பகுதியை சேர்ந்த தி.மு.க., பாரதிய ஜனதா, நாம் தமிழர் கட்சியினர் சேர்ந்து பேரூராட்சி அலுவலகம் முன் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். போராட்டகாரர்களிடம் பேரூராட்சி மன்ற தலைவர் பொன்.ரவி, செயல் அலுவலர் எட்வின் ஜோஸ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி 2 நாட்களில் பன்றி பண்ணை அகற்றப்படும் என்று உறுதி அளித்தனர். அதன் பிறகு சம்மந்தப்பட்ட பன்றி பண்ணை உரிமையாளருக்கு பேரூராட்சி நிர்வாகம் நோட்டீஸ் கொடுத்தது. அதன்பிறகும் அவர் பன்றி பண்ணையை காலி செய்யவில்லை.

    இதையடுத்து நேற்று பேரூராட்சி நிர்வாகம் அதிரடியாக பன்றி பண்ணையை அகற்ற சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் அனுமதியுடன் மூடி சீல் வைப்பது என முடிவு செய்தனர். குலசேகரம் போலீசார் அனுமதியுடன் வருவாய் துறையினர், சுகாதார துறையினர் மற்றும் பேரூராட்சி பணியாளர்களுடன் பேரூராட்சி தலைவர் பொன். ரவி, செயல் அலுவலர் எட்வின் ஜோஸ், துணைத்தலைவர் ஸ்டாலின் தாஸ் ஆகியோர் பன்றி பண்ணையை பூட்டி சீல் வைத்தனர். உடனே பண்ணை உரிமையாளர் சுமார் 500 பன்றிகளை டெம்போவில் ஏற்றி வேறு பகுதிக்கு கொண்டு சென்றார். இதனால் அந்த பகுதியில் 2 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த பன்றி பண்ணை பிரச்சினை முடிவுக்கு வந்தது.

    • காவிரி நீர் பிடிப்பு பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால், கர்நாடக அணைகள் நிரம்பி மேட்டூர் அணைக்கு உபரி நீர் அதிக அளவில் வந்து கொண்டுள்ளது.
    • காவிரி வெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து விடாமல் இருக்க, தாழ்வான பகுதிகளில் பொக்லின் மூலம் மண் கொட்டி மேடான பகுதியாக மாற்றும் பணியை நகராட்சி ஊழியர்கள் துவங்கியுள்ளனர்.

    குமாரபாளையம்:

    காவிரி நீர் பிடிப்பு பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால், கர்நாடக அணைகள் நிரம்பி மேட்டூர் அணைக்கு உபரி நீர் அதிக அளவில் வந்து கொண்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 45 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், குமாரபாளையம் காவிரி கரையோர பகுதியில் வசிக்கும் மக்களை மேடான பகுதிக்கு செல்லுமாறு வருவாய்த்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இவர்களை பாதுகாக்க, பாதுகாப்பு மையங்களும் தாயார் நிலையில் உள்ளன.

    இந்நிலையில் மணிமேகலை தெரு, கலைமகள் தெரு உள்ளிட்ட கரையோர பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. மழைக் காலங்களில் காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்படும்போது, இந்த குடியிருப்பு பகுதிகளை மழை வெள்ளம் சூழ்வது வாடிக்கையாக உள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் சிரமத்துக்கு உள்ளாகி வந்தனர். எனவே இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண அப்பகுதிகள் மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதனிடையே, தற்போது பெய்து வரும் தொடர்மழை காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டாலும், காவிரி வெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து விடாமல் இருக்க, தாழ்வான பகுதிகளில் பொக்லின் மூலம் மண் கொட்டி மேடான பகுதியாக மாற்றும் பணியை நகராட்சி ஊழியர்கள் துவங்கியுள்ளனர். முதற்கட்டமாக மணிமேகலை தெருவில் இப்பணிகள் நடைபெற்று வருகிறது.

