search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "100 சதவீதம் தேர்ச்சி"

    • காசோலை வழங்குதல் மற்றும் மரங்கள் நடும் நிகழ்ச்சி நடந்தது
    • 100 சதவீதம் தேர்ச்சி கொடுத்த ஆசிரியர்களுக்கு பாராட்டு

    அரக்கோணம்:

    மாணவர்கள் கல்வி மற்றும் ஆய்வறிவு அறக்கட்டளை (செல்ப்) சார்பில் அரக்கோணம் அரசு ஆதிதிராவிடர் பெண்கள் மேநிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு வெற்றி நம் கைகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சி, பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு கேடயம் மற்றும் காசோலை வழங்குதல் மற்றும் மரங்கள் நடும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு செல்ப் அறக்கட்டளை நிறுவனர் ச.வேலாயுதம் தலைமை தாங்கினார். செல்ப் செயலாளர் கோவி.பார்த்திபன் வரவேற்றார். பொருளாளர் ச.கருணாகரன், ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மகாலட்சுமி, உதவி தலைமை ஆசிரியர் முருகன், சாரண சாரணியர் திட்ட அலுவலர் ரஜினிப்பிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் க.கௌதம் நிகழ்வை ஒருங்கிணைத்தார்.

    இதைத்தொடர்ந்து கார்பரேட் பயிற்சியாளர் லயன் அமுதா மதியழகன் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

    சிறப்பு அழைப்பாளர்களாக ரயில் பயணிகள் சங்கத்தலைவர் நைனாமாசிலாமணி, அன்னை தெரசா கிராம வளர்ச்சி நிறுவன தலைவர் தேவாசீர்வாதம், ஆலோசகர் துரை பாண்டியன், அறம் கல்வி சங்க தலைவர் டாக்டர் கலைநேசன், குளோ ஜேம்ஸ், கிறிஸ்து அறக்கட்டளை அருள்தாஸ் மற்றும் ச.சி.சந்தர், அம்பேத்ஆனந்தன் ஆகியோர் கலந்துகொண்டு அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு கேடயம் மற்றும் காசோலை வழங்கியும், 100 சதவீதம் தேர்ச்சி கொடுத்த ஆசிரியர்களை பாராட்டியும் பேசினார். இறுதியாக நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் தோத்திராவதி நன்றி கூறினார்.

    • விழுப்புரம் மாவட்டத்தில் 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில், 6 அரசுப்பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
    • பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் கங்கா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம், சிங்கனூர் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நி லைப்பள்ளியில், 2022-2023 கல்வியாண்டில், 12-ம் வகுப்பு அரசு பொது த்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்ததையொட்டி பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு மாவட்டகலெக்டர் பழனி நினைவுப் பரிசு மற்றும் பாராட்டுச்சா ன்றிதழ்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    விழுப்புரம் மாவட்டத்தில், 2022- 2023 கல்வியாண்டில், 12-ம் வகுப்பு அரசு பொது த்தேர்வில், 6 அரசுப்ப ள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற துடன், அதிகப்படியான அரசு ப்பள்ளி மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை எடுத்து ள்ளனர். அந்த வகையில், சிங்கனூர் அரசு ஆதி திராவிடர் நல மேல்நிலை ப்பள்ளியில், 12-ம் வகுப்பு பயின்ற 38 மாணவ, மாணவிர்ள் அனைவரும் தேர்ச்சி பெற்று 100 சதவீத தேர்ச்சி இலக்கை எட்டியது மிக மகிழ்ச்சியாக உள்ளது. தேர்ச்சி பெற்ற மாணவர்கள், 100 சதவீதம் தேர்ச்சி பெறுவதற்கு உறுதுணையாக இருந்து, சிறப்பாக பணியா ற்றிய தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் என அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவழகன், மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் (பொறுப்பு) ஹரிதாஸ், திண்டிவனம் மாவட்ட கல்வி அலுவலர் சிவ சுப்பிரமணியன், முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பெருமாள், தலைமையாசிரியர் மணிமேகலை, சிங்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ்குமார், ஒன்றிய குழு உறுப்பினர் கன்னியம்மாள், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் கங்கா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • கடந்த ஆண்டை விட மொத்த தேர்ச்சியில் 2.24 சதவீதம் பேர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    • தேர்ச்சி சதவீதத்தில் நாமக்கல் மாவட்டம், மாநில அளவில் 9-ம் இடம் பெற்றுள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில், அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளிட்ட, 198 பள்ளிகளை சேர்ந்த 8,852 மாணவர்கள், 9,375 மாணவியர், மாற்று பாலினத்தவர் ஒருவர் என மொத்தம் 18 ஆயிரத்து 228 பேர் பிளஸ்-2 பொதுத் தேர்வு எழுதினர்.

