search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சஸ்பெண்டு"

    • அம்பை தொகுதி எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா மருத்துவர்கள் பணிகளுக்கு சரியாக வருகிறார்களா? என்று பதிவேடுகளை ஆய்வு செய்தார்.
    • லஞ்சம் பெற்ற தற்காலிக பெண் ஊழியரை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் ராமநாதன் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளார்.

    கல்லிடைக்குறிச்சி:

    நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள அரசு மருத்துவமனையில் தினமும் ஏராளமான பொதுமக்கள் நாள்தோறும் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் அங்கு பணியில் இருந்த பெண் ஊழியர் நுழைவு சீட்டு பெற ரூ.100 லஞ்சம் வாங்குவதாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானது.

    இதையடுத்து அம்பை தொகுதி எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா அரசு மருத்துவமனையில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருத்துவர்கள் பணிகளுக்கு சரியாக வருகிறார்களா? என்று பதிவேடுகளை ஆய்வு செய்தார்.

    பின்னர் அங்கிருந்த தலைமை மருத்துவரிடம் ஏழை மக்கள் தனியார் மருத்துவமனைக்கு செல்ல முடியாத காரணத்தினால் இங்கு வருகிறார்கள். அவர்களிடம் லஞ்சம் வாங்கக்கூடாது. அவர்களை நன்கு கவனிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    தொடர்ந்து அங்கிருந்த நோயாளிகளிடம் நலம் விசாரித்தார். இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால் நடவடிக்கைகள் கடுமையாக இருக்கும் என எச்சரித்து சென்றார்.

    இதற்கிடையே லஞ்சம் பெற்ற தற்காலிக பெண் ஊழியரை மாவட்ட சுகாதாரத்துறை (நலப்பணிகள்) துணை இயக்குனர் டாக்டர் ராமநாதன் 'சஸ்பெண்டு' செய்து உத்தரவிட்டுள்ளார்.

    தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி இந்த லஞ்ச பணத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பதை அறிந்து அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக டாக்டர் ராமநாதன் தெரிவித்துள்ளார்.

    • அரசு பள்ளி தலைமை ஆசிரியர் கனகவள்ளியை தற்காலிக பணி நீக்கம் செய்து மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அலுவலர் பரிமளா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
    • தலைமை ஆசிரியர் கனகவள்ளி 4 மாதத்தில் ஓய்வு பெற உள்ளார்.

    திருச்செந்தூர்:

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே தோப்பூரை சேர்ந்த சிவபெருமாள் மகன் அஜய்குமார் (வயது10).

    அங்குள்ள ஆதிதிராவிட நலப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்த அஜய்குமார் கடந்த 2-ந்தேதி பள்ளி வளாகத்தில் தலையில் அடிபட்டு பலத்த காயங்களுடன் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். அங்கு அவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான்.

    இந்நிலையில் மாணவனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், உரிய விசாரணை நடத்த வேண்டும். குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரி சிறுவனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்களுடன் நேற்று முன்தினம் இரவு ஆர்.டி.ஓ. புகாரி பேச்சுவார்த்தை நடத்திார். அதில் முடிவு எட்டப்படவில்லை. இதையடுத்து நேற்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

    அப்போது அரசு ஆதிதிராவிட நல தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மீது துறைரீதியாகவும், காவல்துறை சட்டரீதியான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். இறந்த மாணவனின் குடும்பத்திற்கு அரசு மூலம் உரிய நிவாரணம் வழங்கிட மாவட்ட கலெக்டருக்கு உடனடியாக பரிந்துரை செய்யப்படும். மாணவரின் மரணம் குறித்து சட்டரீதியாக விசாரணை மேற்கொண்டு உண்மை தன்மை கண்டறியப்பட்டு குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு மாணவனின் உடலை பெற்று சென்று இறுதி சடங்கு செய்தனர்.

    இந்நிலையில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் கனகவள்ளியை தற்காலிக பணி நீக்கம் செய்து மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அலுவலர் பரிமளா உத்தரவு பிறப்பித்துள்ளார். தலைமை ஆசிரியர் கனகவள்ளி 4 மாதத்தில் ஓய்வு பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அதிகார வரம்புக்கு மீறி செயல்பட்டதாக தாசில்தார் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
    • மதுரை கலெக்டர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

    மதுரை

    மதுரை திருப்பாலையைச் சேர்ந்தவர் சதாசிவம். இவரது 2-வது மகன் ஜெயபிரகாஷ். இவர் கோவையில் மத்திய அரசு அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். ஜெயபிரகாஷ் நகை, பணம், சொத்துக்களை ஏமாற்றி அபகரித்ததாக, பெற்றோர் மற்றும் முதியோர் நலன் பராமரிப்பு சட்டத்தின் கீழ் புகார் மனு ஒன்றை கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்து இருந்தார்.

