search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இங்கிலாந்து இந்தியா தொடர்"

    • டோனியின் 17 ஆண்டு சாதனையை ரிஷப் பண்ட் தகர்த்துள்ளார்.
    • இளம் வயதில் 100 சிக்சர் அடித்தவர்கள் பட்டியலில் 3-வது இடத்தில் சுரேஷ் ரெய்னா உள்ளார்.

    இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 5-வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 338 ரன்கள் எடுத்தது. அதிரடியாக விளையாடிய ரிஷப் பண்ட் சதம் அடித்து அசத்தினார்.

    அவர் 111 பந்தில் 146 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதன் மூலம் அவர் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். டோனியின் 17 ஆண்டு சாதனையை அவர் தகர்த்துள்ளார். இந்திய விக்கெட் கீப்பரில் அதிவேக சதம் அடித்து டோனியின் சாதனையை அவர் முறியடித்துள்ளார்.

    மேலும் இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் சாதனையையும் பண்ட் முறியடித்துள்ளார். இளம் வயதில் 100 சிக்சர் அடித்தவர்களில் ரிஷப் பண்ட் முதல் இடத்தை பிடித்துள்ளார். 24 வயதில் அவர் 100 சிக்சர் அடித்துள்ளார். சச்சின் 25 வயதில் 100 சிக்சர் அடித்தார். 3-வது இடத்தில் சுரேஷ் ரெய்னா உள்ளார். அவர் 25 வயதில் 100 சிக்சர் விளாசியுள்ளார்.

    • பும்ரா எப்போதும் தனது பந்து வீச்சில் கவனமாக இருப்பார்.
    • கேப்டனாக இருப்பதை காட்டிலும் பும்ரா ஒரு பந்து வீச்சாளராக எங்களுக்கு அதிகம் தேவை.

    எட்ஜ்பஸ்டன்:

    இங்கிலாந்துக்கு எதிராக நேற்று தொடங்கிய 5-வது டெஸ்டில் இந்திய அணிக்கு கேப்டனாக வேகப்பந்து வீரர் பும்ரா பணியாற்றினார்.

    ரோகித் சர்மா கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் அவருக்கு இந்த அதிர்ஷ்டம் கிடைத்தது. கபில்தேவுக்கு பிறகு கேப்டன் பொறுப்பை வகித்த வேகப்பந்து வீரர் என்ற பெருமையை பும்ரா பெற்றார்.

    இந்த நிலையில் வேகப்பந்து வீரரான பும்ரா கேப்டனாக பணியாற்றுவது எளிது அல்ல என்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    பும்ரா எப்போதும் தனது பந்து வீச்சில் கவனமாக இருப்பார். ஆட்டத்தின் போக்கை கணிப்பதில் வல்லவர். ஆட்டத்தின் தன்மைக்கு ஏற்றவாறு திறமையுடன் பந்து வீசக்கூடியவர்.

    பும்ரா இதுவரை கேப்டனாக இருந்தது இல்லை. இதனால் புதிய பொறுப்பு அவருக்கு சவாலானதாக இருக்கும். ஆனாலும் நாங்கள் அவருக்கு எங்களது ஆதரவை தொடர்ந்து அளிப்போம்.

    ஒரு வேகப்பந்து வீச்சாளர் கேப்டனாக செயல்படுவது சாதாரணமான காரியம் அல்ல. தனது பந்து வீச்சிலும் கவனம் செலுத்த வேண்டும். கேப்டனாக இருப்பதை காட்டிலும் பும்ரா ஒரு பந்து வீச்சாளராக எங்களுக்கு அதிகம் தேவை.

    இவ்வாறு ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.

    • ஒருநாள் போட்டிக்கான அணியில் ஜோரூட், பென் ஸ்டோக்ஸ் இடம் பெற்றுள்ளனர்.
    • டி20, ஒருநாள் தொடரில் பேர்ஸ்டோவ் இடம் பெறவில்லை.

    இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ஒத்திவைக்கப்பட்ட கடைசி டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழந்து 338 ரன்கள் எடுத்துள்ளது.

    டெஸ்ட் போட்டி முடிந்த பிறகு 3 டி20, ஒருநாள் போட்டியிலும் விளையாடுகிறது. இந்திய அணிக்கு எதிராக டி20, ஒருநாள் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மோர்கன் ஓய்வு அறிவித்த நிலையில் இங்கிலாந்து அணியின் புதிய கேப்டனாக பட்லர் பதவியேற்றுள்ளார்.

