என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 232867"
- ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் ரெயில் நிலையம் முழுவதும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
- பயணிகள் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.
கோவை:
மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபாத் திட்டத்திற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றது.
தமிழகத்திலும் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடந்து வருகிறது. கோவையில் பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பெரும்பாலான அமைப்புகள் ரெயில் மறியல் போராட்டத்தை அறிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர். அவர்களை ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் ரெயில் நிலையம் முன்பே தடுத்து நிறுத்தி வருகின்றனர்.
ஆனால் நேற்றுமுன்தினம் மாணவர் அமைப்புகள் போராட்டத்தின் போது போலீசாருக்கு தெரியாமல் ரெயில் நிலையம் பின்புறமாக உள்ளே புகுந்து ரெயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை குண்டு கட்டாக தூக்கி போலீசார் கைது செய்தனர். நேற்றும் ரெயில் மறியலுக்கு திரண்டவர்களை போலீசார் தடுத்து கைது செய்தனர்.
இதையொட்டி ரெயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணி குறித்து ரெயில் நிலையம் முன்பு ஆலோசனை நடத்தினர்.
பின்னர் போராட்டக்காரர்கள் ரெயில் நிலையத்துக்குள் நுழையாதவாறு அனைத்து இடங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்த போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் ரெயில் நிலையம் முழுவதும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். பயணிகள் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.
- ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிகாரம் அமைப்பினர்.
- மாநிலப் பொருளாளர் காளியப்பன் சிறப்புரையாற்றினார்.
தஞ்சாவூர்:
மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தை கண்டித்து தஞ்சைரெயிலடியில் மக்கள் அதிகாரம் சார்பில் மாவட்டச்செயலர் தேவா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாநிலப் பொருளாளர் காளியப்பன் சிறப்புரையாற்றினார்.ஆர்ப்பாட்டத்தில் அக்னிபாத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன.இதில் திருவாரூர்-நாகை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்சண்முகசுந்தரம்,குடந்தை வழக்குரைஞர்ஜெயபாண்டியன்,தஞ்சை இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளர் துரை. மதிவாணன், மக்கள் கலை இலக்கியக் கழகம் மாநில இணைச்செயலர் ராவணன் மற்றும் அருள், எழுத்தாளர் தஞ்சை சாம்பான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- இளைஞர்களுக்கும், இந்திய நாட்டின் வளர்ச்சிக்கும் வழிவகுக்கும் இந்த ‘அக்னிபாத்’ திட்டத்தை தொலைநோக்கு பார்வையோடு சிந்தித்து செயல்படுத்தும் மத்திய அரசின் முயற்சிக்கு பாராட்டுகள், வாழ்த்துக்கள்.
- நாட்டின் பாதுகாப்பையும், இளைஞர்களின் வாழ்வையும் மேம்படுத்துவதற்கான இந்த உயர்ந்த திட்டத்தை, அரசியல் நோக்கத்திற்காக போராட்டங்கள் மூலம் இளைஞர்களை திசை திருப்ப கூடாது.
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்திய ராணுவத்தில் 'அக்னிபாத்' திட்டம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவது மட்டுமல்ல நல்ல தேச பக்தியுள்ள, நேர்மையான, கட்டுக்கோப்பான, செயல் திறன் மிக்க இளைஞர்களை உருவாக்கி, இந்த தேசத்தின் பாதுகாப்பை மட்டுமல்லாமல் சிறந்த இந்தியாவை உருவாக்க அவர்களை வடிவமைக்க கூடிய ஓர் அருமையான திட்டம் என்றால் அது மிகையாகாது.
தேசத்தை வலுப்படுத்த இளைஞர்களின் சக்தி மிகத்தேவை. அந்த தேவையை முறையாக நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் பயனுள்ளதாக கட்டமைக்க மத்திய அரசு முயற்சியை மேற்கொண்டுள்ளது.
இந்த திட்டம் ராணுவத்தில் புதுமையையும், புது உத்வேகத்தையும் ஏற்படுத்துவதோடு இளைஞர்களின் பங்களிப்பால் நாட்டை வல்லரசாக மாற்றக்கூடிய ஒரு சிறந்த வாய்ப்பாகும்.
இளைஞர்கள் குறுகிய காலத்தில் தங்களை பொருளாதார ரீதியாக வளர்த்துகொள்ளவும், பணிக்குப் பின்னர் அவர்களின் திறமைக்கு ஏற்ப ராணுவத்திலேயோ அல்லது பல்வேறு அரசுப் பணியிலேயோ, தனியார் துறை பணியிலேயோ அமைப்பதற்கு மிகுந்த வாய்ப்புள்ளது.
