search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வயநாடு"

    • வயநாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
    • காங்கிரஸ் சார்பில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என்று ராகுல்காந்தி தெரிவித்தார்.

    வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட இடங்களை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோர் பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்கள்.

    இதையடுத்து இப்பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காங்கிரஸ் சார்பில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என்று முன்னாள் வயநாடு எம்.பி. ராகுல்காந்தி தெரிவித்தார்.

    இந்நிலையில், வயநாடு நிலச்சரிவு பேரிடரில் பாதிக்கப்பட்டோரின் துயர் துடைக்கும் விதமாக, 100 வீடுகள் கர்நாடக அரசு சார்பில் கட்டித்தரப்படும் என அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார்.

    வயநாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    • பா.ஜ.க.வுக்கு ஆதரவான நிலையில் உள்ளதால் அவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்துவிட்டனர்.
    • ராகுல் காந்தி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தினால் அதனை காங்கிரஸ் கட்சியினர் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்.

    போடி:

    தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டியில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்த செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஜனநாயகத்தை காப்பதற்காக யார் குரல் கொடுத்தாலும் அவர்களை சி.பி.ஐ., அமலாக்கத்துறை, வருமானவரித்துறை ஆகியவை மூலம் நசுக்கும் பணியில் மத்திய பா.ஜ.க. அரசு ஈடுபட்டு வருகிறது.

    ராகுல் காந்தி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தினால் அதனை காங்கிரஸ் கட்சியினர் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். தெலுங்குதேசம் கட்சி எம்.பி.க்கள் சிலர் வீட்டில் மத்திய பா.ஜ.க. அரசு அமலாக்கத்துறையை ஏவி முன்பு சோதனை நடத்தினர். தற்போது அந்த கட்சியினர் பா.ஜ.க.வுக்கு ஆதரவான நிலையில் உள்ளதால் அவர்கள்மீதான வழக்குகளை ரத்து செய்துவிட்டனர்.


    மக்களவையில் ஜாதி வாரி கணக்கெடுப்பு குறித்து ராகுல்காந்தி பேசியபோது அவருக்கு எதிராக பா.ஜ.க. எம்.பி. அனுராக்தாக்கூர் பேசியது ஆணவத்தின் உச்சம்.

    வயநாடு நிலச்சரிவில் பேரிடர் குறித்து ஏற்கனவே எச்சரித்ததாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் தெரிவித்தார். ஆனால் அவ்வாறு பேரிடர் நடப்பதாக தெரிந்திருந்தால் ஏன் அங்கு தேசிய பேரிடர் மேலாண்மைக்குழு, ராணுவத்தை அனுப்பி வைக்கவில்லை. வயநாடு நிலச்சரிவிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ மனமில்லாமல் பா.ஜ.க. அரசியல் செய்து வருகிறது. ஆனால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அங்கு 2 நாட்களாக முகாமிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி வீடுகளை இழந்தவர்களுக்கு கட்சியின் சார்பில் வீடுகள் கட்டித்தரப்படும் என அறிவித்துள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாயமானவர்களின் செல்போன் எண்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
    • ஆற்றின் கரையோரங்களில் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் வயநாட்டில் கனமழை கொட்டியதன் காரணமாக கடந்த 30-ந்தேதி முண்டகை, சூரல்மலை, மேப்பாடி உள்ளிட்ட 3 இடங்களில் அடுத்தடுத்து மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. மேலும் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்தது.

    இந்த சம்பவத்தில் அந்த இடங்களில் இருந்த நூற்றுக்கணக்கான வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. வீடுகளில் அதிகாலை நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்த பொதுமக்கள் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டனர். மேலும் மண்ணுக்குள் உயிரோடு புதைந்தனர்.

    நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மட்டுமின்றி, ராணுவ வீரர்களும் களமிறக்கப்பட்டனர். ராணுவத்தில் கடற்படை, கப்பற்படை, விமானப்படை என முப்படையை சேர்ந்த வீரர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    கடும் சிரமத்துக்கு மத்தியில் அவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் நிலச்சரிவு மற்றும் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு பலியானவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. தோண்டத் தோண்ட மனித உடல்கள் சிக்கியபடியே இருந்ததால் பலி எண்ணிக்கை உயர்ந்த படி இருந்தது.

    மீட்பு பணிகள் தொடங்கப்பட்டு 4-வது நாளான நேற்று இரவு வரை 336 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. பெரும்பாலான உடல்கள் சின்னா பின்னமான நிலையிலும், உருக்குலைந்த நிலையிலுமே மீட்கப்பட்டன. பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்துபோய் இருந்தது.


    நிலச்சரிவில் சிக்கி மண்ணுக்குள் புதைந்த வீடுகள் இருந்த பகுதிக்கு செல்லவும், அந்த பகுதியை தோண்டி பார்க்க ஜே.சி.பி. உள்ளிட்ட வாகனங்களை கொண்டு செல்லவும் ராணுவ வீரர்கள் விரைந்து கட்டிய தற்காலிக பாலங்கள் உதவின. இதன்மூலம் ஜே.சி.பி. வாகனங்கள் கொண்டு செல்லப்பட்டு அனைத்து இடங்களையும் தோண்டி பார்க்கப்பட்டது.

