search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அகற்றம்"

    • கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் அண்ணாகிராமம் ஒன்றியம் ஏ.பி. குப்பம் ஊராட்சி சுடுகாட்டில்ஆக்கிரமிப்புசெய்யப்பட்டு சுடுகாட்டுக்கு செல்ல வழி இல்லாமல் இருந்து வந்தது.
    • .இது குறித்து ஊராட்சி மன்றத் தலைவர் விஜயலட்சுமி பிரகாஷ் பண்ருட்டி தாசில்தார் ஆனந்தியிடம் மனு கொடுத்தார்

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் அண்ணாகிராமம் ஒன்றியம் ஏ.பி. குப்பம் ஊராட்சி சுடுகாட்டில்ஆக்கிரமிப்புசெய்யப்பட்டு சுடுகாட்டுக்கு செல்ல வழி இல்லாமல் இருந்து வந்தது.இது குறித்து ஊராட்சி மன்றத் தலைவர் விஜயலட்சுமி பிரகாஷ் பண்ருட்டி தாசில்தார் ஆனந்தியிடம் மனு கொடுத்தார். மனுவில் சுடுகாடு ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை விடுத்தார்.இதனை தொடர்ந்து, கிராம நிர்வாக அலுவலர் சக்திவேல், ஊராட்சி செயலாளர் பாலாஜி, நிலஅளவையர் சாந்தினி ஆகியோர் சுடுகாடு பகுதி முழுவதும் அளவீடு செய்தனர். அப்போது சுடுகாடு பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டது. உடனடியாக அங்கு பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

    புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ராமசாமி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் கனகராஜ், லட்சுமி ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • 20 துப்புரவு பணி மேற்பாா்வையாளா்கள், 12 துப்புரவு பணி ஆய்வாளா்கள் ஆகியோா் ஈடுபட்டனா்.
    • நெகிழி குவளைகள் போன்றவை தூய்மை பணியாளா்கள் மூலம் அகற்றப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் மாநகரை குப்பையில்லா மாநகராக உருவாக்குவதற்காக மாநகரில் சிறப்புக் கூட்டு தூய்மைப் பணி முகாம் வாரந்தோறும் புதன் கிழமை நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி நேற்று ஆட்டு மந்தை தெரு, மீன் சந்தை உள்புறம், படைவெட்டி அம்மன் கோயில் தெரு, நெல்லுமண்டித் தெரு, காமராஜா் தெரு உள்ளிட்ட பகுதிகளில் மாநகராட்சி சாா்பில் சிறப்பு கூட்டு தூய்மைப் பணி முகாம் நடைபெற்றது.

    இந்த முகாமை மேயா் சண். இராமநாதன் தொடக்கி வைத்தாா்.

    இப்பணியில் 550 தூய்மை பணியாளா்கள், 20 துப்புரவு பணி மேற்பாா்வையாளா்கள், 12 துப்புரவு பணி ஆய்வாளா்கள் ஆகியோா் ஈடுபட்டனா்.

    இதன் மூலம், பல்வேறு இடங்களில் புல் செடிகள், முட்புதா்கள், மண் முட்டுகள் போன்றவை கனரக வாகனங்கள் மூலம் அகற்றப்பட்டன.

    மேலும், நன்னீா் தேங்கி டெங்கு காய்ச்சல் ஏற்படுத்தக்கூடிய தேங்காய் சிரட்டைகள், உடைந்த மண் பாண்டங்கள், நெகிழி குவளைகள் போன்றவை கொசுப்புழு தடுப்பு களப் பணியாளா்களால் கண்டறியப்பட்டு, தூய்மைப் பணியாளா்கள் மூலமாக அகற்றப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் துணை மேயா் அஞ்சுகம் பூபதி, ஆணையா் சரவணகுமாா், மாமன்ற உறுப்பினா் பாப்பா சொக்கா ரவி, மாநகா் நல அலுவலா் சுபாஷ் காந்தி, துப்புரவு ஆய்வாளா் ரஞ்சித்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

    • டிஜிட்டல் பேனர்கள் மற்றும் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளதாக புகார்கள் வந்தது,
    • டிஜிட்டல் பேனர்கள், தனியார் நிறுவனங்களின் அறிவிப்பு பலகைகள், பேனர்கள் அகற்றப்பட்டன.

