என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதியவர் சாவு"

    • மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றுள்ளார். எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் முதியவரின் பின்னால் மோதியது.
    • அங்கு சிகிட்சை பலனின்றி அந்த முதியவர் உயிரிழந்தார். அவர் யார் ? எந்த இடத்தை சேர்ந்தவர் என தெரியவில்லை.

    கன்னியாகுமரி :

    புதுக்கடையில் இருந்து காப்புக் காடு செல்லும் சாலையில் (வயது 75) மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது குன்னத்தூர் பகுதி பொற்றவிளை என்ற இடத்தை சேர்ந்த கண்ணன் (48) என்பவர் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றுள்ளார். எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் முதியவரின் பின்னால் மோதியது.

    இதில் முதியவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிட்சைக்கு அனுமதித்தனர். அங்கு சிகிட்சை பலனின்றி அந்த முதியவர் உயிரிழந்தார். அவர் யார் ? எந்த இடத்தை சேர்ந்தவர் என தெரியவில்லை.

    இது தொடர்பாக முஞ்சிறை கிராம நிர்வாக அலுவலர் அெலக்சாண்டர் புதுக்கடை போலீசில் புகார் செய்தார். புதுக்கடை போலீ சார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

    • கலைநல்லூர் சாலையில் சென்ற போது குமார் மோட்டார் சைக்கிளை தாறுமாறாக ஓட்டியதாக கூறப்படுகிறது.
    • தியாகதுருகம் போலீசார் குமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே கலையநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யாசாமி (வயது 80) கூலித் தொழிலாளி, இவர் நேற்று முன்தினம் தியாகதுருகம் வாரச்சந்தைக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்குச் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த பீளமேடு பகுதியைச் சேர்ந்த குமார் (வயது40) என்பவர் அவரது மோட்டார் சைக்கிளில் பின்னால் ஏற்றிக்கொண்டு சென்றார். அப்போது கலைநல்லூர் சாலையில் சென்ற போது குமார் மோட்டார் சைக்கிளை தாறுமாறாக ஓட்டியதாக கூறப்படுகிறது.

    இதனால் அய்யாசாமி மற்றும் குமார் ஆகியோர் சாலையில் கீழே விழுந்தனர். இதில் பலத்த காயமடைந்த அய்யாசாமி சம்பவ இடத்தில் இறந்து போனார். குமார் லேசான காயம் அடைந்தார். அக்கம், பக்கத்தினர் இவர்களை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து செல்வராஜ் கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் குமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • பூச்சி மருந்து குடித்து முதியவர் உயிரிழந்தார்
    • வயிற்று வலியால் அவதிபட்டு வந்தார்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே தென்னூர் கிராமம் புதுத் தெருவை சேர்ந்தவர் ஞானபிரகாசம் (65) இவரது மனைவி ஆரோக்கிய மேரி (60) இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் இருவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்த தம்பதியர் மட்டும் தனியாக வசித்து வருகின்றனர். ஞானபிரகாசத்திற்கு குடிப்பழக்கம் இருந்ததால் உடல்நிலை பாதிக்கப்பட்டு வயிற்று வலிக்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார். அடிக்கடி வயிற்று வலியில் துடித்து வந்த ஞானபிரகாசம் வலி தாங்காமல் நேற்று முன்தினம் வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்துள்ளார்.மயங்கி கிடந்தவரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஆண்டிமடம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • கேபிகரடு பகுதியில், சில தினங்களுக்கு முன்பு, சுமார் 58 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சாலையோரத்தில் மயங்கிய நிலையில் விழுந்து கிடந்தார்.
    • சிகிச்சைக்காக 108 ஆம்பு லன்ஸ் மூலமாக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அன்னதானப்பட்டி:

    சேலம் நெத்திமேடு, கேபிகரடு பகுதியில், சில தினங்க ளுக்கு முன்பு, சுமார் 58 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சாலையோரத்தில் மயங்கிய நிலையில் விழுந்து கிடந்தார். இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்பு லன்ஸ் மூலமாக சேலம் அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவ ருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்ப ட்டு வந்தது. ஆனால் நேற்று சிகிச்சைப் பலனின்றி அவர் பரி தாபமாக உயிரிழந்தார். அவர் யார்?, எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற விவ ரங்கள் ஏதும் தெரியவி ல்லை. இது குறித்து அன்ன தானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • கிணற்றில் பொன்னுசாமி பிணமாக கிடந்தது தெரிய வந்தது.
    • இது குறித்து சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி னர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள அம்மன் கோவில் அண்ணா மலை கோட்டை பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி (யது 70). இவருக்கு கண்ணம்மாள் என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.

