search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 235118"

    • பிரதமர் மோடிக்கு கிடைத்த பெரும் புகழே வெற்றிக்கு காரணம்.
    • 2024 மக்களவைத் தேர்தலும் பாஜகவுக்கு சாதகமாக இருக்கும்.

    சூரத்:

    குஜராத் மாநிலம் சூரத்தில் நடைபெற்ற பாஜக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் காணொலி மூலம் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உரையாற்றினார். அப்போது அவர் கூறியுள்ளதாவது:

    மாநில தேர்தலில் கிடைத்த அமோக வெற்றி, குஜராத் பாஜக கோட்டையாக இருந்தது, இனி எப்போதும் இருக்கும் என்பதை நிரூபிக்கிறது. இந்த முடிவு மற்ற மாநில தேர்தல்களிலும், 2024 ஆம் ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலிலும் பாஜகவுக்கு சாதகமாக இருக்கும். பிரதமர் மோடிக்கு நாட்டிலும், குஜராத்திலும் கிடைத்த பெரும் புகழே இவ்வளவு பெரிய வெற்றிக்கு காரணம்.

    இந்த தேர்தலில் புதிய கட்சிகள் குஜராத்திற்கு வந்தன, வாக்குறுதிகள் மற்றும் உத்தரவாதங்களை அளித்தன, ஆனால் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அவற்றை காணவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • ஜிப்மருக்கு இந்த ஆண்டு ரூ.1340 கோடி நிதி ஒதுக்கீடு.
    • இடை நிலை சுகாதார சேவை மேம்பாட்டுக்காக ரூ.70 கோடி ஒதுக்கீடு.

    மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல்வாழ்வுத்துறை இணை மந்திரி பாரதி பிரவீன் பவார் புதுச்சேரியில் நடைபெற்ற சுகாதாரத்துறை அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியுள்ளதாவது: 


    புதுச்சேரி அரசு சுகாதாரத் துறையை சிறப்பாகச் செயல்படுகின்றது. பேறு காலத்தில் தாய்மார்கள் இறப்பு விகிதம் மற்றும் குழந்தைகள் இறப்பு விகிதம் வெகுவாகக் குறைத்துள்ளது. பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 29,000 நோயாளிகள் இலவசமாக உயர் சிகிச்சை பெற்றுள்ளனர்.

    தேசிய சுகாதார இயக்கத்தின்கீழ் புதுச்சேரிக்கு ஆரம்ப நிலை மற்றும் இடை நிலை சுகாதார சேவை மேம்பாட்டுக்காக ரூ.70 கோடியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. அதேபோல் பிரதம மந்திரி ஆயுஷ்மான் பாரத் உள்கட்டமைப்பு மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் புதுச்சேரிக்கு ரூ.150 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் நிறுவனமான ஜிப்மருக்கு இந்த ஆண்டு நிதி ஒதுக்கீடு ரூ.1340 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். 


    முன்னதாக புதுச்சேரியில் மருத்துவப் பல்கலைக்கழகம் அமைத்தல், மருந்தியல் பூங்கா உருவாக்குதல், புற்றுநோய்க்கு கதிரியக்க சிகிச்சை மையம் அமைத்தல் ஆகிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதலமைச்சர் ரங்கசாமி மத்திய இணை மந்திரி பாரதி பிரவீன் பவாரிடம் வழங்கினார். நிகழ்ச்சியில் புதுச்சேரி பொதுப்பணித் துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், ஜிப்மர் இயக்குனர் டாக்டர் ராகேஷ் அகர்வால், புதுச்சேரி அரசின் நலவழித்துறை இயக்குனர் டாக்டர் ஸ்ரீராமுலு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்

    • நாடு முழுவதும் 23 புதிய மருத்துவமனைகளை அமைக்கப்படுகிறது.
    • 2000 மருத்துவர்கள் உள்பட 6400 பணியிடங்களை நிரப்ப ஏற்பாடு.

    சென்னையில் உள்ள இ.எஸ்.ஐ.சி. மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி பூபேந்திர யாதவ் மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். விழாவில் அவர் பேசியதாவது:

    ஊழியர் காப்பீட்டு கழகம், மக்களுக்கு சிறந்த வசதிகள் மற்றும் தொழில்நுட்பத்தை வழங்குவதோடு மட்டுமல்லாமல், திறமையான இளம் மருத்துவர்களை ஆதரிப்பதிலும் ஒருங்கிணைந்த பங்கைக் கொண்டுள்ளது. இங்கு பட்டம் பெறும் மாணவர்கள், மக்களின் நல்வாழ்வுடன் தொடர்புடைய பணியை மேற்கொள்ள உள்ளனர். நமது சமூகத்தில் ஒதுக்கப்பட்ட மக்களை உயர்த்துவதற்கான அரசின் முயற்சிகளுக்கு மருத்துவர்கள் பங்களிக்க வேண்டும்.