    ஒருநாள் போட்டிக்கான அணியில் ஜோரூட், பென் ஸ்டோக்ஸ் இடம் பெற்றுள்ளனர். டி20 அணியில் பேர்ஸ்டோவ் இடம் பெறவில்லை.

    டி20 போட்டிக்கான இங்கிலாந்து அணி வீரர்கள் விவரம்:

    ஜோஸ் பட்லர் (கேப்டன்), மொயீன் அலி, ஹாரி புரூக், சாம் குர்ரன், ரிச்சர்ட் க்ளீசன், கிறிஸ் ஜோர்டன், லிவிங்ஸ்டன், டேவிட் மலான், டைமல் மில்ஸ், மேத்யூ பார்கின்சன், ஜேசன் ராய், பில் சால்ட், ரீஸ் டாப்லி, டேவிட் வில்லி

    ஒருநாள் போட்டிக்கான வீரர்கள் விவரம்:-

    பட்லர் (கேப்டன்), மொயின் அலி, ஜானி பேர்ஸ்டோவ், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், சாம் கர்ரன், லிவிங்ஸ்டன், கிரேக் ஓவர்டன், மேத்யூ பார்கின்சன், ஜோ ரூட், ஜேசன் ராய், பில் சால்ட், பென் ஸ்டோக்ஸ், ரீஸ் டாப்லி, டேவிட் வில்லி

    • ரிஷப் பண்ட்-ஜடேஜா ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 222 ரன் குவித்து இங்கிலாந்து மண்ணில் சாதனை படைத்தது.
    • 298 ரன்கள் எடுத்து அசாருதீன்-வெங்சர்க்கார் ஜோடி முதல் இடத்தில் உள்ளது.

    எட்ஜ்பஸ்டன்:

    இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையே கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் நேற்று தொடங்கியது.

    டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் ஆடிய இந்திய அணி 98 ரன் எடுப்பதற்குள் 5 விக்கெட்டை இழந்தது.

    சுப்மன் கில் (17 ரன்), புஜாரா (13), ஸ்ரேயாஸ் அய்யர் (15) ஆகியோர் ஆண்டர்சன் பந்திலும் , விஹாரி (20), விராட் கோலி (11) ஆகியோர் மேத்யூ பாட்ஸ் பந்திலும் வெளியேறினார்கள். 6-வது விக்கெட்டான ரிஷப்பண்ட்-ரவீந்திர ஜடேஜா ஜோடி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டது.

    குறிப்பாக ரிஷப் பண்ட் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 89 பந்தில் சதம் அடித்து 5-வது செஞ்சூரியை பதிவு செய்தார். ரிஷப் பண்ட் 111 பந்தில் 146 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார். இதில் 19 பவுண்டரிகளும், 4 சிக்சர்களும் அடங்கும். அவரும், ஜடேஜாவும் 6-வது விக்கெட்டுக்கு 222 ரன் குவித்தது மிகவும் முக்கியமானதாகும்.

    அடுத்து வந்த ஷர்துல் தாகூர் ஒரு ரன்னில் பென்ஸ்டோக்ஸ் பந்தில் ஆட்டம் இழந்தார். மறுமுனையில் இருந்த ஜடேஜா தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 73 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 338 ரன் குவித்து வலுவான நிலையில் இருந்தது.

    ஜடேஜா 83 ரன்னிலும் (10 பவுண்டரி) முகமது ஷமி ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டம் இழக்காமல் உள்ளனர். இன்று 2-வது நாள் ஆட்டம் நடக்கிறது.

    ரிஷப் பண்ட்-ஜடேஜா ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 222 ரன் குவித்து இங்கிலாந்து மண்ணில் சாதனை படைத்தது. 1997-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கேப்டவுன் மைதானத்தில் அசாருதீன்-தெண்டுல்கர் ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 222 ரன் எடுத்தனர். இதனை ரிஷப் பண்ட்-ஜடேஜா ஜோடி சமன் செய்தது.

    298 ரன்கள் எடுத்து அசாருதீன்-வெங்சர்க்கார் ஜோடி முதல் இடத்தில் உள்ளது. 272 ரன்கள் எடுத்து அசாருதீன் - கபில் தேவ் ஜோடி 2-வது இடத்திலும் டோனி-டிராவிட் ஜோடி 224 ரன்கள் எடுத்து 3-வது இடத்திலும் உள்ளது.

    • இந்தியா 2 விக்கெட்டுக்கு 53 ரன் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிது பாதிக்கப்பட்டது.
    • ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 222 ரன்கள் சேர்த்து அசத்தியது.

