search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 233406"

    • திருப்பூரில் நாள்தோறும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.
    • சிக்னல் ப்ரீ ரோடு திட்டம் நடைமுறைப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    திருப்பூர் :

    திருப்பூரில் நாள்தோறும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. குமரன் சாலை, மங்கலம் சாலை, பல்லடம் சாலை, அவிநாசி சாலை, பி.என்.ரோடு உள்ளிட்ட பிரதான இடங்களில் அதிக அளவிலான வாகன போக்குவரத்து எப்பொழுதும் காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து செல்கின்றன. திருப்பூர் மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்ட போதிலும் போக்குவரத்து நெரிசல் இருந்த வண்ணம் உள்ளது.

    குறிப்பாக மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள சிக்னலால் மங்களம் செல்லக்கூடிய வாகனங்கள் வளர்மதி பாலம் வரை நீண்ட வரிசையில் நிற்கின்றது. அதேபோன்று ரயில் நிலையம் மார்க்கமாக செல்லக்கூடிய வாகனங்கள் பல்லடம் சாலையில் உள்ள பாலம் வரை நிற்கக்கூடிய சூழ்நிலை உள்ளது. இந்த நிலையில் மாநகர போக்குவரத்து காவல்துறையினர் சார்பில் சிக்னல் ப்ரீ ரோடு திட்டம் நடைமுறைப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தால் வாகனங்கள் சிக்னலில் நீண்ட நேரம் நிற்க அவசியம் ஏற்படாது.

    இதையடுத்து திருப்பூர் மாநகராட்சி சிக்னலில் இதற்கான ஒத்திகை நேற்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்றது. திருப்பூர் மாநகராட்சி சிக்னல் அணைத்து வைக்கப்பட்டு வழி மாற்றம் செய்தனர். குமரன் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் பல்லடம் சாலைக்கும், மங்கலம் சாலைக்கும் சிக்னலில் நிற்காமல் சென்றது .

    அதேபோன்று பல்லடம் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் பூங்கா சாலை வழியாக செல்லாமல் தாடிக்காரன் முக்கு வழியாக நட்ராஜ் தியேட்டர் சென்று ெரயில் நிலையம் சென்றது. இந்த ஒத்திகையால் எப்பொழுதும் பரப்பரப்பாக காணப்படும் பூங்கா சாலை நேற்று இரவு 7,30 மணிக்கு வாகனங்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. சிக்னல் ப்ரீ ரோடு திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் இனி நீண்ட நேரம் சிக்னலில் காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படாது என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

    • விமானங்கள் மூலம் பேரிடர் கால ஒத்திகையானது நடைபெறுவது வழக்கம்.
    • ஹெலிகாப்டரில் இருந்து 2 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட ராட்சத கொள்கலனை கயிறு கட்டி கீழே இறக்கினர்.

    நீலாம்பூர்,

    கோவை மாவட்டம் சூலூரில் இந்திய ராணுவ படைக்கு சொந்தமான விமானப்படை தளம் செயல்பட்டு வருகிறது.

    இங்கு விமானப்படைகளில் பயன்படுத்தப்படும் விமானங்கள் உருவாக்குவது, விமான பயிற்சி, விமானப்படை பிரிவு ஆகியவை செயல்பட்டு வருகிறது.

    இந்நிலையில் மாதம்தோறும் விமானப்படை விமானங்கள் மூலம் பேரிடர் கால ஒத்திகையானது நடைபெறுவது வழக்கம்.

    அந்த வகையில் இந்த மாததத்திற்கான பேரிடர் கால ஒத்திகை சூலூரில் உள்ள பெரிய குளத்தில் நடைபெற்றது. அதன்படி தீ விபத்து ஏற்படும் போது எப்படி ஹெலிகாப்டர் மூலம் தீயை அணைப்பது என்பது குறித்து தத்ரூபமாக விளக்கப்பட்டது.

    சூலூர் விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மூலம் தீ விபத்தை கட்டுப்படுத்துவது குறித்த பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.

    அதன்படி சூலூர் விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் சூலூர் பெரிய குளத்திற்கு சென்றது. அங்கு வானில் வட்டமிட்டபிடியே ஹெலிகாப்டரில் இருந்து 2 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட ராட்சத கொள்கலனை கயிறு கட்டி கீழே இறக்கினர்.