    கடலூர்:

    பண்ருட்டி நகராட்சி பகுதிகளில் அனுமதியின்றி அரசியல் கட்சிகளோ, தனியார் நிறுவனங்களை சேர்ந்தவர்களோ டிஜிட்டல் பேனர்கள் மற்றும் அறிவிப்பு பலகைகள் வைக்கக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளதுஅதையும் மீறி வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் பேனர்கள் மற்றும் அறிவிப்பு பலகைகளை அதிகாரிகள் அவ்வப்போது அகற்றி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.பண்ருட்டி நகரப்பகுதியில் அனுமதி இன்றி டிஜிட்டல் பேனர்கள் மற்றும் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளதாக புகார்கள் வந்ததைத் தொடர்ந்து அவற்றை அகற்ற நகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி உத்தரவிட்டார்அதன்பேரில் நகரமைப்பு அதிகாரி என்ஜினீயர் மணி தலைமையில், நகரமைப்பு ஆய்வாளர்கள் மற்றும் நகராட்சி ஊழியர்கள் இன்று நகர பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பேனர்கள் மற்றும் அறிவிப்பு பலகைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இன்று காலை 6.30 மணிக்கு தொடங்கிய இந்த பேனர்கள் அகற்றும் பணி மதியம் 2 மணி வரை தொடர்ந்து நடைபெற்றது.

    ண்ணா சிலை அருகில்,பஸ் நிலையம், 4 முனைசந்திப்பு, கடலூர் ரோடு, சென்னை சாலை, கும்பகோணம் சாலை,காந்தி ரோடு, ராஜாஜி சாலை ஆகிய பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த அரசியல் கட்சிகளின் டிஜிட்டல் பேனர்கள், தனியார் நிறுவனங்களின் அறிவிப்பு பலகைகள், பேனர்கள் அகற்றப்பட்டன. மொத்தம் 35 டிஜிட்டல் பேனர்களும், 4 விளம்பர பலகைகளும் அகற்றப்பட்டன.

    • போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்துக்கள் அதிக அளவு ஏற்பட்டு உயிர் சேதங்கள் ஏற்பட்டுள்ளது.
    • அதி காரிகள் ஜே.சி.பி. எந்திரம் மூலம் ஆக்கிர மிப்புகள் அகற்றப்பட்டு கட்டிடங்கள் இடிக்கப்பட்டது.

    கடலூர்:

    புவனகிரி-விருத்தாசலம் சாலை, புவனகிரி- கடலூர் சாலை மற்றும் ஒரு வழி பாதையான சின்ன தேவாங்கர் தெரு ஆகிய இடங்களில் அதிக அளவில் ஆக்கிரமிப்புகள் உள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்துக்கள் அதிக அளவு ஏற்பட்டு உயிர் சேதங்கள் ஏற்பட்டுள்ளதுஇது சம்பந்தமாக சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள், வாகன ஓட்டிகள் அனைவரும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும், மாவட்ட கலெக்டருக்கும் முதல்-அமைச்சருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது

    இதனை அறிந்த நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, அளவீடு செய்து ஆக்கிரமிப்பு செய்த இடத்தில் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்த மான இடம் வரை அம்புக்குறி பெயிண்டால் போடப்பட்டதுஇதனை அகற்றிக் கொள்ள சுமார் 15 நாட்க ளுக்கு முன்பாக அனைத்து கடைக்காரரிடம் கடிதங்கள் கொடுக்கப்பட்டது. ஆனால் பெரும்பாலான கடைக்கா ரர்கள் முன்பக்கம் இருந்த கீத்து கொட்டகை மற்றும் தகர சீட்டுகள் பொருத்தப்பட்டிருந்ததை அகற்றிக் கொண்டனர். ஆக்கிரமிப்பு செய்து கட்டி வைத்த செங்கல் சுவர் மற்றும் காங்கிரட் தளம் அமைக்கப்பட்டு இருந்ததை அகற்றவில்லை.இதனை அறிந்த நெடுஞ்சாலை துறை அதி காரிகள் ஜே.சி.பி. எந்திரம் மூலம் ஆக்கிர மிப்புகள் அகற்றப்பட்டு கட்டிடங்கள் இடிக்கப்பட்டது. இதனால் சாலை அதிக அளவில் பொது மக்கள் வாகன ஓட்டிகள் செல்வதற்கு வசதி யாக உள்ளது.


