search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விநாயகர் சிலை"

    • செங்கோட்டை நகரில் மட்டும் சுமார் 37 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடந்து வருகிறது.
    • ஊர்வலம் வரும் இடங்களில் சி.சி.டி.வி. காமிராக்கள் மூலம் கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    செங்கோட்டை:

    தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி, விஜர்சன ஊர்வ லங்கள் ஒவ்வொரு ஆண்டும் விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

    37 விநாயகர் சிலைகள்

    கடந்த 30 ஆண்டுகளாக இந்த பகுதியில் விநாயகர் சதுர்த்திக்கு சிலைகள் வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றது. இந்த ஆண்டும் செங்கோட்டை நகரில் மட்டும் சுமார் 37 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு அவை முறையே பள்ளிமேட்டு பகுதி, காமாட்சி அம்மன் கோவில், வீரகேரள விநாயகர் கோவில், பூதத்தார் கோவில், காளியம்மன் கோவில் திடல், ஓம் காளி திடல், வம்பளந்தான் முக்கு, செல்வவிநாயகர் கோவில், எஸ்.ஆர்.கே. தெரு, மேலூர் அப்பா மாடசாமி, பள்ளத்தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடந்து வருகிறது.

    இந்த சிலைகள் அனைத்தும் இன்று ஓம்காளி திடலில் இருந்து புறப்பட்டு வம்பளந்தான் முக்கு, செல்வ விநாயகர் கோவில் தெரு, தாலுகா அலுவலக முக்கு, மேலூர், பெரிய பள்ளிவாசல் வழியாக மேலபஜார், பூதத்தார் கோவில், காசுகடை பஜார், கீழ பஜார், காவல்நிலையம் உள்ளிட்ட பகுதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு செங்கோட்டை குண்டாறு அணை பகுதியில் விஜர்சனம் செய்யப்பட உள்ளது.

    பாதுகாப்புடன் விஜர்சனம்

    விநாயகர் சிலைகள் விஜர்சனத்திற்காக எந்தவித அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் உத்தரவின்பேரில் 2 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 8 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 21 இன்ஸ்பெக்டர்கள் மேற்பார்வையில் மொத்தம் 1,200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட உள்ள அனைத்து இடங்களிலும் சுமார் 65 சி.சி.டி.வி. காமிராக்கள் மூலம் கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் ட்ரோன் காமிராக்கள் மூலமாகவும் ஊர்வலம் செல்லும் விநாயகர் சிலைகளை கண்காணிக்க ஏற்பாடு தயார் நிலையில் உள்ளது. தொடர்ந்து குண்டாற்றில் அவை விஜர்சனம் செய்யபடுகிறது.

    கிராமப்புற சிலைகள்

    செங்கோட்டையை அடுத்துள்ள வல்லம், பிரானூர், தேன்பொத்தை ஆகிய 3 இடங்களில் வைக்கப்பட்ட சிலைகள் வழிபாடுகளுக்கு பின் விஜர்சனம் செய்யபடுகிறது. புளியரை, கேசவபுரம், லாலா குடியிருப்பில், தெற்கு தெரு மற்றும் வடக்குதெரு ஆகிய 5 இடங்களிலும், பண்பொழியில் தைக்கா தெரு, தெற்கு தெரு, தெற்கு ரதவீதி, பேட்டை தெரு, தர்மர் கோவில், அரசமர தெரு, திட்டு தெரு உள்ளிட்ட 11 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு இன்று போலீஸ் பாதுகாப்புடன் அரிகரா நதியில் விஜர்சனம் செய்யப்பட உள்ளது.

    இதேபோன்று தென்காசி யில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் அனைத்தும் இன்று மாலை ஆற்றில் கரைக்கப்பட உள்ளது.