    நாட்டின் தொழிலாளர்களுக்கு மருத்துவச் சேவை எளிதாக கிடைக்க அதன் உள்கட்டமைப்பை உருவாக்குவதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது.தொழிலாளர்கள் மருத்துவமனைகளுக்குச் சென்ற நிலை மாறி, இப்போது தொழிலாளர்களுக்கு அவர்களின் பணியிடங்களில் இஎஸ்ஐ சென்று சேவை புரிந்து வருகிறது.

    பீடி மற்றும் செங்கல் சூளை தொழிலாளர்களுக்கு சுகாதார பரிசோதனைகள் மற்றும் தொடர் கண்காணிப்புகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2000-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், ஆசிரியர்கள் உள்பட 6400 பணியிடங்களை நிரப்ப ஊழியர் காப்பீட்டு கழகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

    நாடு முழுவதும் 100 படுக்கைகள் கொண்ட 23 புதிய மருத்துவமனைகள் அமைக்கப்பட உள்ளன. 60 க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • படகுகளை நிறுத்த வசதி போன்றவை செய்து தர மீனவர்கள் கோரிக்கை.
    • மீனவர்களின் கோரிக்கைகளை 3 மாதத்திற்குள் நிறைவேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவு.

    துர்காபூர்:

    அந்தமான் நிக்கோபார் தீவு பகுதிகளுக்கு பயணம் மேற் கொண்ட மத்திய மீனவளத்துறை இணை மந்திரி எல்.முருகன், மத்திய அந்தமான் மாவட்டத்திற்கு உட்பட்ட துர்காபூர் கிராமத்தில் மீன்பிடி இறங்கு தளத்தை பார்வையிட்டார். அப்பகுதி மீனவர்களுடன் கலந்துரையாடினார்.

    அப்போது மீன்பிடித் தளத்தில் தங்களுக்கு சுத்தமானக் குடிநீர், தெருவிளக்கு, பொதுக் கழிப்பிட வளாகம், சாலை வசதி, படகுகளை நிறுத்துவதற்கான வசதி போன்றவை செய்து தர வேண்டும் என்று அப்பகுதி மீனவர்கள் கேட்டுக் கொண்டனர். 


    அண்டை நாட்டு மீனவர்கள் நம் கடல் எல்லைப் பகுதியில் வந்து ஆழ்கடல் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருவதைத் தடுக்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர். இதைக் கேட்டறிந்த மந்திரி முருகன், மீனவர்களின் கோரிக்கைகளை 3 மாதத்திற்குள் நிறைவேற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    தொடர்ந்து பேசிய அவர் கூறியுள்ளதாவது: நாட்டிலுள்ள மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பிரதமரின் மத்சய சம்படா திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மீன்வளம், மீன்பிடித் தளம் மற்றும் மீன்பிடி இறங்கு தளம், துறைமுகம் மேம்பாடு, ஆழ்கடல் மீன்பிடித் தொழில் மேம்பாடு போன்றவை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன‌.


    நீலப் புரட்சி திட்டத்திற்கு 5,000 கோடி, துறைமுகங்களை மேம்படுத்தி நவீனப்படுத்த 7,000 கோடி, பிரதமரின் மத்சய சம்படா திட்டத்திற்கு 20,000 கோடி என மொத்தம் 32,000 கோடி நிதி, மீனவர்களின் நலனுக்காக மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

    பாரம்பரிய மீன்பிடித் தொழிலை மேம்படுத்தல் உள்பட பல்வேறு பணிகளுக்காக 2022-23 ஆம் நிதியாண்டில் அந்தமானுக்கு ரூ.7.6 கோடி நிதி ஒதுக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்

    • கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் வீரர்களுக்கு சிறப்பு பயிற்சி.
    • அனுபவம் வாய்ந்தவர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்தியாவில் விளையாட்டு போட்டிகளை ஊக்குவிக்கவும், திறமை வாய்ந்த இளம் விளையாட்டு வீரர்களை அடையாளம் காணவும் கேலோ இந்தியா போட்டிகள் பல்வேறு மாநிலங்களில் நடத்தப்படுகின்றன. கேலோ இந்தியா தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வீரர்கள் வெளிப்படுத்தும் திறன் அடிப்படையில் வெளிப்படையான தேர்வு மூலம் வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