    ஆனால் தார் சாலை ஒட்டியுள்ள மின்கம்பங்களை ஆக்கிரம்புகள் அகற்றிய இடத்தின் ஓரமாக பொருத்தி னால் தார் சாலை மிகவும் அகலமாக இருக்கும். போக்கு வரத்திற்கும் இடை யூறு இல்லாமல் இருக்கும் என்று வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கூறுகின்ற னர்இதனால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடி யாக மின்கம்பங்களை அகற்றி விபத்துகளை தவிர்க்கவும், போக்குவரத்திற்கு இடை யூறு இல்லாமல் செய்து கொடுக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளனர்.

    • மதுராந்தகம் நகரில் மருத்துவமனை சாலை, தேரடி தெரு, பழைய போலீஸ் ஸ்டேசன் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும்.
    • மதுராந்தகம் நகருக்குள் நுழையும் எல்லை பகுதிகளில் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

    மதுராந்தகம்:

    செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் நகரில் மருத்துவமனை சாலை, தேரடி தெரு, பழைய போலீஸ் ஸ்டேசன் ரோடு உள்ளிட்ட பகுதிகளில், போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும்.

    இங்கு பத்திரப்பதிவு அலுவலகம், கிளை சிறைச்சாலை, அரசு மருத்துவமனை மற்றும் அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

    மேலும், செய்யூர், சூனாம்பேடு, சித்தாமூர், பூதூர், வேடந்தாங்கல், பாக்கம், உள்ளிட்ட 100 மேற்பட்ட கிராமப்புறப் பகுதிகளில் இருந்து, மதுராந்தகத்திற்கு ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். போக்குவரத்து நெரிசலை குறைக்க நடைபாதையை ஆக்கிரமித்து செயல்பட்ட கடைகளை அகற்ற மதுராந்தகம் நகராட்சி, போக்குவரத்து காவல் துறை மற்றும் மாநில நெடுஞ்சாலைத் துறையினரால், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

    இந்த நிலையில் மதுராந்தகம் கோட்டாட்சியர், மதுராந்தகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மாநில நெடுஞ்சாலை துறை மதுராந்தகம் உதவி கோட்ட பொறியாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் ஜேசிபி எந்திரங்களை கொண்டு ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினர்.

    மதுராந்தகம் நகரில் நேற்று முதல் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை கனரக வாகனங்கள் நகருக்குள் செல்ல போக்குவரத்து காவல்துறையின் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதையொட்டி மதுராந்தகம் நகருக்குள் நுழையும் எல்லை பகுதிகளில் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

    • மகாத்மா காந்தி சுதந்திர போராட்ட காலத்தில் சேலத்தில் உள்ள பல்வேறு ஊர்கள், பகுதிகளுக்கு வந்து சென்றார்.
    • சேலம் வந்து சென்ற போது, ஏற்படுத்தப்பட்ட இந்த நினைவுச் சின்னம் தற்போது சிதிலமடைந்து, கேட்பாரற்று கிடக்கும் அவல நிலையில் உள்ளது.

     அன்னதானப்பட்டி:

    சேலம் செவ்வாய்ப்பேட்டை தேர் நிலையம் அருகே , காந்தியின் "சத்திய சோதனை " நினைவுச் சின்னம் உள்ளது. மகாத்மா காந்தி சுதந்திர போராட்ட காலத்தில் சேலத்தில் உள்ள பல்வேறு ஊர்கள், பகுதிகளுக்கு வந்து சென்றார்.

    அவ்வாறு அவர் சேலம் வந்து சென்ற போது, ஏற்படுத்தப்பட்ட இந்த நினைவுச் சின்னம் தற்போது சிதிலமடைந்து, கேட்பாரற்று கிடக்கும் அவல நிலையில் உள்ளது. மேலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சில கடைகள் ஆக்கிரமித்து இருந்தன. இது குறித்து மாலைமலர் நாளிதழில் கடந்த மாதம் 26- ந் தேதி செய்தி வெளி யானது. இது தொடர்பாக அதிகாரிகள் நேற்று அங்கு பார்வையிட்டு ஆய்வு நடத்தி னர். தொடர்ந்து அங்கு ஆக்கிரமிப்பு ெசய்யப்பட்டு இருந்த கடைகள் அகற்றப்பட்டன.