குறுகிய காலத்தில் பணி ஓய்வு என்று இல்லாமல் தொடர் பணிக்கும் வழிவகுக்கிறது என்பது இத்திட்டத்தின் தனிச்சிறப்பாக அமைந்துள்ளது.
இளைஞர்களுக்கும், இந்திய நாட்டின் வளர்ச்சிக்கும் வழிவகுக்கும் இந்த 'அக்னிபாத்' திட்டத்தை தொலைநோக்கு பார்வையோடு சிந்தித்து செயல்படுத்தும் மத்திய அரசின் முயற்சிக்கு பாராட்டுகள், வாழ்த்துக்கள்.
நாட்டின் பாதுகாப்பையும், இளைஞர்களின் வாழ்வையும் மேம்படுத்துவதற்கான இந்த உயர்ந்த திட்டத்தை, அரசியல் நோக்கத்திற்காக போராட்டங்கள் மூலம் இளைஞர்களை திசை திருப்ப கூடாது. உண்மையான தேசபக்தியும், சமூக சிந்தனையும் கொண்ட இளைஞர்களை சிறந்த பணிக்காக ஒன்று திரட்டும் இந்த திட்டத்திற்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- அக்னிபாத் திட்டத்தின் மூலம் நாட்டின் இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்க துடிக்கும் மத்திய அரசுக்கு எதிராக டெல்லியில் காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடைபெற்றது.
- டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள், எம்பிக்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.
ராணுவத்தில் 4 ஆண்டுகளுக்கு மட்டும் இளைஞர்களை சேர்த்துக் கொள்ளக் கூடிய அக்னிபாத் திட்டத்துக்கான அறிவிப்பாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்களும், வன்முறைகளும் நடைபெற்று வருகின்றனர்.
நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் பங்குகள் யங் இந்தியா நிறுவனத்துக்கு கைமாறியதில் சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடைபெற்று வருகிறது.
இவ்விரு சம்பவங்கள் தொடர்பாக ராகுல் காந்திக்கு ஆதரவாகவும், அக்னிபாத் திட்டத்தின் மூலம் நாட்டின் இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்க துடிக்கும் மத்திய அரசுக்கு எதிராகவும் டெல்லியில் காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடைபெற்றது.
இதில் காங்கிரஸ் தலைவர்கள், எம்பிக்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.
டெல்லியில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற போராட்டம் தொடர்பான புகைப்படங்களை குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
- அக்னிபாத் திட்டம் சட்டவிரோதமானது, அரசியலமைப்பிற்கு எதிரானது என பொதுநல மனுவில் தகவல்
- அக்னிபாத் திட்டத்தின் மூலம் நியமிக்கப்பட்ட அக்னிவீரர்களில் 25% மட்டுமே ஆயுதப்படைகளில் தக்கவைக்கப்படுவார்கள்.
புதுடெல்லி:
ராணுவத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆள் சேர்க்கும் 'அக்னிபாத்' திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வடமாநிலங்களில் நடைபெறும் போராட்டத்தில் வன்முறை வெடித்துள்ளது. பொது சொத்துக்களை சேதப்படுத்தப்படுகின்றன. அக்னிபாத் திட்டத்தை கைவிட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர்கள் தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் இன்று ஜனாதிபதியை சந்தித்து மனு கொடுத்துள்ளனர்.
இந்நிலையில், அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் எம்.எல்.ஷர்மா பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.
அவர் தனது மனுவில், அக்னிபாத் திட்டம் சட்டவிரோதமானது, அரசியலமைப்பிற்கு எதிரானது மற்றும் இந்திய அரசியலமைப்பிற்கு எதிரானது என்றும், இந்த திட்டம் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் ஜூன் 14ம் தேதி வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறி உள்ளார்.
'ஆயுதப்படைகளுக்கு நிரந்தர கமிஷன் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு அதிகாரி, 60 வயது வரை நாட்டிற்காக பணியாற்ற முடியும். குறுகியகால சர்வீஸ் கமிஷனில், ஒரு அதிகாரி ராணுவத்தில் சேர்ந்து 10 முதல் 14 ஆண்டுகள் வரை அதிகாரியாக பணியாற்றுவதற்கான விருப்பத்தேர்வு உள்ளது. எனினும், அக்னிபாத் திட்டத்தின் மூலம் நியமிக்கப்பட்ட அக்னிவீரர்களில் 25% மட்டுமே ஆயுதப்படைகளில் தக்கவைக்கப்படுவார்கள், மீதமுள்ள 75% பேர் சேவையிலிருந்து வெளியேற்றப்படுவார்கள்.' என்ற தகவலையும் வழக்கறிஞர் ஷர்மா தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
- நேசனல் ஹெரால்டு வழக்கில், ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு
- காங்கிரஸ் எம்.பி.க்கள் மீது காவல் துறையினர் மோசமாக நடந்து கொண்டதாக ஜனாதிபதியிடம் புகார் மனு அளித்தனர்.