    இந்த நிலையில் பொன்னு சாமி சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீட்டுக்கு வரவில்லை. இதையடுத்து அவரது மகன் ஆனந்தராஜ் மற்றும் உறவி னர்கள் அவரை அக்கம் பக்கம் தேடி பார்த்தனர்.

    அப்போது அண்ணா மலை கோட்டை பகுதியில் உள்ள ஒரு கிணற்றின் அருகே பொன்னுசாமியின் செருப்பு மற்றும் லுங்கி கிடந்தது. இதையடுத்து சந்தேகம் அடைந்த உறவி னர்கள் இது குறித்து கொடு முடி தீயணைப்பு துறை மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர். இதை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி தேடி பார்த்தனர். அப்போது கிணற்றில் பொன்னுசாமி பிணமாக கிடந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரது உடலை அவர்கள் மீட்டனர்.

    இது குறித்து சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி னர். இதில் பொன்னுசாமி குளிக்க சென்ற போது கிணற்றில் தவறி விழுந்து இறந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் பொன்னுசாமி உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    • தண்ணீரில் மூழ்கி முதியவர் உயிரிழந்தார்
    • துணி துவைக்கும் போது சம்பவம்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் மருவத்தூர் போலீஸ் சரகத்திற்குட்பட்ட பேரளி தெற்கு தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (வயது 80). இவர் அப்பகுதியில் உள்ள ஏரியில் தனது துணிகளை துவைத்துக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென தண்ணீரில் மூழ்கி உயிருக்கு போராடினார். இதனை ப ார்த்த அருகில் இருந்தவர்கள் காப்பாற்ற முயற்சித்தும் முடியாததால், தீயணைப்பு மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஏரியில் இறங்கி இறந்த நிலையில் கிருஷ்ணசாமியின் உடலை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். உடலை பெற்றுக் கொண்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கா அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கீழசெவல்பட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலியானார்.
    • இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் கீழச்சிவல்பட்டி அருகே உள்ள ஆவிணிப்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் தியாகராஜ கேசரி (வயது 68). இவர் தனியாக வசித்து வந்தார்.

    இந்தநிலையில் இவரது வீட்டின் முன்புறம் உள்ள கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இவரது மகன் சிவசுப்பிரமணியனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது கிணற்றில் தியாகராஜ கேசரியின் உடல் கிடப்பதை பார்த்துள்ளார். உடனடியாக சுப்பிர மணியன் திருப்பத் தூர் தீயணைப்பு நிலையத் திற்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் நிலைய அலுவலர் பெரி.கணேசன் தலைமையிலான பேரிடர் மீட்பு குழுவினர் கிணற்றில் அழுகிய நிலையில் இருந்த தியாகராஜ கேசரியின் உடலை மீட்டு கீழச் செவல் பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முதியவரின் உடலை பிரேத பரிசோத னைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிவன்கோவில் அருகில் வந்த போது பஸ் டிரைவர் திடீரென பிரேக் போட்டார்.
    • பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே கிருஷ்ணமூர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே சாலூர் பகுதியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருவிழா நடந்தது. இந்த விழாவிற்கு நேற்று ஓசூர் பாரதியார் நகரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (வயது60), இவரது மனைவி நாகமணி (55) ஆகிய இருவரும் பஸ்சில் வந்து கொண்டிருந்தனர்.

    அப்போது மத்தூர் அருகே சிவன்கோவில் அருகில் வந்த போது பஸ் டிரைவர் திடீரென பிரேக் போட்டார். இதனால் பஸ்சின் சீட்டில் அமர்ந்து இருந்த கிருஷ்ணமூர்த்தி முன்னால் இருந்த கம்பியின் மீது மோதினார். இதில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே கிருஷ்ணமூர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து மத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்
    • போலீசார் விசாரணை

    ஆரணி:

    ஆரணியை அடுத்த வடக்குமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் பச்சையப்பன் (வயது 87), விவசாயி. இவருக்கு வள்ளியம்மாள் என்ற மனைவியும், 3 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர்.