    பின்னர் அது கீழே வந்து குளத்தில் தண்ணீரை நிரப்பியதும், மீண்டும் மேலே எடுத்து செல்லப்பட்டு, விபத்து நடந்த இடத்தில் தண்ணீரை தெளித்து தீயை அணைப்பது போன்று தத்ரூபமாக செய்து காண்பிக்கப்பட்டது.

    இந்த ஒத்திகையை காட்சியை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் வியந்து பார்த்து சென்றனர்.

    • தீயணைப்பு துறை சார்பில் நடைபெற்றது
    • பல்வேறு ஒத்திகைகள் செய்து காண்பிக்கப்பட்டது

    கரூர்,

    கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறை சார்பில் முத்தனூரில் தீ பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் தீயணைப் புதுறை நிலைய அலுவலர் கோமதி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், தீ பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஒத்திகையை செய்து காட்டினார்கள். அப்போது தீ விபத்தில் இருந்து பொதுமக்களை எவ்வாறு காப்பாற்றுவது சமையல் அறையில்சமையல் செய்யும் போது எண்ணெய் சட்டியில் திடீரென தீப்பிடித்தால் எவ்வாறு எதை கொண்டு அணைக்க வேண்டும் என்பது குறித்தும், தீப்பிடித் துக் கொண்ட வீட்டில் சிக்கிக் கொண்டவர்களை எவ்வாறு மீட்பது, கேஸ் சிலிண்டரில் கேஸ் லீக் ஆகி தீ பிடித்தால் எப்படி அணைப்பது, புகை சூழ்ந்த இடங்களில் இருந்து எவ்வாறு தப்பிப்பது. அவர்களை எப்படி காப்பாற்றுவது உள்ளிட்ட பல்வேறு ஒத்திகைகளை செய்து காட்டி பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

    • வனத்துறையினருக்கு தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி நடந்தது.
    • வனச்சரக அலுவலர் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.

    வாடிப்பட்டி

    வாடிப்பட்டி தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை சார்பில் ஆண்டிபட்டியில் உள்ள சோழவந்தான் வனச்சரக அலுவலகத்தில் வனத்துறையினருக்கு தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி நடந்தது. வனச்சரக அலுவலர் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.வனவர்கள் பூபதி ராஜன், லோகநாதன், முருகேசன் முன்னிலை வகித்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் சதக்கத்துல்லா தலைமையில் வீரர்கள் தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி நடத்தினர். வனப்பகுதியில் தீ பிடித்தால் அணைக்கும் முறை பற்றியும், புயல், மழை, வெள்ளம் பேரிடர் காலங்களில் மீட்கும் முறை பற்றியும் உள்ளிட்ட செயல்முறை கருவிகளோடு பயிற்சியளித்தனர்.

    • கலெக்டர் கவிதா ராமு நேரில் பார்வையிட்டார்
    • 181 மருத்துவர்கள் தயார் நிலையில் உள்ளதாக தகவல்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், கொரோனா சிகிச்சை முறைகள் மற்றும் தயார்நிலை குறித்த ஒத்திகைப் பயிற்சியினை, மாவட்ட கலெக்டர் கவிதா ராமு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பின்னர் அவர் தெரிவித்ததாவது:-தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் சூழலில், புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், கொரோனா சிகிச்சை முறைகள் மற்றும் தயார்நிலை குறித்த ஒத்திகைப் பயிற்சி நடத்தப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 14 லட்சத்து 12 ஆயிரத்து 207 முதல் தவணை தடுப்பூசிகளும், 13 லட்சத்து 78 ஆயிரத்து 358 இரண்டாம் தவணை தடுப்பூசிகளும் மற்றும் 1 லட்சம் 86 ஆயிரத்து 461 முன்னெச்சரிக்கை நடவடிக்கை தடுப்பூசிகள் என மொத்தம் 29 லட்சத்து 77 ஆயிரத்து 26 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.மேலும் கோவிட் தொற்று சிகிச்சை அளிக்க ஏதுவாக, புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் வசதி இல்லாத 125 படுக்கைகளும், ஆக்ஸிஜன் வசதியுடன் 290 படுக்கைகளும், தீவிர சிகிச்சைப் பிரிவில் 85 படுக்கைகளும் மற்றும் அரசு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் வசதி இல்லாத 326 படுக்கைகளும், ஆக்ஸிஜன் வசதியுடன் 94 படுக்கைகளும் மற்றும் தனியார் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் வசதி இல்லாத 121 படுக்கைகளும், ஆக்ஸிஜன் வசதியுடன் 149 படுக்கைகளும், தீவிர சிகிச்சைப் பிரிவில் 50 படுக்கைகளும் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆக்ஸிஜன் வசதி இல்லாத 364 படுக்கைகளும், ஆக்ஸிஜன் வசதியுடன் 26 படுக்கைகளும் என மொத்தம் 1,630 படுக்கை வசதிகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் நாள் ஒன்றுக்கு 1,800 பரிசோதனைகள் மேற்கொள்ளும் வகையில் 4,664 ஆர்.டி.பி.சி.ஆர் உபகரணங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