    கடையநல்லூரில் 31 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்ப ட்டுள்ளது. மேல கடையநல்லூர் கண்ணார் தெரு, கிருஷ்ணா புரத்தில் மகாராஜ கணபதி, மறுகால் தெரு, வடக்குவா செல்வி அம்மன் கோவில், மாவடிக்கால், முத்து கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட இடங்களிலும் விநாயகர் சிலைகள் வைக்கப்ப ட்டுள்ளது. புளியங்குடியில் 35 இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு ள்ளது.

    நெல்லை-தூத்துக்குடி

    நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை மொத்தம் 222 இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதில் 5 சிலைகள் கரைக்கப்பட்டு விட்டன. மாநகரில் 76 இடங்களில் சிலைகள் பிர திஷ்டை செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும் வருகிற 24-ந்தேதி கரைக்கப்படுகிறது.

    இதனையொட்டி மாவட்டம் முழுவதும் சுமார் 1,000 போலீசாரும், மாநகரில் 500 போலீசாரும் சிலைகளை பாதுகாத்து வருகின்றனர். களக்காட்டில் தோப்புத்தெரு, சாலை புதூர், கீழப்பத்தை, வியாசராஜபுரம், மாவடி, மலையடிபுதூர், பொத்தையடி பகுதியில் 14 சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. சிதம்பரபுரம், மூங்கிலடி உள்ளிட்ட பகுதிகளில் 15 இடங்களிலும், இடையன்குளம், கீழ உப்பூரணி, மஞ்சவிளை, பத்மநேரி உள்ளிட்ட பகுதிகளில் 24 இடங்களிலும் என மொத்தம் 53 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இவை உவரி கடல், பாபநாசம் தாமிரபரணி ஆறுகளில் விஜர்சனம் செய்யப்படுகிறது.

    திருச்செந்தூர் நகர இந்து முன்னணி சார்பில் வ.உ.சி. திடலில் 7 அடி உயரம் கொண்ட கல்வி கணபதி சிலையும், சுப்பிரமணியபுரம், ஜீவாநகர், சண்முகபுரம், முத்துநகர், முத்துமாலையம்மன் கோவில் தெரு, அண்ணா காலனி கோவில் தெரு உள்ளிட்ட 8 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.

    உடன்குடி சீர்காட்சி, தைக்கா ஊர், பரமன்குறிச்சி, வட்டன்விளை, விஜய நாராயணபுரம், முத்து கிருஷ்ணாபுரம், அம்மன்புரம், முருகேசபுரம், குலசேக ரன்பட்டினம், லட்சுமிபுரம், வேப்பங்காடு, அரசர் பேட்டை கிராமங்களில் சுமார் 500-க்கும் மேற்பட்ட வீடுகளில் விநாயகர் சிலைகள் வைத்து குடும்பத்துடன் வழிபாடு செய்து வருகின்றனர்.

    • வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட 8 அடி உயரம் கொண்ட விநாயகர் சிலை வைத்து பிரசாதம் படைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
    • முன்னதாக ஏற்காடு செல்வ விநாயகர் கோவில் விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை மற்றும் பூஜைகள் செய்து வழிபட்டனர்.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காடு டவுன் பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட 8 அடி உயரம் கொண்ட விநாயகர் சிலை வைத்து பிரசாதம் படைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. முன்னதாக ஏற்காடு செல்வ விநாயகர் கோவில் விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை மற்றும் பூஜைகள் செய்து வழிபட்டனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதேபோல ஏற்காடு லாங்கில்பேட்டை முத்துமாரியம்மன் கோவில், ஜெரினாகாடு பெரியமாரியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டது.

    • 5 வழித்தடங்களில் விநாயகர் சிலை ஊர்வலம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
    • தழுதாலி குப்பம் மற்றும் கடப்பாக்கம் கடற்கரை என 4 இடங்களில் சிலைகளை கரைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    செங்கல்பட்டு:

    விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி பல்வேறு இடங்களில் விதவிதமான விநாயகர் சிலைகள் வழிபாட்டுக்கு வைக்கப்பட்டு உள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தம் 503 விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி அளிக்கப்பட்டது. இந்த சிலைகள் நாளை முதல் நீர் நிலைகளில் கரைக்கப்பட உள்ளது.

