என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சஸ்பெண்டு"

    • ஆணையத்தின் பரிந்துரையை தொடர்ந்து சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவிட்டார்.
    • முதற்கட்டமாக துப்பாக்கி சூடு சம்பவம் நடந்த போது புதுக்கோட்டை இன்ஸ்பெக்டராக பணியாற்றிய திருமலை சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.

    நெல்லை:

    தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ம் தேதி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் போது நடந்த கலவரத்தில் போலீஸ் துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள்.

    பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் நியமித்து அரசு உத்தரவிட்டது.

    இந்த ஆணையம் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் சம்பவம் நடந்த போது பணியில் இருந்த கலெக்டர் மற்றும் வருவாய் அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் உள்பட பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை நடத்தி வாக்குமூலங்களை பதிவு செய்தது.

    இதைத்தொடர்ந்து ஆணையத்தின் அறிக்கை கடந்த 18-ந்தேதி தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

    அந்த அறிக்கையில் போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் வரம்பு மீறி சில இடங்களில் துப்பாக்கி சூடு நடத்தியதாக கூறப்பட்டிருந்தது.

    மேலும் இதுதொடர்பாக அப்போதைய ஐ.ஜி. சைலேஷ்குமார் யாதவ், டி.ஐ.ஜி. கபில் குமார் சரத்கார், தூத்துக்குடி எஸ்.பி. மகேந்திரன், டி.எஸ்.பி. லிங்க திருமாறன், இன்ஸ்பெக்டர் திருமலை உள்பட 17 போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தது.

    மேலும் அப்போதைய கலெக்டர் வெங்கடேஷ் மற்றும் 3 வருவாய்த்துறை அலுவலர்கள் என மொத்தம் 21 பேர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க ஆணையம் பரிந்துரை செய்திருந்தது.

    ஆணையத்தின் பரிந்துரையை தொடர்ந்து சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து முதற்கட்டமாக துப்பாக்கி சூடு சம்பவம் நடந்த போது புதுக்கோட்டை இன்ஸ்பெக்டராக பணியாற்றிய திருமலை சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.

    அவர் தற்போது நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவில் உதவி கமிஷனராக பணியாற்றி வரும் நிலையில், அவர் தற்போது சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.

    இதே போல துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு பணியில் இருந்த முதல்நிலை காவலர் சுடலைக்கண்ணு, கலெக்டர் அலுவலகம் உள்ளே பணியில் இருந்த சங்கர், சதீஸ் ஆகிய 3 காவலர்களும் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.

    இவர்கள் 3 பேரும் நெல்லை மாநகர காவல்துறையில் பணியாற்றி வந்த நிலையில் அவர்கள் மீது முதற்கட்டமாக சஸ்பெண்டு நடவடிக்கை பாய்ந்துள்ளது.

    • தீபாவளி வசூலில் அதிகாரி மற்றும் பணியாளர்கள் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
    • இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அரசு அலுவலகங்களில் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    நாமக்கல்:

    தீபாவளி பண்டிகையையொட்டி அரசு சார்ந்த அலுவலகங்களில் தீபாவளி வசூலில் அதிகாரி மற்றும் பணியாளர்கள் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அரசு அலுவலகங்களில் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் ராசிபுரத்தில் தொழிலதிபர் ஒருவரிடம் தீபாவளி பண்டிகைக்கு நாமக்கல் தீயணைப்பு துறையை சேர்ந்த திருமுகம் என்பவர் இனாம் கேட்டதாக ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இைதயடுத்து திருமுகத்தை சஸ்பெண்டு செய்து தீயணைப்பு துறை மாவட்ட அலுவலர் செந்தில் உத்தரவிட்டுள்ளார்.

    • மணல் கடத்தலுக்கு உடந்தையாய் இருந்ததால் நடவடிக்கை
    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் உத்தர விட்டார்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் மணல் கடத்தல் சம்பவங்கள் நடப்பதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதனை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டார்.

