search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கவுதம் அதானி"

    • உலக பணக்காரர்கள் பட்டியலில் அதானி இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
    • கவுதம் அதானி முன்னாள் முதல் மந்திரி உத்தவ் தாக்கரேவை நேரில் சந்தித்து பேசினார்.

    மும்பை:

    சிவசேனா கட்சியில் பிளவு ஏற்பட்டு உத்தவ் தாக்கரே தலைமையில் ஒரு அணியாகவும், ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஒரு அணியும் என இரண்டு பிரிவாக கட்சி உடைந்துள்ளது.

    இந்நிலையில், அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல் மந்திரி உத்தவ் தாக்கரேவை நேரில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள உத்தவ் தாக்கரேவின் இல்லத்தில் நடந்துள்ளது. இருவரும் என்ன பேசிக்கொண்டனர் என்பது குறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியிடப்படவில்லை.

    மாநில அரசியலில் அடுத்தடுத்து பரபரப்பான நிகழ்வுகள் நடந்து வரும் சூழ்நிலையில் அதானி - உத்தவ் தாக்கரே சந்திப்பு அதிக கவனம் பெற்றுள்ளது.

    கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் உலக பணக்காரர்கள் பட்டியலில் அதானி இரண்டாவது இடத்துக்கு முன்னேறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் முதலிடத்தில் நீடிக்கிறார்.
    • முகேஷ் அம்பானிக்கு 11வது இடம் கிடைத்துள்ளது.

    இந்திய தொழில் அதிபரான கவுதம் அதானி, ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் தரவரிசை பட்டியலில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த  லூயிஸ் உய்ட்டன் நிறுவன தலைவர் பெர்னார்ட் அர்னால்ட்டை பின்னுக்கு தள்ளி 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அவரது தற்போதைய சொத்து 137.4 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.

    ஆசிய கண்டத்தைச் சேர்ந்த ஒருவர், உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் மூன்று இடங்களுக்குள் நுழைவது இதுவே முதல் முறை. அதானி குழுமம் துறைமுகங்கள், தளவாடங்கள், சுரங்கம், எரிவாயு, பாதுகாப்பு, விண்வெளி மற்றும் விமான நிலையங்கள் உள்பட பல்வேறு துறைகள் தொடர்பான வணிகங்களில் ஈடுபட்டு வருகிறது.

    உலக பணக்காரர்கள் தரவரிசையில் அமெரிக்கா தொழில் அதிபர் எலோன் மஸ்க் 251 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் முதல் இடத்தில் உள்ளார். 153 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் 2வது இடத்தில் நீடிக்கிறார். 91.9 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி 11வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்த பாதுகாப்புக்கு இவர் மாதம் ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை செலுத்த வேண்டியிருக்கும்.
    • முகேஷ் அம்பானிக்கு மத்திய அரசு கடந்த 2013-ம் ஆண்டு 'இசட் பிளஸ்' பிரிவு பாதுகாப்பு வழங்கியது.

    புதுடெல்லி :

    பிரபல தொழிலதிபரும், அதானி குழும தலைவருமான கவுதம் அதானிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய பாதுகாப்பு அமைப்புகள் அறிக்கை தயாரித்துள்ளன.

    அதன் அடிப்படையில் கவுதம் அதானிக்கு 'இசட்' பிரிவு வி.ஐ.பி. பாதுகாப்பு வழங்க மத்திய அரசு முடிவு செய்தது.

    அவருக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எப்) கமாண்டோக்களின் பாதுகாப்பை அளிக்கும்படி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து, கவுதம் அதானிக்கு கமாண்டோக்கள் பாதுகாப்பு அளித்துவருகின்றனர். அகில இந்திய அளவிலான இந்த பாதுகாப்புக்கு கவுதம் அதானி மாதம் ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை செலுத்த வேண்டியிருக்கும்.

    ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானிக்கு கடந்த 2013-ம் ஆண்டு 'இசட் பிளஸ்' பிரிவு பாதுகாப்பையும், சில ஆண்டுகள் கழித்து அவரது மனைவி நீதா அம்பானிக்கு குறைந்த பிரிவு பாதுகாப்பையும் மத்திய அரசு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

    ×