புதுடெல்லி:
ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்திற்கு வீரர்களை சேர்க்கும் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. இந்த திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகினற்ன. இதேபோல் நேசனல் ஹெரால்டு வழக்கில், ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதற்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், காங்கிரஸ் நிர்வாகிகள் இன்று டெல்லியில் ஜனாதிபதி மாளிகை நோக்கி பேரணியாகச் சென்று, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்தனர். அப்போது, அமலாக்கத்துறைக்கு எதிரான போராட்டத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் மீது காவல் துறையினர் மோசமாக நடந்து கொண்டதாக புகார் மனு அளித்தனர். மேலும் அக்னிபாத் திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
#WATCH Congress leaders march towards Rashtrapati Bhawan from Vijay Chowk against the Centre's #Agnipath recruitment scheme#Delhi pic.twitter.com/qWjFDu768s
— ANI (@ANI) June 20, 2022
இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ப.சிதம்பரம், அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேரும் இளைஞர்களின் வேலைவாய்ப்பு குறித்து சரியான விளக்கம் இல்லை என்றும், அதனால் அக்னிபாத் திட்டத்தை கைவிடுமாறு குடியரசுத் தலைவரிடம் வலியுறுத்தியதாகவும் கூறினார்.
- போராட்டம், வன்முறை அதிகம் நடந்த பீகார் மாநிலத்தில் தொடர்ந்து ரெயில் சேவை முடக்கப்பட்டுள்ளது.
- டெல்லியில் இளைஞர் காங்கிரசார் ரெயில்களை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுடெல்லி:
ராணுவத்தில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் வீரர்களை சேர்க்க மத்திய அரசு கடந்த 14-ந் தேதி அறிவிப்பு வெளியிட்டது.
4 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் சேர்க்கப்படும் வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட மாட்டாது என்று தகவல்கள் பரவியதால் ராணுவத்தில் சேர பயிற்சி பெற்ற இளைஞர்கள் அதிருப்தி அடைந்தனர்.
பீகார் மாநிலத்தில் இளைஞர்கள் ஒன்று திரண்டு வன்முறையில் ஈடுபட்டனர். ரெயில்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. ரூ.700 கோடி அளவுக்கு பொது சொத்துக்கள் நாசப்படுத்தப்பட்டன.
இந்த நிலையில் சில அரசியல் கட்சிகளும், சில அமைப்புகளும் அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக அப்பாவி இளைஞர்களை தொடர்ந்து போராட்டத்துக்கு தூண்டி வருகின்றனர்.
போராட்டம் நடத்த வரும்படி அழைப்பு விடுக்கிறார்கள். குறிப்பாக ராணுவத்தில் சேர பயிற்சி அளிக்கும் மையத்தினர்தான் இந்த செயலை செய்வதாக தெரிய வந்துள்ளது. இதனால் போராட்டத்தை தூண்டிய 34 வாட்ஸ் அப் குரூப்புகளை மத்திய அரசு தடை செய்துள்ளது.
இந்த நிலையில் நாடு முழுவதும் முழுஅடைப்பு போராட்டத்துக்கு சில அமைப்புகள் அழைப்பு விடுத்தன. இதனால் முக்கிய நகரங்களில் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் சூழ்நிலை உருவானது. இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளை தொடர்பு கொண்டு உஷார்படுத்தியது.
அதன்படி எல்லா மாநிலங்களும் பாதுகாப்பு முயற்சிகளை மேற்கொண்டு உள்ளன. இன்று அனைத்து மாநிலங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. முக்கிய நகரங்களில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
போராட்டம், வன்முறை அதிகம் நடந்த பீகார் மாநிலத்தில் தொடர்ந்து ரெயில் சேவை முடக்கப்பட்டுள்ளது. 20 மாவட்டங்களில் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இன்று அனைத்து போலீசாரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஜார்கண்ட் மாநிலத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது, அங்கு 9, 11-ம் வகுப்பு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டெல்லி புறநகர் பகுதியில் சாலைகள் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன. 2000 போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
சில மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமானோர் கைது செய்யப் ட்டுள்ளனர். முழு அடைப்பு காரணமாக உத்தரபிரதேச மாநிலத்தில் 380 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. அங்கு பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் இளைஞர் காங்கிரசார் ரெயில்களை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேப்போல ஆம் ஆத்மி கட்சியினரும் அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.