    அதன் பேரில் போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் அஞ்சுகிராமம் பகுதியில் செம்மண் கடத்தல் சம்பவம் தொடர்ந்து நடந்து வருவதாக கூறப்படுகிறது.

    செம்மண் கடத்தல் கும்ப லோடு அஞ்சுகிராமம் போலீஸ் நிலைய தலைமை காவலர் லிங்கேஷ் என்ப வருக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது குறித்து உரிய விசாரணை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் உத்தர விட்டார்.

    இந்த நிலையில் தலைமை காவலர் லிங்கேஷ் நேற்று பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் பிறப்பித்து உள்ளார்.

    • மருதூர் ஊராட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக மாவட்ட கலெக்டருக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.
    • கலெக்டர் சமீரன் உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டார். விசாரணையில், மருதூர் ஊராட்சியில் முறைகேடுகள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் அருகே காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது மருதூர் கிராமம். இந்த ஊராட்சியில் ஏராளமான மக்கள் குடியிருந்து வருகின்றனர்.

    இந்த கிராம மக்களின் பயன்பாட்டிற்காகவும், அவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக மருதூரில் ஊராட்சி அலுவலகம் உள்ளது.

    இந்த ஊராட்சி அலுவலகத்தின் செயலாளராக சதீஷ்குமார் என்பவர் உள்ளார்.

    இந்த நிலையில் மருதூர் ஊராட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக மாவட்ட கலெக்டருக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.

    இதையடுத்து கலெக்டர் சமீரன் உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டார். விசாரணையில், மருதூர் ஊராட்சியில் முறைகேடுகள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து மருதூர் ஊராட்சி செயலாளர் சதீஷ்குமார் மற்றும் காரமடை ஊராட்சி ஒன்றிய பொறியாளர் சந்திரசேகர் ஆகியோரை மாவட்ட கலெக்டர் சமீரன் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும் இவர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மற்ற ஊராட்சியில் உள்ள செயலாளர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • போலீஸ் சீருடையில் மது அருந்திவிட்டு ஒரு டீ கடையில் விழுந்து கிடந்துள்ளார்.
    • இச்சம்பவம் குறித்து தகவலறிந்த போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுத்து தற்காலிக பணியிடை நீக்கம் செய்துள்ளார்.

    கொடுமுடி:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி போலீஸ் நிலையத்தில் 2-ம் நிலை காவலராக பணிபுரிந்து வருபவர் நல்லசாமி (வயது 35). இவர் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோபிசெட்டிபாளையம் அருகே கொளப்பலூரில் பாதுகாப்பு பணிக்காக நியமிக்கப்பட்டிருந்தார்.

    அப்போது அவர் போலீஸ் சீருடையில் மது அருந்திவிட்டு ஒரு டீ கடையில் விழுந்து கிடந்துள்ளார். அப்போது அங்கு நின்ற பொதுமக்கள் சிறுவல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து போலீசார் அங்கு செல்வதற்குள் நல்லசாமி அங்கிருந்து தப்பித்து தலைமறைவாகி விட்டார்.

    இச்சம்பவம் குறித்து தகவலறிந்த போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுத்து தற்காலிக பணியிடை நீக்கம் செய்துள்ளார். போலீசார் ஒருவர் மது போதையில் கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

    • சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள பக்காளியூரைச் சேர்ந்தவர் லாரி உரிமையாளருக்கு சொந்தமான கஸ்தூரிபட்டி கிராமத்தில் நிலம் உள்ளது.
    • இதையடுத்து வைத்தீஸ்குமார் ரூ.2 ஆயி ரம் லஞ்சம் வாங்கியபோது லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கையும் களவுமாக சிக்கினார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள பக்காளியூரைச் சேர்ந்தவர் லாரி உரிமையாளர் கணே சன் (வயது 50). இவருக்கு சொந்தமான கஸ்தூரிபட்டி கிராமத்தில் நிலம் உள்ளது. அந்த நி லத்தை அளவீடு செய்து உட்பிரிவு செய்து தரக் கோரி சங்ககிரி வட்ட நில அளவை துறையில் விண்ணப்பித்தார்.