    அவர்களில் 8,509 மாணவர்கள், 9,160 மாணவியர், ஒரு மாற்று பாலினத்தவர் என மொத்தம் 17 ஆயிரத்து 670 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி 96.13 சதவீதம், மாணவியர் தேர்ச்சி 97,71 சதவீதம் ஆகும். மாற்று பாலினத்தவர் தேர்ச்சி 100 சதவீதம் என மொத்தம், 96.94 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    கடந்த ஆண்டை விட மொத்த தேர்ச்சியில் 2.24 சதவீதம் பேர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், தேர்ச்சி சதவீதத்தில் நாமக்கல் மாவட்டம், மாநில அளவில் 9-ம் இடம் பெற்றுள்ளது.

    மாவட்டத்தில் உள்ள 89 அரசு பள்ளிகளில் 95.03 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட 4.33 சதவீதம் பேர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆதிதிராவிட நலப்பள்ளியில் 93.48 சதவீதம், பழங்குடியினர் நலப்பள்ளியில் 95.69 சதவீதம், சமூக நலத்துறை பள்ளியில் 100 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இந்த ஆண்டு மொத்தம் 87 பள்ளிகள் 100-க்கு 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. அதில் அரசு பள்ளிகள் 17 என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கடந்த ஆண்டு மொத்த தேர்ச்சியில் 16ம் இடத்தில் இருந்து, இந்த ஆண்டில் 9ம் இடத்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கார்த்திக் விஜய் 600-க்கு 595 மதிப்பெண்கள் பெற்ற மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
    • பள்ளியின் தாளாளர் கூத்தரசன் பங்கேற்று, மாண வர்களுக்கு பொன்னாடை அணிவித்து, கேடயங்களை வழங்கி பாராட்டினார்.

    கிருஷ்ணகிரி, மே.9-

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப்ப ள்ளியில் 2022-23ம் கல்வியாண்டில் பிளஸ்-2 அரசு பொதுத் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளி என்ற பெருமையை சேர்த்துள்ளனர்.

    இதில், கார்த்திக் விஜய் என்ற மாணவர் 600-க்கு 595 மதிப்பெண்கள் பெற்ற மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

    கிரேஸ் கிருஸ்டி 594, துளசிஸ்ரீ 594 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், சுவாதி 593 மற்றும் சந்தியா 593 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும், முகேஷ்வர் 592 மதிப்பெண்கள் பெற்று நான்காம் இடத்தையும், கவிப்பிரியா 590 மதிப்பெண்கள் பெற்று ஐந்தாம் இடத்தையும் பெற்று உள்ளனர்.

    இந்த சாதனை படைத்த மாணவர்களுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடந்தது. இதில் பள்ளியின் தாளாளர் கூத்தரசன் பங்கேற்று, மாண வர்களுக்கு பொன்னாடை அணிவித்து, கேடயங்களை வழங்கி பாராட்டினார்.

    இந்நிகழ்ச்சியில், பள்ளியின் முதல்வர் மெரினா பலராமன், வேப்பனஹள்ளி முதல்வர் அன்பழகன், துணை முதல்வர் ஜலஜாஷி, திருப்பத்தூர் பள்ளியின் துணை முதல்வர் பூங்கா வனம், நிர்வாக அலுவலர் கவுரிசங்கர், பள்ளியின் பொறுப்பாளர் யுவராஜ், துறை தலைவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து இப்பள்ளி மாணவர்கள் பிளஸ்-2 பொதுத்தேர்வில் 20 ஆண்டுகளாக 100 சதவீதம் தேர்ச்சி பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பிளஸ்-2 பொதுத்தேர்வில் முடிவுகள் நேற்று வெளியானது.
    • பிளஸ்-2 பொதுத்தேர்வில் 12 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டத்தில் 215 பள்ளிகளை சேர்ந்த 20,802 மாணவர்கள் பிளஸ்-2 பொதுத்தேர்வில் எழுதினர். இவர்களில் 19,505 மாணவர்கள் தேர்ச்சி அடைந்த நிலையில் 67 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றனர்.