    பர்மிங்காம்:

    இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பர்மிங்காம் நகரில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக புஜாரா, ஷுப்மன் கில் ஜோடி களமிறங்கியது. கில் 17 ரன்னிலும், புஜாரா 13 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அப்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிது பாதிக்கப்பட்டது. மழை நின்றதும் ஆட்டம் தொடர்ந்து நடைபெற்றது. விகாரி 20 ரன்னிலும், விராட் கோலி 11 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஸ்ரேயஸ் அய்யர் 15 ரன்னில் ஆண்டர்சன் பந்துச்சில் விக்கெட் கீப்பர் பில்லிங்சிடம் பிடிபட்டார். இதனால் இந்திய அணி 100 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

    அடுத்து இறங்கிய ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் இணைந்து ரன் சேகரிப்பில் ஈடுபட்டனர். தேநீர் இடைவேளையில் இந்தியா 5 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்களை எடுத்தது.

    தொடர்ந்து ஆடிய ரிஷப் பண்ட் அதிரடியாக ஆடி சதமடித்தார். ஜடேஜா அரை சதம் கடந்தார். அணியின் எண்ணிக்கை 320 ஆக இருந்தபோது ரிஷப் பண்ட் 146 ரன்னில் ஆட்டமிழந்தார். ஷர்துல் தாக்குர் ஒரு ரன்னில் அவுட்டானார்.

    முதல் நாள் முடிவில், இந்திய அணி 73 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 338 ரன்கள் குவித்தது. ஜடேஜா 83 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன் 3 விக்கெட், மேட்டி பாட்ஸ் 2 விக்கெட் வீழ்த்தினர்.

    • சிறப்பாக விளையாடிய ரவீந்திர ஜடேஜா அரை சதம் அடித்தார்.
    • மழை குறுக்கிட்டதால் போட்டி சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

    பர்மிங்காம்:

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பர்மிங்காம் நகரில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக புஜாரா-சுப்மன் கில் ஜோடி களமிறங்கியது. கில் 17 ரன்னிலும், புஜாரா 13 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. மழை நின்ற நிலையில் ஆட்டம் தொடர்ந்து நடைபெற்றது. விகாரி 20 ரன்னுக்கும், விராட் கோலி 11 ரன்னில்  ஆட்டமிழந்தனர்.

    ஸ்ரேயஸ் அய்யர் 15 ரன்னில் ஆண்டர்சன் பந்துச்சில் விக்கெட் கீப்பர் பில்லிங்சிடம் பிடிபட்டார். இதனால் இந்திய அணி 100 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. பின்னர்  ரிஷப் பண்ட்டும், ரவீந்திர ஜடேஜாவும் இணைந்து ரன் சேகரிப்பில் ஈடுபட்டனர்.

    இந்திய அணி தேநீர் இடைவேளை வரை 5 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்களை எடுத்தது. ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். பின்னர் தொடர்ந்து பண்ட்-ஜடேஜா ஜோடி ரன் குவிப்பில் ஈடுபட்டது.

    அபாரமாக விளையாடிய ரிஷப் பண்ட் சதம் அடித்தார். ஜடேஜா அரைச்சதம் அடித்தார். முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 60 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 259 ரன்கள் அடித்திருந்தது.

    • இங்கிலாந்து அணி வீரர் ஆண்டர்சன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
    • விராட் கோலி 1 ரன்னிலும் விஹாரி 14 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக புஜாரா-சுப்மன் கில் ஜோடி களமிறங்கியது. சுப்மன் கில் ஆட்டம் அருமையாக இருந்தது. 4 பவுண்டரிகள் விளாசிய அவர் ஆண்டர்சன் ஓவரில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த விஹாரி-புஜாராவுடன் சேர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    17-வது ஓவர் வரை தாக்கு பிடித்த இந்த ஜோடியை ஆண்டர்சன் பிரித்தார். புஜாரா 13 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்ததாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி களமிறங்கினார். தொடர்ந்து விளையாடிய நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. விராட் கோலி 1 ரன்னிலும் விஹாரி 14 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    • இந்திய அணிக்கு கேப்டனாக பும்ரா செயல்படுகிறார்.
    • டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    இங்கிலாந்து-இந்தியா அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பந்து வீச்சை தேர்வு செய்தார். ரோகித் சர்மா இல்லாதது இந்திய அணிக்கு பின்னடைவாக இருக்கும். இந்திய அணியின் பொறுப்பு கேப்டனாக பும்ரா செயல்படுகிறார். 