    மேலும் நடவடிக்கைகள் எடுத்து, காந்தியின் வரலாற்று நினைவுச் சின்னம் பாதுகாக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அதிகாரிகளின் இந்த நடவடிக்கை குறித்து அப்பகுதி மக்கள், சமூக ஆர்வலர்கள் பாராட்டினர். 

    • குமாரபாளையத்தில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவும் வழங்கப்பட்டது. அதன்பின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட நிலையில் சிலர் அதற்கு தடையாணை பெற்றனர்.
    • இனியாவது புதிய சாலை போடப்படுமா? என இப்பகுதி மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் அம்மன் நகர் பகுதியில் பொதுப்பணித்துறை இடத்தை ஆக்கிரமித்து பலர் வீடுகள், கடைகள் கட்டியிருந்தனர். சுமார் 30 ஆண்டு காலமாக இந்த ரோடு ஆக்கிரமிப்பு தீராத பிரச்சனையாக இருந்து வந்தது. பலமுறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்ற வந்த போது, அரசியல்வாதிகள் சிலரின் தலையீட்டால் அகற்ற முடியாத நிலை ஏற்பட்டது.

    இது குறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவும் வழங்கப்பட்டது. அதன்பின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட நிலையில் சிலர் அதற்கு தடையாணை பெற்றனர். இதனால் மீண்டும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் தொய்வு ஏற்பட்டது.

    வருடங்கள் செல்ல, செல்ல இந்த ரோடு மிகவும் பழுதாகி நடந்து கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அதிகாரிகள் மீண்டும் முனைப்புடன் செயல்பட்டு வழக்கு தொடர்ந்து, ஆக்கிரமிப்பு அகற்ற உத்தரவு பெற்றனர். இதன்படி நேற்று போலீசார் பாதுகாப்புடன், வருவாய்த்துறையினர். பொதுப்பணித்துறையினர் மேற்பார்வையில் ஆக்கிரமிப்பு பொக்லைன் கொண்டு அகற்றப்பட்டது. இனியாவது புதிய சாலை போடப்படுமா? என இப்பகுதி மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

    • ராஜபாளையம் அருகே சேத்தூர் மெயின்ரோட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
    • 4, 11 வார்டுகள் மற்றும் ஆசாரிமார் தெரு செல்லும் பாதை அருகில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் தேர்வுநிலைப் பேரூராட்சியில் ஆக்கிர மிப்புகள் அகற்றும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றது.சேத்தூர் வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகள் பேரூராட்சி நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து பஸ் நிலையம் முன்பு தொடங்கி மதுரை-தென்காசி ரோடான மெயின்ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை முற்றிலுமாக ஜே.சி.பி. எந்திரம் கொண்டு அகற்றி னார்கள்.

    மேலும் 4, 11 வார்டுகள் மற்றும் ஆசாரிமார் தெரு செல்லும் பாதை அருகில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

    சேத்தூர் பேரூராட்சி மன்ற தலைவர் பாலசுப்பிரமணியன், வருவாய் ஆய்வாளர் காளீஸ்வரி, கிராம நிர்வாக அலுவலர்கள் மாரிமுத்து, முத்துலட்சுமி, நில அளவை யர் காளிமுத்து, போலீஸ் இன்ஸ்ெபக்டர் ஆனந்த குமார், சப்-இன்ஸ்ெபக்டர் பெருமாள்சாமி, சேத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடகோபு ஆகியோர் நேரடி கண்காணிப்பில், பேரூராட்சி இளநிலை உதவியாளர் அசோக்குமார், வரிவசூலர் பலராமன் மற்றும் அலுவலக பணியாளர்கள் ஆக்ரமிப்புகளை அகறற்றும் பணியில் ஈடுபட்டனர்.சேத்தூரில் நீண்ட இடை வெளிக்கு பிறகு கனரக வாகனங்கள் அதிகம் வந்து செல்லக்கூடிய மெயின் ேராட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

    • கோட்டை ஹபீப் தெருவில் சாலையோர கடைகள் அகற்றப்பட்டு அப்சரா சாலையில் மாற்று இடம் வழங்கப்பட்டது. மாற்று இடத்தில் மாநகராட்சி அனுமதியுடன் 41 கடைகளுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
    • இதையடுத்து அனுமதி இன்றி வைக்கப்பட்ட 6 கடைகளை அதிகாரிகள் அகற்றினர்.