    இது குறித்து பாராளுமன்ற மாநிலங்களவையில் எழுத்துபூர்வமாக பதில் அளித்த விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் சிங் தாக்கூர் கூறியுள்ளதாவது: கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் வீரர்கள், தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில், சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தும் வகையில், அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்கள் மூலம் பல்வேறு பயிற்சி வசதிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. தற்போது கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 21 விளையாட்டுப் பிரிவுகளில் 2,841 வீரர்கள் இந்திய வீரர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • காலிப் பணியிடங்களை நிரப்பும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
    • விமானப் போக்குவரத்து மற்றும் உற்பத்தித் துறையில் 2,50,000 ஊழியர்களுக்கு வேலை வாய்ப்பு.

    பாராளுமன்ற மாநிலங்களவையில் இன்று உறுப்பினரின் கேள்விக்கு, எழுத்துபூர்வமாக பதில் அளித்த மத்தியப் பணியாளர் நலத்துறை மந்திரி டாக்டர் ஜிதேந்திர சிங், 2011 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டுவரை மத்திய அரசுப் பணிகளில் 27% மேற்பட்ட இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பி்னர் நேரடியாக பணியமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள் அளித்த தகவலின்படி இந்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், காலிப்பணியிடங்களை நிரப்பும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார். 


    இந்நிலையில் விமானப் போக்குவரத்து மற்றும் உற்பத்தித் துறையில், பைலட், விமான ஊழியர்கள், பொறியாளர்கள், தொழில்நுட்பவியலாளர்கள், விமான நிலைய ஊழியர்கள், சரக்குப் பிரிவு, சில்லறை விற்பனை, பாதுகாப்பு, நிர்வாகம் உள்பட சுமார் 2,50,000 பேர் நேரடி வேலை வாய்ப்பை பெற்றுள்ளதாக விமானப் போக்குவரத்துறை இணை மந்திரி வி.கே சிங் தெரிவித்துள்ளார். மக்களவையில் இன்று எழுத்துபூர்வமாக அவர் அளித்துள்ள பதிலில், விமானப் போக்குவரத்துத் துறை, 2021-22-ம் ஆண்டில் 58.5 சதவீதம் அளவுக்கு வளர்ச்சியை அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

    • கொரோனா கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடுகளில் மாநிலங்கள் கவனம் செலுத்த அறிவுரை
    • முக கவசம் அணிவது மற்றும் கைகளை கழுவுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுகோள்.

    சீனா, தென்கொரியா, ஜப்பான் உள்பட பல்வேறு நாடுகளில் புதிய வகை கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவில் எடுக்கப்படும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து பாராளுமன்ற மாநிலங்களவையில் இன்று மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா அறிக்கை தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர் கூறியுள்ளதாவது:

    உருமாறிய புதிய வகை கொரோனா தொற்று உலக சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. இது ஒவ்வொரு நாட்டையும் பாதிக்கும். உலகம் முழுவதும் தினமும் சராசரியாக 5.87 லட்சம் வரை கொரோனா பதிவாகி உள்ள நிலையில், இந்தியாவில் சராசரியாக தினசரி 153 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    அடுத்து வரவிருக்கும் பண்டிகைகள் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தை கருத்தில் கொண்டு, சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், முக கவச பயன்பாடு, கைகளை கழுவுவது உள்ளிட்ட கொரோனா நடத்தை விதிகளை பின்பற்றுவது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை உறுதி செய்வதில் மாநிலங்கள் கவனம் செலுத்த வேண்டும்.

    கொரோனா தொற்று குறித்து தீவிர கண்காணிப்பது, தேவையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதிய வகை கொரோனா தொற்றால் யாரேனும் பாதிக்கப்பட்டால் அவற்றை உறுதி செய்ய அனைத்து பரிசோதனைகளையும் அதிகரிக்க மாநிலங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

    புதிய வகை கொரோனா பரவலை தடுக்க அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் வெளிநாடுகளில் இருந்து வரும் குறிப்பிட்ட பயணிகளிடம் இரண்டு சதவீதம் வரை கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவது இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • சூரியசக்தி மூலம் மின்சார உற்பத்திக்கு சலுகைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
    • கடலோரக் காற்றாலைத் திட்டத்திற்காக டென்மார்க்குடன் ஒப்பந்தம்.