    சதாசிவம் கொடுத்த புகார் மனு தொடர்பாக மதுரை வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தர விடப்பட்டது. இதன் மீதான விசாரணைக்கு வந்திருந்த சதாசிவத்திடம், பெற்ற மகன் மீது புகார் கொடுத்து உள்ளீர்கள். இது தவறு என்று அதிகாரி ஒருவர் அறிவுரை கூறியதாக தெரிகிறது.

    இந்த நிலையில் சதாசிவம் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் கலெக்டர் விசாரணை நடத்தினார். அப்போது மதுரை வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளரும், தாசில்தா ருமான செல்வராஜன் என்பவர் மேற்கண்ட செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    இதைத் தொடர்ந்து அதிகார வரம்புக்கு மீறி செயல்பட்டதாக தாசில்தார் செல்வராஜனை தற்காலிக பணிநீக்கம் செய்து கலெக்டர் அனீஷ் சேகர் உத்தரவிட்டுள்ளார்.

    • அரக்கோணம் கோட்டாட்சியர் உத்தரவு
    • நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதால் நடவடிக்கை

    ராணிப்பேட்டை:

    தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் கட்டுப்பாட்டில், வேலுார், ராணிப்பேட்டை திருவண்ணாமலை மாவட்டங்களில், அரசின் நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளன.

    இங்கு, நெல் கொள்முதல் செய்ததில், முறைகேடு நடந்துள்ளதாக புகார்கள் வந்தன.இந்த நிலையில் வேலூர் வ சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி அரக்கோணம் அடுத்த சிறுகரும்பூரை சேர்ந்த தி.மு.க பிரமுகர் குமரவேல் பாண்டியன் மேல்பாக்கம் நிர்வாக கிராம அலுவலர் குமரவேல் ஆகியோரை நேற்று கைது செய்தனர். குமரவேல் பாண்டியன் நிலத்தில் நெல் பயிரிட்டிருந்ததாக

    போலியாக அடங்கல் சீட்டு கிராம நிர்வாக அலுவலர் குமரவேல் வழங்கியுள்ளார்.

    இதனால் அவர்கள் கைத செய்யப்பட் டுள்ளனர். இருவரும் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் கிராம நிர்வாக அலுவலர் குமரவேலை தற்காலிகமாக பணியிட நீக்கம் செய்வதாக அரக்கோணம் கோட்டாட்சியர் பாத்திமா உத்தரவிட்டுள்ளார்.

    • பாலியல் தொல்லைகளில் இருந்து பெண்களை பாதுகாக்க வேண்டிய போலீஸ்காரரே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • சம்பவம் நடந்த போது உடன் சென்ற பெண் போலீஸ் மற்றும் இன்ஸ்பெக்டர் மீதும் துறை ரீதியான விசாரணை நடத்தவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உயர் அதிகாரிகளுக்கு டி.ஐ.ஜி.பரிந்துரை செய்துள்ளார்.

    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் அம்பலவயல் பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் கடந்த 40 நாட்களுக்கு முன்பு அம்பலவயல் போலீஸ் நிலையத்திற்கு சென்றார். அங்கு அவர், தன்னை 2 பேர் ஊட்டிக்கு கடத்தி சென்று லாட்ஜில் அடைத்து பலாத்காரம் செய்து விட்டதாக பரபரப்பு புகாரை தெரிவித்தார்.

    சிறுமி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 11-ந்தேதி அம்பலவயல் போலீசார் சிறுமியை தொடர்பு கொண்டு விசாரணை நடத்துவதற்கு ஊட்டிக்கு செல்ல வேண்டும் என கூறி அழைத்துள்ளனர். சிறுமியும் வந்தார்.

    பின்னர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷோபின், சப்-இன்ஸ்பெக்டர் பாபு, பெண் போலீஸ் பிரஷி ஆகியோர் சிறுமியை அழைத்து கொண்டு போலீஸ் வாகனத்தில் ஊட்டிக்கு வந்தனர்.

    ஊட்டியில் சிறுமி சம்பவம் நடந்ததாக கூறப்பட்ட லாட்ஜூக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அங்கிருந்து மீண்டும் அம்பலவயல் பகுதிக்கு சென்று கொண்டிருந்தனர்.