    இதையொட்டி மாவட்டத்தில் 5 வழித்தடங்களில் விநாயகர் சிலை ஊர்வலம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய் பிரணீத் வெளியிட்டு உள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    விநாயகர் சிலை பாதுகாப்புக்கு செங்கல்பட்டு மாவட்ட காவல் எல்லையில் வைத்து பிரதிஷ்டை செய்த சிலைகளை நாளை 20-ந் தேதி, 22.09.23 மற்றும் 24.09.2023 ஆகிய மூன்று நாட்களில் செங்கல்பட்டு மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட மாமல்லபுரம் கடற்கரை, கடலூர் குப்பம், தழுதாலி குப்பம் மற்றும் கடப்பாக்கம் கடற்கரை என 4 இடங்களில் சிலைகளை கரைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    இந்த சிலைகளில் 248 சிலைகள் கீழ்க்கண்ட 5 வழித்தடங்களில் ஊர்வலமாக எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 255 சிலைகள் சம்மந்தப்பட்ட கிராமங்களின் அருகில் உள்ள ஏரிகள், குளங்களில் கரைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் இருந்து திருக்கழுக்குன்றம் வழியாக மாமல்லபுரம் கடற்கரை கொண்டு செல்லப்படும்.

    மதுராந்தகத்தில் இருந்து முதுகரை சந்திப்பு வழியாக கடலூர் குப்பம் கொண்டு செல்லப்படும். மேல் மருவத்தூரில் இருந்து சித்தாமூர் வழியாக தழுதாலிகுப்பம் கொண்டு செல்லப்படும். அச்சிறுப்பாக்கத்தில் இருந்து சூனாம்பேடு வழியாக கடப்பாக்கம் கடற்கரை கொண்டு செல்லப்படும். தொழப்பேடுல் இருந்து கயப்பாக்கம் வழியாக கடப்பாக்கம் கடற்கரை கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    மேலும், பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழாவின் போது ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படின் அத்தகவல்களை காவல் கண்காணிப்பாளரின் கட்டுப்பாட்டில் உள்ள 72001 02104 மற்றும் 044-2954 0888 ஆகிய பிரத்யேக எண்ணிற்கு தகவல் தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. தகவல் தருபவர்களின் விவரம் பாதுகாக்கப்படும். குற்றவாளிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • போலீசார் தீவிர கண்காணிப்பு
    • காலை, மாலை இருவேளைகளிலும் பூஜைகள் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    நாகர்கோவில் :

    விநாயகர் சதுர்த்தி விழா குமரி மாவட்டம் முழுவதும் வெகு விமர்சையாக கொண் டாடப்பட்டது. இந்து முன் னணி, இந்து மகா சபா, சிவசேனா, பாரதிய ஜனதா மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் கோவில்களிலும், பொது இடங்களிலும், வீடுகளிலும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளன.

    இந்து முன்னணி சார்பில் ஏற்கனவே பிரதிஷ்டை செய்யப்பட்ட 14 இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய போலீசார் அனுமதி மறுத்துள்ள னர். மற்ற இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு நேற்று இரவு பூஜைகள் நடந்தது.

    இன்று 2-வது நாளாக காலையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு பூஜைகள் செய்யப்பட்டது. அவல், பொரி, சுண்டல், சர்க்கரை பொங்கல் படைத்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள இடங்களில் 2 தன்னார்வலர்கள் கண் காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அந்தந்த பகுதியில் உள்ள போலீசாரும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இரவு நேரங்களில் 2 ஷிப்டுகளாக போலீசார் ரோந்து சுற்றி வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் போலீசார் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ள பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார் கள். பிரதிஷ்டை செய்யப் பட்ட விநாயகர் சிலை களுக்கு தினமும் காலை, மாலை இருவேளைகளிலும் பூஜைகள் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் வருகிற 22, 23, 24 ஆகிய தேதிகளில் ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைக்கப்படுகிறது.

