search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இங்கிலாந்து இந்தியா தொடர்"

    • இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 245 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • 2வது இன்னிங்சில் புஜாரா 66 ரன்னும், ரிஷப் பண்ட் 57 ரன்னும் எடுத்தனர்.

    பர்மிங்காம்:

    இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடைபெற்று வருகிறது.

    முதலில் பேட் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 416 ரன்கள் குவித்தது. ரிஷப் பண்ட் 146 ரன்னும், ரவீந்திர ஜடேஜா 104 ரன்னும் எடுத்தனர்.

    இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன் 5 விக்கெட்டும், மேட்டி பாட்ஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 284 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஜானி பேர்ஸ்டோவ் சதமடித்து 106 ரன்னில் அவுட்டானார்.

    இந்தியா சார்பில் சிராஜ் 4 விக்கெட்டும், பும்ரா 3 விக்கெட்டும், ஷமி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    132 ரன்கள் முன்னிலை வகித்த இந்தியா, இரண்டாவது இன்னிங்சில் 245 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. புஜாரா 66 ரன்னும், ரிஷப் பண்ட் 57 ரன்னும் அடித்தனர்.

    இங்கிலாந்து சார்பில் பென் ஸ்டோக்ஸ் 4 விக்கெட்டும், மேட்டி பாட்ஸ், பிராட் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 378 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் அலெக்ஸ் லீஸ், ஜாக் கிராலி பொறுப்புடன் ஆடினர். லீஸ் அரை சதமடித்தார்.

    அணியின் எண்ணிக்கை 107 ஆக இருந்தபோது கிராலி 46 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய ஒல்லி போப் டக் அவுட்டானார். தொடர்ந்து லீஸ் 57 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனால் இங்கிலாந்து 109 ரன்னுக்கு 3 விக்கெட்டை இழந்தது.

    ஆனால் அடுத்து இறங்கிய ஜோ ரூட், பேர்ஸ்டோவ் ஜோடி முதலில் நிதானமாக ஆடியது. தொடர்ந்து அதிரடியிலும் மிரட்டியது. இருவரும் அரை சதமடித்து அசத்தினர்.

    நான்காம் நாள் முடிவில் இங்கிலாந்து 3 விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் எடுத்துள்ளது. ஜோ ரூட் 76 ரன்னும், பேர்ஸ்டோவ் 72 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். இங்கிலாந்து வெற்றி பெற இன்னும் 119 ரன்கள் தேவை என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

    • இந்திய அணி 2-வது இன்னிங்சில் 245 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
    • ரிஷப் பண்ட் 2-வது இன்னிங்சில் 57 ரன்கள் அடித்தார்.

    பர்மிங்காம்:

    இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, முதல் இன்னிங்சில் 416 ரன்கள் எடுத்தது.

    இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 146 ரன்களையும், ரவிந்திர ஜடேஜா 104 ரன்களையும் குவித்தனர். தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் விளையாடிய இங்கிலாந்து அணி 284 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் ஜானி பேர்ஸ்டோவ் சதம் அடித்தார்.

    இதை தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை விளையாடிய இந்திய அணி நேற்றைய 3-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் எடுத்து இருந்தது.

    இன்று நடைபெற்ற 4-வது நாள் ஆட்டத்தில் புஜாரா 66 ரன்கள் எடுத்த நிலையிலும், ஷ்ரேயஸ் ஐயர் 19 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். முதல் இன்னிங்சில் சதம் அடித்த பண்ட் 2-வது இன்னிங்சிலும் அரைசதம் கடந்து 57 ரன்கள் அடித்தார்.

    ரவீந்திர ஜடேஜா 23 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். பும்ரா 7 ரன்னுடன் வெளியேற, இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 245 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

    இதையடுதது இங்கிலாந்து அணி இந்த போட்டியில் வெற்றி பெற 378 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணி நிர்ணயித்துள்ளது.

    • இந்திய அணி 361 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.
    • ஜடேஜா 17 ரன்னிலும் முகமது சமி 13 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.

    இங்கிலாந்து அணிக்கு எதிராக கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா விளையாடி வருகிறது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 416 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை ஆடியது. பேர்ஸ்டோவின் சதத்தால் இங்கிலாந்து அணி 284 ரன்கள் எடுத்தது.

    2-வது இன்னிங்சை ஆடிய இந்திய அணி நேற்றைய 3-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் எடுத்தது. இந்நிலையில் 4-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய புஜாரா-ரிஷப் பண்ட் அரை சதம் அடித்தனர்.