    மேலும் மண்ணுக்குள் யாரும் உயிருடன் இருக்கிறார்களா? என்பதை கண்டறிய நவீன கருவிகளை ராணுவவீரர்கள் பயன்படுத்தினர். இந்த பணி நேற்று இரவு வரை நடந்த நிலையில் யாரும் உயிரோடு இருப்பதாக சிக்னல் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் அந்த முயற்சி நேற்று இரவு கைவிடப்பட்டது.

    மீட்பு பணியில் ராணுவ வீரர்கள், பேரிடர் மீட்பு படையினர் மட்டுமின்றி தன்னார்வ குழுக்களும் ஈடுபட்டு வருகின்றன. அவர்கள் அனைவரும் ஒருங்கிணைக்கப்பட்டு தனித்தனி குழுக்களாக பிரிக்கப்பட்டு மீட்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மொத்தம் 640 குழுக்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டு உள்ளன. அவர்களது மீட்பு மற்றும் தேடுதல் பணி இன்று 5-வது நாளாக நீடித்தது. நவீன எந்திரங்கள், மேம்படுத்தப்பட்ட சென்சார் கருவிகள் உள்ளிட்ட வைகளை பயன்படுத்தி சேறு மற்றும் இடிபாடுகள் குவிந்து கிடக்கும் பகுதிகளில் தேடுதல் தொடர்கிறது.

    இன்றைய தேடுதலில் மண்ணுக்குள் புதைந்து கிடந்த மேலும் சிலரது உடல்களும் மீட்கப்பட்டன. இதனால் இன்று காலை பலி எண்ணிக்கை 340 ஆக உயர்ந்தது.

    நிலச்சரிவில் உயிர்தப்பியவர்கள் மற்றும் அரசு பராமரித்து வரும் ஆவணங்களின் அடிப்படையில் மாயமானவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்னும் 250 பேரை காணவில்லை என்று கூறப்படுகிறது. அவர்களை தேடும்பணி இன்று 5-வது நாளாக தொடர்ந்தது.


    சம்பவம் நடந்து 4 நாட்களுக்கு மேல் ஆவதால் மாயமானவர்கள் நிலை என்ன ஆகியிருக்கும் என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றே கருதப்படுகிறது. எது எப்படியென்றாலும் கடைசி நபர் மீட்கப்படும் வரை தேடுதல் பணியை தொடர கேரள அரசு முடிவு செய்திருக்கிறது.

    மாயமான 250-க்கும் மேற்பட்டவர்களில் பலர் 3 கிராமங்களில் மண்ணுக்கு அடியில் புதைந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அவர்களின் உடல்களை மீட்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. இதற்காக ஆளில்லாத விமானம் மூலம் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

    இந்த புகைப்படங்களை 640 குழுக்களிடமும் கொடுத்துள்ளனர். இந்த 640 குழுவினரும் 6 மண்டலங்களாக பிரிந்து மாயமான சுமார் 250 பேரையும் தேடி வருகிறார்கள். மாயமானவர்களின் செல்போன் எண்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அந்த செல்போன் எண்களை இயக்கி ஜி.பி.எஸ். சிக்னல் வாயிலான அவர்களது கடைசி இருப்பிடத்தை கண்டறிய முயற்சிகள் நடக்கிறது.

    இதில் வெற்றி கிடைத்தால் மாயமான 250 பேரில் கணிசமானவர்களின் நிலை தெரிய வரும். ஒருவேளை அவர்கள் ஆழமான பகுதியில் மணலில் புதைந்து கிடந்தாலும் அதை உறுதிப்படுத்த முடியும்.

    நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் வசித்தவர்களில் கணிசமானவர்கள் சாலியாறு பாய்ந்தோடும் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளனர். வயநாடு மாவட்டத்தில் சாலியாறு சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவுக்கு செல்கிறது. அந்த ஆற்றின் கரையோரங்களில் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

    ராணுவம் மற்றும் காவல் துறை ஹெலிகாப்டர்களும் தாழ்வாக பறந்து சென்று தேடும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. சாலியாற்றில் அடித்து செல்லப்பட்ட உடல்கள் சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவுக்கு கடந்து சென்றுள்ளன. எனவே உடல்களை மீட்பதில் தொடர்ந்து கடும் சிக்கல் நிலவுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு சங்கர் சுவாமிகள் அருள்வாக்கு வழங்கினார்.
    • விழாவில் கோவில்பட்டி மட்டுமின்றி சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நடராஜபுரம் தெருவில் உள்ள சிவசக்தி பத்திரகாளியம்மன் கோவில், மலையாளத்து சுடலை மகாராஜா கோவில் ஆடி கொடை விழா மற்றும் பூக்குழி திருவிழா கடந்த 1-ந்தேதி தொடங்கியது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சாமக்கொடை மற்றும் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி இன்று அதிகாலை நடைபெற்றது. இதில் கோவில் பூசாரி ஸ்ரீ சங்கர் சுவாமிகள் கை மற்றும் நாக்கு ஆகியவற்றை அறுத்து அதில் வழிந்த ரத்தத்தை உணவில் கலந்து சாப்பிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதையடுத்து ஆட்டினை அறுத்து அது சுடலை மகாராஜா சுவாமிக்கு கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    பின்னர் ஸ்ரீ சங்கர் சுவாமிகள் குழந்தைகளை கையில் வைத்துக் கொண்டு மேளதாளம் முழங்க பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு சங்கர் சுவாமிகள் அருள்வாக்கு வழங்கினார்.