    சிலைகள் கரைப்பதற்கு போலீசார் பல்வேறு கட்டுப் பாடுகளை விதித்துள்ளனர். 4 சக்கர வாகனங்களில் மட்டுமே விநாயகர் சிலை களை எடுத்துச்செல்ல வேண்டும். கூம்பு வடிவ ஒலி பெருக்கி பயன்படுத்தக் கூடாது. பட்டாசு வெடிக்க கூடாது. அனுமதித்த வழித் தடத்தில் மட்டுமே ஊர்வலம் செல்ல வேண்டும் என்பது உள்பட பல்வேறு கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்டுள் ளது.

    விநாயகர் சிலை கரைப் பதற்கு மாவட்ட நிர்வாகம் 10 இடங்களில் அனுமதி வழங்கி உள்ளது. அங்கு அதற்கான முன்னேற்பாடு பணிகளை மேற்கொண்டுள் ளனர். மின்விளக்கு வசதி உட்பட அனைத்து ஏற்பாடுகளும் அங்கு செய்யப்பட்டு வருகிறது.

    • சிலையை கரைத்து விட்டு பொதுமக்கள் கரையேறிய நிலையில் சங்கர் மட்டும் காணவில்லை.
    • போலீசார் மற்றும் தீயணைப்புத்துறை வீரர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    ஆப்பக்கூடல்:

    ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் பகுதியில் பொதுமக்கள் சார்பில் 3.5 அடி கொண்ட விநாயகர் சிலை ஒன்று வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டது.

    அதன் பிறகு இந்த விநாயகர் சிலையை பொதுமக்கள் இரவு ஊர்வலமாக எடுத்து வந்து ஆப்பக்கூடல் தண்ணீர் டேங்க் ஈஸ்வரன் கோவில் அருகே உள்ள பவானி ஆற்றில் இறங்கி கரைத்து உள்ளனர்.

    இந்த விநாயகர் சிலையை கரைக்க அந்தியூர் தாலுகா, வேம்பத்தி பொதிய மூப்பனூரை சேர்ந்த பெரியசாமி என்பவரது மகன் சங்கர் (18) என்பவரும், அவருடன் மேகநாதன், தம்பிராஜ், வேங்கைராஜ், ராஜா, ரமேஷ் உள்ளிட்ட நண்பர்களும் சிலை ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

    இந்நிலையில் சிலையை கரைத்து விட்டு பொதுமக்கள் கரையேறிய நிலையில் சங்கர் மட்டும் காணவில்லை. உடன் வந்த நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் தேடி பார்த்து உள்ளனர்.

    ஆனால் எங்கு தேடியும் சங்கர் கிடைக்காததால் பவானி ஆற்றில் நீரில் மூழ்கி இருக்கலாம்? என்று கருதி உடன் வந்தவர்கள் ஆப்பக்கூடல் போலீசார் மற்றும் பவானி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தன் பேரில் இரவு முழுவதும் சங்கரை தேடியுள்ளனர்.

    பின்னர் இன்று காலை முதல் ஆப்பக்கூடல், பெருந்துறை, கவுந்தப்பாடி வழியாக செல்லும் பவானி ஆற்றங்கரையோர பகுதிகளில் சங்கரை போலீசார் மற்றும் தீயணைப்புத்துறை வீரர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    விநாயகர் சிலைகளை ஆற்றங்கரையில் இறங்கி கரைக்கும் போது பொதுமக்கள் மிகுந்த பாதுகாப்புடனும் கவனத்துடனும் இருக்க வேண்டும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    • இருவரின் சடலங்களையும் போலீசர் கைப்பற்றியுள்ளனர்.
    • இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம் மேட்டூர் அருகே காவிரியில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.

    மேட்டூர் அருகே தொட்டில்பட்டி பகுதியில் அணையின் உபரி நீர் கால்வாயில் விநாயகர் சிலையை கரைக்கச் சென்ற இரு சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளனர்.