    புஜாரா 66, ஷ்ரேயாஸ் ஐயர் 19, ரிஷப் பண்ட் 57, சர்துல் தாகூர் 4 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து ஜடேஜா-முகமது சமி ஜோடி நிதானமாக ஆடினர். 4-வது நாள் உணவு இடைவேளை வரை இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 229 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் இந்திய அணி 361 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. ஜடேஜா 17 ரன்னிலும் முகமது சமி 13 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.

    • கொரோனாவால் பாதிக்கப்பட்ட ரோகித் சர்மாவுக்கு மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டது.
    • ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது.

    இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்தியா 5-வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. போட்டிக்கு முன்பாக பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி விளையாடியது. அப்போது ரோகித் சர்மா கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை மேற்கொண்டார்.

    அதனால் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் பும்ரா நியமிக்கப்பட்டார். அவர் தலைமையில் இந்திய அணி 5-வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்தது.

    இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ரோகித் சர்மாவுக்கு மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவருக்கு கொரோனா இல்லை என முடிவானது. இதனையடுத்து ரோகித் சர்மா பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதனை பிசிசிஐ டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    இந்த டெஸ்ட் போட்டியை தொடர்ந்து ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் தொடரில் இங்கிலாந்தில் விளையாடுவதால் அவர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

    • 5-வது டெஸ்ட்டில் இந்திய அணியின் கேப்டன் பும்ரா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
    • 2014-ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக 19 விக்கெட்டுகளை புவனேஸ்வர் குமார் கைப்பற்றினார்.

    இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. நான்கு போட்டிகள் முடிவடைந்த நிலையில் 5-வது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. 3-ம் நாள் ஆட்டம் முடிவடைந்த நிலையில் 4-வது நாள் ஆட்டம் இன்று 3 மணிக்கு தொடங்கும்.

    3-வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் எடுத்துள்ளது. இந்த டெஸ்ட்டில் இந்திய அணியின் கேப்டன் பும்ரா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய இந்திய வீரர்கள் பட்டியலில் பும்ரா முதல் இடத்தைப் பிடித்துள்ளார். இவர் 21 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதற்கு அடுத்தப்படியாக புவனேஸ்வர் குமார் உள்ளார். அவர் 2014-ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக 19 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    3-வது இடத்தில் ஜாகீர் கான்(2007), இஷாந்த சர்மா(2018) 18 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.

    • கொரோனா பாதிக்கப்பட்ட ரோகித் சர்மா தனிமைபடுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வந்தார்.
    • இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ரோகித் சர்மா களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பர்மிங்கம்:

    இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு கடந்த மாதம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி உள்ளூர் அணியுடன் இணைந்து கடந்த 23-ம் தேதி பயிற்சி கிரிக்கெட்டில் விளையாடியது.

    அப்போது, இந்திய அணியின் கேட்பன் ரோகித் சர்மாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதன் காரணமாக இந்தியா - இங்கிலாந்து இடையேயான கடைசி டெஸ்டில் ரோகித் சர்மா விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக பும்ரா நியமிக்கப்பட்டார்.

    கொரோனா பாதிக்கப்பட்ட ரோகித் சர்மா தனிமைபடுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், ரோகித் சர்மா வைரஸ் பாதிப்பில் இருந்து நேற்று குணமடைந்துள்ளார். கொரோனா பரிசோதனையின்போது 'நெகட்டிவ்' என முடிவு வந்துள்ளது. கொரோனாவில் இருந்து குணமடைந்ததையடுத்து இந்தியா - இங்கிலாந்து இடையே நடைபெற உள்ள முதல் டி20 போட்டியில் ரோகித் சர்மா களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 284 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • இங்கிலாந்து சார்பில் ஜானி பேர்ஸ்டோவ் அதிரடியாக ஆடி சதமடித்து 106 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    பர்மிங்காம்:

    இந்தியா, இங்கிலாந்து மோதும் கடைசி டெஸ்ட் போட்டி பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 84.5 ஓவர்களில் 416 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ரிஷப் பண்ட் 146 ரன்களும், ஜடேஜா 104 ரன்களும், பும்ரா 31 ரன்களும் எடுத்தனர்.

    இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன் 5 விக்கெட்டும், மேட்டி பாட்ஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 284 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பேர்ஸ்டோவ் அதிரடியாக ஆடி சதமடித்தார். அவர் 106 ரன்னில் அவுட்டானார். சாம் பில்லிங்ஸ் 36 ரன்னிலும், ஜோ ரூட் 31 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து அந்த அணி இந்தியாவை விட 132 ரன்கள் பின்தங்கியுள்ளது.