    அப்போது அவர் கூறுகையில், தர்மம் அழிந்து அநீதி அதிகரித்த காரணத்தினால் தான் வயநாடு நிலச்சரிவு போன்ற இயற்கை சீற்றங்கள் நடைபெற்று வருவதாகவும், அந்த இயற்கை சீற்றங்கள் தமிழகத்தை நோக்கி வருவதாகவும், மக்களின் சுயநலம்தான் இதற்கு காரணம் என்றார். விழாவில் கோவில்பட்டி மட்டுமின்றி சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • 64.5 மில்லி மீட்டர் முதல் 115.5 மில்லிமீட்டர் வரை மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • வடகேரள கடற்கரை பகுதியில் மணிக்கு 35 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கியதில் இருந்தே, பலத்த மழை பெய்வதற்கு வாய்ப்பு இருக்கும் மாவட்டங்களின் விவரத்தை இந்திய வானிலை ஆய்வு மையம் தினமும் அறிவித்தபடி இருக்கிறது.

    தற்போது கனமழையால் வயநாட்டில் பெரும் உயிர்ப்பலி மற்றும் சேதம் ஏற்பட்ட நிலையில், கனமழை பெய்யக்கூடிய மாவட்டங்களின் விவரத்தை தெரிவித்து வருகிறது.

    அதன்படி வயநாடு, கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. அங்கு 64.5 மில்லி மீட்டர் முதல் 115.5 மில்லிமீட்டர் வரை மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வடகேரள கடற்கரை பகுதியில் மணிக்கு 35 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

    • காபி மரங்களால் மூடப்பட்ட அந்த குன்றில் யானைகளும் தஞ்சமடைந்திருந்தன.
    • யானையின் கண்களைப் பார்க்கையில் எங்களின் இக்கட்டான சூழ்நிலையை அது புரிந்து கொண்டது போல் தோன்றியது.

    திருவனந்தபுரம்:

    முண்டகையில் உள்ள ஹாரிசன்ஸ் தேயிலை தோட்டத்தில 18 ஆண்டுகளாக தேயிலை பறிக்கும் தொழிலாளி சுஜாதா அனிநஞ்சிரா.

    இவர் தனது மகள் சுஜிதா, மருமகன் குட்டன், பேரக்குழந்தைகள் சூரஜ் (18), மிருதுளா (12) ஆகியோருடன் வசித்து வந்தார். நிலச்சரிவின் போது இவரது குடும்பம் யானையின் கருணையால் உயிர் தப்பியது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

    நிலச்சரிவில் இருந்து தப்பிய தனது அனுபவத்தை பற்றி சுஜாதா கூறியதாவது:-

    கடந்த திங்கள்கிழமை இரவே பெய்யத் தொடங்கிய மழை நள்ளிரவைத் தாண்டி செவ்வாய்க்கிழமை 4 மணிக்கு கனமழையாக மாறியது. இதையடுத்து, வீட்டை தண்ணீர் சூழ ஆரம்பித்தது. அங்கிருந்து அருகில் உள்ள குன்றுக்கு தப்பினோம். காபி மரங்களால் மூடப்பட்ட அந்த குன்றில் யானைகளும் தஞ்சமடைந்திருந்தன.


    எங்களுக்கு சில அங்குல தூரத்தில்தான் யானை கூட்டம் நின்றிருந்தது. அதன் கால்களுக்கு இடையில்தான் இரவு பொழுது முழுவதையும் பயத்துடன் கழித்தோம். அந்த யானையின் கண்களைப் பார்க்கையில் எங்களின் இக்கட்டான சூழ்நிலையை அது புரிந்து கொண்டது போல் தோன்றியது. அதனால், அந்த யானை கூட்டம் ஆக்ரோஷமாகி எங்களை தாக்க முற்படவில்லை.

    காலையில் மீட்புக் குழுவினர் எங்களை வந்து மீட்கும் வரை யானைகளும் எங்களின் பாதுகாப்புக்கு அரணாக அங்கேயே நின்றிருந்தன.

    சூரியன் உதிக்கையில் யானையின் கண்கள் துளிர விட்டு ஆசிர்வதிப்பதை என்னால் பார்க்க முடிந்தது. இது, எனது வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ராகுல் காந்தி கலெக்டரை நேரில் சந்தித்து பேசினார்.
    • ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோர் பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்கள்.

    வயநாடு:

    வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட இடங்களை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோர் பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்கள்.

    நேற்று இரவு வயநாட்டில் தங்கினார்கள். இன்று காலையில் வயநாட்டில் உள்ள ஒரு ரிசார்ட்டில் காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகளுடன் அவர்கள் ஆலோசனை நடத்தினார்கள்.

    இதில் அகில இந்திய காங்கிரஸ் அமைப்புச் செயலாளர்கே.சி. வேணுகோபால், கேரள மாநில காங்கிரஸ் தலைவர் சுதாகரன், கேரள எதிர்கட்சி தலைவர் சதீசன், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் பி.விஸ்வநாதன் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.