    அதனை செய்து கொடுக்க சங்ககிரி நில அளவைத் துறை சுற்றுக்குழு நில அளவையராக பணியாற்றி வந்த வைத்தீஸ்குமார் (வயது 40) ரூ.2000 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. லஞ்சம் கொடுக்க விரும்பாத கணேசன் இது தொடர்பாக சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து வைத்தீஸ்குமார் ரூ.2 ஆயி ரம் லஞ்சம் வாங்கியபோது லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கையும் களவுமாக சிக்கினார்.

    இதையடுத்து அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்திய போலீசார் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் வைத்தீஸ்கு மாரை மேலம் மாவட்ட நில அளவை உதவி இயக்குனர் (பொறுப்பு) சுப்பிரமணியன் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும் அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

    • வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
    • சங்க துணை தலைவருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.

    அவிநாசி :

    அவிநாசி ஊராட்சி ஒன்றியம் புஞ்சை தாமரைக்குளம் ஊராட்சி தலைவராக உள்ளவர் சரவணக்குமார். வடுகபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவராகவும் இருந்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை விமர்சித்து, சமூக வலைதளத்தில் வந்த ஒரு பதிவை பரப்பியதாக, அக்கட்சி நிர்வாகிகள் அளித்த புகாரின் பேரில் போலீசார் இவர் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

    இதை காரணம் காட்டி வடுகபாளையம் கூட்டுறவு கடன் சங்க தலைவர் பதவியில் இருந்து சரவணக்குமார் தற்காலிகமாக சஸ்பெண்டு செய்யப்பட்டார். சங்க துணை தலைவருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்தநிலையில் ஜாமீனில் வந்த சரவணக்குமார், சஸ்பெண்டு நடவடிக்கைக்கு எதிராக வழக்கு தொடுத்ததில், சஸ்பெண்டு நடவடிக்கைக்கு சென்னை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இதையடுத்து சரவணகுமார் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், 'என் சஸ்பெண்டு நடவடிக்கைக்கு கோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளதால், பொறுப்பு தலைவரை உடனடியாக விலக உத்தரவிட்டு என்னை மீண்டும் தலைவராக பணியாற்றிட வழிவகை ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    • தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இருந்த ஸ்மார்ட் கார்டு வடிவிலான, 37 ஆர்.சி., புத்தகங்கள் திடீரென மாயமானது.
    • புத்தகம் மாயமான சம்பவம் தொடர்பாக தாம்பரம் போலீஸ் நிலையத்திலும் புகார் செய்யப்பட்டது.

    தாம்பரம்:

    தாம்பரம், வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இருந்த ஸ்மார்ட் கார்டு வடிவிலான, 37 ஆர்.சி., புத்தகங்கள் திடீரென மாயமானது. இது தொடர்பாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போக்குவரத்து ஆணையர் நிர்மல் ராஜ் அலுவலகத்துக்கு நேரில் வந்து சம்பந்தப்பட்ட அலுவலரிடம் விசாரணை நடத்தினார். மேலும் இது தொடர்பாக தாம்பரம் போலீஸ் நிலையத்திலும் புகார் செய்யப்பட்டது.

    இந்த நிலையில் ஆர்.சி. புத்தகம் மாயமானது தொடர்பாக வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களான வட்டாரப் போக்குவரத்து அலுவலரின் நேர்முக உதவியாளர் விஜயகுமார், கண்காணிப்பாளர்கள் பாலாஜி காளத்தி, இளநிலை உதவியாளர்கள் சாந்தி, தாமோதரன் ஆகிய 5 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர்.

    • பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தை விடுவிக்க ரேசன் கடத்தலில் ஈடுபட்ட ஒரு பெண் ஆசனூர் தனிப்பிரிவு போலீஸ் ஏட்டு ஜெகநாதன் என்பரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார்.
    • போலீஸ் ஏட்டு ஜெகநாதன் அந்த பெண்ணிடம் ரேசன் அரிசி கடத்திய ஆட்டோவை விடுவிக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், ஆசனூர் ஆகிய பகுதிகள் தமிழக கர்நாடக எல்லை பகுதியில் அமைந்து உள்ளது. இந்த பகுதிகளில் இருந்து சிலர் ரேசன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி அருகில் உள்ள கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்துக்கு கடத்தி சென்று கூடுதல் விலைக்கு விற்று வருகின்றனர்.

    போலீஸ் சோதனையை மீறியும் ரேசன் அரிசி கடத்தப்படுவது தொடர் கதையாகி வருகிறது. இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஒரு ஆட்டோவில் ஒரு கும்பல் ரேசன் அரிசியை கடத்தியது. இந்த ஆட்டோவை ஆசனூர் போலீசார் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தை விடுவிக்க ரேசன் கடத்தலில் ஈடுபட்ட ஒரு பெண் ஆசனூர் தனிப்பிரிவு போலீஸ் ஏட்டு ஜெகநாதன் என்பரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார்.

    அப்போது போலீஸ் ஏட்டு ஜெகநாதன் அந்த பெண்ணிடம் ரேசன் அரிசி கடத்திய ஆட்டோவை விடுவிக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டார்.

    இதை ரேசன் அரிசி கடத்தல் கும்பலை சேர்ந்த பெண் தனது செல்போனில் பதிவு செய்து கொண்டார். தொடர்ந்து போலீஸ் ஏட்டு ஜெகநாதன் லஞ்சம் கேட்கும் ஆடியோ வெளியானது. போலீசார் மத்தியில் இது பரபரப்பாக பேசப்பட்டது.

    இது பற்றி ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அவர் இது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய சத்தியமங்கலம் டி.எஸ்.பி. சந்திரசேகர், தாளவாடி இன்ஸ்பெக்டர் செல்வன் ஆகியோருக்கு உத்தரவிட்டார்.

    இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் ரேசன் அரிசி கடத்தல் கும்பலிடம் தனிப்பிரிவு போலீஸ் ஏட்டு ஜெகநாதன் லஞ்சம் கேட்டது உறுதியானது. இது குறித்து அவர்கள் போலீஸ் சூப்பிரண்டுக்கு அறிக்கையாக கொடுத்தனர்.

    இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன், ஆசனூர் தனிப்பிரிவு ஏட்டு ஜெகநாதனை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார். இந்த சம்பவம் போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மின் கட்டணத்தை கையாடல் செய்தார்
    • அதிகாரிகள் நடவடிக்கை

    ஜோலார்பேட்டை:

    வாணியம்பாடி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் இவர் நாட்டறம்பள்ளி அடுத்த கேத்தாண்டப்பட்டி பகுதியில் இயங்கி வரும் துணை மின் நிலையத்தில் கணக்கீட்டு ஆய்வாளராக கடந்த 3 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார்.

    இவர் மின்வாரிய அலுவலகத்தில் வாடிக்கை யாளர்களின் மின்சார கட்டணத்தை வசூலிக்கும் பிரிவில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் காவேரிப்பட்டு பகுதியைச் சேர்ந்த வாடிக்கையாளர் பணத்தை பெற்றுக் கொண்டு பணத்தை வரவு வைக்காமல் இருந்தார்.

    காவேரிப்பட்டு பகுதியைச் சேர்ந்த வாடிக்கையாளர் பணம் செலுத்தும் போது கம்ப்யூட்டரில் சர்வேயர் வேலை செய்யவில்லை என கூறி பணத்தை பெற்றுக் கொண்டு வெங்கடேசன் வரவு வைக்காமல் இருந்து உள்ளார்.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு மின் வாரிய அலுவலகத்தில் மின்சாரம் கட்டணம் செலுத்தாத வாடிக்கையாளர் மின் இணைப்பு துண்டிக்கும் பணியில் ஈடுப்பட்டனர்.

