search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 233416"

    • அட்மா திட்டத்தில் இயற்கை வேளாண்மை முறையில் பாரம்பரிய நெல் சாகுபடி குறித்த தொழில்நுட்ப பயிற்சி மாவட்ட அளவவில் நடைப்பெற்றது.
    • பயிற்சியில் 50 க்கும் மேலான விவசாயிகள் ஆர்வமாக கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

    ஆத்தூர்:

    ஆத்தூர் அருகே உள்ள கல்பகனூர் கிராமத்தில் அட்மா திட்டத்தில் இயற்கை வேளாண்மை முறையில் பாரம்பரிய நெல் சாகுபடி குறித்த தொழில்நுட்ப பயிற்சி மாவட்ட அளவவில் நடைப்பெற்றது. அட்மா திட்ட தலைவர் டாக்டர் செழியன் கலந்துகொண்டு தலைமை வகித்தார்.

    வேளண்மை உதவி இயக்குனர் குமாரசாமி முன்னிலை வகித்தார். அவர் கூறுகையில் தற்போது உள்ள ஆத்தூர் வட்டார வேளாண்மை விரிவாக்க அலுவலகம் இனி தென்னங்குடிபாளையம் சேவை மையத்தில் செயல்படும் என தெரிவித்தார்.

    வேளாண்மை அலுவலர் ஜானகி வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் செயல்படும் திட்ட ங்கள் மானியங்கள் குறித்தும், வேளாண்மை விரிவாக்க மையம் இடுப்பொருட்கள் விபரம், இயற்கை முறை சாகுபடி தொழில்நுட்பங் களை பற்றி கூறினார்.

    வட்டார தொழில்நுட்ப மேலளார் சுமித்ரா, சேலம் வேளாண் அறிவியல் நிறுவனத்தை சேர்ந்த ஹரிகிருஷ்ணன், உதவி வேளாண்மை அலுவலர் பிரவீன் ஆகியோர் பேசினார்கள். பயிற்சிக்கான ஏற்பாடுகளை கல்பகனூர் துணைத் தலைவர் செல்வம், உதவி தொழில்நுட்ப மேலாளர் தமிழ்ச்செல்வி, திலகவதி ஆகியோர் செய்து இருந்தனர்.

    பயிற்சியில் 50 க்கும் மேலான விவசாயிகள் ஆர்வமாக கலந்துகொண்டு பயன்பெற்றனர். முடிவில் அனைத்து விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

    • விவசாயிகள் மற்றும் உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவன விவசாயிகளுக்கு‘’தரமான விதை உற்பத்தி’’குறித்த தொழில்நுட்ப பயிற்சி நடைபெற்றது.
    • பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்தசாமி பயிற்சி வழங்கினார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி வட்டாரம், மேல்சாத்தம்பூர், ஆவாரங்காட்டு மேடு சமுதாயக்கூடத்தில் விதை உற்பத்தி செய்யும் விவசாயிகள் மற்றும் உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவன விவசாயி களுக்கு''தரமான விதை உற்பத்தி''குறித்த தொழில்நுட்ப பயிற்சி நடைபெற்றது.

    பயிற்சியில் தரமான விதை உற்பத்தியின் நோக்கம், விவசாயத்தின் ஆதாரமாம் விதையின் முக்கியத்துவம், சாகுப டிக்கு ஏற்ற விதையின் உற்பத்தி திறன், உணவு உற்பத்தியில் விதைகளின் முக்கியத்துவம்,பயிர் காப்பீடு திட்டத்தின் வாயிலாக விவசாயிகளுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்தசாமி பயிற்சி வழங்கினார்.

    நாமக்கல், விதை சான்றளிப்புத்துறையின் வேளாண்மை உதவி இயக்குநர் சித்திரைசெல்வி,

    வேளாண்மை அலுவலர் அருண்குமார் ஆகியோர் விதை உற்பத்தியில் மண்பரிசோதனையின் முக்கியத்துவம் குறித்து விளக்கினர்.

    பயிற்சியில் பரமத்தி வேளாண்மை அலுவலர் பாபு, துணை வேளாண்மை அலுவலர் குழந்தைவேல், ஆகியோர் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மைவளர்ச்சித் திட்டத்தின் கீழ் விவசாயிகள் பெறும் பயன்கள், மானாவாரி மேம்பாட்டு இயக்கம், நடப்பு பருவ பயிருகளுக்கான மானியத்திட்டங்கள் குறித்தும், மேற்கண்ட பயிற்சியின் நோக்கம் அதன் பயன்கள் குறித்தும் விளக்கமளித்தனர்.

    பரமத்தி உதவி விதை அலுவலர்கள் மோகன்ராஜ், ராதாகிருஷ்ணன் உதவி வேளாண்மை அலுவலர், கவுசல்யா,, வட்டார தொழில் நுட்ப மேலாளர் ரமேஷ் ஆகியோர் தரமான விதைகள் தேர்வு, விதை நேர்த்தி செயல்விளக்கம் செய்து காண்பித்தனர்.