    செந்தில் என்பவரின் மகன் சந்தோஷ் (14), சிவராமன் என்பவரின் மகன் நந்தகுமார் (14) இருவரின் சடலங்களையும் போலீசர் கைப்பற்றியுள்ளனர்.

    விநாயகர் சிலை கரைப்பதற்காக காவிரியில் இறங்கியபோது இந்த விபரீதம் நேர்ந்துள்ளது.

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • "பிளாஸ்டர் ஆப் பாரீஸ்" ரசாயனம் பயன்படுத்தப்படாத சிலைகள் என சிலை வைத்துள்ள அமைப்பினர் கூறி அனுமதி வாங்கியுள்ளனர்.
    • நான்கு சக்கர வாகனத்தில் மட்டுமே கொண்டு வரவேண்டும்.

    மாமல்லபுரம்:

    இன்று விநாயகர் சதூர்த்தி கொண்டாட வைக்கப்படும் சிலைகளை மாமல்லபுரம் கடலில் வரும் 24ம் தேதி கரைக்க போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர்., செங்கல்பட்டு மாவட்டத்தில் வைக்கப்பட்டுள்ள 365 சிலைகளும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவின்படி "பிளாஸ்டர் ஆப் பாரீஸ்" ரசாயனம் பயன்படுத்தப்படாத சிலைகள் என சிலை வைத்துள்ள அமைப்பினர் கூறி அனுமதி வாங்கியுள்ளனர்.

    இந்த சிலைகளை செங்கல்பட்டு மாவட்ட கடலோர பகுதிகளான மாமல்லபுரம், சதுரங்கபட்டினம், கடலூர், கடப்பாக்கம், பெரியகுப்பம் பகுதிகளுக்கு பக்தர்கள் கரைக்க வரும் போது சிலைகள் பரிசோதனை செய்யப்படும் அதில் ரசாயன கலவை இருப்பது தெரியவந்தால் கடலில் கரைக்க அனுமதி கிடையாது. அதேபோல் சிலைகளை மாட்டு வண்டி, மீன்பாடி ஆட்டோ, ரிக்ஷா, தள்ளுவண்டி போன்றவைகளில் கொண்டுவரவும் அனுமதி கிடையாது. டிராக்டர், மினிலாரி, வேன் போன்ற நான்கு சக்கர வாகனத்தில் மட்டுமே கொண்டு வரவேண்டும் என செங்கல்பட்டு மாவட்ட போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

    • அனைத்து இடங்களிலும் பல வண்ண விநாயகர் சிலைகள் வைத்து விழா விமரிசையாக நடந்து வருகிறது.
    • செங்கல்பட்டு மாவட்டத்தில் 313 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு இருந்தது.

    விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஏராளமானோர் தங்கள் வீடுகளில் சிறிய விநாயகர் சிலைவைத்து வழிபாடு நடத்தினர். இதேபோல் பொது இடங்களில் இந்து அமைப்பினர் சார்பில் பிரமாண்ட விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.

    காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மொத்தம் 1456 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அனைத்து இடங்களிலும் பல வண்ண விநாயகர் சிலைகள் வைத்து விழா விமரிசையாக நடந்து வருகிறது.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 313இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க போலீஸ் சார்பில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஏகாம்பரநாதர் கோயில், குமரகோட்டம் முருகன் கோவில், காமாட்சி அம்மன் கோவில்களில் இன்று அதிகாலை முதல் சிறப்பு அபிஷேகம், ஆராதனை மற்றும் பூஜைகள் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். காஞ்சிபுரம் வேதாச்சலம் நகர் பகுதியில் 13 அடி உயரம் கொண்ட விநாயகர் சிலை வைக்கப்பட்டது.