    இந்தியா சார்பில் சிராஜ் 4 விக்கெட்டும், பும்ரா 3 விக்கெட்டும், ஷமி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதைத் தொடர்ந்து, இந்தியா இரண்டாவது இன்னிங்சை ஆடியது. தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மான் கில் 4 ரன்னில் அவுட்டானார். ஹனுமா விஹாரி 11 ரன்னிலும், விராட் கோலி 20 ரன்னிலும் அவுட்டாகினர். அப்போது இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் எடுத்தது.

    ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் புஜாரா நிதானமாக ஆடினார். அவருக்கு விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் ஒத்துழைப்பு கொடுத்தார். 4-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி இதுவரை 50 ரன்கள் சேர்த்துள்ளது.

    மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா 50 ரன்னுடனும், ரிஷப் பண்ட் 30 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். தற்போது வரை இந்தியா 257 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

    • இந்தியா சார்பில் சிராஜ் 4 விக்கெட்டும், பும்ரா 3 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
    • இங்கிலாந்து சார்பில் ஜானி பேர்ஸ்டோ 106 ரன்கள் குவித்தார்.

    பர்மிங்காம்:

    இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. முதலில் களம் இறங்கிய விளையாடிய இந்தியா முதல் இன்னிங்சில் 416 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 146 ரன்களையும், ரவிந்திர ஜடேஜா 104 ரன்களையும் குவித்தனர்.

    இதனை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணியில் கேப்டன் பென்ஸ்டோக் 25 ரன்கள் அடித்தார். சாம் பில்லிங்ஸ் 36 ரன்கள் எடுத்தார். போட்ஸ் 19 ரன்னுடன் வெளியேறினார்.

    எனினும் அந்த அணியின் ஜானி பேர்ஸ்டோ அதிரடியாக விளையாடி 106 ரன்கள் குவித்த நிலையில் ஷமி பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். இங்கிலாந்து அணி 284 ரன்களுக்கு முதல் இன்னிங்சை இழந்தது. இதனால் இந்திய அணி 132 ரன்கள் முன்னிலை பெற்றது.

    இந்திய அணி தரப்பில் சிராஜ் 4 விக்கெட்களும், பும்ரா 3 விக்கெட்களும் ,ஷமி 2 விக்கெட்டும் கைப்பற்றினர். இதனை தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 9 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 27 ரன்கள் அடித்திருந்தது.

    • இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் இந்தியாவின் ரிஷப் பண்ட், ஜடேஜா ஆகியோர் சதமடித்தனர்.
    • இங்கிலாந்துக்கு எதிரான முதல் இன்னிங்சில் இந்தியாவின் பும்ரா 3 விக்கெட் வீழ்த்தினார்.

    பர்மிங்காம்:

    இந்தியா, இங்கிலாந்து மோதும் கடைசி டெஸ்ட் போட்டி பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 84.5 ஓவர்களில் 416 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ரிஷப் பண்ட் 146 ரன்களும், ஜடேஜா 104 ரன்களும், பும்ரா 31 ரன்களும் எடுத்தனர்.

    இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன் 5 விக்கெட்டும், மேட்டி பாட்ஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதனையடுத்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அலெக்ஸ் லீஸ் 6 ரன்னிலும், ஜாக் கிராலி 9 ரன்னிலும், ஒல்லி போப் 10 ரன்னிலும் வெளியேறினர். இங்கிலாந்து இன்னிங்சின்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிது பாதிக்கப்பட்டது.

    அடுத்து இறங்கிய ஜோ ரூட், பேர்ஸ்டோவ் ஜோடி பொறுமையுடன் ஆடியது. ஜோ ரூட் 31 ரன்னில் ஆட்டமிழந்தார், ஜாக் லீச் டக் அவுட்டானார்.

    இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 84 ரன்கள் எடுத்திருந்தது. பேர்ஸ்டோவ் 12 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இதையடுத்து அந்த அணி இந்தியாவை விட 332 ரன்கள் பின்தங்கியுள்ளது.

    இந்தியா சார்பில் பும்ரா 3 விக்கெட்டும், சிராஜ், ஷமி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • இந்தியா முதல் இன்னிங்சில் 416 ரன்கள் எடுத்தது
    • இங்கிலாந்து 2 ஆம் நாள் தேநீர் இடைவெளியின்போது 356 ரன்கள் பின் தங்கியிருந்தது.