    2023 நடப்பாண்டில் 23 நபர்களுக்கு கோவிட் தொற்று கண்டறியப்பட்டதில் 15 நபர்கள் கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். மீதமுள்ள 8 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா சிகிச்சை மேற்கொள்வதற்காக 181 மருத்துவர்களும், 285 செவிலியர்களும், 12 மருத்துவ உதவியாளர்களும், வெண்டிலேட்டர் பயிற்சி பெற்ற 40 நபர்களும் மற்றும் 110 வெண்டிலேட்டர்களும், 23 ஆக்ஸிமீட்டர் கருவிகளும், 148 ஆக்ஸிஜன் செறிவூட்டும் கருவிகள், 549 ஆக்ஸிஜன் உருளைகளும், திரவ ஆக்ஸிஜன் 4 கொள்கலன்களும் தயா ர்நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 21,023 எண்ணிக்கையிலான கவச உடைகளும், 6,326 எண்ணிக்கையிலான 95 முகக்கவசங்களும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

    பேட்டியின் போது அரசு மருத்துவக்கல்லூரி டீன் பூவதி, இணை இயக்குநர் ராதிகா, இருக்கை மருத்துவர் இந்திராணி, துணை இயக்குநர் ராம்கணேஷ், வட்டாட்சியர் விஜயலெட்சுமி பலர் உடனிருந்தனர்.

    • தென்காசி தலைமை ஆஸ்பத்திரியில் 100 படுக்கை வசதிகள் ஏற்படு த்தப்பட்டு ஒத்திகை பார்க்கப்பட்டது.
    • கடந்த ஆண்டுகளில் சுமார் 3 ஆயிரம் படுக்கைகள் வரை ஏற்படுத்தப்பட்டு கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    நெல்லை:

    கொரோனா வைரஸ் தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், பரவலை தடுப்பதற்காக நாடெங்கும் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் தயார் நிலையை சோதித்து அறிவதற்கான ஒத்திகை இன்றும், நாளையும் நடைபெறுகிறது.

    தென்காசி

    தென்காசி மாவட்டத்தில் பாவூர்சத்திரம், சுரண்டை, ஆய்க்குடி, இலஞ்சி உள்ளிட்ட ஏராளமான பகுதிகளில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக முன்எச்சரிக்கை நடவடி க்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தென்காசியில் உள்ள மாவட்ட தலைமை ஆஸ்பத்திரியில் 100 படுக்கை வசதிகள் ஏற்படு த்தப்பட்டு இன்று ஒத்திகை பார்க்க ப்பட்டது. கொரோனா பாதிப்பு அடைந்த வர்களுக்கு ஆக்சிஜன் வசதிகள் இருப்பதை உறுதி செய்யும் ஒத்திகையும் நடந்தது.

    கடந்த முறை கொரோனா பாதிப்பு ஏற்ப டக்கூடிய நபர்களுக்கு சிகிச்சை அளிப்பத ற்காக கடையநல்லூர், புளியங்குடி அரசு ஆஸ்பத்திரிகளில் தலா 25 படுக்கைகளும், சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் 40 படுக்கை களும் ஏற்படுத்தப்பட்டு இருந்தது. அதேபோல் இந்த முறையும் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக படுக்கைகள் தயார் செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    நெல்லை

    நெல்லை மாவட்டத்தில் பாளை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டீன் ரவிச்சந்திரன் மேற்பார்வையில் கொரோனா தடுப்பு ஒத்திகை பணிகள் இன்று தொடங்கியது. நெல்லை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் கடந்த ஆண்டுகளில் கொரோனா பாதிப்பின்போது சுமார் 3 ஆயிரம் படுக்கைகள் வரை ஏற்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    அதில் கொரோனா சிகிச்சைக்கு முக்கியத்துவம் கொடுத்து சுமார் 1,100 படுக்கைகள் ஆக்சிஜன் வசதிகளுடன் நிரந்தர மாக கொரோனா வார்டாக வைக்கப்பட்டு உள்ளது. அந்த வார்டில் இன்று ஒத்திகை நடத்தப்பட்டது.

