search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 234163"

    • கோவில் படிக்கிணற்றின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 36 பேர் உயிரிழந்தனர்.
    • பழைய கோவில் அருகே புதிதாக சட்டவிரோதமாக கோவில் கட்டுமான பணிகள் நடைபெறுவது தெரியவந்தது.

    இந்தூர்:

    மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் ராம நவமியையொட்டி பாலேஷ்வர் மகாதேவ் கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அப்போது கோவில் படிக்கிணற்றின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 36 பேர் உயிரிழந்தனர்.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பழைய கோவில் அருகே புதிதாக சட்டவிரோதமாக கோவில் கட்டுமான பணிகள் நடைபெறுவது தெரியவந்தது. இதையடுத்து அந்த கட்டுமானங்களை இடித்து அகற்றும்படி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் அந்த கோவில் கட்டுமானங்களை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    கிணறுகளின் மீது கட்டப்பட்ட சட்டவிரோத கட்டிடங்களை அகற்றும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த கோவில் கட்டுமானம் இடிக்கப்பட்டதாகவும், இதுவரை நான்கு கட்டிடங்கள் இடிக்கப்பட்டுள்ளன என்றும், இந்தூர் கலெக்டர் இளையராஜா தெரிவித்தார்.

    • கோவிலை இடிக்கும் பணியை தொடங்கியபோது திடீரென்று கோவிலில் இருந்த முருகம்மாள் என்ற பெண் சாமியார் அருள் வந்து சாமியாடினார்.
    • சாமியாடிய பெண் மிகவும் ஆவேசமாக காணப்பட்டார்.

    வண்டலூர்:

    வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் கொளப்பாக்கம் கிராமம் உள்ளது. இங்கு திருநங்கைகள் சிலர் காளி கோவில் அமைத்து சில வருடங்களாக வழிபட்டு வருகிறார்கள்.

    இந்த கோவில் நீர்நிலை ஆக்கிரமிப்பு பகுதியில் இருப்பதாக கூறி அரசு அதிகாரிகள் அதை அகற்றுவதற்காக சென்றனர். அப்போது அங்கிருந்த திருநங்கைகள் சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினார்கள்.

    ஆனால் அதை பொருட்படுத்தாமல் அதிகாரிகள் கோவிலை இடிக்கும் பணியில் ஈடுபட்டனர். கோவிலை இடிக்கும் பணியை தொடங்கியபோது திடீரென்று கோவிலில் இருந்த முருகம்மாள் என்ற பெண் சாமியார் அருள் வந்து சாமியாடினார்.

    சாமியாடிய பெண் மிகவும் ஆவேசமாக காணப்பட்டார். அவர் காளியம்மன், நாகாத்தம்மன், வீரபத்திரன் உள்ளிட்ட சாமி சிலைகள் மீது திடீரென்று மிளகாய் பொடி கலந்த நீரால் அபிஷேகம் செய்தார். கோவிலை இடிக்கும் அதிகாரிகளுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்று சாமியாரிடம் ஆவேசமாக வேண்டினார்.

    அதன்பிறகு அவர் மிளகாய் பொடி கலந்த தண்ணீரை தனது முகத்தின் மீது ஊற்றிக் கொண்டார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கோவிலை இடிக்க வந்த அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள்.

    நீண்டநேர ஆலோசனைக்கு பிறகு கோவிலின் மேற்கூரையை மட்டும் அப்புறப்படுத்திவிட்டு அதிகாரிகள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

    • வள்ளலார் வணங்கி வழிபட்ட பழமையான விநாயகர் கோவில் இடிக்கப்பட்டது.
    • சாலை விரிவாக்கபணிக்காக இந்தக் கோவிலை இடிக்கும் பணி இன்று காலை தொடங்கியது.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே அமைந்துள்ளது கண்டரக்கோட்டை கிராமம். இங்கு சென்னை சாலையில்பழமையான விநாயகர் கோவில்உள்ளது. இக் கோவில் வள்ளலார் வணங்கி வழிபட்ட சிறப்பு பெற்றது. சாலை விரிவாக்கபணிக்காக இந்தக் கோவிலை இடிக்கும் பணி இன்று காலை தொடங்கியது. முன்னதாக கோவில் அலுவலர்கள், கோவில் நிர்வாகிகள், கிராம மக்கள் அங்கு சிறப்பு பூஜை நடத்தி அங்கிருந்த விக்கிரகங்களை வேறு இடத்துக்கு கொண்டு சென்று வழிபாடு செய்தனர்.