    சேலம்:

    சேலம் மாநகராட்சி உத்தரவின்பேரில் கோட்டை ஹபீப் தெருவில் சாலையோர கடைகள் அகற்றப்பட்டு அப்சரா சாலையில் மாற்று இடம் வழங்கப்பட்டது. மாற்று இடத்தில் மாநகராட்சி அனுமதியுடன் 41 கடைகளுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதே இடத்தில் அனுமதியின்றி சிலர் கடைகள் அமைத்தனர். அனுமதியின்றி அமைக்கப்பட்ட கடைகள் காவல்துறை பாதுகாப்புடன் மாநகராட்சி அதிகாரிகள் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    41 கடைகளுக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு இருப்பதாக வியாபாரிகள் குற்றசாட்டினர். எந்த அடிப்படையில் கடைகள் ஒதுக்கப்பட்டன என்பது குறித்து வியாபாரிகள் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.மாமன்ற கூட்டம் ஒப்புதல் படியே கடைகள் ஒதுக்கப்பட்டதாக அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

    இதையடுத்து அனுமதி இன்றி வைக்கப்பட்ட 6 கடைகளை அதிகாரிகள் அகற்றினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • ராசிபுரம் தாலுகா நாமகிரிப்பேட்டை அருகே உள்ள மங்களபுரம் பகுதியில் தனியார் குளுக்கோஸ் தொழிற்சாலை கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது.
    • இந்த பலவிதமான நோய்கள் ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் எனவே தொழிற்சாலையை நிரந்தரமாக மூடவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்தும் போராட்டங்களை நடத்தியும் வந்தனர்.

    ராசிபுரம்:

    ராசிபுரம் தாலுகா நாமகிரிப்பேட்டை அருகே உள்ள மங்களபுரம் பகுதியில் தனியார் குளுக்கோஸ் தொழிற்சாலை கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது.

    இந்த ஆலையின் கழிவுநீர் வெளியேற்றத்தால் மங்களபுரம் உள்பட 5-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் மாசுபட்டு இருப்பதாகவும், மேலும் பலவிதமான நோய்கள் ஏற்பட்டு மக்கள்

    பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் எனவே தொழிற்சாலையை நிரந்தரமாக மூடவேண்டும் என அப்பகுதி

    யைச் சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை வைத்தும் போராட்டங்களை நடத்தியும் வந்தனர்.

    இந்த தொழிற்சாலை நிர்வாகத்தினர் கோவில் நிலம், மற்றும் புறம்போக்கு நிலங்களையும், நீர்நிலை

    களையும் ஆக்கிரமித்து இருப்ப

    தாகவும் பொதுமக்கள் புகார் அளித்தனர். அதன் பேரில் நாமக்கல் கலெக்டர் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார்.

    இதையொட்டி நேற்று வருவாய் துறையினர் மற்றும் போலீசார் சேர்ந்து தனியார் தொழிற்சாலை ஆக்கிரமிப்பு செய்திருந்த அரசு புறம்போக்கு நிலத்தை

    யும், கோவில் நிலத்தையும்,

    கழிவு நீர் குழாய்களையும் கட்டப்பட்ட கட்டிடங்க ளையும் ஜேசிபி எந்திரம் மூலம் அகற்றினர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

    • இட நெருக்கடி காரணமாக 2 புதிய நடை மேடைகள் அமைக்கப்பட உள்ளது.
    • ஆரம்பக் கட்ட பணிகள் தற்போது தொடங்கப்பட்டு உள்ளன.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்தில் இட நெருக்கடி காரணமாக 2 புதிய நடை மேடைகள் அமை க்கப்பட உள்ளது. இதற்கான ஆரம்பக் கட்ட பணிகள் தற்போது தொடங்கப்பட்டு உள்ளன.