    காமாட்சியம்மன் சன்னதி தெருவில் உள்ள ஏலேல சிங்க விநாயகர் கோவிலில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது.விநாயகருக்கு ரூபாய் நோட்டுகளால் ரூ.15 லட்சத்தில் மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. அதேபோல் காஞ்சிபுரம்-வந்தவாசி நெடுஞ்சாலையில் உள்ள உக்கம்பெரும்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள நட்சத்திர விருட்ச விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. விநாயக பெருமானுக்கு பலவிதமான நறுமண பொருட்களால் கலச அபிஷேகமும். சிறப்பு அலங்காரமும், 27 நட்சத்திர அதிதேவதைகள், ராகு, கேது, சனீஸ்வர பகவான்களுக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது. தொடர்ந்து லட்சர்ச்சனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டனர்.

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு காஞ்சிபுரம் ராஜாஜி மார்க்கெட், நேரு மார்க்கெட் மற்றும் தேரடி பகுதிகளில் விநாயகர் சிலை, பூ, பழங்கள், எருக்கம்பூ மாலை, அருகம்புல் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை களைகட்டியது.

    வழிபாட்டுக்கு வைக்கப்படும் விநாயகர் சிலைகளை 5 நாட்களில் மாவட்ட நிர்வாகத்தால் அனுமதி வழங்கப்பட்டுள்ள காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை, சர்வதீர்த்த குளம் ஆகிய 2 இடங்களில் மட்டுமே கரைக்க வேண்டும் எனவும், அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே விநாயகர் சிலை ஊர்வலம் செல்லவேண்டும். இதை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து உள்ளனர்.

    திருவள்ளூரில் கடந்த ஆண்டைவிட குறைவான இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்க போலீசார் அனுமதி அளித்து இருந்தனர். திருவள்ளூரில் 111, திருத்தணியில் 121, ஊத்துக்கோட்டையில் 209, பொன்னேரியில் 46, கும்மிடிப்பூண்டியில் 153 என மொத்தம் 640 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க போலீசார் அனுமதி அளித்து இருந்தனர்.

    சிலைகளுக்கு அந்தந்த பகுதி போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

    இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் 313 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு இருந்தது. கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. வீடுகளில் வைத்து வழிபட சிறிய வகை விநாயகர் சிலைகளை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.

    விநயாகர் சதுர்த்தியை முன்னிட்டு திருத்தணி மா.பொ.சி. சாலை மார்க்கெட் பூஜை பொருட்கள் விற்பனை களைகட்டியது. ஏராளமான பொதுமக்கள் பூ, மாலை, பழங்கள் உள்ளிட்ட விநாயகருக்கு படையலிடும் பூஜை பொருட்களை வாங்கி சென்றனர். இதனால் மார்க்கெட்டில் வழக்கத்தை விட இன்று காலை கூட்டம் அதிகாமாக காணப்பட்டது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. களி மண்ணால் செய்யப்பட்ட சிறிய விநாயகர் சிலைகள் விற்பனை அதிகம் நடைபெற்றது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று அதிகாலையில் இருந்தே பக்தர்கள் அந்தந்த பகுதியில் உள்ள விநாயகர் கோவில்களில் வழபட்டு சென்றனர்.

    மாமல்லபுரம் கடலில் வருகிற 24-ந் தேதி விநாயர் சிலைகளை கரைக்க போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர்.மாமல்லபுரம், சதுரங்கபட்டினம், கடலூர், கடப்பாக்கம், பெரியகுப்பம் பகுதிகளுக்கு பக்தர்கள் சிலைகளை கரைக்க வரும் போது சிலைகள் பரிசோதனை செய்யப்படும். அதில் ரசாயன கலவை இருப்பது தெரியவந்தால் கடலில் கரைக்க அனுமதி கிடையாது. அதேபோல் சிலைகளை மாட்டு வண்டி, மீன்பாடி ஆட்டோ, ரிக் ஷா, தள்ளுவண்டி போன்றவைகளில் கொண்டுவரவும் அனுமதி கிடையாது. டிராக்டர், மினிலாரி, வேன் போன்ற நான்கு சக்கர வாகனத்தில் மட்டுமே கொண்டு வரவேண்டும் என்று செங்கல்பட்டு மாவட்ட போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