    • ஆளவந்தார் உறவினர்கள், ஆன்மீக ஆர்வலர்கள் பலர் புதிய மண்டபம் கட்ட அறநிலையத்துறை அதிகாரிகளிடம் வழியுறுத்தி வந்தனர்.
    • அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், இணை ஆணையர் வான்மதி, உதவி ஆணையர் லட்சுமிகாந்தன், செயல் அலுவலர் சக்திவேல் உள்ளிட்டோர் கோவிலை ஆய்வு செய்தனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் உள்ள ஆளவந்தார் அறக்கட்டளைக்கு 1,054 ஏக்கர் நிலமும், மாதம் தோறும் பல லட்சம் ரூபாய் வருமானமும் வருகிறது. அதை தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகம் செய்து வருகிறது. 1967ல் நெம்மேலி கடற்கரை பகுதியில் அவருக்கு கட்டப்பட்ட கோவில் மண்டபம் பழுதடைந்து விழும் நிலையில் இருந்தது.

    ஆளவந்தார் உறவினர்கள், ஆன்மீக ஆர்வலர்கள் பலர் புதிய மண்டபம் கட்ட அறநிலையத்துறை அதிகாரிகளிடம் வழியுறுத்தி வந்தனர். இதையடுத்து அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், இணை ஆணையர் வான்மதி, உதவி ஆணையர் லட்சுமிகாந்தன், செயல் அலுவலர் சக்திவேல் உள்ளிட்டோர் கோவிலை ஆய்வு செய்தனர்.

    இதை அடுத்து அரசு 90 லட்சம் ரூபாய் மதிப்பில் பாறை கற்களால் கோவில் கட்ட நிதி ஒதுக்கீடு செய்தது. பழைய கோவிலை இடித்து புதிய கோவில் கட்டுவதற்காக பழைய கோவிலை இடிக்கும் பணியை இந்து அறநிலையத்துறை துவங்கியது.

    • சதானந்தபுரம் காந்திரோட்டில் பவானி அம்மன் கோயில் உள்ளது.
    • வண்டலூர் வட்டாட்சியர் ஆறுமுகம் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.

    வண்டலூர்:

    காட்டாங்கொளத்தூர் அருகே நெடுங்குன்றம் ஊராட்சிக்குட்பட்ட சதானந்தபுரம் காந்திரோட்டில் பவானி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோவிலை சாலை விரிவாக்கப்பணிக்கு இடித்து அகற்ற முடிவு செய்யப்பட்டது.

    இதையடுத்து நேற்று கோவிலை அகற்ற அதிகாரிகள் சென்ற போது பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து வண்டலூர் வட்டாட்சியர் ஆறுமுகம் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது கோவிலுக்கான மாற்று இடத்தை வருவாய்த்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை தருவதாக உறுதியளித்தார். இதைத்தொடர்ந்து கோவிலை நாளை(இன்று) அகற்றுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொண்டனர். இதனால் கோவிலை இடிக்காமல் அதிகாரிகள் சென்றனர்.

    இந்த நிலையில் இன்று காலை 7 மணி அளவில் நெடுஞ்சாலை துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் வண்டலூர் வட்டாட்சியர் ஆறுமுகம் தலைமையில் பவானி அம்மன் கோவிலை ஜே.சி.பி.எந்திரத்தால் இடித்து அகற்றினர்.

    இதுபற்றி அறிந்ததம் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. அசம்பாவிதத்தை தடுக்க கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ×