search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதியவர் சாவு"

    • சிவன்கோவில் அருகில் வந்த போது பஸ் டிரைவர் திடீரென பிரேக் போட்டார்.
    • பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே கிருஷ்ணமூர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே சாலூர் பகுதியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருவிழா நடந்தது. இந்த விழாவிற்கு நேற்று ஓசூர் பாரதியார் நகரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (வயது60), இவரது மனைவி நாகமணி (55) ஆகிய இருவரும் பஸ்சில் வந்து கொண்டிருந்தனர்.

    அப்போது மத்தூர் அருகே சிவன்கோவில் அருகில் வந்த போது பஸ் டிரைவர் திடீரென பிரேக் போட்டார். இதனால் பஸ்சின் சீட்டில் அமர்ந்து இருந்த கிருஷ்ணமூர்த்தி முன்னால் இருந்த கம்பியின் மீது மோதினார். இதில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே கிருஷ்ணமூர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து மத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கீழசெவல்பட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலியானார்.
    • இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் கீழச்சிவல்பட்டி அருகே உள்ள ஆவிணிப்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் தியாகராஜ கேசரி (வயது 68). இவர் தனியாக வசித்து வந்தார்.

    இந்தநிலையில் இவரது வீட்டின் முன்புறம் உள்ள கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இவரது மகன் சிவசுப்பிரமணியனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது கிணற்றில் தியாகராஜ கேசரியின் உடல் கிடப்பதை பார்த்துள்ளார். உடனடியாக சுப்பிர மணியன் திருப்பத் தூர் தீயணைப்பு நிலையத் திற்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் நிலைய அலுவலர் பெரி.கணேசன் தலைமையிலான பேரிடர் மீட்பு குழுவினர் கிணற்றில் அழுகிய நிலையில் இருந்த தியாகராஜ கேசரியின் உடலை மீட்டு கீழச் செவல் பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முதியவரின் உடலை பிரேத பரிசோத னைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தண்ணீரில் மூழ்கி முதியவர் உயிரிழந்தார்
    • துணி துவைக்கும் போது சம்பவம்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் மருவத்தூர் போலீஸ் சரகத்திற்குட்பட்ட பேரளி தெற்கு தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (வயது 80). இவர் அப்பகுதியில் உள்ள ஏரியில் தனது துணிகளை துவைத்துக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென தண்ணீரில் மூழ்கி உயிருக்கு போராடினார். இதனை ப ார்த்த அருகில் இருந்தவர்கள் காப்பாற்ற முயற்சித்தும் முடியாததால், தீயணைப்பு மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஏரியில் இறங்கி இறந்த நிலையில் கிருஷ்ணசாமியின் உடலை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். உடலை பெற்றுக் கொண்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கா அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கிணற்றில் பொன்னுசாமி பிணமாக கிடந்தது தெரிய வந்தது.
    • இது குறித்து சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி னர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள அம்மன் கோவில் அண்ணா மலை கோட்டை பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி (யது 70). இவருக்கு கண்ணம்மாள் என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.

    இந்த நிலையில் பொன்னு சாமி சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீட்டுக்கு வரவில்லை. இதையடுத்து அவரது மகன் ஆனந்தராஜ் மற்றும் உறவி னர்கள் அவரை அக்கம் பக்கம் தேடி பார்த்தனர்.

    அப்போது அண்ணா மலை கோட்டை பகுதியில் உள்ள ஒரு கிணற்றின் அருகே பொன்னுசாமியின் செருப்பு மற்றும் லுங்கி கிடந்தது. இதையடுத்து சந்தேகம் அடைந்த உறவி னர்கள் இது குறித்து கொடு முடி தீயணைப்பு துறை மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர். இதை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி தேடி பார்த்தனர். அப்போது கிணற்றில் பொன்னுசாமி பிணமாக கிடந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரது உடலை அவர்கள் மீட்டனர்.

    இது குறித்து சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி னர். இதில் பொன்னுசாமி குளிக்க சென்ற போது கிணற்றில் தவறி விழுந்து இறந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் பொன்னுசாமி உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    • கேபிகரடு பகுதியில், சில தினங்களுக்கு முன்பு, சுமார் 58 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சாலையோரத்தில் மயங்கிய நிலையில் விழுந்து கிடந்தார்.
    • சிகிச்சைக்காக 108 ஆம்பு லன்ஸ் மூலமாக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அன்னதானப்பட்டி:

    சேலம் நெத்திமேடு, கேபிகரடு பகுதியில், சில தினங்க ளுக்கு முன்பு, சுமார் 58 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சாலையோரத்தில் மயங்கிய நிலையில் விழுந்து கிடந்தார். இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்பு லன்ஸ் மூலமாக சேலம் அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவ ருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்ப ட்டு வந்தது. ஆனால் நேற்று சிகிச்சைப் பலனின்றி அவர் பரி தாபமாக உயிரிழந்தார். அவர் யார்?, எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற விவ ரங்கள் ஏதும் தெரியவி ல்லை. இது குறித்து அன்ன தானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • பூச்சி மருந்து குடித்து முதியவர் உயிரிழந்தார்
    • வயிற்று வலியால் அவதிபட்டு வந்தார்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே தென்னூர் கிராமம் புதுத் தெருவை சேர்ந்தவர் ஞானபிரகாசம் (65) இவரது மனைவி ஆரோக்கிய மேரி (60) இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் இருவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்த தம்பதியர் மட்டும் தனியாக வசித்து வருகின்றனர். ஞானபிரகாசத்திற்கு குடிப்பழக்கம் இருந்ததால் உடல்நிலை பாதிக்கப்பட்டு வயிற்று வலிக்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார். அடிக்கடி வயிற்று வலியில் துடித்து வந்த ஞானபிரகாசம் வலி தாங்காமல் நேற்று முன்தினம் வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்துள்ளார்.மயங்கி கிடந்தவரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஆண்டிமடம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • கலைநல்லூர் சாலையில் சென்ற போது குமார் மோட்டார் சைக்கிளை தாறுமாறாக ஓட்டியதாக கூறப்படுகிறது.
    • தியாகதுருகம் போலீசார் குமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே கலையநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யாசாமி (வயது 80) கூலித் தொழிலாளி, இவர் நேற்று முன்தினம் தியாகதுருகம் வாரச்சந்தைக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்குச் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த பீளமேடு பகுதியைச் சேர்ந்த குமார் (வயது40) என்பவர் அவரது மோட்டார் சைக்கிளில் பின்னால் ஏற்றிக்கொண்டு சென்றார். அப்போது கலைநல்லூர் சாலையில் சென்ற போது குமார் மோட்டார் சைக்கிளை தாறுமாறாக ஓட்டியதாக கூறப்படுகிறது.

    இதனால் அய்யாசாமி மற்றும் குமார் ஆகியோர் சாலையில் கீழே விழுந்தனர். இதில் பலத்த காயமடைந்த அய்யாசாமி சம்பவ இடத்தில் இறந்து போனார். குமார் லேசான காயம் அடைந்தார். அக்கம், பக்கத்தினர் இவர்களை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து செல்வராஜ் கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் குமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றுள்ளார். எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் முதியவரின் பின்னால் மோதியது.
    • அங்கு சிகிட்சை பலனின்றி அந்த முதியவர் உயிரிழந்தார். அவர் யார் ? எந்த இடத்தை சேர்ந்தவர் என தெரியவில்லை.

    கன்னியாகுமரி :

    புதுக்கடையில் இருந்து காப்புக் காடு செல்லும் சாலையில் (வயது 75) மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது குன்னத்தூர் பகுதி பொற்றவிளை என்ற இடத்தை சேர்ந்த கண்ணன் (48) என்பவர் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றுள்ளார். எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் முதியவரின் பின்னால் மோதியது.

    இதில் முதியவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிட்சைக்கு அனுமதித்தனர். அங்கு சிகிட்சை பலனின்றி அந்த முதியவர் உயிரிழந்தார். அவர் யார் ? எந்த இடத்தை சேர்ந்தவர் என தெரியவில்லை.

    இது தொடர்பாக முஞ்சிறை கிராம நிர்வாக அலுவலர் அெலக்சாண்டர் புதுக்கடை போலீசில் புகார் செய்தார். புதுக்கடை போலீ சார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

    • பழைய பொருட்களில் இருந்து வெளியே வந்த பாம்பு எதிர்பாராத விதமாக சேமலையை கடித்து விட்டது.
    • இதனால் மயக்கம் அடைந்த அவரை உறவினர்கள் மீட்டு நம்பியூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் அடுத்த கண்ணகாட்டு பாளையம் பகுதியை சேர்ந்தவர் சேமலை (82). இவரது மனைவி பழனியம்மாள். சேமலை மகனுடன் வசித்து வருகிறார்.