    • இருதரப்பினரும் இன்று விநாயகர் சிலை வைத்து பிரதிஷ்டை செய்யக்கூடாது என போலீசார் தடை விதித்துள்ளனர்.
    • போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மரக்காணம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஒன்றியத்திற்கு உட்பட்டது கூனிமேடு ஊராட்சி. இங்கு கிழக்கு கடற்கரை சாலையோரம் உள்ள விநாயகர் கோவிலில் ஒரு பிரிவினர் ஆண்டுதோறும் விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்வதும், அதனைத் தொடர்ந்து விநாயகர் கோவிலுக்கு திருவிழா நடத்துவதும் வழக்கமாக உள்ளது.

    இதேபோல் இவர்கள் வைக்கும் விநாயகர் சிலைக்கு அருகில் அதே ஊரை சேர்ந்த மற்றொரு தரப்பினரும் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்வதும் வழக்கமாக இருந்து வருகிறது.

    இந்நிலையில் நேற்று இரவு இரு தரப்பினரும் வழக்கம்போல் தாங்கள் விநாயகர் சிலை வைக்கும் இடத்தில் கொட்டகை அமைக்க ஏற்பாடு செய்தனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு மோதிக் கொள்ளும் அபாயம் உருவானது.

    இது பற்றி தகவல் அறிந்த மரக்காணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரு தரப்பினரையும் சமாதானம் செய்து முறையாக விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யுமாறு கூறினர்.

    ஆனால் போலீசாரின் கோரிக்கையை அவர்கள் ஏற்க மறுத்துள்ளனர். இதனால் இருதரப்பினரும் இன்று விநாயகர் சிலை வைத்து பிரதிஷ்டை செய்யக்கூடாது என போலீசார் தடை விதித்துள்ளனர்.

    இந்த தடையை மீறி யாரும் அப்பகுதியில் விநாயகர் சிலை வைத்து பிரதிஷ்டை செய்யாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    மேலும் இது சம்பந்தமாக இரு தரப்பையும் அழைத்து மரக்காணம் தாசில்தார் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தவும் போலீஸ் சார்பில் உரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இச்சம்பவத்தால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட உள்ளனர்.
    • மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக அவர்களுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    கிருஷ்ணகிரி:

    நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட உள்ளனர். இந்த நிலையில் கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள இந்துக்களுக்கு முன்னாள் கவுன்சிலர் அஸ்லம் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட முஸ்லீகள் விநாயகர் சிலை மற்றும் பூஜை பொருட்களான மாலை, ஆப்பிள், ஆரஞ்சு, வாழைப் பழம், வெற்றிலை, பாக்கு, கற்பூரம் உள்ளிட்ட பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    கிருஷ்ணகிரி அடுத்த ராசுவீதி பகுதியில் உள்ள வீடுகளுக்கு சிலை மற்றும் பூஜை பொருட்களை அவர்கள் வழங்கினார்கள். மேலும் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக அவர்களுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    இந்நிகழ்ச்சியின் போது ரியாஸ், நதிம், அஷ்ரப், ஏஜாஸ், ஜாபர் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் 312 இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்யப்படுகிறது.
    • இந்து முன்னணி மாவட்ட தலைவர் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கான முன்னேற்பாடு பணிகளை செய்து வருகிறார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு இடங்களில் 312 சிலைகளை வைத்து சிறப்பு வழிபாடு செய்தனர். இன்று காலை கோவில்களில் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு விநாயகரை தரிசனம் செய்தனர்.

    விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி அனைத்து விநாயகர் கோவில்களும் இன்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம், மகா தீபாராதனைகள் நடைபெற்றன.