    தூத்துக்குடி

    தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக கடந்த முறை அரசு ஆஸ்பத்திரியில் 1,500-க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவை அனைத்தும் தற்போதும் அதே நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதுதவிர திருச்செந்தூர், கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிகளிலும் ஒத்திகை நடைபெற்றது.

    • கேஸ் நிரப்பும் இடத்தில் மற்றும் குடோன் பகுதியில் தீ தடுப்பு ஒத்திகை மற்றும் பாதுகாப்பு செயல் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    • முகாமிற்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் பிளான்ட் முதன்மை மேலாளர் தலைமை தாங்கினார்.

    கருப்பூர்:

    சேலம் கருப்பூர் பகுதியில் மத்திய அரசுக்கு சொந்தமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் செயல்பட்டு வருகிறது, இங்கு சமையல் கேஸ் சிலிண்டரில் நிரப்பப்பட்டு சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், உள்பட பல்வேறு ஆகிய மாவட்ட மக்களுக்கு சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்படுகிறது.

    இங்கு கேஸ் நிரப்பும் இடத்தில் மற்றும் குடோன் பகுதியில் தீ தடுப்பு ஒத்திகை மற்றும் பாதுகாப்பு செயல் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது, முகாமிற்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் பிளான்ட் முதன்மை மேலா ளர் சிவராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

    ஓசூர் தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் நலத்துறை இணை இயக்குனர் சபீனா, தொழிற்சாலை துணை மேலாளர் சரத் சந்திரா, சேலம் சூரமங்கலம் போலீஸ் உதவி கமிஷனர் நிலவழகன் ஆகியோர் முன்னிலை வைத்தனர், அதனைத் தொடர்ந்து கேஸ் நிரப்பும் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டால் தானாகவே அதிநவீன தண்ணீர் வெளியேறி அணைக்கும் பயிற்சியும் மற்றும் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை மீட்கப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலமாக அழைத்துச் செல்ல பயிற்சி அளிக்கப்பட்டது,

    தொழிற்சாலை பாதுகாப்பு துறை இணை இயக்குனர் சபீனா, தொழிற்சாலையில் பணியாற்றி வரும் அலுவ லர்கள், தொழி லாளர்கள், ஊழியர்களுக்கு விபத்து ஏற்படும்போது விழிப்பு ணர்வுடன் துரிதமாக செயல்பட்டு தீயை அணைக்கப்பட வேண்டும் உயிர் காக்கும் கருவிகள் அணிந்து கொண்டு பணி புரிய வேண்டும் என்றார், முகாமில் கேஸ் ஏஜென்சி மேலாளர் முருகேசன்,கருப்பூர் சப் இன்ஸ்பெக்டர்கள் ராஜா, அன்பழகன், தீயணைப்பு வீரர்கள், பலர் கலந்து கொண்டனர்.

    முகாமில் தொழிற்சாலை மேலாளர் சிவராம கிருஷ்ணன் பயிற்சி அளித்த போது எடுத்த படம் அருகில் இணை இயக்குனர் சபீனா, உள்ளார்.

    • எரிவாயு கொண்டு செல்லும் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.
    • மீட்பு பணியில் எவ்வாறு ஈடுபட வேண்டும் என்பது குறித்து செயல்விளக்கம்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரி அடுத்த மரைக்கான் சாவடி பகுதியில் உள்ள கேஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட் எனப்படும் கெயில் நிறுவன எரிவாயு சேகரிப்பு மையம் உள்ளது.

    அங்கு உள்ள எரிவாயு கொண்டு செல்லும் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.

    நாகப்பட்டினம் மாவட்ட கலெகடர் அருண் தம்புராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வயல் வெளியில் உள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டால் எவ்வாறு தகவல் அளிக்க வேண்டும், மீட்பு பணியில் எவ்வாறு ஈடுபட வேண்டும் என்பது குறித்து கெயில் நிறுவன ஊழியர்கள் பொதுமக்களுக்கு செய்து காட்டினார்.