    நாட்டில் சூரிய சக்தி திறனை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை மந்திரி ஆர் கே சிங் கூறியுள்ளார். இதுதொடர்பாக பாராளுமன்ற மாநிலங்களவையில் இன்று உறுப்பினர்களின் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக அவர் அளித்த பதிலில் கூறியுள்ளதாவது:

    கட்டிடங்களின் மேற்கூரைகளில் சூரியசக்தி தகடுகளை அமைத்து மின்சார உற்பத்தி செய்வதற்கு உரிய பல்வேறு ஊக்குவிப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. சூரியசக்தி மூலம் மின்சார உற்பத்திக்கான சலுகைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அது தொடர்பான விதிமுறைகள் வெளியிடப்பட்டு பல்வேறு ஊடகங்கள் மூலம் பொது மக்களின் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

    நாட்டில் காற்றாலை எரிசக்தியை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. காற்றாலை மின்சக்தியை பயன்படுத்தும் சாத்தியக் கூறுகள் பற்றிய ஒத்துழைப்பு உடன்படிக்கையில் டென்மார்க்குடன் மத்திய அரசு கையெழுத்திட்டுள்ளது.

    கடலோரக் காற்றாலைத் திட்டத்திற்காக உயர்தர காற்று டர்பைன்கள்,.உதிரிப்பாகங்கள் ஆகியவற்றை உறுதி செய்வது, கடலோர கரைப்பகுதி காற்று சக்திக்கான முன்னறிவிப்புகள் உள்ளிட்டவற்றை செயல்படுத்த இந்த உடன்படிக்கை வகை செய்கிறது. 

    ஹைட்ரஜனை எரிபொருளாகப் பயன்படுத்தும் வாகனங்களை உருவாக்குவதற்கான ஆராய்ச்சிகளை மத்திய எரிசக்தி அமைச்சகம் மேற்கொண்டுள்ளது. தேசிய வேதியல் ஆய்வகத்தின் மூலம் அறிவியல் மற்றும் தொழிலியல் ஆராய்ச்சி கவுன்சில் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

    ஹைட்ரஜனின் வேதியல் ஆற்றலை மின்சாரமாக மாற்றுவதற்கு எரிசக்திக் கலன்களை உருவாக்கி அவற்றின் வழியாக வாகனங்களை இயக்க இந்த பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. ஹைட்ரஜன் வாகனங்களை பயன்படுத்தும் நடைமுறை இந்தியாவில் வணிக ரீதியில் இன்னும் சோதிக்கப்படவில்லை. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

    • சுதந்திரத்திற்குப் பிறகு காங்கிரஸை கலைக்க வேண்டும் என்று மகாத்மா காந்தி கூறியிருந்தார்.
    • காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு மத்திய மந்திரிகள் பதிலடி

    சுதந்திர போராட்டத்தில் பாஜகவினர் வீட்டில் உள்ள நாய் கூட நாட்டுக்காக இறந்ததா? என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பி இருந்தார். ஆனால் பாஜகவினர் தங்களை தேசபக்தர்கள் என்று கூறிக் கொள்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

    எல்லையில் அத்துமீறும் சீனாவை கண்டு கொள்ளாமல், நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் குறித்து விவாதம் நடத்தாமல் அந்த கட்சி தப்பிக்க முயற்சிப்பதாகவும் அவர் கூறியிருந்தார். பாஜக அரசு சிங்கம் போல் பேசுகிறது, ஆனால் எலி போல் செயல்படுகிறது என்றும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

    ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தின் போது ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய கார்கேவின் இந்த பேச்சு, பாராளுமன்றத்தில் அமளியை ஏற்டுத்தியது. இந்நிலையில் கார்கேவின் கருத்திற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி, தற்போதைய காங்கிரஸ் அசல் அல்ல, இது போலி தலைவர்கள் நிறைந்த இத்தாலி காங்கிரஸ் என்று விமர்சித்தார். அசல் காங்கிரசில் இருந்த சுபாஷ் சந்திரபோஸ், பாலகங்காதர திலகர், சர்தார் படேல் போன்ற தலைவர்கள் விவகாரத்தில் தற்போதைய காங்கிரஸ் எப்படி நடந்து கொண்டது என்பதை நாம் அனைவரும் அறிவோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    சுதந்திரத்திற்குப் பிறகு காங்கிரஸைக் கலைக்க வேண்டும் என்று மகாத்மா காந்தி கூறியதை அவர் நினைவு கூர்ந்தார். சுதந்திரப் போராட்டத்தின் பாரம்பரியம் குறித்து எதிர்க்கட்சிகள் கூறுவது தவறு என்றும், தற்போதைய போலி காங்கிரசின் தலைவர் ஒரு ரப்பர் ஸ்டாம்ப் என்றும் அவர் தெரிவித்தார்.