    இவற்றில் அரசு பள்ளிகள் , கள்ளர்சீரமைப்புத்துறை பள்ளிகள், பழங்குடியினர் நலத்துறைபள்ளி என மொத்தம் 12 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றன.

    அதன்படி மன்னவனூர் அரசு மேல்நிலைப்பள்ளி(29), பாப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி(44), பாலசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளி(49), கொக்கரக்கால் வலசு அரசு மேல்நிலைப்பள்ளி (39), லந்தக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி (27), கோம்பைப்பட்டி அரசுமேல்நிலைப்பள்ளி (22), செட்டியபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி (20),

    கே.புதுக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி(65), விலாம்பட்டி அரசு கள்ளர்மேல்நிலைப்பள்ளி (58), சேவுகம்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி(28), சென்னமநாயக்கன்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி(57), பெரும்பாறை அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளி (19) ஆகிய பள்ளிகளில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர்.

    • வாடிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பிளஸ்-2 தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.
    • தாய் மெட்ரிக் பள்ளியில் 134 மாணவர்கள் தேர்வு எழுதியதில் அனைவரும் தேர்ச்சி பெற்றனர்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மேட்டுப் பெருமாள் நகரில் உள்ளது. இங்கு பிளஸ்-2 பொதுத்தேர்வை 132 மாணவிகள் எழுதினர்.இதில் 132 மாணவிகளும் தேர்ச்சி பெற்று 100 சதமடித்து சாதனை படைத்தனர்.

    முதல் மதிப்பெண் ராஜேஸ்வரி 536, 2-வது மதிப்பெண் வான்மதி 525, 3-வது மதிப்பெண் ஜெயஸ்ரீ 523 பெற்றனர். இந்த சாதனை மாணவிகளை தலைமை ஆசிரியர் ஆஷா, பெற்றோர்-ஆசிரியர் கழகத்தினர், கல்வி வளர்ச்சி குழுவினர், பொதுமக்கள் பாராட்டினர்.

    வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 97 மாணவர்கள் பிளஸ்-2 தேர்வு எழுதியதில் 93 பேர் தேர்ச்சி பெற்றனர். முதல் மதிப்பெண் அரவிந்த் 551, 2-வது மதிப்பெண் செந்தில்முருகன் 510, 3-வது மதிப்பெண் கிறிஸ்டோபர் 481 பெற்றனர் என்று தலைமை ஆசிரியர் (பொறுப்பு) விஜய ரங்கன்தெரிவித்தார்.

    பாண்டியராஜபுரம் மதுரை சர்க்கரை ஆலை அரசு மேல்நிலைப்பள்ளியில் 68 மாணவர்கள் பிளஸ்-2 தேர்வு எழுதியதில் 61 ேபர் தேர்ச்சி பெற்றனர். இதில் முதல் மதிப்பெண் சாலின் 509, 2-ம் மதிப்பெண் சுபஸ்ரீ 499, 3-ம் மதிப்பெண் கவுசல்யா 464 பெற்றனர் என்று தலைமை ஆசிரியர் லட்சுமணன் தெரிவித்தார்.

    அதேபோல் புஸ்கோ மெட்ரிகுலேசன் பள்ளியில் 80 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 80 பேரும் தேர்ச்சி பெற்றனர். முதல் மதிப்பெண் தினேஷ் 580, 2-ம் மதிப்பெண் ஓவியா 572, 3-ம் மதிப்பெண் ஜெகன் 570. இதில் கம்ப்யூட்டர் அப்ளிகேஷனில் 8 மாணவர்கள் 100 சதவீத மதிப்பெண்ணும், கம்ப்யூட்டர் சயின்சில் 2 மாணவர்கள் 100 சதவீத மதிப்பெண்ணும், காமர்சில் 1 மாணவர் 100 சதவீத மதிப்பெண்னும் பெற்றனர் என்று முதல்வர் ஞான சிகாமணி தெரிவித்தார்.

    தாய் மெட்ரிக் பள்ளியில் 134 மாணவர்கள் தேர்வு எழுதியதில் அனைவரும் தேர்ச்சி பெற்றனர். முதல் மதிப்பெண் வினித் பாண்டி 585, 2-ம் மதிப்பெண் பிரின்ஸ்ராஜ் 584, 3-ம் மதிப்பெண் சுபாஷினி 579 பெற்றனர். இதில் அக்கவுண்டன்சியில் 5 மாணவர்கள் 100 சதவீத மதிப்பெண்ணும், கம்ப்யூட்டர் அப்ளிகேஷனில் 3 மாணவர்கள் 100 சதவீத மதிப்பெண்ணும், கம்ப்யூட்டர் சயின்சில் 11 மாணவர்கள் 100 சதவீத மதிப்பெண்ணும், வேதியலில் ஒரு மாணவர் 100 சதவீத மதிப்பெண்ணும் பெற்று சாதனை படைத்துள்ளனர் என்று தலைமை ஆசிரியர் ஜெகதீசன் தெரிவித்தார்.