    அப்போது காவேரிப்பட்டு பகுதியில் மின்சாரம் கட்டணம் செலுத்தாத வாடிக்கையாளர் வீட்டிற்கு சென்று மின் இணைப்பு துண்டிக்க சென்றனர்.

    அப்போது தான் வீட்டின் உரிமையாளர் அதிர்ச்சி அடைந்தார். அதன் பிறகு வீட்டின் உரிமையாளர் நேரடியாக அலுவலகத்திற்கு சென்று பணம் கட்டியுள்ளதாக தெரிவித்தார். அதற்கான ரசீது தரவில்லை என வீட்டின் உரிமையாளர் கூறினார்.

    இதனால் வீட்டின் உரிமையாளர் மின் வாரிய ஊழியர் முறைகேடு செய்தது குறித்து புகார் தெரிவித்தார். விசாரணையில் மின்வாரிய ஊழியர் வெங்கடேசன் வாடிக்கை யாளர் பணத்தை பெற்றுக் கொண்டு வரவு வைத்து ரசீது வழங்கவில்லை என தெரியவந்தது.

    இதனையெடுத்து வாணியம்பாடி செயற்பொ றியாளர் பாஷா முகமது உடனடியாக வெங்க டேசனை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

    • முறைகேடு புகார்கள் எதிரொலி
    • போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே உள்ள முகிலன் குடியிருப்பைச் சேர்ந்தவர் கோபால் (வயது 39).

    இவர் சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணி யாற்றி வருகிறார். கடந்த சில நாட்களாக போலீஸ் ஏட்டு கோபால் மீது பொது மக்களிடம் இருந்து புகார்கள் வந்தன.

    இது தொடர்பாக விசா ரணை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் உத்தர விட்டார். அதன்படி ஏட்டு கோபால் மீது துறை ரீதியிலான விசாரணை நடத்தப்பட்டது.

    இதில் புகார்கள் உறுதி செய்யப்பட்டதால் அவரை சஸ்பெண்டு செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் உத்தர விட்டார். ஏட்டு கோபால் மீது துறை ரீதியான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    போலீஸ் ஏட்டு சஸ்பெண்டு விவகாரம் குமரி மாவட்ட போலீசாரிடம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கணக்கில் வராத ரூ.35 லட்சம் மற்றும் அவரது வரவு-செலவு கணக்கு ஆகியவற்றை குறிப்பிட்ட டைரி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
    • தமிழக கூடுதல் தலைமை செயலாளர் பனீந்திர ரெட்டி, நடராஜனை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

    நெல்லை:

    தமிழக போக்குவரத்து துறை சென்னை துணை ஆணையராக இருந்தவர் நடராஜன். இவரது அலுவலகத்தில் கடந்த மார்ச் மாதம் 14-ந்தேதி லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

    அப்போது கணக்கில் வராத ரூ.35 லட்சம் மற்றும் அவரது வரவு-செலவு கணக்கு ஆகியவற்றை குறிப்பிட்ட டைரி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

    இதையடுத்து துணை ஆணையர் நடராஜன் மற்றும்அவரது உதவியாளர் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

    அதனை தொடர்ந்து அந்த மாதத்தில் 19-ந்தேதி நடராஜன் நெல்லை மாவட்ட போக்குவரத்து ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்காமல், பணியிட மாற்றம் மட்டும் செய்யப்பட்டுள்ளதாக கூறி பல்வேறு தரப்பினரும் புகார் கூறி வந்தனர்.

    இந்த நிலையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதால் தொடர்ந்து அவர் பணியில் இருக்க முடியாது என்பதை காரணம் காட்டி தமிழக கூடுதல் தலைமை செயலாளர் பனீந்திர ரெட்டி, நடராஜனை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

    இதுதொடர்பாக கூடுதல் தலைமை செயலாளர் பனீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளதோடு, முன் அனுமதியின்றி நெல்லையில் இருந்து வேறு எங்கும் செல்லக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

    ×