    செல்லும் வழியில் வாகனம் ஒரு இடத்தில் திடீரென நிறுத்தப்பட்டது.

    அப்போது ஜீப்பில் இருந்து இன்ஸ்பெக்டர் மற்றும் பெண் போலீசார் இறங்கி வெளியில் சென்று விட்டதாக தெரிகிறது. ஜீப்பில் சிறுமியும், சப்-இன்ஸ்பெக்டர் பாபுவும் மட்டும் தனியாக இருந்தனர்.

    அப்போது, சப்-இன்ஸ்பெக்டர் பாபு, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும் தொடக்கூடாத இடங்களில் தொட்டதுடன், அதனை தனது செல்போனில் புகைப்படமும் எடுத்து வைத்து கொண்டார். இதனை அவர்களுடன் வந்த இன்ஸ்பெக்டரோ, பெண் போலீசோ கண்டு கொள்ளவில்லை என தெரிகிறது.

    இதனால் மன வேதனை அடைந்த சிறுமி சம்பவம் குறித்து கண்ணூர் டி.ஐ.ஜி ராகுல் ஆர்.நாயரை நேரில் சந்தித்து புகார் அளித்தார். அந்த புகாரில், சப்-இன்ஸ்பெக்டர் பாபு தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அதனை இன்ஸ்பெக்டர் கண்டு கொள்ளவில்லை என தெரிவித்திருந்தார்.

    இது தொடர்பாக விசாரணை நடத்தும்படி அவர் போலீசாருக்கு உத்தரவிட்டார். விசாரணையில், சப்-இன்ஸ்பெக்டர் பாபு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உண்மை தான் என்பது தெரியவந்தது.

    இதையடுத்து டி.ஐ.ஜி. ராகுல் ஆர்.நாயர், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாபுவை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

    மேலும் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் சம்பவம் நடந்த போது உடன் சென்ற பெண் போலீஸ் மற்றும் இன்ஸ்பெக்டர் மீதும் துறை ரீதியான விசாரணை நடத்தவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உயர் அதிகாரிகளுக்கு டி.ஐ.ஜி.பரிந்துரை செய்துள்ளார். 

    • நடத்துனர் முத்துக்குமார் சிபிராஜை கன்னத்தில் அறைந்து தாக்கி உள்ளார்.
    • மாற்றுத்திறனாளியை பஸ்சில் இருந்து கீழே இறக்கி விட்ட நடத்துனர் முத்துக்குமாரை சஸ்பெண்ட் செய்து போக்குவரத்து பொது மேலாளர் உத்தரவிட்டுள்ளார்.

    திருப்பூர்:

    திருப்பூர் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்தவர் சத்யராஜ். பானி பூரி கடை நடத்திவரும் இவர் 80 சதவீத பார்வை குறைபாடு உடையவர் .இவருக்கு தமிழக அரசின் சார்பில் இலவச பேருந்து பயண அட்டை வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் இவரை வழி நடத்த உடன் ஒருவர் செல்லவும் பயண அட்டையில் வசதி உள்ளது. இந்நிலையில் சத்யராஜ் தனது மனைவி மற்றும் 17 வயது மகனுடன் வீரபாண்டி பிரிவில் இருந்து பழைய பேருந்து நிலையம் செல்ல மாநகர பேருந்தில் ஏறி உள்ளார். மனைவிக்கு பெண்களுக்கான இலவச பயணம் என்பதால் தனக்கும் தனது மகனுக்கும் இலவச பேருந்து பயண அட்டை உள்ளதாக தெரிவித்துள்ளார்.

    ஆனால் நடத்துனர் முத்துக்குமார், உங்கள் மனைவிக்கு தான் பாஸ் உள்ளது .மகனுக்கு பயண சீட்டு பெற வேண்டும் என தெரிவித்துள்ளார். ஆனால் தனக்கு உள்ள சலுகையை நீங்கள் எப்படி தடுக்க முடியும் என கேள்வி எழுப்பி உள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த நடத்துநர் 3 பேரையும் கீழே இறங்க சொல்லி உள்ளார். இதனை சத்யராஜின் 17 வயதான மகன் சிபிராஜ் வீடியோ எடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நடத்துனர் முத்துக்குமார் சிபிராஜை கன்னத்தில் அறைந்து தாக்கி உள்ளார். பாதிக்கப்பட்ட சத்யராஜ் இது குறித்து திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே மாற்றுத்திறனாளியை பஸ்சில் இருந்து கீழே இறக்கி விட்ட நடத்துனர் முத்துக்குமாரை சஸ்பெண்ட் செய்து திருப்பூர் மாவட்ட போக்குவரத்து பொது மேலாளர் உத்தரவிட்டுள்ளார்.