    இந்த ஆலோசனையின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தெந்த வகைகளில் உதவலாம் என்று விவாதித்தனர். இதையடுத்து காங்கிரஸ் சார்பில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டிக் கொடுக்க முடிவு செய்தனர்.

    ஒரே இடத்தில் இடம் வாங்கி அதில் ஒரு குடியிருப்பு போல் வீடுகளை கட்டவும் ஒவ்வொரு வீடும் தலா ரூ.8 லட்சம் முதல் ரூ.10 லட்சம் செலவில் கட்டவும் திட்டமிட்டுள்ளார்கள்.

    இந்த கூட்டம் முடிந்ததும் ராகுல் காந்தி கலெக்டரை நேரில் சந்தித்து பேசினார். அப்போது நிலவரம் மற்றும் மீட்பு பணிகள் பற்றியும் கேட்டறிந்தார்.

    மேலும் காங்கிரஸ் குடும்பத்தின் சார்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு 100-க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டி கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது பற்றியும் விவாதித்ததாக கூறப்படுகிறது.

    • கடந்த 3 நாட்களாக மனித சக்தி மூலம்தான் மீட்பு பணிகள் நடந்தன.
    • தேடும் பணியை பொதுமக்கள் உதவியுடன் கேரள மாநில அரசு விரிவுப்படுத்தி உள்ளது.

    சென்னை:

    கேரள மாநிலத்தின் வடக்கு பகுதியில் தமிழக எல்லையில் அமைந்துள்ள மலைப்பாங்கான வயநாடு மாவட்டத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது.

    அந்த மாவட்டத்தில் உள்ள சுற்றுலா பயணிகளை கவர்ந்து இழுக்கும் தேயிலை தோட்டங்கள் நிறைந்த முண்டகை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய 3 கிராமங்களில் அதிகாலை 2 மணிக்கு தொடங்கி 4 மணி வரை அடுத்தடுத்து மலை அடுக்குகள் கடுமையான சத்தத்துடன் சரிந்து விழுந்தன.

    முண்டகை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய 3 ஊர்களும் தலா 7 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் உள்ளன. இந்த 7 கிலோ மீட்டர் சுற்றளவும் முழுமையாக சேதம் அடைந்தன. நிலச்சரிவில் ஆயிரக்கணக்கானோர் சிக்கிக் கொண்டனர். 600-க்கும் மேற்பட்டவர்கள் வீடுகளுடன் மண்ணுக்குள் புதைந்தனர்.

    நூற்றுக்கணக்கானவர்களை அந்த பகுதியில் ஓடும் ஆற்று வெள்ளம் அடித்து சென்றது. மலைப் பகுதியில் இருந்துடன் கணக்கில் எடையுடன் கூடிய பிரமாண்டமான பாறைகள் மண்ணுடன் கலந்து வெள்ளம் போல் வந்து குடியிருப்பு பகுதிகளை அடித்து சூறையாடி விட்டது. இதனால் முண்டகை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய 3 ஊர்களும் மண்ணில் புதைந்தும், பாறைகளால் மோதியும் அழிந்து உருத்தெரியாமல் போய் விட்டன.

    கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை நடந்த இந்த இயற்கை கோர தாண்டவத்தில் சிக்கியவர்களை மீட்க ராணுவம், கடற்படை, விமானப்படை, தேசிய பேரிடர் மீட்பு படை, கடலோர காவல் படை, காவல் துறை, தீயணைப்புத் துறை வீரர்கள் ஒருங்கிணைந்து தேடுதல் பணிகளில் ஈடுபட்டனர். வயநாடு மாவட்டத்தில் இடைவிடாது பெய்து வந்த மழை காரணமாக கடும் போராட்டத்துக்கு மத்தியில் ராணுவத்தினர் ஒருங்கிணைந்து மீட்பு பணிகளை மேற் கொண்டனர்.

    கடந்த 3 நாட்களாக நடந்து வரும் மீட்பு பணியில் இதுவரை 318 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 240 பேரை காணவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 3 கிராமங்களில் வசித்து வந்த மக்களின் குடும்ப அட்டை விவரங்களின் அடிப்படையில் 240 பேர் இன்னமும் கண்டுபிடிக்க முடியாமல் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.


    நிலச்சரிவு கோர தாண்டவம் காரணமாக முண்டகை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய 3 ஊர்களும் துண்டிக்கப்பட்டு தனித்தனி தீவுகள் போல மாறி விட்டன. அதோடு இந்த 3 ஊர்களிலும் மண்ணின் ஈரப்பதம் மிக அதிகளவில் இருந்ததால் மீட்பு படையினர் கடும் சவால்களை சந்திக்க நேரிட்டது.

    சூரல்மலை-முண்டகை இடையே பாலம் அமைத்தால்தான் 2 கிராமங்களிலும் மண்ணுக்குள் புதைந்து கிடக்கும் வீடுகளில் சிக்கி இருப்பவர்களை மீட்க முடியும் என்ற நிலை ஏற்பட்டது. இதையடுத்து ராணுவத்தினர் இந்த இரு ஊர்களுக்கும் இடையே தற்காலிகமாக 190 அடி நீளம் உள்ள "பெய்லி" எனப்படும் இரும்பு பாலத்தை அமைத்துள்ளனர்.