    சம்பவத்தன்று சேமலை யும், அவரது மகனும் வீட்டின் காம்பவுண்டுக்குள் பழைய பொருட்கள் போட்டு வைக்கும் சிமெண்ட் சீட் செட்டிற்குள் இருந்த பழைய பொருட்களை அடுக்கி வைத்து கொண்டிருந்தனர். அப்போது பழைய பொருட்களில் இருந்து வெளியே வந்த பாம்பு எதிர்பாராத விதமாக சேமலையை கடித்து விட்டது.

    இதனால் மயக்கம் அடைந்த அவரை உறவினர்கள் மீட்டு நம்பியூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேமலை அனுமதிக்க ப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சேமலை பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ஒற்றை யானை தாக்கியது. சிகிச்சை பலனின்றி இறந்தார்.
    • இழப்பீட்டுத் தொகையாக ரூ.50 ஆயிரம் காசோலையை வழங்கினார்கள்.

    ராயக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள சாத்தனக்கல்லை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 70).

    இவர் ராயக்கோட்டை வனச்சரகம் ஊடேதுர்கம் காப்புக் காட்டில் கடந்த 4-ந் தேதி மாலை கிருஷ்ணன் காட்டை ஒட்டியுள்ள நிலத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார்.

    அவரை அவ்வழியாக வந்த ஒற்றை யானை தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த கிருஷ்ணனை தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக 5-ந் தேதி தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    அங்கு தீவிர சிகிச்சை மேற்கொண்ட நிலையில், நேற்று முன்தினம் மாலை சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இதையடுத்து, தருமபுரி மண்டல வனப்பாதுகாவலர் பெரியசாமியின் அறிவுரையின்படி, ஓசூர் வன உயிரின காப்பாளர் கார்த்திகேயனியின் உத்தரவின்பேரில், ராயக்கோட்டை வனச்சரகர் பார்த்தசாரதியின் தலைமையில், ஊடேதுர்கம் பிரிவு வனவர் வரதராஜன், மேற்கு பீட் வனக்காப்பாளர் ராம்குமார் ஆகியோர் நேற்று கிருஷ்ணனனின் வீட்டிற்கு நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.

    மேலும் அவரது மனைவி சித்தம்மாவிடம் முதல் கட்ட இழப்பீட்டுத் தொகையாக ரூ.50 ஆயிரம் காசோலையை வழங்கினார்கள்.

    • சம்பவத்தன்று அதிக அளவு மாத்திரை சாப்பிட்டதால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
    • போலீசார் விசாரித்து வருகின்றனர்

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் சின்னஓவுலாபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் நல்லு (வயது73). இவருக்கு கடந்த 10 வருடங்களாக ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் இருந்து வந்துள்ளது.

    இதற்காக மாத்திரைகள் சாப்பிட்டு வந்துள்ளார். சம்பவத்தன்று அதிக அளவு மாத்திரை சாப்பிட்டதால் மயக்கமடைந்தார்.

    தேனி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். இது குறித்து ராயப்பன்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கொடுமுடி கோவிலுக்கு வந்துவிட்டு காவிரி ஆற்றில் குளிக்க சென்றபோது தவறி ஆற்றில் விழுந்து தண்ணீரில் மூழ்கி அவர் இறந்திருக்கலாம்.
    • இது குறித்த புகாரின் பேரில் கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    கரூர் மாவட்டம் தென்னிலையை அடுத்த மலையம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (62).

    இவரது மூத்த மகன் செந்தில் குமார் உடல் நிலை சரியில்லாமல் கடந்த 2018-ம் ஆண்டு இறந்து விட்டார். இளைய மகன் ராமச்சந்திரன் (33). இவர் தென்னிலை அரசு மேல் நிலைப்பள்ளியில் பகுதி நேர கணினி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

    மூத்த மகன் செந்தில் குமார் இறந்ததில் இருந்து, தந்தை பழனிசாமி மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று மருத்துவமனைக்கு சென்று வருதாக மனைவியிடம் கூறிவிட்டு சென்ற பழனிசாமி அதன்பின் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் கொடுமுடி கோவில் அருகே பழனி சாமியை அவரது மகன் மற்றும் உறவினர்கள் தேடியபோது பழையூர் சோளக்காளிபாளையம் பகுதி காவிரி ஆற்றில் ஒரு உடல் கிடப்பதாகத் தெரிவி த்துள்ளனர். உடனடியாக அங்கு சென்று பார்த்த போது அது பழனிசாமி என்பது தெரியவந்தது.

    கொடுமுடி கோவிலுக்கு வந்துவிட்டு காவிரி ஆற்றில் குளிக்கச் சென்றபோது தவறி ஆற்றில் விழுந்து தண்ணீரில் மூழ்கி அவர் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

    இது குறித்த புகாரின் பேரில் கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×