    காங்கிரஸ் தலைவர் கார்கே தவறான வார்த்தைகளைப் பயன்படுத்துவதாகவும், அவரால் இவ்வளவு கீழ்த்தரமாக பேச முடியும் என்பதை யாரும் நம்ப முடியாது என்றும் மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு குறிப்பிட்டார்.

    நமது ராணுவ வீரர்களுக்கு எதிராக ராகுல்காந்தியும் இழிவான வார்த்தைகளை பயன்படுத்தியதாக கூறிய மற்றொரு மத்திய மந்திரி அஸ்வனி குமார் சௌபே, இதுபோன்ற அற்பமான கருத்துக்கள் காங்கிரஸ் பாத யாத்திரையை சவ யாத்திரையாக மாற்றும் என்றும் தெரிவித்துள்ளார்.

    • பல்வேறு உலக நாடுகள் சைக்கிளை அதிக அளவில் பயன்படுத்துகின்றன.
    • இந்தியாவில் ஏழையின் வாகனமாக சைக்கிள் கருதப்படுகிறது.

    பூமியை காப்போம், வாழ்வை காப்போம் என்ற தலைப்பில் சைக்லத்தான் போட்டிக்கு தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு ஆணையம் ஏற்பாடு செய்திருந்தது. டெல்லியில் இந்த போட்டியை மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தொடங்கி வைத்தார். சமூக ஆர்வலர்கள் உள்பட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர். 


    அப்போது பேசிய மத்திய மந்திரி கூறியுள்ளதாவது: மக்கள் தங்கள் உடல் நலம் மற்றும் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க வேண்டும். காற்று மாசுப்பாட்டை ஏற்படுத்தாத வாகனம் சைக்கிள். சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதிலும் அது முக்கியப் பங்காற்றுகிறது. பல்வேறு உலக நாடுகள் சைக்கிளை அதிக அளவில் பயன்படுத்துகின்றன. இந்தியாவில் ஏழையின் வாகனமாக சைக்கிள் கருதப்படுகிறது.

    வசதி படைத்தவர்களும் சைக்கிளை பயன்படுத்த வேண்டும். நமது வாழக்கையில் சைக்கிள் ஓட்டுவதை ஒரு அங்கமாக மாற்றி பசுமை பூமியை உருவாக்க வேண்டும். உடற்பயிற்சிகள் மூலம் பல்வேறு நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளமுடியும். இதனால் உடல் ஆரோக்கியம் பெறுவதுடன், மன வலிமையும் பெற முடியும் என்பதை நாம் அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • பயறு வகைகளின் உமி, தவிடு மீதான 5% வரி ரத்து செய்யப்படுகிறது.
    • ஆன்லைன் விளையாட்டு மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பு குறித்து விவாதிக்கப்படவில்லை.

    டெல்லியில் இருந்து காணொலிக் காட்சி மூலம் 48 ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமை தாங்கினார். மத்திய நிதித்துறை இணை மந்திரிகள் பங்கஜ் சௌத்ரி மற்றும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் நிதியமைச்சர்கள், மத்திய நிதியமைச்சகம் மற்றும் மாநிலங்களின் மூத்த அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.

    ஜிஎஸ்டியில் இணக்கத்தை உருவாக்குவதற்கும் வர்த்தக வசதி நடவடிக்கையாகவும் ஜிஎஸ்டி வரிவிகிதங்களில் மாற்றங்கள் தொடர்பான பரிந்துரைகள் இந்த கூட்டத்தில் வழங்கப்பட்டது. அதன்படி பயறு வகைகளின் உமி, தவிடு மீதான 5% வரி ரத்து செய்யப்படுகிறது. பெட்ரோலுடன் கலப்பதற்கு சுத்திகரிப்பு நிலையங்களுக்கு வழங்கப்படும் எத்தைல் ஆல்கஹால் மீதான வரி 18.5% இருந்து 5% ஆகக் குறைக்கப்படுகிறது. 