    அந்த பாலத்தின் கட்டுமானப் பணிகள் நேற்று மாலை நிறைவு பெற்றது. அதன் வழியாக ராணுவ கன ரக வாகனங்களும், ஆம்புலன்சுகளும் நிலச்சரிவு மிக கடுமையாக ஏற்பட்ட பகுதிகளுக்கு சென்று சேர்ந்தன.

    நேற்று மாலை மிக அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதிக்கு ராணுவத்தினர் சென்று சேர்ந்துவிட்டாலும் இரவு தொடங்கி விட்டதால் மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டன. இன்று (வெள்ளிக்கிழமை) 4-வது நாளாக காலை முதல் மீட்பு பணிகள் நடந்து வருகிறது. ராணுவ வாகனங்கள் பாதிப்புகுள்ளான இடம் அருகே வரை செல்லவசதி செய்யப்பட்டு இருப்பதால் அதிநவீன கருவிகள், எந்திரங்களை எடுத்து சென்று உள்ளனர்.

    குறிப்பாக டிரோன் உதவியுடன் ராடார் மூலம் தேடும் பணி தொடங்கி உள்ளது. அதுபோல நவீன எந்திரங்களை ஆங்காங்கே கொண்டு சென்று பூமிக்குள் லேசர் மூலம் யாராவது புதைந்து கிடைக்கிறார்களா? என்பதை கண்டறியும் பணியும் தொடங்கி உள்ளது.

    நொறுங்கி கிடக்கும் வீடுகள், மண் மூடி கிடக்கும் பகுதிகளில் லேசர் மூலம் மக்கள் யாராவது சிக்கி இருக்கிறார்களா? என்று தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அது போல மிகவும் சிக்கலான பகுதிகளுக்கு தீயணைப்பு படையினரும், ராணுவத்தின் சிறப்பு படையினரும் ஒருங்கிணைந்து சென்று தேட தொடங்கி உள்ளனர்.

    இந்த நிலையில் இன்று காலை வயநாடு மாவட்டத்தில் கடுமையான சாரல் மழை பெய்தது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை இலாகா ரெட் அலார்ட் வெளியிட்டுள்ளது. இதனால் 4-வது நாளாக இன்று மீட்பு குழுவினர் கடும் சாவல்களை சந்திக்க நேரிட்டது.

    கடந்த 3 நாட்களாக மனித சக்தி மூலம்தான் மீட்பு பணிகள் நடந்தன. இன்று நவீன எந்திரங்களை பயன்படுத்த தொடங்கி உள்ளனர். நிலச்சரிவில் முழுமையாக மண்ணுக்குள் புதைந்த வார்டுகளில் ஜே.சி.பி. எந்திரங்கள் மூலம் மணலை அகற்றும் பணி நடந்து வருகிறது. இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் உயரக் கூடும் என அஞ்சப்படுகிறது.

    இதற்கிடையே மண்ணில் புதைந்தவர்களில் சிலர் உயிருக்கு போராடிய நிலையில் இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. அப்படி யாராவது போராடிக் கொண்டு இருக்கிறார்களா? என்பதை அறிவதற்காக முப்படையில் உள்ள மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. அதுபோல அண்டை மாநிலங்களில் உள்ள காவல் துறையில் இருக்கும் மோப்ப நாய்களும் வயநாடு மாவட்டத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.


    தமிழகத்தில் இருந்தும் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் தங்களுடன் 6 மோப்ப நாய்களை கொண்டு சென்று உள்ளனர். இந்த மோப்ப நாய்களின் உதவியுடன் உயிருக்கு போராடுபவர்களையும், உயிரிழந்தவர்களையும் தேடும் பணி நடந்து வருகிறது.

    தேடும் பணியை முறைப்படி செய்து முடிப்பதற்காக பாதிக்கப்பட்ட பகுதிகளை 6 மண்டலமாக பிரித்து ராணுவ வீரர்கள் தேடும் பணியை நடத்தி வருகிறார்கள். மண்ணில் புதைந்தவர்களை மீட்பதற்கு முன்னுரிமை கொடுத்து தேடும் பணி நடந்து வருகிறது.

    இதற்கிடையே முண்டகை, சூரல்மலை, மேப்பாடி பகுதிகளில் வசித்தவர்களில் 466 பேர் உயிரிழந்து இருக்கலாம் என்று கேரள மாநில அரசு கருதுகிறது. இவர்களில் 316 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மீத முள்ள 150 பேர் உடல்களை தேடும் பணி நடந்து வருகிறது.

    சூரல்மலை, முண்டகை ஆகிய 2 பஞ்சாயத்துகளில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அங்கு சுமார் 5 ஆயிரம் பேர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மற்றொரு பஞ்சாயத்தான மேப்பாடி பஞ்சாயத்தில் சுமார் 200 வீடுகள் மண்ணுக்குள் புதைந்து கிடக்கின்றன. நேற்று மாலை வரை மனிதசக்தி மூலம் மட்டும் மணலை அகற்றும் பணி நடந்தது.

    இன்று காலை இந்த கிராம பஞ்சாயத்தில் மண்ணுக்குள் புதைந்துள்ள 200 வீடுகளையும் அகற்றுவதற்கு நவீன எந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. எனவே இந்த வீடுகளுக்குள் மேலும் பலர் சிக்கி உயிரிழந்து இருக்கலாம் என்ற பரபரப்பு நிலவுகிறது.