    • ஆணையத்தின் பரிந்துரையை தொடர்ந்து சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவிட்டார்.
    • முதற்கட்டமாக துப்பாக்கி சூடு சம்பவம் நடந்த போது புதுக்கோட்டை இன்ஸ்பெக்டராக பணியாற்றிய திருமலை சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.

    நெல்லை:

    தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ம் தேதி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் போது நடந்த கலவரத்தில் போலீஸ் துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள்.

    பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் நியமித்து அரசு உத்தரவிட்டது.

    இந்த ஆணையம் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் சம்பவம் நடந்த போது பணியில் இருந்த கலெக்டர் மற்றும் வருவாய் அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் உள்பட பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை நடத்தி வாக்குமூலங்களை பதிவு செய்தது.

    இதைத்தொடர்ந்து ஆணையத்தின் அறிக்கை கடந்த 18-ந்தேதி தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

    அந்த அறிக்கையில் போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் வரம்பு மீறி சில இடங்களில் துப்பாக்கி சூடு நடத்தியதாக கூறப்பட்டிருந்தது.

    மேலும் இதுதொடர்பாக அப்போதைய ஐ.ஜி. சைலேஷ்குமார் யாதவ், டி.ஐ.ஜி. கபில் குமார் சரத்கார், தூத்துக்குடி எஸ்.பி. மகேந்திரன், டி.எஸ்.பி. லிங்க திருமாறன், இன்ஸ்பெக்டர் திருமலை உள்பட 17 போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தது.

    மேலும் அப்போதைய கலெக்டர் வெங்கடேஷ் மற்றும் 3 வருவாய்த்துறை அலுவலர்கள் என மொத்தம் 21 பேர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க ஆணையம் பரிந்துரை செய்திருந்தது.

    ஆணையத்தின் பரிந்துரையை தொடர்ந்து சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து முதற்கட்டமாக துப்பாக்கி சூடு சம்பவம் நடந்த போது புதுக்கோட்டை இன்ஸ்பெக்டராக பணியாற்றிய திருமலை சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.

    அவர் தற்போது நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவில் உதவி கமிஷனராக பணியாற்றி வரும் நிலையில், அவர் தற்போது சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.

    இதே போல துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு பணியில் இருந்த முதல்நிலை காவலர் சுடலைக்கண்ணு, கலெக்டர் அலுவலகம் உள்ளே பணியில் இருந்த சங்கர், சதீஸ் ஆகிய 3 காவலர்களும் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.

    இவர்கள் 3 பேரும் நெல்லை மாநகர காவல்துறையில் பணியாற்றி வந்த நிலையில் அவர்கள் மீது முதற்கட்டமாக சஸ்பெண்டு நடவடிக்கை பாய்ந்துள்ளது.

    • தீபாவளி வசூலில் அதிகாரி மற்றும் பணியாளர்கள் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
    • இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அரசு அலுவலகங்களில் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    நாமக்கல்:

    தீபாவளி பண்டிகையையொட்டி அரசு சார்ந்த அலுவலகங்களில் தீபாவளி வசூலில் அதிகாரி மற்றும் பணியாளர்கள் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அரசு அலுவலகங்களில் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் ராசிபுரத்தில் தொழிலதிபர் ஒருவரிடம் தீபாவளி பண்டிகைக்கு நாமக்கல் தீயணைப்பு துறையை சேர்ந்த திருமுகம் என்பவர் இனாம் கேட்டதாக ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இைதயடுத்து திருமுகத்தை சஸ்பெண்டு செய்து தீயணைப்பு துறை மாவட்ட அலுவலர் செந்தில் உத்தரவிட்டுள்ளார்.

    • மணல் கடத்தலுக்கு உடந்தையாய் இருந்ததால் நடவடிக்கை
    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் உத்தர விட்டார்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் மணல் கடத்தல் சம்பவங்கள் நடப்பதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதனை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டார்.

    அதன் பேரில் போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் அஞ்சுகிராமம் பகுதியில் செம்மண் கடத்தல் சம்பவம் தொடர்ந்து நடந்து வருவதாக கூறப்படுகிறது.

    செம்மண் கடத்தல் கும்ப லோடு அஞ்சுகிராமம் போலீஸ் நிலைய தலைமை காவலர் லிங்கேஷ் என்ப வருக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது குறித்து உரிய விசாரணை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் உத்தர விட்டார்.