    நான்கு நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் மோட்டார் வாகனங்களுக்கு 22% என்ற உயர் அளவான இழப்பீட்டு வரி விகிதம் பொருந்தும். ரூபே கடன் அட்டைகள், குறைந்த மதிப்பிலான பரிவர்த்தனைகளுக்குரிய பிம் யுபிஐ ஆகியவற்றை ஊக்கப்படுத்தும் திட்டத்தின் கீழ் மத்திய அரசால் வங்கிகளுக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகைக்கு வரிவிதிப்பு கிடையாது. புதிதாக எந்த பொருள் மீது ஜிஎஸ்டி வரி விதிக்கப்படவில்லை.

    ஜிஎஸ்டியில் பதிவு செய்யாதவர்களுக்கு சேவைக் குறைபாடுகள் ஏற்பட்டால் பணத்தைத் திரும்பப் பெறுகின்ற நடைமுறை இப்போது இல்லை. எனவே இதில் மாற்றம் கொண்டுவர சிஜிஎஸ்டி விதிகள் 2017ல் திருத்தம் செய்ய ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரை செய்தது. சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு மாநிலங்களுக்கு இடையே இ-வணிக ஆப்ரேட்டர்கள் மூலம் பொருள்கள் மற்றும் சேவைகள் வழங்க இந்த கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. 


    நேரமின்மை காரணமாக பான் மசாலா மற்றும் குட்கா வணிகங்களில் வரி ஏய்ப்பைத் தடுக்கும் பிரச்சினை இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படவில்லை. மேலும் ஆன்லைன் விளையாட்டு மற்றும் கேசினோக்கள் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பு குறித்தும் விவாதிக்கப்படவில்லை என்று மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • போதைப்பொருட்களுக்கு எதிரான நடவடிக்கை முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது.
    • போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்க மாநில தலைநகர்  கொல்கத்தாவில் நடைபெற்ற 25-வது கிழக்கு மண்டலக் கவுன்சில் கூட்டம் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா தலைமையில் நடைபெற்றது. இதில் மேற்கு வங்கம், ஜார்கண்ட் மாநில முதலமைச்சர்களும், பீகார் மற்றும் ஒடிஸா மாநில துணை முதலமைச்சர்களும், உள்துறை அமைச்சக உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய அமித்ஷா கூறியுள்ளதாவது: 


    கடந்த 8 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், மண்டலக் கவுன்சில் கூட்டங்களில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவகாரங்கள் குறித்த விவாதம் நடத்தப்பட்டு, அவற்றில் 93 சதவீத விவகாரங்களுக்குத் தீர்வு கண்டிருப்பது மிகப்பெரிய சாதனை. பல்வேறு விவகாரங்களுக்குத் தீர்வு கிடைப்பதற்கு, தொடர்ச்சியாகக் கூட்டங்கள் நடத்தப் பட்டதே இதற்கு காரணம். மத்திய - மாநில அரசுகளுக்கு இடையேயான ஒருமித்த ஒத்துழைப்புக்கு , மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் செயலகங்களே முக்கியப் பங்கு வகிக்கின்றன.

    கிழக்கு மண்டலங்களில் உள்ள மாநிலங்களின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அடுத்த 25 ஆண்டுகளில், நாட்டின் வளர்ச்சியில், கிழக்கு மண்டல மாநிலங்கள் முக்கியப் பங்கு வகிக்கும்.கிழக்கு மண்டலத்தில் இருந்து இடதுசாரி தீவிரவாதம் பெருமளவுக்கு ஒழிக்கப்பட்டுள்ளது.

    இதனை முற்றிலும் ஒழிக்க தீர்க்கமான வழிமுறைகள் உருவாக்கப்படும். கிழக்கு மண்டல மாநிலங்களில், இடதுசாரித் தீவிரவாதம் மீண்டும் தலைதூக்காமல் கண்காணிக்கவும், மற்ற மாநிலங்களுக்கு நிகரான வளர்ச்சியை அந்த மாநிலங்கள் எட்டவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதேபோல், போதைப்பொருட்கள் நடமாட்டத்தைத் தடுக்க, மாவட்ட அளவிலான அமைப்புகள் உருவாக்கப்படுவதை முதலமைச்சர்கள் உறுதி செய்ய வேண்டும்.

    போதைப்பொருட்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள், தற்போது முக்கியக் கட்டத்தை எட்டியிருக்கின்றன. செயற்கை நுண்ணறிவு நுட்பத்தின் உதவியுடன், போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×