+2
- ரெயில் நிலையங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
- பயணிகளின் உடமைகளையும் பரிசோதனை செய்கின்றனர்.
ஈரோடு:
இந்திய முப்படைகளில் ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுகளுக்கு ஆள் சேர்க்கும் புதிய திட்டமான அக்னிபாத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வட மாநிலங்களில் நடைபெறும் போராட்டங்களில் ரெயில் பெட்டிகள் எரிக்கப்பட்டு வருகிறது.
மேலும் ரெயில் நிலையங்களும் சூறையாடப்பட்டு வருகிறது. மேலும் இளைஞர்கள் இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையடுத்து ரெயில் நிலையங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி ஈரோடு ரெயில் நிலையத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ரெயில் நிலையத்தின் நுழைவு வாயில் பகுதியிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இளைஞர்கள் கூட்டமாக சென்றால் அவர்களை தடுத்து நிறுத்தி எங்கு செல்கிறீர்கள் என்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பயணிகளின் உடமைகளையும் பரிசோதனை செய்கின்றனர். இளைஞர்கள் போராட்டம் நடத்துவதை தவிர்க்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேப்போல் ரெயில் நிலையத்திற்குள்ளும் ஈரோடு ரெயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு ரெயில் நிலையத்திற்கு வரும் ஒவ்வொரு ரெயில்களையும் பெட்டி பெட்டியாக சென்று சோதனை செய்கின்றனர். இந்நிலையில் ஜல்லிக்கட்டு போராட்டம் போன்று அக்னிபாத் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் ஒன்றுகூடி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.
இதையடுத்து ஈரோடு மாவட்ட போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. இதன்படி ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவுப்படி ஈரோடு மாவட்டத்தில் முக்கியமான இடங்களில் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர்.
இளைஞர்கள் ஒன்றுகூடி போராட்டம் நடத்திடாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு பன்னீர்செல்வம் பார்க், மணிக்கூண்டு, காளைமாடு சிலை, ரெயில் நிலையம், ஜி.எச். ரவுண்டானா, பஸ் நிலையம், சுவஸ்தி கார்னர், பஸ் டிப்போ, வீரப்பன்சத்திரம், கருங்கல்பாளையம் போன்ற நகரின் முக்கியமான பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் அந்தியூர், பவானி, பெருந்துறை, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், மொடக்குறிச்சி, கொடுமுடி, கவுந்தபாடி, நம்பியூர் மற்றும் ஈரோடு மாவட்டம் முழுவதும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
- ரெயில் மற்றும் ரெயில் நிலையங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டது.
- ரெயில் நிலையம் நோக்கி வந்தபோது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர்.
மதுராந்தகம்:
ராணுவத்தில் புதிதாக கொண்டுவரப்பட்டு உள்ள அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வட மாநிலங்களில் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. ரெயில் மற்றும் ரெயில் நிலையங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டது.
இதையடுத்து முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் அனைத்து ரெயில் நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள செங்கல்பட்டு, மதுராந்தகம், மேல்மருவத்தூர் ஆகிய முக்கிய ரெயில் நிலையங்களில் கூடுதல் ரெயில்வே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்ட ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மாவட்ட தலைவர் புருஷோத்தமன் தலைமை யில் மேல்மருவத்தூர் ரெயில் நிலையத்தில் ரெயில் மறியலில் ஈடுபட திரண்டு வந்தனர். அவர்கள் ரெயில் நிலையம் நோக்கி வந்தபோது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இதனால் போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கேயே அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
இதையடுத்து ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த 15 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- இளைஞர்கள் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
- இதையடுத்து ரெயில் நிலையங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஈரோடு:
இந்திய ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் புதிய திட்டமான அக்னிபாத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வட மாநிலங்களில் நடைபெறும் போராட்டங்களில் ரெயில் பெட்டிகள் எரிக்கப்பட்டு வருகிறது.