    இந்த நிலையில் தலைமை காவலர் லிங்கேஷ் நேற்று பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் பிறப்பித்து உள்ளார்.

    • மருதூர் ஊராட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக மாவட்ட கலெக்டருக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.
    • கலெக்டர் சமீரன் உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டார். விசாரணையில், மருதூர் ஊராட்சியில் முறைகேடுகள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் அருகே காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது மருதூர் கிராமம். இந்த ஊராட்சியில் ஏராளமான மக்கள் குடியிருந்து வருகின்றனர்.

    இந்த கிராம மக்களின் பயன்பாட்டிற்காகவும், அவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக மருதூரில் ஊராட்சி அலுவலகம் உள்ளது.

    இந்த ஊராட்சி அலுவலகத்தின் செயலாளராக சதீஷ்குமார் என்பவர் உள்ளார்.

    இந்த நிலையில் மருதூர் ஊராட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக மாவட்ட கலெக்டருக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.

    இதையடுத்து கலெக்டர் சமீரன் உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டார். விசாரணையில், மருதூர் ஊராட்சியில் முறைகேடுகள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து மருதூர் ஊராட்சி செயலாளர் சதீஷ்குமார் மற்றும் காரமடை ஊராட்சி ஒன்றிய பொறியாளர் சந்திரசேகர் ஆகியோரை மாவட்ட கலெக்டர் சமீரன் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும் இவர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மற்ற ஊராட்சியில் உள்ள செயலாளர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • போலீஸ் சீருடையில் மது அருந்திவிட்டு ஒரு டீ கடையில் விழுந்து கிடந்துள்ளார்.
    • இச்சம்பவம் குறித்து தகவலறிந்த போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுத்து தற்காலிக பணியிடை நீக்கம் செய்துள்ளார்.

    கொடுமுடி:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி போலீஸ் நிலையத்தில் 2-ம் நிலை காவலராக பணிபுரிந்து வருபவர் நல்லசாமி (வயது 35). இவர் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோபிசெட்டிபாளையம் அருகே கொளப்பலூரில் பாதுகாப்பு பணிக்காக நியமிக்கப்பட்டிருந்தார்.

    அப்போது அவர் போலீஸ் சீருடையில் மது அருந்திவிட்டு ஒரு டீ கடையில் விழுந்து கிடந்துள்ளார். அப்போது அங்கு நின்ற பொதுமக்கள் சிறுவல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து போலீசார் அங்கு செல்வதற்குள் நல்லசாமி அங்கிருந்து தப்பித்து தலைமறைவாகி விட்டார்.

    இச்சம்பவம் குறித்து தகவலறிந்த போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுத்து தற்காலிக பணியிடை நீக்கம் செய்துள்ளார். போலீசார் ஒருவர் மது போதையில் கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

    • சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள பக்காளியூரைச் சேர்ந்தவர் லாரி உரிமையாளருக்கு சொந்தமான கஸ்தூரிபட்டி கிராமத்தில் நிலம் உள்ளது.
    • இதையடுத்து வைத்தீஸ்குமார் ரூ.2 ஆயி ரம் லஞ்சம் வாங்கியபோது லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கையும் களவுமாக சிக்கினார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள பக்காளியூரைச் சேர்ந்தவர் லாரி உரிமையாளர் கணே சன் (வயது 50). இவருக்கு சொந்தமான கஸ்தூரிபட்டி கிராமத்தில் நிலம் உள்ளது. அந்த நி லத்தை அளவீடு செய்து உட்பிரிவு செய்து தரக் கோரி சங்ககிரி வட்ட நில அளவை துறையில் விண்ணப்பித்தார்.

    அதனை செய்து கொடுக்க சங்ககிரி நில அளவைத் துறை சுற்றுக்குழு நில அளவையராக பணியாற்றி வந்த வைத்தீஸ்குமார் (வயது 40) ரூ.2000 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. லஞ்சம் கொடுக்க விரும்பாத கணேசன் இது தொடர்பாக சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து வைத்தீஸ்குமார் ரூ.2 ஆயி ரம் லஞ்சம் வாங்கியபோது லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கையும் களவுமாக சிக்கினார்.

    இதையடுத்து அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்திய போலீசார் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் வைத்தீஸ்கு மாரை மேலம் மாவட்ட நில அளவை உதவி இயக்குனர் (பொறுப்பு) சுப்பிரமணியன் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும் அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

    ×