    • நம்பியூர் பகுதியில் 2 வீடுகளிலும் நகை- பணம் ஏதும் கிடைக்காததால் கொள்ளையர்கள் ஏமாந்து சென்றனர்.
    • இதுகுறித்து நம்பியூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் பேரூராட்சிக்கு உட்பட்ட காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் வேணுகோபால், வெற்றிவேல்.

    வேணுகோபால் நம்பியூர் அரசு போக்குவரத்து பணிமனை கிளையில் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார். வெற்றிவேல் ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் செயலாளராக பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில் வேணு கோபால் தனது வீட்டை நேற்று முன்தினம் பூட்டி விட்டு தனது மற்றொரு வீடான திருப்பூரில் உள்ள வீட்டில் தனது குடும்பத்துடன் தங்கியுள்ளார்.

    நேற்று தனது வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவு உடைத்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோ மற்றும் அறைகளில் பொருட்கள் சிதறி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதேபோல் வெற்றிவேல் தனது வீட்டை இந்திராணி என்பவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார். அவரது வீட்டிலும் கதவுகள் உடைக்கப்பட்டு உள்ளே பீரோ மற்றும் அறைகளில் உள்ள பொருட்கள் சிதறி கிடந்தது.

    2 வீடுகளிலும் நகை- பணம் ஏதும் கிடைக்காததால் கொள்ளையர்கள் ஏமாந்து சென்றனர். மேலும் கைரேகை தெரியாதவாறு பனியன் துணி மூலம் கைகளை துடைத்து விட்டு சென்றுள்ளனர்.

    இதுகுறித்து நம்பியூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • டி.என்.பாளையம் அடுத்த வினோபா நகர் ஆவின் பால் கொள்முதல் நிலையம் அருகே ஒரு நாட்டு துப்பாக்கி கிடப்பதாக அப்பகுதியினர் இன்று காலை பங்களாப்புதூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
    • இதனையடுத்து போலீசார் நாட்டு துப்பாக்கியை மீட்டு விசாரணை நடத்தி வருகிறார்.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அடுத்த கொங்கர்பாளையம் ஊராட்சி வனப்பகுதியையொட்டிய வினோபா நகர் ஆவின் பால் கொள்முதல் நிலையம் அருகே ஒரு நாட்டு துப்பாக்கி கிடப்பதாக அப்பகுதியினர் இன்று காலை பங்களாப்புதூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனே பங்களாப்புதூர் தனிப்பிரிவு போலீஸ்காரர் மஞ்சுநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு கிடந்த ஒற்றை குழல் நாட்டுத் துப்பாக்கியை கைப்பற்றி போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர்.

    துப்பாக்கி கிடந்தது வனப்பகுதியையொட்டிய பகுதி என்பதால் யாரோ வனவிலங்குகளை வேட்டையாட பயன்படுத்தி விட்டு விட்டு சென்று இருக்கலாம் என்ற கோணத்தில் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் விசாரணை நடத்தி வருகின்றார்.

    வழக்கமாக அப்பகுதியில் ரோந்து செல்லும் வனத்துறையினர் இது போன்று துப்பாக்கி கிடப்பதை எப்படி கவனிக்க தவறினர் என்றும் அப்பகுதியினர் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பெத்தாம்பாளையம் பகுதியில் 14-ந் தேதி மின் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
    • கவுந்தப்பாடி துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் பெத்தாம்பாளையம் மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

    ஈரோடு:

    கவுந்தப்பாடி துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் பெத்தாம்பாளையம் மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

    இதையொட்டி வரும் 14-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பெத்தாம்பாளையம், கொளத்தான் பாளையம், மூலக்கடை, செங்கோடன் பாளையம், பூச்சம்பதி, கே.ஜி.புதூர், திட்டுக்காடு, புலவர் பாளையம், தண்ணீர் பந்தல் பாளையம், எம்.ஜி.பாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

    ×