    இந்திய அணி விவரம்:-

    1.ரிஷப் பண்ட் 2. சுப்மன் கில் 3. புஜாரா 4. விராட் கோலி 5. விஹாரி 6. ஸ்ரேயாஸ் ஐய்யர் 7. அஸ்வின் 8. ஜடேஜா 9. ஷர்துல் தாகூர் 10. முகமது சமி 11. பும்ரா.

    இங்கிலாந்து அணி விவரம்:-

    1. அலெக்ஸ் லீஸ் 2. சாக் க்ராலி 3. ஒல்லி போப் 4. ஜோ ரூட் 5. ஜானி பேர்ஸ்டோ 6. பென் ஸ்டோக்ஸ் (கேப்சன்) 7. சாம் பில்லிங்ஸ் (விக்கெட் கீப்பர்) 8. மேத்யூ பாட்ஸ் 9. ஸ்டூவர்ட் பிராட் 10. ஜாக் லீச் 11. ஜேம்ஸ் ஆண்டர்சன்.

    • டெஸ்டில் வெற்றி பெற்றால் அது புதிய வரலாறாக பதிவாகும்.
    • இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் தொடர் ஒன்றில் 3 டெஸ்டுகளில் வெற்றி பெற்றது கிடையாது.

    பர்மிங்காம்:

    இந்திய கிரிக்கெட் அணி ஒரு டெஸ்ட், மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இங்கிலாந்துக்கு சென்றுள்ளது. இந்த ஒரே டெஸ்ட் 2021-ம் ஆண்டு கொரோனா அச்சத்தால் தள்ளிவைக்கப்பட்ட போட்டியாகும். கடந்த ஆண்டு ஆகஸ்டு- செப்டம்பரில் இந்திய அணி இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது.

    இதில் முதல் 4 டெஸ்டுகளில் 2-ல் இந்தியாவும், ஒன்றில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றன. மற்றொரு போட்டி 'டிரா'வில் முடிந்ததால் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. கடைசி டெஸ்ட் போட்டிக்கு முன்பாக இந்திய பயிற்சியாளர்கள் மட்டத்தில் கொரோனா ஊடுருவியதால் கலக்கமடைந்த இந்திய வீரர்கள் இறுதி டெஸ்டில் விளையாட மறுத்தனர்.

    இதனால் தள்ளிவைக்கப்பட்ட அந்த டெஸ்ட் தான் தற்போது நடக்க உள்ளது. இதன்படி இந்தியா- இங்கிலாந்து இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பஸ்டனில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இந்திய அணி கடைசியாக 2007-ம் ஆண்டு ராகுல் டிராவிட் தலைமையில் இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் வென்றது.

    15 ஆண்டுக்கு பிறகு மீண்டும் அங்கு டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்பு கனிந்துள்ளது. மேலும், இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் தொடர் ஒன்றில் 3 டெஸ்டுகளில் வெற்றி பெற்றது கிடையாது. எனவே இந்த டெஸ்டில் வெற்றி பெற்றால் அது புதிய வரலாறாக பதிவாகும்.

    இந்த போட்டிக்கான இரு அணி வீரர்கள் பட்டியல் வருமாறு:-

    இந்தியா: சுப்மான் கில், ஹனுமா விஹாரி அல்லது மயங்க் அகர்வால், புஜாரா, ஸ்ரேயாஸ் அய்யர், விராட் கோலி, ரிஷப் பண்ட், ஷர்துல் தாக்குர் அல்லது அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா (கேப்டன்), முகமது ஷமி, முகமது சிராஜ் அல்லது உமேஷ் யாதவ்.

    இங்கிலாந்து: அலெக்ஸ் லீஸ், ஜாக் கிராவ்லி, ஆலி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), சாம் பில்லிங்ஸ், மேத்யூ போட்ஸ், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜாக் லீச். போட்டியின் போது முதல் இரு நாட்கள் மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடைசி 3 நாட்கள் வெயில் அடிக்கும் என்று அங்குள்ள வானிலை மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன

    • இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர் ஜூலை 7-ம் தேதி தொடங்குகிறது.
    • இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் ஜூலை 12-ம் தேதி தொடங்குகிறது.

    லண்டன்:

    இந்திய கிரிக்கெட் அணி ஒரு டெஸ்ட், 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது.

    கடந்த ஆண்டு தள்ளிவைக்கப்பட்ட இந்தியா, இங்கிலாந்து இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பஸ்டனில் இன்று தொடங்குகிறது.

    3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஜூலை 7, 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

    3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 12, 14 மற்றும் 17 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

    இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 மற்றும் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியை பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது.