    மீட்கப்படும் உடல்கள் உடனுக்குடன் பரிசோதனை செய்யப்படுகின்றன. அடையாளம் காணப்பட்டு விட்டால் அவற்றை உறவினர்களிடம் ஒப்படைக்கிறார்கள்.

    நூற்றுக்கும் மேற்பட்ட உடல்கள் இன்னமும் அடையாளம் காணப்படவில்லை. பல உடல்கள் சிதைந்துள்ளன. இதனால் உறவுகளை இழந்துள்ள இந்த 3 கிராம மக்களின் சொந்தங்கள் கடும் தவிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.

    உடல்களை அடையாளம் காண மருத்துவமனைகளில் மக்கள் குவிந்த வண்ணம் இருப்பதால் அங்குள்ள காட்சிகள் கண்ணீரை வர வழைப்பதாக இருக்கிறது. அதுபோல 82 முகாம்களில் உள்ள சுமார் 9 ஆயிரம் பேரும் உடமைகள், உறவுகளை இழந்து தொடர்ந்து பரிதவிக்கும் பரிதாபத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    எனவே மீட்பு பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் ராணுவம், போலீஸ், தீயணைப்பு படை வீரர்களின் ஒருங்கிணைந்த மீட்பு படையினருடன் தற்போது வயநாடு பகுதிகளை சேர்ந்த சுமார் 3 ஆயிரம் பொதுமக்களும் நிலச்சரிவு பகுதிகளுக்கு சென்று தேடுதல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். பொதுவாக நிலச்சரிவு ஏற்பட்டால் ஓரிரு கிலோ மீட்டர் சுற்றளவுக்குதான் பாதிப்பு இருக்கும்.

    தற்போது 7 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு பாதிப்பு இருப்பதாலும் நூற்றுக்கணக்கானவர்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு பக்கத்து மாவட்டம் வரை உடல்கள் சென்று விட்டதாலும் தேடும் பணியை பொதுமக்கள் உதவியுடன் கேரள மாநில அரசு விரிவுப்படுத்தி உள்ளது.

    மீட்பு பணிகள் எப்போது நிறைவு பெறும் என்று சொல்ல இயலாத அளவுக்கு பேரிடர் அளவு உள்ளது. ராணுவத்தை சேர்ந்த மீட்பு குழுவினர் நவீன எந்திரங்களை பயன்படுத்த தொடங்கி இருப்பதால் மீட்பு பணிகள் விரைவில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • பள்ளிகளின் உள்ளே மண் நிறைந்து கிடக்கிறது.
    • பெரிய பெரிய மரங்கள் மற்றும் பாறைகள் குவிந்து கிடக்கின்றன.

    திருவனந்தபுரம்:

    வயநாட்டில் கடந்த 30-ந்தேதி 3 இடங்களில் அதிகாலை அடுத்தடுத்து ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவு மற்றும் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி பலியான 300-க்கும் மேற்பட்டவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த சம்பவத்தில் நூற்றுக்கணக்கானவர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை.

    அவர்கள் மண்ணுக்குள் புதைந்து விட்டார்களா? காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு விட்டார்களா? என்பது தெரியாமல் இருக்கிறது. மாயமான அவர்களை கண்டுபிடிக்கும் பணியில் ராணுவ வீரர்கள் உள்ளிட்ட மீட்புப்படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த சம்பவத்தில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட பலரது உடல், ஆற்றில் 15 கிலோ மீட்டர் தூரம் வரை கிடந்தது. பல உடல்கள் ஆற்றில் பாறைகளுக்கு உள்ளேயும், மரங்கள் உள்ளிட்ட குப்பைகளுக்குள்ளும் கிடந்த நிலையில் மீட்கப்பட்டன. இதே போன்று மாயமான பலர் எங்கேயாவது சிக்கிக் கிடக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

    வயநாடு நிலச்சரிவு மட்டும் காட்டாற்று வெள்ளத்தில் வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் மட்டுமின்றி முண்டக்கை மற்றும் சூரல்மலையில் செயல்பட்டு வரும் 2 அரசு பள்ளிகளும் கடுமையான சேதமடைந்துள்ளன. அந்த பள்ளிகளைச் சுற்றிலும் பெரிய பெரிய மரங்கள் மற்றும் பாறைகள் குவிந்து கிடக்கின்றன.

    பள்ளிகளின் உள்ளே சகதிகள் மற்றும் மண் நிறைந்து கிடக்கிறது. இந்த பள்ளிகளில் படித்த மாணவர்கள் பலர் நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் பலியாகி இருக்கின்றனர். 2 பள்ளிகளையும் சேர்ந்த 27 மாணவர்கள் பலியாகினர். மேலும் 23 மாணவர்களை காணவில்லை.

    அவர்கள் மண்ணுக்குள் புதைந்தோ அல்லது வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டோ இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்த பள்ளிகளில் படித்து வந்த குழந்தைகளில் பலர் குடும்பத்தோடு பலியாகி இருக்கின்றனர். இதனால் அவர்களது உடல்களை அடையாளம் காண்பிக்ககூட குடும்பத்தினர் இல்லை.