    இதில் வருவாய்த்துறை பினர் தீயணைப்புத் துறையினர் பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • நெல்லை மாவட்டத்தில் குடியரசு தின விழாவிற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது.
    • குடியரசு தின விழாவின் போது வ.உ.சி. மைதானம் திருவிழா போல் காட்சியளிக்கும்.

    நெல்லை:

    நாடு முழுவதும் குடியரசு தினவிழா நாளை மறுநாள்(வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி நெல்லை மாவட்டத்தில் குடியரசு தின விழாவிற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது.

    நெல்லை

    நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் பாளை வ.உ.சி. மைதானத்தில் குடியரசு தினவிழா கொண்டாட்டம் நடைபெற உள்ளது. அங்கு கலெக்டர் விஷ்ணு தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்த உள்ளார். அன்றைய தினம் பள்ளி மாணவ-மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சி, பாரம்பரிய இசை வாத்தியங்கள் முழக்கம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

    மேலும் சுதந்திரத்திற்காக பாடுபட்ட விடுதலை போராட்ட தியாகிகளை கவுரவித்து நலத்திட்ட உதவிகள், மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்கு சான்றி தழ்கள் உள்ளிட்டவைகளை கலெக்டர் விஷ்ணு வழங்கி, அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொள்கிறார்.

    பரப்பளவு சுருங்கிவிட்டது

    இதற்காக பாளை வ.உ.சி. மைதானம் தயார்படுத்தப்பட்டு வருகிறது. முந்தைய காலங்களில் சுதந்திர தினம், குடியரசு தின விழாக்கள் நடைபெறும் போது வ.உ.சி. மைதானம் திருவிழா போல் காட்சியளிக்கும். அங்கு நெல்லை மாவட்டம் முழுவதிலும் இருந்து பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் திரண்டு வருவார்கள். வ.உ.சி. மைதானம் முழுவதும் நிரம்பி பார்ப்பதற்கே அழகாக இருக்கும்.

    ஆனால் சமீபத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நவீன கேலரிகளுடன் மைதானம் அமைக்கப்பட்டு அதன் பரப்பளவு சுருங்கிவிட்டது. இதனால் தற்போது குறைந்த அளவு மக்களே அங்கு அமர முடியும். அதேபோல் மைதானத்தில் அணிவகுப்பு ஒத்திகை நடத்துவதற்கும் மிகவும் சிரமமாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

    மைதானத்திற்குள் மழைநீர்

    இந்நிலையில் இந்த ஆண்டு வழக்கம்போல் அங்கு குடியரசு தினவிழா நடைபெறுகிறது. அங்கு கடந்த 2 நாட்களாக அணிவகுப்பு ஒத்திகை நடந்து வந்த நிலையில், நேற்று பெய்த திடீர் மழையால் மைதானத்திற்குள் தண்ணீர் தேங்கி சகதியாக காட்சியளித்தது.

    இதனால் இன்று அங்கு நடைபெற இருந்த அணிவகுப்பு ஒத்திகை பாளை ஆயுதப்படை மைதானத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு அங்கு நடைபெற்றது. இதற்கிடையே மைதானத்தில் மழை நீர் தேங்காவண்ணம் மணல் கொண்டு சமன்படுத்தும் பணியானது இன்று ஆர்.டி.ஓ. சந்திரசேகர் மேற்பார்வையில் நடைபெற்று வருகிறது.

    அங்கு மாநகர போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து தலைமையில் போலீசார் குடியரசு தினவிழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இதற்கிடையே நாளை மறுநாள் கலை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதற்கு பள்ளி மாணவ-மாணவிகளின் ஒத்திகை அந்தந்த பள்ளிகளில் நடைபெற்று வருகிறது.


    பாளை வ.உ.சி. மைதானத்தில் சமன்படுத்தும் பணியை ஆர்.டி.ஓ. சந்திரசேகர் பார்வையிட்ட காட்சி.

    பாளை வ.உ.சி. மைதானத்தில் சமன்படுத்தும் பணியை ஆர்.டி.ஓ. சந்திரசேகர் பார்வையிட்ட காட்சி.


     


    • மருத்துவ மனையில் கொரோனா தொற்று நோய் சிகிச்சை குறித்த ஒத்திகை நடந்தது.
    • ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு ஏதுமில்லை என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் கொரோனா தொற்று நோய் சிகிச்சை குறித்த ஒத்திகை நடந்தது. இதனை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் பார்வையிட்டார். அப்போது அவர் கூறிய தாவது:-

    நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கும் வகையில் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள் தயார் படுத்தப்பட்டுள்ளன. ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 70 படுக்கை வசதிகள் கொண்ட சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு அதில் கோவிட் -19 நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட உள்ளன.