    • மேட்டுப்பாளையத்தில் மானாவாரி மேம்பாட்டு இயக்க தொழில்நுட்ப பயிற்சி நடந்தது.
    • மண் வளம், சமுக காடுகள் அமைத்தல் போன்ற காரணிகள் குறித்து பயிற்சிகளை வழங்கினார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி வட்டாரம், மேட்டுப்பாளையம் கிராம விவசாயிகளுக்கு, 'முதலமைச்சரின் மானாவாரி மேம்பாட்டு இயக்கம்'' குறித்து தொழில்நுட்ப பயிற்சி நடைப்பெற்றது.

    வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்தசாமி பயிற்சிக்கு தலைமை தாங்கி பேசுகையில், விவசாயிகளுக்கு மானாவாரி நில மேம்பாடு மற்றும் மானாவாரிக்கு ஏற்ற பயிர் இரகங்கள், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள், மண் வளம், சமுக காடுகள் அமைத்தல் போன்ற காரணிகள் குறித்து பயிற்சி வழங்கினார்.

    பயிற்சியில் துணை வேளாண்மை அலுவலர் (ஓய்வு)மாதேஸ்வரன், பயிற்சியில் கோடை காலத்தில் கிடைக்கும் மழை நீரைப் பயன்படுத்தி உழவு செய்வதால், மண்வளத்தை மேம்படுத்தலாம். மண் அரிமானம் தடுக்கப்பட்டு, காற்றோட்டம் கிடைக்கும். அடுத்தடுத்து பொழியும் மழைநீர் வீணாகாமல், அந்த நிலத்திலேயே உறிஞ்சப்படுவதால், மண்ணில் ஈரப்பதம் காக்கப்படுகிறது. பயிர் சுழற்சி, பருவப்பயிர்கள், சிறுதானியப்பயிர்கள் மற்றும் அருந்தானியப்பயிர்கள் பயிரிடுவதன் மூலம் குறைந்த நாளில் அதிக மகசூல் அதிக லாபம் பெறலாம் என பயிற்சி வழங்கினார்.

    இதில் உதவி வேளாண்மை அலுவலர் ரகுபதி, அட்மா திட்ட வட்டார தொழில் நுட்ப மேலாளர் ரமேஷ் ஆகியோர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் விவசாயிகள் பெறும் பயன்கள், தமிழக முதலமைச்சரின் மானாவாரி மேம்பாட்டு இயக்கம், நடப்பு பருவ பயிருகளுக்கான மானியத்திட்டங்கள் குறித்தும் விளக்கமளித்தனர். 

    பரமத்திவேலூர் அருகே விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி நடந்தது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி வட்டாரம், நல்லூர் கிராம விவசாயிகளுக்கு, மானாவாரி நில மேம்பாட்டு 'முதலமைச்சரின் மானாவாரி மேம்பாட்டு இயக்கம்'' குறித்து தொழில்நுட்ப பயிற்சி நடைபெற்றது. பயிற்சியில் வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்தசாமி பயிற்சிக்கு தலைமை தாங்கி பேசுகையில், கோடை காலத்தில் கிடைக்கும் மழை நீரைப் பயன்படுத்தி உழவு செய்வதால், மண்வளத்தை மேம்படுத்தலாம்.

    மண் அரிமானம் தடுக்கப்பட்டு, காற்றோட்டம் கிடைக்கும். அடுத்த–டுத்து பொழியும் மழைநீர் வீணாகாமல், அந்த நிலத்திலேயே உறிஞ்சப்ப–டுவதால், மண்ணில் ஈரப்பதம் காக்கப்படுகிறது. பயிர் சுழற்சி, பருவப்பயிர்கள், சிறுதானியப்பயிர்கள் மற்றும் அருந்தானி–யப்பயிர்கள் பயிரிடுவதன் மூலம் குறைந்த நாளில் அதிக மகசூல் அதிக லாபம் பெறலாம் என பயிற்சி வழங்கினார்.

    பயிற்சியில் துணை வேளாண்மை அலுவலர் (ஓய்வு) மாதேஸ்வரன் பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு மானாவாரி நில மேம்பாடு மற்றும் மானாவாரிக்கு ஏற்ற பயிர் இரகங்கள், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள், மண் வளம், சமுக காடுகள் அமைத்தல் போன்ற காரணிகள் குறித்து பயிற்சி வழங்கினார்.

    பயிற்சியில் துணை வேளாண்மை அலுவலர் குழந்தைவேல், உதவி வேளாண்மை அலுவலர் நாகராஜ் ஆகியோர் பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் விவசாயிகள் பெறும் பயன்கள், தமிழக முதலமைச்சரின் மானாவாரி மேம்பாட்டு இயக்கம், நடப்பு பருவ பயிருகளுக்கான மானியத்திட்டங்கள் குறித்தும் விளக்கமளித்தனர்.

    அட்மா திட்ட வட்டார தொழில் நுட்ப மேலாளர் ரமேஷ் பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு மதிய உணவு வழங்கி நன்றி கூறி பயிற்சியினை ஏற்பாடு செய்திருந்தார்.

    ×