    இங்கிலாந்து அணியுடனான முதல் டி20 போட்டிக்கான இந்திய அணி:

    ரோகித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, தினேஷ் கார்த்திக் (கீப்பர்), ஹர்திக் பாண்டியா, வெங்கடேஷ் ஐயர், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் பட்டேல், ரவி பிஷ்னோய், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக்

    2வது மற்றும் 3வது டி20 போட்டிக்கான இந்திய அணி: ரோகித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ஷ்ரேயாஸ் ஐயர், தினேஷ் கார்த்திக் (கீப்பர்), ரிஷப் பண்ட்(கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், ரவி பிஷ்னோய், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், ஆவேஷ் கான், ஹர்ஷல் படேல், உம்ரான் மாலிக்

    இங்கிலாந்து அணியுடனான 3 ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி: ரோகித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், இஷான் கிஷன், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட்(கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், யுஸ்வேந்திர சாஹல், ஜே.பிரசித் கிருஷ்ணா, முகமது ஷமி, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங்.

    • ரோகித் சர்மாவுக்கு நேற்று மீண்டும் கொரோனா பரிசோதனை நடைபெற்றது.
    • ரோகித் சர்மா இன்னும் முழுமையாக குணமடையவில்லை.

    பர்மிங்காம்:

    கொரோனா அச்சுறுத்தலால் கடந்த ஆண்டு தள்ளி வைக்கப்பட்ட இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் ஜூலை 1-ம் தேதி தொடங்குகிறது

    இதற்கிடையே, இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.

    இந்நிலையில் கேப்டன் ரோகித் சர்மா இன்னும் முழுமையாக குணமடையாததால், இங்கிலாந்து அணிக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியில் விளையாடமாட்டார். அவர் இந்தப் போட்டியிலிருந்து விலகியுள்ளார் என அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் இந்திய அணியை வழிநடத்தும் பொறுப்பு வேகப்பந்து வீச்சாளரான பும்ராவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெறும் போட்டியில் பும்ரா தலைமையில் இந்திய அணி களமிறங்குகிறது.

    28 வயதான பும்ரா இதற்கு முன்பு எந்த அணிக்கும் கேப்டனாக இருந்ததில்லை. மேலும், 1987-ம் ஆண்டு கபில்தேவுக்கு பிறகு இந்திய டெஸ்ட் அணியை வழிநடத்தும் வேகப்பந்து வீச்சாளர் என்ற சிறப்பையும் அவர் பெற உள்ளார்.

    • ரோகித் சர்மா அணியில் இல்லாதது எவ்வளவு பெரிய இழப்பு என்பதை காலம்தான் சொல்லும்.
    • இந்திய அணியில் சில அனுபவமிக்க கிரிக்கெட் வீரர்கள் மற்றும் மிகச் சிறந்த பேட்ஸ்மேன்கள் பக்கபலமாக உள்ளனர்.

    இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. இந்நிலையில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இன்று காலை அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் கொரோனா பாதிப்பு இருப்பது மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடுவாரா? என்பது சந்தேகத்தில் தான் உள்ளது. அவர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வராத பட்சத்தில் பும்ரா இந்திய அணியை வழி நடத்துவார் என்று கூறப்படுகிறது.

    இதனை தொடர்ந்து இந்திய கேப்டன் ரோஹித் சர்மா இல்லாவிட்டால் இந்திய அணிக்கு பெரிய இழப்பாக இருக்கும் என்று இங்கிலாந்து அணி வீரர் டேவிட் மலான் கூறியுள்ளார்.

    இது குறித்து டேவிட் மலான் கூறியதாவது:-

    ரோஹித் போன்ற ஒரு கேப்டன் மற்றும் பேட்ஸ்மேனை இழப்பது இந்திய அணிக்கு நம்பமுடியாத அளவிற்கு கடினமானது. அவர் விளையாடவில்லை என்றால் அணிக்கு பெரிய இழப்பாகும். ஆனால் அது எவ்வளவு பெரிய இழப்பு என்பதை காலம்தான் சொல்லும்.

    இந்திய அணியில் சில அனுபவமிக்க கிரிக்கெட் வீரர்கள் மற்றும் மிகச் சிறந்த பேட்ஸ்மேன்கள் பக்கபலமாக உள்ளனர். ஆனால் அவர்களால் ரோகித் இடத்தை நிரப்ப முடியாது.

    இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இரண்டு போட்டிகளை அதிரடியாக விளையாடி வெற்றி பெற்றது.

    கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் தலைமை பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லம் தலைமையில் இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு எதிரான 5-வது டெஸ்டிலும் ஆக்ரோஷமான ஆட்டத்தை தொடரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×