    ராமநாதபுரம் கோட்டை வாசல் விநாயகர் கோவில், மண்டபம், தேவிபட்டினம், கீழக்கரை சக்தி விநாயகர் கோவில், ஏர்வாடி வெட்டமனை, தொத்தன் மகன்வாடி உள்பட பல்வேறு இடங்களில் உள்ள விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது.

    உலக நன்மை வேண்டியும் கல்வி, குடும்பம், திருமண தடை ஆகியவைகள் நீங்கி சிறப்படைய கூட்டுப்பிராத்தனையும் கோவில்களில் நடந்தது. தொடர்ந்து இன்றும் நாளையும் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

    ராமநாதபுரம் போலீஸ் சப் டிவிசனில்-65, பரமக் குடி-67, கமுதி-17, ராமேசு வரம்-103, கீழக்கரை 35, திருவாடானை-14, முது குளத்தூர் போலீஸ் சப் டிவிசனில் 11 என மாவட் டத்தில் மொத்தம் 312 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. சிலைகள் 3 அடி முதல் 9 அடி உயரம் வரையில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

    மக்கள் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை அதிகாலை யிலேயே வாங்கி வந்து வீடுகளில் வைத்து வழிபட்டனர். பின்னர் விநாய கருக்கு உகந்த சுண்டல், கொழுக்கட்டை, கடலை, பொங்கல் அவல், பொரி போன்ற பொருட்களை வைத்து படைய லிட்டனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்க துரை உத்தரவின்படி மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு நேற்று மாலை முதல் போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டனர். போலீசார் விடிய விடிய பாதுகாப்பு பணி மேற்கொண்டனர்.

    இந்து முன்னணி மாவட்ட தலைவர் ராம மூர்த்தி விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கான முன்ஏற்பாடு பணிகளை செய்து வருகிறார்.

    பின்னர் அவர் கூறுகையில், நாளை 19-ந்தேதி ராமேசுவரம், தங்கச்சி மடம், பாம்பன், மண்டபம், பரமக்குடியில் ஊர்வலம் நடக்கிறது. நாளை மறுநாள் 20-ந்தேதி தேவிபட்டினம், திருப்புல்லாணி, ஏர்வாடி, சாயல்குடி, திருப்பாலைக் குடி ஆகிய பகுதிகளில் ஊர்வலம் நடைபெறும் என்றார்.

    • சிலை விநாயகர் சதுர்த்தியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
    • பென்சில் நுனியில் 12 மில்லி மீட்டர் நீளம், 4 மில்லி மீட்டர் அகலத்தில் விநாயகர் சிலையை செதுக்கி உள்ளார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் அனக்கா பள்ளி மாவட்டம், வனப்பள்ளியை சேர்ந்த வாலிபர் ஒருவர் பழங்கால நாணயங்களான அரை அனா, 1 அனா, 10 பைசா, 20 பைசா மற்றும் தற்போது புழக்கத்தில் உள்ள 10 ரூபாய் நாணயங்கள் என 10 ஆயிரம் நாணயங்களை கொண்டு 3 அடி உயரத்தில் விநாயகர் சிலையை வடிவமைத்து உள்ளார்.

    இந்த சிலை விநாயகர் சதுர்த்தியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இது அந்த பகுதியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இதேபோல் நெல்லூர் மாவட்டத்தை சேர்ந்த அமீர்ஜான் என்பவர் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 666 மக்காசோள விதைகளில் அக்ரிலிக் பெயிண்ட்டால் மைக்ரோ பிரஸ்களை கொண்டு விநாயகர் உருவங்களை வரைந்தார்.

    அனக்கா பள்ளி மாவட்டம் நக்கப்பள்ளி மண்டலம் சினொட்டிக் கல்லுவை சேர்ந்த டாக்டர் வெங்கடேஷ் என்பவர் பென்சில் நுனியில் 12 மில்லி மீட்டர் நீளம், 4 மில்லி மீட்டர் அகலத்தில் விநாயகர் சிலையை செதுக்கி உள்ளார்.

    ×