    மேலும் போதியளவு மருத்துவர்கள் மற்றும் கோவிட்-19 நோய் தொற்று தடுப்புக்கான சிகிச்சை வழங்குவதற்கான சிறப்பு பயிற்சி பெற்ற செவிலியர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

    மேலும் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 11 கேஎல் மற்றும் 10 கே.எல். கொள்ளளவு திறன் கொண்ட ஆக்சிஜன் சிலிண்டர்கள் பயன்பாட்டிற்கு ஏற்ப ஆக்சிஜனுடன் தயார் நிலையில் உள்ளன.

    மாவட்டத்தை பொருத்தவரை இதுவரை கொரோனா நோய் தொற்று பாதிப்பு ஏதுமில்லை. கோவிட்-19 நோய் தொற்று வரும் நிலை இருந்தாலும் அதை முழுமையாக தடுத்திடும் வகையில் மாவட்ட நிர்வாகமும், மருத்துவத்துறையும் ஒருங்கி ணைந்து தேவை யான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை களையும் மேற்கொண்டு தயார் நிலையில் உள்ளன. பொது மக்களை பொறுத்தவரை கோவிட்-19 நோய் தொற்று குறித்து எவ்வித அச்சமும் கொள்ளாமல் மருத்துவத்துறை வழங்கும் ஆலோசனைகளை கடைபிடித்து முககவசம் பயன்படுத்தி பாதுகாப்புடன் இருந்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு.செந்தில் குமார், சுகாதார ஒருங்கிணைப்பாளர் திலீப்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • டீன் சுகந்தி ராஜகுமாரி தலைமையில் நடந்தது
    • கொரோனா வார்டுகளில் படுக்கை வசதிகளை அதிகப்படுத்த வேண்டும்

    நாகர்கோவில்:

    சீனா, தென்கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளில் உருவாகி உள்ள கொரோனா பி.எப்.7 வைரஸ் பரவல் இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. தமிழகத்தில் கொரோனா தொடர்பான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மருத்துவக்கல்வி இயக்குநரகம் அறிவுறுத்தி உள்ளது. அடுத்த 6 மாதத்துக்கு தேவையான கொரோனா பரிசோதனை கருவிகளை முன்கூட்டியே வாங்கி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா வார்டுகளில் படுக்கை வசதிகளை அதிகப்படுத்த வேண்டும் போன்ற வழிமுறைகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

    இதற்கிடையில் கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களில் இன்று கொரோனா ஒத்திகை நிலை பயிற்சி நடத்த மத்திய அரசு ஏற்பாடு செய்தது. அதன்படி ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் இன்று கொரோனா ஒத்திகை நிலை பயிற்சி நடந்தது. டீன் சுகந்தி ராஜகுமாரி தலைமையில் கொரோனா வார்டுகள் ஆய்வு செய்யப்பட்டன. நோயாளிகள் வந்தால் சிகிச்சை அளிக்க தேவையான வசதிகள் போன்றவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டன. மருத்துவமனை கண்காணிப்பாளர் அருள் பிரகாஷ் மற்றும் டாக்டர்கள் இதில் பங்கேற்றனர்.

    • விளாத்திகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி அளிக்கப்பட்டது.
    • பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்து செயல்விளக்கம் நடைபெற்றது.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளத்தில் விபத்தில்லா தீபாவளி பண்டிகை மற்றும் வட கிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விளாத்திகுளம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் விளாத்திகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி அளிக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் தீபாவளி பண்டிகையன்று பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிப்பது குறித்து பள்ளி மாணவா்களுக்கு செயல்விளக்கம் நடைபெற்றது. மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், மருத்துவமனைகள், கேஸ் சிலிண்டர் இருக்கும் இடங்கள், கூரை வீடு, வைக்கோல் படப்புகள் ஆகிய இடங்களில் பட்டாசு வெடிக்கக் கூடாது. அரசு அறிவித்துள்ள நேரங்களில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என மாணவா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    பயிற்சியில் தலைமையாசிரியை ரோஸ்லின் சாந்தி, மற்றும் 200-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    ×