    • மாவட்டத்தில் 4 அரசு பள்ளிகள் மற்றும் 40 தனியார் பள்ளிகள் என மொத்தம் 44 பள்ளிகளில் 100 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    • தேர்ச்சி பெற்ற மாணவர்களை பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் பாராட்டினர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாகின.

    மாவட்டத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் மொத்தம் 84 பள்ளிகளில் பயின்ற பிளஸ்-2 மாணவர்கள் 20703 பேர் தேர்வு எழுதினர். இதில் 89.06 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர்.

    இதில் மாவட்டத்தில் 4 அரசு பள்ளிகள் மற்றும் 40 தனியார் பள்ளிகள் என மொத்தம் 44 பள்ளிகளில் 100 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவர்களை பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் பாராட்டினர். 

    • பிளஸ்-2 மாணவர்கள் அனைவரும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
    • தேர்ச்சி பெற்ற மாணவர்களை பள்ளி ஆசிரியர்கள் பாராட்டினர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் இன்று பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் மாவட்டத்தில் 92.72 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர்.

    இதில் தருமபுரி மாவட்டம் அரூரை அடுத்த சித்தாரிபேட்டையில் உள்ள மலைவாழ்மக்கள் அரசு உண்டு உறைவிடப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

    இதில் பயின்ற பிளஸ்-2 மாணவர்கள் அனைவரும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

    தேர்ச்சி பெற்ற மாணவர்களை பள்ளி ஆசிரியர்கள் பாராட்டினர்.

    இதேபோன்று தருமபுரியில் தனியார் பள்ளியில் செயல்பட்டு மார்டன் பள்ளியில் பயின்ற பிளஸ்-2 மாணவ, மாணவி்கள் 100 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    • மாணவிகள் அதிகம் பேர் வெற்றி
    • செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பப்பட்டது.

    ஊட்டி :

    தமிழகத்தில் கடந்த மாதம் பிளஸ்-2, பிளஸ்-1, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நடந்து முடிந்தது. கடந்த வாரம் பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. இந்தநிலையில் நேற்று பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவு வெளியிடப்பட்டன.

    நீலகிரி மாவட்டத்தில் மாணவர்கள் பள்ளிகளில் அளித்த செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பப்பட்டது. தேர்வு முடிவு வெளியான உடனே மாணவ-மாணவிகள் தாங்கள் பெற்ற மதிப்பெண்களை தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டினர்.

    ஊட்டியில் உள்ள பள்ளிகளில் அறிவிப்பு பலகைகளில் தேர்வு முடிகள் ஒட்டப்பட்டன. இதனை மாணவர்கள் பார்த்து மதிப்பெண்களை தெரிந்துகொண்டனர். 91 சதவீதம் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஆசிரியர்கள் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    நீலகிரி மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வை 3,415 மாணவர்கள், 3,861 மாணவிகள் என மொத்தம் 7,276 பேர் எழுதினர். இதில் 2,951 மாணவர்கள், 3,674 மாணவிகள் என மொத்தம் 6,625 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 91.05 சதவீதம் ஆகும். இதில் மாணவர்கள் 86.41 சதவீதமும், மாணவிகள் 95.16 சதவீதமும் தேர்ச்சி அடைந்து உள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் தேர்ச்சி விகிதம் அதிகமாக இருந்தது.

    பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவில் நீலகிரியில் 2 அரசு பள்ளிகள், ஒரு பழங்குடியினர் பள்ளி, 20 தனியார் பள்ளிகள் உள்பட மொத்தம் 26 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றது. கலைப்பிரிவு பாடங்களில் அதிகபட்சமாக 95 சதவீதம் பேரும், தொழிற்கல்வி பாடப்பிரிவில் குறைந்தபட்சமாக 73 சதவீதம் பேரும் தேர்ச்சி அடைந்து உள்ளனர்.  

    • சேத்தியாத்தோப்பு பூதங்குடி - எஸ்.டி.சீயோன். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர்
    • சாதனை படைத்த மாணவ மாணவிகளை ஆசிரியர்கள் கேக் வெட்டி பாராட்டினார்.

    கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பூதங்குடி எஸ்.டி.சீயோன். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 100 சதவீத தேர்ச்சி வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி நிர்வாகத்தின் சார்பில் கேக் வெட்டி பாராட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் நிர்வாகி சுஜியின் தலைமை தாங்கினார் நிர்வாக இயக்குனர் டாக்டர் தீபா சுஜின் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் ஆண்டனி வரவேற்பு நிகழ்ச்சியில் பிளஸ்- 2 தேர்வில் முதலிடம் பெற்ற இளம்பாரதி 587 மதிப்பெண்ணும்2-வது இடம்பெற்ற மாணவிகள் அனுஷியா .அஸ்வினி 578 மதிப்பெண்களும், 3-வது இடம் பிடித்த கிருத்திகா 575 மதிப்பெண்களும் பெற்றனர்.

    அதேபோல் 10-ம் வகுப்பு தேர்வில் நர்மதா 481 மதிப்பெண் பெற்று முதல் இடத்தையும், சாருமதி 477 மதிப்பெண் பெற்று 2-வது இடத்தையும் கதிர்நிலவன் 467 மதிப்பெண் பெற்று 3-வது இடத்தையும் பிடித்தனர்.

    சாதனை படைத்த மாணவ மாணவிகளை ஆசிரியர்கள் கேக் வெட்டி பாராட்டினார்.

    இந்தப் பள்ளியில் படித்த மாணவர்கள் நீட் தேர்விற்கு 99.75 சதவீதம் . வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது மேலும் 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள்100-க்கு 100 பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பிளஸ்-2 பொதுத்தேர்வில் லட்சுமி சோரடியா பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.
    • 3 மாணவர்கள் பல்வேறு பாடங்களில் தலா 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.

    கடலூர்:

    கடலூர் எஸ்.எஸ்.ஆர். நகரில் இயங்கி வரும் லட்சுமி சோரடியா பள்ளியில் கடந்த கல்வியாண்டுக்கான பிளஸ்-2 பொதுத்தேர்வை எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். இது பள்ளியின் 100 சதவீத தேர்ச்சியாகும். மாணவி சுவாதி 600-க்கு 588 மதிப்பெண்களும், மாணவி அபிநயா 578 மதிப்பெண்களும், மாணவர் ராகுல் 575 மதிப்பெண்களும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

    24 மாணவர்கள் தலா 500 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்துள்ளனர். மாணவர்கள் 7 பேர் பல்வேறு பாடங்களில் தலா 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

    எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதிய தேவசேனா 500-க்கு 486 மதிப்பெண்களும், மாணவி சபிதா 481 மதிப்பெண்களும், சுகாசினி 473 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். 14 மாணவர்கள் தலா 450 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்துள்ளனர். 3 மாணவர்கள் பல்வேறு பாடங்களில் தலா 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.

    அரசு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் எடுத்து சிறப்பிடம் பெற்ற மாணவ-மாணவிகளையும், அதிக மதிப்பெண்கள் பெற கடுமையாக உழைத்த ஆசிரியர்களையும் பள்ளியின் தாளாளர் டி.மாவீர்மல் சோரடியா, பள்ளி முதல்வர் சந்தோஷ்மல் சோரடியா ஆகியோா் பாராட்டி நினைவு பரிசு வழங்கினார்கள்.

    • பெரும்பாறை மலைக்கிராமத்தில் உள்ள அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட ஜி.டி.ஆர். மேல்நிலைப்பள்ளி உள்ளது.
    • இப்பள்ளியில் 12-ம் வகுப்பு தேர்வில் 100 சதவீதம், 10-ம் வகுப்பில் 96 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்

    பெரும்பாறை:

    திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா மணலூர் ஊராட்சி பெரும்பாறை மலைக்கிராமத்தில் உள்ள அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட ஜி.டி.ஆர். மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பொதுத்தேர்வில் 12ம் மற்றும் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்ப–ட்டது.

    இதில் 12ம் வகுப்பு 100 சதவீதம் 10ம் வகுப்பு 96சதவீதம் பெற்று தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகள் மற்றும் தலைமை ஆசிரியர் ஆசிரியைகளுக்கு மலை க்கிராம பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்து பாராட்டினர்.

    புதிய கல்வி ஆண்டில் இதே போல் 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும் என்று தெரிவித்தனர்.

    ×