    பச்சையப்பன் மூட்டு வலியால் நீண்ட காலமாக அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

    உடனடியாக அவரது மகன் ஏகாம்பரம் அவரை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனும திக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.புகழ், சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் ஆகியோர் வழக்குப்ப திவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த 3 நாட்களுக்கு முன்பு வயிற்று வலி அதிகமாக உள்ளதாக மனைவியிடம் கூறியுள்ளார்
    • வாய்க்காலில் விழுந்து இறந்தது கந்தசாமி என தெரியவந்தது

    பெருந்துறை,

    பெருந்துறையை அடுத்துள்ள சீனாபுரம் கீழேரி பாளையம் பகுதியை சார்ந்தவர் கந்தசாமி ( 72). இவர் தனது மனைவி கருணை அம்மாள், மகன் பூபதி, மகள் விஜயலட்சுமி ஆகியோருடன் குடியிருந்து வருகிறார்.

    இவரது மனைவி கருணைஅம்மாள் அந்தப் பகுதியில் 100 நாள் வேலை செய்து வருகிறார். கந்தசாமி கொளப்பலூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஸ்பின்னிங் மில்லில் டீ மாஸ்டராக வேலை செய்து வருகிறார்.

    கடந்த இரண்டு வருடங்க ளாக இவருக்கு குடல் பிரச்சனை மற்றும் அல்சர் நோய் பாதிப்பு இருந்துள்ளது. இதனால் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு வயிற்று வலி அதிகமாக உள்ளதாக மனைவியிடம் கூறியுள்ளார்.

    அவர் மனைவி மாத்திரை சாப்பிட்டு விட்டு வீட்டில் இருக்கும் படி கூறிவிட்டு வேலைக்கு சென்று விட்டார். மாலை வீட்டில் வந்து பார்த்தபோது அவரது கணவர் கந்தசாமி வீட்டில் இல்லை.

    உடனடியாக மகன் மற்றும் மகள் வீடுகளில் தேடிப் பார்த்தும் கிடைக்க வில்லை. இந்த நிலையில் நேற்று மதியம் பெருந்துறை ஈரோடு ரோடு கீழ்பவானி வாய்க்காலில் ஆண் பிணம் மிதந்து வந்ததாகவும் அதனை தீயணைப்புத் துறையினர் மீட்டு ஆம்பு லன்ஸ் மூலம் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்த தாகவும் இவர்களுக்கு தகவல் கிடைத்தது.

    கருணை அம்மாளும் அவரது மகனும் பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று பார்த்தபோது வாய்க்காலில் விழுந்து இறந்தது கந்தசாமி என தெரியவந்தது. பின்னர் இது தொடர்பாக பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசோதா பேகம் மேற்கொண்டு விசாரணை செய்து வருகிறார்.

    • மண்எண்ணைய் விளக்கின் தீ எதிர்பாராதவிதமாக இவர் மீது பட்டது.
    • அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு தர்மன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், ஏரியூர் அடுத்துள்ள கூர்க்காம்பட்டி பகுதியை சேர்ந்தவர் தர்மன் (வயது70). சம்பவத்தன்று வீட்டில் படுத்து தூங்கி கொண்டிருந்த போது மண்எண்ணைய் விளக்கின் தீ எதிர்பாராதவிதமாக இவர் மீது பட்டது.

    இதில் உடலில் தீ பிடித்து உயிருக்கு போராடி கொண்டிருந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு மருத்துவனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு தர்மன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து ஏரியூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஒருவர் படுகாயம்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    காட்பாடி காங்கேயநல்லூர் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 73). அதே பகுதியை சேர்ந்தவர் பாலு. நண்பர்களான இருவரும் நேற்று முன்தினம் பைக்கில் வள்ளிமலை நோக்கி சென்று கொண்டு இருந்தனர்.

    பள்ளிக்குப்பம் ரெயில்வே கேட் அருகே வந்தனர். அப்போது அங்கிருந்த வேகத்தடையில் பைக் வேகமாக ஏறி இறங்கியது. இதில் பைக் நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர்.

    இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். பின்னர் அங்கிருந்தவர்கள் படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை என்று லோகநாதன் பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து காட்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    ஆஸ்பத்திரிக்கு சென்ற போலீசார் லோகநாதன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×