    இதன் காரணமாக பல குழந்தைகளின் உடல்களை அந்த பள்ளிகளின் ஆசிரியர்கள் அடையாளம் கண்டு தெரிவித்துள்ளனர். அவர்கள் குழந்தைகளின் உருக்குலைந்த உடல்களை பார்த்து கண்ணீர் விட்டு கதறினர். நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட சூரல்மலையில் உள்ள அரசு பள்ளி கட்டிடம்.

    • தோண்ட தோண்ட மனித உடல்கள் கண்டெடுக்கப்படுகிறது.
    • வீடுகள் இருந்த பகுதி தடம் தெரியாமல் மாறி விட்டது.

    திருவனந்தபுரம்:

    வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தப்படி இருக்கிறது. நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களில் தோண்ட தோண்ட மனித உடல்கள் கண்டெடுக்கப்படுகிறது.

    கடும் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கால் வீடுகள் இருந்த பகுதி தடம் தெரியாமல் மாறி விட்டது. எங்கு பார்த்தாலும் பெரிய பாறைகள், மரங்கள் என மலை போன்று குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. அவற்றை அகற்றி பலியானவர்களின் உடல்களை மீட்பு படையினர் மீட்டு வருகின்றனர்.

    கடும் சவால்களுக்கு மத்தியில் ராணுவ வீரர்களும், பேரிடர் மீட்புப்படையினரும் மீட்புப்பணியில் ஈடுபடுகின்றனர்.

    நிலச்சரிவில் முழுமையாக பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நடந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். அங்குள்ள பாறைகள் மற்றும் இடிந்து கிடக்கும் கட்டிடங்களை அகற்றுவதற்காக ஜே.சி.பி. எந்திரங்கள் வரவழைக்கப்பட்டன. அவை நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளுக்கு செல்ல ராணுவ வீரர்கள் பாலம் அமைத்தனர்.

    அதன் வழியாக ஜே.சி.பி. எந்திரங்கள் வீடுகள் புதைந் திருக்கும் பகுதிக்கு சென்றன. வீடுகள் இருந்த பகுதிகளை அவை தோண்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அப்போதும் பலரது உடல் மீட்கப்படுகிறது. 300-க்கும் மேற்பட்டவர்கள் பலியான நிலையில் நூற்றுக்கும் அதிக மானவர்கள் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை.

    அவர்களை கண்டுபிடிக்க மீட்புப்படையினர் இன்று டிரோன்களை பயன்படுத்தினர். டிரோன்களை நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகள் மற்றும் ஆற்றுப்பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் பறக்கச் செய்து மாயமான யாரேனும் இருக்கிறார்களா? என்று பார்த்தனர்.

    நிலச்சரிவில் மாயமானவர்களை கண்டுபிடிக்க மனித ரத்தத்தில் பயிற்சி பெற்ற போலீஸ் மோப்ப நாயும் பயன்படுத்தப்படுகின்றன. அவை நிலச்சரிவு ஏற்பட்டு புதைந்து கிடக்கும் கட்டிடங்களுக்குள் சென்று ஆட்களை கண்டுபிடித்து வருகின்றன.

    இடிபாடு களுக்குள் அடியில் கிடக்கும் மனித உடல்களை கண்டறி யவதில் நிபுணத்துவம் பெற்ற அந்த மோப்ப நாய்கள் நேற்று வரை 10-க்கும் மேற்பட்ட உடல்களை கண்டுபிடித்துள்ளன.

    • உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.
    • டி.என்.ஏ. பரிசோதனைக்கு பரிந்துரை.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் வயநாட்டில் கனமழை தொடர்ந்து பெய்ததால் முண்டக்கை, மேப்பாடி, சூரல்மலை ஆகிய 3 இடங்களில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. மேலும் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்தது.

    இதன் காரணமாக அந்த பகுதிகளில் இருந்த வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் மண்ணுக்குள் புதைந்தன. வீடுகளில் தூங்கிக் கொண் டிருந்த மக்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். மேலும் ஏராளமானோர் மண்ணுக்குள் புதைந்தனர். இந்த சம்பவத்தில் பலியான 300-க்கும் மேற்பட்டவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

    மேலும் மாயமான 100-க்கும் மேற்பட்டவர்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. கடற்படை, கப்பல்படை, விமானப்படை என ராணு வத்தின் முப்படை வீரர்கள் மற்றும் பேரிடர் மீட்புப்படையினர் இரவு பகல் பராமல் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பலியானவர்களின் உடல்கள் அரசு ஆஸ்பத்திரி கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. குடும்பத்தினர் அடையாளம் காட்டுவதன் அடிப்படையில் பலியானவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.

    நிலச்சரிவில் பெரிய பெரிய பாறைகள் உருண்டு விழுந்ததாலும், காட்டாற்று வெள்ளம் அடித்துச் சென்ற தாலும் பலியானவர்களின் உடல்கள் சிதைந்த நிலையி லேயே மீட்கப்பட்டு வரு கின்றன. பல உடல்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு சின்னா பின்னமாகி இருக்கின்றன. இதனால் இறந்தவர்களை அடையாளம் காணுவதில் பெரும் சிக்கல் நிலவுகிறது.