மேலும் இளைஞர்கள் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து ரெயில் நிலையங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஈரோடு ரெயில் நிலையத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ரெயில் நிலையத்தின் நுழைவு வாயில் பகுதியிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இளைஞர்கள் கூட்டமாக சென்றால் அவர்களை தடுத்து நிறுத்தி எங்கு செல்கிறீர்கள் என்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்கள் உடமைகளையும் பரிசோதனை செய்கின்றனர். இளைஞர்கள் போராட்டம் நடத்துவதை தவிர்க்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேப்போல் ரெயில் நிலையத்திற்குள்ளும் ரெயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ரெயில் நிலையத்திற்கு வரும் ஒவ்வொரு ரெயில்களையும் பெட்டி பெட்டியாக சென்று சோதனை செய்கின்றனர்.
- வட மாநிலங்களில் வன்முறை வரலாறு காணாத வகையில் இருக்கிறது.
- குறிப்பாக பீகார், உத்தரபிரதேசத்தில் தான் அதிக அளவில் வன்முறை நிகழ்ந்துள்ளது.
பாட்னா:
ராணுவத்தில் 4 ஆண்டுகள் மட்டுமே பணிபுரியும் வகையில் ஒப்பந்த அடிப்படையிலான அக்னிபாத் என்ற புதிய திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வட மாநிலங்களில் இளைஞர்கள் நடத்திய போராட்டம் வன்முறையானது.
பீகார், உத்தரபிரதேசம், அரியானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கான உள்ளிட்ட 9 மாநிலங்களில் போராட்டம் பரவி உள்ளது.
வன்முறையில் ஈடுபட்ட இளைஞர்கள் ரெயில்களை தீ வைத்து கொளுத்தினர். ரெயில் நிலையங்களை சூறையாடினர். பஸ்கள், வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
வட மாநிலங்களில் வன்முறை வரலாறு காணாத வகையில் இருக்கிறது. குறிப்பாக பீகார், உத்தரபிரதேசத்தில் தான் அதிக அளவில் வன்முறை நிகழ்ந்துள்ளது.
4 நாட்கள் நடந்த வன்முறையில் ரெயில்வே துறைக்கு ரூ.700 கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது. பீகாரில் ரெயில்வேயில் 60 பெட்டிகள் தீ வைக்கப்பட்டன. 11 என்ஜின்கள் எரிக்கப்பட்டன. 15 மாவட்டங்களில் ரெயில் நிலையம் சூறையாடப்பட்டன.
ரெயில்வேக்கு சொந்தமான ரூ.700 கோடி சொத்துக்கள் வன்முறையின் போது சேதம் அடைந்ததாக கிழக்கு மத்திய ரெயில்வே தலைமை மக்கள் தொடர்பாளர் விஜேந்திர குமார் தெரிவித்தார்.
பீகாரில் நடந்த வன்முறை சம்பவம் தொடர்பாக 718 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 138 எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது. சி.சி.டி.வி. கேமிரா மூலம் அடையாளம் காணப்பட்டு வன்முறையில் ஈடுபட்டவர்கள் கைதானார்கள்.
- வன்முறையால் 12 ரெயில்கள் தீ வைக்கப்பட்டுள்ளன.
- அகில இந்தி மாணவர்கள் அமைப்பு 24 மணி நேர பந்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.
பாட்னா:
ராணுவத்தில் 4 ஆண்டுகள் மட்டுமே பணிபுரியும் வகையில் ஒப்பந்த அடிப்படையிலான 'அக்னிபாத்' என்ற புதிய திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வட மாநிலங்களில் நடந்த போராட்டம் வன்முறையானது.
குறிப்பாக பீகார் மாநிலத்தில்தான் இளைஞர்கள் அதிகளவில் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற வன்முறையால் 12 ரெயில்கள் தீ வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பீகாரில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அகில இந்தி மாணவர்கள் அமைப்பு 24 மணி நேர பந்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.
லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சி இந்த முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
இதை அந்த கட்சியின் பீகார் மாநில தலைவர் ஜெகதானந்த் சிங் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது, 'ராணுவத்தில் குறுகியகால ஆள் சேர்ப்பு திட்டம் நாட்டின் இளைஞர்களின் நலன்களுக்கு எதிரானது. இந்த திட்டத்துக்கு எதிராக தெருக்களில் போராட்டம் நடத்துபவர்களை நாங்கள் ஆதரிக்கிறோம்.
லோக் ஜனசக்தி கட்சி தலைவர் சூரக் பஸ்வான் கூறும்போது, கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் சென்று இன்று கவர்னரை சந்தித்து அன்கினிபத் திட்டத்தை திரும்ப பெற கோரி மனு கொடுக்க உள்ளோம். அக்னிபத் திட்டம் நாட்டில் வேலையில்லா திண்டாட்டத்தை அதிகரிக்கும். இது இளைஞர்கள் மத்தியில் அதிருப்தியை அதிகரிக்கும் என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்