    பர்மிங்காம்:

    இந்தியா-இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி இங்கிலாந்தின் பர்கிம்காம் நகரில் நடைபெற்று வருகிறது. 2-வது நாளான இன்று முதல் இன்னிங்சில் இந்திய அணி 84.5 ஓவர்களில் 416 ரன்களுக்கு அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 146 ரன்களும் ஜடேஜா 104 ரன்களும், பும்ரா 31 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி தொடக்க வீரர் அலெக்ஸ் லீஸ் 6 ரன்னும், சாக் கிராலி 9 ரன்னுக்கும் விக்கெட்டை பறிகொடுத்தனர். உல்லிபாபு 10 ரன்னுடன் வெளியேறினார். இங்கிலாந்து 31 ரன்கள் எடுத்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

    2 நாள் தேநீர் இடைவேளையின்போது 15.1 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்கள் இழப்பிற்கு 60 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து அந்த அணி இந்தியாவை விட 356 ரன்கள் பின் தங்கியிருந்தது. மூன்று விக்கெட்களையும் பும்ரா கைப்பற்றினார்.

    • ஸ்டூவர்ட் பிராட் வீசிய 84 ஓவரில் 35 ரன்கள் விட்டு கொடுத்தார்.
    • டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ஓவரில் அதிக ரன்கள் விட்டு கொடுத்த வீரர் என்ற மோசமான சாதனையை பிராட் படைத்துள்ளார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 338 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இன்று 2-நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணி 416 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.

    இந்த டெஸ்டில் பல்வேறு சாதனைகள் அரங்கேறியது. ஜடேஜா-பண்ட் ஆகியோர் சாதனைகள் படைத்த நிலையில் இந்திய அணியின் கேப்டன் பும்ராவும் தனது பங்கிற்கு பேட்டிங்கில் ஒரு சாதனையை படைத்துள்ளார். டெஸ்ட் போட்டியில் ஒரு ஓவரில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை எட்டினார்.

    ஸ்டூவர்ட் பிராட் வீசிய 84 ஓவரில் 35 ரன்கள் விட்டு கொடுத்தார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ஓவரில் அதிக ரன்கள் விட்டு கொடுத்த வீரர் என்ற மோசமான சாதனையை பிராட் படைத்துள்ளார்.

    இதேபோல் 2007-ம் ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பையில் பிராட் வீசிய ஓவரில் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங் 36 ரன்கள் குவித்தார். இந்த பந்து வீச்சு டி20 வரலாற்றில் மோசமான சாதனையாக பதிவு செய்யப்பட்டது. அதே பாணியில் தற்போது டெஸ்ட் போட்டியிலும் பிராட் அதிக ரன்களை விட்டுக் கொடுத்துள்ளார்.

    • பும்ரா 16 பந்தில் 31 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
    • இங்கிலாந்து அணி தரப்பில் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இந்தியா-இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. முதல் நாள் முடிவில் இந்திய அணி 7விக்கெட் இழப்பிற்கு 338 ரன்கள் எடுத்திருந்தது. ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். ஜடேஜா 83 ரன்னுடனும் சமி ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

    இந்நிலையில் 2-வது நாளான இன்று தொடங்கியது. தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜடேஜா சதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் ரிஷப் பண்ட்-ஜடேஜா ஜோடி மேலும் ஒரு சாதனை பட்டியலில் இடம் பிடித்துள்ளாது. இந்திய அணி வீரர்களில் ஒரு இன்னிங்சில் இரண்டு இடது கை பேட்ஸ்மேன்கள் சதம் அடித்த பட்டியலில் பண்ட்-ஜடேஜா மூன்றாவது இடத்தை பிடித்துள்ளனர்.

    ஜடேஜா

    ஜடேஜா

    தொடர்ந்து ஆடிய ஜடேஜா 104 ரன்னில் ஆண்டர்சன் பந்து வீச்சில் போல்ட் ஆனார். அதனைத் தொடர்ந்து பும்ரா அதிரடியாக விளையாடினார். ஸ்டூவர்ட் பிராட் ஓவரில் 4 பவுண்டரி 2 சிக்சர் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். மறுமனையில் இருந்த சிராஜ் 2 ரன்னில் ஆண்டர்சன் பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

    பும்ரா 16 பந்தில் 31 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் இந்திய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 416 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணி தரப்பில் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    ×