    இதன் காரணமாக ஒரு உடலுக்கு பலர் உரிமை கொண்டாடும் அரங்கமும் அரங்கேறி வருகிறது. முண்டக்கை நிலச்சரிவில் சிக்கி பலியான ஒரு சிறுமி உடலுக்கு 4 குடும்பத்தினர் உரிமை கொண்டாடி உள்ளனர். அந்த சிறுமியின் உடல் மேப்பாடி மருத்துவ மையத்தில் வைக்கப்பட்டிருந்தது. சிறுமியின் உடல் மிகவும் சிதைந்த நிலையில் இருந்துள்ளது.

    முதலில் ஒரு குடும்பத்தினர் அந்த சிறுமி தங்களது குழந்தை என கூறி இருக்கின்றனர். அவர்களிடம் அந்த சிறுமியின் உடல் ஒப்படைக்கப்பட்டது. அந்த நேரத்தில் மற்றொரு குடும்பத்தினர் அந்த சிறுமியின் உடலுக்கு உரிமை கொண்டாடினர்.

    இருவரது குடும்பத்தின ரையும் அதிகாரிகள் சமரசம் செய்து கொண்டிருந்தபோது, மேலும் இரு குடும்பத்தினர் அந்த சிறுமியின் உடலுக்கு உரிமை கொண்டாடினர். இதனால் மேலும் குழப்பம் ஏற்பட்டது. முதலில் உரிமை கொண்டாடிய குடும்பத்தினர் அந்த சிறுமியின் உடலை அடக்கம் செய்ய மயானத்திற்கே கொண்டு சென்று விட்டனர்.

    பின்பு அவர்களிடமிருந்து மீட்டு 2-வது குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்திய போதுதான் மேலும் 2 குடும்பத்தினரும் சிறுமியின் உடலுக்கு உரிமை கொண்டாடினர்.


    இந்நிலையில் முதல்-மந்திரி பினராயி விஜயன் முன்னிலையில் மக்கள் பிரதிநிதிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது.

    அதில் சிறுமியின் உடலுக்கு 4 குடும்பத்தினர் உரிமை கொண்டாடுவது குறித்து பினராயி விஜயனின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதன் காரணமாக சிறுமிக்கு டி.என்.ஏ. பரிசோதனை நடத்த வேண்டிய அவசியத்தை அவரிடம் அதிகாரிகள் எடுத்து கூறினர்.

    அதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பினராயி விஜயன் பரிந்துரைத்தார். இதேபோன்று பல அடையாளம் தெரியாத உடலுக்கு ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் உரிமை கொண்டாடுவதால் பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. அதனை தீர்க்க ஒரு அமைப்பை கொண்டு வர அதிகாரிகளுக்கு பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். 

    • பெய்லி பாலம் அமைப்பதற்காக, டெல்லி, பெங்களூருவில் இருந்து ராணுவத்தின் பொறியியல் பிரிவினர் வரவழைக்கப்பட்டனர்.
    • இந்த பாலம் 24 டன் வரை எடையை தாங்கும் வகையில் அமைக்கப்பட்டது.

    வயநாட்டில் சூரல்மலை, முண்டகை கிராமங்களை இணைக்கும் வகையில், சூரல்மலையில் உள்ள ஆற்றின் குறுக்கே இருந்த பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனால் கிராமங்கள் துண்டிக்கப்பட்டன. மேலும் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இருப்பினும், கொட்டும் மழைக்கு மத்தியில் ராணுவம், தேசிய பேரிடர் மீட்பு படையினர் கயிறு கட்டி ஆற்றை கடந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    சூழல்மலை-முண்டகை இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால், பொக்லைன் உள்ளிட்ட கனரக வாகனங்கள் ஆற்றை கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மீட்பு பணியை துரிதப்படுத்தும் வகையில் ஆற்றின் குறுக்கே பெய்லி பாலம் அமைப்பதற்காக, டெல்லி, பெங்களூருவில் இருந்து ராணுவத்தின் பொறியியல் பிரிவினர் வரவழைக்கப்பட்டனர்.

    பெய்லி பாலத்திற்கு தேவையான உபகரணங்கள் டெல்லியில் இருந்து விமானம் மூலம் கண்ணூர் விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து ராணுவ வாகனங்கள் மூலம் சூரல்மலை பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் இரவு, பகலாக மழையை பொருட்படுத்தாமல் ஆற்றுக்குள் இறங்கி தற்காலிக இரும்பு பாலத்தை அமைக்கும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டனர்.

    ராணுவத்தின் முயற்சிக்கு பலன் கிடைத்தது. நேற்று மாலை 5.50 மணிக்கு தற்காலிக பெய்லி பாலம் அமைக்கும் பணி நிறைவடைந்தது. இதையடுத்து பெய்லி பாலத்தில் முதல் வாகனமாக ராணுவ மேஜர் ஜெனரல் மேத்யூஸ் தனது வாகனத்தில் சென்றார். தொடர்ந்து ராணுவ வாகனம், பொக்லைன் எந்திரங்கள் பாலத்தில் சென்றன.

    20 மணி நேரத்திற்குள் தற்காலிக பாலத்தை ராணுவத்தினர் வெற்றிகரமாக அமைத்து உள்ளனர். இதன் நீளம் 190 அடியாகும். இந்த பாலம் 24 டன் வரை எடையை தாங்கும் வகையில் அமைக்கப்பட்டது. இதன் மூலம் சூரல்மலை-முண்டகை இடையே மீட்பு பணிக்காக வாகனங்கள் சென்று வருகின்றன.

    ×