    இதன் ஒரு பகுதியாக கடந்த சில ஆண்டுகளாக பயன்பாடு இல்லாமல் இருந்து வந்த மேம்பாலம் அகற்றப்படுகிறது. இந்தப் பாலம் ரெயில் நிலையத்தில் முன்பிருந்த ரோடு ரெயில்வே தண்டவாளம் அமைந்த காரணத்திற்காக வடிவீஸ்வரம் ஊர்மக்கள் ஊட்டுவாழ்மடம் ரேசன் கடைக்கு செல்ல வசதியாக அமைக்கப்பட்டது. ஆனால் இதன் பயன்பாடு குறைந்ததால் தற்போது நடைமேடைகள் 1,2 மற்றும் 3-க்குச் செல்ல லிப்டுக்குச் செல்லும் பாதையாக மாற்றப்பட்டது.

    இந்த சூழலில் மேம்பா லத்தின் தூண், பிட்லைன் விரிவாக்கம் செய்ய உள்ள பகுதியில் இடையூறாக இருந்து வந்தது. ஆகையால் இந்த மேம்பாலத்தின் பகுதி வெட்டி எடுக்கப்பட்டு வருகிறது. புதிய நடைமேடைகள் (4 மற்றும் 5) அமைத்த பிறகு இந்த நடை மேம்பாலத்தை மீண்டும் அமைத்து ரெயில் நிலையம் பின்புறம் வழியாக 2-வது நுழைவு வாயில் அமைக்க வேண்டும். 4 வழி சாலை இணைக்கும் இடத்தில் நடை மேடை மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று குமரி மாவட்ட ரெயில் பயணி கள் சங்க தலைவர் ஸ்ரீராம் வலியுறுத்தி உள்ளார்.

    • ஈத்தாமொழி வெள்ளாளர் தெருவில் சுமார் 50 ஆண்டுகளாக ஏராளமானோர் வசித்து வருகின்றனர்
    • 50 ஆண்டுகளாக வசித்து வரும் இந்த இடத்தை விட்டு அகற்றினால் நாங்கள் இந்த இடத்திலேயே தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வோம் என்றனர்.

    கன்னியாகுமரி:

    தர்மபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட ஈத்தாமொழி வெள்ளாளர் தெருவில் சுமார் 50 ஆண்டுகளாக ஏராளமானோர் வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் அவர்கள் பாதையை ஆக்கிரமித்து வீடுகள் கட்டி உள்ளதாக மதுரை ஐகோர்ட்டில் தனியார் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் கோர்ட்டு உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற தர்மபுரம் ஊராட்சி மன்ற நிர்வாகத்தின் சார்பாக தலைவர் ரெங்க நாயகி கணேசன், ஊராட்சி செயலர் பாமா ஆகியோர் சம்பவ இடம் சென்றனர்.

    அவர்கள் பொக்லைன் எந்திரம் மற்றும் ஆட்களுடன் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று ஆக்கிரமிப்பை அகற்ற முயன்றனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், வயதான முதியோர்கள், குழந்தைகள் அங்கு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட வர்கள், 50 ஆண்டுகளாக வசித்து வரும் இந்த இடத்தை விட்டு அகற்றினால் நாங்கள் இந்த இடத்திலேயே தீக்கு ளித்து தற்கொலை செய்து கொள்வோம் என்றனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.

    தகவல் அறிந்ததும் ஈத்தா மொழி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுவாமி தலைமையில் போலீசார் சம்பவ இடம் விரைந்தனர். தர்மபுரம் தெற்கு கிராம நிர்வாக அதிகாரி ராம லெட்சுமி (பொறுப்பு), ராஜாக்கமங்கலம் வருவாய் ஆய்வாளர் செய்யது அலி பாத்திமா, ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் கனக பாய், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் திருநாவுக்கரசு ஆகியோரும் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது பொது மக்கள், நாங்கள் வசித்து வரும் குடியிருப்பு வீடுகளை உடனடியாக காலி செய்து மாற்று இடத்திற்கு செல்ல முடியாத நிலையில் வறுமை யில் உள்ளோம். எங்கள் மீது மாவட்ட நிர்வாகம் கருணை கூர்ந்து நாங்கள் குடியிருப்பதற்கு மாற்று இடம் தந்து உதவ வேண்டும், முடியாத பட்சத்தில் எங்களுக்கு கால அவகாசம் வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

    இதன் பேரில் அதிகாரிகள் தற்காலிகமாக ஆக்கிர மிப்பு அகற்றுவதை நிறுத்தி வைத்து உள்ளனர்.

    ×